logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

பேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்

சீலத்திரு கச்சியப்ப முனிவர் இயற்றிய

படலம் 10 - 18 (628 - 1276)


Perur Puranam of Kachiyappa munivar
part - II / verses 628 - 1276
In tamil script, Unicode/UTF-8 format

சீலத்திரு கச்சியப்ப முனிவர் அருளிய 
"பேரூர்ப் புராணம்" - பாகம் - 2

10. தென்கயிலாயப் படலம்628-702
11. வடகயிலாயப் படலம்703-745
12 நிருத்தப்படலம்746-883
13. அபயப்படலம்884-923
14. மருதவரைப்படலம்924-1070
15. சுமதி கதிபெறு படலம்1071- 1134
16. முசுகுந்தன் முகம்பெறு படலம்1135 -1188
17. இந்திரன் சாபந்தீர்ந்த படலம்1189-1214
18. கரிகாற்சோழன் கொலைப்பழி தீர்ந்த படலம்1215-1276

 

10. தென்கயிலாயப் படலம் (628-702)

628கள்ளிவர் நீல மலர்ந்து விரைத்த கழிச்சூழல்
துள்ளிய வாளை விழுந்து களச்சொரி செந்தேனால்
பள்ளம டைப்பணை பைம்பொழில் சூழ்ந்து பரிந்தோம்பும்
வள்ளிய கீழைச் சிதம்பர மென்றொரு வைப்புண்டால்.
1
629ஆரண மின்னு மளந்திது வென்றறி யாதெய்க்கும்
பூரணன் மேலைச் சிதம்பர வைப்பது போலென்றும்
வாரண வுந்தன மாதுமை காண மகிழ்ந்தாடு
நேரண வுந்தவ ரல்லது காண நிகழ்ந்தானால்.
2
630அத்தகு மாநட னந்தரி சிப்ப வருட்டாதை
உத்தம னேவ வியாக்கிர பாத னுவந்தேகிப்
பத்தியினால்வழி பாடுகள் செய்து பயின்றியோகின்
வைத்த கருத்தொடு வைகினன் வைகிய காலத்து
3
631தாரு வனத்தினர் கொள்கை தெரிந்து தடுத்தாள
வாரு மதிக்கணி யுஞ்சடை வேய்ந்தழ லூடாடுங்
காரு மலைத்த களத்தர் பயிக்க வுருக்கொண்டார்
வாரு மலைத்தெழு பூண்முலை மாதுரு மால்கொண்டான்.
4
632வழிய தாரு வனத்திடை மற்றிரு வோருஞ்சென்
றாழியி னான்முனி வோர்நிறை சிந்த வருட்செல்வன்
தாழிரு ளோதியி னார்நிறை கொண்டு தவத்தோர்கள்
பாழிய னைத்து மறுத்தவ ணாடல் பயின்றானே.
5
633ஆங்குட னின்றரு ளாடல் வணங்கிய மாலன்று
வீங்கிய வல்லிரு ணீங்கிய காலை விழிக்கின்றான்
பூங்கணு கப்புனன் மெய்முழு தும்புள கம்போர்ப்பத்
தாங்கிய வன்பொடு சங்கர சங்கர வென்றார்த்தான்.
6
634அச்சுத கந்த னினுங்குளிர் சேட னடுத்தேத்தி
அச்சுத மிட்ட வருச்சியி னான்விழி யான்முன்னாள்
அச்சுதன் வெந்தவி ஞான்று மயர்த்திலை யிக்காலத் 
தச்சுத வென்கொ லயர்த்தனை யென்று வினாயன்னான்.
7
635மாதவர் சிந்தை மயக்க மறுத்து மகிழ்ந்தாடல்
நாத னவின்றது மற்று முரைப்ப நடங்காண
ஆதர வுற்றருள் பெற்றொளிர் மேரு வடுத்தன்பால்
காதர மோட வருந்தவ முண்டிகை விட்டாற்றி.
8
636
கானமர் கொன்றையி னாரெதிர் போந்து கருத்தோர்ந்து
தேனமர் தில்லை வனம்புகு மாறுசெப் பிப்போத
வான மரத்திரி வாழன சூயை மருங்கன்று 
தானமர் வுற்ற பதஞ்சலி யாய்த்தன தூர்நண்ணி.
9
637சில்பக லங்க ணிருந்து திகழ்ந்த பிலத்தூடு
பல்பக னீங்க விவர்ந்து வியாக்கிர பாதன்சேர்ந்
தல்பக லுந்தொழு தில்லை யடுத்தனை யானீயிங்
கொல்பக னற்பக லென்று களிப்ப வுடங்கண்மி.
10
638பொன்னொடு பூசம் வரக்கதி ரோனடு வான்புல்ல
மின்னொளிர் மன்றின் விளங்கிழை காண விடைப்பாகன்
நன்னட மாட நயந்து பணிந்து நலங்கொண்டு
மன்னி யிருந்தன னாடொறு மாடன் மகிழ்ந்தேத்தி.
11
639வேறு
ஆய காலை யாழிப் பாயலான்
போய சேடன் புரிவ தென்னெனத்
தூய நெஞ்சிற் சூழு மெல்லையின்
மேய வீணை முனிவன் விள்ளுவான்.
12
640மேரு மாட்டு மேவி மாதவ 
மாரு மாற்றற் கரிய தாற்றினான்
ஓரு மீச னுருவு வேறுகொண்
டீரு னார்வ மென்று பேதித்தான்.
13
641உறுதி நோக்கி யுமையொர் பாகனாய்
மறுவி லாத வாய்மை கூறுபு
நிறுவு தில்லை நிருத்தங் காட்டிடச்
சிறுமை நீங்கிச் சேவை செய்யுமால்.
14
642இனைய வண்ண மியம்ப நாரதன்
வனைது ழாயின் மௌளலி வானவன்
அனைய னாயி னான்கொல் சேடனென்
றனையன் னான தருளை முன்னினான்.
15
643ஈங்கி ருந்திட் டென்னை யெய்தினேன்
ஆங்க வன்ற னோட டுத்துநான்
பாங்கி னோற்பிற் பரத மற்றெனை
நீங்க வீச னிகழ்த்து மேகொலாம்.
16
644ஏற தாக வேறி னானுருக்
கூறு மாகக் கொள்ள கில்லனோ
ஆறு சூடி யாடல் காண்பலென்
றூறு மன்பி னொய்யென் றேகினான்.
17
645வேறு
பொற்கோட் டிமய வரைப்புறத்துப் பொலிந்த கயிலை வரையடுத்துச்
சொற்கோட் டமுமெள வியவுளமுந் துறந்த வடியார் தொழுமேரு
விற்கோட் டியகைப் பெருமானை விரையார் மலர்தூஉய் மணியிமைக்குங்
கற்கோட் டிமிலேற் றின்னிரைகள் காப்ப வெடுத்தோ னிறைஞ்சினான்,
18
646வேறு
எழுந்துவலம் வந்தன னிருந்துதி விளைத்தான்
கொழுந்துமதி வேய்ந்தகுழ காகுறு வார்கட்
கழுந்துபடு வன்பிறவி யாழிகரை யேற்ற
முழுந்துருளு முன்னுதவு மும்பர்பெரு மானே.
19
647வீமதிரி யம்பக விடங்கமல நாச
வாமமக லாதவுமை மாதுமண வாள
தாமமணி வேணிசசி கண்டவிட முண்ட
சேமமணி கண்டசிவ லோகவடி போற்றி.
20
648புராதன நிராமய புரங்கள்பொடி செய்த
தராதல நெடுஞ்சகட சங்கர சயம்பு
கராசல வுரிக்கவய கச்சப வுரத்த
அராவணி புயத்தவடி கேளடிகள் போற்றி.
21
649வாதுபுரி காளியை வணக்கிய நடத்த
தீதுபுரி சண்டனுயிர் செற்றதிறா லாள
போதுபுரி கொன்றைபுனல் புல்லறுகு வன்னை
தாதுபுரி மத்தமிலை யுந்தலைவ போற்றி
22
650வேறு
ஒருமுறை போற்றி யொன்ப தோடொரு முறைமை போற்றி
தருசத முறைமை போற்றி சகத்திர முறைமை போற்றி
வருமுறை யயுத நூறா யிரமுறை மலர்த்தாள் போற்றி
குருபர கோடி கோடி கோடியி னளவும் போற்றி. .
23
651ஐயபொற் சடிலம் போற்றி யருள்பொழி கடைக்கண் போற்றி
செய்யபங் கயங்கள் வென்ற திருமுகப் பொலிவு போற்றி
பையர விணையாக் கொண்ட படர்செவிக் குழைகள் போற்றி
கையமர் படைகள் போற்றி காலினூ புரங்கள் போற்றி.
24
652வரிப்புறத் தும்பி பாடு மதுமலர்க் கொன்றை மாலை
எரிப்புறங் கண்ட வேணி யிசைத்தவ நின்முன் போற்றி
வெரிப்புறம் போற்றி பக்க மேலொடு கீழும் போற்றி
தெரிப்புறக் கொண்ட கோலத் திறமெலாம் போற்றி யென்னா.
25
653
துதிபல விளைத்துத் தானைத் தொக்கிரு காலு ளாக்கி
விதியுளி குடந்தம் பட்ட விண்டுவை யிறைவன் கூவி
முதிருமன் புடையை யென்னா முதுகிடைக் கொம்மை கொட்டி
மதியிடை வேட்ட தென்னே வழங்கென வழங்கு மாயன்.
26
654கண்ணடி மிளிரக் கொண்டாய் கங்காளந் தோளிற் கொண்டாய்
வண்ணவென் பிறப்பிற் கோடு மருப்புரி பலவுங் கொண்டாய்
பெண்ணென வணைத்துக் கொண்டாய் பேமதிற் கணையாக் கொண்டாய்
திண்ணிய விமிலே றாகத் திருவுள மகிழ்ந்து கொண்டாய்.
27
655முழுதுல களிக்கு மாற்றன் முன்னெனக் கீந்தாய் பின்னர்
விழுமிய படைக ளீந்தாய் வியத்தகு புதல்வ ரீந்தாய்
கழுமணி யனைய மெய்யிற் காமரு வலப்பா லீந்தாய்
வழுவுறு முனிவர் தாரு வனத்திடை நடன மீந்தாய்.
28
656நின்னருட் கிலக்க மாக நின்மல நீயிவ் வாறென்
தன்னையு மடிமை கொண்ட தாயத்தாற் புலியும் பாம்பும்
நன்னல மெய்தத் தில்லை நகர்வயிற் குயிற்றா நின்ற
மன்னரு ணடமு மின்னே வழங்குவா யென்று போந்தேன்.
29
657அருந்தவம் பெரிது மாற்று மடுபுலித் தாள னோடும்
வருந்திமெய் யரிதி னோற்ற வாளராத் தலைவ னோடும் 
இருந்துநின் னடனம் போற்ற விருந்தவஞ் செய்தே னல்லேன்
திருந்திய வுலக வாழ்விற் சிக்கயாப் புண்டே னெந்தாய்.
30
658ஒருவர்தம் பொருட்டு மேலை யுஞற்றுத லுளதே லன்று
திருநடங் காண்பே னென்னிற் சிந்தையு மமைந்த தில்லை
மருவிய வுடல முன்னே மாய்தலு முளதா மற்றால்
பொருவிலி நடனங் காட்டப் புரிதக வென்று தாழ்ந்தான்.
31
659அருள்பொழி முறுவல் சற்றே யரும்பியா லால மாந்தி
இருள்பொழி மிடற்றுத் தேவன் வெயில்பொழி திகிரி யேவி
மருள்பொழி சிஞ்சு மாரம் வெளவிய வும்பல் காத்தோன்
தெருள்பொழி யுள்ளத் தார்வந் திருவுளஞ் செய்து சாற்றும்.
32
660வேறு
பதஞ்சலி வியாக்கிர பாத ரென்பவர்
இதஞ்சலி யாதுசெய் திடவ வர்க்குநாம்
சிதம்பர நகர்வயிற் செய்யுந் தாண்டவம்
சுதந்திர மாக்கினாம் பிறர்க்குத் துச்சிலாம்.
33
661மனைபடைக் கலமணி வாக னங்களாய்க்
கனைகதி ரெமதுருக் கலப்பு மாகிய
நினையவ ணாடக நிகழ்த்திக் காட்டுறின்
முனைவனா நமக்கது முறைமை யன்றுகாண்.
34
662குணதிசைச் சிதம்பரங் குடவ ளைக்கையாய்
மணமலி தில்லையங் கான மாதவந்
திணிதரு குடதிசைச் சிதம்ப ரந்தவர்
அணிபுரிந் திறைஞ்சிச்சூ ழச்சு வத்தகான்.
35
663தெள்ளொளிக் கனகமன் றிணர்த்த தில்லையுள்
ஒள்ளிய நமதரு ளுருவின் வண்ணமாம்
வெள்ளியம் பலம்விரி போதிக்காட்டினுள்
வள்ளிய வெமதுரு வண்ண மாகுமால்.
36
664அல்லதூஉ மெவற்றினு மதிக நீரது
நல்லொளி நமதுபா லத்து நண்ணுபு
வில்லுடைக் காமனை விளிப்ப மேக்குநீண்
டெல்லுமிழ் விழிவிழித் திடமண் வீழ்ந்ததே.
37
665வீழ்ந்தது வெள்ளியாய் விளைந்த தாதலின்
போழ்ந்திருள் பொரித்தொளிர் மணிபொன் னேனவுந்
தாழ்ந்தன மேன்மையிற் றகவு யர்ந்ததாற்
சூழ்ந்தவ ருள்ளமுந் துலக்கும் வெள்ளியே.
38
666மணிவரை பொன்வரை மண்ணி யிருந்துநாந்
தணிவறு காதலிற் றவள வெள்ளிவெற்
பணிவளர் கோயில்கொண் டமர்ந்த வண்ணமுந்
துணிவுறு மதனுடைத் தூய்மைத் தோற்றத்தால்.
39
667அரதன மன்றினு மம்பொன் மன்றினும்
விரவிய மகிழ்வினு மகிழ்ச்சி மிக்கதாம்
இரசத மன்றின்மற் றெமக்கெஞ் ஞான்றுமே
புரவுகொண் டயன்றனைப் பூத்த வுந்தியோய்.
40
668அடிமையர் பலருளு மன்பு மிக்குறும்
அடிமையை யாதலி னவரெ லாரினும்
நெடியவ வுரிமையை நினக்கெ னக்குறி
நெடிதுசெ யதனிடை நிருத்தங் காட்டுதும்.
41
669வாதுசெய் தூர்த்ததாண் டவத்தின் வார்முலை
மீதுகண் ணுறத்தலை வெள்கிச் சாய்த்தவள்
கோதுகு மாநந்த நடமுங் கும்பிடத்
தீதுகு மாதவஞ் செய்தி ருக்குமால்.
42
670மூலவன் மலமற முருக்கி முத்திசேர்
காலவ முனிவனுங் காமர் நாடக
மேலவங் கினிதுறக் காணு மிச்சையிற்
சாலவன் பியற்றுபு தங்கிப் போற்றுமால்.
43
671வேறு
இலங்குவிராட் புருடனுக்குக் குணதிசையிற் சிதம்பரந்தா னிதய மாகும்
நலங்கிளருங் குடதிசையிற் சிதம்பரநா ரணனயனாங் கிழமை பூண்ட
துலங்கிடைப்பிங் கலைசுழுனை மூன்றுமரி யயன்வரைகள் சுடரும் வெள்ளிப்
புலங்கிளர்நம் வரைமூன்று மாய்விந்துத் தானமெனப் பொலிந்த தாகும்.
44
672அன்னவிராட் புருடனுக்கங் கனவரத தாண்டவநா மாடிக் காட்டுந்
தன்மையினா லெந்நாளு மிடையறா தொளிர்நாதந் தழங்கா நிற்கும்
மன்னியமா தவர்கேட்பர் கேட்டவர்க்கு மாறாத வறிவா னந்தம்
பன்னரிய முதன்மையுநித் தியமுமுறும் விகாரமுதற் பலவும் நீங்கும்
45
673அவ்வரைப்பி னெமைவழிபட் டசும்புமொளி யிரசதவம் பலத்தி னாடல்
செவ்விபெறத் தரிசித்தோர் விந்துநா தந்தவிரத் திகழு ஞானத்
தெவ்வமலி மலமூன்று மிரியவுயர் சிவபோக மினிது துய்ப்பர்
இவ்வரநம் வரைமேலு மிரசதவம் பலங்காண்போ ரெய்து வாரால்
46
674மருத்துளரு மத்தகைய தென்கயிலை நமதுருவாய் வயங்கு மாற்றால்
உருத்திரவெற் பெனும்பெயரு முறும்யோக வரையெனவு முரைப்பர் சான்றோர்
திருத்தமுற நடம்பயின்று தெரித்துநடம் பயிற்றுவோர் செத்தெல் லோரும்
கருத்தடங்கும் யோகுழப்ப நாமிருந்து தனியோகங் கைக்கொண் மாண்பால்.
47
675விண்ணவரிற் சாத்தியரின் விஞ்சையரிற் கருடரிற்காந் தருவர் தம்மின்
மண்ணவரிற் பலரங்கண் யோகுழந்து நற்கதியை மருவி னோர்கள்
திண்ணமுற விப்பொழுதும் யோகுழப்போர் தமையெண்ணிற் றெரிக்கொணாதால்
வண்ணமுறு மதன்பெருமை தெரிக்கலுறின் வானவர்க்கும் வாழ்நாள்போதா.
48
676ஆவயிற்சென் றெமைப்பூசை புரிந்தமரர் சுரபியுரித் தாத லானுங்
கோவடிவின் வருமைந்துங் கொண்டெமது முடிக்காட்டுங் கொள்கை யானுந்
தூவடிவி னானுருவாய்த் தோற்றியற மெமைப்பரிக்குந் தொடர்பி னானுந்
தேவரனை வருமுறுப்பிற் செறிந்தபசு நமக்குவகை செய்வ தாகும்.
49
677நீயுமொரு கோமுனியா யாங்கடுத்து நமைப்பூசை நிகழ்த்து கண்டாய்
மாயிருவை யகம்வியப்பப் பொன்னுமிர வியுமீன மருவா நின்ற
வேயுமொளிப் பூரணையுத் திரமாதி வாரமிவை யியைந்த வேலைப்
பாயுமொளி யிரசதவம் பலத்தாடல் புரிதுமினிப் படர்க வென்றான்.
50
678வேறு
குறைமதி முடியினர் குறைதப
அறைதலு மறைகழ லடிமலர்
நிறைமதி நெடியவ னேருற
முறைமுறை தொழுதனன் முன்னுவான்.
51
679பூமுனி யாதுறை பொற்புடை
மாமுனி வருமறு மாற்றினான்
ஏமுனி முதலவி கந்தனன்
கோமுனி யெனவுருக் கொண்டனன்
52
680பொற்கலை பூமி படுத்தனன்
வற்கலை மான வுடுத்தனன்
விற்கலின் மோலி விடுத்தனன்
அற்கலில் வேணி யடுத்தனன்
53
681விரையொடு சாந்தம் வெறுத்தனன்
புரைதபு பூதி பொருத்தனன்
உரைகல னாதி யொறுத்தனன்
சுரைபடு மக்கந் துறுத்தனன்.
54
682அந்தியி னருண்மனு விண்டனன்
குந்திய நடையடிக் கொண்டனன்
கந்தியல் கயிலைமுன் கண்டனன்
உந்திய வொலிசெவி யுண்டனன்.
55
683பரவிய வரைவளம் பார்த்தனன்
அரகர கரவென வார்த்தனன்
விரவிய புளகமெய் போர்த்தனன்
சிரமிரு கைத்தலஞ் சேர்த்தனன்
56
684தண்டென வடிவரை தாழ்ந்தனன்
தொண்டுசெய் முறைபல சூழ்ந்தனன்
மண்டிய வன்பிடை வாழ்ந்தனன்
விண்டுவி னெஃகுதல் வீழ்ந்தனன்
57
685வேறு
வருடையு மரைகளும் வழுவையு முழுவையும்
எருமையு முளியமு மெறுழியுங் கவயமும்
அரிணமும் புருடவன் மிருகமு மரிகளும்
வெருண்மகண் மிருகமு மிடைசரி யொழுகினன்.
58
686வருக்கையுங் கதலியும் வகுளமு மகருவுந்
துருக்கமுந் திமிசுந்திந் திருணியுங் குடசமு
முருக்கரை திலகமுந் திரிகைகுங் கிலியமும்
நெருக்கிய சிறுநெறி நெடியவ னொழுனன்.
59
687வெள்ளிலுஞ் சுள்ளியும் வில்லமு மில்லமும்
கள்ளிவ ராண்களுங் கதமறு வேங்கையு
மள்ளிலை யாரமு மலர்சொரி நாகமும்
நள்ளிணர்ப் பொழில்பல நடைவயி னொருவினன்
60
688வஞ்சியர் நெஞ்சிவர் மஞ்சளு மிஞ்சியும்
வஞ்சியுந் துஞ்சில வஞ்சில ழிஞ்சிலும்
வஞ்சுள முஞ்செறி மஞ்சிவர் பஞ்சர
வஞ்சமும் விஞ்சவ ருஞ்சலங் கொஞ்சினன்.
61
689வேறு
விண்ணோங்கிய பணைநின்றுகு வெண்ணித்தில மணியும்
பண்ணோங்கிய வரிவண்டுளர் பனிமென்மல ரினமும்
தண்ணோங்கிய திரையிற்கொடு தள்ளித்தவ வுரறி
மண்ணோங்கிய தவழ்காஞ்சியை மகிழ்ந்தானதிற் படிந்தான்.
62
690பனிநீர்மலர் விரைமென்கனி பலவுங்கர மருவிக்
கனிநீர்மையி னுளமென்புகள் கரையப்புணர் விழியின்
நனிநீர்மணி மருமத்துக நகநீண்முடி யேறித்
தனிநீர்மையி னகலத்தலை வனதாண்மலர் தாழ்ந்தான்.
63
691கண்ணார்தரு மணியைத்தவர் கருதுஞ்சுட ரொளியைப்
பண்ணார்தரு பயனைக்கனி பழனார்தரு சுவையைத்
தண்ணார்புன னிழலொத்தமர் தமியேன்பெரு வாழ்வை
விண்ணார்தரு மமிழ்தத்தினை விதியால்வழி பட்டான்.
64
692அமையாவுள மலமந்தவ ணரிதிற்பெயர் கிற்ப
உமையாளையும் வழிபட்டவ ணொழிவுற்றுயர் சாரல்
எமையாளவு மிமையோர்தொழ விறைவீற்றிருந் தருள்வார்
தமையாலய முள்ளெய்துபு தாழ்ந்தான்விடை கொண்டான்.
65
693அடர்வெள்ளியின் வேய்ந்தொள்ளொளி யசும்பித்தனி விசும்பின்
இடமல்கிய பலவைப்பியு மெழில்வெண்ணிற மாக்கு
நடமல்கிய வருண்மன்றமு நயனத்தெதிர் காணாத்
தொடர்மல்கிய வன்பாற்றொழு தெழுந்தான்மலை யிழிந்தான்.
66
694வேறு
மாதிக் கானை தாங்கிய மண்ணுண் டவன்மாசு
மோதிக் காம முற்றருள் காஞ்சி முதுகூலஞ்
சோதிக் கான வன்பு துளும்பத் தொடர்வுற்றுப்
67
67
695மாதவ ரானும் வானவ ரானு மண்ணானு
மீதவன் வண்ண மென்னவோ ணாத விறைமுன்னர்ச்
சீதர னென்னுங் கோமுனி சென்று திருவார்ந்த
பாத மிறைஞ்சிப் பன்முறை சூழ்ந்து பரிவுற்றான்.
68
696துஞ்சுத லோடு முண்டி விடுத்துத் தொழுமந்நாள்
எஞ்சிய காலைச் செய்கடன் முற்று மினிதாற்றி
இஞ்சிகள் சூழ்ந்த வெம்பெரு மான்கோ யிலின்மாடே
நெஞ்சுறு மன்பாற் றென்கயி லாய நிருமித்தான்.
69
697தென்கயி லாய மிருத்துமி லிங்கச் சிவனாரை
நன்கருள் சக்கர தீர்த்த மெனப்புவி நாடத்தான்
தன்கயி னாங்கொரு தீர்த்தம கழ்ந்தத் தடநீரால்
என்கட னாட்டுத னின்கடனாடுத லென்றாட்டி.
70
698தூசவிர் சாந்தந் தூமணி யாரஞ் சுடர்மோலி
வாசநன் மாலை மற்று மணிந்து மறையோதி
ஆசக லாறு தீஞ்சுவை யுண்டி யயில்வித்துத்
தேசவிர் தீப மாதி யளித்துச் சேவித்தான்.
71
699இன்னண நிச்சந் தென்கயி லாய மினிதேத்தி
முன்னவ னாதி லிங்கமு மேத்தி முதிர்யோகந்
தன்னினிலை கண்ட காலவ னோடுந் தவமாற்றி
மன்னிய வெள்ளி மன்றும் வணங்கி வதிவுற்றான்.
72
700கோமுனி பூசை கொண்டவர் தென்கயி லாயத்தைத்
தாமுறை யேத்துந் தன்மையர் செல்வந் தகவாழ்ந்திங்
கேமுறு மின்ன லெய்துத லின்றி யிமையாருங்
காமுறு நன்சிவ லோக மணைந்து களிகூர்வார்.
73
701நன்கயி லாய நன்னகர் முற்று நடுவைகுங்
கொன்கயி லாய மாதிலிங் கத்தின் குடியென்று
தென்கயி லாய மென்றுறு மாறுந் திருமார்பன்
தன்கயி லாயக் கோயிலுக் கிட்டான் றனிநாமம்.
74
702மாதவர் கல்லி னாக்கிய வள்ளன் மகிழ்கூர
மாதவ ரன்பார் தென்கயி லாய மிதுவாஞ்சை
மாதவ ரம்பு ளாம்வட பாலிற் கயிலாய
மாதவர் கேண்மி னென்று வலித்தான் மகிழ்சூதன்.
75

தென்கயிலாயப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 702
-----------

11. வடகயிலாயப் படலம் (703-745)

