logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருநெடுங்களம்

Om symbol

இறைவர் திருப்பெயர்: நித்யசுந்தரேஸ்வரர், நெடுங்களநாதர்.

இறைவியார் திருப்பெயர்: மங்களநாயகி, ஒப்பிலா நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேக்கிழார், அகத்தியர்.

Loading map...

Sthala Puranam

 

 

Nedunkalam temple

மக்கள் கொச்சையாக பேசும்போது மட்டும் இத்தலத்தை 'திருநட்டாங்குளம்' என்கின்றனர்.

 

தவஞ்செய்த அம்பிகையை இறைவன் கள்ள உருவில் தோன்றிக் கைத்தலம் பற்ற, அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம், ஒளிமதிச்சோலை என்று வழங்குகிறது.

 

தேவாரப் பாடல்கள் :   பதிகங்கள்   :   சம்பந்தர்   -   1. மறையுடையாய் தோலுடையாய் (1.52); பாடல்கள்    :    அப்பர்    -       எழிலார் இராச சிங்கத்தை (4.15.7),                                      சீரார் புனற்கெடில (6.007.9),                                      ஆண்டானை (6.054.1),                                      கொடுங்கோளூர் (6.070.5),                                      நள்ளாறும் (6.071.10),                                      அலையார் (6.072.1);                                      சுந்தரர்    -      நாளும் நன்னிலம் (7.012.8); ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - தொட்டுத் தடவித் (11.005.8);                 சேக்கிழார்   -      ஏறு உயர்த்தார் (12.28.348 & 349) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.                          

 

   தல மரம் : வில்வம்

 

 

Specialities

இங்குள்ள வெண்கலக்குதிரை விந்தையான அமைப்புடையது.

 

மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது.

 

நெடுங்களப் பதிகத்தில் வரும் பாடற் கருத்துக்கள் அனைத்தும் ராஜ கோபுரத்தில் முன்னும் பின்னும் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

 

மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சியளிக்கின்றன.

 

இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது - யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார்.

 

கல்வெட்டில் இத்தலம் "பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திருநெடுங்களம்" என்றும்; இறைவன் பெயர் "நெடுங்களத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

 

  • இத்தலத்தில் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன
முந்தைய தலம்<திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)

 அடுத்த தலம்>மேலைத்திருக்காட்டுப்பள்ளி (திருக்காட்டுப்பள்ளி)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி - தஞ்சை சாலையில் வந்து துவாக்குடி என்னுமிடத்தில் பிரியும் சாலையில் 4 கி. மீ. சென்று நெடுங்களத்தையடையலாம். திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து நகரப் பேருந்து செல்கின்றன. திருச்சி - மாங்காவனம், நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. தொடர்பு : 0431 - 2520126
Loading map...

Related Content