logo

|

Home >

temples-special >

lord-shiva-temples-on-the-banks-of-river-kaviri

காவிரி நதிக்கரை சிவத் திருத்தலங்கள்

Lord Shiva temples on the banks of river Kaviri


The river Kaveri (or Cauvery) starts in the Kodagu. It runs through the southern Karnataka and enters Tamilnadu at Hogenakal. Showering prosperity thrgouh the choza kingdom Kaveri river reaches ocean at Kaviri pum pattinam. There are thousands of Lord shiva temples on the banks of river Cauvery. In fact most of the Devara thalangal are on the banks of this holy river Kavrei. Here is the list of the Lord shiva temples on the banks of river kaveri.

·         தருமபுரி மாவட்டம் (Tharumapuri District)

  • கீழமங்கலம் - விரூபாட்சிநாதர் (kIzhamangkalam - virUpAtchinAthar)
  • கீழமங்கலம் - காசிவிஸ்வநாதர் (kIzhamangkalam - kAsiviSvanAthar)
  • ஆதிமுத்து - சிவபுரீஸ்வரர் (Athimuththu - sivapurISvarar)
  • திருமழவாடி (ஞானப்பட்டி) - மல்லேஸ்வரர் (thirumazavAdi (gnAnappatti) - mallESvarar)
  • ஒகேனக்கல் (கூத்தபாடி) - தேசனாதீஸ்வரர் (okEnakkal (kUththapAdi) - thEsanAthISvarar)
  • ஆலாபுரம் - சென்னகேஸ்வரர் (AlApuram - sennakESvarar)

·         சேலம் மாவட்டம் (Selam District)

  • காவேரிபுரம் - ஜலகண்டேஸ்வரர் (kAvEripuram - jalakaNdESvarar)
  • மேட்டூர் - சொக்கநாதர் (mEttUr - sokkanAthar)
  • பூலாம்பட்டி - கைலாசநாதர் (pUlAmpatti - kailAsanAthar)
  • காவேரிப்பட்டி அக்ரஹாரம் - காவிரிநாத ஸ்வாமி (kAvErippatti akrahAram - kAvirinAtha SvAmi)
  • தாராபுரம் - சோமேஸ்வரர் (thArApuram - sOmESvarar)
  • ஓமலூர் - வசந்தீஸ்வரர் (OmalUr - vasanthISvarar)
  • தசவிலக்கு - உலகேஸ்வரர் (thasavilakku - ulakESvarar)
  • வேலாலபுரம் - வேலாலதீஸ்வரர் (vElAlapuram - vElAlathISvarar)
  • இருபுலி - வியாக்ரபாதர் (irupuli - viyAkrapAthar)
  • இருபுலி - சீர்காழிநாதர் (irupuli - sIrkAzhinAthar)
  • ஆவணிபேரூர் - பசுபதீஸ்வரர் (AvaNipErUr - pasupathISvarar)
  • செட்டிமாங்குறிச்சி - உலகேஸ்வரர் (settimAngkuRicchi - ulakESvarar)
  • அரசிரமேனி - சோலீஸ்வரர் (arasiramEni - sOlISvarar)
  • காவேரிப்பட்டி - அனந்தீஸ்வரர் (kAvErippatti - ananthISvarar)
  • காத்தேரி - விஸ்வநாதர் (kAththEri - viSvanAthar)

·         ஈரோடு மாவட்டம் (Erode District)