703கொம்பே ரிடையாள் குடிகொண் மார்பன்
வம்பார் தருபோ திவனம் வைகி
நம்பா நடனந் தருக வென்னாப்
பம்பா தரவிற் பணியு நாளில்.
1
704வண்டா மரைமா மலரி ருக்கை
கொண்டா னிடையே குறுகி மொய்த்த
மிண்டா கியநித் திரைவி டுத்தான்
கண்டான் கழுவிச் சுசிமு டித்தான்.
2
705முன்போ லுலகாக் குதன்மு யன்றான்
என்பார் மருமத் தவனி சைத்த
வன்பார் மறையின் முறைம றப்பால்
தன்பா லத்சார் விலது கண்டான்
3
706அந்தோ விதுவோ செயவ னந்தல்
வந்தோ வியதென் றுளம தித்து
நொந்தான் றொழினோன் மைகொள முந்தைத்
தந்தா னவனே சரண மென்றான்
4
707எழுந்தா னிடையிற் கயிலை நண்ணிக்
கொழுந்தோ டியவன் பினுளங் கொண்டு
விழுந்தான் விமலே சர்சரண் மீது
தொழுந்தோ றவர்தூ முறுவல் கொண்டார்
5
708சோகாந் தனையென் னிதுசொல் லென்று
மாகாந் தன்வினா வமலர் வாணிக்
கேகாந் தமதா னவெழி னாவன்
காகாந் தியையென் றுகரை கிற்பான்.
6
709வேறு 
கொடுவினிகொ டனுகரண புவனமொடு போகமிவை கூட்டி டுமுனம்
அடுமல வயிற்றினுறை கின்றதென நித்திரை யகட்டின்மருவிப்
படுமுணர் வயர்ந்துமறை வித்தையு மயர்ந்துபணி யான தொழிலும்
விடுதிபெற வெற்றவுடல் போன்றுநினை யேசரண மேவுதல் செய்தேன்.
7
710நல்வினை யியற்றுதலி னோடுகழி தீவினையு நண்ண வடியேன்
தொல்வினை யுடற்கணுறு வித்தபரி சானினது சூழ ருளினால்
ஒல்வினை முதற்றொழி லுஞற்றுநிய திப்பொழுதி னோங்கு துயிலாய்ப்
புல்வினை யடுத்ததெனின் யானஃது போற்றும்வகை புல்லு றுவதோ.
8
711நின்னருளி னாலளிய னேன்பிழை பொறுத்துமறை நீதி யருளி
நன்னருல கந்தமிய னேனினி துயிர்க்கும்வர நல்கு தியென
முன்னவ னடித்தல முடித்தலைக டீட்டிமொழி மாது கணவன்
பன்னரிய வன்பினுள நெக்குருக வின்றுதி பரப்புதல் செய்தான்.
9
712இந்திரனு நந்தணி கரத்தவனு மந்தரரு மேனை யவரும்
வந்தடி பணிந்துநனி நொந்தன மிரங்குகென வல்விடமிடுங்
கந்தர விதந்தரு சுதந்திர நிரஞ்சன கரந்தை யறுகு
சந்திர னணிந்தசடி லத்தநினை யன்றுசர ணேது மிலனே.
10
713பராபர புராதன பராவுதல்செ யாருளம்வி ராவுதல் செயா
நிராமய வலாணவ நிராகரண நெஞ்சிடை நிலாவு சரண
விராறனொ டிராறுய ரிராறுசெயி ராகமதி ராத ருள்பவ
தராதல மராதாரு மத்தநினை யன்றுசர ணேது மிலனே.
11
714ஆற்றல்புரி காலனுயிர் மாற்றிவழி பாடுநனை யாற்று சிறுவன்
ஏற்றமிக மேலுலக மேற்றியருள் வாழ்வருளு மேற்றின் முதல்வ
காற்றிரத மாரன்மது வூற்றுகணை யேவவுயிர் காற்று மிறைவ
சாற்றுமறை தோற்றிய சதுர்த்தநினை யன்றுசர ணேதுமிலனே.
12
715சதங்கைசிறு கிண்கிணி தழங்கிட வொதுங்குதளர் மென்ன டையுறும்
பதங்கழியு முன்னடு கதங்கொடிதி மைந்தர்கள் பதங்கள் கழிய
விதங்கழிவி லங்கலு நுணுங்கமறல் கந்தனை யிலங்கி யதச
சதங்கணிப தங்கொள வழங்கிநினை யன்றுசர ணேது மிலனே
13
716அந்திநிற முங்கருக வங்கிநிற முங்கருக வஞ்சு டர்விடுங்
செந்துவர்க ளுங்கருக விந்துவொடு செம்பரிதி தேசு கருகச்
சுந்தரமி குந்ததிரு மேனிவலம் வந்ததொடர் பாற்புற மெனைத்
தந்திடல டாதருளு தந்தைநினை யன்றுசர ணேது மிலனே.
14
717வேறு
என்றி ருந்துதி யியம்பு தாமரை யிருக்கை யானைமுக நோக்குபு
கொன்றை துன்றுசடை யெம்பி ரானினிது கூறு வானுலகர் தாதைகேள்
நன்று நின்விழைவு முற்ற வீண்டுவர நல்கி லேநமது வைப்பதாய்
மன்ற வென்றுநிலை பெற்ற வாதிபுரி யுள்ள தங்கண்மது சூதனன்.
15
718வெள்ளி மன்றினட மாடல் காணவிழை வுற்று நம்மருளி னான்மறை
தெள்ளு கோமுனிவ னாகி நோற்றருள் செறிந்த காலவ னொடுந்தவக்
கள்ள வைம்பொறி கடிந்து பூசனை கடைப்பி டித்துவதி கின்றனன்
நள்ளி யங்கணொரு நீயு மாடனனி காண்டி பின்புவர நல்குதும்.
16
719பட்டி நாதரென வெம்மை நீளுலகு பன்னு கின்றதிமை யார்பசு
ஒட்டி வந்தனை புரிந்த வேதுவினவ் வும்ப ரார்பசுவும் வந்தனை
சட்ட வாற்றியது நீயு றங்கிவிடு தன்மை சென்றமையி னாதலான்
அட்ட திக்கினரு மேத்து பட்டிமுனி யாகி யங்குறுக வென்றனன்.
17
720ஆல மாந்தமல னார்கி ளத்தலு மலர்ந்த தாமரை யலங்கலான்
சால நோற்றதவ மென்கொ லோபெரிய சாமி கொண்டருளு மோர்பெயர்
ஏல யான்றழுவ வென்று வந்தடியி றைஞ்சி யன்புட னெழுந்துயர்
மூல மாமனுந வின்று பட்டிமுனி யாகி யாதிபுர முன்னினான்.
18
721தண்டி னோடுகர கம்பி டித்தகர முந்த யங்குபொடி மேனிமேற்
புண்ட ரந்திகழும் வண்மை யும்பொருவி லக்க மாலைபுரண் மார்பமுந்
தொண்டி னாற்குழைவு கொண்ட வுள்ளம்வெளி தோற்று மாக்கையசை வுந்தகக்
கண்டு கோமுனி களித்துவம் மெனவு கந்த பட்டிமுனி தாழ்ந்தனன்.
19
722இந்த வாறுவர வென்கொ னீயினி தியம்பு கென்னும்வளர் கோமுனிக்
கந்தின் மோகமுற வாக்கு மாற்றலயர் வுற்றி டைக்கயிலை மேவியான்
றந்தை மாலொடு மிருத்தி தாண்டவ மளித்து மென்றுவிடை தந்தனன்
முந்தை மாதவ முதிர்ந்த தென்றுவகை முற்றி யுற்றதிவ ணென்றனன்.
20
723நாயி னுங்கடைய னேனை யும்பெரிய நாய கன்றிரு வுளஞ்செயு
மாயி னுய்ந்தன னெனக்கசிந் தருளை யுன்னி நெக்குருகு கோமுனி
தாயி னும்பரியு மாதி லிங்கமுறை தம்பி ரான்றிருமு னுய்த்தலும்
வாயி னைந்துபத மல்க வந்தனை புரிந்து சூழ்ந்துமறை பாடினான்.
21
724வேறு 
மின்கொண்ட மேரு விலங்கற் சிலைதாங்கிக்
கொன்கொண்ட நொச்சி குமைத்தா ரிவரென்பர் 
கொன்கொண்ட நொச்சி குமைத்தா ரிவராயின்
புன்கன்றின் காலிற் பொதிர்ந்தவா றென்னே
புனிற்று மருப்பிற் புழைபட்டா ரென்னே.
22
725உழக்குஞ் சமர்க்க ணொருவே லரக்கன்
அழக்குன் றடியி னடர்த்தா ரிவரென்பர்
அழக்குன் றடியி னடர்த்தா ரிவராயின்
குழக்கன்றின் காலிற் குழைந்தவா றென்னே
குருத்து மருப்பிற் குழிந்தார்மற் றென்னே.
23
726வள்ளி கணவன் மலிபொடிப்ப வாரிலைவேல்
கொள்ளப் படைத்துக் கொடுத்தா ரிவரென்பர்
கொள்ளப் படைத்துக் கொடுத்தா ரிவராயின்
துள்ளினங் கன்றிற் சுவடுற்றா ரென்னே
தோற்று மருப்பிற் றுளைபட்டா ரென்னே.
24
727வேறு
பீடியல் கன்றி னாமடை யாளப் பெருமானை
மூடிய வன்பாற் பாடிய பட்டி முனியிப்பால்
கூடிய கோலக் கோமுனி கூறு நெறியானே
பாடியல் பூசை யாதிக ளாற்றப் படர்குற்றான்.
25
728பொன்னொடு வெள்ளி வார்கரை யுந்திப் பொருதோடுந்
தன்னிக ரில்லாத் தண்புனற் காஞ்சி நதிதாழ்ந்து
நன்னடம் வல்லே நான்பெறு கென்னா நசையோடும்
பன்னின னாடிச் செய்கடன் முற்றும் படிசெய்தான்.
26
729ஆலவ னத்திற் கொற்றவை கோட்ட மதன்கீழ்சார்
காலவன் பூசை கண்டரு ளீசர் நகர்மேற்பால்
கோலம றாத காஞ்சியின் றென்பாற் குளிர்பன்னீர்
மூலலிங் கத்தி னுத்தர திக்கின் முன்னுற்றான்.
27
730தடவிய வங்கைக் குண்டகை யாங்குத் தரையுள்ளே
இடவிய தீர்த்த மாக விருத்தி யிமையாரும்
வடகயி லாய மென்று துதிப்ப வளரங்கி
அடவியி னாடு மண்ணலை நூலா னமர்வித்தான்.
28
731குண்டிகை வாவித் தண்புன லானுங் குளிரார
மண்டிய காஞ்சி வார்புன லானும் வளர்வேணி
அண்டனை யாட்டி வண்டுப டாத வலர்சாத்தி
உண்டிகள் நல்கி யொளிபிற காட்டி யுவப்பித்தான்.
29
732வடவனம் வாழுங் கொற்றவை பொற்றாண் மகிழ்கூரக்
கடவிய பூசை காதலி னாற்றிக் கதிர்வெள்ளித்
தடவரை யேகிச் சம்புவை யங்குந் தாழ்ந்தன்பால்
சுடர்மணி வெள்ளி யம்பல நோக்கித் தொழுதானால்.
30
733நித்தலு மிவ்வா றாதிபு ரத்து நிமலற்காம்
பத்திகள் செய்து காலவ னோடும் பசுவான
உத்தம னோடும் போதிவ னத்தி னுறைநாளின்
முத்தி யளிக்கும் யாகம் வளர்க்கு முறைபூண்டான்.
31
734வேறு
விண்ணவர் வருகவிஞ் சையர்வருக
புண்ணிய முனிவரர் புகுதகவென்
றெண்ணிய முடங்கலுய்த் தெவ்வெவரும்
நண்ணுற வவர்மகிழ் நலஞ்செய்தான்.
32
735வளமருள் காஞ்சியின் வடபாங்கர்க்
களமறு விலதுகண் ணுறநாடி 
அளமறு பிறவிக ளவையேங்க
உளமுவ கையினுற வுழுவித்தான்
33
736விண்டொடு சாலையும் விதியாற்றால்
குண்டமும் வேதியும் குறித்திட்டுத்
தண்டமும் யூபமுஞ் சமிதைமுதல்
பண்டமுங் குறைவறப் பயில்வித்தான்.
34
737வரமலி வஞ்சுள மர்மீந்த
அரணியின் ஞெலிதழ லதுமூட்டி
இரணிய வுலகலு மெழுதூமம்
பரவிய விருள்செயப் பாவித்தான்.
35
738துடுப்புநெய் முறைமுறை சொரிந்தங்கண்
எடுப்பிய வங்கியி னிசைவித்த
தடுப்பருந் தீஞ்சுவை தகுமுண்டி
மடுப்பவர் மடுப்புற மடுப்பித்தான்.
36
739நல்வகைப் பயன்பிற நாடாமே
பல்வகை வேள்வியும் பரனார்தம்
எல்வகை மலரடி யிணைநாடி
அல்வகை மலமற வாற்றினனால்.
37
740விண்ணவ ரனைவரும் வியப்புற்றார்
மண்ணவ ரனைவரு மகிழ்கூர்ந்தார்
அண்ணலுந் திருவரு ளினரானார்
பண்ணிய முனிவனும் பரிவகன்றான்.
38
741வேறு
அளவிடு சூழ்ச்சி யெல்லை யுயிர்கட் கடாத வறிவான சோதி யமலன்
வளவிய பாத முன்னி மறைநான்கும் வல்ல மறுவென்ற பட்டி முன்வன்
உளமலி யன்பு பொங்க வுலகேத்த வாற்று முயரோம குண்ட நினைவோர்
விளர்தபு காம நல்கு திருநீற்று மேடி தெனநின்று மேன்மை தகுமே.
39
742முண்டக மேலி ருந்த பிரமன் சமைத்த முறையா லவன்பெ யரொடும்
விண்டிடு தீர்த்த மான குண்டிகைத் தீர்த்தமாடி மிளிநீற்று மேட்டி னிதிபோன்
மண்டிய பூதி மெய்யின் வதிவித் தெழுந்து வடபா லடுத்த கயிலை
அண்டனை யன்பி னேத்து மவரே பிறந்த வறிவாள ரல்லர் பிறரே.
40
743வேறு
மாதுக்க மாற்ற விழைவார்கண் மண்ணின் மகிழ்போக மெய்த லுறுவார்
ஏதுக்க ளான பலகொண்டு விண்ணி னிமையார்க ளாதல் விழைவார்
சாதுக்க ளாதல் விழைவாரு மன்பு தழைவுற்ற பட்டி முனிவன்
போதுக்கண் மேவி வழிபட்ட செம்மல் புகலன்றி வேறு முளரோ.
41
744வேறு
ஒலிதழ னாப்ப ணின்று நிறைநீரு முயர்கா னடைந்து முகிறோய்
வலிகெழு குன்றி னுச்சி வதிவுற்று முண்டி வழுவித்தும் வைய முழுதுங்
கலிகெழு சித்தி பெற்று மதியோர்க ளெய்து கதிமுற்று மொன்று பொழுதின்
மலிதக நல்கு மென்ப வழிபாடு செய்யின் வடபா லிருந்த கயிலை.
42
745வடகயி லாய மேய மணிகண்டர் மேன்மை வரைசெய்து செப்ப லரிதே
புடவியி லெய்து மார்வ மருவா தொழிந்த புரைதீர்ந்த நோன்மை யறிவீர்
நடநட ராச னக்க ணொருமூவ ருக்குநயமல்க நல்கு திறன்மற்
றுடலுறு நோய்கண் மாய வுரைசெய்து மென்ன வுயர்சூத னோத லுறுவான்.
43

வடகயிலாயப் படலம் முற்றிற்று.
ஆகத்திருவிருத்தம் -745
---------------------------- 

12 நிருத்தப்படலம் (746-883)

