logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பூவணம்

இறைவர் திருப்பெயர்: புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி, மின்னனையாள்.

தல மரம்:

தீர்த்தம் : வைகை

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்த்தேவர், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

Tiruppuvanam temple

 

  • மூவர் பெருமக்களுக்கும் வைகை மணல் சிவலிங்கமாகத் தோன்றியமையால் மூவரும் மறுகரையிலிருந்தே-இத்தலத்தை மிதிக்க அஞ்சி-வணங்க, இறைவன்அவர்கள் தம்மை நேரே கண்டு வணங்குவதற்கு ஏதுவாக நந்தியை விலகச் செய்தருளினார். இதனால் நந்தி சாய்ந்துள்ளதை காணலாம்.

     

  • பொன்னனையாள் என்னும் ஒருத்திக்காக இறைவன் சித்தராக வந்து இரசவாதம் செய்து பொன் கொடுக்க, அவள் இதனால் சிவலிங்கம் அமைத்து வழிபட, அது மிகவும் அழகாயிருப்பதைக் கண்டு ஆசையுடன் அச்சிவலிங்கத் திருமேனியை கிள்ளி முத்தமிட்டாளாம். கிள்ளி அடையாளம் சிவலிங்கத்தில் இன்றும் காணலாம்.

.

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்     -	1. அறையார்புனலு மாமலரும் (1.64),
                                        2. மாதமர் மேனிய னாகி (3.20);

                      அப்பர்       -	1. வடிவேறு திரிசூலந் தோன்றுந் (6.18);

                      சுந்தரர்      -	1. திருவுடை யார்திரு மாலய (7.11); 

                 கருவூர்த்தேவர்    -   1. திருவருள் புரிந்தாள் (9.14) திருவிசைப்பா; 

பாடல்கள்      :    சம்பந்தர்      -      கோவண ஆடையும் (1.07.7), 
                                           பொதியிலானே பூவணத்தாய் (1.50.10), 
                                           குலாவுதிங்கட் (2.39.8); 

                      அப்பர்       -       புத்தூ ருறையும் (4.15.10), 
                                           கோவண முடுத்த (4.77.2), 
                                           பூவணத்தவன் (5.22.1), 
                                           தேனார் புனற்கெடில (6.07.11), 
                                           கோவணமோ (6.25.4), 
                                           பொன்னலத்த (6.30.8), 
                                           பொருங்கைமதக் (6.33.1), 
                                           புன்கூரார் புறம்பயத்தார் (6.51.11), 
                                           பொன்னிலங்கு (6.59.10), 
                                           புலிவலம் புத்தூர் (6.70.11), 
                                           ஐந்தலைய (6.86.8); 

              மாணிக்கவாசகர்    -       பூவணம் அதனில் (8.02.50 வது வரி பாடல்) கீர்த்தித் திருவகவல், 
                                           பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி (8.04.192 வது வரி பாடல்) போற்றித் திருவகவல்;  

           பரணதேவ நாயனார்   -       ஆர்துணையா (11.23.45) சிவபெருமான் திருவந்தாதி;  

       பட்டினத்துப் பிள்ளையார்   -       நினைவார்க் கருளும் (11.30.61) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; 

                சேக்கிழார்        -       ஆவணம் பறிக்கச் சென்ற (12.05.44) தடுத்தாட்கொண்ட புராணம், 
                                           திரு ஆலவாய் (12.21.406 & 407) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                           பற்றார் தம் புரங்கள் (12.28.886) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                           அந் நாளில் மதுரை நகர் (12.37.97,98 & 99) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.    

Specialities

 

  • புஷ்பவனகாசி, பிதுர்மோக்ஷபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் என்பன வேறு பெயர்கள்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் மதுரை - மானாமதுரை இருப்பு பாதையில் உள்ளது. பேருந்துகளும் நிறைய உள்ளன. இவ்வூர் நான்கு பகுதிகளில் 'கோட்டை' பகுதியில் கோயில் உள்ளது. தொடர்புக்கு :- 04575 - 265 082 , 265 084.

Related Content

திருபுவனம் (Thirubuvanam)