கோங்கு (முள்ளிலவு) Bombax malabaricum, DC.; Bombacaceae.
குளிர்தரு திங்கள் கங்கை குரவோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடைமே லுடையான் விடையான் விரைசேர்
தளிர்தரு கோங்கு வேங்கை தடமாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
. - சுந்தரர்.
திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருமங்கலக்குடி, திருக்கோடி, திருக்கைச்சினம் முதலிய தலங்களில் கோங்கு தலமரமாக உள்ளது. தற்பொழுது எந்தத் தலத்திலும் வளர்ப்பதாகத் தெரியவில்லை. இது கைபோல் பிரிந்த இலைகளையும், இலையுதிர்ந்த காலத்துத் தோன்றும் மிகவும் செந்நிற மலர்களையும், வெண்ணிறப் பஞ்சிற் பொதிந்த வழவழப்பான உருண்டை விதைகளையும் உடைய நீண்டு ஓங்கி வளரும் மரமாகும். மரம் முழுவதும் கூம்புவடிவ முட்களைக் கொண்டிருக்கும். தமிழகத்துக் காடுகளிலும், ஆற்றோரங்களிலும் தானே வளரும் தன்மை கொண்டவை. இதன் இலை, பூ, விதை, பட்டை, பிசின், பஞ்சு, வேர் ஆகியன மருத்துவக் குணம் கொண்டவை.
இலை குளிர்ச்சியுண்டாக்கி அக உறுப்பு அழற்சியைத் திணிக்கும்; பூ சிறுநீர் பெருக்கும், மலசிக்கலகற்றும்; விதை குருதிப் பெருக்கு அடக்கும், காமம் பெருக்கும்; பட்டை சிறுநீர் மிகுக்கும், உடலுரமாக்கும்; பிசின் குருதிப் பெருக்கை கட்டுப்படுத்தும்; வேர் உடல் வெப்பத்தையும் பலத்தையும் மிகுக்கும்.
திருமுறைகளில் கோங்கு பற்றிய குறிப்பு :-
ஓங்கிய மூவிலைநற் சூல
மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு
மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார்
வினையாய பற்றறுமே. 6
வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம்
தளிர்போல்மேனித் தையல்நல்லாளோ டொருபாகம்
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே. 4
வரந்திகழு மவுணர் மாநகர்மூன்
றுடன்மாய்ந் தவியச்
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச்
சங்கரன் மேயவிடம்
குருந்தம் மல்லிகை கோங்குமா
தவிநல்ல குராமரவந்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ்
சேர விடர்கெடுமே. 2
பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப்
பலதலை முடியொடு தோளவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே
ஒளிதிகழ் வாளது கொடுத்தழ காய
கோங்கொடு செருந்தி கூவிள மத்தங்
கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கைபொன் மலரார்4 விரைதரு கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
பாடம் : 4மலரா 8
இரவன் பகலோனும் எச்சத் திமையோரை
நிரவிட் டருள்செய்த நிமலன் உறைகோயில்
குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை
விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே. 4
நாலுங்குலைக்கமு கோங்குகாழி
ஞானசம் பந்தன் நலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடமோங்கும்
மருகலின் மற்றதன் மேல்மொழிந்த
சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
சூலம்வல் லான்கழ லேத்துபாடல்
சொல்லவல் லார்வினை யில்லையாமே.
சுவாமி : மாணிக்கவண்ணர்; அம்பாள் : வண்டுவார் குழலி.