746உரைத்தபரு வத்தினொடு முயர்கணவன் வரவுள்ளித்
தரைத்தலையேக் கறுமடவார் தமைநேர விடைக்கயிலை
வரைத்தலத்துத் தம்பெருமான் வரைந்தநா ளொடுநடமால்
கரைத்தவுளத் திடைநாடி யிருந்தனர்கா லவன்முதலோர்.
1
747இவ்வாறு சிவபூசை யினிதாற்றி யிருக்குநாள்
செவ்வாய்மைக் கோமுனிவன் சிவபெருமா னெம்மன்றும்
ஒவ்வாத விரசதமன் றுளதென்றா னதுகாணும்
அவ்வாய்மை பெற்றிலே னெனவயர்ந்து தியானித்தான்.
2
748அண்ணலார் திருவருளா லசரீரி வாக்கெழுந்து
நண்ணியமுன் னம்பலத்தை நம்பர்மறைத் தருளினார்
திண்ணமுற வவ்வயினீ செய்தொருமன் றதினுங்கள்
பண்ணவன்மெய் யுருவமைத்துப் பணிகவெனப் பணித்ததே.
3
749விண்ணெழுந்த மொழிகேளா விம்மிதனாய்ப் பரவசனாய்
மண்ணிடந்த கோமுனிவன் மாதவத்துக் காலவனைப்
பண்ணரிய பெருந்தவத்துப் பட்டிமுனி யொடும்விளித்துப்
புண்ணியன்மெய்த் திருவருளாற் போந்ததிது வெனமொழிந்தான்.
4
750மன்னுதிரு வருளதுவேல் வாழ்ந்தனம்வாழ்ந் தனமென்று
பன்னியவர் தொழுதாடப் பண்ணவர்க ளுலகாளும்
மன்னவனை வரக்கூவி வயங்கியகோ முனிநுங்கள்
கம்மியனைத் தருகவெனக் காவலனுந் தருவித்தான்.
5
751மன்றுபுரி யிடங்காணார் மயங்கினர்நிற் குங்காலைக்
கொன்றைசடை மிலைத்தபிரான் கோமளவல் லியினகன்று
தொன்றுதொடு நடம்புரியுந் தொல்லையிடங் காட்டுதற்கு
வென்றிமிகுஞ் சித்தனென வேற்றுருக்கொண் டாங்கடுத்தான்.
6
752கோதிலிர சதமன்றங் கோமுனிவன் முயலுற்றான்
சோதிநடங் காண்டுமெனத் துன்னியவா னவரையர்
வேதியரே னையர்பலரும் விம்மிதங்கொண் டகங்களிப்பப்
போதிவனத் திடைச்சித்துப் புரிபாக்குப் புரிவுற்றான்.
7
753வேறு
பருதி வானவன் காலையின் மேக்கெழப் பணிக்கும்
அருவி மால்வரை துரும்பென வளியிடை யலைக்குங்
கருவி மாமழை யின்றியே புனலுறை கஞற்றுந்
தருணர் பாலரா மூத்தவர் தருணராச் சமைக்கும்.
8
754அரவின் வாயிடை யலகடற் சுவையமிழ் தெடுக்குங்
கரளம் வான்சுதை யாகுமா கடைக்கணித் தருளும்
பரவை விண்ணெழுந் தங்கணே பயில்வுறப் பயிற்றுஞ்
சுரர்கண் மாநுடர் மாநுடர் சுரரெனத் தோற்றும். 9
9
755மண்ணு ளேசிவ லோகமும் வருவித்துத் தெரிக்கும்
விண்ணு ளேநர ருலகமு மேவித்து மறைக்குந்
திண்ண மாகிய வசரத்தைச் சரமெனத் திரிக்கும்
வண்ண மாகிய சரத்தினை யசரமா வயக்கும்.
10
756கற்பின் மேதகு மாதருமுளநனி கலங்கப்
பொற்பின் மேதகு மாடவர் தங்களைப் பூக்கும்
வற்பின் மேதகு மாதவர் குழாங்களு மயங்க
அற்பின் மேதகு மரிவையர் பலர்தமை யாக்கும்.
11
757கோடி யிந்திரர் கும்பிடக் கடைக்கணித் தருளுங்
கோடி நான்முகர் கும்பிட முடிவறி தசைக்குங்
கோடி நாரணர் கும்பிடக் குறுநகை காட்டுங்
கோடி ருத்திரர் கும்பிட வருகெனக் கூறும்.
12
758அறையு மாயிர வாயிரந் தருமநூ லமைக்கும்
பொறைகொ ளாயிர வாயிரம் பொருட்டுறை கிளக்குந்
துறைகொ ளாயிர வாயிரங் காமநூ றொகுக்கும்
மறைக ளாயிர வாயிரம் புதியன வகுக்கும்.
13
759எட்டுச் சித்தியும் வல்லவர் முடியினைப் பிரம்பால்
தொட்டுச் தித்திக டொலைத்தவர்க் கறிவின்மை துரக்கும்
எட்டுச் சித்தியுஞ் சிறுமகார் களுமெளி தியற்றத்
தொட்டுச் செங்கையி னீறவர் மெய்யுறத் தூவும்.
14
760சித்திவ் வாறுபல் கோடிகள் விளைத்தலுஞ் சித்துக்
கொத்தெ லாந்தெரிந் தவர்களு மும்பரார் குழுவும்
பித்த ராகிய சித்தனா ரடியிணை பிரியாப்
பித்த ராயினர் பெருகுமா னந்தமுட் டிளைப்ப.
15
761வேறு
மட்டு விரியு நறுந்துளப மறைத்த நிறத்துக் கோமுனியும்
பட்டி முனியுங் காலவனும் பல்லாற் றானு மிவனாரென்
றொட்டி யுணரு முள்ளகமு முணர்ந்து தெளியா வகைமருட்டச்
சட்ட வினாவி யறிதுமெனத் தழைத்த சித்தர் மருங்கணைந்தார்.
16
762படைத்தி யயனு மலையுலகம் பரித்தி யரியு மலையாங்கே
துடைத்தி யரனு மலைமறைப்புச் சூழ்தி தொழுமீ சனுமல்லை
தடைத்த மலநோய் நலியவரு டருதி யைந்து முகனுமலை
கொடுத்தி பலநூன் மாதவர்க்குங் குருவுமலைநீ யாரென்றார்.
17
763முனிவர் வினவ முனிவருக்கு முனியாஞ் சித்த ரிறுக்கின்றார்
துனியில் கேள்வி மாதவத்தீர் தொகுத்து மொழியக் கேண்மினோ
நனிசித் திடையோ ரெவ்வெவரு நாடுமுதன்மைச் சித்தரேம்
இனிய பெயருஞ் சித்தேச ரென்பதாகு மறிமினோ.
18
764காலங் கடந்து வினைகடந்து கருவி யனைத்துங் கடந்துமல
மூலம் கடந்த தன்மையே முழுது முணர்பே ரறிவினேங்
கோலங் கடந்த வுருவினேங் கோலமனைத்துங் குறிக்கொண்டேஞ்
சீலங் கடந்த வறிவினர்க்குச் சேயே மல்லேந் தெளிமினோ.
19
765என்று கிளந்த சித்தேசர்க் கெதிர்கை தொழுது முனிவரர்கள்
வென்ற வினையீர் காலத்தின் விகற்பங் கடந்து முழுதுணர்ந்த
நன்றி யுடையீர் நீராகி னம்பன னடன நவில்கின்ற
மன்றந் தெரிக்க வல்லீரேல் வகுத்த வுரைமெய் யாமென்றார்.
20
766பொம்ம லோதி யிடமறைத்துப் போந்த சித்தர் முறுவலித்துச்
செம்ம லுடையீ ராதலினால் தேவ தேவன் திருமன்ற
நும்மை யறிவித் திடுதுமென நுவன்றா ருய்ந்தோ மெனத்தாழ்ந்தார்
வம்மி னெனக்கொண் டுடன்போந்தார் மணிப்பா துகைக ணிலந்தோய.
21
767ஆதி லிங்கந் தனக்குவட கிழக்கி னெல்லை யடர்வினைகள்
காதி யிருந்த காலவனீச் சரத்துள் மூவ ருருவான
போதி நிழலிற் புக்கருளிப் பொருந்தமன்ற மெழுகவெனச்
சோதி மலரத் திருவாயாற் சொன்னார் மன்ற மெழுந்ததே.
22
768அண்ட முகட்டைப் பொதிர்ப்பனபோ லசும்பு மொளியின் கதிர்நிமிரப்
பிண்ட மான கீழண்டப் பித்தி தொடுத்த வடியினதாய்க்
கொண்ட திசைக ளோரெட்டுங் குறுகி யணிய வாய்க்கிடப்ப
மண்டி யெழுந்த விரசதத்தின் மன்றின் பெருமை வகுப்பாரார்.
23
769பளிக்குச் சிலைத்திண் சுவர்நீடிப் பளிக்குச் சுவர்க்கு ளோவியங்கள்
வெளிக்க ணமரர் நிற்பதுபோல் விளங்கி வெள்ளி மேல்வேய்ந்து
களிக்குஞ் செம்பொன் வரைநிறமுங் கழிக்கும் பைம்பொற் றலமுள்ளால்
துளிக்குங் கிரண வொளிமணிக டுவன்றிச் சுடர்ந்த தெழுமன்றம்
24
770மந்தா ரத்தின் மலர்கற்ப மலர்சந் தான மலர்தாருக்
கொந்தார் மலரா தியிற்செய்த கோதை நவமா மணிமாலை
சிந்தா மணியின் பலகோவை தெய்வ நிதித்தா மரைத்தெரிய
னந்தா வொளிப்பொன் னரிமாலை யுள்ளும் புறம்பு நான்றனவே.
25
771பனிநீ ரளவித் தேன்விராய்ப் பசுந்தா தணவி மான்மதந்தோய்ந்
தினிய புழுகார்ந் துரோசனைசேர்ந் திளகு நறுங்குங் குமச்சாந்தம்
நனியெவ் விடனு மணிந்தைந்து நறிய புகையுந் தவழ்ந்தமண
மனித ருலகும் விண்ணுலகும் வளர்மா திரமுங் கமழ்ந்ததே.
26
772
கையிற் புனையா விசித்திரப்பொற் கலைப்பட் டனைத்தும் விதானித்து
மையி னகன்ற வெழினியுமெல் வளர்கம் பலமும் விரித்திட்டு
நெய்யின் றெரியு மணிவிளக்கு நெய்யுற் றெரியுந் தழல்விளக்கும்
பொய்யின் றொளிர நிரைநிரையிற் பொருத்தி வனப்புப் பொலிந்ததே.
27
773வேறு
மன்றங்க ணெழுந்து விளங்கலு நோக்கி வானோர்
இன்றுய்ந்தன மென்றிணர் மாமலர் மாரி தூர்த்தார்
நன்றிங்கிவர் செய்தி யெனத்துதி நாவி னார
அன்றங்குறு மாதவர் சித்த ரடிக்கண் வீழ்ந்தார்.
28
774அருண்மல்கிய கோமுனி யாதிய ருந்த வத்தோர்
தெருண்மல்கிய சித்த ரடித்தலந் தாழ்ந்து சொல்வார்
இருண்மல்கிய யாங்களு முய்யவிங் குற்று நீரே
பொருண்மல்கிய மன்ற மெடுத்தனிர் போற்றி வாழ்ந்தேம்.
29
775இன்னுந்தமி யேங்கண் மனக்குறை யீங்கொன் றுண்டு
மின்னுந்தழல் போனிறத் தீரது விள்ளக் கேண்மின்
மன்னுஞ்சபை நாயகர் மெய்யுரு வாய்ப்பச் செய்து
கொன்னும்வழி பாடுக ளாற்றல் குறித்து ளேமால்.
30
776சிற்பந்தவி ராதடி கேள்புரி தெய்வ மன்றின்
பொற்பின் றிறனுக் கியையப் புலவோர் கடச்சன்
நற்பங்கயன் மான்முத லோருநன் றாக்க வல்லார்
அற்பங்கவர் சிற்றறி வாளர்களான நீரால்.
31
777முழுதுங்கவர் பேரறி வாட்சியிர் யார்க்கு மூத்தீர்
பழுதொன்றுமி லாதிர் பரம்பரை நூலும் வல்லீர்
தொழுதும்மடி போற்றுதும் யாந்துளங் காமை யந்திப்
பொழுதுதோன்றிய வேணியி னாருரு பொற்பச் செய்யீர்.
32
778என்றாரது கேட்டுயி ருக்குயி ராகி யெங்கும்
நின்றார்திரை கோலுமி னென்றனர் நேர்வ ணங்கிப்
பின்றாழ்சடை மாமுனி வோரது பேணிச் செய்ய
ஒன்றாமுகுர்த் தத்தள வுந்திரை யுள்ளி ருந்தார்.
33
779இரண்டா முகுர்த் தத்தி னிடுந்திரை யோடு சித்தர்
திரண்டாரறி யாமை மறைந்தனர் செய்த வத்தான்
முரண்டாவிய மூவரு மொய்த்தவர் யாரு மாதோ
டரண்டானென வாடும் பிரானுரு வாங்குக் கண்டார்.
34
780மருண்டார்வெருண் டார்வரு சித்தர்நம் வள்ள லென்று
தெருண்டார்வியந் தார்சிவ காமியுந் தானுங் கண்டம்
இருண்டானெதிர் நின்றமை நோக்கிய யாரு மேத்திச்
சுருண்டார்தரு பங்கி முடித்தலை துன்னித் தாழ்ந்தார்.
35
781வேறு
செம்பொன்மால் வரையும் புதுநிறம் படைப்பத் திகழொளி வெள்ளியங் கிரியும்
உம்பரார் பணியும் வெள்ளியம் பலமு முலகுறு சராசர மனைத்தும்
பைம்பொனார் நிறமா யதிசயம் விளைப்பப் படரொளிக் கிரணம்விட் டெறிக்குந்
தம்பிரா னுருவ முனிவர்மூ வருந்தா பித்தருச் சனைசெய முயன்றார்.
36
782உம்பரார் பலருங் கோமுனி யேவ வுய்ந்தன மெனப்பணி முயன்றார்
உம்பரார் தச்ச னாலய நகர மாதிக ளுவப்புறப் புரிந்தார்
உம்பர்கோன் காம தேனுகற் பகமு முறுபொரு டரப்பணித் திட்டான்
உம்பர்கோ னேவ வுலகமா ளரையர் தத்தமக் குறுபணி செய்தார்
37
783வடதிசைத் தலைவ னிரம்புபண் டாரம் வாய்திறந் திருநிதி போதந்
திடனக னகர முழுவது நிறைத்தா னிடிஞ்சில்கள் கரகங்கள் கும்பம்
படரொளி மணியான் மயனிரு மித்தான் பசுங்குசை சமிதைபற் பலவுங்
கடனறி முனிவர் விதியுளி நாடிக் கவர்ந்தரு மறைகரைந் திறுத்தார்.
38
784வானவர்குரவ னாள்வரை யறுத்தான் மகதியாழ் முனிவனா கமத்தின்
ஊனமில் விதியாற் குண்டமொன் பதும்வே திகைகளும் ஒளிபெற
தேனமர் மலய மாதவன் பதிட்டை செய்யுமா சானென வமைந்து
வேனவில் கரத்தோன் முன்வரும் பட்டி விநாயகன் பூசனை முடித்தான்.
39
785அங்குர மமைத்தன் முதல்வினை யனைத்து மாகம விதிப்படி யாற்றி
மங்கல வியங்க ளியம்பவா னவர்கண் மலர்மழை பொழிதர மன்றின்
அங்கண ருருவோ டம்மைதன் னுருவி னமத்தபொற் கும்பநீ ராட்டிப்
பொங்கறு சுவையி னிவேதனம் பிறவும் பொற்புற முற்றுவித் தனனால்.
40
786கன்னிகை செம்பொ னிரசதங் கலைகள் கலனிலம் பரிகரி யிரதம்
அன்னமற் றனைத்து மேற்பவர்க் குதவி யருந்தவக் கோமுனி முதலோர்
பன்னருஞ் சிறப்பிற் றம்பெரு மானைப் படரொளி வெள்ளியம் பலத்துந்
துன்னுறு தினங்க டொறுமறு காலந் துகளறு பூசனை புரிந்தார்.
41
787வேறு
இவ்வகை செல்லு நாளி லெம்பிரா னடனங் காட்டு
மவ்வரு நாளு மண்மைத் தாயதென் றறிந்து முன்னர்ச்
செவ்விய பதிட்டைக் குற்றோ ரனைவருஞ் செல்லா தாங்கண்
எவ்வமில் காலந் தோறு மேத்திவாழ்ந் திருந்தா ராக.
42
788பங்குனி மதியஞ் சாரப் பட்டிமா முனிவன் சென்று
தங்குகோ முனிவன் பாதந் தாழ்ந்திது செப்பி னானால்
நங்களை யாள நம்பர் நடம்புரி நாளு மிந்தத்
திங்களின் வருவ தற்றாற் செய்வதொன் றுண்டு கேண்மோ.
43
789திருவிழா எடுத்து நாதர் திருநட நவிற்று மந்த
ஒருவிழா நாளு மந்தத் துற்றிடு நாள தாக
மருவியா நிற்றன் மாண்பாம் வரதவென் றியம்ப வன்னான்
ஒருவியா மகிழ்ச்சி பொங்க வுவன்றனைத்தழுவிக் கொண்டான்.
44
790பட்டிமா முனிவ விந்தப் பணிசெயத் தக்க தாகும்
இட்டமா முலகுக் கெல்லா மிறைவற்கு மிட்ட மாகும்
முட்டிலா தியற்று கிற்பா முறையுளி யமரர்க் கெல்லாம்
ஒட்டவீங் குறுவ யாவு முஞற்றுமா றியம்பு கென்றான்.
45
791விடைமுகத் தவன்சொற் கேட்டோன் விச்சுவ கன்மற் கூவி
அடையலர் புரங்கள் செற்ற வடிகளார் விழாவுக் கேற்ற
நடைநக மிரத மாதி நலத்தக வாக்கி வைவேற்
படையவ னைங்கைப் புத்தேள் படிவமா தியுஞ்செய் யென்றான்.
46
792மயன்வரு கென்று கூவி வளநக ரால யங்கள்
குயினுழை மாட மற்றுங் கோடணை புரிய வேவி
வயமலி குலிச வேற்கை மன்னவற் கூவி வேட்ட
பயன்மலி பரிசில் யார்க்கும் பண்புறக் கொடுக்க வென்றான்.
47
793அவரவ ராற்றற் கேற்ப வமலனார் பணிக ளேவி
அவரவர் தந்தையான வருந்தவன் விடைமு கத்தோற்
கவரவர் பணியி னிற்ப வறைந்தன னென்று தாழ்ந்தான்
அவரவர் பணிகளாக வனைவரு மாற்றி னாரே
48
794தகட்டுடன் மீனாய் முன்னர்த் தவழ்ந்தகோ முனியு மண்ட
முகட்டையுந் துளைக்கும் வைவேல் முனைவன்சண் டீச னாக
மகட்டிடை யசைத்த பிள்ளை யாதியோ ருருவத் தோடும்
பகட்டெழி லிரத மற்றும் பதிட்டைசெய் தமைத்துக் கொண்டான்.
49
795பங்குனிப் பருவஞ் சேர்முன் பக்கத்தி னிரண்டா நந்தை
தங்குகார்த் திகைநாட் புல்லந் தடங்கொடி யேற்றி மைந்தர்
மங்கையு மருங்கு போத மன்றிடை நடிக்கு மையர்
மங்கல முழங்க வீதி வயினுலாப் போதச் செய்தான்.
50
796வேறு
கொடிநீள் கதலியு முயர்பூ கமுமதி குயின்மே லிவர்தர மலைவித்துக்
கடியார் புகையொளி கனிசந் தனமலர் கவினொன் றியபுன னிறைகும்பம்
படிவே திகையொடு பயில்கா வணநிரை படர்தோ ரணநிரை நிறைவித்த
முடிவா னவர்புகழ் மணிவீ தியினகர் முறையா லிறையவன் வலம்வந்தான்.
51
797கவிகைக் குளிர்நிழல் விரியக் கதிர்பொழி கவரித் திரளிரு புடைதுள்ளச்
சவிவின் மணிவட மொளிர்சுற் றுடையன சாந்தாற் றிகள்பல ததைகிற்ப
அவிர்விண் ணுடுவின தளவுங் குறைபட வடரத் தழனிமிர் தருபந்தங்
குவிமென் முலையவர் நடனத் தொடுமிறை குலவீ தியினகர் வலம்வந்தான்.
52
798விண்ணா டுடையவ ரெதிதூ வியவெயில் விரியும் பலமணி திடர்செய்ய
மண்ணா டுடையவர் பரிவாய் மதகரி வளர்கைத் துளையுமிழ் புனல்வாரித்
தண்ணார் நதியென வொழுகச் சரண்பணி யிமையார் முடியொடு முடிதாக்கித்
திண்ணார் மணிநிறை பொடிபட் டுகவணி திகழ்வீ தியினகர் வலம்வந்தான்.
53
799மணிமொய்த் தொளிவிடு கனகச் சிவிகைதண் மதிமண் டலமெறுழ் வளர்பூதம்
பிணிவிட் டலர்மல ரிரதம் விடைகரி பிறைவந் திறைகொளும் இரதத்தோ
டணிமெத் தியசிறை யன்னம் பரியெழி லமையிந் திரநல்வி மானத்துந்
திணிகட் செவியணி முடியா னொன்பது தினம்வீ தியினகர் வலம்வந்தான்.
54
800ஒன்றோ வியவொரு பஃதென் றுரைபட வுறுநாள் கழியும்வை கறையிஞ்சி
வென்றார் பொறிவலி வென்றார் பணிசெய விரைநீர் முதலபி டேகங்கொண்
டின்றா னடநவில் பொழுதென் றனைவரு மெழுநீர் நதிமுழு கிச்சார்ந்து
நன்றா மொருபஃ தெனுநாட் சபையெதிர் தகைமா மணிசெய்மண் டபநிற்ப.
55
801அரிதா கியபணி புரிகோ முனிமுதன் முனிமூ வருமரு கேநிற்ப
வரிவீ ணையினிசை யுயர்நா ரதமுனி மகிழ்தும் புருவுட னெழுவிப்பத்
திரியா வகைபல தாளங் குறுமுனி திகழா நந்தியு மினிதொத்த
உரிதா முழவுமந் துவுநந் தியுமிரு தலையுங் கரமல ருறுவிப்ப.
56
802வருகந் தருவரு மலியுங் கருடரு மதுரத் துடனிசை பலபாட
ஒருகந் தழிநிலை யருளா லருளென வுறுதா பதரர கரவென்னப்
பெருகந் தரர்சிலர் வளர்சிந் தையின்மறை பெருவா ரிதியொலி படவோத
அருகந் தர்கண்முத லியதுன் மதியரு மருள்கண் டடிதொழ வணைகிற்ப.
57
803ஆகா வென்பவ ரூகூ வென்பவ ரருகுற் றரியமெல் லிசைபாட
ஏகா வென்மரும் யோகா வென்மரு மாகிச் சித்தர்க ளெதிரேத்தக்
காகா வெனவுர கர்கள்பன் மணியொளி கஞலத் திசைதிசை தொழுதாடப்
பாகா மொழியவள் பாகா விடையொரு பாகா வெனவவு ணர்கள்பம்ப.
58
804மன்றா டியகுரு மணியே யடியவர் மதியா டியகளி நறவேபொய்
வென்றார் நுகர்சுவை யமிழ்தே பத்திமை விளைவார் விளைசிவ விளைவேபுன்
கன்றா னெனவுயிர் களின்வைத் தருளிய கனிவே கருணைசெய் கனியேயென்
றொன்றா தரவுட னுரையா விழியிணை யுறைசிந் திடவடி யவர்தாழ.
59
805ஒருபா லுமைதன துருவின் விரவுற வொருகைத் துடியொலி யெழவங்கி
ஒருவா தொருகையி னொளிரக் கவிதர வொருகை யொருகர மமைவெய்த
ஒருதாண் முயலகன் வெரிநிற் பதிவுற வொருதாள் குஞ்சித முறவீசி
ஒருகா ளியின்முகம் விழிநோக் குறமணி யொளிரம் பலநட நவில்கின்றான்.
60
806தழலொத் தவிர்புரி சடையெண் டிசைதட வரவெண் மதியொடு புனறுள்ள
அழகொன் றியகுழை யசையக் குறுநகை யலரப் புருவமு முரிவெய்தச்
சுழல்கட் செவியர விழிவெண் டலைதிணி தோளிற் றுயல்வர வதள்பொங்க
உழல்சில் லரிபயின் மணிநூ புரவொலி யுறழத் திருநட நவில்கின்றான்.
61
807பூதங் களுமுறழ் கரணங் களுமெழு பொறியும் பொறியினுள் ளொளியான
பேதங் களும்வரு காலங் களுமொளி பில்குங் கலைகளு மொளிவிந்து
நாதங் களுமவை தருபோ தங்களு நவில்வே தங்களு மறியாமே
ஏதங் கொளுமுயிர் போதங் கெடவிர சதமன் றிடைநட நவில்கின்றான்.
62
808
அளவா யளவத னளவா யளவத னளவுந் தணிதரு மளவாகி
அளியா யளியத னளியா யளியத னளியுந் தணிதரு மளியாகி
ஒளியா யொளியத னொளியா யொளியத னொளியுந் தணிதரு மொளியாகி
வெளியாய் வெளியதன் வெளியாய் வெளியதன் வெளியின் வெளிநட நடவில்கின்றான்
63
809ஓரா ணவமுத லிருவல் வினைமல மூன்றும் முடன்முத லியநான்கும்
ஆரா வுடலிடை யுறுசாக் கிரமுத லைந்தும் மநுமுதல் வழியாறுஞ்
சாரா வகையெழு ஞானம் பெறவரு டகவெண் ணுநர்பணி யொன்பானுந்
தேரா வருள்பணி பத்துந் திகழ்தரு திகழம் பலநட நவில்கின்றான்.
64
810ஒருபான் றிசைகளு மொன்பா னுருவமு மோரெண் வடிவமு முலகேழும்
மருவா நின்றொளி ராறா தாரமும் வளரைந் தினைகளு மறைநான்குந்
தருமூ வழல்களு மிருமைப் பயனொடு தானா கியவொரு தனிவீடுந்
தெருள்வா ரிஃதல திலையென் றுணர்வுறு திகழம் பலநட நவில்கின்றான்.
65
811அஞ்சக் கரமென வெட்டக் கரமென வாறக் கரமென நான்கென்ன
பிஞ்சக் கரமுத லுருமூன் றெனவளர் பேரக் கரமுதன் மூன்றென்ன
நெஞ்சத் துறநவி லீரக் கரமென நிலையோ ரக்கர மெனநின்ற
செஞ்சொற் றிறமிரு நான்கா கியும்பிற வாயுந் திருநட நவில்கின்றான்.
66
812நகரந் திருவடி மகரம் வயிறெழி னகுதிண் புயம்வக ரஞ்சீர்சால்
சிகரந் திருமுகம் யகரந் திருமுடி சிகரந் துடிகவி தருசெங்கை
வகரம் யகரம தபயந் தருகரம் வளர்தீ நகரநன் மகரங்கீழ்
உகளும் முயலக னொளிர்வா சிகைபிர ணவமா யொருநட நவில்கின்றான்.
67
813தோற்றந் துடிதிதி யபயந் தொலைவெரி தோலா மறைவுநின் றிடுதாளி
னாற்றுங் கழலினல் லருளுந் தகநனி நலிமா யையையுத றிக்கன்ம
நீற்றிக் கருமல மிருவித் திருவரு ணிலையா லுயிர்களை வாங்கிக்கொண்
டாற்றுஞ் சுகவடி வாக்கிப் பதிவுறு மருளம் பலநட நவில்கின்றான்.
68
814அருளோ விலையென மேலா கியவுயி ரருளான் முதன்மைய தாயங்கு
மருளா லருள்புரி தொழில்செய் குவலென மதியுற் றதனையு மொருவிப்போய்ப்
பொருளா கியவரு ளுருவா யதன்முதல் புகலென் றறிதல்செய் தருணின்றுந்
தெருளார் சிவமுடன் விரவிச் சுகமுறு திருவம் பலநட நவில்கின்றான்.
69
815வேறு
சோதி மல்கிய விரசத சபையிற் றுரியத் தேவளர் வல்லியுந் தாமும்
போதி யம்பொழிற் புண்ணிய முதல்வர் பொருந்தி யத்தநா ரீசராய் நடிக்கும்
வேத நூபுர வொலியும்பல் லியமும் விரிக்கு மின்னிசை செவித்துளை நிறைப்ப
ஏத மில்லவ ரனைவருங் கேளா வேங்கி நின்றனர் திருநடங் காணார்.
70
816வெள்ளி யம்பலத் தாட்டயர் முதலே வேத நாடரும் விழுத்துணைப் பொருளே
வள்ளி கேள்வனை யுயிர்த்தமாமணியே வான வர்க்ககறி யாதவா னவனே
புள்ளி மான்கரத் தேந்துவித் தகனே புடைநெ ருங்குபூ தப்படை யானே
தள்ளி யெம்வினை யருணடங் காட்டாய் சங்க ராசய போற்றியென் றிரந்தார்.
71
817விரையத் தாண்டவங் கண்ணுறா மெலிவும் விண்ணெ ழுந்துநீர் சுரந்தமா மேகம்
புரையத் தாண்டவங் காட்டியல் லாது போது றானெனு மகிழ்வுங்கொண் டுள்ளங்
கரையத் தாழ்ந்தவர் மறைப்பினை மாற்றிக் கருணை நோக்கெதிர் வழங்கினார் செய்ய
வரையக் கார்த்தணி யூர்தொறு மிரந்துண் டம்ப லத்துநின் றாட்டயர் முதல்வர்.
72
818ஊன நாடக நவிற்றியெவ் வுயிர்க்கு முறுக ணாணவ வலிகெடுத் தருளி
ஞான நாடக நவிலுமங் கணனார் ஞான நாட்டநன் றருளலு மலம்போய்
மோன மாதவ முனிவரர் மூவ ராதி யோரனை வருமுதிர் நடனத்
தான வானந்தங் கண்களாற் பருகி யறிவு ளேயறி வடங்கியொன் றானார்.
73
819உரையுங் காயமு முணர்வுமெட் டாத ஒருவ ரக்கர மைந்துமே யுறுப்பாய்
விரைநி லாவிய போதிசூழ் வரைப்பின் வெள்ளி யம்பலத் திணர்த்தபூங் கூந்தல் 
வரைய ணங்கொடு மாட்டயர் நடன மணிபொன் வானிதி மனைவியிற் பெரிதும்
பரைதன் பாலராய்ப் பேணுவார்க் குளதோ பவஞ்சி வாநந்தம் பருகுவ தல்லால்.
74
820பகீர தன்பெருந் தவத்தினாற் புவியிற் பரந்த வானதி யகிலமும் படர்ந்து
முகேரெ னக்குடைந் தாடநின் றதுபோன் முதிர்ந்த மாதவ முனிவரே யல்லால்
தகீர் கணீவிரென் றொழித்தல்செய் யாது சார்ந்த வர்க்கெலாஞ் சகசவா ணவநோய் 
உகீரென் றோம்புதாண் டவந்தெரித் தருளு மொருவர் தம்பெருங் கருணையார் தெரிப்பார்.
75
821அகில லோகமு நடுநடுத் திரங்க வன்று வாதுசெய் தூர்த்துவ நடன
முகிலி னேர்மிடற் றிறையவர் காட்ட முகத்து நாட்டங்கண் முதிர்நறுங் களப
நகிலி னாட்டிய காளியுந் தவத்தா னங்கை பார்ப்பதிக் கொப்பநல் லுழுவைத்
துகிலி னார்முக நோக்கிநின் றருளுந் தூய தாண்டவங் கண்டுகொண் டிருந்தாள்.
76
822வேறு
விழிநீருக மெய்யி னுரோம மிகப்பொ டிப்ப
மொழிவாயின் விளங்க வெழாது முழங்க வங்கை
ஒழியாது முகிழ்ப்ப வுஞற்றிய வாடல் கண்டோர்
கழிகூர்மகிழ் வானட மாடுதல் கைக்கொண் டாரால்
77
823அயனாடின னாடின னாரண னாய்ந்த சூலப்
புயனாடின னாடின னீள்புயல் வேணி யீசன்
மயனாடின னாடினன் வானவர் தச்ச னைங்கைக்
கயனாடின னாடின னாறிரு கையி னேந்தல்.
78
824விண்ணோர்முழு தாடினர் விஞ்சைய ராடி னார்கள்
பண்வீணைய ராடினர் பன்னக ராடி னார்கள்
எண்மாதிர ராடின ரெண்மரு மாடி னார்கள்
மண்ணோர்முழு தாடினர் மாதவ ராடி னார்கள்
79
825இருகோடி மருத்துவ ரீரிரண் டோடு நான்கு
வருகோடி வசுக்கள் வரைந்திடு பத்தொ டொன்று
தருகோடி யுருத்திரர் சாரு மிராறு கோடி
அருகாவொளி யாதவர் நால்வரு மாடி னார்கள்.
80
826அறுநான்கினி ராயிர மாமுனி வோர்கள் சித்தர்
உறுசாத்தியர் பூத ரியக்க ருலப்பில் பேயர்
தெறுதானவர் தெவ்வு மரக்கர் வேதாளர் கோள்கள்
எறுழ்நாள்க ளிராசி யுடுக்களு மாட்ட யர்ந்தார்.
81
827மலையாடின வாரிதி யாடின மன்னு மீரேழ்
உலகாடின வோங்கிய வண்ட மனைத்து மாட
விலகாத விராட்புரு டப்பெயர் வேந்து மாடிற்
றிலகீசுர னாடினா டாதவர் யாவ ரம்மா.
82
828வேறு
நிருத்த நாடக நேருறக் காண்டொறுங்
கருத்தின் மிக்க களியா லனைவருந்
திருத்த மாகத்தஞ் சேவடி தூக்கிநின்
றருத்தி கூர்தர வாட்டயர் வேலையில்.
83
829ஐய நாடக மாட்டயர் வேகத்தின் 
ஐயன் மெய்யி லணிந்த வராவினம்
ஐயு ணர்வு மயர்ந்து வருத்தமுற்
றைய வங்க ணுமிழ்ந்தன வாலமே.
84
830அரையி னன்றித் தனாக்கை முழுவதும்
புரிவி னாற்புலித் தோலிறை போர்த்திட்டாங் 
கெரியை வென்றில குந்திரு மேனியின்
வரிக ளாக வழிந்ததவ் வாலமே.
85
831மிண்டு மாலத்தின் வேக முடற்றலுங்
கண்ட நின்ற கடுவெளிக் கொண்டதோ
மண்டு பாப்பணி வாய்விட மோவென
அண்ட ராதி யனைவரு மஞ்சினார்.
86
832இரிந்து ளார்சில ரேங்கின ரோர்சிலர்
பரிந்து காஎன் றிரந்தனர் பற்பலர்
திருந்து நாடகச் செவ்வியின் மாய்தலும்
பொருந்த னன்றென் றிருந்தனர் பற்பலர்.
87
833ஒசிய வுள்ளமங் குள்ளவர் யாவர்க்கும்
பசியுந் தாகமும் பம்பிய தன்னதைக்
கசியு நெஞ்சினர் கண்ணக லாதமர்
நொசியு நுண்ணிடைப் பார்ப்பதி நோக்கினாள்.
88
834வேறு
தனதொரு கூற்றா லன்னபூ ரணியைத் தந்தன ளன்னபூ ரணியும்
வனமுலை யன்னை மலரடி வணங்கி மற்றெனக் கருள்பணி யாவ
தெனவுமை யம்மை யெம்பிரா னடத்துக் கெய்திய வனைவரும் பசியான்
மனமடி வடைந்தா ரன்னநீ வழங்கி வளரெனத் திருவருள் பணித்தாள்.
89
835ஒருகரத் தேந்தும் பாத்திரத் தன்ன மொருகையிற் சராவத்தா னள்ளி
இருள்வளர் கூந்த லன்னபூ ரணியங் கிட்டன ளொருமுறை யதுபொற்
பெருவரை யென்ன வளர்ந்தது கண்டு பெருகிய மகிழ்ச்சியா னெவரும்
மருவினர் முகந்து வாய்மடுத் துண்டு வன்பசி தணிந்தனர் மலிந்தார்.
90
836வரிமுகம் புழுங்கச் சுடரயில் விடுத்த வள்ளிதன் கேள்வனாரிரங்கி
விரைகமழ் வேணீர் வியவரிற் கொணர்ந்து விடுத்தருந் தாகநோய் தணித்தார்
புரையற வுடலின் விரவிய வெப்பம் புழைக்கைநீர் துளிக்குமா றுயிர்த்துத்
தரையிடை யெவருங் குளிர்ப்பமேற் படுத்துத் தந்திமா முகத்தவன் றணித்தான்.
91
837அஞ்சலை யஞ்ச லென்றிரி குநரை யங்கையா லமைத்தனன் வீரன்
எஞ்சலு றாமை யிரிந்தவர் வருகென் றிசைவுறக் கூவினன் வடுகன்
தஞ்சமு றாமை யவரவர்க்கிடங்கள் சமைத்தனன் கேத்திர பாலன்
மஞ்சிவர் நகரங் காவல்செய் தண்டி வருத்தங்கள் வினாயருள் புரிந்தான்.
92
838வேறு
அனைவரு மகிழ்ச்சி கூர்ந்தா ரம்பலத் தாடு மையர்
அனையவர் முகத்தி னோக்கி யருளினா லருளிச் செய்வார்
வனைபுகழ் மன்ற மீதின் வயக்கிய நடன மென்றுங்
கனைகட லுலகில் யாங்கு மொருவர்க்குங் காட்டி லேமால்.
93
839ஞானத்தா னம்மை யன்றி வேறொன்று நாடாச் சிந்தை
மோனத்தா னுயர்ந்த தண்டி மொய்த்தநம் மருளா லென்றும்
வானத்தார் வணங்கக் காவன் மருவுமிம் முத்தி வைப்பின்
மீனத்தாம் விழவு நோக்கி வியந்தனி ராத லாலே.
94
840மும்மல மிரிய விந்த முதிர்சுவை நடனங் காணச்
செம்மலும் பெற்றீ ரின்னுஞ் சிந்தையின் வேட்ட வெல்லாங்
கொம்மென விரைந்து கொண்மி னென்றனர் குவளைக் கண்டர்
தம்மடி வணங்கி யாருந் தனித்தனி வரங்கள் கொள்வார்.
95
841கரமலர் முகிழ்த்துத் தாழ்ந்து காலவ முனிவன் சொல்வன்
அரவக லல்கு லார்த மாசையு நிலனு பொன்னும்
புரவியல் போக முற்றும் புரையெனப் போக்கி யென்னை
வரமலி யடியினீழல் வைத்தனை யேனு மெந்தாய்.
96
842இரவிமுன் விளக்குக் காட்டா தாயினு மிருக்குங் காறும்
விரையு மதனைக் கண்கள் வித்தக மாகு மன்றே
பரருறு பயத்த தாகும் படிவமு மெனக்கற் றாமாற்
கரவுசெய் தருளல் வேண்டுங் கடல்புரை கருணை வாழ்வே.
97
843திருவருள் புரிந்த ஞான்றுஞ் சிறியனே னிரந்தே னீதன்
றருடணங் காட்டிப் பின்ன ரறைந்தவா புரிது மென்னக்
கருணையி னுரைத்தி யின்பக் காமர்நா டகமுங் கண்டேன்
மருள்வள ருடல மின்னே மாற்றுதல் வழக்கே யென்றான்.
98
844புறக்கணி யாத வண்ணம் பூரணன் கடைக்க ணித்தான்
சிறக்கணித் திட்ட யாக்கை தீர்ந்தது முனிவன் வல்லே
மறக்கணித் தடர்ப்ப மேலே வருவினை யின்றி யொன்றாய்
அறக்கணித் தருளு மின்பத் தவசமா யழுந்தி னானே.
99
845கவலையும் பிறவி வேலை கடந்திடுந் தொள்ள மான
தவலரு வெள்ளி மன்றின் றனிநடங் காணும் பேறு
சவலையி லாத சேடன் றன்னினாந் தகைமை யுண்ணிக்
குவலய நிறத்து மேனிக் கோமுனி வியந்து பின்னர்.
100
846கடகரி யுரிவைப் போர்வைக் கண்ணுதல் பாதம்போற்றி
நடனமிவ் வெள்ளி மன்றி னாடொறு மடிய னேற்கும்
உடலிது கழிநாட் காறு முஞற்றுதல் வேண்டு மென்றான்
அடலைகொண் டணிந்த பெம்மா னங்ஙன மாக வென்றான்.
101
847நாகத்தார் மருமத் தண்ண னடனமிங் கெய்தும் பேறு
மோகத்தா னன்றே யென்று மோகத்தாள் பாத முன்னி
மாகத்தார் வியப்ப மைநூற் றனையவார் கூந்தன் மங்கை
பாகத்தான் சரணந் தாழ்ந்து பட்டிமா முனிவன் சொல்வான்.
102
848இத்தலத் திருக்கை யோர்க்கு மித்தலந் தரிசித்தோர்க்கும்
உத்தம நடனங் காணு முறுதவத் தவர்க்கு மீளா
முத்தியை யளிக்க நிற்றி முக்கணா வேட்டு ளார்கட்
கத்தமும் பொருளு மின்பு மிவையுநன் றருளல் வேண்டும்.
103
849அள்ளலம் படுக ரான வணங்கினர் போக வாழ்க்கை
எள்ளிநா னடன மொன்றே கண்டுகொண் டிருத்தல் வேண்டும்
வள்ளலே யென்றி ரந்தான் வரமெலா மளித்து நீண்ட
வெள்ளியம் பலத்து ளாடும் விகிர்தன்மற் றிதுவு நல்கும்.
104
850படைப்பினை வேட்டு நம்பாற் படர்ந்தனை யாத லாலே
இடைப்படும் படைப்போர் கூற்றா னெய்துமுன் னுருவந் தாங்கிக்
கடைப்படா தங்கி ருந்து கடைப்பட வாக்கு நந்தங்
கொடிப்பெரு நடன நாளுங் கும்பிடிவ் வுருவி னீங்கே.
105
851மாயனுந் தொல்லை மேனி வாய்ப்புறக் கொண்டோர் கூற்றாற்
பாயபல் லுயிரை யெல்லாம் பாற்கடல் துயின்று காத்துத்
தூயவிவ் வடிவி னீங்குச் சுடரொளி வெள்ளி மன்றின்
நேயநன் னடன நாளு நியதிகொண் டினிது காண்க.
106
852சூரனா லச்ச மெய்திச் சுரர்கள்வந் தபய மெய்த
வாரநா மளித்துக் காத்து வதிவித்துச் சூர னாவி
ஆரனாண் முலைப்பா லுண்ட வமரனால் விளித்தா மற்றால்
தீரமாங் காஞ்சி வைப்பிற் சிவணுநர்க் கிடும்பை யில்லை.
107
853
பகையினான் மண்ணை தன்னாற் பார்த்திவர் தம்மா னோயால்
தகைசெயு மனுவால் வானோர் தங்களா லவுணர் தம்மான்
மிகைசெயு மரக்க ரானும் விலங்குசெந் துக்க ளானும்
புகையழ லானு மீங்குப் புல்லுநர்க் கச்ச மின்றே.
108
854எந்தமைக் குறித்து நீசெ யெரியழற் குண்டத் தென்றுங்
கந்தவெண் பூதித் தோற்றங் கழிவின்றி வளர்வ தாக
வந்தவெண் பூதி போற்று மவர்களும் வேட்ட தெய்திப்
பந்தமுற் றிரியச் சொன்ன பொருளினாம் பயமுந் தீர்வார்.
109
855ஆனந்த நடன நோக்கி அனைவரு நம்மைப் போல
ஆனந்த முளத்தி னீட வாட்டயர்ந் தனர்க ளன்றே
ஆனந்த மருளு நம்மு னன்னண மாடு வோர்க்கும்
ஆனந்த முறுக வேட்ட பொருள்களு மடுப்ப தாக.
110
856என்றிறை வரங்க ணல்க விட்டகா மியம்வேட் டோரும்
ஒன்றுவேட் டோரு மன்றி னுறுநடம் வேட்டோர் யாரும்
நன்றிசெய் முனிவர் வாங்கு நல்வர நமக்குஞ் சாலு
மன்றவென் றிரந்து வேறு வரங்கொளா தமைதி பெற்றார்.
111
857ஒன்பதோ டேழு கையி னொளிர்படை தாங்கி நம்பன்
மன்பதைக் கிரங்கி யாட மலர்புரை கரங்க ளெட்டின்
மின்படை தாங்கி வாது விளைத்துமுன் னாணி நின்று
பின்பரு ணடனங் கண்ட பெய்வளை வணங்கிக் கூறும்.
112
858தெவ்வரை முருக்குஞ் சூலத் தேவனே போதி சூழ்ந்த 
இவ்வரைப் பிடைநின் றோங்கு மிரசத மன்றி னாயேற்
கொவ்வரு நடனங் காண்டன் முதன்மையை யுறுத்தா யன்றே
எவ்வெவ நாளு மீங்கிம் முதன்மையா னுறுக வென்றான்.
113
859அன்னண மாக வென்றா ரமலனா ரதனைக் கேட்ட
மின்னிழை யுமையாள் காளி மிளிர்முக நோக்கி யாடத்
தன்னுளத் தரும்பு மூடல் புலவியாய் வரந்தா னல்கப்
பின்னது துனியாய் நீடப் பெரிதுமற் றிதனைச் செய்தாள்.
114
860வேறு
நாடகங் காண்டலின் முதன்மை நம்மது
பாடகத் தளிரடிப் பாவை மற்றவள்
பீடுறக் கொள்ளுமே யென்று பிஞ்ஞக
னோடுசெம் பொன்னிக ருருவி னீங்கினாள்.
115
861பரிசனம் பரதங்கண் டிறைஞ்சு மாதவர் 
வரிசைசெ யமுதர்கண் மற்று ளோரையுங்
கரிசிறன் கணங்களாற் காதிக் கொண்டுபோய்ப்
புரிசடைக் கடவுளைப் புலம்பு செய்தனள்.
116
862வாயிலாற் றுனியினை மாற்றி தாதைநற் 
றாயிலா னயமொழி தந்து புல்லுறீஇ
நீயிலா திருத்துமே நிகழ்முக் கோணமெய்க்
கோயிலா யென்றவள் குளிர்ப்பக் கூறுமால்.
117
863பல்வகை மன்றினுட் பத்தர்க் கின்னருள்
நல்வகை மன்றுநல் லனவ வற்றுளுஞ்
சொல்வளர் நஞ்சிறார் தொழுது போற்றிய
எல்வளர் மன்றெமக் கினிய வாகுமால்.
118
864எமதுருத் தோன்றியெஞ் சிறார்க ளாகிய
கமலனு நேமியுங் கழிப்பி வல்வினை
விமலதை யடைந்துமெய் நடனம் போற்றுறுந்
தமரமன் றிதுதக வுயர்ந்த தாயினும்.
119
865ஓங்கிய விராத வோங்கன் மீமிசைத்
தாங்கிய விரசத சபையை நேர்வதன்
றாங்கது பிரமர்நா ரணர ளப்பிலார்
நீங்கிய தொழிலராய்ப் போற்ற நின்றதே.
120
866ஆக்கலு மழித்தலு மாய வூழ்வினை
நீக்கமில் லார்தொழ நின்ற விச்சபை
ஊக்கிய நடமுவள் காண்க வச்சபைத்
தாக்கரு நடனநீ தகவிற் காண்கவே.
121
867இச்சபை நாடகத் தின்று போலெறுழ்ப்
பொச்சமில் காளிதான் போற்று மேல்வையின்
முச்சகந் தொழுதெழு முதல்வி யென்றுநம்
அச்சொடும் விரவியொன் றாதி தாழவே.
122
868என்னநல் வரமுமைக் கினிது நல்கினான்
அன்னமும் பன்றியு மறிவொ ணாதவன்
மின்னிய விரசத வெற்பி னூழியு
மன்னிய விரசத மன்றிற் றோன்றினான்.
123
869எண்ணிலர் பிரமர்க ளெண்ணி னாரணர்
எண்ணில ரிந்திர ரெவரும் போற்றுற
எண்ணில்பல் லியநனி யியம்ப வாடினாள்
எண்ணிலாக் கருணையெம் பிராட்டி காணவே.
124
870முழங்கின துந்துபி முனிவ ரார்த்தனர்
தழங்கின சிலம்பொலி தாள மேங்கின
வழங்கின நரம்பிசை வங்கி யத்திசை
பழங்கணி லெதிரொலி பறம்பு செய்யவே. 5
125
871
ஆடினர் சிலரெதி ராடி யாரணம்
பாடினர் சிலர்மறை பாடி யின்னருள்
கூடினர் சிலரருள் கூடி யானந்த
நீடினர் சிலரிறை நிருத்தம் போற்றினார்.
126
872வரையெலாந் தாண்டவ நாத மல்கிபின்
தரையெலாம் பரத்தலிற் றரையு ளார்சிலர்
உரையெலாங் கடந்தொளி ரொருவன் குன்றினும்
புரையெலாந் தபப்புகுந் தாடல் போற்றினார்.
127
873அன்றுபோ லென்றுமவ் விரண்டு மன்றினும்
மன்றலங் கடுக்கைவார் சடிலத் தெம்பிரான்
நின்றருள் நாடக நிகழ்த்து மாருயிர்க்
கொன்றிய மலப்பிணி யோட்டந் தெய்க்கவே.
128
874இருசபை யிடத்தினு மீண்டு நாதங்கள்
ஒருமுறை செவியுறத் தவமு ஞற்றினோர்க்
கருள்பெற யோகுழந் தாங்குக் கேட்குமப்
பொருவினா தமும்புறக் கணிக்கும் பெற்றித்தே.
129
875மன்றினைச் சேயிடை யிருந்து வாழ்த்தினும்
ஒன்றிய திசையுற நோக்கித் தாழினும்
நன்றெதிர் நோக்கினார் நவிற்றக் கேட்பினும்
அன்றிய காதர மவர்கட் கில்லையே.
130
   
