இறைவர் திருப்பெயர்: | பாலுகந்தநாதர், பாலுகந்தீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | பிருகந்நாயகி, பெரியநாயகி. |
தல மரம்: | அத்தி , ஆத்தி, காட்டாத்தி |
தீர்த்தம் : | தீர குண்டம் |
வழிபட்டோர்: | சண்டேசுவரர், அப்பர் - கடலகம் ஏழி னோடும். சேக்கிழார் |
மக்கள் வழக்கில் 'திருவாய்ப்பாடி' என்று வழங்குகிறது.
சண்டேசுவரர் வழிபட்டு முத்திப் பெற்றத் தலம்.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர் - கடலகம் ஏழி னோடும் (4.48); பாடல்கள் : சேக்கிழார் - பொங்கு புனலார் (12.21.301) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.
தல மரம் : அத்தி
2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட மிகவும் பழமையானத் திருக்கோயில்
மூலவர் - சிவலிங்கத் திருமேனி; சுயம்பு.
மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள்பாலிப்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு.
கொடிமரமில்லை.
முன் மண்டபம் வெளவால் நெத்தியமைப்புடையது.
கல்வெட்டில் இறைவன் பெயர் 'ஆப்பாடி உடையார் ' என்றுள்ளது.
அமைவிடம் அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்ப்பாடி - 612 504. திருப்பனந்தாள் அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். திருக்கோயில் அர்ச்சகர் (பாலுக்குகந்தநாதன்) தொடர்பு எண். +91-9442167104. இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - திருப்பனந்தாள் சாலையில், சேங்கனூர் (சேய்ஞலூர்) சாலையைத் தாண்டி, திருவாய்ப்பாடி உள்ளது.