இறைவர் திருப்பெயர்: | தாருகவனேஸ்வரர், பராய்த்துறைநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | ஹேமவர்ணாம்பாள், பசும்பொன்மயிலாம்பாள். |
தல மரம்: | |
தீர்த்தம் : | காவிரி. |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் ஆகியோர். |
பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் 'பராய்த்துறை' எனப்படுகிறது. இத்தலத்திற்கு 'தாருகாவனம்' என்றும் பெயருண்டு. (பராய் மரம், சமஸ்கிருதத்தில் 'தாருகா விருக்ஷம்' எனப்படுகிறது.)
இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்தார்.
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. நீறுசேர்வதொர் (1.135);
அப்பர் - 1. கரப்பர் கால (5.30);
பாடல்கள் : சம்பந்தர் - கோலக் காவிற் (4.15.5);
அப்பர் - செழுநீர்ப் புனற்கெடில (6.007.5),
இடிப்பான்காண் (6.008.2),
நஞ்சடைந்த (6.013.6),
பகலவன்றன் (6.33.10),
வெண்காட்டார் (6.51.4),
வீழி மிழலைவெண் காடு (6.70.7),
கயிலாயமலை (6.71.11),
படமாடு (6.81.8),
விண்ணோர் (6.82.2),
ஐந்தலைய (6.86.8);
மாணிக்கவாசகர் - பராய்த் துறை மேவிய பரனே போற்றி (8.04.153) போற்றித் திருவகவல்,
அன்பராகி (8.23.4) செத்திலாப்பத்து;
பட்டினத்துப் பிள்ளையார் - நண்ணிப் பரவும் (11.30.62) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;
சேக்கிழார் - பன்னெடும் குன்றும் (12.28.340 & 341) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : பராய் மரம்
இங்குள்ள நவகிரகங்களுள் சனிபகவானுக்கு மட்டுமே வாகனம் உள்ளது; ஏனையோருக்கு வாகனமில்லை.
முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இத்திருக்கோயில்.
கல்வெட்டில் இத்தலம், "உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை" என்றும்; இறைவன் பெயர் "பராய்த்துறை மகாதேவர் " என்றும்; "பராய்த்துறைப் பரமேஸ்வரன்" என்றும் குறிக்கப்படுகிறது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி - கரூர் - குளித்தலை செல்லும் பேருந்துச் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். திருச்சி - ஈரோடு இருப்புப் பாதையில் உள்ளது; எலமனூர் புகைவண்டி நிலையத்தில் இறங்கி செல்லலாம். தொடர்பு : 09940843571