  • நெருஞ்சிப்பேட்டை - மஹாதேவர் (nerunjchippEttai - mahAthEvar)
  • அம்மாபேட்டை - சொக்கநாதர் (ammApEttai - sokkanAthar)
  • பவானி (திருநணா) - சங்கமேஸ்வரர் (pavAni (thirunaNA) - sangkamESvarar)
  • பவானிசாகர் (துரவலூர்) - சோமேஸ்வரர் (தோன்றீஸ்வரமுடையார்) (pavAnisAkar (thuravalUr) - sOmESvarar (thOnRISvaramudaiyAr)
  • சத்தியமங்கலம் - மீனாட்சி சுந்தரேஸ்வரர் (saththiyamangkalam - mInAtchi suntharESvarar)
  • ஆலுகுழி - சோளீஸவரர் (Alukuzhi - sOLISavarar)
  • பேரையூர் - அமரபுரீஸ்வரர் (pEraiyUr - amarapurISvarar)
  • பெருந்தலையூர் - மகிழேஸ்வரர் (perunthalaiyUr - makizhESvarar)
  • மேட்டுப்பாளையம் - ஊஞ்சலடி பட்டப்பசுவாமி (mEttuppALaiyam - Unjchaladi pattappasuvAmi)
  • அங்கிபாளையம் - நடராஜர் (angkipALaiyam - natarAjar)
  • எலத்தூர் - சோளீஸ்வரர் (elaththUr - sOLISvarar)
  • குருமாந்தூர் - சோலீஸ்வரர் (kurumAnthUr - sOlISvarar)
  • வேலன்கோவில் - நஞ்சுண்டேஸ்வரர் (vElankOvil - nanjchuNtESvarar)
  • ஆப்பக்கூடல் - காசிவிஸ்வநாதர் (AppakkUdal - kAsiviSvanAthar)
  • ஈரோடு - ஆர்த்த்ர கபாலீஸ்வரர் (IrOdu - Arththra kapAlISvarar)
  • காங்கேயம்பாளையம் - நட்டாத்தீஸ்வரர் (kAngkEyampALaiyam - nattAththISvarar)
  • நன்னைகலமங்கலம் - மாதீஸ்வரர் (nannaikalamangkalam - mAthISvarar)
  • பாசூர் - சுந்தரேஸ்வரர் (pAsUr - suntharESvarar)
  • நஞ்சைகீழம்பாடி - கைலாசநாதர் (nanjchaikIzhampAdi - kailAsanAthar)
  • ஊஞ்சலூர் - நாகேஸ்வரர் (UnjchalUr - nAkESvarar)
  • வேங்கம்பூர் - சோலீஸ்வரர் (vEngkampUr - sOlISvarar)
  • (பாண்டிக்) கொடுமுடி - மகுடேஸ்வரர் (pANdik) kodumudi - makudESvarar
  • தளவாய்ப்பட்டினம் - நீலகண்டேஸ்வரர் (thaLavAyppattinam - nIlakaNdESvarar)
  • கொங்கூர் - பசுபதீஸ்வரர் (kongkUr - pasupathISvarar)
  • ஆலங்கியம் - கலியுகநாதேஸ்வரர் (Alangkiyam - kaliyukanAthESvarar)
  • ஆலங்கியம் - கற்பூரநாதர் (Alangkiyam - kaRpUranAthar)
  • ஆலங்கியம் - திண்டீஸ்வரர் (Alangkiyam - thiNdISvarar)
  • தாராபுரம் - அகத்தீஸ்வரர் (thArApuram - akaththISvarar)
  • தாராபுரம் - வீரேஸ்வரர் (thArApuram - vIrESvarar)
  • கொழுஞ்சிவாடி - சொக்கநாதர் (kozhunjchivAdi - sokkanAthar)
  • சடையம்பாளையம் - நாகேஸ்வரர் (sadaiyampALaiyam - nAkESvarar)
  • வீராஞ்சிமங்கலம் - சந்திரசேகரர் (vIrAnjchimangkalam - santhirasEkarar)
  • சங்கரண்டம்பாளையம் - பரமேஸ்வரர் (sangkaraNdampALaiyam - paramESvarar)
  • சங்கரண்டம்பாளையம் - தேனீஸ்வரர் (sangkaraNdampALaiyam - thEnISvarar)
  • மாம்பாடி - மாந்தீஸ்வரர் (mAmpAdi - mAnthISvarar)
  • இலக்கமண நாயக்கன் பட்டி - அழகேஸ்வரர் (ilakkamaNa nAyakkan patti - azhakESvarar)
  • குறுக்கபாளையம் - காசிவிஸ்வநாதர் (kuRukkapALaiyam - kAsiviSvanAthar)
  • ஆரத்தொழுவு - பசுபதீஸ்வரர் (Araththozhuvu - pasupathISvarar)
  • உத்தமபாளையம் - காசிவிஸ்வநாதர் (uththamapALaiyam - kAsiviSvanAthar)
  • சர்க்கார் பெரியபாளையம் (குரக்குத்தளி) - சுக்கிரீசுவரர் (sarkkAr periyapALaiyam (kurakkuththaLi) - sukkirIsuvarar)
  • கீரனூர் - ஆதீஸ்வரர் (kIranUr - AthISvarar)
  • பரஞ்சேர்வழி - நட்டூர்நாதர் (paranjchErvazhi - nattUrnAthar)
  • மறுதுறை - பட்டீஸ்வரர் (maRuthuRai - pattISvarar)
  • நாதகடையனூர் - ஜெயம்கொண்டீஸ்வரர் (nAthakadaiyanUr - jeyamkoNdISvarar)
  • மூதூர் - சோலீசுவரர் (mUthUr - sOlIsuvarar)

