logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-konrai-tree-indian-laburnum-tree

temple-trees-தலமரச் சிறப்புகள் கொன்றை மரம் - Konrai tree (Indian Laburnum Tree)

கொன்றை மரம் - Konrai tree (Indian Laburnum Tree)  


(சரக்) கொன்றை Cassia fistula, Linn.; Caesalpiniaceae

 

பொன்னினார் கொன்றை யிருவடங்கிடந்து 
பொறிகிளர் பூணநூல் புரள
மின்னினார் உருவின் மிளிர்வதோர் 
அரவம் மேவுவெண்ணீறுமெய் பூசித்
துன்னினார் நால்வர்க் கறம்அமர்ந் 
தருளித் தொன்மையார் தோற்றமுங்கேடும்
பன்னினார் போலும் பந்தணை 
நல்லூர் நின்றயெம் பசுபதியாரே.

                                                                                         . - திருஞானசம்பந்தர்.

 

கொன்றை (Laburnum Tree) 
கொன்றை (Laburnum Tree)

 

திருத்துறையூர்திருப்புத்தூர் திருப்பந்தணை நல்லூர்திருஅச்சிறுபாக்கம், திருச்சாத்தமங்கைதிருஅஞ்சைக்களம் திருத்தினைநகர்திருச்சோபுரம், திருஅதிகைதிருமாணிகுழி , திருவெண்காடு , திருக்கோலக்கா , திருக்கண்ணார் கோயில் , திருமணஞ்சேரி , திருக்கோவலூர் வீரட்டம்திரு ஆக்கூர் (தான்தோன்றிமாடம்) முதலிய பதினைந்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தலமரமாக கொன்றை விளங்குகிறது. வன்னிக்கு அடுத்தபடியாக அதிகமான திருக்கோயில்களில் தலமரமாக அமைந்துள்ளது.

 

நீள் சதுரமான கூட்டிலைகளையும் சரஞ்சரமாய்த் தொங்கும் பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூங்கொத்துகளையும் நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடைய இலையுதிர் மரமாகும். தமிழகமெங்கும் இயற்கையாக வளர்கிறது.

 

பட்டை, பூ, வேர், காய் ஆகியவை மருத்துவப் பயனுடையதாக விளங்குகிறது.

 

இம்மரத்தின் மருத்துவக் குணங்கள், நோய் நீக்கி உடல் தேற்றும்; காய்ச்சல் தணிக்கும்; மல மிளக்கும், வாந்தியுண்டாக்கும்; உடல் தாதுக்களை அழுகாமல் தடுக்கும். பூ வயிற்று வாயு அகற்றும்; நுண்புழுக்களைக் கொல்லும்.

Cassia fistula, L. <=> Indian Laburnum Tree - Amaltas

 

Canopy

 

Canopy of Konrai / Laburnum

NameIndian Laburnum Tree
FamilyFabaceae
SubFamilyCaesalpinioideae
GenusCassia
SpeciesFistula
AuthorityL.
TypeNearly Evergreen
Common FamilyGulmohar
NativeIndia
SizeLarge

 

Reference

 

Wikiwikipedia
Linksflowersofindia
ars-grin
theplantlist
Language Commonpurging fistula, pudding-pipe tree
Language Hindiamaltas, girmala, alash, ali
DescriptionThis native of India, commonly known as Amaltaas, is one of the most beautiful of all tropical trees when it sheds its leaves and bursts into a mass of long, grape-bunches like yellow gold flowers. A tropical ornamental tree with a trunck consisting of hard reddish wood, growing up to 40 feet tall. The wood is hard and heavy; it is used for cabinet, inlay work, etc. It has showy racemes, up to 2" long, with bright, yellow, fragrant flowers. These flowers are attractive to bees and butterflies. The fruits are dark-brown cylindrical pods, also 2' long, which also hold the flattish, brown seeds (up to 100 in one pod) These seeds are in cells, each containing a single seed. A postal stamp was issued by the Indian Postal Department to commemorate this tree.
Medicinal usesThe sweet blackish pulp of the seedpod is used as a mild laxative.
WhereEaswar Nagar, 15th Cross Road, Indiranagar, Bangalore

 

Bark

 

Bark of Konrai / Laburnum

ColorYeeloowish
TextureAlmost smooth

 

Flowers

 

Flower of Konrai / Laburnum

Colorbright yellow
SeasonMar-Apr

 

Fruits

 

Fruit of Konrai / Laburnum

Shapecylindrical pipes
Colorgreen turning black

 

Leaves

 

Leaf of Konrai / Laburnum

Typeparipinnate
Size45 cm
Leaflet Numbers4-8 pairs

 

Picture Carousel (35)

 

Leaf of Konrai / Laburnum

Indian Laburnum Tree - Flower Bud 1

‹›

 

ஆரஞ்சு வண்ண மயில் கொன்றை

 

Caesalpinia pulcherrima, (L.) Sw. <=> Orange Peacock Flower Tree

 

Canopy

 

Canopy of orange color Konrai

NameOrange Peacock Flower Tree
FamilyFabaceae
SubFamilyCaesalpinioideae
GenusCaesalpinia
SpeciesPulcherrima
Authority(L.) Sw.
TypeNearly Evergreen
Common FamilyGulmohar
SizeSmall

 

Reference

 

Wikiwikipedia
Linksflowersofindia
ars-grin
theplantlist
DescriptionThis beautiful treelet, whose place of origin is unknown, is sometimes called Dwarf Poinciana due to the resemblence of its flowers and leaves to those of Gulmohar. They are botanically related but Peacock flower plant grows only to a height of about 3 meters, retains its leaves throughout the year, and blooms continuously. Flowers, which appear in clusters on long erect stems, are smalled than those of Gulmohar and have exceptionally long stamens and a prominent pistil which protrudes from the center. The most common color is red-orange, but one variety has pure yellow flowers.
WhereNational Games Village, Koramangala, Bangalore

 

Bark

 

Bark of orange color Konrai

ColorGrey

 

Flowers

 

Flower of orange color Konrai

ColorOrange
SeasonApr-Dec

 

Fruits

 

Fruit of orange color Konrai

ShapePod
Colorgreen

 

Leaves

 

Leaf of orange color Konrai

Typebipinnate

 

Picture Carousel (26)

 

Orange Peacock Flower Tree - Flower Bud

Orange Peacock Flower Tree - Flower Bud

‹›

 

இளஞ்சிவப்பு வண்ண மயில் கொன்றை

 

Caesalpinia pulcherrima, (L.) Sw. <=> Pink Peacock Flower Tree

 

Canopy

 

Canopy of pink color Konrai

NameOrange Peacock Flower Tree
FamilyFabaceae
SubFamilyCaesalpinioideae
GenusCaesalpinia
SpeciesPulcherrima
Authority(L.) Sw.
TypeNearly Evergreen
Common FamilyGulmohar
SizeSmall

 

Reference

 

Wikiwikipedia
Linksflowersofindia
ars-grin
theplantlist
DescriptionThis beautiful treelet, whose place of origin is unknown, is sometimes called Dwarf Poinciana due to the resemblence of its flowers and leaves to those of Gulmohar. They are botanically related but Peacock flower plant grows only to a height of about 3 meters, retains its leaves throughout the year, and blooms continuously. Flowers, which appear in clusters on long erect stems, are smalled than those of Gulmohar and have exceptionally long stamens and a prominent pistil which protrudes from the center. The most common color is red-orange, but one variety has pure yellow flowers.
WhereNational Games Village, Koramangala, Bangalore

 

Bark

 

Bark of pink color Konrai

ColorGrey

 

Flowers

 

Flower of pink color Konrai

ColorPink
SeasonApr-Dec

 

Fruits

 

Fruit of pink color Konrai

ShapePod
Colorgreen

 

Leaves

 

Leaf of pink color Konrai

Typebipinnate

 

Spines

 

Spine of pink color Konrai

ShapeCurved
Infosingle

 

Picture Carousel (23)

 

Pink Peacock Flower Tree - Flower Bud

Pink Peacock Flower Tree - Flower Bud

‹›

 

மஞ்சள் வண்ண மயில் கொன்றை

 

Caesalpinia pulcherrima forma flava, (O. Deg.) H. St. John <=> Yellow Peacock Flower Tree

 

Canopy

 

