logo

|

Home >

hindu-hub >

temples

திருச்செம்பொன்பள்ளி (செம்பனார்கோயில்)

இறைவர் திருப்பெயர்: சொர்ணபுரீஸ்வரர், தேவப்பிரியர்,சுவர்ணலட்சுமீசர், செம்பொன்பாள்ளியார்.

இறைவியார் திருப்பெயர்: மருவார்குழலி, புஷ்பாளகி, தாக்ஷாயணி, சுகுந்தகுந்தளாம்பிகை, சுகந்தவனநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : சூரிய தீர்த்தம், காவிரி. இந்திர தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், வசிட்டர், அகத்தியர், பிரமன், திருமான், இந்திரன், குபேரன் முதலியோர்.

Sthala Puranam

holy pond of the temple

  • மக்கள் வழக்கில் செம்பனார்கோயில் என்று வழங்கப்படுகிறது.

     

  • இத்தலம் தாக்ஷாயணிக்கு அருள்புரிந்ததும், வீரபத்திரர் தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.

     

  • இந்திரன் நீராடி வழிபட்டு விருத்திராசுரனை கொல்ல வச்சிராயுதம் பெற்ற தலம்.

  • cemponpalli temple

 

 திருமுறைப் பாடல்கள்        :

பதிகங்கள்         :        சம்பந்தர்      -     1. மருவார் குழலி (1.25); 

                                         அப்பர்         -      1. ஊனினுள் ளுயிரை வாட்டி (4.29),

                                                                      2. கான றாத (5.36); 

பாடல்கள்           :       சம்பந்தர்        -        அறப்பள்ளி (2.39.4); 

                                        அப்பர்           -        தேனார் புனற்கெடில (6.7.11), 

                                                                         தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1 & 9),  

                                                                         பொருப்பள்ளி (6.71.1);  

                                  சேக்கிழார்         -       மேவு புனல் (12.21.190) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 

                                                                        அத்திருப்பதி அகன்று போய் (12.28.440) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 

                                                                        நனிபள்ளி அமர்ந்த (12.29.149) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

 

தல மரம் : வன்னிவில்வம்

    

Specialities

  • இத்தலத்திற்கு இலக்குமிபுரி, இந்திரபுரி, கந்தபுரி என்ற பெயர்களுமுண்டு.

     

  • இக்கோயில் கோச்செங்கட் சோழனின் திருப்பணியாகும்.

     

  • கீழே பதினாறும் மேலே பதினாறும் இதழ்களையுடைய தாமரை போன்ற ஆவுடையாரில் மூலவர் - இலிங்கத் திருமேனி - சுயம்பு மூர்த்தமாக காட்சிதருகிறார்.

     

  • இங்குள்ள வட்டவடிவமான ஆவுடையார் உள்ள திருமேனி திருமாலும், சதுர வடிவுடைய ஆவுடையாருள்ள திருமேனி பிரமனாலும் பூசிக்கப்பட்டதாகும்.

     

  • தனியேயுள்ள தேவி சந்நிதி தெற்கு நோக்கியது; இத்தலத்திற்கு தென்மேற்கேயுள்ள பறியலூரில் தந்தையான தக்கன் செய்த வேள்விக்குச் செல்லும் கோலத்தில் மேற்கு நோக்கியிருப்பதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.

     

  • சித்திரை 7-ஆம் நாள் முதல் 18-ஆம் நாள் முடிய சூரிய ஒளி சுவாமி மீது படுவதாகச் சொல்லப்படுகிறது. (இந்நாட்களில் விடியற்காலையில் சூரிய வழிபாடு நடைபெறுகிறது.)

     

  • இக்கோயிலில் சோழர் காலத்திய ஆறு கல்வெட்டுக்கள் உள்ளன; இவை மூன்றாம் குலோத்துங்க சோழன், ராஜாதிராஜசோழ தேவர், தஞ்சை சரபோஜி மன்னர் காலத்தியவை.

     

  • இக்கோயிலின் அமைப்பு முறை ஜேஷ்டாதேவியின் பிரதிஷ்டை முதலியவைகளைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது இக்கோயில் கி. பி. 879 - 907 வரை அரசாண்ட முதலாம் ஆதித்த சோழன் செய்த திருப்பணியாகக் கருத இடமுண்டு என்றும் செய்தி இவ்வாலயத் தலவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

  • இவ்வூரில் 8.2.1965- ல் தோற்றுவிக்கப்பட்ட 'மணிவாசக மற்றம்' மிகச் சிறப்பாக பல தெய்வீகப் பணிகளைச் செய்து வருகிறது.

Contact Address

அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை - பொறையாறு பேருந்து சாலையில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து 10-கி. மீ. தொலைவிலுள்ளது; நகரப் பேருந்துகள் செல்கின்றன. தொடர்புக்கு :- 99437 97974.

Related Content