·         கோயமுத்தூர் மாவட்டம் (Coimbatore District)

  • கல்லம்பாளையம் - காளத்தீஸ்வரர் (kallampALaiyam - kALaththISvarar)
  • குமரலிங்கம் - காசிவிஸ்வநாதர் (kumaralingkam - kAsiviSvanAthar)
  • சங்கராமநல்லூர் (குழுமூர்) - தாண்டவேஸ்வரர் (sangkarAmanallUr (kuzhumUr) - thANdavESvarar)
  • சர்க்கார் கன்னாடிபுத்தூர் - கைலாசநாதர் (sarkkAr kannAdipuththUr - kailAsanAthar)
  • சர்க்கார் கண்ணாடிபுத்தூர் - திருமாந்தீஸவரர் (sarkkAr kaNNAdipuththUr - thirumAnthISavarar)
  • சோழமாதேவி - குலசேகரர் (sOzamAthEvi - kulasEkarar)
  • காணியூர் - சொக்கநாதர் (kANiyUr - sokkanAthar)
  • கடத்தூர் - அர்ச்சுனேஸ்வரர் (kadaththUr - arcchunESvarar)
  • கடத்தூர் - நடராஜர் (kadaththUr - natarAjar)
  • காரத்தொழுவு - அகத்தீஸ்வரர் (kAraththozhuvu - akaththISvarar)

·         நாமக்கல் மாவட்டம் (Namakkal District)

  • கொமாரபாளையம் - காசிவிஸ்வநாதர் (komArapALaiyam - kAsiviSvanAthar)
  • பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் - விசுவநாதர் (paLLippALaiyam akrahAram - visuvanAthar)
  • கொக்கராயன்பேட்டை - பிரம்மலிங்கேஸ்வரர் (kokkarAyanpEttai - pirammalingkESvarar)
  • பாட்லூர் - அகத்தீசர் (pAtlUr - akaththIsar)
  • மொலசை - முக்கண்ணீஸ்வரர் (molasai - mukkaNNISvarar)
  • இளம்பிள்ளை - உமாமகெசுவரர் (iLampiLLai - umAmakesuvarar)
  • வடகரை ஆத்தூர் - சொக்கநாதர் (vadakarai AththUr - sokkanAthar)
  • அகர பொம்மபாளையம் - மகாதேவர் (akara pommapALaiyam - makAthEvar)
  • அகர பொம்மபாளையம் - வைத்தீஸ்வரர் (akara pommapALaiyam - vaiththISvarar)
  • சர்க்கார் வேங்கரை - நீலகண்டேஸ்வரர் (sarkkAr vEngkarai - nIlakaNdESvarar)
  • வேலூர் - காசிவிசுவநாதர் (vElUr - kAsivisuvanAthar)
  • கொடூர் - அகஸ்தீஸ்வரர் (kodUr - akaSthISvarar)
  • கூடச்சேரி - சோலீஸ்வரர் (kUdacchEri - sOlISvarar)
  • பிள்ளூர் - வீரட்டேஸ்வரர் (piLLUr - vIrattESvarar)
  • பரமத்தி - பரமேஸ்வரர் (paramaththi - paramESvarar)
  • நஞ்சை இடையாறு - திருமாலீஸ்வரர் (nanjchai idaiyARu - thirumAlISvarar)
  • மணப்பள்ளி - பீமனேஸ்வரர் (maNappaLLi - pImanESvarar)
  • மோகனூர் - அசலதீபேஸ்வரர் (mOkanUr - asalathIpESvarar)