Yellow Peacock Flower Tree

NameYellow Peacock Flower Tree
FamilyFabaceae
SubFamilyCaesalpinioideae
GenusCaesalpinia
SpeciesPulcherrima forma flava
Authority(O. Deg.) H. St. John
TypeNearly Evergreen
Common FamilyGulmohar
SizeSmall

 

Reference

 

Wikiwikipedia
Linksflowersofindia
ars-grin
theplantlist
DescriptionThis beautiful treelet, whose place of origin is unknown, is sometimes called Dwarf Poinciana due to the resemblence of its flowers and leaves to those of Gulmohar. They are botanically related but Peacock flower plant grows only to a height of about 3 meters, retains its leaves throughout the year, and blooms continuously. Flowers, which appear in clusters on long erect stems, are smalled than those of Gulmohar and have exceptionally long stamens and a prominent pistil which protrudes from the center. The most common color is red-orange, but one variety has pure yellow flowers.
WhereAlong ASC Wall, Old Airport Road, Bangalore

 

Bark

 

Yellow Peacock Konrai Tree

ColorGrey

 

Flowers

 

Konrai Yellow Peacock Flower Tree

ColorYellow
SeasonApr-Dec

 

Fruits

 

Konrai Tree Fruit

ColorGreen

 

Leaves

 

Konrai Tree Leaf

Typebipinnate

 

Spines

 

Konrai Spine Brak

ShapeCurved
Infosingle

 

Picture Carousel (30)

 

Konrai Yellow Color Flower Bud

Yellow Peacock Flower Tree - Flower Bud 1

திருமுறைகளில் கொன்றை பற்றிய குறிப்பு :-

சீர்கெழு சிறப்போவாச் 
 செய்தவ நெறிவேண்டில்
ஏர்கெழு மடநெஞ்சே 
 யிரண்டுற மனம்வையேல்
கார்கெழு நறுங்கொன்றைக் 
 கடவுள திடம்வகையால்
பார்கெழு புகழோவா 
 பருப்பதம் பரவுதுமே.   6  
 
ஆடல் அரவசைத்தான் அருமாமறை 
 தான்விரித்தான் கொன்றை
சூடிய செஞ்சடையான் சுடுகா 
 டமர்ந்தபிரான்
ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் 
 அமர்ந்தடியார் ஏத்த
ஆடிய எம்மிறையூர் புகலிப் 
 பதியாமே.   1  

பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான்
நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே.   4  

கொங்கணி நறுங்கொன்றைத் 
 தொங்கலன் குளிர்சடையான்
எங்கள்நோய் அகலநின்றா 
 னெனவரு ளீசனிடம்
ஐங்கணை வரிசிலையான் 
 அநங்கனை அழகழித்த
பைங்கண்வெள் ளேறுடையான் 
 பருப்பதம் பரவுதுமே.   4  

அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை
விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி
வரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
திரையார் சடையானைச் சேரத்திரு வாமே.   4  

கனமலர்க் கொன்றை அலங்கல்இ லங்கக்
 கனல்தரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை யணிந்தழ காய
 புநிதர்கொ லாமிவ ரென்ன
வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி
 லாச்சிரா மத்துறை கின்ற
மனமலி மைந்தரோ மங்கையை வாட
 மயல்செய்வ தோஇவர் மாண்பே.   4  

கரிதா கியநஞ் சணிகண்டன்
வரிதா கியவண் டறைகொன்றை
விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே.   5  

நிழலால்மலிந்த கொன்றைசூடி 
 நீறுமெய்பூசிநல்ல
குழலார்மடவா ரையம்வவ்வாய் 
 கோல்வளைவவ்வுதியே
அழலாயுலகம் கவ்வைதீர 
 ஐந்தலைநீண்முடிய
கழல்நாகரையன் காவலாகக் 
 காழியமர்ந்தவனே.   10  

தாரார் கொன்றை பொன்தயங்கச் 
 சாத்திய மார்பகலம் 
நீரார் நீறு சாந்தம்வைத்த 
 நின்மலன் மன்னுமிடம்
போரார் வேற்கண் மாதர்மைந்தர் 
 புக்கிசை பாடலினாற்  
பாரார் கின்ற பட்டினத்துப் 
 பல்லவ னீச்சரமே.   4  

பைம்மா நாகம் பன்மலர் கொன்றை
 பன்றிவெண் கொம்பொன்று பூண்டு
செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச்
 செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மா னோக்கிய அந்தளிர் மேனி
 யரிவையோர் பாகம் அமர்ந்த
பெம்மான் நல்கிய தொல்புக ழாளர்
 பேணு பெருந்துறை யாரே.   1  

மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி 
 மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் 
 புனல்சூடிப் பொற்பமரும்
அன்னம் அனநடையாள் ஒருபாகத் 
 தமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான் 
 உறைகோயில் பாதாளே.   1  

கடியாரலங்கற் கொன்றைசூடிக் 
 காதிலொர் வார்குழையன்
கொடியார்வெள்ளை யேறுகந்த 
 கோவண வன்னிடமாம்
படியார்கூடி நீடியோங்கும் 
 பல்புக ழாற்பரவச்
செடியார்வைகை சூழநின்ற 
 தென்திருப் பூவணமே.   4  

புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்1
கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.

பாடம் : 1வழிபட   1  

புல்கவல்ல வார்சடைமேற் 
 பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை 
 மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம் 
 பொற்பாத நிழற்சேர
நல்கவல்ல நம்பெருமான் 
 மேயது நள்ளாறே.  4    4  

கொக்கிற கோடு கூவிள மத்தம்
 கொன்றையொ டெருக்கணி சடையர்
அக்கினொ டாமை பூண்டழ காக
 அனலது ஆடுமெம் மடிகள்
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும்
 விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார்
 பாம்புர நன்னக ராரே.   2  

வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே.   5  

தார்கொள் கொன்றைக் 
 கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி
சீர்கொள்பாட லாடலோடு 
 சேட ராய்வந்து
ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் 
 னுள்வெந் நோய்செய்தார்
கார்கொள்சோலைக் கானூர்மேய 
 கறைக்கண் டத்தாரே.   5  

குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே.   1  

வானார்சோதி மன்னுசென்னி 
வன்னிபு னங்கொன்றைத்
தேனார்போது தானார்கங்கை 
திங்க ளொடுசூடி
மானேர்நோக்கி கண்டங்குவப்ப 
மாலை யாடுவார்
கானூர்மேய கண்ணார்நெற்றி 
ஆன்ஊர் செல்வரே.   1  

வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில்
தோடார் குழை யான்நல பாலன நோக்கிக்
கூடாதன செய்த குரங்கணில் முட்டம்
ஆடாவரு வாரவ ரன்புடை யாரே.   4  

நீறார்அகலம் உடையார்நிரையார் 
 கொன்றை அரவோடும்
ஆறார்சடையார் அயில்வெங்கணையால் 
 அவுணர் புரம்மூன்றும்
சீறாஎரிசெய் தேவர்பெருமான் 
 செங்கண் அடல்வெள்ளை
ஏறார்கொடியார் உமையாளோடும் 
 ஈங்கோய் மலையாரே.   6  

பொங்கார் சடையர் புனலர் 
 அனலர் பூதம் பாடவே
தங்கா தலியுந் தாமும் 
 உடனாய்த் தனியோர் விடையேறிக்
கொங்கார் கொன்றை வன்னி 
 மத்தஞ் சூடிக் குளிர்பொய்கைச்
செங்கால் அனமும் பெடையுஞ் 
 சேருஞ் சித்தீச் சரத்தாரே.   2  

ஒண்டுவ ரார்துகி லாடை மெய்போர்த்
துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்
குண்டர்க ளோடரைக் கூறையில்லார்
கூறுவ தாங்குணம் அல்லகண்டீர்
அண்ட மறையவன் மாலுங்காணா 
ஆதியி னானுறை காட்டுப்பள்ளி
வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை
வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே.   10  

வெள்ள மெல்லாம் விரிசடை 
 மேலோர் விரிகொன்றை
கொள்ள வல்லான் குரைகழ 
 லேத்துஞ் சிறுத்தொண்டர்1
உள்ள மெல்லாம் உள்கிநின் 
 றாங்கே உடனாடும்
கள்ளம் வல்லான் காதல்செய் 
 கோயில் கழுக்குன்றே.

