இறைவர் திருப்பெயர்: | அமிர்தகடேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | சோதி மின்னம்மை, வித்யுஜோதி நாயகி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | சக்தி தீர்த்தம். சக்தி குளம் |
வழிபட்டோர்: | முருகப் பெருமான், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், இந்திரன் முதலியோர் |
இந்திரன் பூசித்து, அமிர்தம் உண்டாகும்படி வரம் பெற்றதால், இது கரக்கோவில் எனப்படுகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வானமர் திங்களும் (2.68); அப்பர் - 1. தளருங் கோளரவத்தொடு (5.19), 2. ஒருவராய் இரு (5.20); பாடல்கள் : அப்பர் - சிந்தும் புனற்கெடில (6.7.10); சுந்தரர் - பொல்லாப் புறங்காட் (7.2.5), காட்டூர்க் கடலே (7.47.1); மாணிக்கவாசகர் - கடம்பூர் தன்னில் (8.2.83 வது வரி), கடம்பூர் மேவிய (8.4.160 வது வரி); சேக்கிழார் - மாடுள பதிகள் (12.29.111) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
தல மரம் : கடம்ப மரம்
கோயில் மூலஸ்தானத்தின் அடிப்பாகம் இரத வடிவில், குதிரைகள் பூட்டிய நிலையில் உள்ளது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சிதம்பரம் அருகில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து காட்டு மன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் பஸ்ஸில் இத் தலத்தை அடையலாம். தொடர்பு : 09345656982