இறைவர் திருப்பெயர்: | சொர்ணபுரீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | சொர்ணாம்பிகை, சிவாம்பிகை. |
தல மரம்: | |
தீர்த்தம் : | திரிசூல கங்கை. |
வழிபட்டோர்: | அப்பர், சேக்கிழார், காசிபர் முனிவர். |
குடமுருட்டியாற்றின் கரையில் உள்ள தலம்; 'குடமுருட்டி'க்கு பழைய பெயர் 'கடுவாய்.' புத்தூர் என்பது ஊரின் பெயர். (இப்பெயரில் பல ஊர்களிருப்பதால், வேறுபாடு தெரிவதற்காக இத்தலம் 'கடுவாய்க்கரைபுத்தூர் ' என்று வழங்கலாயிற்று.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர் - 1. ஒருத்த னைமூ வுலகொடு (5.62); பாடல்கள் : சேக்கிழார் - நல்லூரில் (12.21.215,216 & 217) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு குடவாசல் - வலங்கைமான் பேருந்துச் சாலையில் சென்று இக்கோயிலை அடையலாம். தொடர்புக்கு :- 04374 - 265 130.