·         பெரம்பலூர் மாவட்டம் (Perampalur District)

  • உப்பிலியாபுரம் - பசுபதீஸ்வரர் (uppiliyApuram - pasupathISvarar)
  • பாலகிருஷ்ணாம்பட்டி - தர்மேஸ்வரர் (pAlakirushNAmpatti - tharmESvarar)
  • விஷ்வாம்பாள் சமுத்திரம் - விஸ்வநாதர் (vishvAmpAL samuththiram - viSvanAthar)
  • சிறுநாவலூர் - காளத்தீஸ்வரர் (siRunAvalUr - kALaththISvarar)
  • ஏரக்குடி - சிதம்பரேஸ்வரர் (Erakkudi - sithamparESvarar)
  • சேனாப்பநல்லூர் - தருமேஸ்வரர் (sEnAppanallUr - tharumESvarar)
  • விராச்சம்பட்டி - விஸ்வநாதர் (virAssampatti - viSvanAthar)
  • கண்ணனூர் - கைலாசனாதர் (kaNNanUr - kailAsanAthar)
  • கண்ணனூர் - ஏகாம்பரர் (kaNNanUr - EkAmparar)
  • திருத்தலையூர் - சப்தரிஷீஸ்வரர் (thiruththalaiyUr - saptharishISvarar)
  • ரங்கநாதபுரம் - விஸ்வனாதர் (rangkanAthapuram - viSvanAthar)
  • ரங்கனாதபுரம் - கைலாசனாதர் (rangkanAthapuram - kailAsanAthar)
  • கிருஷ்ணராயபுரம் - திருக்கண்மாலீஸ்வரர் (kirushNarAyapuram - thirukkaNmAlISvarar)
  • மகாதானபுரம் - விஸ்வனாதர் (makAthAnapuram - viSvanAthar)
  • வடியம் - மல்லிகார்ஜுனேஸ்வரர் (vadiyam - mallikArjunESvarar)
  • குளித்தலை (கடம்பந்துறை) - கடம்பவனநாதர் (kuLiththalai (kadampanthuRai) - kadampavananAthar)
  • இராஜேந்திரம் - மத்யார்ஜுனேஸ்வரர் (irAjEnthiram - mathyArjunESvarar)
  • மருதூர் - சுந்தரேஸ்வரர் (maruthUr - suntharESvarar)
  • பொய்யமணி - சிதம்பரேஸ்வரர் (poyyamaNi - sithamparESvarar)
  • நங்கவரம் - சுந்தரேஸ்வரர் (nangkavaram - suntharESvarar)
  • கண்டராதித்தம் - சொக்கநாதர் (kaNdarAthiththam - sokkanAthar)
  • திருமழபாடி - வச்சிரத்தம்வேசுவரர் (thirumazhapAdi - vacchiraththamvEsuvarar)
  • திருமானூர் - கைலாசநாதர் (thirumAnUr - kailAsanAthar)
  • பெரியமறை - சுவேதபுரீஸ்வரர் (periyamaRai - suvEthapurISvarar)