பாடம் : 1சிறுதொண்டர்   6  

அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக்
கரும்பின் மொழியாளோ டுடன்கை அனல்வீசிச்
சுரும்புண்விரி கொன்றைச் சுடர்பொற் சடைதாழ
விரும்பு மதிகையு ளாடும்வீரட் டானத்தே.   2  

கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல அடிகளே.   2  

நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
சூடலன்அந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில்
ஆடலன்அஞ்சொல் அணியிழையாளை யொருபாகம்
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.   1  

வாருறு கொங்கைநல்ல மடவாள் 
 திகழ்மார்பில் நண்ணுங்
காருறு கொன்றையொடுங் 
 கதநாகம் பூண்டருளிச்
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் 
 செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான் 
 கழலேத்தல் நீதியே.   4  

தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் 
 தூமதி யம்புனைந்து
பாடல்நான் மறையாகப் பல்கணப் 
 பேய்க ளவைசூழ
வாடல்வெண் டலையோ டனலேந்தி 
 மகிழ்ந்துடன் ஆடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் 
 சேர விடர்கெடுமே.   5  

நீந்தலாகா வெள்ளமூழ்கு 
 நீள்சடை தன்மேலோர்
ஏய்ந்தகோணற் பிறையோடரவு 
 கொன்றை எழிலாரப்
போந்தமென்சொல் இன்பம்பயந்த 
 மைந்த ரவர்போலாம்
காந்தள்விம்மு கானூர்மேய 
 சாந்த நீற்றாரே.   2  

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி 
விளங்குதலை யோட்டில்       
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென 
துள்ளங்கவர் கள்வன்   
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை 
மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய 
பெம்மானிவ னன்றே.   4  

அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக்
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே.   7  

மத்தநன் மாமலரும் மதியும்வளர் 
 கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல் 
 துதைய வுடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் 
 செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார் 
 தடுமாற் றறுப்பாரே.   8  

கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்
மையணி மிடறுடை மறையவனூர்
பையணி யரவொடு மான்மழுவாள்
கையணி பவனிடங் கடைமுடியே.   4  

மிளிரும்மணி பைம்பொன்னொடு 
விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர் 
சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி 
கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் 
வைத்தான் வளநகரே.   3  

வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர் 
 வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர் 
 கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்
பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர் 
 படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர் 
 தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.   4  

வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர் 
 வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்
கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை 
 குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்
ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம் 
 மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்
தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந்
 தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.   9  

பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா
காவா யெனநின் றேத்துங் காழியார்  
மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம்   
பாவா ரின்சொற் பயிலும் பரமரே.   1  

நீடலர் கொன்றையொடு நிரம்பா 
 மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில்நல்ல 
 குழையான் சுடுநீற்றான்
ஆடர வம்பெருக அனலேந்திக் 
 கைவீசி வேதம்
பாடலி னாலினியான் 
 உறைகோயில் பாதாளே.   2  

பின்தாழ் சடைமேல் நகுவெண் 
 டலையர் பிரமன் தலையேந்தி
மின்தா ழுருவிற் சங்கார் 
 குழைதான் மிளிரும் ஒருகாதர்
பொன்தாழ் கொன்றை செருந்தி 
 புன்னை பொருந்து செண்பகம்
சென்றார் செல்வத் திருவார் 
 நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.   4  

ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி
இளங்கிளை அரிவையொ டொருங்குட னாகிக்
கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்
குளிரிள மதியமுங் கூவிள மலரும்
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும் 
மகிழிள வன்னியும் இவைநலம் பகர
ஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.   7  

மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத்
தோடார்குழை தானொரு காதில்2 இலங்கக்
கூடார்மதி லெய்து குரங்கணில் முட்டத்
தாடாரர வம்மரை யார்த்தமர் வானே.

பாடம் : 2காதினில்   7  

குறியார் திரைகள் வரைகள் 
 நின்றுங் கோட்டாறு
கறியார் கழிசம் பிரசங் 
 கொடுக்குங் கலிக்காழி
வெறியார் கொன்றைச் சடையா 
 விடையா என்பாரை
அறியா வினைகள் அருநோய் 
 பாவம் அடையாவே.   6  

வினையாயினதீர்த் தருளேபுரியும் 
 விகிர்தன் விரிகொன்றை
நனையார்முடிமேல் மதியஞ்சூடும் 
 நம்பா னலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான் 
 தலையோ டனலேந்தும்
எனையாளுடையான் உமையாளோடும் 
 ஈங்கோய் மலையாரே.   7  

வண்டணை கொன்றை வன்னியு மத்தம்
 மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதங்
 கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்2
பண்டிகழ் வாகப் பாடியொர் வேதம்
 பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி உமையவ ளோடும் 
 வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

பாடம் : 2கூடியமுழவம்   4  

கேணவல்லான் கேழல்வெண் கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடை மேலொர் புனல்கொன்றை
பேணவல்லான் பெண்மகள் தன்னை யொருபாகம்
காணவல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.   2  

வெங்கண் ஆனை யீருரிவை 
 போர்த்துவிளங் குமொழி1
மங்கைபாகம் வைத்துகந்த 
 மாண்பதுவென் னைகொலாம்
கங்கையோடு திங்கள்சூடிக் 
 கடிகமழுங் கொன்றைத்
தொங்கலானே தூயநீற்றாய் 
 சோபுரமே யவனே.

பாடம் : 1விளங்குமெழில்   1  

தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை
 தாழ்சடை மேலவை சூடி
ஊரிடு பிச்சைகொள் செல்வம்
 உண்டியென் றுபல கூறி
வாரிடு மென்முலை மாதொரு பாகம்
 ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
காரிடு மாமலர் தூவிக்
 கறைமிடற் றானடி காண்போம்.   4  

வன்னிகொன்றை மத்தஞ்சூடும் 
 வலிவலமே யவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன் 
 ஞானசம் பந்தன்சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார் 
 மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னுசோதி யீசனோடே 
 மன்னியிருப் பாரே.

சுவாமி : இருதய கமலநாதேஸ்வரர்; அம்பாள் : வாளையங்கண்ணி.   11  

ஆற்றையும் ஏற்றதோர் அவிர்சடை யுடையர் 
அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே.   2  

தாதார் கொன்றை 
 தயங்குமுடியர் முயங்குமடவாளைப்
போதார்பாக மாகவைத்த 
 புனிதர் பனிமல்கும்
மூதாருலகில் முனிவருடனாய் 
 அறநான் கருள்செய்த
காதார் குழையர் வேதத்திரளர் 
 கயிலை மலையாரே.   6  

சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை
 சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
ஆமா றறியா தலமந்துநீர்1
 அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப்
பூமாண் அலங்கல் இலங்குகொன்றை
 புனல்பொதிந்த புன்சடையி னான்உறையும்
தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர்
 தூங்கானை மாடம் தொழுமின்களே.

பாடம் : 1தலம்வந்துநீர்   3  

செய்பூங் கொன்றை கூவிள மாலை
 சென்னியுட் சேர்புனல் சேர்த்திக்
கொய்பூங் கோதை மாதுமை பாகம்
 கூடியோர் பீடுடை வேடர்
கைபோ னான்ற கனிகுலை வாழை
 காய்குலை யிற்கமு கீனப்
பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்
 பில்கு பெருந்துறை யாரே.   3  

அந்தண் புனல்வைகை அணியாப்ப னூர்மேய
சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை
நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன்
சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே.

