இறைவர் திருப்பெயர்: | சித்தநாதேஸ்வரர், வேதேஸ்வரர், நரேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | அழகம்மை, சௌந்தர நாயகி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | சூல தீர்த்தம், பிரம தீர்த்தம். தேன்சித்தி தீர்த்தம் |
வழிபட்டோர்: | சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார், பிரமன், சித்தர்கள், குபேரன், மார்க்கண்டேயர். |
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. ஊருலாவு பலி (1.29), 2. பிறைகொள் சடையர் (1.71), 3. நேரியனா குமல்ல னொருபாலு (2.87); சுந்தரர் - 1. நீரும் மலரும் நிலவும் (7.93); பாடல்கள் : சேக்கிழார் - நாலூர் தென் திருச்சேறை (12.21.216) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், பாடும் அரதைப் பெரும் (12.28.403) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
சித்தர்களால் பூசிக்கப் பெற்றதால், இப்பெயர்.
கோவிலின் பெயர்- சீத்தீச்சரம்; ஊரின் பெயர்-நறையூர்.
துர்வாச முனிவரால் பறவை உருவத்தைச் சாபமாகப் பெற்ற மனிதன்(நரன்) வழிபட்டது.
அமைவிடம் : இந்தியா - தமிழ்நாடு - மாவட்டம் : தஞ்சாவூர். இது, கும்பகோணத்திற்குத் தெற்கே 8-கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து, பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு:- 0435-246 7343 , 246 7219.