இறைவர் திருப்பெயர்: | வீரட்டேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | சிவானந்தவல்லி, பெரியநாயகி, பிருகந்நாயகி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | தென் பெண்ணையாறு (தட்சிண பிநாகினி). |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், சேக்கிழார், மெய்ப்பொருள் நாயனார், நரசிங்கமுனையரையர் (சுந்தரரை வளர்த்தவர்) முதலியோர் |
ஊர் பெயர் திருக்கோவலூர்; தலத்தின் பெயர் வீரட்டம்.
திருக்கோவலூர் என்பது மருவி இன்று திருக்கோயிலூர் என்று வழங்குகின்றது.
இது, அந்தகாசூரனைச் சம்ஹரித்த தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. படைகொள் கூற்றம் (2.100); அப்பர் - 1. செத்தையேன் சிதம்பநாயேன் (4.69); பாடல்கள் : அப்பர் - கொண்டலுள்ளார் (6.51.9); சுந்தரர் - வீழக் காலனைக் (7.12.1); கபிலதேவ நாயனார் - கொடிக்குல வும் (11.22.34) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை; சேக்கிழார் - சென்று அணைந்து (12.28.967 & 968) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், திருவதிகைப் பதி (12.21.148) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.
அவதாரத் தலம் : திருக்கோவலூர். வழிபாடு : சங்கம வழிபாட். முத்தித் தலம் : திருக்கோவலூர். குருபூசை நாள் : கார்த்திகை - உத்திரம்
திருமுறை கண்ட இராஜராஜ சோழன் அவதரித்த பதி.
ஔவையார் இத்தல விநாயகரைப் பூஜித்து, அவரது தும்பிக்கையால் கயிலை அடைந்த பதி.
அமைவிடம் அ/மி. வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோயிலூர் - 605 757. விழுப்புரம் மாவட்டம். தொலைபேசி : 04153 - 224036, +91-93448 79787. மாநிலம் : தமிழ் நாடு விழுப்புரம் - திருவண்ணாமலை இரயில் பாதையில் உள்ள நிலையம். நிலையத்திலிருந்து வடக்கே 5-கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடக்கவேண்டும். திருவண்ணாமலை, பண்ணுருட்டி தலங்களிலிருந்து, ஏராளமான பேருந்து வசதி உள்ளது.