சுவாமி : அன்னவிநோதன்; அம்பாள் : குரவங்கமழ்குழலி.   11  

பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் 
 காகவுன்னி நின்று
தீயொடு மான்மறியும் 
 மழுவும் திகழ்வித்துத்
தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் 
 சடைதன்மேற் சேரப்
பாய்புன லும்முடையான் 
 உறைகோயில் பாதாளே.   5  

துணையல்செய்தான் தூயவண் 
 டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணின்நல் 
 லாளை யொருபாகம்
இணையல்செய்யா இலங்கெயின் 
 மூன்றும் எரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய் 
 கோயில் கழுக்குன்றே.   4  

பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ
 டாமைவெண் ணூல்புனை கொன்றை
கொங்கிள மாலை புனைந்தழ காய
 குழகர்கொ லாமிவ ரென்ன
அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி
 லாச்சிரா மத்துறை கின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்
 சதிர்செய்வ தோஇவர் சார்வே.   7  

நீண்ட சடையர் நிரைகொள் 
 கொன்றை விரைகொள் மலர்மாலை
தூண்டு சுடர்பொன் னொளிகொள் 
 மேனிப் பவளத் தெழிலார்வந்
தீண்டு மாடம் எழிலார் 
 சோலை யிலங்கு கோபுரம்
தீண்டு மதியந் திகழும் 
 நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.   6  

ஏறுதாங்கி யூர்திபேணி 
 யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் 
 ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த 
 மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் 
 மேயது நள்ளாறே.  5    5  

குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்
தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே.   4  

மாசுமெய்யர் மண்டைத்தேரர் 
 குண்டர் குணம்இலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி 
 யந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி 
 மும்மதி ளும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் 
 மேயது நள்ளாறே.  10    10  

கொந்தண்1 பொழிற்சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய
கந்தம் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த
எந்தை கழலேத்த இடர்வந் தடையாவே.

பாடம் : 1கொந்தம்   4  

பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை
பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை
உன்னியசிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே.   5  

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின் 
 சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ
டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலைப் 
 பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின் 
 போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங்
கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின் 
 காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.   3  

வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
ஈசன் னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
நாசன் நமையாள்வான் நல்லம் நகரானே.   6  

முன்றில்வாய் மடல்பெண்ணைக் 
 குரம்பைவாழ் முயங்குசிறை
அன்றில்காள் பிரிவுறுநோய் 
 அறியாதீர் மிகவல்லீர்
தென்றலார் புகுந்துலவுந் 
 திருத்தோணி புரத்துறையுங்
கொன்றைவார் சடையார்க்கென் 
 கூர்பயலை கூறீரே.   7  

நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றை
சீரிடங்கொண்ட எம்மிறைபோலுஞ் சேய்தாய
ஓருடம்புள்ளே உமையொருபாகம் உடனாகிப்
பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே.   3  

பையுடைய பாம்பொடு நீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறை சூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற் றண்ணல் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.   5  

நீடலர் கொன்றையொடு நிமிர்புன் 
 சடைதாழ வெள்ளை
வாடலுடை தலையிற் 
 பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச் 
 செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார் 
 வினையாய தேயுமே.   7  

நனிவளர் மதியொடு நாகம்வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொ டமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநகர் இடைமருதே.   7  

தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித் 
 திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய
தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை 
 தொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர்
காமரு தண்கழி நீடிய கானல கண்டகங் 
 கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே
தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர் 
 வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே.   7  

பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப்
 பலதலை முடியொடு தோளவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே
 ஒளிதிகழ் வாளது கொடுத்தழ காய
கோங்கொடு செருந்தி கூவிள மத்தங்
 கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கைபொன் மலரார்4 விரைதரு கோயில்
 வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

பாடம் : 4மலரா   8  

வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் 
 நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த 
 புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தார மிசையமைத்துக் காரிகையார் 
 பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் 
 நடமாடுந் திருவையாறே.   6  

சாக்கியப் பட்டுஞ் சமணுரு 
 வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப் 
 போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை 
 யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ 
 றாதிரு நீலகண்டம்.   10  

வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான் 
கொடிகொள் விழவார் கோலக் காவுளெம் 
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.   6  

அச்சம்மிலர் பாவம்மிலர் 
கேடும்மில ரடியார்
நிச்சம்முறு நோயும்மிலர் 
தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிட றுடையார்நறுங் 
கொன்றைநயந் தாளும்1
பச்சம்முடை யடிகள்திருப் 
பாதம்பணி வாரே.

பாடம் : 1நயந்தானாம்   2  

இறையூண் துகளோ டிடுக்கண் எய்தி
 யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம்
 நீள்கழ லேநாளும் நினைமின் சென்னிப்
பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றை
 பிணையும் பெருமான் பிரியாத நீர்த்
துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர்
 தூங்கானை மாடம் தொழுமின்களே.   7  

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் 
 சடைதன்மே னின்றும்
விண்ணியல் மாமதியு 
 முடன்வைத்தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா 
 டரங்காக ஆடும்
பண்ணியல் பாடலினான் 
 உறைகோயில் பாதாளே.   6  

வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம்
தளிர்போல்மேனித் தையல்நல்லாளோ டொருபாகம்
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.   4  

கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
 காதிலொர் வெண்குழை யோடு
புனமலர் மாலை புனைந்தூர்
 புகுதியென் றேபல கூறி
வனமுலை மாமலை மங்கையொர் பாகம்
 ஆயவன் வாழ்கொளி புத்தூர்
இனமல ரேய்ந்தன தூவி
 யெம்பெரு மானடி சேர்வோம்.   5  

மூவாவண்ணர் முளைவெண்பிறையர் 
 முறுவல் செய்திங்கே
பூவார்கொன்றை புனைந்துவந்தார் 
 பொக்கம் பலபேசிப்
போவார்போல மால்செய்துள்ளம் 
 புக்க புரிநூலர்
தேவார்சோலைக் கானூர்மேய 
 தேவ தேவரே.   7  

சிறையார்வண்டுந் தேனும்விம்மு 
 செய்ய மலர்க்கொன்றை
மறையார்பாட லாடலோடு 
 மால்விடை மேல்வருவார்
இறையார்வந்தென் இல்புகுந்தென் 
 எழில்நல முங்கொண்டார்
கறையார்சோலைக் கானூர்மேய 
 பிறையார் சடையாரே.   3  

கறிவளர் குன்றம் எடுத்தவன் காதற் 
 கண்கவ ரைங்கணை யோனுடலம் 
பொறிவளர் ஆரழ லுண்ணப் 
 பொங்கியபூத புராணர் 
மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர் 
 மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை 
வெறிவளர் கொன்றையந் தாரார் 
 வேட்கள நன்னக ராரே.   6  

மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும் 
மலைமகள வளொடு மருவின ரெனவும்
செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ் 
சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்
தம்மல ரடியொன் றடியவர் பரவத் 
தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர
அம்மலர்க் கொன்றை யணிந்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.   4  

கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்  
அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாம் 
செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே.   6  

வலமார்படை மான்மழு2 ஏந்திய மைந்தன்
கலமார்கடல் நஞ்சமு துண்ட கருத்தன்
குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன்
புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே.

பாடம் : 2மாமழு   6  

குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே.

சுவாமி : வேதநாதர்; அம்பாள் : இளமுலைநாயகியம்மை.   11  

தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா என்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயருள் நல்குமே.   7  

மதியொன் றியகொன் றைவடத்தான்
மதியொன் றவுதைத் தவர்வாழ்வு
மதியின் னொடுசேர் கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே.   2  

நன்றுநகு நாண்மலரால் 
 நல்லிருக்கு மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெய 
 லுற்றவன்தன் ஓங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் 
 கண்டவனுக் கன்றளித்தான்
கொன்றைமலர் பொன்திகழுங் 
 கோளிலியெம் பெருமானே.   3  

கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை 
 கமழ்புன் சடையார்விண்
முடியாப்படிமூ வடியாலுலக 
 முழுதுந் தாவிய
நெடியான்நீள்தா மரைமேலயனும் 
 நேடிக் காணாத
படியார்பொடியா டகலமுடையார் 
 பழன நகராரே.   9  

கந்தங் கமழ்கொன்றைக் கண்ணி சூடி கனலாடி
வெந்த பொடிநீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார்
கொந்தண் பொழிற்சோலை யரவில் தோன்றிக் கோடல்பூத்
தந்தண் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே.   3  

தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித் 
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம மேவிய இவர்வண மென்னே.   8  

கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர் 
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யும்
செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே.   5  

கொன்னவின்ற மூவிலைவேற் 
 கூர்மழுவாட் படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை 
 சூடும்பொற்பென் னைகொலாம்
அன்னமன்ன மெல்நடையாள் 
 பாகம்அமர்ந் தரைசேர்
துன்னவண்ண ஆடையினாய் 
 சோபுரமே யவனே.   6  