சுவாமி : உத்தராபதீஸ்வரர்; அம்பாள் : சூளிகாம்பாள். 11
கோங்கன்ன குவிமுலையாள்
கொழும்பணைத்தோட் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்துகந்தான்
படர்சடைமேற் பால்மதியந்
தாங்கினான் பூம்புகார்ச்
சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
ஓங்கினார் ஓங்கினா
ரெனவுரைக்கும் உலகமே. 5
புரவியேழும் மணிபூண்
டியங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு
செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு
வேங்கைசுர புன்னைகள்
மரவம்மவ்வல் மலருந்
திலதைம் மதிமுத்தமே. 5
அரவமுந்நீர் அணியிலங்கைக்
கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலா
லடர்த்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி
ஞாழல் சுரபுன்னைமேல்
கிரமமாக வரிவண்டு
பண்செய்யுங் கேதாரமே. 8
கோங்கு செண்பகங் குருந்தொடு
பாதிரி குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி
வடகரை மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமுந்
தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள்
நாவினில் தலைப்படுந் தவத்தோரே. 5
கட்டலர்த்த மலர்தூவிக்
கைதொழுமின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருத்தி
கோங்கமருந் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை
முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டெம்
பரமேட்டி பாதமே. 4
என்போ டரவம்
ஏனத்தெயிறோ டெழிலாமை
மின்போற்புரிநூல் விரவிப்பூண்ட
மணிமார்பர்
அன்போ டுருகும் அடியார்க்
கன்பர் அமருமூர்
பொன்போ தலர்கோங் கோங்கு
சோலைப் புத்தூரே 5
கோடல் கோங்கங் குளிர்கூ
விளமாலை குலாயசீர்
ஓடு கங்கை ஒளிவெண்
பிறைசூடும் ஒருவனார்
பாடல் வீணைமுழ வங்குழன்
மொந்தைபண் ணாகவே
ஆடு மாறுவல் லானும்
ஐயாறுடை ஐயனே. 1
கோடலொடு கோங்கவை
குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு
மானதிட மென்பர்
மாடமலி சூளிகையி
லேறிமட வார்கள்
பாடலொலி செய்யமலி
கின்றபழு வூரே. 2
மருவமர் குழலுமை
பங்கர் வார்சடை
அரவமர் கொள்கையெம்
அடிகள் கோயிலாங்
குரவமர் சுரபுன்னை
கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி
விசய மங்கையே. 1
ஓங்கிய நாரணன் நான்முக
னும்முண ராவகை
நீங்கிய தீயுரு வாகிநின்
றநிம லன்நிழற்
கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி
லார்திருக் கோட்டாற்றுள்
ஆங்கம ரும்பெரு மான்அம
ரர்க்கம ரனன்றே. 9
கோங்கமே குரவமே
கொன்றையம் பாதிரி
மூங்கில்வந் தணைதரு
முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி
யடிகளை அடிதொழ
வீங்குவெந் துயர்கெடும்
வீடெளி தாகுமே. 3
குருந்தொடு மாதவி
கோங்கு மல்லிகை
பொருந்திய பொழில்திருப்
பூவ ணத்துறை
அருந்திறல் அவுணர்தம்
அரணம் மூன்றெய்த
பெருந்தகை யடிதொழப்
பீடை யில்லையே. 5
கோங்கிள வேங்கையுங்
கொழுமலர்ப் புன்னையுந்
தாங்குதேன் கொன்றையுந்
தகுமலர்க் குரவமு
மாங்கரும் பும்வயல்
மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந் தவன்கழல்
அடியிணை பணிமினே. 3
முள்ளிநாண்முகை மொட்டியல் கோங்கின்
அரும்புதேன்கொள் குரும்பைமூ வாமருந்
துள்ளியன்றபைம் பொற்கலசத்திய லொத்தமுலை
வெள்ளிமால்வரை யன்னதோர் மேனியின்
மேவினார்பதி வீமரு தண்பொழிற்
புள்ளினந்துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே. 4
கோங்கமே குரவமே கொழுமலர்ப்
புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா
திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி அடிகளா
ரிடமென விரும்பினாரே. 1
உரிந்துயர் உருவில் உடைதவிர்ந் தாரும்
அத்துகில் போர்த்துழல் வாருந்
தெரிந்துபுன் மொழிகள் செப்பின கேளாச்
செம்மையார் நன்மையால் உறைவாங்
குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை
மல்லிகை சண்பகம் வேங்கை
கருந்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங்
கழுமல நகரென லாமே. 10
திருவமர் தாமரை சீர்வளர்
செங்கழு நீர்கொள்நெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ்
சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட
மலிமறை யோர்கள்நல்லூர்
உருவமர் பாகத் துமையவள்
பாகனை உள்குதுமே. 10
விரிகடல் இலங்கைக் கோனை
வியன்கயி லாயத் தின்கீழ்
இருபது தோளும் பத்துச்
சிரங்களும் நெரிய வூன்றிப்
பரவிய பாடல் கேட்டுப்
படைகொடுத் தருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த
கோவல்வீ ரட்ட னாரே.
இத்தலம் நடு நாட்டிலுள்ளது.
