logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கடைமுடி (கீழையூர், கீழூர்)

இறைவர் திருப்பெயர்: கடைமுடிநாதர், அந்திசம்ரக்ஷணீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அபிராமி.

தல மரம்:

தீர்த்தம் : கருணாதீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், பிரமன், கண்வமகரிஷி ஆகியோர்.

Sthala Puranam

kadaimudi templeview of kadaimudinAthar temple vimAnA

மக்கள் வழக்கில் கீழையூர் என்றும் கீழூர் என்றும் வழங்குகிறது. (கீழையூர் என்பது ஏழு ஊர்கள் சேர்ந்து - மிகப் பெரிய ஊர். இதனால் இதற்கு ஏழூர் என்றும் பெயர் வழங்குகிறது. (திருச்சென்னம்பூண்டி - என்னும் ஊரே கல்வெட்டின்படி கடைமுடி என்பர் ஆய்வர்.

 

பிரமன், கண்வமகரிஷி முதலியோர் வழிபட்டதாக ஐதீகம்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்   :   சம்பந்தர்   -   1. அருத்தனை அறவனை (1.111); பாடல்கள்    :   அப்பர்      -      இடைமரு தீங்கோ (6.70.3);                     சுந்தரர்     -      நாளும் நன்னிலம் (7.12.8);                   சேக்கிழார்  -      வைகும் அந்நாளில் (12.28.129) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

தல மரம் : கிளுவை

 

Specialities

காவிரி இங்கு வடக்கு முகமாக வந்து மேற்காக ஓடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

  • மூலவர் - சற்று உயர்ந்த பாணத்துடன் தரிசனம் தருகிறார்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில்; மேலையூர் மேலப்பாதி தாண்டி, கீழையூர் என்று பெயர்ப்பலகையுள்ள ஊரையும் கடந்து, சற்று மேலே சென்று 'சத்திரம் Stop' என்னுமிடத்தில் கீழையூர் 2 கி.மீ. என்று கைகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் சென்று, கீழையூர் பேருந்து நிற்குமிடத்தில் இடப்பால் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம். தொடர்புக்கு :- 94427 79580 , 04364 - 283 261.

Related Content