நாற்றமிக்க கொன்றைதுன்று 
 செஞ்சடைமேல் மதியம்
ஏற்றமாக வைத்துகந்த 
 காரணம்என் னைகொலாம்
ஊற்றமிக்க காலன் தன்னை 
 யொல்க வுதைத்தருளித்
தோற்றமீறு மாகிநின்றாய் 
 சோபுரமே யவனே.   5  

பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல் 
 பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த 
பெண்ணுறு மார்பினர் பேணார் 
 மும்மதி லெய்த பெருமான் 
கண்ணுறு நெற்றி கலந்தவெண் திங்கட் 
 கண்ணியர் விண்ணவர் கைதொழு தேத்தும் 
வெண்ணிற மால்விடை அண்ணல் 
 வேட்கள நன்னக ராரே.   5  

வம்பார் குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம்
அம்பால் நெய்யோ டாட லமர்ந்தான் அலர்கொன்றை
நம்பான் மேய நன்னகர்போலுந் நமரங்காள்.   1  

பூண்டவ்வரை மார்பிற்புரி 
நூலன்விரி கொன்றை
ஈண்டவ்வத னோடும்மொரு 
பாலம்மதி யதனைத்
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு 
நின்றியது தன்னில்
ஆண்டகழல் தொழலல்லது 
அறியாரவ ரறிவே.   4  

கறையார்மிட றுடையான்கமழ் 
கொன்றைச்சடை முடிமேல்
பொறையார்தரு கங்கைப்புன 
லுடையான்புள மங்கைச்
சிறையார்தரு களிவண்டறை 
பொழில்சூழ்திரு வாலந்
துறையானவன் நறையார்கழல் 
தொழுமின்துதி செய்தே.   3  

சூடு மதிச்சடைமேற் சுரும்பார்மலர்க் 
 கொன்றைதுன்ற நட்டம்
ஆடும் அமரர்பிரான் 
 அழகாருமை யோடும்உடன்
வேடு படநடந்த விகிர்தன் 
 குணம்பரவித் தொண்டர்
பாட இனிதுறையும் 
 புகலிப் பதியாமே.   5  

பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத்
தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்
ஓங்கு கோயில் உறைவா ரவர்போலும்
தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே.   3  

வாரேற்ற பறையொலியுஞ் 
 சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோ 
 டோங்கியசீர் விழவோவாச்
சீரேற்றம் உடைத்தாய 
 செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான் 
 கணபதீச் சரத்தானே.   2  

நினைவார் நினைய இனியான் 
 பனியார் மலர்தூய் நித்தலுங்   
கனையார் விடையொன் றுடையான் 
 கங்கை திங்கள் கமழ்கொன்றை
புனைவார் சடையின் முடியான் 
 கடல்சூழ் புறவம் பதியாக
எனையா ளுடையான் இமையோ 
 ரேத்த உமையோ டிருந்தானே.   4  

பொடிகொளுருவர் புலியினதளர் 
 புரிநூல் திகழ்மார்பில்
கடிகொள் கொன்றை கலந்த 
 நீற்றர் கறைசேர் கண்டத்தர்
இடியகுரலால் இரியுமடங்கல் 
 தொடங்கு முனைச்சாரல்
கடியவிடைமேற் கொடியொன்றுடையார் 
 கயிலை மலையாரே.   1  

தேன் மலர்க் கொன்றை யோன்........
........ முந்தமக்கூனமன்றே.

இப்பதிகத்தில் 11-ம் பாடல் வரிகள் சில கிடைக்கப்பெறவில்லை.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமி : இராமநாதேசுவரர்; அம்பாள் : சரிவார்குழலியம்மை.   11  

போது பொன்திகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்தென் நலங்கொண்டார்
பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை
வேத மோதும் விகிர்தரே.   6  

காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே.   1  

தேனகத்தார் வண்டது வுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதி சூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத் தார்கள் தொழுதேத்தும்
கானகத்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.   3  

மரவத்தொடு மணமாதவி 
மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில் 
சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடும் இளவெண்பிறை 
விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன் 
வைத்தான்நெடு நகரே.   7  

விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள 
 நாகம்வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு 
 மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் 
 துரைவேதம் நான்குமவை
பண்டிசை பாடலினான் 
 உறைகோயில் பாதாளே.   7  

நீரோடு கூவிளமும் நிலாமதியும் 
 வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த 
 தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் 
 பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் 
 நடம்பயிலுந் திருவையாறே.   5  

வெந்துறு வெண்மழுவாட் படையான் 
 மணிமிடற்றான் அரையின்
ஐந்தலை யாடரவம் 
 அசைத்தான் அணியாரூர்ப்
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் 
 அடிபரவப் பாவம்
நைந்தறும் வந்தணையும் 
 நாடொறும் நல்லனவே.   4  

நறவ நிறைவண் டறைதார்க் 
 கொன்றை நயந்து நயனத்தால்   
சுறவஞ் செறிவண் கொடியோன் 
 உடலம் பொடியா விழிசெய்தான் 
புறவம் உறைவண் பதியா 
 மதியார் புரமூன் றெரிசெய்த   
இறைவன் அறவன் இமையோ 
 ரேத்த உமையோ டிருந்தானே.   1  

பொடிகள் பூசித் தொண்டர்பின் செல்லப் புகழ்விம்மக்
கொடிக ளோடும் நாள்விழ மல்கு குற்றாலம்
கடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய்
அடிகள் மேய நன்னகர் போலும் மடியீர்காள்.   2  

திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான் 
 தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை
நிருமலன் எனதுரை தனதுரை யாக 
 நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை 
 கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும்
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
 இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.   2  

மாதி லங்கிய பாகத்தன் மதியமொ            
 டலைபுனல் அழல்நாகம்            
போதி லங்கிய கொன்றையும் மத்தமும்            
 புரிசடைக் கழகாகக்            
காதி லங்கிய குழையினன் கடிக்குளத்            
 துறைதரு கற்பகத்தின்            
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை            
 பற்றறக் கெடுமன்றே.   6  

கரவலாளர் தம்மனைக் கடைகள்
 தோறுங் கால்நிமிர்த்
திரவலாழி நெஞ்சமே இனியதெய்த
 வேண்டில் நீ
குரவமேறி வண்டினங்
 குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான்
 வீரட்டானஞ் சேர்துமே.   2  

குளிருஞ் சடைகொள் முடிமேற்
 கோல மார்கொன்றை
ஒளிரும் பிறையொன் றுடையா
 னொருவன் கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை
 நட்டம் நவில்நம்பன்
மிளிரும் மரவம் உடையான்
 மீயச் சூரானே.   6  

நீர்கொண்ட சடைமுடிமேல்
 நீள்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட கொன்றையினோ
 டெழில்மத்தம் இலங்கவே
சீர்கொண்ட மாளிகைமேற்
 சேயிழையார் வாழ்த்துரைப்பக்
கார்கொண்ட வேணுபுரம்
 பதியாகக் கலந்தீரே.   4  

நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற       
 தொருநீர்மை சீர்மை நினையார்      
அறவுரு வேதநாவன் அயனோடு மாலும்       
 அறியாத அண்ணல் நகர்தான்          
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை     
 புனைகொன்றை துன்று பொதுளி        
நறவிரி போதுதாது புதுவாசம் நாறும்      
 நனிபள்ளி போலும் நமர்காள்.   9  

அடையும் வல்வினை யகல
 அருள்பவர் அனலுடை மழுவாட்
படையர் பாய்புலித் தோலர்
 பைம்புனற் கொன்றையர் படர்புன்
சடையில் வெண்பிறை சூடித்
 தார்மணி யணிதரு தறுகண்
விடையர் வீங்கெழில் தெங்கூர்
 வெள்ளியங் குன்றமர்ந் தாரே.   3  

கணிகையொர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை    
 மலர்துன்று செஞ்ச டையினான்    
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு    
 பலவாகி நின்ற பரமன்    
அணுகிய வேதவோசை யகலங்கம் ஆறின்    
 பொருளான ஆதி யருளான்    
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து    
 நறையூரின் நம்ப னவனே.   6  

