logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பாலைத்துறை

இறைவர் திருப்பெயர்: பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர்.

இறைவியார் திருப்பெயர்: தவளவெண்ணகையாள். (மக்கள் தவளாம்பிகை, தவளாம்பாள் என வழங்குகின்றனர்)

தல மரம்:

தீர்த்தம் : காவிரி, வசிஷ்டதீர்த்தம், இந்திர தீர்த்தம், எம தீர்த்தம் முதலியன.

வழிபட்டோர்:அப்பர், சேக்கிழார், திருமால், பிரமன், திசைப்பாலகர்கள், வசிட்டர், அருச்சுனன், தேவர்கள் முதலியோர்.

Sthala Puranam

front appearance of the temple

 

  • பாண்டவர்களின் வனவாச காலத்தில், தௌமிய முனிவரின் ஆலோசனைப்படி அருச்சுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு, வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்று சொல்லப்படுகிறது.

     

  • தாருகாவனத்து முனிவர்கள், இறைவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி, தீயவேள்வி செய்து, புலியை வரவழைத்து, அதை இறைவன் மீது ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    அப்பர்     -    1. நீல மாமணி கண்டத்தர் (5.51); 

பாடல்கள்      :    அப்பர்     -       கயிலாயமலை (6.71.11); 

                   சேக்கிழார்   -       மன்னும் அக் கோயில் (12.28.364) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.   

 

    தல மரம் : பாலை

Specialities

 

view the temple

 

 

  • இத்தலம் பாலைவனம், பிரம்மவனம், அரசவனம், புன்னாகவனம் எனப்பல பெயர்களால் சிறப்புறப்படுகிறது.

     

  • வேதங்களின் நடுவணதாகிய யஜுர்வேதத்தின் நடுவின் பஞ்சாக்ஷரம் விளங்குவது போல, திருமுறைகளில் தேவாரத்துள் நடுவணதாகிய அப்பர் தேவாரத்துள், குறுந்தொகையில், நடுப்பதிகமாகிய 51-ஆவது பதிகம் இத்தலத்துப் பதிகமாகும். இப்பதிகத்தின் நடுப்பாடலாக உள்ள "விண்ணினார் பணிந்து " என்று தொடங்கும் பாடலின் நடுவில் சூட்சும பஞ்சாக்ஷரம் விளங்குகிறது. இச்சிறப்பினையுடைய (பதிகத்திற்கு) உரிய தலம் இதுவேயாகும்.

     

  • கோயில் கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற் கட்டமைப்பிலும் காணப்படுகிறது.

     

  • கோயிலுள் பெரிய நெற்களஞ்சியம் உள்ளது - வட்ட வடிவில் கூம்பு முனையுடன் செங்கல்லால் கட்டப்பட்டுள்ள இக்களஞ்சியம் 12 ஆயிரம் கலம் கொள்ளளவுடையது. இவ்வளவு அதிகமான நெல் வருவாயைக் கொண்டதாக இக்கோயில் விளங்கியதென்பது நமக்குத் தெரிகிறது. (தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.)

     

  • பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர், மகாலட்சுமி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட சிவலிங்கள் உள்ளன.

     

  • சுவாமி, அம்பாள் இருவரும் கல்யாணத் திருக்கோலத்தில் விளங்குகின்றனர்.

     

  • இக்கோயிலில் முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் இராசராசன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோருடைய காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

     

  • கல்வெட்டுக்களில் இவ்வூர், "நித்தவிநோத வளநாட்டு நல்லூர் நாட்டைச் சேர்ந்த ஊர் " என்றும்; இறைவன் "திருப்பாலைத்துறை மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

     

  • (முதற் குலோத்துங்கன் காலத்தில் இக்கோயில் கருங்கல் திருப்பணியாக ஆக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது.)

Contact Address

அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம் - கோயில் வாயிலில் இறங்கலாம். கும்பகோணம் - தஞ்சை இருப்புப் பாதையில் பாபநாசம் நிலையத்தில் இறங்கி 1 கி. மீ. வடகிழக்கில் சென்று இத்தலத்தை அடையலாம். தொடர்புக்கு :- 94435 24410.

Related Content