இறைவர் திருப்பெயர்: | படிக்காசுவைத்த பரமர், சொர்ணபுரீஸ்வரர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | சிவாம்பிகை,சௌந்திரநாயகி, அழகம்மை |
தல மரம்: | |
தீர்த்தம் : | அரிசில் நதி |
வழிபட்டோர்: | சம்பந்தர்,அப்பர், சுந்தரர், புகழ்த்துணை நாயனார், சேக்கிழார் முதலியோர் |
பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடும் செருவிலிபுத்தூர் என்னும் இத்தலம் அரிசிற்கரைப்புத்தூர் மருவி அழகாபுத்தூர் என தற்போது வழங்கப்பெறுகிறது.
அவதாரத் தலம் : அரிசிற்கரைப்புத்தூர் (அழகாபுத்தூர்) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : அரிசிற்கரைப்புத்தூர் (அழகாபுத்தூர்) குருபூசை நாள் : ஆவணி - ஆயில்யம்.
![]() |
திருமுறை பாடல்கள்
பதிகங்கள் : சம்பந்தர் - 1. மின்னுஞ் சடைமேல் (2.63);
அப்பர் - 1. முத்தூ ரும்புனல் (5.61);
சுந்தரர் - 1. மலைக்கு மகள்அஞ்ச (7.9);
பாடல்கள் : சேக்கிழார் - நல்லூரில் நம்பர் அருள் (12.21.215,216 & 217) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,
பாடும் அரதைப் (12.28.403) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,
வாசி அறிந்து காசு அளிக்க (12.29.60) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,
செருவிலிபுத்தூர் மன்னும் (12.56.1) புகழ்த்துணை நாயனார் புராணம்,
அமைவிடம் அ/மி. சொர்ணபுரீசுவரர் திருக்கோயில், அழகாபுத்தூர், கும்பகோணம் - 612 401. தொலைபேசி : 0434 - 2466939 மாநிலம் : தமிழ் நாடு அமைவிடம் : கும்பகோணம் - நாச்சியார்கோவில் சாலையில் உள்ளது.