876அற்றைநா ளந்திவந் தணைய வண்ணலார்க்
குற்றபூ சனைநனி யுஞற்றி மாதவர் 
பொற்றவெண் கயிலையம் பொருப்பி லேற்றினார்
கொற்றவீ தியைவலங் கொள்ளச் செய்தனர்.
131
877மன்றிடைத் திருவுரு வரதன் வைகிய
தன்றைவார் கொடிப்படப் பெற்றந் தாழ்த்தினார்
வென்றபூங் கழலடி வேந்த ராதியோர்
நன்றுதம் மிருக்கையை நண்ணி வாழ்ந்தனர்.
132
878பத்திசெய் கோமுனி பட்டி மாமுனி
உத்தம ரிருவரு முறுதங் கூற்றினாற்
கொத்துறு வையகங் குயிற்றிக் காத்தருள்
வித்தக னடந்தொழு நியம மேவினார்.
133
879உலகமுற் றுயிர்த்தரு ளுமையுந் தானுமாய்
அலகில்பல் லுயிர்க்குநல் லறிவு நண்ணுமா
றிலகிய விரசத மன்றி னென்றுநந்
தலைவனைந் தொழினடந் தரநின் றானரோ.
134
880
நாயகன் விழவுநா டகமுங் கண்டுமுன்
பாயமெய்த் தவத்தினர் பலரு முய்ந்தனர்
ஆயவக் கதைபுகன் றடிய னேனுமின்
றேயும்வல் வினைப்பவ மிரித்திட் டுய்ந்துளேன்.
135
881அளவினைக் கடந்தொளி ரமல னாடகத்
தளவினை யென்னறிந் தறைந்து ளேனென்றான்
துளவினை யணிந்தவ ணாய தூமுனி
வளவினை தபுமடி வழுத்துஞ் சூதனே.
136
882உய்ந்தன மடியரே மெழுமைத் தோற்றத்தும்
உய்ந்தன மெனப்பணிந் துறுவர் கூறுவார்
மைந்துடைச் சூரினாம் வானு ளோர்பயஞ்
சிந்திய தென்றுமுன் றெரிக்கப் பட்டதே.
137
883அக்கதை விளங்குமா றருள்வ தென்றனர்
பொக்கமின் முனிவரர் புகறல் கேட்டலுங்
கொக்கிற கணிந்தொரு கோலங் கொண்டருள்
நக்கனை யுளத்துறீஇ நவிலுஞ் சூதனே.
138


நிருத்தப் படலம் முற்றியது.
ஆகத் திருவிருத்தம் - 883
---------

13. அபயப் படலம் (884-923)

884முக்க ணக்கனை மும்மத வேழத்தின்
தொக்க ணிந்த சுருதித்தலைவனை
ம்க்கு வேற்றுமை செய்துவிண் ணோரொடுந்
தக்க யாகஞ் சமைத்தனன் தக்கனே.
1
885மாறு பட்டமை நோக்கிய வள்லலார்
ஏறு பட்ட வெறுழ்வலி வீரனால்
ஊறு பட்டொழி வெய்தவிண் ணோர்மகம்
நீறு பட்டற நிக்கிர கஞ்செய்தார்.
2
886பகைஞ னோடுடன் பட்டதொர் பாதக
மிகைத ணிந்தது வீரன் சவட்டலால்
தகைகொண் டெஞ்சிய பாதகத் தின்பயன்
நுகர்வித் தெநொடிப் பானுளத் தெண்ணினார்.
3
887மாயை பாங்கர்மறுவறு காசிபன்
நேய மாகி நிறையழி காதலில்
தோயமூவரைத் தோற்ரினர் சூரனே
சீய மாமுகன் றரகச் செம்மலே.
4
888மோஅ மாமல மூன்றுமொத் தன்னவர் 
பாக சாதன னெஞ்சம் பதைப்புற 
யாக மாக்க விசாரத் தியற்ரினார்
ஏக நாத னிடைவரம் வாங்கினார்.
5
889எண்மர் வன்மை யிளக்கினர் மாலயன் 
திண்மை முற்ருஞ் சிதைத்தன ரிந்திரன்
கண்ம லர்த்தலை வன்க ணுறுந்தொகை
உண்மை யண்ட மொரானை செலுத்தினார்
6
890தான வர்க்குத் தகைமை பெருக்கினார்
வான வர்க்கு வருத்தந் திருத்தினார்
கான மல்க கற்பக நாடெலாம்
உன மல்க வொலிதழ லூட்டினார்.
7
891இன்ன வாறவரின்னல் விளைத்தலிற்
பன்ன கத்தின் பறைவிழத் தாக்கிய
மன்ன னாதியர் வைகிட மற்றனர்
கன்னி பாஅன் கயிலையைச் சார்ந்தனர்.
8
2வெள்ளி யங்கிரி வித்தக வெங்களை
அள்ளி யுண்ணினல் லாற்கத மாறிலாத்
தொள்லை யுள்லத்துச் சூரனை யஞ்சினேம்
பொள்ளெ னப்புரட் டாயெனத் தாழ்ந்தனர்.
9
893கருடன் றாக்கிய கட்செவி போலவுந் 
தருமன் றாக்கு நரகர் தகையவும்
வெருவு முள்ளத்த ராயவிண் ணோர்க்கெலாங்
கருனை நாதர் கடைக்கணித் தோதுவார்.
10
894தக்க னோடு மகத்திற் றருக்கிய
மிக்க பாவம் விளித்திலி ராதலால்
தொக்க செல்லற் றுலைத்தனி ரிவ்வெலாம்
பக்கு விட்டறப் பன்னுதுங் கேண்மினோ.
11
895வேறு
மாயவனே நின்னாலும் மறையவனே நின்னாலு மலர்க்கண் மெய்யின்
மேயவனே நின்னாலும் விண்னவரே நும்மாலும் விளியா வாற்றல்
ஆயவனை யெவராலு மடர்ப்பரிது நமதுவிழி யழலிற் றோன்றுஞ்
சேயவனை யல்லாது தேவர்கா ளவன்வருநா லளவு நீயிர்
12
896வீங்குபுக ழாதிபுரி யென்றொருவைப் புளததனில் விரவி வாழ்வார்க்
கேங்கலுறு மிடரில்லைப் பிணியில்லைப் பயமில்லை யிலம்பா டில்லை
தேங்கலுறும் புகழுண்டு வலியுண்டு நலமுண்டு தேக முண்டு
தாங்கலுரும் ப்பேரின்ப முளதாகும் தயங்கியவத் தலத்தைச் சார்மின்
13
897ஆவயிற்சென் றடுத்தலொடு மரியபா தகநும்மை யகல்வ தாகு
மாவலியி னவுணர்பிரான் றண்டமுநும் வயினினிமேன் மருவா சூட்டுச்
சேவல்வல முயர்த்தவச்னுஞ் சிறுவரையி னுமக்கிரங்கித் தெவ்வைச் சாடு
மேவலரை வலியழிக்கு மருதவரை யவணுளது வேக வென்றார்.
14
898வேறு
வெள்ள நதியிற் பிள்லை வெண்மதி
தொள்ள மென்ன நள்ளுந் தூமுடி
வள்லல் விள்ள மருத மால்வரை
கொள்ளு மொள்ளல் கூரு கென்றனர்.
15
899சிறகர் வண்டு சென்று வீழ்கலா
நறவ மாலைநாறுந் தோளினார்க்
குறவி னுள்ல மோகை கொள்ளமெய்
அறவன் மேன்மை யறத லுற்றனன்.
16
900முருக னென்னு மொய்கொண் மொய்ம்பினான்
உருகு மன்பர்க் குதவி செய்யவே
பெருகு காமர்ப் பிறங்க லாயினான்
அருகின் வேலு மருத மாயதே.
17
901மருத வண்டு மலர்ப்பொ த்ம்பரின்
மருதம் பாட வாய்ந்த வேள்வரை
மருத நின்ற மறுவில் காடிசியான்
மருத வோங்அ லென்ன மன்னுமே. 8
18
902கால வங்கிக் கடவுள் வேணியிற்
சால வைகுந் தண்பு னனதி
ஞாலம் வ்ண்டு நண்ணும் வேர்வழி
மூலம் வந்து முன்ன் கின்றதே.
19
903வேறு
அத்தகு தீர்த்த வரவினைக் கேட்டோ ரணிவளர் நம்முல குறுவர்
அத்தகு தீர்த்தங் கண்ணுறக் கண்டோ ரழகிய நமதரு கிருப்பர்
அத்தகு தீர்த்தம் படிந்தவர் நந்த மழிவிலாத் திருவுரு வெடுப்பர்
அத்தகு தீர்த்தம் பருகினோர் நந்த மடியிணை நீழல்விட் டகலார்.
20
904மண்ணிகோட் பட்டோர் மண்னையி னகல்வர்
      மகவிலார் மகவினைப் பெறுவர்
கண்ணொளி யிகந்தார் கண்ணொளி படைப்பர்
மண்ணிகோட் பட்டோர் மண்னையி னகல்வர்
      கவினிலார் கவினுருத் திகழ்வர்
பெண்ணல மிழந்தார் பெண்ணல முறுவர்
மண்ணிகோட் பட்டோர் மண்னையி னகல்வர்
      பிணியினர் பிணியில ராவர்
எண்ணிய வரங்கள் எண்ணியாங் கியைவ
மண்ணிகோட் பட்டோர் மண்னையி னகல்வர்
      ரெனைவரு மனையதீர்த் தத்தால்.
21
905கசியிலா ததனைத் தொட்டிடின் வறக்குஞ் சுசிசெயிற் பண்டுபோற் சுரக்குங்
கசிவுறு முள்ளத் தடியவர்க் கெம்பாற் கலப்புறக் கரையழிந் தெழுந்த
வரிபெறு மன்பி னுருப்ப்வை வேனில் வைகிய பொழுதும்வற் றாத
நொசிவறு தீர்த்த மதுதனை மருத தீர்த்தமென் றகிலமு நொடிக்கும்.
22
906ஆங்கத னயலே கன்னிகை தீர்த்த மதனய லேகந்த தீர்த்தம்
ஈங்கிவை மூன்றுந் தென்புறச் சார லிருப்பன வ்டபுறச் சாரல்
ஓங்கிய வனும தீர்த்தமொன் றுளத லுமைமக னிருக்கையின் மேல்பால்
தாங்கிய வுச்சி வரையிடை யுளது சரவணப் பொய்கையென் றொன்று.
23
907அருச்சுன தீர்த்தம் போலவே யுரைத்த தீர்த்தமு மறமுத னான்கும்
வருத்தமொன் றின்றி யளிப்பன வாகும் வைகலு மவ்வரைச்சாரல்
உருத்திகழ் காம தேனுவுற் றுலாவி யுறுபசி யிரிதர மேய்ந்து
மருத்திகழ் தீர்த்தம் பருகிநீள் சோலை மலர்நிழ லயர்வுயிர்ப் பதுவே.
24
908உம்பர்கா ளந்த வரையினைக் கண்டோ ருவப்புறக் கேட்டவர் பணிந்தோர்
வம்புலாங் கடப்பந் தாரினா னாங்கு வதிதரு முருவழி படுவோர்
செம்பொனா திகளாற் றிருப்பணி பிறவுஞ் செய்பவ ரிவரெலாஞ் செயிர்தீர்ந்
திம்பரி னெதிரில் செவரா யும்ப ரின்பெலாங் கைக்கொல்வ ரெளிதின்.
25
909உத்தம மாகி யொளிருநம் முகங்களோரைந்து முமைமுக மொன்றும்
வித்தக மின்றி யவன்முக மாறாய் விளங்கின வாதலா னமரீர்
சத்திய்ஞ் சிவமு மெனநினைந் தயில்வேற் சண்முகன் சரணமே சரணா
அத்தகு வரையி னருந்தவம் புரிமி னவனருள் வழங்குவ னென்றான்.
26
910வேறு
அண்ன லாரருள் செய்தலும்
எண்ண முற்றிய தின்றென
விண்ணு ளார்கள் வியந்தனர்
மண்ணி னேக வலித்தனர்.
27
911விமல னார்விடை பெற்றனர்
கமல வாவி கலந்ததோர்
அமல னாதி புரத்தினைச்
சமல நோயறச் சார்ந்தனர்.
28
912கான்சி மாநதி கண்டனர்
வாஞ்சை யோடும் வணங்கினர்
பான்ச சன்னிய பாணிய
னஞ்சு ராதிப னாதியோர்.
29
913பரந்த தோயம் படிந்தனர்
சுரந்த காத றுளும்பமெய்
நிரந்த ரித்தனர் நீற்றணி
அரந்தை தீர்கட னாற்றினார்.
30
914கோயி லைகுறு குற்றனர்
வாயின் முன்னர் வணங்கினார்
தாயி னுந்தயை யுய்த்தருள்
நாய னாரெதிர் நண்ணினார்.
31
915அமிழ்த லிங்கத்தி னாதியை
அமிழ்த ரானவ ரன்புகொண்
டமிழ்த மெல்லிசை யாற்றுதித்
தமிழ்த வின்னரு ளார்ந்தனர்.
32
916சூர னச்சந் தொலைத்தனர்
வார மன்றும் வனங்கினர்
சாரல் வெள்ளிச் சயிலமேல்
நார வேணியை நண்ணினார். 3
33
917கண்டு கண்கள் கலுழ்ந்தனர்
தண்டெ னத்தரை வீழ்ந்தனர்
கொண்ட வன்பிற் குனித்தனர்
அண்ட காவென் றரற்றினர்.
34
918நல்ல காஞ்சி நதிக்கரை
எல்லை முற்று மிருக்கைகொண்
டொல்லி லிங்க முறத்தழீஇ
வல்ல பூசை வயக்குவார்.
35
919வேறு.
நாரன னொருபாற் பூசை நடத்தின னளின மேய
ஆரண னொருபாற் பூசை யமைத்தன னவிரும் வெள்ளை
வாரன னொருபாற் பூசை வளர்த்தனன் மல்கு வானோர்
சாரண னொருபாற் பூசை சமைத்தனர் தழைத்த வன்பால்.
36
920விஞ்சையர் கருடர் வீணை வித்தகர் யோகர் சித்தர்
அஞ்சையு மடக்கு மாண்மை யருந்தவ முனிவர் யாரு
நெஞ்சிடை யுறுதி யன்பி னிறையொடு வேறுவேறு
தஞ்செய லடங்க வீசன் றனிச்செயற் பூசை செய்தார்.
37
921அவன்வரை யுமையா ளோங்க லவிரொளி வெள்ளி வெற்புப்
புயனிகர் மேனிச் செல்வன் பொருப்புயர் மருதக் குன்றென்
றியலுமைந் தடுக்கன் மாட்டு மிருகம்புனற் றீர்ஹ்ட்தந் தோறும்
வயமரு ளிறைவ னார்த மலரடி பூசித் தாரால்
38
922துவன்றியன் னவர்க ளன்பிற் றொழுஞ்சிவக் குறியு ளொன்றிற்
பவன்றனை நினைந்து போற்ரும் பண்பினர் பகையுந் தேயுங்
கவன்றவுட் பயமுந் தீருங் கதியவர்க் கொல்லை யெய்தும்
புவன்றன தடியி னீழற் பொருவில்வாழ்க் கையுமுண் டாமால்.
39
923விண்னவர்க் கபய நல்கி விமலனா ரச்சந் தீர்த்த
வண்ணமீ தறிமி னென்று மாதவர்க் கியம்பிச் சூதன்
பண்னவர்க் கிரங்கிச் சூரைப் பறந்தலைப் படுத்து மாட்டுந்
திண்ணிய மணிவே லண்ணல் செயலினைத் தொகுக்க லுற்றான்.
40

அபயப் படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் – 923
----------------------

14. மருதவரைப்படலம் (924-1070)