சுவாமி : வீரட்டேசநாதர் : சிவாநந்தவல்லி. 10
பரவை வருதிரை நீர்க்கங்கை
பாய்ந்துக்க பல்சடைமேல்
அரவ மணிதரு கொன்றை
இளந்திங்கட் சூடியதோர்
குரவ நறுமலர் கோங்க
மணிந்து குலாய சென்னி
உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி
யூருறை யுத்தமனே. 3
பாளையு டைக்கமு கோங்கிப்பன்
மாடம்நெ ருங்கியெங்கும்
வாளையு டைப்புனல் வந்தெறி
வாழ்வயல் தில்லைதன்னுள்
ஆளவு டைக்கழற் சிற்றம்ப
லத்தரன் ஆடல்கண்டாற்
பீளையு டைக்கண்க ளாற்பின்னைப்
பேய்த்தொண்டர் காண்பதென்னே. 1
கோடல் கோங்கம்
புறவணி முல்லைமேல்
பாடல் வண்டிசை
கேட்கும்பைஞ் ஞீலியார்
பேடு மாணும்
பிறரறி யாததோர்
ஆடு நாகம்
அசைத்த அடிகளே. 8
ஈங்கைப்பேர் ஈமவனத் திருக்கின் றான்காண்
எம்மான்காண் கைம்மாவி னுரிபோர்த் தான்காண்
ஓங்குமலைக் கரையன்றன் பாவை யோடும்
ஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்
கோங்குமலர்க் கொன்றையந்தார்க் கண்ணி யான்காண்
கொல்லேறு வெல்கொடிமேற் கூட்டி னான்காண்
வேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண்
விண்ணிழிதண்வீழி மிழலை யானே.
சுவாமி : வீழியழகர்; அம்பாள் : அழகுமுலையம்மை. 10
ஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று
தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று
பலபிறவி அறுத்தருளும் பரிசு தோன்றுங்
கோங்கணைந்த கூவிளமும் மதமத் தமுங்
குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்
பூங்கணைவேள் உருவழித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. 10
சிலைத்துநோக்கும்வெள் ளேறுசெந்தழல்
வாயபாம்பது மூசெனும்
பலிக்குநீர்வரும் போதுநுங்கையிற்
பாம்புவேண்டா பிரானிரே
மலைத்தசந்தொடு வேங்கைகோங்கமும்
மன்னுகாரகில் சண்பகம்
அலைக்கும்பைம்புனல் சூழ்பைஞ்ஞீலியில்
ஆரணீய விடங்கரே. 2
கோடுயர் கோங்க லர்வேங் கையலர்
மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நீடுயர் சோலை நெல்வா யிலரத்
துறைநின் மலனே நினைவார் மனத்தாய்
ஓடு புனற்க ரையாம் இளமை
உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி
வாடி இருந்து வருந்தல் செய்யா
தடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 4
கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்
பழவினை உள்ளன பற்றறுத் தானை. 2
குளிர்தரு திங்கள்கங் கைகுர
வோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடை மேலுடை
யான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்குவேங் கைதட
மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. 8
தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்திற்
றடங்கொள்பெருங் கோயில்தனிற் றக்கவகை யாலே
வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய
மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்
வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்
விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்தென் கரைமேற்
கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த
கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே. 10
கொய்யா மலர்க்கோங்
கொடுவேங் கையுஞ்சாடிச்
செய்யாரக் கொணர்ந்தெற்றி
யோர்பெண்ணை வடபால்
மையார் தடங்கண்
ணியர்ஆடுந் துறையூர்
ஐயா உனைவேண்டிக்
கொள்வேன் தவநெறியே. 8
பூங்கமலத் தயனொடுமால் அறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடீ
ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே. 1
திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந்து
உருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே. 1
கொளு
மதிவாணுதல் வளர் வஞ்சியைக்
கதிர்வேலவன் கண்ணுற்றது. 1
குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதொர் தீவினை வந்திடிற் சென்றுசென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன் னத்தகும் பெற்றியரே. 205
கொளு
பொருவே லண்ணல் போக்குத் துணிந்தமை
செருவேற் கண்ணிக்குச் சென்று செப்பியது. 12
நீங்கரும் பொற்கழல் சிற்றம் பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமு மெய்தினும் யான்மறவேன்
தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந் தேனும் பொதிந்துசெப்புங்
கோங்கரும் புந்தொலைத் தென்னையு மாட்கொண்ட கொங்கைகளே. 46
கொளு
வென்றிவேலவன் மெல்லியல்தனக்
