இறைவர் திருப்பெயர்: | குற்றாலநாதர், திரிகூடாசலேஸ்வரர், கூத்தர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | சிவகாமியம்மை . |
தல மரம்: | |
தீர்த்தம் : | வட அருவி. சிவ மது கங்கை, சித்திரா நதி |
வழிபட்டோர்: | அகத்தியர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், கழறிற்றறிவார் நாயனார், கபிலதேவ நாயனார், சேக்கிழார் முதலியோர் |
அகத்திய முனிவர் திருமால் உருவைக் குறுகச் செய்து சிவலிங்கமாக்கியதால் குற்றாலம் எனவும், பலாமரம் தலவிருக்ஷமாதல் பற்றிக் குறும்பலா எனவும் தலப்பெயர் ஏற்பட்டது.
.
இது நடரசப் பெருமான் நடனம் புரியும்ஐந்து சபைகளுள் ,இது சித்திர சபை.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வம்பார் குன்றம் (1.11), 2. திருந்த மதிசூடித் (2.71) குறும்பலா; பாடல்கள் : சம்பந்தர் - நெற்குன்றம் (2.39.9) குறும்பலா; அப்பர் - முற்றாத பால்மதியஞ் (6.1.9), தெள்ளும் புனற்கெடில (6.7.1 & 8), குற்றாலங் கோகரணம் (6.43.2), ஆர்ந்தவனே (6.44.6), இடைமரு தீங்கோ (6.70.3), மற்றாருந் தன்னொப்பா (6.81.4); சுந்தரர் - மூல னூர் (7.12.3), கொங்கிற் (7.47.2); மாணிக்கவாசகர் - குற்றாலத்துக் (8.2.91 வது வரி) கீர்த்தித் திருஅகவல், குற்றாலத்து எம் கூத்தா போற்றி (8.4.156 வது வரி) போற்றித் திருஅகவல், உற்றாரை யான்வேண்டேன் (8.39.3) திருப்புலம்பல்; கபிலதேவ நாயனார் - கோப்பாடி ஓடாதே (11.23.80, 84 & 87); சேக்கிழார் - பற்றார் தம் புரங்கள் (12.28.886) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், இரு பெரு வேந்தரும் (12.43.106 & 107) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.
தல புராணங்கள் |
ஆசிரியர் |
திருக்குற்றாலத் தலபுராணம் | திரிகூடராசப்ப கவிராயமூர்த்திகள் |
திருக்குற்றாலக் குறவஞ்சி / மாலை / ஊடல் | திரிகூடராசப்பக்கவிராயர் |
திருக்குற்றால நாதருலா | திரிகூடராசப்பக்கவிராயர் |
திருக்குற்றாலக் குறவஞ்சி ![]() |
திரிகூடராசப்பக்கவிராயர் |
திருக்குற்றாலச் சித்திரசபைத் திருவிருத்தம் | சுப்பிரமணிய முனிவர் |
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருநெல்வேலி, மதுரை,தென்காசி ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி வெகுவாக உள்ளது. தொடர்புக்கு :- 04633 - 283138 , 210138.