924கருது வார்க்குக் களிதர வல்லது
பொருது வார்க்குப் புயவலி யீவது
சுருதி நீண்முடி போல்வது தூய்மையின்
மருத வோங்கல் வளத்திற் பெரியதே. 1
1
925காம னுக்குநற் கட்டழ குய்ப்பது
நாம கட்குங் கலைநவில் விப்பது
பூம கட்குஞ்செல் வம்புணர் விப்பது
போர்ம கட்கும்வன் போர்த்திறஞ் சேர்ப்பது.
2
926எண்ணு வார்த மிடர்க டவிர்ப்பது
கண்ணிற் கண்டோர் கருத்தி னிருப்பது
விண்ணங் குத்தி மிளிர்ந்த முடியது
பண்ணை வண்டு பயில்பொழி லுள்ளது.
3
927கால காலனுங் காமுற நிற்பது
கோல மானவன் கும்பிடப் பட்டது
ஞால மீன்றவ னாணுறத் தக்கது
வேல னேயுரு வான வியப்பது.
4
928பத்தர் கோமுனி பட்டி முனிவனு
நித்த நித்த நிரந்தரித் துள்ளது
சித்தர் வானவர் திப்பிய மாதவர் 
சுத்த யோகியர் சூழ்ந்த பரப்பது.
5
929எண்மைத் தாய தொழில்சற் றியற்றினும்
வண்மைத் தாக வரும்பய னுய்ப்பது
திண்மைத் தாகிய தீமை பெருக்கினும்
நுண்மைத் தாக நுவலுமுன் மாய்ப்பது.
6
930வாழை மென்கனி மந்திய யின்றுபோய்த்
தாழை தாவச் சடசட வீழ்கனி
கூழை வன்குரக் குக்குலங் கொண்டுகற்
பூழை யூடு புகுதுமொர் பாலெலாம்.
7
931கன்னி காரங் கருத்துணர்ப் பாடலம்
வன்னி கொன்றைமந் தாரங் குராமராப்
புன்னை பிண்டி பொரியரைக் கூவிளம்
மன்னு நந்த வனங்களொர் பாலெலாம்.
8
932
மயிலை மாலதி மல்லிகை பித்திகை
அயின்மு கைத்தள வங்குள விக்குலம்
பயிலு மாதவி பம்பிய சூழலின்
இயலும் வண்டி னிசையொரு பாலெலாம்.
9
933நரந்த மென்கனி நாவலந் தீங்கனி
கரந்து மண்ணுட் கனிபல வின்கனி
நிரந்த முந்திரி கைக்கனி நித்தலுஞ்
சுரந்து வாசஞ் சுலாவுமொர் பாலெலாம்.
10
934ஏல மேயில வங்கங்கச் சோலந்தக்
கோல மாஞ்சியுங் குங்கும முங்கடி
கால நின்ற கருப்புர வாழையும்
ஞாலம் வௌளவநன் றாகுமொர் பாலெலாம்.
11
935நாக நீண்முழை நாகங்கண் டச்சுற
நாக தாளியி னன்கனி பாம்பெனத்
தோகை மஞ்ஞை தொடர்ந்துமுன் கொத்திநின்
றூக மோட வுலைக்குமொர் பாலெலாம்.
12
936சரோரு கங்களு நீலமுந் தங்கிய
பரோடை நீரொடு மட்டை பருகுதோல்
உரோம நீண்மரத் தொண்குழை வாய்மடுத்
தரோக மெய்திய தீர்க்குமொர் பாலெலாம். 3
13
937கனையெ ருமைம ரங்கள் கனைத்தலுங்
கனையெ ருமையெ னக்கதழ் வேங்கையங்
கனைநல் லார்மனு வாற்கட்டப் பட்டன
கனைம லர்ப்பொழில் காட்டுமொர் பாலெலாம்.
14
938காய வாழ்க்கையர் காய மிவையல
மாய மென்கொலிவ் வன்மரம் வைகலுஞ்
சாயை யில்லெனச் சார்ந்த வரையுறச்
சாயை யில்லாத் தருக்களொர் பாலெலாம்.
15
939விடபத் தேறிநின் றார்க்கு விழாக்களுங்
கடக வேழமுங் காமரு தேர்களுந்
தொடர்பி னேனவுந் தோற்றி விடுத்திடி
னடலை யாக்குநற் றாருவொர் பாலெலாம்.
16
940சருகு காய்கனை வௌளவத் தனாதுழை
விரவு வாரை விளாரிற் றணிந்தடித்
தரவிற் சீறிநல் லாவி மடித்திடு
முரனி லாவும ரமொரு பலெலாம்.
17
941
சுவானக் குட்டிக டொக்க வெனப்புக்க
கவான்வ ரைத்தலைக் கண்ட புலிப்பறழ்
சுவானக் குட்டியிற் காய்பல தோற்றிய
சுவானக் குட்டிம ரமொரு பாலெலாம்.
18
942வழுத்தும் வேடம காரின மானுடம்
பழுத்து நிற்பன பார்த்துக் கிலுத்தத்தைக்
குழுக்கொண் டாடநும் பிள்ளையுங் கூட்டுகென்
றொழுக்கத் தோடுமி ரப்பொரு பலெலாம்.
19
943தங்கு லத்துறுந் தையல ராமென
வெங்கு லக்கொடு வில்லினர் பேதையர்
மங்குல் சூழ்வரை யின்மகண் மாவைக்கண்
டிங்கு வம்மின்க ளென்பதொர் பாலெலாம்.
20
944கருட வேகத்திற் காடு சுலாவுநர்
இருடி யாமென்றி றைஞ்சி விடுத்தெழப்
புருட வன்மிரு கம்புழை வைகிய
வருடை யாடும்வ ரையொரு பாலெலாம்.
21
945வேறு
இவ்வாறு பெருவளங்கொண் டேழோ டேழா
மவ்வாய்மை யுலகனைத்து மணைந்து போற்றுஞ்
செவ்வாய்மை மருதவரைத் தேத்துந் தேவர்
ஒவ்வாத பகைமாய்ப்ப்ப வுன்னிச் சார்ந்தார்.
22
946மாலாதி வானவர்தம் வரவு கேளா
ஆலால மனையவினை யகற்றி யங்கு
வேலானை நினைந்திருக்கும் வீணைச் செல்வன்
காலார நடந்தெதிர்போய்க் கண்டு தாழ்ந்தான்.
23
947வருகவரு கெனநெடுமால் வணங்கி னானை
இருகரமு முறத்தழுவி யெடுப்பி யன்பான்
முருகனருட் குரியையென முகமன் கூறி
ஒருவவிது கேட்டியென வுரைக்க லுற்றான்.
24
948ஆயிரங்கண் ணனைவிண்ணி னகற்றி யன்னான்
சேயிரங்கச் சிறைப்படுத்த தீயோ னச்ச
மாயிருந்தண் போதிவனம் வந்து மென்பூத்
தூயிரந்து பரனருளாற் றொலைத்தா மிப்பால்
25
949அழியாத வரம்படைத்த வவுணர் கோனை
வழியோடுங் கெடுத்தெமக்கு வாழ்க்கை நல்க
ஒழியாத வடிமையொரு முருகற் காற்றக்
கழிகாத லொடுமிங்குக் கடிது புக்காம்.
26
950மாழாந்த வெமக்கிரங்கி மணிவே னம்பி
தாழாது வினைமுடிக்கத் தக்க வாய்மை
சூழாவொன் றுரைத்தியெனச் சொன்னான் சொன்ன
ஏழாழி யுலகுண்டோற் கிருடி கூறும்.
27
951வேறு
சிவதருமம் பலவற்றுட் சிறந்ததுபூ சனையதனுள்
அவமில்பல வுபசாரத் தைந்துசிறந் தனவவற்றைத்
தவமலியப் பதினாறு மண்டலந்தண் டாதியற்றிற்
கவலையறப் பயனிம்மைப் பிறப்பிடையே கைகூடும்.
28
952ஆங்கவைதா மபிடேக மரியவிரை விளக்குமனுத்
தாங்குமருச் சனைநிவே தனமாகு மிவைதம்மை
ஓங்கும்வகை யியற்றுவது முரைப்பக்கேண் மந்தரத்தின்
வீங்குதிரைக் கடல்கலக்கி விண்ணவர்க்குச் சுதையளித்தோய்.
29
953பருதிகுணக் கெழுமுன்னர்ப் பன்னிரண்டு புதுச்சாலின்
மருவுபுதுப் புனறுகிலான் வடித்தெடுத்து மணல்பரப்பி
இருவிநிறை தொறுமேல முதலான திரவியங்கள்
பெருகுவிரை மலரொடு பெய்துமனு வாலமைத்து
30
954அரம்பைநெடுங் கனிதிருத்தி யாயிரத்துக் காறுபடி
சுரந்தமடிப் பசுவின்பால் சொரிந்துசெழுந் தேனறுநெய்
பரந்தசுவை யக்கார மிவ்விரண்டு படியட்டி
வரந்தழைபஞ் சாமிரத மணிக்கலத்தி னினிதமைத்து.
31
955பாங்கான பால்செந்தேன் பன்னியமூ வகையிளநீர்
ஆங்கான வைந்தமிழ்த மருவிரைச்சந் தனக்குழம்பும்
ஓங்காரத் துட்பொருளா மொருமுருக னுருவாட்டி
நீங்காமை யிடையிடையே நிறைநீர்சங் கினிலாட்டல் 2
32
956இளநீரை யொருகலத்து மேலாமைத் தனித்தனியே
அளவார வெடுத்தாட்டி னதிகபல னுறுமைந்தும்
உளதான வபிடேகத் துயர்ந்தனவாம் விரையிரண்டாந்
தளராத விலேபனமுந் தயங்குசுகந் தமுமென்ன.
33
957காசில்பனி நீர்பச்சைக் கருப்பூரங் குங்குமப்பூ
மாசிலுரோ சனைபுழுகு மான்மதநா வியுங்கலந்த
வாசிகந்த மலாக்காச்சந் தனமிலே பனமதனைத்
தேசவிருந் திருமேனி முழுதுஞ்செறி தரக்கொட்டல்.
34
958முல்லையிரு வாட்சிபிச்சி முகைநெகிழ்மல் லிகைபன்னீர்
நல்லமருக் கொழுந்துவெட்டி வேரிவைநற் சுகந்தங்கள்
சொல்லுமிவை யோரேழுந் தொடுத்துருவந் தெரியாமை
வல்லபடி யலங்கரித்தன் மணங்கமழப் புறமெல்லாம்.
35
959ஒருபடிநெய் கொளத்தகழி யுறவுயர மும்பர்பிரான்
திருவிழியி னளவுமுறத் திகழுமிர சதத்தியற்றிக்
குருமலியம் மணிவிளக்கங் கிருபாலுங் கொளவிருவிக்
கருதுகபி லையதிலதேற் காராவி னெய்நிரப்பி.
36
960செம்பருத்தி வெண்பஞ்சிற் பசுங்கருப்பூ ரஞ்செறித்துப்
பம்புவிரற் பருமையுறப் பண்ணுதிரி நுதிக்கொளுத்தும்
வெம்புமெரிக் கொழுந்தெழுந்து பன்னிரண்டு விரலளவை
வம்பிலதா யிருபகலும் வயங்குவதாம் விளக்கன்றே.
37
961செய்யதா மரைநூலிற் றிரிகோடல் சிறப்பினதாம்
ஐயபசுங் கருப்பூர மகப்படா தொழிவுறினே
கையமரு மாலத்திக் கருப்பூரந் திரிக்காகும்
நெய்யுரைத்த திலதாய் னேர்ந்தபசு நெய்யுமாம்.
38
962வெள்ளியினான் மணிவிளக்கு விதிப்பரிதேல் விளக்கமுற
வொள்ளியவெண் கலத்தானு முஞற்றுதலாம் பலவிளக்குத்
தெள்ளுமுறை யுறுவிக்குந் திறனிலதே லொன்றேனும்
வள்லலவன் றிருமுன்னர் வயக்குவது மரபாமால்.
39
963சேயிதழ்ப்பங் கயங்கொண்டு சேவல்வல முயர்த்தபிரான்
ஆயிரநா மமுதநவின்றங் கருச்சிக்க வருச்சனையீ
தேயுமல ரிலதாயி னிலகியவெண் டுளசியொடு
தூயபசுங் கூவிளங்கள் தொகுத்தடியிற் றூவுதலாம்.
40
964பால்புரையு மரிசியொரு படிக்குப்பால் படிமூன்று
சால்பசுநெய் படிகால்சர்க் கரைகழஞ்செண் பதிற்றிரட்டி
ஏலமொடு சுக்கிடித்த விடிவீசம் படியிரதங்
காலுமுய ரிளந்தெங்கின் கனியொன்று முறப்பெய்து.
41
965பாகமுறச் சமைத்ததற்பின் பசுங்கதலிக் கனிபதினைந்
தோகையொடுந் தோலொருவி யொருங்குபடுத் தினிதெடுத்த
மாகர்விழை பரமானம் வயங்கவருச் சித்தவுடன்
ஏகனுக்கு நிவேதிக்க விதுநிவே தனமாமால்.
42
966வளமார விவையைந்தும் வருடமிரண் டுறவாற்றற்
குளதாகும் பொருளில்லா ருருப்பவிரும் பின்பனியே
இளவேனின் முதிர்வேனி லெனும்பருவ மூன்றினிலும்
அளவாரச் செயினுரைத்த வவதியுமாற் றினராவார்.
43
967முப்பருவத் தினுமவற்றை முற்றுவிக்குந் திறனிலரேற்
செப்பியவா றுள்ளகத்துச் செய்தொருசா ரினிதுவதிந்
தொப்பரியான் மனுவயுத மொருநாளைக் குறக்கணிக்கின்
எப்பொருளு மவர்க்கெய்து மிடர்முழுதும் விரைந்தறுமே. .
44
968
எனமகதி யாழ்முனிவ னியம்புதலு முலகுண்டோன்
மனமகிழ்ந்து கமலன்மக வானிமையோர் புடைசூழ
அனகனுயர் வரையேறி யருச்சுனமூ லத்தினெழும்
பனிவிரவு நறுந்தீர்த்தம் படிந்தாடிக் கடன்முடித்தான்.
45
969புரந்தரனை நான்முகனைப் புலவர்குழாத் தினைநோக்கி
அரந்தைநமக் கறவேண்டி னருந்தவன்சொற் படிநீயிர்
பரந்தபொருள் கொணர்ந்தேவற் பணிபுரிகென் றானன்னார்
சுரந்தமகிழ் வினராகித் தொழிறலைநின் றனர்புரிய
46
970ஆராத பெருங்காத லகந்திளைப்ப மருதவரைச்
சீராரும் பெருமானைத் தேவர்கள்சிந் தாமணியை
வாராரு முலையுமையாள் மகிழ்தூங்குங் குலக்கொழுந்தைக்
காராரு நிறத்தினான் கடப்பாட்டிற் பூசித்தான்.
47
971நாரதன்செப் பியமுறையே நாரணன்பூ சித்திருப்ப
வாரணமும் பல்லியமு மரகரவோ தையு மயங்கப்
போரணவும் வீரர்களும் பூதர்களும் புடைநெருங்கக்
கூரணவும் படைவேற்கைக் குமரவே ளெதிர்நின்றான்.
48
972வேறு . 
ஓராறு மணிமுடியு மோராறு திருமுகமு மொராறு வாயும்
ஈராறு மலர்விழியு மீராறு குழைச்செவியு மிராறு தோளும்
போராரும் படிபலவுந் தராரும் வரைமார்பும் புலம்புந் தண்டைச்
சீராருஞ் சேவடியு மழகெறிப்ப நின்றானைத் திருமால் கண்டான்.
49
973வானவர்தங் குலமுழுது முய்ந்தனவென் குலமுழுதும் வாழ்ந்ததின்றே
தானவர்தங் குலமுழுதுஞ் சாய்ந்ததெனு மோகைதலை சிறப்ப வல்லே
தேனறுந்தண் மலர்தூவிச் சேவடியின் மணிமோலி தீட்டி யும்பர்
ஆனவர்கள் சிவசிவவென் றார்ப்பவலம் வந்துதுதி யாரச் செய்வான்.
50
974வேறு
முரண்மணி யிமைக்கு மோலி முடிகெழு முருக போற்றி
மரணமும் பிறப்பு நீத்தோர் மதிவள ரமுத போற்றி
இரணவல் லவுண ராவி யிறுத்திடு மிறைவ போற்றி
அரணென வெம்மைக் காக்கு மறைகழ லறவ போற்றி
51
975இருள்கெட விளங்கி யேற்றோர்க் கின்னருள் வழங்கி முத்தி
மருவினர் கன்ம மோர்ந்து மறைமுடிப் பொருள்க ளெல்லாந்
திருகற விளக்கி யொன்னார்ச் செற்றுவண் குறவர் மாதோ
டருள்வளர் நகைகொண் டாடு மறுமுகத் தலைவ போற்றி.
52
976வேறு
ஐயருக் கேந்தி யுக்கஞ்சேர்த் தூரு வமைத்தொளி ரங்குசங் கடாவி
வையிலை யெஃகும் வட்டமுந் திரித்து மார்பொடு மமைந்துதா ரோடு
தையுறப் பொலிந்து மீமிசைச் சுழன்று தடமணி யிரட்டிவான் பொழிந்து
தெய்வமங் கையர்க்கு வதுவைசூட் டயர்ந்து திகழும்பன் னிருகர போற்றி.
53
977நிழல்சுளித் தெழுந்து குலாலன்சக் கரம்போ னேரலர் நெடுங்களத் தலமந்
தழல்விழித் துருமிற் பிளிறிமும் மதமு மருவியிற் சலசல பொழிந்து
சுழல்வளி யெழுப்பி முறச்செவி யசையத் துதிக்கையின் வளிநிலங் குழிப்பக்
கழலடிப் பொருந ருயிருணுங் களிற்றிற் காட்சிதந் தருள்பிரான் போற்றி.
54
978முருகுகொப் பளிக்கு மடுக்கிதழ்ப் பொகுட்டு முளரியுங் குமுதமு மறியப்
பொருகய லுகளுஞ் சரவணப் பொய்கை பொலிவுற யினிதுவீற் றிருந்தங்
கருகுவந் தடுத்த மீன்முலை யருந்தி யாக்கையி னிளமையோ டியையத்
திருகுவன் கோட்டுத் தகரிவர்ந் தூருஞ் செல்வநின் றிருவடி போற்றி.
55
979ஓமெனு மொழியி னுறுபொருள் வினாவி யுள்ளவா றுரைத்திட வல்லா
நாமகள் கொழுநன் றனைச்சிறைப்படுத்து நறுமலர்க் கொடுங்கணைக் கழைவிற்
காமனை முனிந்த கண்ணுதற் பரமன் காமுறக் குருமொழி கொடுத்த
சேமமே மருத வரைவள ரமிழ்தே திருவருள் வழங்குக வென்றான்
56
980வேறு
மதுவுயிர் குடித்தவன் வழுத்தி நிற்றலுங்
கதுமெனத் திருவுளங் கருணை கூர்தர
விதுவணி சடையவன் விழியிற் றோன்றிய
முதுமறை முடியினன் மொழிகின் றானரோ.
57
981நமதுரு வாகிய நவிரத் திவ்வயின்
நமதுரு வுளத்திடை நாட்டி வானுளீர்
நமதடிப் பூசனை நன்றி யற்றினீர்
நமதருள் வழங்குது நாட்டம் யாதென்றான்.
58
982கடம்பணி புயத்தினான் கரையக் கேட்டனர்
இடம்படு வானவ ரெழுந்து துள்ளினார்
உடம்பிடித் தடக்கையி னொருவ னின்புறக்
குடம்படு கூத்தினான் குழைந்து கூறுவான்.
59
983வேறு
பருதி வானவ னொளிகெட மூவிரு முகனும்பல் கதிர்வீசித்
திருவெ லாந்தர நிற்பது காண்டலிற் றிசைகணான் கொடுமேல்கீழ்
மருவு மூவிரு வைப்பினுஞ் சூரனால் வதிதரு கொடுங்கோன்மை
இருளெ லாமிற்றை வைகலே யிற்றதென் றெண்ணின மிவணெந்தாய்.
60
984செம்மை யம்புயத் தேமலர் வென்றொளி திகழ்தரு முகந்தோறும்
விம்மு தண்கரு ணைக்கட லூற்றெழ விளங்குமிவ் விருநாட்டம்
அம்ம கண்ணுறக் காண்டலி னுரைத்தவா றிடத்தும்வா ழடியார்பால்
இம்மை யும்மையென் றிரண்டுமார்ந் தனவென வெண்ணின மிவணெந்தாய்.
 
985உருத்தி ரப்பெய ரண்ணலார் பதினொரு வருங்கொடி கணைகண்டை
வருத்து தோமரம் வச்சிர மங்குசம் வனசம்வாண் மழுத்தண்டம்
பருத்த வார்சிலை யாயருட் சத்தியே சத்தியாய்ப் பகர்நின்கை
இருத்தல் காண்டலி னிறந்தன பகையென வெண்ணின மிவணெந்தாய்.
62
986கடிநி லாவிய வெட்சிமா லிகைமுடிக் கவினக்காண் டலின்வென்றிக்
கொடிநி லாவிய தானவர் கோட்டத்துக் குரங்கியல் லாந்தன்னோ
மிடிநி லாவிய சயந்தனை முதலிய விண்ணவர் குழாமென்னும்
படிநி லாவிய பசுவுமீண் டனவெனப் படர்ந்தன மிவணெந்தாய்
63
987என்று நாரண னியம்பலு முருவலித் தெம்பிரா னெதிர்நோக்கி
ஒன்று மஞ்சலி ரிற்றைநா ளேபடை யொடுநடந் தொன்னாரைக்
கொன்று நும்பதி யருளுது மெனவிடை கொடுத்துவல் லெறுழ்ப்பூத
வென்றி யம்படை யெழுகென வியவரின் வியன்முர சறைவித்தான்.
64
988அமரர் தச்சனை யழைத்துவீ ரர்கண்முத லாந்தலை வருக்கெல்லாஞ்
சமர வன்பெருந் தேர்களுங் கரிகளுந் தாவுமான் களுமாக்கித்
திமிர மன்னமெய் நிறத்தினர்க் கதிசயஞ் செய்வன கொடுவென்னாக்
குமர நாயக னருளினன் யவனனுங் குயிற்றின னவர்க்கீந்தான்.
65
989வீர வாகுவை விளித்தனன் வீரர்க ளிலக்கத்தெண் மருமண்ட
மார மாக்கினோன் முதலிய தலைவர்நூற் றெண்மரு மடுபோரிற்
கோர மேபுரி யிராயிர வெள்ளமாங் குழிவிழிக் கணந்தாமும்
யாரு நீவியங் கொளப்படு வாரென வீந்தன னதிகாரம்.
66
990வாழி முப்புரங் குறுநகை யாலெரி மடுத்தவன் சிறுமைந்தன்
வாழி வேலவ னடியவர் குழாமெலாம் வாழிவை யகம்வாழி
வாழி விண்ணவர் சூரன்மே னம்படை வகுப்பெலா மெழுகென்னா
வாழி வண்முர செருக்கினர் வியவரி னுணர்ந்திடு மியவோரே.
67
991அலக்க ணித்தலும் வானவர்க் காற்றிய வவுனர்தம் படைமுற்றுங்
கலக்கத் தக்கசா ரதர்களுங் சாரதத் தலைவருங் கவினார்ந்த
விலக்கத் தொன்பதின் மரும்பரி கரியெழி லிரதம்பா கர்கள்பண்ணி
நலக்கத் தந்தெதிர் தொழவவற் றிவர்ந்தனர் நாளொடு கோளஞ்ச.
68
992முருக வேளுடன் வருகவென் றருளலு முகுந்தனு மலர்த்தேவும்
பெருக யாகநூ றியற்றிய வரையனும் பிறங்கிய சுரர்யாரும்
உருகு காதலிற் றொழுதெழு முனிவரு முவந்துதத் தமக்கேற்ற
திருகி லாதநற் சிறப்பொடு தோன்றினர் சயசய சயவென்றார்.
69
993
மிக்க சாரதப் படையிரா யிரவெள்ளம் வீரர்விண் ணவர்யாருந்
தொக்கு மேவுறக் கொண்டுபல் லாயிர வண்டமுந் துனைந்தோட
முக்க ணாயகன் மனத்திடைத் தோற்றிய முழுமணிப் பொலந்தேரைத்
தக்க மாருத வலவன்முன் றரவிவர்ந் தருளினான் தனிவள்ளல்.
70
994வேறு 
படகந் திண்டிமம் பணவமா னகங்கிணை பம்பை
துடித டாரிசல் லரிதக்கை துந்துபி யுடுக்கை
குடமு ழாமுர சாகுளி தொண்டகங் குளிரும்
இடிப லாயிர முழங்கிய தெனவியம் பினவால்.
71
995மடைவ யிர்க்குலங் காகளம் பீலிவண் டாரை
குடவ ளைக்குலங் குழலின மழையெனக் குமுற
மிடையும் பல்வகை யாழ்களு மெல்லிசை யெழுப்ப
உடைய நாயகன் விருதெழுந் துலம்பின முறையான்.
72
996வடிநெ டும்படை மிளிர்ந்தன மிளிர்ந்தன மணிப்பூண்
கொடிநி ரைக்குலந் துவன்றின துவன்றின குடையுங்
கடிகொள் சாமரை மறிந்தன மறிந்தகால் வட்டம்
பிடியன் னார்நடைச் சிலம்புகள் சிலம்பின பெரிதும்.
73
997நிரந்து நால்வகைப் படைகளும் புடைவர நிமலன்
பரந்த நானிலம் பொறாதெனப் பனிவிசும் பாறா
விரைந்து முந்துறக் கிரவுஞ்ச விலங்கலை யடுத்தான்
சுரந்த சேனையோ டெதிர்த்தனன் றாரகத் தோன்றல்
74
998படைக டூண்டியு மத்திரம் விடுத்தும்பட் டிமைகள்
அடைய மாயைக ளாற்றியு மமர்த்ததா ரகனை
உடைய நாயக னோங்கிய சிலம்பொடு மொறுத்துத்
தடையெ லாந்தபச் சூரன்வாழ் நகர்ப்புறஞ் சார்ந்தான்.
75
999வரையி னோடுத னிளவலி னுயிர்தப மாட்டித்
திரையு நீர்க்கடற் றடையெலாஞ் சிறுவரை கடந்து
புரையி லாநகர்ப் புறத்துவே ளடுத்தமை கேளா
வரைய னாகிய சூரனு மழலுயிர்த் தெழுந்தான்.
76
1000வேறு
காசிபன் மாயையைக் கலந்து தோற்றிய
வாசிறு மிருநூறா யிரவெள் ளத்தரும்
பேசிய விவர்வழிப் பிறந்த வீரரும்
ஏசின்முன் னுள்லவ ரெவரு மீண்டினார்.
77
1001இரதமுங் கரிகளு மிவுளிப் பந்தியும்
விரவிய கொடிகளும் விளங்குந் தொங்கலும்
வரமலி கவிகையு மாதி ரந்தொறும் 
பரவுறச் சூர்மகன் பரித் தேகினான்.
78
1002வஞ்சகன் வரவினை மதித்து வானவர்
அஞ்சின ரமர்கோ னாகம் வேர்த்தனன்
கஞ்சனுங் கலங்கினன் கலங்கு கின்றதோர்
நெஞ்சினைத் தேற்றின னெடிய மாயனும்.
79
1003வேறு 
அறந்தலை திரிந்த பதகன்போர் புரிய வாடலம் படையொடு விரையப்
பறந்தலை யடுத்தா னென்றுநா ரதன்போய்ப் பணிந்துநின் றுரைத்தமைகேளா
நிறந்தழை கடப்பந் தாரினா னிரத நெரேலெனச் செலுத்திநே ரடுத்தான்.
மறந்தழை திணிதோள் வீரரும் படையு மறலினர் தூசிமே னடந்தார்.
80
1004சூலம்வெங் கணைவே லபயமும் வலப்பாற் றொடிக்கையி னிடக்கையின் வரதஞ்
சாலும்வண் கதைவில் பாசமுந் தயங்கச் சந்திரன் மணிமுடி யெறிப்பக்
கோலமுற் றமைந்து மடங்கலூர்ந் திருபாற் குவிமுலை மாரிவ் விருவர்
ஏலும்வண் பலகை வாளொடு மேவ லியற்றுசூ லினியுமு னடந்தாள்.
81
1005வேறு
வெம்பு பசிக்கண் மெலிந்தவர் வெய்ய நறுஞ்சுதை கண்டெனப்
பம்பை மலிந்த பறந்தலைப் பாடமர் முன்பு கிடைத்திடாத்
தும்பை மலைந்தெழு மள்ளர்கள் சூழ்நெடுங் காலமும் வாழ்கெனத்
தம்பர மாமிறை யோர்களைச் சாற்றினர் போர்கள் தொடங்கினார்.
82
1006கொடிக ணுடங்கவை யத்தொடு கொம்மென வைய மெதிர்ந்தன
வெடிகொண் முழக்கொடு வேழமும் வேழமும் வேறு மலைந்தன
படிசிதர் கொள்ள நடம்பயில் பரியொடு பரிக ளமர்த்தன
வடிகழல் கட்டிய தானையுந் தானையு மாறுகொண் டேற்றன. 3
83
1007செல்பல வேழந் திமிங்கலந் திமிங்கல கலங்க ணிகர்த்தன
பல்பரி யுந்திரை செத்தன பல்கிய கூர்ம நிகர்த்தன
வெல்பல கைக்குலம் வாளைகள் வீழ்ந்தன வேலொடு வாள்களுந்
தொல்படைத் தேர்கல னொத்தன சூழ்கட லொத்தது தானையே.
84
1008ஒள்ளிய பாய்விரி கூம்புக ளொத்தன வோடிர தக்கொடி
விள்ளுடல் வார்குரு திப்புனல் வித்துரு மக்கொடி போன்றன
தெள்ளிய வீரர் விழிப்பன சேர்வட வாமுகம் வென்றன
மள்ளர் தெழித்தெழு மோதைகள் வாரிதி யோதை மலைந்தன.
85
1009ஆகமந் தாங்கிய மீனமு மாரண மீட்டருண் மீனமும்
மாகர் நறுஞ்சுதை யுண்ணிய மந்தரந் தாங்கிய கூர்மமும்
ஆகி யவுணத் தலைவர்க ளாடம ரிற்கைமி குந்துராய்
வேக நெடும்படை சாரத வேலை துளும்ப வுழக்கினார்.
86
1010செங்கையின் வார்வலை வீசிய செம்ம லரிகர புத்திரன்
ஐங்கர னொத்தவு ணப்படைக் கதிபர்த மாற்ற லழித்தெதிர்
பொங்கிய தானவ மாக்கடல் போகுயர் மந்தர மத்தென
வெங்கண் விறற்சிலைப் பாரிட வீரர் துளும்ப வுழக்கினார்.
87
1011தானவர் வேலை கலங்கலுந் தானவர் கோள்விறன் மைந்தர்கள்
வானவர் மேலடர் நஞ்சென வன்மைகொள் பூதரை யோப்பினார்
ஆனநஞ் சுண்டமர் தேவென வையென வீரவா குப்பெயர்
மானவன் கைத்திறங் காட்டியம் மைந்தரை மாய்த்தொளி தோற்றினான்.
88
1012கணங்கண் மகிழ்ந்தெழுந் தாடின கவந்த மனந்தநின் றாடின
துணங்கைகொண் டாடின பேயினந் துன்றின வன்கழு குக்குலம்
வணங்கல கின்பருந் தின்குலம் வானுயர் பந்த ரியற்றின
பிணங்கண் மலிந்த பறந்தலைப் பெட்பி னெருங்கின நாய்நரி.
891
1013எங்கு முடைந்த பொலஞ்சக டெங்கு முலந்த கடாக்கரி
எங்கு மடிந்த வயப்பரி யெங்கு மடங்கிய மள்ளர்கள்
எங்குந் துணிந்த திணிந்ததோ ளெங்குந் துமிந்த நிமிர்ந்ததாள்
எங்குங் குறைந்த முடித்தலை யெங்குங் குரைக்குநெய்த் தோர்நதி
90
1014வேறு
இன்ன வாறு சேனையோ டெதிர்த்த மைந்தர் வீழ்கள
முன்னர் நோக்கி நன்றுநந்த மொய்ம்பி னாற்ற லின்னினி
ஒன்ன லாரை யாவியுண் டொழிப்ப லென்று காய்ந்தகான்
வன்னி யென்ன நேர்ந்துளான் மடங்கன் மாமு கத்தனே.
91
1015சுரிகை யாய்தங் கப்பணஞ் சூல நேமி யீட்டிவாள்
பரசு பிண்டி பாலம்வேல் பாசங் குந்த முசுண்டிவச்
சிரமெ ழுக்க ழுக்கடை சிலைகு யங்க லப்பைதண்
டுரிமை கொண்ட பூதர்கண் டொல்லை மேல டர்த்தனர்.
92
1016வரைதி ரண்ட பலபுய மடங்கன் மாமு கத்தன்மேல்
திரைதி ரண்ட வேலைவீழ் செல்லெ ழுந்து மேருவின்
நிரைதி ரண்ட தாரைக ணிரப்பு கின்ற தாமென
உரைதி ரண்ட பூதர்க ளொண்ப டைவ ழங்கினார்.
93
1017தேக முட்டி நோன்படை சிதர்ந்து வீழ நீண்முழை
நாக நின்று சிங்கமொன்று நாக மேல டர்த்தெனப்
பாக மல்கு தேரிழிந்து பல்லி தழ்ப்ப டுத்தவன்
சாக ரத்தை யொத்தபூதர் தங்கண் மேற்ப டர்ந்தனன்.
94
1018வேறு
மன்னி ரும்படை சுமந்த கைத்திரளின் மல்கு பூதர்சில ரைத்தழீஇச்
செந்நெல் வாரி யெனத்த ரைக்கணுயிர் சிந்த மோதியயல் வீசிடு
நன்னர் நெல்லுநவை வையும் வேறுற நடந்தி றுக்குமெரு மைத்திரள்
என்ன வன்கழலி னாற்று கைத்துயி ரிறுக்கு மெற்றியு மொறுக்குமே.
95
1019நோக்கினாற் சிலரை மாய்க்கும் வன்மொழி நொடிப்பி னாற்சிலரை வீக்கும்வார்
மூக்கி னீடிய வுயிர்ப்பி னாற்சிலரை மொத்து மத்தமிஉகு சிங்கமாய்த்
தாக்கு மாயனு நடுங்க வீரர்கள் சழங்க நீளிரதம் யாவையும்
ஓக்கி யொன்றன்மிசை யொன்றை யொய்யென வுடைக்கு மூழியழ லொத்துளான்.
96
1020இலக்க வீரருமொ ரெண்ம ருந்தலைவர் யாரு மேற்றபல பூதரும்
நிலக்கண் வீழ்ந்தவச மாக நோக்கியய னின்ற வீரபுய னேர்ந்தவன்
அலக்க ணெய்தசிலை யாயி ரங்களு மறுத்து நீடமர் விளைத்துயிர்
கலக்க மெய்தின னறிந்து மைந்துமிகு கந்த வேளிரத முந்தினான்.
97
1021வேறு
கண்டு சிங்கமுக னங்கிவிழி கால மொழிவான்
அண்ட ராருயி ரளிக்கவரு கின்ற னையிதோ
மண்டு போர்நுமரை மாய்த்தனை விடுத்து மிளமை
கொண்டு ளாய்குறுகு நுந்தையிடை யென்ற னனரோ.
98
1022வெய்ய சிங்கமுக கேண்மொழியின் வெற்றி யுளதோ
கையி னாலெமது வென்றிநனி காண்டி யினிநீ
உய்ய வேண்டினிமை யார்சிறை யொழித்தி யிலையேல்
ஒய்யெ னப்படை வழங்குரைய லென்ன முருகன்.
99
1023மான மேலெழ மடங்கன்முக னாயி ரநெடுங்
கூனல் வான்சிலை குடங்கைகொடு வாளி சொரிய
ஞான நாயக னகைத்தொருகை நாட்டு சிலையால்
ஊன மாகவரு கோல்கணை யுறுத்தி னன்மிக.
100
1024மீட்டும் வெய்யவன் விடுந்தொறும் விராவு கணைகள்
வீட்டி யன்னவன் விறற்சிலை விளங்கு துவசஞ்
சேட்டு மாமணி முடித்திரள் செறித்த கவயம்
ஓட்டு பாகிரதம் யாவையு மறுத்து ரறினான்.
101
1025மாம டங்கன்முகன் வஞ்சின முரைத்து வெகுளாத்
தோம ரங்குலிச மாதிக டுறுத்தமர் செய்தான்
ஆம னைத்தையு மடர்த்தமரர் தொல்ப டைகளு
மேம மின்றியற வென்றன னிராறு புயனே.
102
1026இரண்டு பாணிசிர மொன்றுதக வேனை யசிரந்
திரண்ட கைத்தொகுதி தீர்ந்தவன் விசாக னெதிர்போய்
முரண்டி கழ்ந்தவிது வல்லையெனின் முன்னு தியெனத்
திரண்ட தண்டமொரு கைக்கொடு சினந்த ணவினான்.
103
1027வல்லை யேலென வுரைத்தமை மதித்து முருகன் 
நல்ல வேற்படை விடுத்தில னகைத்தொ ருகரம்
புல்லு வச்சிரம் விடுப்பவவன் போர்க்க தையினை
ஒல்லை நுண்டுகள் படுத்துயிரு முண்ட ததுவே.
104
1028ஆயி ரந்தலை யிரட்டியுறு மங்கை யிளவன்
மாயி ருஞ்சம ருழந்துயிர் மடிந்த தறியாக்
கூயி ரங்கியொரு சூரனுயிர் கொண்டு வலிகொண்
டேயி ரங்குவது மாங்கொலென வெண்ணி முனைவான்.
105
102வேறு
இந்த வண்ட வரைப்பி னேழ்தலை யிட்ட வாயிர வண்டம்வாழ்
வெந்தி றற்படை வீரர் சார விளம்பு வீரென விண்டனன்
தந்தை நன்றென வொற்ற ரோடினர் சாற்ற யாரு மிறுத்தனர்
அந்த ரம்புவி வேலை மாதிர மற்ற வெற்றிட மாதலே.
106
1030வந்து முந்தி யிறுத்த தானவர் வாய்தன் முட்டி நெருங்கிமேல்
இந்த வண்ட நெடுஞ்சு வர்ப்புற னெல்லை முற்றுற வீண்டலின்
அந்த வந்த வகன்ற வண்ட மிருந்து ளாரங் கிருந்துளார்
முந்து தானவர் வாய்தல் விண்டபின் முன்னு வாமென வுன்னியே.
107
1031சிங்க மாமுக னொத்த வாண்மையர் சிற்சி லாயிரர் தாரகப்
பைங்கண் வேழ முகத்த னொத்தவர் பற்ப லாயிரர் மைந்தனாம்
வெங்க திர்ப்பகை யாற்றல் கொண்டவர் வேறு வேறுபல் லாயிரர்
அங்கி மாமுக னொத்த வீர ரனேகர் தானவர் தானையுள்
108
1032முக்கண் வேழ முனிந்த வேழ முகத்த னொத்தவ ரெண்ணிலார்
நக்கன் வென்ற கயத்தை யொத்திடு நாம வேலின ரெண்ணிலார்
ஒக்க வண்டம் விழுங்கு கொக்கினை யொத்த நோன்மைய ரெண்ணிலார்
மிக்கு யர்ந்த சலந்த ரப்பெயர் வீர னொத்தவ ரெண்ணிலார்.
109
1033அந்த காசுரன் முப்பு ரத்தவ ராண்மை விஞ்சுசு ராக்கன்வாள்
விந்தை மாட்டிய தார காசுரன் வெய்ய பண்டன் மயிடனென்
றிந்த மானவ ராதி யாமெறு ழாள ரொத்தவ ரல்லது
மைந்து தாழ்ந்தவ ரில்லை யில்லை மலிந்த தானவர் தானையுள்.
110
1034அங்க ணங்க ணுரைத்த வண்ட மடுத்த வேதர்க ணாரணர்
தங்கு வச்சிர ரும்பர் மாதவர் தங்க ளாற்ற லழித்தவர்
நுங்கி டாதவ ரத்தர் மாயை நுனித்த றிந்தவர் விஞ்சையிற்
சிங்கி டாதவர் மன்ன வர்க்குயிர் செத்து நன்றிசெய் சிந்தையோர்.
111
1035ஆய வாயிர மாயி ரங்கர மாயி ரஞ்சிர மந்தமா
மேய வாக்கையர் வேங்கை மாமுகர் வேழ மாமுகர் யாளியோர்
சீய மாமுக ரெண்கு மாமுகர் சிம்புண் மாமுகர் வன்பகை
மாய வாடமர் செய்யு மேழக வன்மு கத்தரு மெண்ணிலார்.
112
1036வேறு
மடங்கரிய தானவர்கண் மல்குதலை நோக்கி
இடங்கழிகொள் வாருளர்கொ லெம்மவரி னென்னா
உடங்கமரர் புள்ளுருவ மாகியொழி வுற்றார்
தடங்கிரி முழைத்தொகுதி சார்ந்தயர்வு யிர்த்தார்.
113
1037பூதர்க ணடுங்கினர்கள் பூதர்தலை வோர்கள்
வேதனை யுளத்திடை மிகுத்தன ரிலக்கர்
ஆதபுதல் காண்டலரி தென்றுள மயர்த்தார்
நாதனுள னென்றுநவ வீரர்வலி கொண்டார்.
114
1038இத்தகைமை யாதுமிறை நோக்கிநகை செய்து
தத்துபரி பூண்டசக டத்தைநொடி முன்னர்
எத்திசையு மேகவினி தூர்கவென விண்டான்
அத்தனுரை கொண்டுவளி யங்ஙன முகைத்தான்.
115
1039மண்டில முறுத்தமணி வையமிசை நின்றே
அண்டர்தொழு மாறுமுக னம்புபல கோடி
கொண்டொரு தொடைக்கமைதி கொள்ளவமர் செய்தான்
மிண்டியம ராடல்புரி வெய்யவர்கள் தம்மேல். 116
116
1040ஒறுத்தன பொலஞ்சக டொறுத்தகவி கைக்கா
டறுத்தன முடித்தலை யறுத்தன வெறுழ்தோள்
இறுத்தன பகட்டுர மிறுத்தன கழற்கால்
கறுத்தவுண ராவிகளை கந்தன்விடு வாளி.
117
1041பக்குவிடு நீரன பசும்பொன்மனை மக்கள்
ஒக்கலிவை யேயல வுடம்புமுட லின்கண்
தொக்குறு முறுப்புமறி கென்றுதுணி வித்த
புக்கவுண ராவிகள் புயக்குமிறை வாளி.
118
1042தீவினைய ரேனுமிறை செங்கையயி லம்பாற்
சாவவர மாற்றினர்க டானவர்க டம்முட்
சாவுடலை வாளிகொடு தள்ளவட வைக்கட்
பூவுலகி னோற்றனர்கள் போரவுணர் சில்லோர்.
119
1043மக்களு மிவர்க்குதவு மார்க்கமில ராவர்
இக்கொடி யரைக்கதியி னேற்றுது மெனத்தான்
புக்கதென வேள்பகழி போரவுண ராக்கை
மிக்குலவு கங்கைநதி யாதியிடை வீழ்க்கும்.
120
1044குய்யக வுலோகர்மகிழ் கொள்ளவவ ணுய்க்கு
மையநெடு நேமிவரை யப்புற மிருந்து
நையலகை யாதிநவை யோர்க்குமிரை யாக்கு
மெய்யன்விடு வாளியுயிர் வீத்தசுரர் காயம்.
121
1045எண்டிசையு மண்டலமு மீண்டினரை யுண்டு
விண்டல மிடைந்தவர்தம் வெவ்வுயிரை மாந்தி
அண்டம்வளர் பித்திகையி னப்புற மலிந்த
கண்டகரை யுங்கடித யின்றகுகன் வாளி.
122
1046ஒளிதழுவி நின்றவரை யண்ணலென வுன்னா
திளையரென வெள்ளினவ ரின்னுயிரு நீப்பர்
தெளிமினென யாவரையுந் தேற்றுவன போன்ற
வளியிலரை யட்டுலவு மாறுமுகன் வாளி.
123
1047
திண்ணிய படைத்தகுவர் தேகமுழு தட்டு
வெண்ணிண மளைந்துகறை மெய்முழுது மாடித்
துண்ணென வெழுந்துசுடர் வாளிதுரி சோவ
வண்ணவரை தோருடலு ராவுவன மாதோ.
124
1048சிறுபடைய ரேனும்வலி மிக்கவர் சினந்தால்
உறுபடைக ளாற்றுவது முண்டுகொல் சமர்க்கண்
அறுமுக னொருத்தனொரு கைச்சிலையி னம்பான்
முறைமுறை யிறுத்தபடை முற்றுமுயிர் மாய்ந்த.
125
1049பாதக ருடற்பரிச மானபழி தீரக்
காதலொடு மாடுவ கடுப்பமுரு கேசன்
கோதைபயில் வார்கணைகள் கொங்குகமழ் கங்கை
ஓதமுத லானபல தீர்த்தமு முறந்த. 6
126
1050வேறு
இறுத்த தானைக ளிறந்தபி னெங்குநெய்த் தோரும்
அறுத்த பல்வகைத் துணிகளு மழனும்வா னளவும்
வெறுத்தி டங்கெட வித்தக னோக்கின னகைத்தான்
ஒறுத்த முப்புர மெனத்தழ லுண்டுநீற் றியதே.
127
1051தடைப்பட் டப்புறத் திருந்தவர் தடைதபு தலுமே
மிடைத லுற்றனர் வெடிபட முழங்கிமுன் போல
அடைத லுற்றவர் தம்மையு மறுத்தண்ட வழிவிற்
படையி னோர்கணை தொடுத்தன னடைந்தனன் பகவன்.
128
1052அனைத்துந் தானைக ளிறந்தமை யவுணர்கோன் பாரா
நினைத்தல் செய்குவா னின்மலன் வரமிருப் பதனால்
எனைக்கொல் வாரிலை யிளையவன் றன்னையான் வென்று
வினைக்கண் வீழ்ந்துளா ரையுமெழுப் புவலென வெகுண்டான்.
129
1053விரைந்து தேரினைச் செலுத்திமே லடர்ந்தனன் பூதர்
வரைந்த பூதர்தந் தலைவர்க ளிலக்கர்வன் வீரர்
நிரந்து வேறுவே றாடமர் விளைத்தனர் நீங்கக்
கரந்தை வேய்ந்தவன் கான்முளை கடுகத்தே ருகைத்தான்
130
1054இருவ ருஞ்சிலை வாங்கின ரெறுழ்க்கணை தொடுத்தார்
பொருது மாதிரஞ் சுற்றுவர் கடறொறும் புகுவார்
கருவி வானென விசும்பிடைத் தோற்றுவர் கரப்பார்
அருவி மால்வரை தொறுஞ்சம ராற்றியே யடுப்பார்.
131
1055மண்ணிற் கீழுல கனைத்தினு மரீஇச்சம ருழப்பார்
விண்ணிற் பல்வகை யுலகமும் விராய்ப்படை தொடுவார்
துண்ணென் றின்னண மமர்த்துழிச் சூரன்மே லண்ட
வண்ண வாய்தலை வழக்கற வடைத்தமை கண்டான்.
132
1056இளையன் சூழ்ச்சியு மென்னென்ப தெனக்கனன் றங்கை
வளைவில் வார்கணை பன்முறை தொடுத்தனன் வாய்தல்
வெளிகண் டப்புறத் திருந்தவர் தங்களை விளித்தான்
தெளிவி லான்செய லறிந்தனன் றேவரைப் புரப்போன்.
133
1057செங்கை வைகிய படைகளுட் சிலபடை நோக்கித்
தங்கு மாயிரத் தேழெனு மண்டமுஞ் சாரா
அங்க ணங்கண்வை கியவரட் டர்களுயிர் மாந்தி
இங்கண் வம்மினென் றியம்பின னப்படை யெழுந்து.
134
1058வேறு வேறுபல் லுருக்கொடு விரைந்துபோய் விசாகன்
கூறு மாயிரத் தேழெனு மண்டமுங் குறுகி
நீறு செய்துவல் லவுணரை மீண்டுநின் மலன்கை
ஏறி முன்புபோ லிருந்தன விதுகண்டு சூரன்.
135
1059ஆங்கு நின்றறை கூவிப்போ யப்புறத் தண்டத்
தோங்கி னானுட னேகியங் குடன்றமர் புரிந்தான்
காங்கெ யன்கடுஞ் சூரனம் முறையண்டந் தோறும்
நீங்கி னானுட னேகினா னிமலனும் பொருது.
136
1060அண்ட மாயிரத் தெட்டினு மவுணர்கோ னுழைய
விண்டி டாதுடன் புகுந்தமர் விளைப்பதும் வியப்போ
மண்டு மாருயிர்க் குயிரதாய் வதிந்தண்டந் தோறுங்
கொண்டு கொண்டுசெ லொருமுத லாகிய குமரன்.
137
1061கந்த வேளுந்த னுடன்வரச் சிலபகல் கழித்திட்
டிந்த வண்டம்வந் திறுத்தனன் மாயைசூழ்ச் சியினால்
அந்த மில்லதோ ரமிழ்தமந் தரமெனு மடுக்கல்
வந்தி டுந்திற மியற்றினன் மாண்டவ ரெழுந்தார்.
138
1062தம்பி மைந்தர்க டானவத் தலைவர்தா னவர்கள்
உம்ப ரச்சுற வனைவரு மொழிவின்றி யெழலுங்
கம்ப மற்றிடுஞ் சூரன்மிக் குவகையிற் களித்தான்
வம்பு முற்றிய கனவிதென் றுள்ளக மதியான்.
139
1063முருக வேளது நோக்கின்ன் முருவலித் தங்கை
ஒருப டைக்கல முகைத்தன னுரையெழு முன்னர்ப்
பொருத நின்றதா னவர்களைப் பொருப்பொடும் பொடித்த
தருளி லாதவ னயர்ந்தன னாற்றினன் மாயை.
140
1064எண்ணின் மாயையு மெதிர்நிலா தழிதர வீற்றின்
வண்ண மாமர மாயினன் வஞ்சகன் மணிவேல்
அண்ண லேவின னதுகிழித் தந்தரப் புனலின்
மண்ணி நீளுடன் முன்புபோன் மலர்க்கைவாழ்ந் ததுவே.
141
1065
இருது ணிபடக் கிடந்தவ னெழுந்துகுக் குடமும்
பொருவி மஞ்ஞையு மாய்ச்சமர்க் கெதிர்ந்தனன் புனிதன்
வருக வென்றருள் விழிக்கடை வழங்கினன் மலம்போய்
அருணி லைக்கிலக் காயின வாங்கிரு புள்ளும்.
142
1066சேவல் வண்கொடி யுயர்த்தினன் சிறைமயி லூர்ந்தான்
மூவர் தம்முத லாகிய முக்கணான் புதல்வன்
தேவர் பூமழை சொரிந்தனர் தேவர்தஞ் சிறையை
நீவி விண்குடி யேற்றின னிலத்திடை மீண்டான். 3
143
1067கமலம் பூத்திடத் தீர்த்தமொன் றகழ்ந்துபே ரூரின்
அமிழ்த லிங்கத்தி னருச்சனை புரிந்துசென் றமரர்
தமது வைப்பெனப் போற்றுறு மருச்சுனச் சயிலங்
குமர நாயக னமர்ந்தனன் குவலயம் போற்ற.
144
1068மருத வெற்பிடை வதிதரு முருகனைப் பணிவோர்
பொருவி லன்னவன் புகழ்களைக் கேட்பவர் தாமும்
ஒருவி வன்பகை வெறுக்கைபெற் றும்பரா யீற்றில்
அருளொ டுங்கலந் தானந்தத் தவசராய்த் திளைப்பார்.
145
1069அங்கண் மாநிலஞ் சுமதியென் றறையுநான் மறையோன்
பொங்கு தீவினை புரிந்தவன் புரையில்வான் கதியில்
தங்கி னானெனி னாதிமா புரத்திடைத் தவத்தால்
நங்க ணாதனை நாடுவார்க் குறாதது முளதோ.
146
1070என்று கூறலு முனிவரர் சூதனை யிறைஞ்சி
நன்று கூறினை யுய்ந்தன நவைபயில் சுமதி
ஒன்றும் வான்கதி யுற்றன னென்றனை விளங்க
மன்றவோதுதி யெனவெதிர் வழங்குவன் சூதன்.
147

