logo

|

Home >

hindu-hub >

temples

கற்குடி (உய்யக்கொண்டான்மலை, உய்யக்கொண்டான்திருமலை)

இறைவர் திருப்பெயர்: உஜ்ஜீவநாதஸ்வாமி, உச்சிநாதர், முக்தீசர், கற்பகநாதர்.

இறைவியார் திருப்பெயர்: அஞ்சனாக்ஷி (மைவிழியம்மை), பாலாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : பொன்னொளி ஓடை, குடமுருட்டி (இது தஞ்சை மாவட்டத்தில் ஓடும் ஆறு அல்ல. இது வேறு.),ஞானவாவி, எண்கோண தீர்த்தம், நாற்கோணதீர்த்தம் என்பன.

வழிபட்டோர்:கரன், நாரதர், உபமன்யு முனிவர், மார்க்கண்டேயர், அருணகிரிநாதர், சம்பந்தர், அப்பர், சுந்தரர்.

Sthala Puranam

தற்போது மக்கள் வழக்கில் உய்யக்கொண்டான்மலை என்று வழங்குகிறது.

 

  • இறைவன் கல்லில் - மலையில் குடியிருப்பதால் கற்குடி என்னும் பெயர் பெற்றது.

 

  • இத்தலத்தில்தான் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்து இறைவன் அருள் புரிந்தார்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்   :   சம்பந்தர்    -   1. வடந்திகழ் மென்முலை (1.43);                   அப்பர்      -   1. மூத்தவனை வானவர்க்கு (6.60);                   சுந்தரர்     -   1. விடையா ருங்கொடியாய் (7.27); பாடல்கள்    :    அப்பர்     -       மறைக்காட்டார் (6.51.7),                                       எச்சில் இளமர் (6.70.4),                                       நற்கொடிமேல் (6.71.3);                  சேக்கிழார்  -       சிலந்திக்கு அருளும் (12.21.302) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                       தொழுது புறம்பு அணைந்து (12.28.342 & 343) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                       ஆயிடை நீங்கி (12.29.92 & 93) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம். 

 

  தல மரம் : வில்வம்

Specialities

நந்திவர்ம பல்லவ மன்னனால் அமைக்கப்பெற்ற கோயில்; இப்பகுதிக்கு 'நந்திவர்ம மங்கலம் ' என்னும் பெயருண்டு.

 

இங்கே கரன் வழிபட்ட சிவலிங்கம் 'இடர்காத்தார் ' என்னும் பெயருடன் திகழ்கிறது.

 

இத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் குடமுருட்டி என்பது, (தஞ்சை மாவட்டத்தில் ஓடும் ஆறு அல்ல. இது வேறு) சர்ப்பநதி, உய்யக்கொண்டான் நதி என்றும், கல்வெட்டில் வைரமேகவாய்க்கால் என்றும் உள்ளது.

 

கொடிமரத்தின் முன்பு, மார்க்கண்டேயனைக் காப்பதற்கு - எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டுநீங்கி வந்து நின்ற, சுவாமியின் - பாதம் உள்ளது.

 

மூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையாரில் அழகாக காட்சித் தருகிறார்.

 

கல்வெட்டில் 'நந்திவர்ம மங்கலம்', 'ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலம்' இவ்வூர் என்றும்; இறைவன் 'உய்யக்கொண்டநாதர் ' என்றும் குறிக்கப்படுகிறது.

 

(கி. பி. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது இக்கோயில் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் மைசூர்க்காரரும் மாறிமாறித் தங்கியிருப்பதற்குரிய யுத்த அரணாக விளங்கியது என்ற செய்தியை 'கெஜட்' வாயிலாக அறிகிறோம்.)

 

 

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சிக்குப் பக்கத்தில் உள்ளது; திருச்சியிலிருந்து பேருந்து வசதி உள்ளது. தொடர்பு : 09443150332, 09443650493.

Related Content