logo

|

Home >

hindu-hub >

temples

திருத்தலைச்சங்காடு

இறைவர் திருப்பெயர்: சங்காரண்யேஸ்வரர், சங்கவனேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்திரநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : சங்குதீர்த்தம் (பௌர்ணமியன்று நீராடுதல் சிறப்பு), காவிரி.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார்திருமால்

Sthala Puranam

 

 

view the temple

 

 

view the vimAnA with pirakArachuRRu

 

  • திருமால் இறைவனைப் பூஜித்துப் பாஞ்சசந்யம் எனும் சங்குப் பெற்றத் தலம்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. நலச்சங்க வெண்குழையும் (2.55); 

பாடல்கள்      :     அப்பர்      -      சிந்தும் புனற்கெடில (6.007.10), 
                                         இடைமரு தீங்கோ (6.070.3),  
                                         மலையார்தம் மகளொடு (6.071.6); 

                     சேக்கிழார்   -     அம்பிகை அளித்த ஞானம் (12.28.117) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

    தல மரம் : புரசு

Specialities

 

  • காவிரித் தென்கரையின் 45-வது பதி

  • இவ்வூர், சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள, பெருமை வாய்ந்தது.

  • கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று. பெருங்கோயில் 
    எனவும் வழங்கப்படும். மேலே செல்லும் படிகள் யானை ஏறிச் செல்லமுடியாதபடி 
    அமைந்திருக்கும். இறைவர் மாடத்தின் மீது எழுந்தருளியிருப்பர்.

  • இத்தலத்துத் திருக்கோயில் பிரணவாகாரமாகிய வலம்புரிச் சங்கத்தின் வடிவமாக 
    அமைக்கப்பட்டிருக்கின்றது. 'வலமாகச் சுழித்து வரும் சுற்றுக்களும் நடுவில் கருப்ப வீடும் 
    அதன் நடுவில் மேலே இறைவர் விளங்குவதும்முறை. நெறியாவது சங்கத்தினில் எப்போதும் 
    முழங்கும் நாதத்தின் பொருளாய் இறைவர் விளங்குவது'.

  • சோழர் காலக் கல்வெட்டுகள் பத்து உள்ளன.

Contact Address

அமைவிடம் : இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர்முக்கூட்டு சென்று, அங்கிருந்து சீர்காழி, பூம்புகார் செல்லும் பஸ்களில் இப்பதிக்குச் செல்லலாம். தொடர்புக்கு :- 04364 - 280 757.

Related Content