logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-tripurantaka-murthi

த்ரிபுராந்தக மூர்த்தி

த்ரிபுராந்தக மூர்த்தி
த்ரிபுராந்தக மூர்த்தி

 தாரகாசுரன் பெற்ற தனயராகிய தாரகாக்ஷன் கமலாக்ஷன் வித்யுன்மாலி யென்னு மூவரும்பிரமனை நோக்கிப் பெருங்காலந் தவம்புரிகையில்பதுமன் அவர்கட்குமுன் தோன்றக்கண்டு பணிந்துநின்று பலவகையாகத்துதித்து ''அண்ணலே! அடியேங்கட்கழி'யாவர மருளவேண்டும்” எனமலரோன் "மைந்தரே! மடியாதிருப் போர் வையகத்திலில்லைகற்பகாலங் கழியின் யானும் இந்திராதி தேவர்களும் இறப்போம். ஈசனே யிறவாதவன். ஆதலின் அது நீங்க மேம்பாடாவது மோக்ஷமாவது வேண்டிற் றருதும்எனதானவர் பொன் – வெள்ளி - இரும்பினா லமைந்த மதில்கள் பொருந்திய முப்புரம் பூமி – அந்தர - சுவர்க்க மென்னும் மூவுலகங்களிலும் வேண்டும். அவை ஆயிரவருடத்திற் கொருமுறை விரும்பிய இடத்திற்குப் பெயரவேண்டும். அப்புரமூன்றும் ஒன்றுபட்டபொழுது சிவபெருமானே ஒருகணையா லழித்தாலன்றி வேறொருவராலு மழியா வரம் வேண்டும்” எனக் கேட்கபிதாமகன் அவ்வாறே பிரசாதித்துத் தனதுலகுசார்ந்தனன்.

தாரகாக்ஷன் முதலாயினர் அளவில்லாத அவுணர் சேனையை யுடையவராய்மயன் என்னுந் தானவதச்சனை வருவித்துத் தங்கள் விருப்பின்படி பூமியி லிருப்பு மதிலும் . அந்தரத்தில் வெள்ளி மதிலும்சுவர்க்கத்திற் பொன்மதிலுமாகபலவளப்பமு நிறைந்த முப்புரம் நிருமிக்கச்செய்துதமக்கு வேண்டியதொன்றுமின்றிசிவலிங்கபூசனை முதலியவற்றைக் குறைவறச்செய்து வாழ்ந்திருப்பினும்தமது அசுரகுலத் தியற்கை குன்றாதவராய் வைகுந்த முதலிய தேவநகரங்களையும்உலகிலுள்ள பல பதிகளையும்திரிபுரத்தோடு சென்று சிதைத்து வருதலாற் சினந்த இந்திரைகேள்வன் இந்திரன் முதலிய இமையவரை யுடன் கொண்டுபோ யெதிர்த்துத்

துன்புற்றுச் சகியாமல்தேவர் குழுவுடன் திரும்பி மேருமலையின் வடபாலிற் பலகாலந் தவஞ்செய்யபரமபதி இடபாரூடராய்க் காட்சிதந்தனர். தேவர்கள் நமஸ்கரித்துத் திரிபுரத்தவர் தீமையை விண்ணப்பஞ்செய்யசிவபிரான் “அவர்கள் நமதடியராதலின்அவர்களைச்செகுத்தல் அடாது" என்றருளி அந்தர்த்தானமாயினர்.