மருதவரைப்படலம் முற்றிற்று.
ஆகத்திருவிருத்தம் - 1070
-------------

15. சுமதி கதிபெறு படலம் (1071- 1134)

1071பங்கயப் பொய்கை யுகளும் பருவரால் பாய்ந்து முட்டத்
துங்கக் கமுகின் மடறுமியப் பைங்கனி கள்சொரி யாநிற்குந்
தெங்கு மிடைந்த மகாராட்டிர மென்னுந் தேயந் தன்னில் 
தங்கு மறையோ னொருவன் றகும்பெயர் மற்றெச்ச தேவன்.
1
1072அன்னா னெடுநா ளருந்தவங்க ளெச்சங்க ளாற்றி முக்கண்
முன்னோ னருளான் மனைக்குரிமை பூண்ட முகிலன்ன கூந்தல்
மின்னே ரிடையாண் முலைகறுப்ப்பக் கண்குழிய விளர்ப்ப மாமை
நன்னா ளிடையே யுயிர்த்தா ளொருமைந் தனகர் கொண்டாட.
2
1073தமர்களுடன் மகிழ்ந்து தாதைசடங் கனைத்துந் தகவி னாற்றிச்
சுமதி யெனுநாம மிட்டழைத்தான் றோன்றலுமப் பெயருக் கேற்பத்
திமில மறைபயின்று தெள்ளிப் பலகலையுஞ் சீல மாதி
அமைதி பெறவொழுகி யாறடுத்த வொருபதாண் டாயு ளுற்றான்.
3
1074தெய்வ மறையோன் சிவதாமா வென்றொருவன் சீர்சால் கற்பின்
தையன் மனைவி வயிற்றுதித்த பேரழகின் றனயை தன்னை 
உய்யு நெறிபலவு முள்ளா னிவற்களித்த லூழா மென்று
கையி னறும்புனலோ டீந்து கடியயருங் காட்சி கண்டான்.
4
1075திமிரப் பிழம்பைத் தெளித்தெடுத்து வார்த்தனைய தேம்பெய் கோதைக் கோலம்
குமரி நலன்முழுதுங் கூட்டுண்டு வாழுநாட் குமர னான
சுமதி யெனும்பெயரான் றோடவிழ்ந்த கொன்றையந்தார்த் தொல்லோன்
அமரர் தொழும்விழவு நோக்கப் பருப்பதத்தை யடைத லுற்றான்.
5
1076வேறு
மல்லி கார்ச்சுன மால்வரை நாயகன்
புல்லம் வார்கொடி யேற்றிப் புவிதொழச்
செல்லு நல்ல திருவிழ வின்வளம்
எல்லி யும்பக லுந்தொழு தேத்துநாள்.
6
1077அமிழ்தந் துய்க்கு அமையத்துப் பித்துறீஇ
உமிழ்தல் செய்து விடத்தையுண் டாலெனக்
குமிழ்த ருங்கொடி நாசியொ ருத்திபால்
இமிழ்த ரும்படி யெய்திய வூழினால்.
7
1078வீதி யின்வள நோக்கவெ ளிக்கொடு
போது வான்கவி னாற்பொலி வுற்றொரு
மாதர் வீதி வளங்கண்டு புக்குழி
ஆத வன்கதி ராலயர் வெய்தினான்.
8
1079பந்தர் நீண்டு பனிப்புது நீருகுத்
திந்தி ரன்புர மெய்திய தாமெனச்
சுந்த ரங்க டொகுத்ததொர் மாளிகை
முந்து றக்கண்டு முன்கடை நண்ணினான்.
9
1080மணமுஞ் சீதமும் வௌளவிச் சிறுவளி
அணவி வெப்பம கற்ற வயர்வுயிர்த்
துணர்வு மீக்கொ ளுவகைய னாய்மனைப்
புணர்கின் றார்திறங் கேட்கப் புகன்றனன்
10
1081மழைத வழ்ந்தெழு மாளிகை யின்னதில்
தழைவ ளத்தொடு தங்குகின் றார்தமை
விழைகின் றேற்கு விளம்புதி யென்றனன்
உழைநின் றானொரு வன்கிளப் பானரோ.
11
1082வேறு
திருந்திய விந்நகர்த் தேத்துச் சீர்மிகுந்
திருந்திடு மந்தண ரிருக்கை நாப்பணே
பொருந்திய வாழ்க்கையோர் புனித வேதியன்
அருந்தவத் துயிர்த்தவ ளழகி னெல்லையாள்
12
1083பொன்னொளி திகழ்தரு பொருவின் மாமையான்
மன்னுமே மாங்கியென் றுரைக்கு மாண்பினாள்
அன்னவ ளிந்நக ரமர்ந்த வாழ்க்கையோர்
தொன்னெறி வேதியன் றுணைவி யாயினாள்.
13
1084இடைநில நாடொறு மினைந்து தேய்தரப்
புடைபரந் தெழுந்தபூண் முலைகள் போர்மதன்
கொடைபயி லிருநிதிக் குப்பை யாமென
நடைபயின் மங்கையாம் பருவ நண்ணினாள்.
14
1085நாண்மட மச்சநற் பயிர்ப்புத் தோட்டியும்
ஆண்மைசெய் பாகனு மணியுந் தூசமும்
ஏண்மலி நிகளமு மிரியக் காமமாம்
மாண்மதம் வீறலின் வரம்பி கந்தனள். 5
15
1086குருகைப் புழைக்கையால் வளைத்தக் குஞ்சரம்
வருமுலைக் கோட்டினான் மார்ப ழுத்துபு 
மருமலி யுவளக வனத்தி லாடவர்
திருவெனுங் கவளம்வாய் தெவிட்டிச் செல்லுமே.
16
1087மங்கையிற் பெருங்கவின் மருவ லான்வளை
அங்கையா னாகிய வணங்குக் காற்றல்வீழ்
துங்கமா தவரெனத் துறந்து ளோருளும்
இங்கிவள் விழிவலைக்கிடர்ப்ப டாரிலை.
17
1088தந்தையே யாகநற் றமைய னாகவச்
சுந்தரி விழிவலைத் துவக்குண் டானெனிற்
பிந்துற வருவன வருகெ னாப்பிழைத்
தந்தின்மென் முலைதழா தகறற் பாலனோ.
18
1089புனையிழை யிவள்செயல் புனலொ டேற்றவன்
அனைவரும் புகறர வறிந்தும் பன்முறை
மனைவயிற் கண்டுமென் மரபு குன்றிற்றென்
றினைபவன் கோறலை யெண்ணி னானரோ.
19
1090கோறலுக் குடன்படுங் கொண்கன் செய்தியைத்
தூறலுக் குடம்படுந் துணைவி முன்றெரிந்
தாறலைத் திருநிலத் தடக்கிப் பொன்னினும்
வேறலைச் செய்தனள் வீத்த வெம்பழி.
20
1091நாண்டகு மறையவர் நல்ல சேரியின்
வேண்டியாங் கொழுகுமவ் வினைமுற் றாமையின்
மாண்டகு பரத்தையர் வாழிவ் வீதியிற்
காண்டகு மிம்மனை கவினச் செய்தனன்.
21
1092அரத்தகச் சீறடி யருப்புக் கொங்கையாள்
பரத்தையர் தொழிலெலாம் பயின்று காளையர் 
வரத்தினை யேற்றிவண் வதிகின் றாளென
விரித்தன னிதுவினா யிருக்கும் வேலையில்.
22
1093பரியக நூபுரம் பாதத் தேங்கிட
விரியொளி மேகலை யரையின் மின்செய
வரியளி குலங்கள்வார் குழலிற் சூழ்தரத்
தெரியிழை மாதரா ளாங்குச் சென்றனள்.
23
1094சிறுவளி படர்வழித் தேம்பெய் கோதையின்
உறுமன மெழவுகைத் தொல்கி நின்றனள்
முறுவலித் தொருமுலை தோற்றி மூடினள்
நறுமலர் விழிப்படை சிறிது நாட்டினாள்.
24
1095முறுகிய காதலின் மொத்துண் டாலென
உறுவளி நாசியி னுயிர்த்துச் செம்மலைப்
பெறுவதற் கருந்தவம் பெரிது மாற்றினேன்
மறுமையு மிம்மையும் வழுவி லேனென்றாள்.
25
1096துடித்தன வெனக்கிடத் தோளுங் கொங்கையும்
வடித்தவேல் விழியுநல் வரைப்பிற் பல்லியு
நொடித்தன விரிச்சியு நுவலப் பட்டன
கடைத்தலைக் குமரநிற் காண்டற் கென்றனள்.
26
1097
நென்னலின் வைகறை நீங்கு மெல்லையில்
தன்னிக ரில்லதோர் தரள மாலிகை
கன்னியென் கரந்தரக் கனவி னேனிதோ
நின்னையுய்த் தளித்தன ணிமலை யென்றனள்.
27
1098அயலவர் போற்கடைத் தலைய மர்ந்தனிர்
வியன்மனை நுமதியா னும் வேறலேன்
பயின்மனை யுவளகம் படர்கம் வம்மினென்
றுயிரினு முரிமைசெய் தொண்கை பற்றினாள்.
28
1099வேறு
ஏமாங்கி விழிக்கணை யோடெழின் மார னெய்த
வீமாண் கணை பட்டுள மற்றுவி கார மென்னுந்
தீமாந்த வருந்திய பூசுரன் செங்கை யன்னாள்
தூமாண்கரத் தாற்றொடச் சோர்ந்தழி யாவி பெற்றான்
29
1100உருவத்திடை யோங்கி யுருக்கு முலப்பி னோய்க்கும்
பருவத்தொடு நல்கு மருந்துபல் கோடி யுள்ள
புருவச்சிலை கோலி விழிக்கணை பூட்டி மாதர்
வருவித்திடு நோய்க்கவ ரல்லது மற்று முண்டோ.
30
1101விண்ணோங்கி வளர்ந்த பருப்பத மீது நெற்றிக்
கண்ணோங்கிய நம்பன் விழாக்கவின் கண்ட பேறே
பண்ணோங்கிய மென்மொழி யாள்கரம் பற்றிற் றென்னா
எண்ணோங்கிய நெஞ்சோ டெழுந்துட னேகி னானே.
31
1102மலர்மெல்லணை மாதொடும் வைகினன் மாதி னேவல்
அலர்மென்குழ லார்சிலர் சாந்த மலங்கன் மாலை
பலவுங்கொடு முன்னுற வேந்தினர் பைம்பொ னங்கி
குலவுஞ்சும திக்கணி யாக்கி டானுங் கொண்டாள்.
32
1103வேறு
மாடகத் திவ்வு நல்லியாழ் மதுரமெல் லிசைகா தூட்டிப்
பாடகத் தளிர்மென் பாதப் பைங்கிளி யரிய லூட்ட
ஆடவர் திலக மன்னா னநங்கவேள் சரங்கள் பாய
ஓடரித் தடங்க ணங்கை யுருவினைத் தழுவிக் கொண்டான்.
33
1104தாதிய ரெழினி வீழ்த்துத் தணந்தனர் புறத்துப் போத
மாதினை யிடப்பான் முன்கை வலக்கையிற் சாய்த்துப் புல்லிப்
போதிவர் கூந்தல் சோரப் புணர்முலை வருடிப் பின்னிச்
சோதிவெண் டரளச் செவ்வாய்ச் சுவையமிழ் தாரத் துய்த்தான்.
34
1105ஓதியு நுதலு நீவி யோடரிக் கடைக்க ணக்கிச்
சோதிய கவுள்கை மூல மாதிகள் சுவைத்டுக் கொங்கை
ஆதிகள் புடைத்துக் கிள்ளி யங்கையாற் பிசைந்து தாள்கள்
நீதியி னல்குன் மாட்டு நிகழ்த்துவ பலவுஞ் செய்தான்.
35
1106மூடிக மயூர பாத முழுமதி பாதித் திங்கள்
தோடவி ழுற்ப லாதித் தொகுகுறி நகத்தாற் பல்லாற்
பாடுறத் தோற்றிப் பூஞை பன்னகங் குக்கு டாதிப்
பீடுறு கரண பேத நாடொறும் பிறங்கச் சேர்ந்தான்.
36
1107அறிந்தவ ரொருவ ரில்லா வயனக ராத லாலே
பறிந்திட நாணுஞ் செய்யும் பற்பல வொழுக்கும் விட்டுச்
செறிந்தொரு காலத்திற் றானுந் தெரிவையு மொருங்கு துய்த்துப்
பிறிந்திலனாகிக் காமப் பித்தினிற் பெரியவ னானான்.
37
1108இன்பமுஞ் சுமதி தன்பா லின்பமுஞ் சமமாக் கொண்டும்
பொன்பல வணியு மற்றும் புகழொடு மறிவி னோடுந்
தன்பர மாக்கிக் கொண்டு தபனிய மில்லா ரென்மாட்
டன்பின ராயி னென்னா மகல்கென்றாள் வளரே மாங்கி.
38
1109இளமையே கவினே கீர்த்தி யெறுழ்கலை யிங்கி தத்தின்
வளமையே யன்பே நல்ல வருணமே யேக போகம்
விளைவுசெய் திறனே மற்று மிக்குள ரேனும் பொன்னில்
தளர்வின ராயி ஞ்சே யிருமனத் தைய லார்க்கு.
39
1110இருமனப் பெண்டுங் கவரு மேமமாந் திருவை நீக்குங்
கருவியென் றறிஞ ரஞ்சக் கலங்கஞர் சுமதி யெய்திப்
பொருவிறன் றாதை யானோன் புரோகித வுரிமை பூண்ட
வெருளறு காசு மீர கண்டத்து வேந்தைச் சார்ந்தான்.
40
1111தெரிவுறு குரவன் மைந்தன் தேம்பிய வறுமை நோக்கி
எரிமணிக் கலனுந் தூசு மிரணியக் குவையு நல்கி
உரிமைசெய் தரைய னேவ வொய்யென மீண்டு காளை
வரிசையி னொடுமே மாங்கி வளமனை யகத்துப் புக்கான்.
41
1112என்னுயிர் வந்த தோவென் றெதிர்கொடு வணங்கி யென்னே
முன்னர்யா னசதி யாட மொய்பொருட் கேக லாமோ
வன்னதுங் கவலை யின்றி யாடுதற் கேது வென்றே
பின்னுறத் தடாமை நின்றேன் பெருமவந் தனையே யென்றால்.
42
1113நகையினா னல்ல வல்ல நவிற்றினும் பெரியோர் மாட்டுந் 
தொகைபடு மின்ன னம்பாற் சூழ்வதொன் றன்றொ வென்று
தகையெழில் வாடு வேற்குன் றாமரை முகத்தைக் காட்டி
மிகைவள மளித்தா யுய்ந்தே னென்றனள் விழிநீர் வாக்கி.
43
1114பருகுவ தன்ன காமர்ப் பைந்தொடி பொய்மெய் யாக
உருகினன் வருந்த லென்னா வோடரித் தடங்க ணின்றும்
பெருகிய புனலைத் தானைப் பெட்பொடுங் கரங்கொண் டொற்றி
முருகிய கூந்தல் பின்னி முன்புபோ லிருந்தாள் சின்னாள்.
44
1115பூவிரைச் சாந்த மாதிப் பொருள்கொளா தொழிது மேனும்
ஆவியி னன்ன காளா யமுதுணா திருத்த லாமோ
நீவிரைந் தளித்த யாவு நீங்கின வென்றே மாங்கி
ஓவியம் வாய்விண் டென்ன வுரைத்தனள் சுமதி கேட்டான்.
45
1116கரவிலர் தம்மைச் சார்ந்து காஞ்சன மிரந்து நல்கி
விரவினன் சின்னாட் பின்னர் விடலைய ரோடுஞ் சென்று
பரவுமுற் கலதே யத்திற் பகர்பர்க்க தேவ னில்லின்
இரவிடைப் புகுந்து செம்பொ னாதிக ளெடுத்தா னன்றே.
46
1117எடுத்திடு மரவங் காதி னெய்தலும் விழித்துப் பார்ப்பான்
அடுத்தனர் கள்ளர் கூவென் றகத்திடைத் துயில்கின் றாரைப்
புடைத்தன னெழுப்ப வல்லே பூசுரன் றலையை வீட்டி
மடுத்தபல் பொருளி னோடு மீண்டவள் மனையைச் சார்ந்தான்.
47
1118உடங்குபோய் மீண்ட தூர்த்த ருயிர்க்கொலை புரிந்து பாவந்
தொடங்கிய சுமதிக் கன்று துராசார னெனும்பேர் நாட்டி
விடங்கனி விழியி னாட்கும் வெங்கொலை கூற வன்னாள்
குடங்கையிற் செவ்கள் பொத்திக் குழைந்துளத் திதனைக் கொண்டாள்.
48
1119வேறு
கைதவ மிழைத்தலுங் களவு செய்தலும்
ஐதுயிர் கோறலு மறத்தைக் கோறலும்
பொய்தவ வுரைத்தலும் பொருளி ழத்தலும்
எய்திய காமத்தி னன்றி யில்லையே.
49
1120நன்றியைக் கோறலும் நலனைக் கோறலும்
வெம்றியைக் கோறலும் விவேகங் கோறலும்
துன்றிய வொக்கலைத் துறந்து நிற்றலும்
கன்றிய காமத்தி னன்றி யில்லையே.
50
1121பகையினை யாக்கலும் பாவ மாக்கலும்
நகையினை யாக்கலு நவையை யாக்கலுந்
திகைமன மாக்கலுஞ் சிறுமை யாக்கலும்
அகைதரு காமத்தி னன்றி யில்லையே.
51
1122பிணிபல துறுத்தலும் பேது செய்தலுந்
துணிதரு பெரியவர் தொடர்பு நீங்கலுந்
தணிதரு சிறியவர் சார்புண் டாகலும்
அணிதரு காமத்தி னன்றி யில்லையே.
52
1123உயிரினு மோம்பிடத் தகுவ யாவையும்
அயர்வுசெய் தயர்வுசெய் தொழிக்கத் தக்கதாய்ச்
செயிரின யாவையுஞ் செறிக்க வல்லதாய்ப்
பயிலிய காமநோ யஞ்சற் பாலதே.
53
1124வருணமு மொழுக்கமு மல்லற் கற்பொடும்
ஒருவியன் பனைச்செகுத் துலப்பி றீங்குமுன்
மருவின மின்னுநம் மாட்டு ளாரினும்
வெருவுறு கொலைப்பழி மேவற் பாலதோ.
54
1125என்றுளத் தெண்ணியே மாங்கி யன்புமிக்
கொன்றிய சுமதியை யொழிப மற்றவன்
துன்றிய பெருநிதித் தோற்றங் காட்டினிம்
மன்றலங் குழல்வய மாமென் றெண்ணினான். 5
55
1126தேங்குநீர் மாளவ தேயத் தெய்தினான்
ஆங்குமோ ரந்தண னாவி மாற்றினான்
வீங்கிய பொருளொடு மீண்டு சென்றுவிண்
ஓங்குமே மாங்கிவா ழுறையு ளண்ணினான்.
56
1127தேவரும் விழைதகுந் திருவன் னாளிவன்
நீவவு நீங்கல னீண்ட விந்நகர்
பாவியின் பொருட்டுநாம் பற்றி யப்புறம்
போவதே கடனெனப் போயி னாளரோ.
57
1128பிரிவுறு மன்றிலிற் பேதுற் றன்னவன்
தெரிவையைக் காணுவான் றேடிச் செல்வுழிக்
கரிபல திரியுந்தென் கயிலை யெல்லையின்
விரியிணர்க் கானிடை விழுந்து மாய்ந்தனன்.
58
1129பருப்பதந் தாழ்ந்தவப் பரிசின் வெள்ளியம்
பொருப்பய லிறந்தவன் புலாலு டம்பினை
விருப்பொடு நாய்நரி மிசைய வீர்த்துப்போய்த்
திருப்பொலி காஞ்சியந் தீர்த்தத் திட்டவே.
59
1130ஆதியம் புரத்திடை யாக்கை வீழ்ந்ததும்
போதிவர் காஞ்சியம் புனலிற் றோய்ந்ததுங்
கோதினை முழுவதுங் குமைத்தச் செம்மலைச்
சோதிதன் சிவபுரச் சூழல் சேர்த்தவே.
60
1131வேண்டிய போகங்கள் வேண்டி யாங்குறீஇ
ஆண்டகைச் சுமதியங் கமர்ந்து வாழ்ந்தனன்
ஈண்டிய தீவினை யிடைவி லங்கினு
மாண்டநல் வினையினர் வரத்திற் றாழ்வரோ.
61
1132வசுகுந்தப் பகைஞரை மறுக்கும் வாயுறீஇப்
பசுகுந்தங் காத்தொசித் திட்ட பண்ணவன்
சிசுகுந்த விழியினார்க் கென்னுந் தேசுற
முசுகுந்த னென்பவன் முறையிற் பூசித்தான்.
62
1133அவையகத் துறுபழி யகற்ற வேண்டினு
நவைபயில் தீவினை நசிக்க வேண்டினும்
எவையெவை வேண்டினு மீய வல்லதே
கவைபயில் போதிசூழ் கயிலை மாநகர்.
63
1134என்றுரை கிளத்தலு மிறைஞ்சி மாதவர்
கொன்றையஞ் சடைமுடிக் குழகற் கன்புசெய்
நன்றுயர் முசுகுந்த னடையெ லாம்விரித்
தொன்றுற வுரையென வுரைக்குஞ் சூதனே.
64

