இறைவர் திருப்பெயர்: | ஏகாம்பரநாதர், திருவேகம்பர், தழுவக்குழைந்த நாதர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | ஏலவார்குழலி, காமாட்சியம்மை |
தல மரம்: | மா மரம் (வேதம் மா மரமாக உள்ளது.) |
தீர்த்தம் : | கம்பா நதி, சிவகங்கை, சர்வ தீர்த்தம் |
வழிபட்டோர்: | உமையம்மை, பிரம்மா, திருமால், ருத்திரர், சம்பந்தர், அப்பர், சுந்தரர்,மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், பரணதேவ நாயனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர் |
தல புராணம் - மா மரத்தைத் தலமரமாக (ஏ+ஆம்ரம்= மாமரம்) கொண்டுள்ளதால் ஏகாம்பரம் எனப் பெற்றது. கச்சி என்பது ஊரின் பெயர்.
தவம் செய்த அம்பிகைக்கு இறைவனார் மாமரத்தினடியில் காட்சி தந்து அருள்புரிந்த பதி.
உமா தேவி இறைவனிடம் கேட்ட ஆகம முறைப்படி வழிபட விரும்பி இத்தலத்தில் இறைவனைப் பூசித்தார்.
மூலவர் - அம்பாள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிருதிவி (மணல்) லிங்கம் ஆகும்.
பூசிக்கும்போது, வெள்ளம் பெருக்கெடுத்து எழ, தான் மணலால் நிறுவிய லிங்கத் திருமேனியைக் காமாட்சியம்மை தழுவி அணைக்க, இறைவன் அத்தழும்பு தோன்றுவராயினர்.
பிரம்மா, திருமால், ருத்திரர் பூசித்த இலிங்கங்கள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக்கம்பம், நல்லக்கம்பம் எனப்படுகின்றன.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்: சம்பந்தர் - 1. வெந்த வெண்பொடிப் பூசு (1.133), 2. மறையானை மாசிலா (2.12), 3. கருவார் கச்சி (3.41), 4. பாயுமால்விடை (3.114); அப்பர் - 1. கரவாடும் வன்னெஞ்சர்க்கு (4.7), 2. நம்பனை நகரமூன்றும் (4.44), 3. ஓதுவித் தாய்முன் அற (4.99), 4. பண்டு செய்த பழவினை (5.47), 5. பூமே லானும் பூமகள் (5.48), 6. கூற்றுவன் காண் கூற்றுவனை (6.64), 7. உரித்தவன்காண் உரக்களிற்றை (6.65; சுந்தரர் - 1. ஆலந் தானுகந் தமுதுசெய் (7.61); பட்டினத்துப் பிள்ளையார் - 1. மெய்த்தொண்டர் செல்லும் (11.30); பாடல்கள்: சம்பந்தர் - உளங்கொள்வார் (1.76.4); அப்பர் - கொடிகொள் செல்வ (5.32.1), காரானை ஈருரிவைப் (6.1.8), தீர்த்தப் புனற்கெடில (6.7.2), விற்றூணொன் றில்லாத (6.8.1,4 & 6), ஊக முகிலுரிஞ்சு (6.16.5), உலர்ந்தார்தம் (6.20.5), வெண்டலையும் (6.22.8), கருவாகிக் குழம்பிருந்து (6.25.6), நன்றருளித் தீதகற்றும் (6.30.7), செடியேறு தீவினைகள் (6.31.2), விண்ணோர் தலைவனே (6.37.7 & 9), எல்லா வுலகமு மானாய் நீயே (6.38.7 & 9), அறைகலந்த (6.40.2), மின்னே ரிடை (6.41.4 & 9), எனக்கென்றும் (6.43.3), நம்பனே (6.44.5), சவந்தாங்கு (6.50.2), வளங்கிளர்மா மதிசூடும் (6.59.9), உரையாரும் (6.62.6), மகிழ்ந்தானைக் (6.63.8), செம்பொன்னை (6.74.4), கருமருவு வல்வினைநோய் (6.76.5), காரார் கடல்நஞ்சை (6.78.9), கங்கையெனுங் (6.79.5), மலைமகள் (6.80.3 & 4), கண்டலஞ்சேர் (6.81.1), கடுவெளியோ (6.82.7), இணையொருவர் (6.83.7), எத்திக்கு மாய்நின்ற (6.84.7); மாணிக்கவாசகர் - ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி (8.4.151 வது வரி) திருவாசகம், படமாக என்னுள்ளே (8.13.14) திருவாசகம், ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் (8.14.2) திருவாசகம், குன்றங் கிடையுங் (8.18.3) திருக்கோவையார்; ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - என்னெஞ்சே உன்னை (11.6.20) க்ஷேத்திரத் திருவெண்பா; பரணதேவ நாயனார் - எரியாடி ஏகம்பம் (11.24.22,56, 57 & 96) சிவபெருமான் திருவந்தாதி; நம்பியாண்டார் நம்பி - தகடன ஆடையன் சாக்கியன் (11.34.42) திருத்தொண்டர் திருவந்தாதி; சேக்கிழார் - கோதிலா அமுது (12.19.67,92 & 99) திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், திரு வாயிலினைப் (12.21.322,323,326,328 & 329) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், நீல மா விடம் (12.28.959 & 999) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், ஆண்ட நம்பி (12.29.186,285,286 & 290) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
அவதாரத் தலம் : திருக்கச்சியேகம்பம் (காஞ்சிபுரம்) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : காஞ்சிபுரம். குருபூசை நாள் : ஐப்பசி - மூலம்.