  • எலகுறிச்சி - கைலாசநாதர் (elakuRicchi - kailAsanAthar)
  • அழகியமணவாளன் - காசிவிஸ்வநாதர் (azhakiyamaNavALan - kAsiviSvanAthar)
  • காமரசவல்லி - கார்கோட்டீஸ்வரர் (kAmarasavalli - kArkOddISvarar)
  • தூதூர் - வராகமூர்த்தீஸ்வரர் (thUthUr - varAkamUrththISvarar)
  • நொச்சியம் - பிரம்மபுரீஸ்வரர் (nocchiyam - pirammapurISvarar)
  • தொரமங்கலம் - சொக்கநாதர் (thoramangkalam - sokkanAthar)
  • அயலூர் - அருணாசலேஸ்வரர் (ayalUr - aruNAchalESvarar)
  • வரகுப்பாடி - கைலாசநாதர் (varakuppAdi - kailAsanAthar)
  • சிறுகண்பூர் - அருணாசலேஸ்வரர் (siRukaNpUr - aruNAsalESvarar)
  • சாத்தனூர் - விஸ்வநாதர் (sAththanUr - viSvanAthar)
  • குலகால்நத்தம் - ஆதீஸ்வரர் (kulakAlnaththam - AthISvarar)
  • குளத்தூர் - சுந்தரேஸ்வரர் (kuLaththUr - suntharESvarar)
  • கூடலூர் - திருநாகேஸ்வரர் (kUdalUr - thirunAkESvarar)
  • இலுப்பைக்குடி - விஸ்வநாதர் (iluppaikkudi - viSvanAthar)
  • அரியலூர் - ஆலந்துறையார் (ariyalUr - AlanthuRaiyAr)
  • புதுப்பாளையம் - விஸ்வநாதர் (puthuppALaiyam - viSvanAthar)
  • தெள்ளூர் - சோமநாதஈஸ்வரர் (theLLUr - sOmanAthaISvarar)
  • ரெட்டிபாளையம் - ஜோதீஸ்வரர் (rettipALaiyam - jOthISvarar)
  • பெரிய திருக்கோணம் - ஆதிமத்தியார்ச்சுனர் (periya thirukkONam - AthimaththiyArcchunar)
  • செட்டிதிருக்கோணம் - அரனேஸ்வரர் (settithirukkONam - aranESvarar)
  • கடம்பூர் - கைலாசநாதர் (kadampUr - kailAsanAthar)
  • குணமங்கலம் - சுந்தரேஸ்வரர் (kuNamangkalam - suntharESvarar)
  • அம்பாபூர் - சோலீஸ்வரர் (ampApUr - sOlISvarar)
  • சாத்டம்பாடி - விஸ்வநாதர் (sAthdampAdi - viSvanAthar)
  • கோவிந்தபுத்தூர் - கங்காலீஸ்வரர் (kOvinthapuththUr - kangkAlISvarar)
  • ஸ்ரீ புரந்தரன் - பிரதட்சனேஸ்வரர் (sri purantharan - pirathatchanESvarar)
  • மதநாத்தூர் - இராமலிஙேஸ்வரர் (mathanAththUr - irAmalingESvarar)

