இறைவர் திருப்பெயர்: | பசுபதீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | கோவிந்தவல்லி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - நெற்குன்றம் ஓத்தூர் (2-39-9).
சுவாமி - பசுபதீஸ்வரர்; பழைய நூலில் 'சடனாண்டார்' என்றும்; அம்பாள் - கோவிந்தவல்லி; சிவகாமசுந்தரி என்றும் உள்ளது.
கோயில் மற்றும் இறைவனின் பெயர்கள் காலப்போக்கில் மாறிப்போயுள்ளன. முதற்பராந்தகச் சோழனின் கல்வெட்டில் இவ்வூர் "திருவிரற்குன்றம்" என்றும், "திருநற்குன்றம்" என்றும், சுவாமியின் பெயர் "திருமாடத்துக் கூனனார்" என்றும், "சடனாண்டார்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது என்பர் ஆய்வர் பெருமக்கள்.
கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் ஒன்றில் ஊர்ப் பெயர் 'தின்னக்கோணம்' என்றும், மற்றொன்றில் 'தின்னக்குணம்' என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு முசிறியிலிருந்து வேளக்கா நத்தம் சாலையில் சென்று - ஏவூர் என்னுமிடத்தில் பிரியும் சாலையில் சென்றால் நாச்சம்பட்டியை அடுத்து "தின்னகோண"த்தை அடையலாம். முசிறியிலிருந் 15 கி.மீ. நகரப் பேருந்து செல்கிறது.