இறைவர் திருப்பெயர்: உமாமகேஸ்வரர், மங்கைபாகர். / கொடுங்குன்றநாதர், கடோரகிரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: தேனாம்பிகை, தேனாம்பாள். / குயிலமுதநாயகி, அமிர்தேஸ்வரி.
தல மரம்:
தீர்த்தம் : தேனாழிதீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், சேக்கிழார் முதலியோர்
Sthala Puranam

மலைக்கு கீழே உள்ள கோயிலான கொடுங்குன்றநாதர் சந்நிதியே பாடல் பெற்ற பதி.
இக்கோயிலில் மேற்புறம், நடுப்புறம், இடப்புறம் ஆகிய மூன்று அமைப்புகள் சொர்க்கம் - (மங்கைபாகர்), அந்தரம் - (பைரவர்), பூமி - (கடோரகிரீஸ்வரர்) என்று அழைக்கப்பட்டு சுவாமி எழுந்தருளியுள்ளார்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வானிற்பொலி வெய்தும்மழை (1.14); பாடல்கள் : சம்பந்தர் - அண்ணாமலை (2.39.2); அப்பர் - மலைவளர்த்த (6.24.9); சுந்தரர் - நிறையனூர் (7.31.5); மாணிக்கவாசகர் - மாற்றே னெனவந்த (8.14.3) திருக்கோவையார்; கபிலதேவ நாயனார் - நட்டம்நீ ஆடும் (11.22.27) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை; சேக்கிழார் - மன்றல் மலர்ப் (12.28.629 & 630) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
மலை மேலே உள்ள மூலவர் உருவங்கள் கல்யாண கோலத்தில் உள்ளன.
"பெயரில்லா மரம்" மலைமீது சுவாமி (மங்கைபாகர்) சந்நிதிக்கு அருகில் உள்ளது. இதுகாறும் இம்மரத்தை எவராலும் பெயர் தெரிந்து சொல்லப்படாமையால் "பெயரில்லா மரம்" என்றே அழைக்கின்றனர்.
Contact Address