முன்னைநீர்செய் பாவத்தான்
 மூர்த்திபாதஞ் சிந்தியா
தின்னநீரி டும்பையின்
 வீழ்கிறீர் எழும்மினோ
பொன்னைவென்ற கொன்றையான்
 பூதம்பாட ஆடலான்
கொன்னவிலும் வேலினான்
 கோடிகாவு சேர்மினே.   5  

மின்னு லாவிய சடையினர் விடையினர்            
 மிளிர்தரும் அரவோடும்            
பன்னு லாவிய மறையொலி நாவினர்            
 கறையணி கண்டத்தர்            
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர்            
 புகழ்மிகு கீழ்வேளூர்            
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை            
 யோடிட வீடாமே.   1  

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்    
 விடையேறு நங்கள் பரமன்    
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்    
 உளமே புகுந்த அதனால்    
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்    
 மிகையான பூத மவையும்    
அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல    
 அடியா ரவர்க்கு மிகவே.   5  

சீருடை யாரடி யார்கள்
 சேடரொப் பார்சடை சேரும்
நீருடை யார்பொடிப் பூசு
 நினைப்புடை யார்விரி கொன்றைத்
தாருடை யார்விடை யூர்வார்
 தலைவரைந் நூற்றுப்பத் தாய
பேருடை யார்பெரு மானார்
 பெரும்புலி யூர்பிரி யாரே.   9  

பொங்கா டரவும் புனலுஞ்
 சடைமேல் பொலிவெய்தக்
கொங்கார் கொன்றை சூடியென்
 னுள்ளங் குளிர்வித்தார்
தங்கா தலியுந் தாமும்
 வாழும் ஊர்போலும்
பைங்கான் முல்லை பல்லரும்
 பீனும் பாசூரே.   4  

வண்டுபாடவ் வளர்கொன்றை
 மாலைம்மதி யோடுடன்
கொண்டகோலங் குளிர்கங்கை
 தங்குங்குருள் குஞ்சியுள்
உண்டுபோலும் மெனவைத்து
 கந்தவ்வொரு வற்கிடம்
கண்டல்வேலி கழிசூழ்
 கடல்நாகைக் காரோணமே.   4  

துன்னங் கொண்ட வுடையான்
 துதைந்த வெண்ணீற்றினான்
மன்னுங் கொன்றை மதமத்தஞ்
 சூடினான் மாநகர்
அன்னந்தங்கும் பொழில்சூழ்
 அகத்தியான் பள்ளியை
உன்னஞ் செய்த மனத்தார்கள்
 தம்வினை யோடுமே.   2  

புனமல்கு கொன்றையீர்
 புலியின்அதளீர் பொலிவார்ந்த
சினமல்கு மால்விடையீர்
 செய்யீர்கரிய கண்டத்தீர்
இனமல்கு நான்மறையோ
 ரேத்துஞ்சீர்கொள் இடைமருதில்
கனமல்கு கோயிலே
 கோயிலாகக் கலந்தீரே.   7  

வாளை யுங்கய லும்மிளிர் பொய்கை    
 வார்பு னற்கரை யருகெ லாம்வயற்    
பாளையொண் கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்    
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத    
 மத்த மும்புனை வாய்க ழலிணைத்    
தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.   3  

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்    
 மடவாள் தனோடு முடனாய்    
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்    
 உளமே புகுந்த அதனால்    
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்    
 கொடுநாக மோடு கரடி    
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல    
 அடியா ரவர்க்கு மிகவே.   6  

தீயினார்திகழ் மேனியாய்
 தேவர்தாந்தொழும் தேவன்நீ
ஆயினாய் கொன்றை யாய்அன
 லங்கையாய்  அறை யணிநல்லூர்
மேயினார்தம தொல்வினை
 வீட்டினாய்வெய்ய காலனைப்
பாயினாயதிர் கழலினாய்
 பரமனேயடி பணிவனே.   5  

காரானைக் கடிகமழ்
 கொன்றையம் போதணி
தாரானைத் தையலொர்
 பால்மகிழ்ந் தோங்கிய
சீரானைச் செறிபொழிற்
 கோழம்பம் மேவிய
ஊரானை யேத்துமின்
 நும்மிடர் ஒல்கவே.   5  

மிக்க காலனை வீட்டி
 மெய்கெடக் காமனை விழித்துப்
புக்க ஊரிடு பிச்சை
 யுண்பது பொன்றிகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில்
 தவளவெண் ணீறணிந் தாமை
அக்கின் ஆரமும் பூண்ட
 அடிகளுக் கிடம்அர சிலியே.   4  

இன்றுநன்று நாளைநன்
 றென்றுநின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப்
 போகவிட்டுப் போதுமின்
மின்தயங்கு சோதியான்
 வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான்
 கோடிகாவு சேர்மினே.   1  

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து    
 மடவாள் தனோடும் உடனாய்    
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்    
 உளமே புகுந்த அதனால்    
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்    
 இடரான வந்து நலியா    
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல    
 அடியா ரவர்க்கு மிகவே.   8  

கார்மருவு பூங்கொன்றை
 சூடிக்கமழ்புன் சடைதாழ
வார்மருவு மென்முலையாள்
 பாகமாகும் மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக்
 கொடிகளாடுந் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே
 கோயிலாக இருந்தீரே   6  

பூதத்தின் படையினீர்
 பூங்கொன்றைத் தாரினீர்
ஓதத்தின் ஒலியோடும்
 உம்பர்வா னவர்புகுந்து
வேதத்தின் இசைபாடி
 விரைமலர்கள் சொரிந்தேத்தும்
பாதத்தீர் வேணுபுரம்
 பதியாகக் கொண்டீரே.   1  

வானமர் திங்களும் நீரும்
 மருவிய வார்சடை யானைத்
தேனமர் கொன்றையி னானைத்
 தேவர் தொழப்படு வானைக்
கானம ரும்பிணை புல்கிக்
 கலைபயி லுங்கடம் பூரில்
தானமர் கொள்கையி னானைத்
 தாள்தொழ வீடெளி தாமே.   1  

தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங்            
 கொடுகொட்டி வீணை முரல            
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த           
 பெருமான் உகந்த நகர்தான்         
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல்          
 பணிவார்கள் பாடல் பெருகி         
நகைமலி முத்திலங்கு மணல் சூழ் கிடக்கை        
 நனிபள்ளி போலும் நமர்காள்.   7  

சிரமு நல்ல மதிமத்த
 முந்திகழ் கொன்றையும்
அரவு மல்குஞ் சடையான்
 அகத்தியான் பள்ளியைப்
பிரம னோடுதிரு மாலுந்
 தேடிய பெற்றிமை
பரவவல்லார் அவர்தங்கள்
 மேல்வினை பாறுமே.   9  

கள்ளார்ந்த பூங்கொன்றை
 மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடி எம்
 பெருமானார் உறையுமிடம்
தள்ளாய சம்பாதி
 சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம்
 புள்ளிருக்கு வேளூரே.   1  

போகமு மின்பமு மாகிப்
 போற்றியென் பாரவர் தங்கள்
ஆகமு றைவிட மாக
 அமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமுந் திங்களுஞ் சூடி
 நன்னுதல் மங்கைதன் மேனிப்
பாகம் உகந்தவர் தாமும்
 பாண்டிக் கொடுமுடி யாரே.   5  

பொன்றொத்த கொன்றையும் பிள்ளை
 மதியும் புனலுஞ் சூடிப்
பின்றொத்த வார்சடையெம் பெம்மா
 னிடம்போலும் பிலயந்தாங்கி
மன்றத்து மண்முழவம் ஓங்கி
 மணிகொழித்து வயிரம் உந்திக்
குன்றத் தருவி யயலே
 புனல்ததும்புங் குறும்பலாவே.   7  

பொன்றாதுதிரு மணங்கொள்
 புனைபூங்கொன்றை புனைந்தார்
ஒன்றாவெள்ளே றுயர்த்த
 துடையாரதுவே யூர்வார்
கன்றாவினஞ்சூழ் புறவிற்
 கடவூர் மயானம் அமர்ந்தார்
பின்தாழ் சடையார் ஒருவர்
 அவரெம் பெருமான் அடிகளே.   6  

நீரி னார்வரை கோலி மால்கடல்    
 நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்    
பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்    
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு    
 கடவு ளென்றுகை கூப்பி நாடொறும்    
சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே.   6  