அவதாரத் தலம் : திருக்கச்சியேகம்பம் (காஞ்சிபுரம்). வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : காஞ்சிபுரம். குருபூசை நாள் : வைகாசி - பரணி.
அவதாரத் தலம் : காஞ்சிபுரம். வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : காஞ்சிபுரம் (காந்தி சாலை, ஆடிசன்பேட்டை, காஞ்சிபுரம் மார்க்கெட் அருகில் உள்ள முத்தீசுவரர் திருக்கோயில்; இத்திருக்கோயில் வளாகத்தில் இவருக்கெனத் தனிச் சந்நிதி உள்ளது.) குருபூசை நாள் : சித்திரை - சுவாதி.
தல புராணங்கள் |
ஆசிரியர் |
கச்சபேசர் பஞ்சரத்திநம் | சண்முகம் பிள்ளை |
கச்சி அனந்த ருத்ரேசர் பதிகம் | சிவஞான சுவாமிகள் |
கச்சி இதழகல் அந்தாதி | ப. தி. கார்த்திகேய முதலியார் |
கச்சிக் கலம்பகம் | பூண்டி அரங்கநாத முதலியார் |
கச்சிக்கலம்பகம் உரையுடன் | பூண்டி அரங்கநாத முதலியார் |
காஞ்சிப் புராணம் - பகுதி 1 | சிவஞான சுவாமிகள் |
காஞ்சிப் புராணம் - பகுதி 1 | சிவஞான சுவாமிகள் |
காஞ்சிப் புராணம் - பகுதி 2 | சிவஞான சுவாமிகள் |
காஞ்சிப் புராணம் - பகுதி 2 ![]() |
சிவஞான சுவாமிகள் |
காஞ்சிப் புராணம் - பகுதி 3 | சிவஞான சுவாமிகள் |
காஞ்சிப் புராணம் - பகுதி 3 ![]() |
சிவஞான சுவாமிகள் |
காஞ்சிப் புராணம் - பகுதி 4a | சிவஞான சுவாமிகள் |
காஞ்சிப் புராணம் - பகுதி 4a ![]() |
சிவஞான சுவாமிகள் |
காஞ்சிப் புராணம் - பகுதி 4b | சிவஞான சுவாமிகள் |
காஞ்சிப் புராணம் - பகுதி 4b ![]() |
சிவஞான சுவாமிகள் |
காஞ்சிப்புராணம் முதற்காண்டம் மூலமும் உரையும் | தி.க.சுப்பராய செட்டியார் |
காஞ்சிப் புராணம் - வசனம் ![]() |
கனகசபை நாயகர் |
திருக்கச்சியேகம்பர் திரிபந்தாதி | சோணாசல முதலியார் |
திருவேகம்பர் அந்தாதி - மூலமும் உரையும் | சிவஞான சுவாமிகள் |
காஞ்சிபுரம் கோயில் வழிகாட்டி | |
திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு | சிவஞான சுவாமிகள் |
ஏகாம்பரநாதர் உலா | இரட்டைப்புலவர்கள் |
அமைவிடம் அ/மி. ஏகாம்பரேசுவரர் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631 502. தொலைபேசி : 044 - 27222084, 044 - 27230343, +91-94431 29456, +91-98459 54730. மாநிலம் : தமிழ் நாடு தமிழகத்தின் முக்கிய ஊர்களில் ஒன்று. சென்னையிலிருந்தும் பிற ஊர்களிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.