logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-paraai-tree

Om symbol

temple-trees-தலமர சிறப்புகள் பராய் மரம்

Om symbol

தலமர சிறப்புகள்


பராய் Streblus asper, Lour.; Moraceae.

பராய் / parAy / Streblus asper
பராய் மரம்

நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை 
மருப்ப ராய்வளைந் தாலொக்கும் வாண்மதி 
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார் 
விருப்ப ராயிருப் பாரை அறிவரே.

                                                                                                     . - திருநாவுக்கரசர்.

 

திருப்பராய்த்துறை திருக்கோயிலின் தலமரமாக விளங்குவது பராய் மரமாகும். இது பிராய், பிறாமரம், குட்டிப்பலா என்றெல்லாம் குறிக்கப்பெறுகிறது. சுரசுரப்பான கரும்பச்சை இலைகளையுடைய வெள்ளை நிற மரம். புதர்க்காடுகளில் காணப்படும். இலை, பால், பட்டை முதலியன மருத்துவப் பயனுடையன.

 

Fig tree leaf

Fig tree leaf

Fig tree leaf

Fig tree leaf

Fig tree leaf

திருமுறைகளில் பராய் பற்றிய குறிப்பு :-

1.135 - திருப்பராய்த்துறை - நீறு சேர்வதொர்

கோலக் காவிற் குருமணியைக் 
 குடமூக் குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை 
 அமரர் சென்னி யாய்மலரைப்
பாலிற் றிகழும் பைங்கனியைப் 
 பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
சூலத் தானைத் துணையிலியைத் 
 தோளைக் குளிரத் தொழுதேனே. 4.015.5

5.030 - திருப்பராய்த்துறை - கரப்பர் கால மடைந்தவர்

செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமுந்
திரிபுராந் தகந்தென்னார் தேவீச்சரங்
கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக்காவுங் 
குடமூக்குங் கோகரணங் கோலக்காவும்
பழிநீர்மை யில்லாப் பனங்காட்டூரும்
பனையூர் பயற்றூர் பராய்த்துறையுங்
கழுநீர் மதுவிரியுங் காளிங்கமுங்
கணபதீச் சரத்தார்தங் காப்புக்களே.  6.007.5 

இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்
எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே
முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்
பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.  6.008.2 

நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி
நல்ல புலியதள்மேல் நாகங் கட்டிப்
பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்
பராய்த்துறை யேனென்றோர் பவள வண்ணர்
துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத்
துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.  6.013.6

பகலவன்றன் பல்லுகுத்த படிறன் றன்னைப்
பராய்த்துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை
இகலவனை இராவணனை இடர்செய் தானை
ஏத்தாதார் மனத்தகத்துள் இருளா னானைப்
புகழ்நிலவு பொழிலாரூர் மூலட் டானம் 
பொருந்தியவெம் பெருமானைப் போற்றார் சிந்தை
அகலவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 6.033.10

வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி 
நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்
பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்
பராய்த்துறையார் சிராப்பள்ளி யுள்ளார் பண்டோர்
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி 
உரித்துரிவை போர்த்த விடலை வேடம்
விண்காட்டும் பிறைநுதலி யஞ்சக் காட்டி
வீழி மிழலையே மேவி னாரே.  6.051.4  

வீழி மிழலைவெண் காடு வேங்கூர்
வேதி குடிவிசய மங்கை வியலூர்
ஆழியகத் தியான்பள்ளி அண்ணா மலை
ஆலங் காடும் அரதைப் பெரும்
பாழி பழனம்பனந் தாள்பா தாளம்
பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண்
காழி கடல்நாகைக் காரோ ணத்துங்
கயிலாய நாதனையே காண லாமே.  6.070.7

கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை
பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்
குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை
பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு
மயிலாடு துறைகடம்பந் துறையா வடு
துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே.  6.071.11 

படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய்
பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடமாடி ஏழுலகுந் திரிவான் கண்டாய்
நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்
கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்
கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்
குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.  6.081.8 

விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்
வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்
அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்
அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்
பண்ணார் களிவண்டு பாடி யாடும்
பராய்த்துறையுள் மேய பரமர் போலுந்
திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.  6.082.2 

ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ
டயன்தேடி நாடரிய அம்மான் றன்னைப்
பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப்
பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் றன்னைப்
பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்
பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச்
சிந்தியவெந் தீவினைகள் தீர்ப்பான் றன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.  6.086.8 

பராய்த் துறை மேவிய பரனே போற்றி 8.004

அன்பராகிமற் றருந்தவம் முயல்வார்
 அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்
என்பராய் நினைவார் எனைப்பலர்
 நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்
வன்பராய் முருடொக்கும் என்சிந்தை
 மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
தென்பராய்த் துறை யாய் சிவலோகா
 திருப்பெருந்துறை மேவிய சிவனே.  8.023.4 

நண்ணிப் பரவும் திருவா 
 வடுதுறை நல்லம்நல்லூர்
மண்ணில் பொலிகடம் பூர்கடம் 
 பந்துறை மன்னுபுன்கூர்
எண்ணற் கரிய பராய்த்துறை 
 ஏர்கொள் எதிர்கொள்பாடி
கண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி 
 ஏகம்பம் காண்மின் சென்றே.  11.030.62

சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் 
 செஞ்சொல் மாலை பல பாடி
இலங்கு சடையார் எறும்பியூர் 
 மலையும் இறைஞ்சிப் பாடியபின்
மலர்ந்த சோதித் திருச்சிராப்பள்ளி 
 மலையும் கற்குடியும்
நலம்கொள் செல்வத் திருப்பராய்த் 
 துறையும் தொழுவான் நண்ணினார்.  12.027.302  

பன்னெடும் குன்றும் படர் பெரும் 
 கானும் பல பதியும் 
அந் நிலைத் தானங்கள் ஆயின 
 எல்லாம் அமர்ந்து இறைஞ்சி 
மன்னு புகலியில் வைதிக 
 வாய்மை மறையவனார் 
பொன் இயல் வேணிப் புனிதர் 
 பராய்த் துறையுள் புகுந்தார்.  12.034.340 

நீடும் பராய்த் துறை நெற்றித் 
 தனிக் கண்ணர் கோயில் நண்ணிக் 
கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோதில் 
 தமிழ்ச் சொல் மாலை 
பாடும் கவுணியர் கண்பனி 
 மாரி பரந்து இழியச் 
சூடும் கரதலத்து அஞ்சலி 
 கோலித் தொழுது நின்றார்.  12.034.341 
 

< PREV <
நெல்லிமரம்
Table of Content> NEXT >
பலாமரம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)