இறைவர் திருப்பெயர்: | சௌந்தரநாதர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | திரிபுரசுந்தரி |
தல மரம்: | புன்னை (புன்னாகம்.) |
தீர்த்தம் : | காருண்ய தீர்த்தம். |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், கபிலதேவ நாயனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், நாரை. |
நாரை பூஜித்ததால், இப் பெயர்.
திருத்தொண்டர் திருவந்தாதி பாடியும் தேவாரத் திருமுறைகளைத் தொகுத்தும் சைவவுலகுக்குப் பேருபகாரம் செய்த நம்பியாண்டார் நம்பி என்ற ஆதி சைவ மறையவர்
அவதரித்துப் புகழ் பெற்ற தலம். நம்பியாண்டார் நம்பிகள் இத்தலத்துப் பொல்லாப் பிள்ளையார் திருவருள் பெற்றே திருமுறைகளைக் கண்டெடுக்கும் ஆற்றல் பெற்றார்.
சுயம்பு மூர்த்தியாதலின் பொள்ளாப் பிள்ளையார் என்ற பெயர் பொல்லாப் பிள்ளையார் என வழங்கலாயிற்று.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. உரையினில் வந்தபாவம் (2.86), 2. காம்பினை வென்ற (3.102), 3. கடலிடை வெங்கடு (3.107); அப்பர் - 1. வீறு தானுடை வெற்பன் (5.55), 2. சொல்லானைப் பொருளானை (6.74); நம்பியாண்டார் நம்பி - 1. என்னை நினைந்தடிமை (11.32) திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை; பாடல்கள் : சம்பந்தர் - ஆரூர்தில்லை யம்பலம் (2.39.1); அப்பர் - செல்வப் புனற்கெடில (6.07.1), அஞ்சைக் களத்துள்ளார் (6.51.8), நறையூரிற் சித்தீச்சரம் (6.70.10), பிறையூருஞ் சடைமுடியெம் (6.71.4); கபிலதேவ நாயனார் - நக்கரை சாளும் (11.23.45) சிவபெருமான் திருவந்தாதி; சேக்கிழார் - அப்பொழுதே அம்பலத்துள் (12.21.179) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், நம்பரை நலம் திகழ் நாரையூரினில் (12.28.253) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : புன்னை மரம்
திருமுறைகளை வகுக்கும்படி சொன்ன அபயகுல ராச ராச சோழனுக்கும், வகுத்தருளிய
நம்பியாண்டர் நம்பிகட்கும் விக்கிரகங்கள் உள்ளன.
பொல்லாப் பிள்ளையார் சன்னதி மிகச் சிறப்பு.(பொள்ளா என்பது பொல்லா என்றாயிற்று. பொள்ளா என்பது உளி முதலியவற்றால் செய்யப்படாதது. சுயம்பு மூர்த்தி.)
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோவில் செல்லும் பஸ் பாதையில் 5-கி.மீ தூரத்தில் இருக்கிறது. சிதம்பரத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்பு : 09442571039, 09443906219