விண்டு தேவர்களே அஞ்சாதீர்களென்று புத்தவடிவுகொண்டுநாரதமுநிவர். சீடராக வுடன்வரத் திரிபுரமடைந்து பிடகாகமம் பிரசங்கித்துஅவரை மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையிலகப்படாதார் மூவரேயாதலின் திருமால் எனையோரைப் பார்த்துநீங்கள் அம்மூவரையும் பாராதீர்கள். அவர்கள் இழிதொழில்பூண்டோர்” என்று கூறிநாரதருடன் மேருமலையடைந்து தேவ கூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்துத் தவத்திருந்தனர். பெருமான் அஃதறிந்து அருள்வடிவாகிய திருநந்திதேவரை விளித்து “'தேவர்கள்பாற் சென்று திரிபுரத்தவரைச் செயிக்க இரதமுதலிய யுத்தகருவிகளைச் சித்தஞ்செய்யக் கட்டளையிடுக'' எனநந்தியெம் பெருமான் மேருமலை சேர்ந்து அவ்வாறே அமரர்கட்கு ஆஞ்ஞாபித்துச் செல்லதேவர்கள் களிகூர்ந்தனர்.

மந்தரகேசரி மலைகள் அச்சாகவும்சந்திர சூரியர் சக்கிரமாகவும் இருதுக்கள் சந்தியாகவும்பதினான்கு லோகங்கள் பதினான்கு தட்டுகளாகவும்ஆகாயம் ஆதனமாகவும்உதயாஸ்தகிரிகள் கொடிஞ்சியாகவும்நதிகளும் நதங்களும் நாட்டுங்கொடியாகவும்நக்ஷத்திரங்கள் நல்ல விதானமாகவும்மோட்சலோகம் மேல்விரிவாகவும்மகங்கள் சட்டமாகவும்நாள் முதலிய காலத்திரயங்கள் (கடுப்பா

கிய) எண்ணெயூற்றும் இடுக்குமரமாகவும்அஷ்டபர்வதங்கள் தூணாகவும்எட்டுத் திக்கஜங்கள் இடையிற் றாங்கவும்சத்தசமுத்திரம் திரைச்சீலையாகவும்ஞானேந்திய கன்மேந்தியங்கள் கலன்களாகவும்கலைகள் முளையாகவும்புராணம் – வேதாங்கம் – சாஸ்திரம்நுக்கள் மணியாகவும்மருத்துக்கள் படியாகவு மமைந்த திவ்வியமான ஒரு தேரைச்செய்துவேதங்கள் நான்கையும் நான்கு குதிரைகளாய்ப் பூட்டிபிரமனைத் தேர்சாரதியாய் நிறுத்திப்ரணவமே குதிரை தூண்டுங் கோலாய்க்கொண்டுகங்கை அதிதிமுதலிய தேவநங்கையர் நாற்புறமுஞ் சாமரை விரட்டவும்தும்புகுகாரதரிசைபாடவு மமைத்துஅரம்பை முதலிய கணிகையர் நடிக்கவுஞ் சமைத்துமேருமலையை வில்லாகவும்வாசுகியை நாணி யாகவும் நியமித்துதிருமால் பாணமும்சரச்சுவதி வில்லிற்கட்டிய மணியும்அக்கினிதேவன் அம்பின்கூர்வாயும்வாயு அம்மிற்கட்டிய இறகுமா யேற்படுத்தித் திருக்கயிலாயகிரியை யடைந்து திருநந்தி தேவரைப் பணிந்து "அமரர் அமரர்க் கருவிகளை யமைத்துக் கொண்டடைந்தன ரென்று அருள்வள்ளல் சந்நிதியில் அறிவிக்க வேண்டும்" எனப் பிரார்த்தனை செய்தனர்.

அவர் சென்று விண்ணப்பிக்கஇறைவர் தேவியாருடன் டபாரூடராய் இரதத்தை யடைந்து இமையவர் எண்ணத்தின்படி அதிற் காலூன்ற அதன் அச்சு முரிந்தது. அச்சுதன் அக்கணமே விடை வடிவாகி எம்பிரானை யேற்றுத் தாங்க மாட்டாமல் தரை மேல்விழசிவபெருமான் திருவருண்மே லீட்டாலிறங்கினர். பிரமன் ஸ்ரீ விநாயகக்கடவுளைப் பூசித்தனன். அவரருளால் அவ்விரதம் முன்போலாக அதன்மேற் பெருமான் அம்மையாருடன் ஆரோகணித்தனர். மூத்த பிள்ளையார் – இளையபிள்ளையார் திருமால் - இந்திரன் முதலான தேவர்கள் தத்தம் வாகனங்களிலேறிவரவும்முப்பத்து முக்கோடி தேவர்களும் எப்பக்கத்திலுஞ் சூழ்ந்துவரவும்ஸப்தருஷிக ளாசீர்வதிக்கவும்திருநந்திதேவர் பொற்பிரம்பு கொண்டு முன் செல்லவும்பாநுகம்பன்வாணன் – சங்குகன்னன் முதலிய சிவகண நாதர்கள் வாச்சிய மிசைக்கவும் சிவபெருமான் இரதாரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ரபுஷ்ய நக்ஷத்திரத்திற் சமீபித்தனர்.