கோலத்தார் கொன்றையான்
 கொல்புலித்தோ லாடையான்
நீலத்தார் கண்டத்தான்
 நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்து
 நாலூர் மயானத்தில்
சூலத்தா னென்பார்பால்
 சூழாவாந் தொல்வினையே.   4  

விண்டவெள்ளெ ருக்கலர்ந்த
 வன்னிகொன்றை மத்தமும்
இண்டைகொண்ட செஞ்சடை
 முடிச்சிவனி ருந்தவூர்
கெண்டைகொண்ட லர்ந்தகண்ணி
 னார்கள்கீத வோசைபோய்
அண்டரண்டம் ஊடறுக்கும்
 அந்தணரூ ரென்பதே.   2  

புல்கு பொன்னிறம் புரிசடை
 நெடுமுடிப் போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க்
 கொன்றையும் பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை அரிசிலின்
 வடகரை வருபுனல் மாகாளம்
அல்லும் நண்பக லுந்தொழும்
 அடியவர்க் கருவினை அடையாவே.   1  

நறைவளர் கொன்றையி னாரும்
 ஞாலமெல் லாந்தொழு தேத்தக்
கறைவளர் மாமிடற் றாருங்
 காடரங் காக்கன லேந்தி
மறைவளர் பாடலி னோடு
 மண்முழ வங்குழல் மொந்தை
பறைவளர் பாடலி னாரும்
 பாண்டிக் கொடுமுடி யாரே.   4  

நீண்ட வார்சடை தாழ நேரிழை    
 பாட நீறுமெய் பூசி மாலயன்    
மாண்டவார் சுடலை நடமாடும் மாண்பதுவென்    
பூண்ட கேழல் மருப்ப ராவிரி    
 கொன்றை வாளவரி யாமை பூணென    
ஆண்டநா யகனே ஆமாத்தூர் அம்மானே.   3  

நீரானை நிறைபுனல்
 சூழ்தரு நீள்கொன்றைத்
தாரானைத் தையலொர்
 பாகமு டையானைச்
சீரானைத் திகழ்தரு
 வெண்ணிய மர்ந்துறை
ஊரானை உள்கவல்
 லார்வினை ஓயுமே.   5  

விடையார் கொடியார் சடைமேல்
 விளங்கும் பிறைவேடம்
படையார் பூதஞ் சூழப்
 பாட லாடலார்
பெடையார் வரிவண் டணையும்
 பிணைசேர் கொன்றையார்
விடையார் நடையொன்
 றுடையார் மீயச் சூராரே   5  

கட்டிணை புதுமலர்க் கமழ்கொன்றைக்            
 கண்ணியர் வீணையர் தாமுமஃதே            
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா            
 இறைவனா ருறைவதொர் இடம்வினவில்            
பட்டிணை யகலல்குல் விரிகுழலார்            
 பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய            
வட்டணை யாடலொ டிவராணீர்            
 வாய்மூ ரடிகள் வருவாரே.   8  

நீரார வார்சடையான்
 நீறுடையான் ஏறுடையான்
காரார்பூங் கொன்றையினான்
 காதலித்த தொல்கோயில்
கூராரல் வாய்நிறையக்
 கொண்டயலே கோட்டகத்தில்
தாராமல் காக்கூரில்
 தான்தோன்றி மாடமே.   2  

கடிபடு கொன்றைநன் மலர்திகழுங்            
 கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்            
முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார்            
 முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்            
பொடியணி வடிவொடு திருவகலம்            
 பொன்னென மிளிர்வதொர் அரவினொடும்            
வடிநுனை மழுவினொ டிவராணீர்            
 வாய்மூ ரடிகள் வருவாரே.   7  

கொங்குசேர் தண்கொன்றை
 மாலையினான் கூற்றடரப்
பொங்கினான் பொங்கொளிசேர்
 வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கம்ஆ றோடும்
 அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரில்
 தான்தோன்றி மாடமே.   4  

பாடலார் நான்மறையான்
 பைங்கொன்றை பாம்பினொடும்
சூடலான் வெண்மதியந்
 துன்று கரந்தையொடும்
ஆடலான் அங்கை
 அனலேந்தி ஆடரவக்
காடலான் மேவியுறை
 கோயில் கைச்சினமே.   3  

பாடல் நெறிநின்றான்
 பைங்கொன்றைத் தண்டாரே
சூடல் நெறிநின்றான்
 சூலஞ்சேர் கையினான்
ஆடல் நெறிநின்றான்
 ஆமாத்தூர் அம்மான்றன்
வேட நெறிநில்லா
 வேடமும் வேடமே.   5  

போதுலவு கொன்றை
 புனைந்தான் திருமுடிமேல்
மாதுமையா ளஞ்ச
 மலையெடுத்த வாளரக்கன்
நீதியினா லேத்த
 நிகழ்வித்து நின்றாடும்
காதலினான் மேவியுறை
 கோயில் கைச்சினமே.   8  

வடிகொள் மேனியர் வானமா மதியினர்            
 நதியினர் மதுவார்ந்த            
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்            
 உடைபுலி யதளார்ப்பர்            
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை            
 விற்குடி வீரட்டம்            
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை            
 அருவினை யடையாவே.   1  

பொன்னேர் கொன்றை மாலை
 புரளும் அகலத்தான்
மின்னேர் சடைக ளுடையான்
 மீயச் சூரானைத்
தன்னேர் பிறரில் லானைத்
 தலையால் வணங்குவார்
அந் நே ரிமையோர் உலகம்
 எய்தல் அரிதன்றே.   3  

தக்கன்வேள்வி தகர்த்த
 தலைவன் தையலாளொடும்
ஒக்கவேஎம் உரவோ
 னுறையும் இடமாவது
கொக்குவாழை பலவின்
 கொழுந்தண் கனிகொன்றைகள்
புக்கவாகப் புன்னைபொன்
 திரள்காட்டும் புகலியே.   6  

ஓதி யாரண மாய நுண்பொருள்    
 அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி    
நீதியால நீழ லுரைக்கின்ற நீர்மையதென்    
சோதி யேசுட ரேசு ரும்பமர்    
 கொன்றை யாய்திரு நின்றி யூருறை    
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே.   6  

நாமருவு புன்மை
 நவிற்றச் சமண்தேரர்
பூமருவு கொன்றையினான்
 புக்கமருந் தொல்கோயில்
சேல்மருவு பைங்கயத்துச்
 செங்கழுநீர் பைங்குவளை
தாமருவும் ஆக்கூரில்
 தான்தோன்றி மாடமே.   10  

மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து    
 மறையோதும் எங்கள் பரமன்    
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்    
 உளமே புகுந்த அதனால்    
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்    
 கொடுநோய்க ளான பலவும்    
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல    
 அடியா ரவர்க்கு மிகவே.   4  

தீவிரி யக்கழ லார்ப்பச்
 சேயெரி கொண்டிடு காட்டில்
நாவிரி கூந்தல்நற் பேய்கள்
 நகைசெய்ய நட்டம் நவின்றோன்
காவிரி கொன்றை கலந்த
 கண்ணுத லான்கடம் பூரில்
பாவிரி பாடல் பயில்வார்
 பழியொடு பாவ மிலாரே.   5  

காரி னார்கொன்றைக்
 கண்ணி யார்மல்கு
பேரி னார்பிறை
 யோடி லங்கிய
நீரி னாரநெல்
 வாயிலார் தொழும்
ஏரி னாரெம
 துச்சி யாரே.   6  

நளிரும் மலர்க்கொன்
 றையுநா றுகரந்தைத்
துளிருஞ் சுலவிச்
 சுடுகாட் டெரியாடி
மிளிரும் மரவார்த்
 தவன்மே வியகோயில்
குளிரும் புனல்சூழ்
 குரங்கா டுதுறையே.   6  

நீரானே நீள்சடை மேலொர்
 நிரை கொன்றைத்
தாரானே தாமரை
 மேலயன் தான்தொழும்
சீரானே சீர்திக
 ழுந்திருக் காறாயில் 
ஊரானே யென்பவர்
 ஊனமி லாதாரே.   1  