·         கரூர் மாவட்டம் (Karur District)

  • முன்னூர் - மரகதலீஸ்வரர் (munnUr - marakathalISvarar)
  • புஞ்சைப்புகழூர் - சுந்தரேஸ்வரர் (punjchaippukazhUr - suntharESvarar)
  • நஞ்சைப்புகழூர் - மேகவாலீஸ்வரர் (nanjchaippukazhUr - mEkavAlISvarar)
  • நன்னியூர் - சிந்தமணீஸ்வரர் (nanniyUr - sinthamaNISvarar)
  • வாங்கல் - ரவீஸ்வரர் (vAngkal - ravISvarar)
  • நெரூர் வடக்கு - அக்னீஸ்வரர் (nerUr vadakku - aknISvarar)
  • நெரூர் தெற்கு - காசிவிஸ்வநாதர் (nerUr theRku - kAsiviSvanAthar)
  • திருமுக்கூடலூர் - அகத்தீஸ்வரர் (thirumukkUdalUr - akaththISvarar)
  • சின்னதாராபுரம் - மணிமுக்தீஸ்வரர் (sinnathArApuram - maNimukthISvarar)
  • இராஜபுரம் - காசிவிஸ்வநாதர் (irAjapuram - kAsiviSvanAthar)
  • அரவக்குறிச்சி - காசிவிஸ்வநாதர் (aravakkuRissi - kAsiviSvanAthar)
  • நாகம்பள்ளி - மகாபலேஸ்வரர் (nAkampaLLi - makApalESvarar)
  • வெஞ்சமாக்கூடலூர் - கல்யாணவிகிர்தேஸ்வரர் (venjchamAkkUdalUr - kalyANavikirthESvarar)
  • திருமாநிலையூர் - திருவாலீஸ்வரர் (thirumAnilaiyUr - thiruvAlISvarar)
  • ஆண்டான்கோவில் - காசிவிஸ்வநாதர் (ANdAnkOvil - kAsiviSvanAthar)
  • கருவூர் - கல்யாண பசுபதீஸ்வரர் (karuvUr - kalyANa pasupathISvarar)
  • வெண்ணெய்மலை - காசிவிஸ்வநாதர் (veNNeymalai - kAsiviSvanAthar)
  • பஞ்சமாதேவி - பரமேஸ்வரர் (panjchamAthEvi - paramESvarar)
  • சேனப்பிரட்டை - விருத்தாசலேஸ்வரர் (sEnappirattai - viruththAsalESvarar)
  • புலியூர் - வ்யாக்ரபுரீஸ்வரர் (puliyUr - vyAkrapurISvarar)
  • சிலைபிள்ளையார்புத்தூர் - மீனாட்சிசுந்தரேஸ்வரர் (silaipiLLaiyArpuththUr - mInAtchisuntharESvarar)
  • நத்தம் - சொக்கலிங்கேஸ்வரர் (naththam - sokkalingkESvarar)
  • அரசலூர் - தாயுமானசுவாமி (arasalUr - thAyumAnasuvAmi)
  • வரதராஜபுரம் - அனலேசுவரர் (varatharAjapuram - analEsuvarar)
  • சீனிவாசநல்லூர் - விஸ்வநாதர் (sInivAsanallUr - viSvanAthar)
  • குரக்குத்தளி (kurakkuththaLi)
  • ஈங்கோய்மலை - மரகதாசலேசுவரர் (IngkOymalai - marakathAsalEsuvarar)
  • அளகரை - சோமசுந்தரேஸ்வரர் (aLakarai - sOmasuntharESvarar)
  • முசிறி - சந்திரமௌளீஸ்வரர் (musiRi - santhiramauLISvarar)
  • வெள்ளூர் - திருக்காமீஸ்வரர் (veLLUr - thirukkAmISvarar)
  • செந்தமாங்குடி - அக்கினீஸ்வரர் (senthamAngkudi - akkinISvarar)
  • ஏவூர் - பன்னகநாதர் (EvUr - pannaganAthar)
  • ஆமூர் - ரவீஸ்வரர் (AmUr - ravISvarar)
  • குணசீலம் - தாருகாநாதர் (kuNasIlam - thArukAnAthar)
  • பேரூர் - இடங்கண்டீஸ்வரர் (pErUr - idangkaNdISvarar)
  • து.புத்தூர் - விஸ்வநாதர் (thu.puththUr - viSvanAthar)

·         திண்டுக்கல் மாவட்டம் (Dindigul District)

  • பழனி - மலைக்கொழுந்தீசர் (pazhani - malaikkozhunthIsar)
  • திருவாவினன்குடி - சுந்தரேஸ்வரர் (thiruvAvinankudi - suntharESvarar)
  • திருவாவினங்குடி - வேளீஸ்வரர் (thiruvAvinangkudi - vELISvarar)
  • திருவாவினன்குடி - கைலாசநாதர் (thiruvAvinankudi - kailAsanAthar)
  • கோதைமங்கலம் - காதஈஸ்வரர் (kOthaimangkalam - kAthaISvarar)
  • மண்ணூர் - சோளீஸ்வரர் (maNNUr - sOLISvarar)
  • கோரைக்கடவு - சொக்கநாதர் (kOraikkadavu - sokkanAthar)
  • ஆணைப்பட்டி - சுந்தரேஸ்வரர் (ANaippaddi - sundharESvarar)
  • வேடசந்தூர் - காசிவிஸ்வநாதர் (vEdasanthUr - kAsiviSvanAthar)