கின்றியமையாமை யெடுத்துரைத்தது. 28
கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை பங்கன் குறுகலரூர்
தீங்கிற் புகச்செற்ற கொற்றவன் சிற்றம் பலமனையாள்
நீங்கிற் புணர்வரி தென்றோ நெடிதிங்க னேயிருந்தால்
ஆங்கிற் பழியா மெனவோ அறியே னயர்கின்றதே. 13
கொளு
பிரிவுணர்ந்த பெண்கொடிதன்
பருவரலின் பரிசு நினைந்தது. 13
நல்வினை யும்நயந் தந்தின்று வந்து நடுங்குமின்மேற்
கொல்வினை வல்லன கோங்கரும் பாமென்று பாங்கன் சொல்ல
வில்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின்வெள்கித்
தொல்வினை யாற்றுய ரும்மென தாருயிர் துப்புறவே. 26
கொளு
கல்விமிகு பாங்கன் கழற வெள்கிச்
செல்வமிகு சிலம்பன் தெரிந்து செப்பியது. 8
முன்னோன் மணிகண்ட மொத்தவன் அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந் தோங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெற லாவியன் னாய்அரு ளாசையினாற்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ யாம்விழை பொங்கிருளே. 210
கொளு
மன்னிய இருளில் துன்னிய குறியிற்
கோங்கிவர் கொங்கையை நீங்குகொண் டென்றது. 17
குரவம் கோங்கம் குளிர்புன்னை
கைதை குவிந்த கரைகள்மேல்
திரைவந் துலவும் தில்லை
மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண்
டபத்து மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல்கை
ஏந்தி அழகன் ஆடுமே. 6
திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்
சிறியனுக்(கு) இனியது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின்
பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி
வரைவளங் கவர்ந்திழி வைகைப்*
பொருதிரை மருங்கோங்(கு) ஆவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே.
( * வையை என்றும் பாடம்) 1
சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
குறிப்பெனோ கோங்கிணர் அனைய
குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்து
உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்(கு)
இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 3
தீங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்
ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக்
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
ஊங்கரும் பாகியே ஊனீர் வருமே 10
கோங்கின் அரும்பழித்த
கொங்கைக் குறமகளிர்
வேங்கைமணி நீழல்
விளையாடி - வேங்கை
வரவதனைக் கண்டிரியும்
ஈங்கோயே தீங்கு
வரவதனைக் காப்பான் மலை. 37
பூங்கொத் திருந்தழை யார்பொழில்
கச்சிஏ கம்பர்பொற்பார்
கோங்கத் திருந்த குடுமிக்
கயிலைஎம் பொன்னொருத்தி
பாங்கொத் திருந்தனை ஆரணங்
கேபடர் கல்லருவி
ஆங்கத் திருந்திழை ஆடிவந்
தாற்கண் டடிவருத்தே. 12
உலகம் உவப்ப
வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு
கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்குஞ்
சேண்விளங் கவிரொளி
உறுநர்த் தாங்கிய
மதனுடை நோன்தாள்
செறுநர்த் தேய்த்த
செல்உறழ் தடக்கை (5)
மறுவில் கற்பின்
வாணுதல் கணவன்
கார்கோள் முகந்த
கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில்
வள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய
தண்ணறுங் கானத்து
இருள்படப் பொதுளிய
பராஅரை மராஅத்து (10)
உருள்பூந் தண்டார்
புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த
சேணுயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய
ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய
நுசுப்பிற் பணைத்தோள்
கோபத் தன்ன
தோயாப் பூந்துகில் (15)
பல்காசு நிரைத்த
சில்காழ் அல்குல்
கைபுனைந் தியற்றாக்
கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய
பொலம்புனை அவிரிழைச்
சேண்இகந்து விளங்குஞ்
செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த
இணையீர் ஓதிச் (20)
செங்கால் வெட்சிச்
சீறிதழ் இடையிடுபு
பைந்தாள் குவளைத்
தூஇதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு
வலம்புரி வயின்வைத்துத்
திலகம் தைஇய
தேங்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய்
தாழமண் ணுறுத்துத் (25)
துவர முடித்த
துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகம்
செரீஇக் கருந்தகட்டு
உளைப்பூ மருதின்
ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின் றெழுதரு
கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல்
வளைஇத் துணைத்தக (30)
வண்காது நிறைந்த
பிண்டி ஒண்தளிர்
நுண்புண் ஆகந்
திளைப்பத் திண்காழ்
நறுங்குற டுரிஞ்சிய
பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர்
கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக்
கொட்டி விரிமலர் (35)
வேங்கை நுண்தா
தப்பிக் காண்வர
வெள்ளில் குறுமுறி
கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய
வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென்
றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம்
சிலம்பப் பாடிச் (40)
சூரர மகளிர்
ஆடும் சோலை
மந்தியும் அறியா
மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு மூசாச்
சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி
மிலைந்த சென்னியன்
பார்முதிர் பனிக்கடல்
கலங்கஉள் புக்குச் (45)
சூர்முதல் தடிந்த
சுடர்இலை நெடுவேல்
உலறிய கதுப்பிற்
பிறழ்பல் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண்
சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு
கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும்
காதின் பிணர்மோட்டு (50)
உருகெழு செலவின்
அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய
கூருகிர்க் கொடுவிரல்
கண்தொட் டுண்ட
கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின்
ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம்
பாடித்தோள் பெயரா (55)
நிணந்தின் வாயள்
துணங்கை தூங்க
இருபேர் உருவின்
ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின்
அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம்
அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்த
மறுவில் கொற்றத்து (60)
எய்யா நல்லிசைச்
செவ்வேல் சேஎய்
சேவடி படரும்
செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப்
புலம்பிரிந் துறையும்
செலவுநீ நயந்தனை
ஆயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத்து
இன்நசை வாய்ப்ப (65)
இன்னே பெறுதிநீ
முன்னிய வினையே
செருப் புகன் றெடுத்த
சேண்உயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு
பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த
போர்அரு வாயில்
திருவீற் றிருந்த
தீதுதீர் நியமத்து (70)
மாடமலி மறுகில்
கூடல் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல்
விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத்
துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல்
ஊதி எல்படக்
கண்போல் மலர்ந்த
காமர் சுனைமலர் (75)
அஞ்சிறை வண்டின்
அரிக்கணம் ஒலிக்கும்
குன் றமர்ந் துறைதலும் உரியன்,
அதா அன்று 1
பட்டோர் பெயரும்
ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும்
மூதூர் நத்தமும்
பரல்முரம் பதரும்
அல்லது படுமழை
வரன்முறை அறியா
வல்வெயிற் கானத்துத்
தேனிவர் கோதை
செல்ல மானினம்
அஞ்சில் ஓதி
நோக்கிற் கழிந்து
நெஞ்செரி வுடைமையின்
விலக்காது விடுக
கொங்கைக் கழிந்து
குன்றிடை அடைந்த
கொங்கிவர் கோங்கமும்
செலவுடன் படுக
மென்றோட் குடைந்து
வெயில்நிலை நின்ற
குன்ற வேய்களும்
கூற்றடைத் தொழிக
மாயிருங் கடற்றிடை
வைகல் ஆயிரம்
பாவையை வளர்ப்போய்
நீநனி பாவையை
விலக்காது பிழைத்தனை
மாதோ நலத்தகும்
அலைபுனல் ஆரூர்
அமர்ந்துறை அமுதன்
கலையமர் கையன்
கண்ணுதல் எந்தை
தொங்கலஞ் சடைமுடிக் கணிந்த
கொங்கலர் கண்ணி
ஆயின குரவே. 16
பிள்ளைமைப் பருவம் மீதாம் பேதை
மைப் பருவம் நீங்கி
அள்ளுதற்கு அமைந்த பொற்பால் அநங்கன்
மெய்த் தனங்கள் ஈட்டம்
கெள்ள மிக்குயர்வ போன்ற கொங்கை
கோங் கரும்பை வீழ்ப்ப
உள்ள மெய்த் தன்மை முன்னை
உண்மையும் தோன்ற உய்ப்பார். 136
கோடல் கோங்கம் குளிர் கூவிளம்
என்னும் திருப்பதிகக் குலவு மாலை
நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த
திரு உள்ளத்து நிலைமை தோன்ற
ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று
எம் ஐயனே என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடும்
கண் பொழி நீர் பரந்து பாய. 303
நாளி கேரஞ் செருந்தி
நறுமலர் நரந்தம் எங்கும்
கோளி சாலந்த மாலம்
குளிர்மலர்க் குரவம் எங்கும்
தாளிரும் போந்து சந்து
தண்மலர் நாகம் எங்கும்
நீளிலை வஞ்சி காஞ்சி
நிறைமலர்க் கோங்கம் எங்கும். 28