logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கண்டியூர் கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: பிரமசிரக் கண்டீஸ்வரர், வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்.

இறைவியார் திருப்பெயர்: மங்கள நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : கபால தீர்த்தம், நந்திதீர்த்தம், தக்ஷதீர்த்தம், பிரமதீர்த்தம், குடமுருட்டி ஆறு முதலியன.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், சூரியன், பிரமன், சாதாதாப முனிவர் முதலியோர்.

Sthala Puranam

 

view of vimAnA

பிரமன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பேறடைந்தான் என்பது வரலாறு.

 

சாதாதாப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார்; ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன் அம்முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்   :   சம்பந்தர்   -  1. வினவினேன்அறி யாமையில் (3.38);                   அப்பர்     - 1. வானவர் தானவர் (4.93); பாடல்கள்    :   அப்பர்     -      திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6.70.9),                                     தண்டி குண்டோ தரன் (6.93.7);                  சுந்தரர்    -      நாளும் நன்னிலம் (7.12.8);                  சேக்கிழார்  -      கருகாவூர் முதலாகக் (12.21.198,199 & 200) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                      அங்கு அப்பதி நின்று (12.28.351 & 352) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                                    தேவர் பெருமான் (12.29.71) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,                                      பொன் பரப்பி (12.37.130) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.  

 

தல மரம் : வில்வம்

Specialities

  • அட்டவீரட்டத் தலங்களுள்ளும், சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகத் இத்தலம் விளங்குகிறது.

 

"சாதாதாப" முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு 'ஆதிவில்வாரண்யம் ' என்றும் பெயர்.

 

  • பிரமகத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் சொல்லப்படுகிறது.

 

சூரியன் வழிபட்டதலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது.

 

சப்தஸ்தானத் திருவிழாவில் (ஏழூர்திருவிழா) சுவாமி இங்கு வந்து இறங்கி, சற்று இளைப்பாறி செல்லும். சிலாத முனிவருக்கு, சாதாதாப முனிவர் தமையனாராதலின், இளைப்பாறிச் செல்லும்போது மூத்தமாமனார் என்ற வகையில் கட்டிச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று (தயிர்சாதம், புளியோதரை) - கட்டித்தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து வருகின்றது.

 

  • நவக்கிரக சந்நிதியின் சூரியன் இரு மனைவியருடன் காட்சித் தருகிறார்.

 

  • மூலவர் சுயம்பு மூர்த்தி; பாணம் சற்று உயரமாக உள்ளது.

 

பூ, ஜபமாலை ஏந்தி, இருகைகளாலும் இறைவனை பிரார்த்திக்கும் அமைப்பில் உள்ள பிரம்மாவின் இவ்வுருவம் அழகுடையது.

 

prakAra exit

 

 

  • இத் தலத்தில் பிரமனுக்கு தனிக் கோயில் உள்ளது.

 

பிரமனின் சிரம் கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக் கோலம்; பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் கதவோரமாக சிறிய சிலா ரூபமாகவுள்ளது.

 

கல்வெட்டில், இப்பெருமான், "திருவீரட்டானத்து மகாதேவர்", "திருக்கண்டியூர் உடைய மகாதேவர்" எனக் குறிக்கப்படுகிறார்.

 

முந்தைய தலம்<திருப்பூந்துருத்தி

 அடுத்த தலம்>திருச்சோற்றுத்துறை

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சை - திருவையாறு பேருந்துச் சாலையில் உள்ளது. தஞ்சையிலிருந்து 9-கி. மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 3-கி. மீ. தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன. தொடர்பு : 04362 - 261100, 262222

Related Content

Thirukkandiyur veerattaam