சுமதி கதிபெறு படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் – 1134
------------------------ 

16. முசுகுந்தன் முகம்பெறு படலம் (1135 -1188)

1135வள்ளவாய் நறுங்கமல மதுவுண்ட களிவண்டின்
தெள்ளுதீஞ் சுவைப்பாட றிசைதிசையு மெழும்பொய்கை
கள்ளறாப் பொழில்புடைசூழ் கலிங்கதே யத்தொருவன்
துள்ளுமான் மறிக்கரத்தார் துணையடிப்பூ சனைபுரிவான்.
1
1136மறைமுழுதும் பயின்றுணர்ந்து மறைமுடிவுக் கெட்டாத
பிறைவளருஞ் சடைமுடியார் பெய்கழற்சே வடிமறவா
நிறைதருகா தலின்மறையோ னெடுந்தவத்தா லொருபுதல்வி
அறைதருமற் றவன்மனைவி யகட்டிடைவந் தவதரித்தாள்.
2
1137சடங்கனைத்தும் விதியற்றாற் றகத்தாதை யிதத்தொழிலே
தொடக்கவரு மகட்கியற்றிச் சுகுமாரி யென்றழைத்தான்
அடங்கவரு நல்வினையி னங்குரம்போல் வளர்காலை
மடங்கழுவும் பண்டுபுரி மாதவத்தின் பயனணைய. 3
3
1138தகுமாறி தன்றெனவே சகத்தினர்தம் வாழ்க்கையினை
நகுமாறி ராறிரட்டி நவைவளர்தத் துவமயக்க
முகுமாறி யானையுரித் தவரடிப்பூசனைபுரியச்
சுகுமாரி தாதைகழல் தொழுதிரந்தா ளவன்மகிழா.
4
1139திரும்பியளற் றழுந்தாமந் திரவதிகா ரங்கொடுத்துக்
கரும்புநுனி தொடுத்தருந்துங் கடப்பாட்டி னினித்தற்பின்
விரும்புமர்ச் சனையதிகா ரங்கொடுத்தான் விழைந்தேற்றுச்
சுரும்புளரு நறுங்கோதைச் சுகுமாரி பணிபுரிவாள்.
5
1140வேறு
கனைகடன் முகட்டிற் கதிரவ னெழுமுன் கடிகையோ ரைந்தென விழித்துத்
துனையமெய்ச் சுத்தி கூடிய தியற்றித் தூயவெண் ணீறுநன் கணிந்து
வினைமுழு தகற்றுஞ் சதாசிவ னுருவம் விளங்கவுள் ளத்திடை நினைந்து
மனையதன் புறம்போ யியக்கமோ ரிரண்டு மரபுளி யொருவிக்கோ றின்று. 6
6
1141கந்தமிக் கரும்பு மலர்த்தடம் படிந்து கமழ்ந்தவெண் ணீறுடல் வயக்கிச்
சுந்தர மிகுந்த நந்தன வனத்துத் தூத்தகு பிடகைகொண் டேகி
நந்தியா வட்ட மலரிமந் தார ஞாழனா கம்வழை வகுளங்
கொந்தவிழ் செருந்தி பிண்டிபா திரிகூ தாளஞ்சம் பகங்கன்னி காரம்.
7
1142பொன்னிணர்க் கடுக்கை செம்மலர்க் கொன்றை புன்னைவெட் பாலைசெவ் வகத்தி
நன்னிற வேங்கை கொக்குமந் தாரை நறியபொன் னாவிரை வெட்சி
பன்னுபன் மத்த மாதுளை பட்டி பருத்திசெவ் வரத்தைபொற் காஞ்சி
துன்னிய புரசு கடம்பெருக் கழிஞ்சி றும்பைபன் னீர்திரு வாத்தி.
8
1143
மராமலர் கரிய செம்பைவெண் டிலோத்தம் வழுதுணை கண்டங்கத் திரிமா
குராமலர் தாளி கூத்தனற் குதம்பை கோட்டம்பூ கஞ்சத குப்பை
அராவணைக் கடவுள் காந்திசே வகன்பூ வாத்திகூ விளம்வன்னி யறுகு
பராவுசெவ் வந்தி நாவல்பூந் துளசி பச்சைவெண் காக்கணம் பூளை.
9
1144கருவிளை வெள்ளைக் காசைபைந் தருப்பை காரைசெங் கீரைநீர் முள்ளி
மருதிரு வேலி வேரிலா மிச்ச வேர்வெட்டி வேர்மஞ்ச ணாத்தி
பருதியின் காந்தி யெலுமிச்சை நரந்தம் பாரிசா தகம்புலி தொடக்கி
தருவளர் வல்லி சதகஞ் சங்க வர்த்தனஞ் சந்தனங் கிளுவை. 0
10
1145வெள்ளின்மா விலிங்கை யோரிதழ்க் கஞ்சம் வெண்மலர் நாணனா யுருவி
எள்ளலர் கொட்டைக் கரந்தைநற் கரந்தை யிலந்தைதண் ணீர்மிட்டா னெல்லி
ஒள்ளிய நொச்சி கேதகை வாகை யுச்சிப்புல் குச்சிப்புல் காந்தள்
தள்ளருஞ் சாலிப் பயிர்கருங் காலி தான்றிபூங் குருந்துதாம் பூலம்.
11
1146மருமருக் கொழுந்து மாதவி மௌளவன் மல்லிகை மாலதி மயிலை
முருகவிழ் குளவி குமுதமென் குவளை முண்டக நெய்தலும் பிறவுங்
குருமணிக் குழையின் பாங்கிய ரோடு கொய்துமீண் டகன்மனை குறுகி
அருவுரு வகன்ற சிவபரம் பொருளை யருச்சனை புரியுநா ளொருநாள்.
12
1147வேறு
தாது கமழுந் திருப்பள்ளித் தாமங் கொய்ய முன்புபோற்
போது விரியு முய்யானம் புகுங்காற் சுகுமா ரியைக்கண்டு
காது மநங்கன் கணையலைப்பக் காதன் மிகுந்து விதூமனென
ஓதுபெயரான் காந்தருவ னொருவ னவள்பா லடுத்துரைப்பான்.
13
1148பொன்னா னியன்ற வோவியமே போதா னியன்ற மாலிகையே
மின்னா னியன்ற பாவையே வேலை யெழுந்த சுவையமிழ்தே
என்னா ருயிரே நினையடுத்தே னெனக்கு மனைவாழ்க் கையளாகில்
நின்னால் விழையப் படுபொருள்க ணிரப்பிப் பணிசெய் குவலென்றான்.
14
1149கன்னி யுரைப்பாள் காந்தருவக் காளாய் போகத் திடையார்வம்
என்னு மிலன்முப் புரமெரித்த விறைவ னடிப்பூ சனைப்பத்தி
மன்னு முடையே னாதலினின் மனையா ளாதற் கிசைகல்லேன்
நன்னர் வனத்துட் புகுந்ததுந்தேர் நம்பற் கலர்கொய் வான்பொருட்டே.
15
1150தூயை யெனினீ யெனையீங்குத் தொடரா துனது பதிச்சென்மோ
மாயை தொடராப் பரம்பொருட்கு மலர்கள் பறிப்பச் சேருமென
வேயை நிகர்த்த தடந்தோளாய் விழிவே லேவி யுயிர்வெளவித்
தீயை நிகர்த்த நெடுங்காமஞ் செறித்தாய் செறித்தாய் செறித்தாயால்
16
1151வாளா தேகல் வழக்கேயோ மருந்தா யளிக்கு மொருநீநின்
ஆளா யொழிந்தே னெனக்கிரங்கா யணங்கே யென்றுவி தூமனெதிர்
மீளான் மீட்டு மிரந்தானை வெய்து விழித்துச் சுகுமாரி 
காளாய் கவிபோற் பிடிவிடாய் கவியே யாதி யெனச்சபித்தாள்.
17
1152தீய பாலை யார்தடுப்பார் தெய்வ மகளிர் மனங்கவரும்
காய வாழ்க்கைக் காந்தருவன் கலையாய் வரைதோ றுழிதருங்கால்
தூய தான விமையவரைச் சூழ லணுகி வதிகின்றான்
ஆய காலை யொருவைக லமலன் வில்லத் தடியமர்ந்தான்.
18
1153வேறு
மைம்மெழுகி யன்னமுக மாமுசு வெழுந்து
கைம்மிளிர் கனற்கடவுள் காமுற விருந்த
வைம்முளணி கூவிளம ரத்துகள வல்லே
பைம்மிளிரி லைச்சருகு பல்லவ முதிர்ந்த.
19
1154உதிர்ந்தசரு கண்ணலுரு வத்தினை மறைப்ப
வதிர்ந்திட மிருந்தவ ளழன்றதனை நோக்கி
எதிர்ந்தவர்க ளுய்தலரி யாவிறைவன் மெய்யின்
முதிர்ந்தசரு கார்த்தமுசு வுக்கிது கிளந்தாள்.
20
1155மாதுபுரி சாபமு மறந்துலக நாதன்
சோதியுரு விற்சருகு துன்னவினை செய்தாய்
நீதிகொடு சாபமிது நீங்கவரு போது
மோதுமுசு வின்முக முனக்கமைக வென்றாள்.
21
1156வண்ணவுரை கேட்டுமணி கண்டனருள் செய்வான்
பெண்ணரசி யாரையிது பேசிமுனி கின்றாய்
எண்ணரிய தீவினையு மீறுசெயும் வில்ல
நண்ணவெம தின்னுருவ நல்வினைசெய் தன்றே.
22
1157அன்னதொரு நல்வினை யடுத்ததிற னோக்கி
இன்னமுசு வுக்கிறைமை யீந்துலக மெல்லாந்
தன்னிகரி லாதவொரு சக்கர நடாத்த
மன்னிய வரம்பல வழங்கவிசை வுற்றாம்.
23
1158வேட்டைபுரி வேடனெழு வேங்கையினை யஞ்சி
நாட்டமய ராதுநனி வில்லநம துச்சி
போட்டுயர் கதிக்கணவன் புக்கதறி யாய்கொல்
ஏட்டையுற நீவெகுள லென்றுகை யமைத்தான்.
24
1159மங்கையுமை கேட்டுமகிழ் கூர்ந்தருள் வழங்க
அங்கணரும் வம்மென வழைத்துலக மெல்லாந்
துங்கமுசு குந்தனெனத் தோன்றியர சாள்கென்
றொங்குவர நல்கியுமை யோடவண் மறைந்தான்.
25
1160வேறு
பசுவு யர்த்திய பரமனா ரருளிய வரத்தால்
விசுவம் யாவையும் வெண்குடை நீழலிற் குளிர்ப்ப
முசுமு கத்துடன் முறைபுரி யரையர்தங் குலத்துள்
அசுவ மேதநூ றாற்றினோ னஞர்கெட வுதித்தான்.
26
1161வளர்ந்து பல்வகைக் கலைகளு மறைகளு மற்றும்
அளந்து மல்கிய வைம்பெருஞ் சுற்றமுங் குழுவுந்
தளர்ந்தி டாதபல் லுறுப்புமே வரத்தழீஇக் கலியைப்
பிளந்து நீதியின் முசுகுந்தன் பேருல காண்டான்.
27
1162ஆளு நாள்களி னகிதவுட் டிரனெனு மவுணன்
நீளு மாண்மையி னெடுவிசும் பமரை யுழக்கித்
தோளி னாற்றலால் வலாரியைப் புறங்கண்டு துரக்க
மூளு மாசிடை முழுகுறத் தாட்படுத் திருந்தான்.
28
1163அகித வுட்டிர னாலர சிழந்தவச் சிரத்தோன்
துகிலி கைக்குல மாட்டயர் துறக்கநா டொழிந்து
விகிர்த னுக்கொரு மாமனாம் விலங்கலி னொருசார்
நெகிழு ளத்தினன் மறைந்துவாழ் நீர்மைய னொருநாள்.
29
1164முருகு பூம்பொழின் முதிர்ந்தவத் திருவரைச் சாரற்
பெருகு மாதவ மிழைத்திடும் பிருகுமா முனிவன்
தருகு மாரியைக் கண்டனன் றகையணங் குறுத்த
அருகு போந்துகைப் பற்றியீர்த் தனனறந் துளங்க.
30
1165வேத மெய்ப்பொரு டெள்ளிய விழுத்தவ னறிந்து
மாதர் தங்களை வன்மையிற் பற்றுத லரக்கர்
நீதி யன்னது நிகழ்த்தலி னரக்கனா குதியென்
றோதி விட்டன னும்பர்கோ னரக்கனா யுழன்றான்.
31
1166அரசி ழந்தன னரக்கனா உழன்றனன் வலாரி
விரசு தீவினை விளைந்தவா றென்னென விம்மிப்
பரசு பொன்னொடு தேவரும் பாரகத் திழிந்து
முரசு கண்படா முசுகுந்தன் பேரவை யடுத்தார்.
32
1167ஆசி கூறினர் முகமனு மியம்பின ரவுணர்
பாசி போன்றுநின் றுடற்றலிற் பாணிவச் சிரத்தோன்
கூசி நீத்தது மரக்கனா யுழன்றதுங் குழைந்து
பேசி வானகங் காவெனப் பெரிதிரந் தனரால்.
33
11680தேவர் தம்மிடர் தீர்த்திடே னாயினிச் செனனத்
தாவ தென்னையென் றமரர்க ளுடன்விசும் பேகித்
தாவ ரும்படை யகிதவுட் டிரனுயிர் சாடிப்
பூவர் கற்பகப் பொழில்முசு குந்தன்காத் தனனால்.
34
1169வேறு
இந்திரன் வலியிழந் தின்னல் கோட்படக்
கந்தற நின்றுளங் கலங்கு மெங்களை
வந்தனை புரந்தனை மன்ன விங்கிருந்
தந்தமி லரசுசெய் தருளென் றார்சுரர்.
35
1170கடவுளர் மொழிகட வாமை மன்னவன்
அடலரி யாதனத் தாங்கு வைகுபு
புடவியு மேனைய பொழிலுங் காத்தனன்
இடர்முழு தொழிந்தன வுலகி ரேழுமே.
36
1171இன்னண மரசுசெய் திருக்குங் காலத்து
மன்னவ னொருதின மாகர் சூழ்தரப்
பொன்னணை மீமிசைப் பொலிய வைகினா
னென்னரு மவரவர் பணியி யற்றினார்.
37
1172நாடக மகளிர்க ணடிக்கப் புக்கனர்
பாடகத் தளிரடிப் பாவை மார்களுள்
ஆடகச் சிலம்பணி யரம்பை நோக்கினாள்
பீடக மன்னவன் வதனப் பெற்றியே.
38
1173பாங்குறு மாதரைப் பார்த்துப் பையவே
ஈங்கிவன் முசுகொலோ வென்ரறு நக்கனள்
ஆங்கது குறிப்பினா லறிந்து மன்னவன்
வீங்கிய சமழ்ப்புள மேவி னானரோ
39
1174வள்ளலாய் வீரனாய் வாய்மை யாளனாய்த்
தெள்ளிய நூலனாய்ச் செல்வச் செம்மலாய்
ஒள்ளிய பலகுண முடைய னாயினும்
எள்ளிய நகையினா லிறைமை நீத்தனன்.
40
1175இழித்தகு முசுமுக மிகந்து மாநுடச்
செழித்தநன் முகனுறச் சிந்தை செய்தனன்
சுழித்தெழுங் கொழுந்தழ றுருத்தி டுங்குண்டத்
துழித்திரள் வச்சிரத் தூணு றுத்தினான்.
41
1176நேரிய மதலையி னிவர்ந்து நின்றுதன்
சீரிய குலம்வளர் தேவ னாகிய
சூரியன் றனையுளந் தொழுது நோற்றனன்
வீரிய முசுகுந்த னென்னும் வேந்தனே.
42
1177வழிபடு பரிதிமுன் வந்து சொல்லுமால்
விழிசிவந் துமைமகள் விளைத்த சாபமீ
தொழிவகை புரிதவ மொன்று மில்லைகாண்
அழிவறு சிவபிரா னடித்தொண் டல்லதே.
43
1178கங்கையஞ் சடைமுடிக் கலைவெண் டிங்களார்
தங்கிய தலந்தொறுஞ் சார்ந்து போற்றுறிற்
பங்கமி லாநநம் பணிக்கு மென்றலும்
அங்குறு தவத்தினை யகன்று மன்னவன்.
44
1179
திரைதவழ் தீர்த்தங்கள் பலவுஞ் சென்றுதோய்ந்
தரையர வசைத்தெரி யாடு மண்ணலார்
தரைவளர் தலந்தொருஞ் சார்ந்து போற்றினான்
வரைவளர் முசுமுக மாறக் கண்டிலான்.
45
1180கவலையுற் றென்னினிக் கைக்கொள் வாமெனச்
சவலைய மனத்தனாய்த் தளரு மேல்வையின்
அவலமுற் றழியலென் றடுத்து நாரதன்
குவலயத் தானுளங் குளிர்ப்ப வோதுவான்.
46
1181வேறு
நீரூர் கலிகன்ம நாசினி யென்றொரு நீனதிசேர்
பேரூ ரெனுந்தலத் தேகுகண் டாய்பிழை யாதுவரம்
பாரூர் பலவுந் தொழும்பட்டி நாதர் பணித்தருள்வார்
காரூர் கொடைக்கரத் தாயென்று கூறிக் கரந்தனனே.
47
1182ஊனூற்றும் வேற்கை நரபதி யாங்குவந் தேகிநறுந்
தேனூற்றும் பூநதிக் காஞ்சியி னாடிச் செழுங்கருங்கார்
வானூற்றும் போதி வனத்தாதி நாதர் மலரடியிற்
கானூற்றும் போதுக டூஉய்ப்பணிந் தாடிக் கசிந்தனனே.
48
1183வழிநாட் கலிகன்ம நாசினி தீரத்து மாமறையோர்
பழிதீர நாடும் விதியா லிலிங்கப் பதிட்டைசெய்து
கழிகா தலின்மிகப் பூசனை யாற்றிக் களித்திருந்தான்
சுழிநீர் நதியிற் பின்னாளும் வழிபடத் தோய்ந்தனனே.
49
1184இருகால் விளைந்த வெறுழ்வலிச் சாப மிரண்டுவைகல்
வருநீர் படிய மடிந்துமற் றோர்வைகன் மூழ்குதலால்
ஒருவா முசுமுக நன்முக மாக வுவந்தரையன்
அருளார் மறையவர்க் கார்த்தினன் செம்பொனு மாடையுமே.
50
1185அணிகலந் தூசு முதலாம் பொருளம லற்களித்துப்
பணிபல வாற்றி விழாப்பங் குனிமதி யத்தெடுத்து
மணிமருள் கண்டரைத் தென்கயி லாயம் வடகயிலைத்
தணிவறு வைப்பினும் பூசனை சாலவி யற்றினனே.
51
1186தீர்த்தம் பலவும் படிந்தாடித் தீர்த்தன் றளிபலவும்
பார்த்து வணங்கி மருதோங் கியபனி மால்வரைபோய்க்
கூர்த்த நுதிவடி வேற்கரத் தானைக் குழைந்திறைஞ்சி
ஆர்த்தி வளம்பொரு டன்பதி புக்குல காண்டனனே.
52
1187முருகார் கலிகன்ம நாசினி மூழ்கி முசுகுந்தனுக்
கருளாங் கருள்சிவ லிங்கங்கண் டேத்தின ராக்கையிடை
வெருளார் பிணிமுத லானவை தீர்ந்துவிண் ணோர்வியப்பப்
பொருளார்ந் திரும்புக ழீட்டிமண் ணாண்டின்பம் பூணுவரே.
53
1188வேறு
என்று கூறிய சூதனை மாதவ ரேத்தினார்
நன்று கூறினை நாக மிழந்த வலாரிதான்
அன்ற ரக்க வுருக்கொ டலைந்தன னென்றனை
பின்றை யுற்றதும் பேசெனப் பேசுவன் சூதனே.
54

முசுகுந்தன் முகம்பெறு படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் – 1188

17. இந்திரன் சாபந்தீர்ந்த படலம் (1189-1214)

