logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

இலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) தல வரலாறு

Om symbol

இறைவர் திருப்பெயர்: அரம்பேஸ்வரர், தெய்வநாயகேஸ்வரர், சந்திரசேகரர்.

இறைவியார் திருப்பெயர்: கனககுஜாம்பிகை, கோடேந்து முலையம்மை.

தல மரம்:

தீர்த்தம் : மல்லிகை தீர்த்தம். சந்திர தீர்த்தம்

வழிபட்டோர்: அரம்பை, சம்பந்தர் - மலையினார் பருப்பதந், சேக்கிழார்

Loading map...

Sthala Puranam

ilambaiyankottur temple
இலம்பையங்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்
  • தேவர்கள் படைக்குத் தலைமையேற்று திரிபுர சம்ஹாரத்திற்கு சென்றதால் இத்தலத்தில் சிவபெருமான் தெய்வநாயகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அருகில் திருவிற்கோலம் இருப்பது நினைவு கூறத்தக்கது.
  • அரம்பையர்கள் பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி தங்கள் அழகை பாதுகாத்துக் கொள்ள தேவநாயகேஸ்வர ஸ்வாமியை வழிபட்டு விரும்பிய பேறு பெற்றார்கள்.  அரம்பையங்கோட்டூர் என்பதே பிற்காலத்தில் இலம்பையங்கோட்டூர் என்றாயிற்று என்பர்.
  • தட்சன் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினார்.
  • ஞானசம்பந்தர் இப்பக்கத்தே வருங்காலத்து, இறைவன் ஒரு சிறு பிள்ளை போலவும், பின் ஒரு முதியவர் போலவும் வழிமறித்து இக்கோயிலை உணர்த்த, உடன் வந்த அடியார்கள் உணர்ந்து கொள்ளவில்லையாம், பின்பு வெள்ளைப் பசு வடிவில் வந்து ஞானசம்பந்தரின் சிவியை முட்டிநிற்க, அப்போது சம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் வழி செல்ல, தலத்தினருகில் வந்ததும் பசு மறைந்ததாம். அப்போதுதான் இறைவனே வந்து வணர்த்தியதை உணர்ந்த ஞானசம்பந்தர் இத்திருக்கோயிலைத் தெரிந்து கொண்டு வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. இக்குறிப்பே இத்தலத்துப் பதிகத்தில் 3-வது பாடலில் சொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ilambaiyankottur temple

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்    :   சம்பந்தர்    -    1. மலையினார் பருப்பதந் (1.76); பாடல்கள்     :   சேக்கிழார்   -      அங்கு உள்ள பிற பதியில் (12.28.1004) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

Specialities

  • ilambaiyankottur temple
  • இத்தலம் மக்கள் வழக்கில் 'எலுமியன்கோட்டூர் ' என்று வழங்கப்படுகிறது.
  • மூலவர் தீண்டாத் திருமேனி; சிவலிங்கத் திருமேனி வெளிர் நிறமுடைய, செம்மண் நிறத்தில் உள்ளது. பெரிய ஆவுடையார்; அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் உள்ளது.
  • இத்தலத்துப் பதிகத்தில்தான் ஞானசம்பந்தர் "எனதுரை தனதுரையாக" என்ற தொடரை, பாடல் தொறும் அமைத்துப் பாடியுள்ளார்.
  • கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி - யோக தட்சிணாமூர்த்தி. சின் முத்திரையை இதயத்தில் வைத்துள்ள அமைப்பு; அற்புதமாக உள்ளது.
  • பங்குனி மற்றும் ஆவணி மாதத்தில் சூரிய பூஜை நடக்கிறது.
  • பாண்டியன் கோநேரின்மை கொண்டான் திரிபுவனச் சக்ரவர்த்தி ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் மணவிற்கோட்டத்தின் பகுதியான கான்றூர் நாட்டிலுள்ள இலம்பையங்கோட்டூர் என வழங்கப்பெறும்(232 of 1910), திரிபுவனச் சக்கரவர்த்தி திரிபுவன வீரதேவனது ஆட்சியில் கான்றூர் நாட்டிலுள்ள சதுர்வேதிமங்கலம் இலம்பையங் கோட்டூர் எனவும் வழங்கப் பெறும்( 234 of 1910). இறைவன் பெயர் இலம்பையங் கோட்டூர் உடையநாயனார் என்பது(234 of 1910).
  • இராஜாதிராஜதேவன் காலத்தில், தேவநாயகசுவாமிகோயில், சிவபாதசேகர மூவேந்தவேளானால் கட்டப்பட்டுள்ளது(231 of 1910). ஏனையவை விளக்கிற்கு நெல், பொன், ஆடுகள், நிலங்கள் முதலியன தானங் கொடுக்கப்பட்டதை அறிவிக்கின்றன.
முந்தைய தலம்<திருவூறல் (தக்கோலம்)

 அடுத்த தலம்>திருவிற்கோலம் (கூவம்)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னையிலிருந்தும், காஞ்சியிலிருந்தும் 'செல்லம்பட்டிடை' செல்லும் நகரப் பேருந்தில் சென்று, இறங்கி செல்லம்பட்டிடையிலிருந்து 1-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். தொடர்பு : 044 - 27692412, 09444865714
Loading map...

Related Content

திருவாட்போக்கி (ஐயர்மலை, ரத்னகிரி, சிவாயமலை)

திரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)

திருப்பாற்றுறை (திருப்பாலத்துறை) ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்

திருக்கூடலையாற்றூர்

திருஅழுந்தூர் - (தேரழுந்தூர்)