இறைவர் திருப்பெயர்: | அருள்வள்ளல் நாயகர், உத்வாக நாதசுவாமி, கல்யாண சுந்தரேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | யாழினும் மென்மொழியம்மை, கோகிலாம்பாள். |
தல மரம்: | வன்னி , கொன்றை , கரு ஊமத்தை |
தீர்த்தம் : | சப்த சாகர தீர்த்தம். |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சேக்கிழார், மன்மதன், ஆமை, முதலியோர் |
ஈசன், உமாதேவியைத் திருமணம் புரிந்த தலம். எனவே இப்பெயர் பெற்றது.
ஆமை, பூஜித்து.மனித உருப்பெற்றது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. அயிலாரும் அம்பதனாற் (2.16); அப்பர் - 1. பட்ட நெற்றியர் பாய்புலி (5.87); பாடல்கள் : அப்பர் - தேனார் புனற்கெடில (6.07.11); சேக்கிழார் - அப்பதி போற்றி (12.28.290) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
திருமணப்பேறு, மகப்பேறு ஆகியவற்றுக்குப் பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, கீழைத் திருமணஞ்சேரி எனப்படுகிறது. மயிலாடுதுறை-கும்பகோணம் இரயில்பாதையில், குத்தாலம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 6கீ.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்புக்கு :- 04364 - 235 002.