வெறியார் மலர்க்கொன்
 றையந்தார் விரும்பி
மறியார் மலைமங்
 கைமகிழ்ந் தவன்றான்
குறியாற் குறிகொண்
 டவர்போய்க் குறுகும்
நெறியான் நெல்லிக்கா
 வுள்நிலா யவனே.   6  

எறியார்பூங் கொன்றையி
 னோடும் இளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடை
 யார மிலைத்தானை
மறியாருங் கையுடை
 யானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல்
 லார்க் கிடர் சேராவே.   5  

விரையினார் கொன்றை சூடியும்
 வேகநாகமும் வீக்கிய
அரையினார் அறை யணிநல்லூர்
 அண்ணலார் அழகாயதோர்
நரையினார்விடை யூர்தியார்
 நக்கனார் நறும்போதுசேர்
உரையினாலுயர்ந் தார்களும்
 உரையினாலுயர்ந் தார்களே.   6  

களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங்            
 கடிகமழ் சடைக்கேற்றி            
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்            
 பொருகரி யுரிபோர்த்து            
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை            
 விற்குடி வீரட்டம்            
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார்            
 வருத்தம தறியாரே.   2  

மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்    
 மோதி மீதெறி சங்கம் வங்கமுங்    
கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி    
வண்ட லம்பிய கொன்றை யானடி    
 வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை    
விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே.   2  

பதிதா னிடுகா
 டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ
 டியமைந் தனுந்தான்
விதிதான் வினைதான்
 விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா
 வுள்நிலா யவனே.   2  

களையும் வல்வினை யஞ்சல்நெஞ்
 சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர்
 மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய்
 தான்மதுத் தும்பிவண்
டளையுங் கொன்றையந் தார்மழ
 பாடியுள் அண்ணலே.   1  

குறைவி லார்மதி
 சூடி யாடல்வண்
டறையு மாமலர்க்
 கொன்றை சென்னிசேர்
இறைவன் இந்திர
 நீலப் பர்ப்பதத்
துறைவி னான்றனை
 யோதி யுய்ம்மினே.   2  

உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து    
 உமையோடும் வெள்ளை விடைமேல்    
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்    
 உளமே புகுந்த அதனால்    
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி    
 திசை தெய்வ மான பலவும்    
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல    
 அடியா ரவர்க்கு மிகவே.   3  

கருங்கை யானையின் ஈருரி
 போர்த்திடு கள்வனார்
மருங்கெ லாம்மண மார்பொழில்
 சூழ்மங்க லக்குடி
அரும்பு சேர்மலர்க் கொன்றையி
 னானடி யன்பொடு
விரும்பி யேத்தவல் லார்வினை
 யாயின வீடுமே.   3  

பண்ணி யாள்வதோ
 ரேற்றர் பால்மதிக்
கண்ணி யார்கமழ்
 கொன்றை சேர்முடிப்
புண்ணி யன்னுறை
 யும்பு கலியை
நண்ணு மின்னல
 மான வேண்டிலே.   2  

நொச்சியே வன்னிகொன்
 றைமதி கூவிளம்
உச்சியே புனைதல்வே
 டம்விடை யூர்தியான்
கச்சியே கம்பம்மே
 யகறைக் கண்டனை
நச்சியே தொழுமின்நும்
 மேல்வினை நையுமே.   2  

நாகம்பூண் ஏறதே
 றல்நறுங் கொன்றைதார்
பாகம்பெண் பலியுமேற்
 பர்மறை பாடுவர்
ஏகம்பம் மேவியா
 டுமிறை யிருவர்க்கும்
மாகம்பம் அறியும்வண்
 ணத்தவ னல்லனே.   9  

தூசு தானரைத் தோலுடைக்
 கண்ணியஞ் சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவ
 தன்றியும் புகழ்புரிந் தவர்மேய
மாசு லாம்பொழில் அரிசிலின்
 வடகரை வருபுனல் மாகாளம்
பேசு நீர்மைய ரியாவரிவ்
 வுலகினிற் பெருமையைப் பெறுவாரே.   7  

வன்னி கொன்றை மதமத்தம்
 எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்றசடை யிற்பொலி
 வித்தபு ராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை
 செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட
 மாகவு கந்ததே.   1  

வண்டணைசெய் கொன்றையது
 வார்சடை கள்மேலே
கொண்டணைசெய் கோலமது
 கோளரவி னோடும்
விண்டணைசெய் மும்மதிலும்
 வீழ்தரவொ ரம்பால்
கண்டவ னிருப்பது
 கருப்பறிய லூரே.   2  

கொய்ய ணிம்மலர்க்
 கொன்றை சூடிய
ஐயன் மேவிய
 ஆடானை
கைய ணிம்மல
 ரால்வ ணங்கிட
வெய்ய வல்வினை
 வீடுமே.   5  

சாவாயும் வாதுசெய்
 சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை
 கேட்டு வெகுளேன்மின்
பூவாய கொன்றையி
 னானைப் புனற்காழிக்
கோவாய கொள்கையி
 னானடி கூறுமே.   9  

வம்பார் கொன்றை வன்னி
 மத்தம் மலர்தூவி
நம்பா வென்ன நல்கும்
 பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி
 முல்லை குவிந்தெங்கும் 
மொய்ம்பார் சோலை வண்டு
 பாடும் முதுகுன்றே.   6  

எங்கு மேதுமோர் பிணியிலர்
 கேடிலர் இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலுந் தாமமுங்
 கண்ணியுந் தாமகிழ்ந் தவர்மேய
மங்குல் தோய்பொழில் அரிசிலின்
 வடகரை வருபுனல் மாகாளம்
கங்கு லும்பகலுந்தொழும் அடியவர்
 காதன்மை யுடையாரே.   4  

துன்று வார்சடைத் தூமதி மத்தமுந்            
 துன்னெருக் கார்வன்னி            
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம்            
 புலியுரி யுடையாடை            
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்            
 கொழுந்தேயென் றெழுவாரை            
என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை            
 ஏதம்வந் தடையாவே.   6  

பெரும்பிணி பிறப்பினொ
 டிறப்பிலையொர் பாகம்
கரும்பொடு படுஞ்சொலின்
 மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்புண அரும்பவிழ்
 திருந்தியெழு கொன்றை
விரும்பினை புறம்பயம்
 அமர்ந்தஇறை யோனே.   5  

பாடல் வண்டறை கொன்றை
 பால்மதி பாய்புனற் கங்கை
கோடல் கூவிள மாலை
 மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை
 மருவிட வல்லியம் தோள்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த
 அடிகளுக் கிடம்அர சிலியே.   1  

மல்குல்தோய் மணிமாடம்
 மதிதவழும் நெடுவீதி
சங்கெலாங் கரைபொருது
திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டின்
 இசைபாடு மலர்க்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச்
 சுவர்க்கங்கள் பொருளலவே.   7  

சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர்            
 சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்            
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார்            
 பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்            
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார்            
 குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய            
வாடல்வெண் டலைபிடித் திவராணீர்            
 வாய்மூ ரடிகள் வருவாரே.   10  

மடையின்நெய்தல் கருங்குவளை
 செய்யம்மலர்த் தாமரை
புடைகொள் செந்நெல் விளைகழனி
 மல்கும்புக லூர்தனுள்
தொடைகொள் கொன்றை புனைந்தானொர்
 பாகம்மதி சூடியை
அடையவல்லார் அமருலகம்
 ஆளப்பெறு வார்களே.   3  

ஏடுமலி கொன்றையர
 விந்துஇள வன்னி
மாடவல செஞ்சடையெம்
 மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர
 வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது
 வீசியநள் ளாறே.   1  

சடையமர் கொன்றையி னாருஞ்
 சாந்தவெண் ணீறணிந் தாரும்
புடையமர் பூதத்தி னாரும்
 பொறிகிளர் பாம்பசைத் தாரும்
விடையம ருங்கொடி யாரும்
 வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையி னாரும்
 பாண்டிக் கொடுமுடி யாரே.   3  

 

 

< PREV <
குருந்தமரம்
Table of Content> NEXT >
கோங்குமரம்

 

Related Content

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கடனாகைக்காரோணம் - புனையும்

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாற்றுறை - காரார் கொன்றை

திருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - பூவார் கொன்றைப்

கொன்றை திறந்த அன்பு மடை

வைத்தீஸ்வரன்கோயில்