இறைவர் திருப்பெயர்: மார்க்கசகாயேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை, சௌந்தரநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : காவிரி, சந்திர புஷ்கரணி, துர்க்கை ,புஷ்கரணி, உபமன்யு கூபம் முதலியன.
வழிபட்டோர்:சப்த மாதர்கள், பிரமன், திருமால், துர்க்கை.
Sthala Puranam
Specialities
திருவாவடுதுறை ஆதீன முதற்குரவர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளின் அவதாரத் தலம்.
பலிபீடம் நடுவிருக்க நாற்புறமும் நான்கு சிறிய நந்திகளும், அதன் முன்னால் ஒரு பெரிய நந்தியும் சிறப்பான அமைப்பில் காட்சியளிக்கின்றன.
தட்சிணாமூர்த்தியின் திருவடிக்கீழ் யானை முகம், மான், சிம்மம், ரிஷபம் முதலியவையும் முயலகன், சனகாதியர் நால்வர் ஆகியோருடன் சேர்ந்திருப்பது புதுமையாகவுள்ளது.
சௌந்தர நாயகி சந்நிதி தனியே உள்ளது. இச்சந்நிதியின் கருவறைச் சுவரில் வெளிப்புறத்தில் மேற்புறமாக பல அரிய சிற்பங்கள் உள்ளன.
இவ்வூரை ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு திருமூவலூர் என்று கல்வெட்டுக் குறிக்கின்றது.
Contact Address