1189தாயி லாத தனிமக வென்னவுந் தண்ணிய
தோய நீங்கு சுருள்விரி பைம்பயி ரென்னவு
மேய வாருயிர் நீங்குட லென்னவும் விண்ணெலாந்
தூய வேந்த னிலாமை வனப்புத் துறந்தவே.
1
1190விலாழி மும்மத நான்மருப் பேழுயர் வேழமூர்
வலாரி நீங்கினன் மானவன் மாமுசு குந்தனுஞ்
சுலாவு நாண்கொடு போயின னென்னினிச் சூழ்வெனக்
குலால னேமியி னெஞ்சுகொண் டும்பர் குழைந்தனர்.
2
1191ஆய காலையி னரத னங்க ணடுத்தனன்
நீயி ராகுலம் வீட்டுதிர் நீண்முடி வேந்தனைப்
போய ணாவிப் புணர்ந்த வரக்க வுருத்தனைச்
சாய நீவித் தருவலென் றவ்வயி னீங்கினான்.
3
1192மாலை வெள்ளரு வித்திர டூங்க மதுமலர்ச்
சோலை சூழ்ந்த பனிவரைச் சாரலைத் துன்னினான்
காலை மாலையும் யாமம்முங் கான்முக மேல்கறங்
கோலை போலுழி தந்த வரக்கனை யுற்றனன்.
4
1193இடர்ப்ப டுந்தனக் கின்னுரை வெய்திய தாமென
வடர்ப்ப மேல்வரு மிந்திர னாநநத் தங்கைசேர்
கடத்து நீரொரு கையிடை வாங்கி யெறிந்தனன்
மடத்தை நீற்று மனுவெனு மைந்தெழுத் தோதியே.
5
1194ஐந்தெ ழுத்து நவின்றற லாநநத் தெற்றலு
முந்து றுத்த முரணடி பிந்துற வாங்கினான்
மைந்து கொண்ட மயக்கம் வறிது தணந்தனன்
இந்தி ரன்செயல் கண்டன னீர்ஞ்சடை நாரதன்.
6
1195வருக வென்று நடந்தனன் வேதியன் மன்னனும்
பருகு பாற்பசு வைத்தொடர் கன்றிற் படர்ந்தனன்
பொருவின் மேலைச் சிதம்பரத் தெல்லை புகுந்தனன்
வெருவின் மாதவன் வேந்தனவ் வெல்லை மிதித்திலன்.
7
1196கண்டு நாரதனெந்தினிப் போக்கெனக் கையினால்
அண்டர் கோன்கரம் பற்றின னீர்த்தரி தேகிநீர்
மண்டு காஞ்சி நதியி னழுத்தினன் மன்னவன்
கொண்ட சாப வரக்க வுருக்குலைந் தோடிற்றே.
8
1197வேறு
உறங்கிக் கண்விழித் தாலென வும்பர்கோன்
மறங்கி டந்த வடிவது நீங்கலும்
பிறங்கு முன்னெழின் மேனியும் பெற்றியும்
அறங்கி ளர்ந்த வறிவொடு மெய்தினான்.
9
1198இருந்த தெவ்வுழி யெவ்வுழி நின்றனம்
பொருந்து செய்தியென் னோவெனப் புந்தியின்
மருண்டு வார்சடை மாதவன் றாண்மலர்
தெருண்ட சிந்தையி னான்சிரந் தீட்டினான்.
10
1199மகதி வீணை வடித்திசை தேக்குகைப்
பகவ வீங்குப் படர்ந்ததென் னோதென
நகைமு கத்தொடு நாரதன் றானவர்
பகைஞ கேளெனப் பட்டது கூறுவான்.
11
1200அகித வுட்டிர னாலலைப் புண்டுநீ
புகலி டமின்றிப் பொன்னிமி யம்புகுந்
திகழின் வைகுழி யெய்து பிருகுவின்
மகளைக் காமுற்று வண்கரம் பற்றினாய்.
12
1201சுரக்குங் கோபத்துத் தொன்முனி சீறலும்
அரக்க னாயினை யைய ரதுதெரிந்
திரக்க மாமுசு குந்தன்விண் ணெய்தினான்
கரக்கக் காதினன் காழ்த்த வவுணரை.
13
1202வள்ள லங்கு வதிவுழி மாதராள்
எள்ள விண்ண மிகந்தித் தடநதித்
தெள்ளு நீரிற் படிந்த சிறப்பினால்
நள்ளு மாநுட நன்முகங் கொண்டனன்.
14
1203விசும்பு தவ்வென வேந்தநிற் பற்றியா
னிசும்பு மால்வரை கானகம் யாவுநீத்
தசும்பு பைம்பொ னவிருமிக் காஞ்சியின்
பசும்பு னற்படி வித்தனன் காண்டியால்.
15
1204அரக்க னாகிய சாப மகன்றது
புரக்கு நின்னுருப் பூண்டனை யென்றலும்
பரக்கு மோகைப் பரவை படிந்தனன்
கரக்குன் றூருங் கடவுளர் வேந்தனே.
16
1205பொறியி லேனைப் பொருட்படுத் தாய்க்கும்விண்
நெறியின் வைத்த நிருபற்கும் யான்செயுங்
குறியெ திர்ப்பைக் குறித்திடி னில்லையால்
அறிவ வென்றடி மீட்டும் வணங்கினான்.
17
1206கம்ப மீருங் கலிகன்ம நாசினி
வம்பு லாவு புனலின் மறுவலும்
பம்பு வேத முறையாற் படிந்தனன்
தம்பி ரானடி சார்ந்து வணங்குவான்.
18
1207வேறு 
மாடகத் திவவு நல்யாழ் மாதவ னோடு சென்று
பாடகத் தளிர்மென் பாதப் பைங்கொடி காண மன்றுள்
நாடக நவிற்று முக்க ணம்பனா ரடியிற் செந்தேன்
றோடகம் பொதிந்த போது தூய்ப்பணிந் தாடி னானே.
19
1208கள்ளகந் துறுத்த பல்வீ கமழ்நறும் பன்னீர் நீழல்
உள்ளகந் தூய வன்ப ருறுபணி யியற்ற வைகுந்
துள்ளிய மறிமா னங்கைத் துணைவனை யுமையா ளோடு
மள்ளிலைக் குலிச வேற்கை யமரனன் பாரத் தாழ்ந்தான்.
20
1209தமனிய வுலகில் வாழுந் தச்சனைக் கூவிப் பேரூர்
அமலனுக் குவகை யார வாலயப் பணியு மற்றுங்
குமரிவல் லிருள்கால் சீக்குங் குருமணித் திரளிற் செய்வித்
திமவரை மருகன் வைகுந் தளியெலா மிறைஞ்சி னானே.
21
1210நறையிதழ்க் கமலச் சேக்கை நான்முகன் குண்டத் தியாக
முறையுளி யாற்றி விண்ணோர் முகந்துண வவிக ணல்கிப்
பிறைவளர் சடையான் மாட்டுப் பெருவரம் பலவும் பெற்று
நிறைவளந் தழைய விண்போய் நெடிதர சியற்றி வாழ்ந்தான்.
22
1211இந்திரன் சாபந் தீர்ந்த வீர்ந்துறை கரிகாற் சோழ
மைந்தினன் றுறைக்கு மேல்பால் வயங்குமற் றாங்குச் செம்பொன்
சுந்தர வெள்ளி கன்னி துகில்கல னன்ன மற்றுஞ்
சிந்தையின் மகிழ்ந்து தானஞ் செய்பவர் துறக்க மாள்வார்.
23
1212அத்துறை நறுநீ ராடி யாலயம் புகுந்து தாழ்ந்து
வித்தகன் றிருமு னானெய் விளக்கிடு வோர்கள் சுற்றக்
கொத்தொடு மிருளி னீங்கிக் குருமணி விமானத் தேகி
உத்தம சிவலோ கத்தி னுலப்பறு கற்பம் வாழ்வார்.
24
1213உரைத்தவத் துறைநீ ராடி யுமைமண வாளர்க் கன்பான்
விரைத்தபூச் சாந்தஞ் செம்பொன் வெள்ளிமற் றுலோக மாடை
டிரைத்தவெள் ளிலைக்கா யன்னஞ் செய்கரி புரவி கன்னி
தரைத்தலை யிவற்று ளொன்று சார்த்துவோர் பயன்சொல் வாரார். 5
25
1214எனவகுத் துரைத்த சூத னிணையடி முனிவர் தாழ்ந்திட்
டனகனே கரிகாற் சோழ வரையனற் றுறையொன் றாங்குப்
புனனதி யிடத்துண் டென்னப் புகன்றனை யனைய சோழன்
தனதுரு சரிதந் தன்னைச் சாற்றெனச் சாற்றுஞ் சூதன்.
26

இந்திரன் சாபந்தீர்த்த படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் – 1214. 
----------

18. கரிகாற்சோழன் கொலைப்பழி தீர்ந்த படலம் (1215-1276)

1215பொன்னி மாநதி புரக்கும் பூம்பணை
நன்னர் நாட்டினை நன்று காத்துவாழ்
மன்னர் தங்குலம் வந்து தோன்றினான்
தென்ன ரஞ்சுவிக் கிரம சிங்கனே. 1
1
1216அனைய மன்னவ னறத்தின் பேற்றினாற்
கனைக டற்புவி கலியி னீங்குற
இனைத லில்கலி கால னென்பவன்
தனைய னாயவன் சார்பிற் றோன்றினான்.
2
1217மகமி யற்றிய மதலை யெண்ணில
புகரில் கல்வியிற் பொருது வென்றுவென்
றிகல்செய் வேலினா னெளிதி னாட்டிய
புகழ்செய் தம்பமும் புகலொ ணாதவே.
3
1218வேங்கை வார்கொடி மேரு மால்வரை
தாங்க வேற்றினான் சகமெ லாந்தொழுந்
தீங்கில் காஞ்சிமா நகர்செ றிந்தகான்
நீங்க நற்குடி நிறுவி னானரோ.
4
1219ஆறி லொன்றுகொள் கடமை யன்றினார்
வீற வென்றுகொள் வெறுக்கை யுல்கினால்
ஏறு வண்பொரு ளெய்தி டும்பொருள்
கூறு நான்கினு மறங்கள் கூர்த்துளான்.
5
1220ஆக்க மில்குடிக் காறி லொன்றையுந்
தேக்கி வையகஞ் செகிற்ப ரித்தனன்
காக்கு நாளையிற் கானிற் பல்விலங்
கூக்க நோக்குபு வேட்டைக் குன்னினான்.
6
1221வேறு
தெள்ளிய மணிப்புனல் சென்று தோய்ந்தனன்
ஒள்ளிய செய்கட னூழி னாற்றினான்
அள்ளொளிப் பொற்கலத் தமுதந் துய்த்தனன்
கொள்ளரு விலைக்கலன் கொண்ட ணிந்தனன் 7
7
1222உடுப்புவன் கவயங்கொண் டுடலம் போர்த்தனன்
தொடுப்புறு கழல்கழற் றுலங்க யாத்தனன்
தடுப்பரும் படைஞரும் வலையுந் தன்புடை
அடுப்பவைங் கதிப்பரி மேல்கொண் டூர்ந்தனன்.
8
1223கானக மடுத்தனன் கதழ்ந்து வேயினர்
மானம ரிடத்துரீஇ வந்து சொற்றனர்
ஊனமில் வலைவளா யொடியெ றிந்தனர்
வேனவி றோளினான் வியங்கொ ளாளரே.
9
1224செருக்கள மெனப்பறை தெழிக்க வெங்கணும் 
முருக்குவன் ஞமலியை முடுக்கி விட்டனர்
மருக்கிளர் மலர்ப்புதல் வார்ந்த தண்டினால் 
எருக்கின ரார்த்தன ரெறுழ்ப்பு யத்தினார்.
10
1225வேறு
முழங்கி வன்கொலை வேங்கை பாய்ந்தன மும்ம தக்கரி பாய்ந்தன
தழங்கி யேனமொ டெண்கு பாய்ந்தன தாவு மான்கலை பாய்ந்தன
பழங்க ணுற்றரி யேறு பாய்ந்தன பல்கும் யாளிகள் பாய்ந்தன
வழங்கு மத்திர மன்ன முள்ளுடன் மல்கு மெய்யினம் பாய்ந்தன.
11
1226வேல்வ ழங்கின ரீட்டி விட்டனர் வெய்ய கப்பண முந்தினார்
கோல்வழங்கினர் பிண்டி பாலமுங் குந்த முஞ்சில ரேவினார்
பால்வ ளைந்தொளிர் நாந்த கம்பரு வச்சிரத்தடி யோச்சினார்
கால்வ ழக்க மறக்க னன்றுகைப் பாசம் வீசினர் கண்ணிலார்.
12
1227தலைது மிப்பன வால றுப்பன தாளி றுப்பன வாருடல்
நிலைகு ளிப்பன சோரி வீழ்ப்பன நீள்கு டர்சரி விப்பன
வலைவி ழித்துணை சூன்று குப்பன வைது மார்பு பிளப்பன
கொலைமு கத்தவர் மானின் மீது குறித்து றுத்த படைக்கலம்.
13
1228இரிந்து வீழ்வன காது வார்களை யெற்றி வீழ்வன வென்புகண்
முரிந்து வீழ்வன வொன்றை யொன்றெதிர் முட்டி வீழ்வன வன்றலை
திரிந்து வீழ்வன கூவி வீழ்வன சீறி வீழ்வன மீளியர்
சொரிந்த வாய்த மனைத்தும் வெய்து தொடர்ந்து சாடிய மான்களே.
14
1229மடைவ யிர்க்குல மெங்கு மேங்கின மாடு பம்பை யிசைத்தன
தடைப டுத்துளர் நாய்கு ரைத்தன சார்ந்து மள்ளர் தெழித்தனர்
மிடைவ லைத்திரள் சூழ்ந்த சூழல் விறந்து மான்பல வீந்தன
அடைய லர்க்குரு மேற னான்பல வாளி யாளி யடர்த்தனன்.
15
1230இளமை மான்க ளலைத்தி லார்பிணி யெய்து மான்க டொடர்ந்திலார்
வளமை மிக்கதொர் சூலு டைப்பெண் வருத்தி லார்வளர் முப்பினால்
தளர்வி லங்குகள் சாடி லாரிவை தப்ப மற்றைய மானெலாம்
வெளிறில் கேள்வியர் கைப்ப டைக்கலம் வேறு வேறட மாண்டவே.
16
1231வேறு
வேட்டைத்தலை நீங்கினன் மீளியர் பாங்கு போதக்
காட்டிற்கரி கால்வள வன்கடி தேகு வானோர்
தோட்டுக்கம லங்கள் விரிந்து சுகந்தம் வீசுஞ்
சேட்டுக்கதிர் மாமணி யோடைகண் டாங்குச் சென்றான்.
17
1232புடைமாண்ட வளம்பல நோக்குபு பூத்த பல்வீ
இடைமாண்ட நிழற்கய நோக்கியங் கெய்து முன்னர்
நடைமாண்டொரு கேழ லடுத்து நன்னீர் குடிப்பத்
தொடைமாண்ட வில்லிற்கணை யொன்று தொடுத்து விட்டான். 8
18
1233பட்டூடுரு விக்கணை பன்றி பதைத்து வீழக்
கெட்டேனொரு பூத மெழுந்து கிளக்க லுற்ற
தொட்டார்க்குரு மேறனை யாயொரு பன்றி யாமென்
றட்டாயெனை யந்தண னான்வர லாறு கேட்டி.
19
1234தொல்லைத்தவத் தால்வினை நல்லன சூழ்ந்த வென்னைச்
சொல்லிப்புவி யோர்கள் சுவிர்த்தி யெனத்து திப்பார்
வல்லைத்தெறு பூண்முலை மாதுடன் வாழு நாளில்
இல்லறத்தற நீத்து வனத்தற மெய்தி னேனால்
20
1235மனைமாதொடு சுற்றமு மென்னை வனத்தி னூடும்
வினைபோற்றொடர் வுற்றனர் வெய்து வெகுண்டு நீவார்
தனைநாடியொர் பன்றி யுருக்கொடு தம்மை வஞ்சித்
தெனையாவருங் காண்டலுறாதிங் கிருந்து ளேனால். 1
21
1236அரிதாகிய விவ்வுட னீங்குதற் கோவ றியேன்
பெரிதாகிய தாக முடற்றப் பெயர்ந்து போந்தேன்
கரிகால் வளவா வெனையட்டனை காவல் பூண்ட
உரிதாகிய நாடு முனக்கில தாகு மன்றே.
22
1237இப்பூத வுருக்கொடு நீயெவ ணுற்றி யேனும்
அப்பாலு நினைத்தொடர் வேனக லேன்மன் யானென்
றுப்பூத மடுத்தெதிர் தட்கு முளர்ந்து கொட்குந்
தப்பாதுகை யெற்று மதிர்ந்து தணக்கு மீளும்.
23
1238நன்றாஞ்செய லுன்னு மனத்தை நடுக்கு நல்ல
குன்றாவினை செய்திடின் வெய்து குலைக்கு நன்மை
பொன்றாத்துதி செய்திடி னாப்பெய ராமை பூட்டும்
ஒன்றாத கொலைப்பழி நோக்கி யுலைந்து மன்னன்.
24
1239மறையோர்தமைக் கூவியிவ் வல்வினைத் தீர்வு சொன்மின்
அறைபோயதெ னுள்ள மெனத்தொழ வந்த ணாளர்
பிறைநீரொடு வேணி முடித்த பெம்மான் றலங்கள்
நிறைகாதலிற் சென்று வணங்குதி நீங்கு மென்றார்.
25
1240அரையன்மகிழ் வுற்றர னார்நட மாடு தில்லை
விரைபொங்கிய சோலை விராவு குடந்தை யாரூர்
வரையென்றயிர் மாட நிலாவுவண் காஞ்சி காசி
புரையின்றுயர் சேது முதற்பல போற்றச் சென்றான்.
26
1241வேறு
அன்ன செவ்வி யறிந்தொரு தானவ னாண்மையான்
கன்ன சூல னெனக்கரை யப்படு நாமத்தான்
வன்னி யோம்பி மனுக்கணித் தந்தணர் மல்கிய
பொன்னி நாடுதன் றாட்படுத் தாணை புதுக்கினான்.
27
1242இனைய செய்கை நிகழ்ந்துழி யீர்ம்பனி மால்வரை
தனையை யம்மலைச் சாரலிற் றன்னுயிர் நாயகன்
புனைபு கழ்க்கழற் பூசனை யாற்றுந ளேவல்செய்
நனைம லர்க்குழ லாரொரு நால்வர் மூவரும்
28
1243மாத ரன்னவ ரோர்தினம் வைகறை ஆர்மதுப்
போது கொய்யப் புகுந்தனர் நந்தவ னத்திடை
ஓத ருங்கவி னுற்றவன் காந்தரு வன்புகக்
காதல் கொண்டு கலங்கினர் மாத ரெழுவரும்
29
1244நெடிது போது கலங்கிய நெஞ்ச நிறுத்தினர்
கடிவி ராவிய பன்மலர் கொய்து கடுகினார்
வடிகொள் சூலத்தர் பூசைசெய் காலம் வழுக்கலில்
தொடியி னார்செயல் யாதெனப் பார்ப்பதி சூழ்ந்தனள்
30
1245நெகிழ்ந்த வுள்ளத்த ராகிமுன் னேர்ந்த வொருத்தனை
மகிழ்ந்து காமுற்று மாழ்கின ரென்று மதித்தனள்
முகிழ்ந்த பூண்முலை யீர்முதல் வன்பணி தாழ்த்தினிர்
தெகிழ்ந்த காமத்துச் சிந்தனை செய்தனி ராதலான்.
31
1246தோற்றி மானுட மாதர்க ளாய்த்தொகு கற்புநூல்
ஆற்றி னீங்கி யநங்கன் பதாகையன் னீர்நுமக்
கேற்ற வாறு நடக்குக வென்று சபித்தனள்
கோற்றொ டிக்கைக் குவிமுலைக் கூர்விழிப் பார்ப்பதி.
32
1247அஞ்சி லோதியம் மேநின தேவன்மிக் காற்றினேம்
வஞ்ச மானுட ராகி மயங்குது மோவெனக்
கஞ்ச நேர்பதங் கையிணை கூப்பி யிறைஞ்சினார்
நெஞ்சு துட்கென வஞ்சுபு நேரிழை மாதரார்.
33
1248வேறு
ஆர்ங்க டித்துண ரணிந்தவ ரிடப்பா
      லமர்ந்த நாயகி திருவருள் வழங்கிப்
பீர்ங்கொ டிப்புது மலர்நிகர் நிறத்தீர்
      பேதுற் றஞ்சலிர் சீரங்க வரைப்பிற்
சார்ங்க பாணியை வழிபடு மறையோன்
      சார்ங்க நன்முனி யெனும்பெய ருடையாற்
கீர்ங்க ளோதியள் சந்திர வதியென்
      றியம்பு மாதராளில்லறம் பூண்டாள்.
34
1249நீர்ர் போயவண் மக்களா யுதித்து நிறைந்த போகங்க ணுகர்ந்திடு நாளிற்
காயி லைக்கதிர் வேலுடைக் கரிகாற் காவ லன்கொலைப் பழிதனைக் கழுவ
மாயி ரும்புவி முழுவது முய்ய வயங்கு வெள்ளியம் பலத்துணின் றாடுந்
தீயி னன்னசெம் மேனியர் பேரூர் செல்லு வானும திரும்பதி வருமால்.
35
1250வந்த கோமக னுடனவ ணேகி வார்ந்த பூம்புனற் காஞ்சிமா நதியின்
அந்த மாதியு மில்லவர் பாத மகத்து ணாடிநன் காடிமா னுடமாம்
பந்த நீங்கியீண் டுறுகவென் றருளப் பசும்பொற் பூண்முலை மாதரவ் வாறே
அந்த மார்பொழிற் சீரங்க வரைப்பிற் கலந்து மன்னவன் வரவுபார்த் திருந்தார்.
36
1251வேறு
அந்தணர் விதியாற்றா னலைதவழ் பலதீர்த்த
மந்திர நவின்வின்றாடி வளம்பயி றலந்தோறுஞ்
சுந்தர வெண்ணீறு துலங்கிய திருமேனி
எந்தையை வழிபட்டா னிலங்கயிற் கரிகாலன்.
37
1252குலவிய தலந்தோறுங் குறுகினன் வழிபட்டு
மலமரு துயர்செய்யு மரும்பழி கழியாமே
கலதிசெய் திடவுள்ளங் கவலையங் கடலாழ்ந்து
நலனொடு புணர்நாளு நணுகுங்கொ லெனநைந்தான்.
38
1253நலிகெழு துயர்தேர்ந்து நாரத முனிசென்றான்
வலிகெழு திரடிண்டோள் மன்னவன் கரிகாலன்
ஒலிகெழு துதிசெப்பி யொண்சரண் முடிதாழ்த்தான்
கலிகெழு மறைநாவன் கரிசற மொழிகிற்பான்.
39
1254மன்னவர் திறைவாங்கு மானவ கரிகால
நின்னுளம் வெருவற்க நீடிய துயர்நீவி
நன்னெறி தருசூழ்ச்சி நவிலுது மினிக்கேண்மோ
என்னுள மகலாத விருந்தல மொன்றுண்டால்.
40
1255பிப்பில வனமென்றும் பேசுமப் பேரூரின்
ஒப்பறு நதிகாஞ்சி யொழுகுவ தந்நீரின்
முப்புரி மணிமார்பர் மொழிமறை யுளியாடி
அப்பணி சடையார்தம் மடிதொழு கெனப்போனான்.
41
1256முனிவர னருள்செய்த மொழியுறு தியிற்பற்றி
வனிதையர் மயல்கூரும் வனப்புடைக் கரிகாலன்
புனிதமங் கலமல்கப் பூம்பணைப் பேரூரிற்
கனிமொழி யுமைபாகன் கழறொழ வழிக்கொண்டான்.
42
1257சந்தனக் குறடுந்தித் தபனியப் பொடிசிந்திக்
கொந்தலர் மலர்வாரிக் குளிர்நிறை காவேரி
வந்திரு புடையுந்தண் வார்கழ றொழுநீலக்
கந்தரத் தினரானைக் காவினைத் தொழப்புக்கான்.
43
1258மன்னவன் கரிகாலன் வரவினை யினிதோரா
இன்னகைத் துவர்ச்செவ்வா யிடுகிடை யெழுமாதர்
முன்னினர் தஞ்செய்கை மொழிந்தன ரிதுவோநம்
அன்னைய தருளென்னா வகமகிழ் வினனானான்.
44
1259மாதவ னமக்குய்த்த வண்மொழிக் கிழுக்கில்லை
மாதவன் வலமேய வரதர்தம் மிடநீங்கா
மாதவ ளருள்செய்த வகையிது வெனவெழுவர்
மாதர்சொற் றலினென்னா மகிழ்வுறு கரிகாலன்.
45
1260சிவிகைக ளெழுவர்க்குஞ் சேர்த்தினன் கொடுபோந்து
கவியொடு முசுவுகளக் கனியுகு பூஞ்சோலைக்
கவிழிணர் மலர்வாசங் காவதம் பலகமழும்
அவிர்மணி நெடுமாடத் தாதியம் புரிசேர்ந்தான்.
46
1261கழுமல்செய் கொலைச்சாயை கழிகெனச் சங்கற்பஞ்
செழுமறை முறையாற்றாற் செய்துயர் கரிகாலன்
ஒழுகுதண் புனற்காஞ்சி யுந்தியிற் படிவுற்றான்
முழுகினர் வருசாப முடிகென வெழுவோரும்.
47
1262ஆர்த்தினர் மணிசெம்பொன் னாடைகள் கதிர்ப்பைம்பூண்
தூர்த்தனர் குருச்செங்கட் சுரபிகன் னியர்மற்றும்
பார்த்தலை யிரப்போர்க்கும் பரமர்த மடியார்க்கும்
ஓர்த்துணர் மறையோர்க்கு முரைத்தவெண் மருமாதோ.
48
1263கோயிலை யெண்மர்களுங் குறுகினர் பலநல்கிப்
பாயின கலையல்குற் பசுமர கதவல்லி
மேயினள் பிரியாத விகிர்தனை யடியார்க்குத்
தாயினு மினியானைச் சயசய வெனத்தாழ்ந்தார்.
49
1264அகன்றது கொலைச்சாயை யரையனுக் கெழுமாதர்க்
ககன்றது வருசாப மரமக ளிர்களானார்
அகன்றழை மகிழ்பொங்க வாடினர் பலபாடி
அகன்றரை யரசாளு மண்ணலு மடவாரும்.
50
1265
அத்தின முணவோம்பி யடுதுயி லிரவெள்ளித்
தத்தலை நெடுவேலைத் தழற்கதி ரெழுகாலைப்
பைத்தெழு நதியாடிப் பவமது வாராமே
நித்திய னருள்பெறுமா நினைந்தன ரிதுசெய்தார்.
51
1266மண்டப நிருமித்து மண்டில மெழிற்குண்டங்
கண்டழல் வளர்வித்துக் காவலன் மடவாருங்
கொண்டிரு சிவலிங்கங் குரைபுன னதிப்பாங்கர்
எண்டிசை களுமுய்ய விருத்தினர் பூசித்தார்.
52
1267மருக்கிளர் மலர்சாந்த மஞ்சன மொளிதூபந்
திருக்கிளர் கலனாடை திருவமு திவைமற்றும்
ஒருக்கிய மனத்தானுய்த் துறுமுறை பூசிப்ப
எருக்கணி பெருமானா ரெதிரவர்க் கெளிவந்தார்.
53
1268மான்மழுக் கரம்வைக வார்சடை மிளிர்கிற்பக்
கான்மரு வியகூந்தற் காரிகை யிடமாக
வான்முது கிடைத்தோற்று மமலனை யெதிர்நோக்கி
வேன்மருள் விழிமாதர் வேந்தனோ டடிவீழ்ந்தார்.
54
1269வேண்டிய வரமென்னே விளம்புதி ரெனமுன்வந்
தாண்டருள் பெருமானா ரருளலு மவர்விள்வார்
மாண்டவல் வினைத்துன்பம் வருவது பிறவியினா
மீண்டினிப் பிறவாத நெறியெமக் கருளென்றார்.
55
1270அந்தியின் மதிவேய்ந்த வழகரங் கருள்செய்வார்
இந்தவைப் பிடையெம்மை யேத்துநர் பிறவார்கள்
நுந்தரத் தினுமந்த நோன்மைகொள் வரஞ்சாலத்
தந்தன மிதற்கான சான்றுமிங் குளவன்றே.
56
1271வித்தது முளையாத மேதகு புளியொன்றொன்
றத்தகு சித்தேச மரமவை முறையானே
உத்தர கயிலையினு மோங்குநம் மாலயத்தும்
உத்தம நெறிநின்றீ ரோங்கின வறிகென்றார்.
57
1272அருளிய வரம்பெற்றங் கருட்பணி பலவாற்றி
முருகுயிர் மலர்க்கொன்றை முடியவர் விடைபெற்றார்.
ஒருவிய வுமைதன்பா லுற்றேழு மாதர்களுந்
திருவிய லவளேவல் செய்தனர் வாழ்கின்றார். 8
58
1273பரிசனம் பலசூழப் படைபல புடைசூழ
உரிய தனாடெய்தி யொன்னலன் முடிவீட்டிக்
கரிசறு செங்கோலிற் கடலுல களித்திட்டான்
வரிகழற் கழன்மன்னர் மன்னவன் கரிகாலன்.
59
1274வேறு
அறமா தரிக்குங் கரிகால வரையன் றனக்கு மாதருக்கும்
பிறவா நெறிதந் தருளுதலாற் பெருநீர்க் காஞ்சி நதிதனக்கும்
உறவா யுயிர்கட் கருள்சுரக்கு முமையாள் கொழுநன் பேரூர்க்கு
மறவா துரைக்கு மூவுலகும் வழங்கும் பிறவா நெறிநாமம்.
60
1275கள்ளு மறுகாற் புள்ளினமுங் கஞலு மலரு நவமணியுந்
தெள்ளு நிறைநீர் நதிக்காஞ்சித்தீர்த்தத் திடையே கரிகால
வள்ளல் படிந்த துறைதனக்கு வழங்கு நாம மனத்தகத்துத்
தொள்ளை யகன்ற வையகத்தோர் சோழன் றுறையென் றுரைப்பாரால்.
61
1276பிறவா நெறியிற் படிந்திருக்கும் பேரன் புடையார்க் கேயன்றிப்
பிறவா நெறியென் றுரைத்தவர்க்கும் பிறவா நெறிதந் தருளுமெனப்
பிறவா நெறியின் றிறந்தெரித்துப் பிறங்கு சூதன் முனிவரர்க்குப்
பிறவா நெறியார் பள்ளனுமாம் பெற்றி தெரிய வகுத்துரைப்பான்.
62

 

கரிகாற்சோழன் கொலைப்பழி தீர்த்த படலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் - 1276
-----------------------

 

பேரூர்ப் புராணம் - பகுதி-1

பேரூர்ப் புராணம் - பகுதி-3


 

Related Content

திருப்பேரூர்க் கலம்பகம்

பேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்

பேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்