இறைவர் திருப்பெயர்: | மதுவனேஸ்வரர், பிரகாசநாதர், தேவாரண்யேசுவரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | மதுவனேஸ்வரி, தேவகாந்தார நாயகி. |
தல மரம்: | வில்வம், கோங்கு, வேங்கை, மாதவி, சண்சபம். (தற்போது வில்வம் மட்டுமே உள்ளது). |
தீர்த்தம் : | பிரம தீர்த்தம், சூல தீர்த்தம். |
வழிபட்டோர்: | சுந்தரர், சேக்கிழார், சூரியன், அகத்தியர், பிரமன், தேவர்கள்(தேனீக்களாய்) ஆகியோர். |
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சுந்தரர் - 1. தண்ணியல் வெம்மையி னான் (7.98);
பாடல்கள் : சேக்கிழார் - பல நாள் அமர்வார் (12.28.56) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
ஊர் பெயர் - நன்னிலம்; கோயில் பெயர் - பெருங்கோயில்.
விருத்திராசுரனின் துன்பம் தாளாமல் தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து வழிபட்ட தலமாதலின் மதுவனம் என்றும் பெயர் பெற்றது.
மதுவனம், தேவாரண்யம், சுந்தரவனம், பிருகத்புரம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.
கோயிலுள் பிரமன் வழிபட்ட மகாதேவலிங்கமும், அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் லிங்கமும் உள்ளது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்துகள் நன்னிலம் வழியாவும் செல்கின்றன. நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்த திருவாரூர் போகும் பாதையில் அரசு மருத்துவமனை எதிரில் செல்லும் வழியில் சென்றால் கோயிலை அடையலாம். தொடர்புக்கு :- 94426 82346 , 99432 09771.