அமரர்கள் அப்பொழுது ஐயனைப் பணிந்து "அண்ணலே! வில்லைவளைத்துக் கணைவிடவேண்டும்'' என்று பிரார்த்திக்கசிவபெருமான் தமது திருக்கரத்தேந்திய மேருமலையாகிய வில்லையெடுத்து வளைத்துவாசுகியாகிய நாணேற்றினர். [அதில் அம்புபூட்டித் திரிபுரத்தை யழிப்பின்அந்தரர் அந்தமில்லாத அகந்தையுறுவராதலின்அவ்வாறின்றி] இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணிந்துபிறகு புன்னகை செய்யப் புரமூன்றுந் தீப்பற்றிச் சாம்பராயினபெருந்தவராயிருந்து சிவனடியே சிந்தித்துவந்த மூவரும்யாதொரு தீமையுமின்றிப் பெருமான் பால்வந்து பணிய கண்ணுதல் அவர்களைத் துவாரபாலகராக அருளிதேவர்களை அவரவரிடத்திற் கனுப்பித் திருக்கைலைமலைக் கெழுந்தருளினர். அமரர்துயர் தீரும்படி முப்புரத்தைச் சிரித்தெரித்தலின்சிவபிரான் த்ரிபுராந்தக மூர்த்தியெனத் திருநாமமுற்றனர்.

 

யஜுஸ்ஸம்ஹிதை-ஶ்ருதி.

 

தேஷாமஸுராணாந்திஸ்ர:புர ஆஸந்நய ஸ்மையவ மாதரஜதாதஹரிணீதா தேவாஜேதும் நாக் நுவந்தா உபஸதைவாஜி கீஷந்தஸ் மாதா ஹுர்யஶ்சைவம் வேதயஶ்சநோபஸதாவை மஹாபுரம் ஜயந்தீதிஸஇஷுக்ஸமஸ்குர்வதாக்நி  மநீகக்ஸோமக்ல்யம் விஷ்ணும் தேயநந்தேப்ருவந்க இமாமஶிஷ்யதீதி ருத்ர இத்யப்ருவந் ருத்ரோவைக்ரூர:ஸோஸ்யத்விதி.

 

மஹிம்நஸ்துதி.

 

திதக்ஷோஸ்தேகாயம்த்ரிபுரத்ருணமாடம்பரவிதிர்விதேயை:

க்ரீடம்த்யோநகலுபலதந்த்ரா:ப்ரபுதிய:.

 

ந்ருஸிம்ஹபுராணம்.

 

ரத:க்ஷமாசக்ரகௌஸூர்யசந்த்ரௌதுரங்கமா:

வே:தா:ஸூதோவிரிஞ்சிஶ்சஜ்யாஶேஷோதநுரத்ரிராட்

ஶீதாஸ்த்ரமிந்திராதீஇத்யாடம்பரபூர்வகம்

த்ருணவத்ஸம்ஹ்ருதாநீபுராணித்ரிணிலீலயா.

 

த்ரிபுராந்தகமூர்த்தயே நம:

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்

Related Content

இலிங்கோற்பவ மூர்த்தி

முகலிங்க மூர்த்தி

ஸதாசிவமூர்த்தி

மஹாசதாசிவ மூர்த்தி

உமாமஹேச மூர்த்தி