·         திருச்சிராப்பள்ளி மாவட்டம் (tiruchirapalli District)

·         தஞ்சாவூர் மாவட்டம் (Thanjavur District)

·         கடலூர் மாவட்டம் (Kadalur District)

·         திருவாரூர் மாவட்டம் (Thiruvarur District)

·         நாகப்பட்டிணம் மாவட்டம் (Nagapattinam District)

References to river kaveri in thirumurai

(Only sample, as there are very many)

சலசல சந்தகி லோடும்உந்திச் சந்தன மேகரை சார்த்தியெங்கும்
பலபல வாய்த்தலை யார்த்துமண்டி பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்
கலகல நின்றதி ருங்கழலான் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்
சொலவல தொண்டர்க ளேத்தநின்ற சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே.  1.5.5 

 
குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடையண்ணல்
கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற்காவேரி
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண்டெதிருந்திப்
பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழனநகராரே.                         1.67.5 

 
நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரி
தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசாய்க் காடே.                             2.38.1

 
தழைகொள்சந்தும் மகிலும் மயில்பீலியுஞ் சாதியின்
பழமுமுந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை
நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத்
தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கழ காகுமே.                  2.119.1

 
குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும்மணி குலவுநீர்
பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை
நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத்
திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே.                   2.119.3

 
வம்புநாறும் மலரும்மலைப் பண்டமுங் கொண்டுநீர்
பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
உம்பர்வானோர் தொழச்சென் றுடனாவதும் உண்மையே.                  2.119.5

 
வேயுதிர்முத் தொடுமத்த யானைமருப் பும்விராய்
பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரை
நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம்
மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே.                      2.119.7

 
கரியமாலும் அயனும் மடியும்முடி காண்பொணா
எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்மிட மீண்டுகா
விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம்
பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே                          2.119.9

 
கந்தநாறும் புனற்காவிரித் தென்கரை கண்ணுதல்
நந்திசேருந் திருநாகேச் சரத்தின்மேன் ஞானசம்
பந்தன்நாவிற் பனுவல்லிவை பத்தும்வல் லார்கள்போய்
எந்தையீசன் னிருக்கும் முலகெய்த வல்லார்களே.                        2.119.11

 
உரையாரும் புகழானே ஒற்றி யூராய்
        கச்சியே கம்பனே காரோ ணத்தாய்
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்
        மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்த மல்கு 
        திருவானைக் காவிலுறை தேனே வானோர்
அரையாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
        அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.          6.62.6 

 
செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்
        சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
        பாலோடு நெய் தயிர்தே னாடி கண்டாய்
மந்தார முந்தி வருநீர்ப் பொன்னி
        வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்
கொந்தார் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்
        கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.                 6.73.3 

 
இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந் திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாளிவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.          7.48.2 

 
ஓவு நாளுணர் வழியும் நாளுயிர் போகும் நாளுயர் பாடைமேல்
காவு நாளிவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.          7.48.3 

 
எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை தம்பி ரானென்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.                7.48.4 

 
ஏடு வானிளந் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்பத ரைக்க சைத்த அழக னேயந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி
சேட னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.           7.48.6 

 
விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந் தேன்வி னைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.               7.48.7 

 
செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந் தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாகம மர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயி லாடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.          7.48.8 

 
பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.              7.77.1 

 
எங்கே போவே னாயிடினும் அங்கே வந்தென் மனத்தீராய்ச்
சங்கை யொன்றும் இன்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவே
கங்கை சடைமேற் கரந்தானே கலைமான் மறியுங் கனல்மழுவுந்
தங்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.              7.77.2 

 
மருவிப் பிரிய மாட்டேன்நான் வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன்
பருவி விச்சி மலைச்சாரற் பட்டை கொண்டு பகடாடிக்
குருவி ஓப்பிக் கிளிகடிவார் குழன்மேல் மாலை கொண்டோட்டந்
தரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.               7.77.3 

