இறைவர் திருப்பெயர்: | மத்தியபுரீஸ்வரர், நட்டூர்நாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | சுகந்த குந்தளாம்பிகை, நட்டுவார் குழலியம்மை. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - பொருப்பள்ளி வரைவில்லாப் (6-71-1).
இவ்வூருக்கு வழங்கும் பெயர்களுள் 'நட்டூர்' என்பது மிகப் பழைய பெயராகும். இது சம்ஸ்கிருதத்தில் 'நடுஊர்' என்ற பொருளில் 'மத்யபுரி' எனப்படும். இதனால் இவ்விறைவனுக்கு மத்யபுரீஸ்வரர் என்ற பெயருமுண்டு.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காங்கோயம் - சென்னிமலை / பெருந்துறை சாலையில் உள்ள 'நால்ரோடு' என்னுமிடத்திற்கு, "நத்தக்காடையூர்" வழி காட்டியுள்ள இடத்தில், அவ்வழிகாட்டி காட்டும் திசையில், செல்லும் சாலையில் 3 கி.மீ. சென்றால் 'பரஞ்சேர்வழி' ஊரையடையலாம்.