 
பழகா நின்று பணிசெய்வார் பெற்ற பயனொன் றறிகிலேன்
இகழா துமக்காட் பட்டோர்க்கு வேக படமொன் றரைச்சாத்தி
குழகா வாழைக் குலைத்தெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவே
அழகார் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.             7.77.4 

 
பிழைத்த பிழையொன் றறியேன்நான் பிழையைத் தீரப் பணியாயே
மழைக்கண் நல்லார் குடைந்தாட மலையும் நிலனுங் கொள்ளாமைக்
கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங் கழனி மண்டிக் கையேறி
அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.          7.77.5 

 
கார்க்கொள் கொன்றைச் சடைமேலொன் றுடையாய் விடையாய் கையினால்
மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய் முன்னீ பின்னீ முதல்வன்நீ
வார்க்கொள் அருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னுங்கொண்
டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.            7.77.6 

 
மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலிதேர்வாய்
சிலைக்கொள் கணையால் எயிலெய்த செங்கண் விடையாய் தீர்த்தன்நீ
மலைக்கொள் ளருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னுங்கொண்
டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.           7.77.7 

 
போழும் மதியும் புனக்கொன்றைப் புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ உன்னைத் தொழுவார் துயர்போக
வாழு மவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.               7.77.8 

 
கதிர்கொள் பசியே ஒத்தேநான் கண்டேன் உம்மைக் காணாதேன்
எதிர்த்து நீந்த மாட்டேன்நான் எம்மான் றம்மான் றம்மானே
விதிர்த்து மேகம் மழைபொழிய வெள்ளம் பரந்து நுரைசிதறி
அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.           7.77.9 

 
கூசி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
தேச வேந்தன் திருமாலும் மலர்மேல் அயனுங் காண்கிலாத்
தேச மெங்குந் தெளித்தாடத் தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும்
வாசந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.               7.77.10 

 
கூடி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மைத் தொண்டன் ஊரனேன்
தேடி யெங்குங் காண்கிலேன் திருவா ரூரே சிந்திப்பன்
ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.               7.77.11 

 
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி 
        வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
        அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
        குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
        என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை.                       7.74.1 

 
கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
        கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
        மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
        குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப் 
        பழவினை உள்ளன பற்றறுத் தானை.                           7.74.2 

 
கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார் 
        கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப்
புல்கியுந் தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும் 
        போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
        குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத் 
        தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை.         7.74.3 

 
பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும் 
        பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக்
கறியுமா மிளகொடு கதலியும் உந்திக் 
        கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
        குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை 
        அருவினை உள்ளன ஆசறுத் தானை.                   7.74.4 

 
பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும்
        பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி
        எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே
சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்
        குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை
        உற்றநோய் இற்றையே உறவொழித் தானை.                     7.74.5 

 
புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும் 
        பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி
        ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித்
திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
        குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை
        இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை.                   7.74.6 

 
வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும் 
        வருடியும் வணக்கியும் மராமரம் பொருது
கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க் 
        காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
        குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை 
        உலகறி பழவினை அறவொழித் தானை.                 7.74.7 

 
ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப்
        புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக்
காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
        கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித்
தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்
        குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை 
        அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை.                      7.74.8 

 
புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்
        பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப
இலங்குமார் முத்தினோ டினமணி இடறி
        இருகரைப் பெருமரம் பீழந்துகொண் டெற்றிக்
கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்
        குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை 
        மேலைநோய் இம்மையே வீடுவித் தானை.                      7.74.9 

 
மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி
        மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடி அன்றிமற் றறியான்
        அடியவர்க் கடியவன் தொழுவனா ரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
        குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார் 
        தவநெறி சென்றம ருலகம்ஆள் பவரே.           

 


See Also : 

Related Content