logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-sadashiva-murthi

ஸதாசிவமூர்த்தி

ஸதாசிவமூர்த்தி
ஸதாசிவமூர்த்தி
  •  சாந்தராயும், சர்வ கர்த்தாவாயும், அவ்யயராயும், சர்வஜ்ஞராயும், ஸ்வபாவப் பிரகாசராகியும், அசலராகியும், அமேயராகியும், அநாதியாயும், அதுலராயும், சூக்ஷ்மராயும், மகானாகியும், சிக்கனராயும், வியாபியாகியும், முக்தப்பிரியராகியும், அமலராகியும், பராசத்தியுடன் கூடியுமுள்ள ஸதாஶிவமூர்த்தி ஈஶாநம் -  தற்புருஷம் - வாமம் - அகோரம் ஸத்தியோஜாதம் முதலாகிய ஐந்து திருமுகங்களு டனியைந்து எருந்தருளி ஆன்மாக்களின் பாசச்சேதநிமித்தம் சித்தாந்தமாகிய காருடம் – வாமம் – பூததந்த்ரம் - பைரவ மீறாகிய ஆகம பேதங்களை ஈஶாந மொழிந்த நான்கு திருமுகத்தினும், காமிகாதி இருபத்தெட்டாகமங்களை ஈஶாநமுகத்தினும் அருளிச்செய்தனர்.
  • அக்காமிகாகி ஆகமங்களாவன:- காமிகம் - யோகஜம் - சித்தியம்- - காரணம்- அசிதம்- தீப்தம்- சூக்ஷ்மம்- ஸஹஸ்ரம் – அம்சுமான் – சுப்ரபேதம் – விஜயம் – நிஸ்வாஸம் - ஸ்வயம்பூதம் – ஆக்நேயம் - வீரம் – ரௌரவம் – மகுடம் – விமலம் - ஸந்தாஞாநம் – முகபிம்பம் – ப்ரோத்கீதம் -லளிதம் - சித்தம் – சந்தாநம் - சர்வோத்தமம் - பாரமேச்சுரம் - கிரணம் – வாதுள மென்பன. இவைகளைக் கேட்டோர் ப்ரணவர் - திரிகலர் - ஹரர் – சுதர் – பஸ்மர் -காரணர் – சர்வருத்திரர் – பிரசாபதி – சுசிவர் – சிவர் – அச்சுதர் – ஈஶர் – ஈஶாநர் -ஹுதாஸநர் - ஸூக்ஷ்மர் – வைச்சிர்வணர் – ப்ரபஞ்சநர் – காலர் - பீமர் - தர்மர் - அம்பு – அக்கர் - ரவி – தாஶேஶர் – விக்நேச்சுவரர் – சசி – அநாதிருத்ரர் – பரமேசர் -தசார்ணர் – சைலஜர் – நிதநேசர் – பிரமர் – வியோமர் – ஹுதாஸநர் – தேஜசு – ப்ரஜாபதி – பிராம்ஹணேசர் – நந்திகேசர் – சிவர் – மஹாதேவர் – சர்வாத்மகர் – வீரபத்திரர் – அநந்தர் - பிரஹஸ்பதி – பிரசாந்தர் – ததீசி – சூலி - கவசர் – ஆலயேசர் - லளிதர் - பிந்து - சண்டி கேச்சுவரர் - சிவநிஷ்டர் - அசம்வாயர் - சேரமர் – ந்ருசிம்ஹர் - ஸ்ரீதேவி – உசநர் – தேவவிபவர் – சம்வர்த்தகர் - சிவர் - மஹாகாளர் முதலியோர். சிவாகமங்களுள் முதலிற்கூறிய பத்தும் சிவபேதங்களாம். ஏனைய பதினெட்டும் உருத்திரபேதங்களாம். இச்சிவாகமங்க ளிருபத்தெட்டும் வக்த்ராரம் முதல் விஸ்வாத்மகம் ஈறாயுள்ள இருநூற்றெட்டு உட்பிரிவுடையன. அவற்றைக் காமிகந்தந் திராவதாரப்படலத்துட் காண்க
  • காமிகம் - யோகஜம் - சிந்தியம் - காரணம் - அசிதம் என்னு மைந்தையும் ஸத்தியோஜாத முகத்தினின்று கௌசிக விருடியின் பொருட்டும், தீப்தம் – சூக்குமம் - சகச்சிரம் அஞ்சுமான் சுப்பிரபேதம் என்னு மைந்தையும் வாமதேவ முகத்தினின்று காசிப ருஷியின் பொருட்டும், விஜயம் நிச்சுவாசம் சுவாயம்புவம் ஆக்கிநேயம் வீரம்
    என்னு மைந்தையும் அகோரமுகத்தினின்று பாரத்துவாசவிருடியின்பொருட்டும், ரௌரவம் மகுடம் விமலம் சந்திரஞானம் முகவிம்பம் என்னு மைந்தையும் தற்புருட முகத்தினின்று கௌதம விருடியின் பொருட்டும், புரோற்கீதம், இலளிதம் சித்தம் சந்தாநம் சர்வோக்தம் பாரமேசுவரம் கிரணம் வாதுளம்என்னுமெட்டையும், ஈஶாநமுகத்தினின்று அகத்திய விருடியின்பொருட்டும் அருளிச் செய்தனர் என்பதும் நூல் வழக்கு.
  • ஆகமமென்னு மொழியில், ஆ என்பது ஞானமும், க என்பது மோக்ஷமும், ம என்பது மலநாசமுமாம். ஆகவே ஆன்மாக்கட்கு மலத்தை நாசஞ்செய்து ஞானத்தை யுதிப்பித்து மோக்ஷத்தைக் கொடுத்தலால் ஆகமமெனப் பெயராயிற்று. வேதமும் ஆகமமும் சிவபெருமானாலேயே அருளப்பட்டவையாதலின், அவை தம்முட் சிறிதும் பேதமின்றி யியலுந்தன்மையன.

திருமந்திரம்.

"வேதமோ டாகம மெய்யா மிறைவனூ
லோதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக
நாக னருளவை நாடிலிரண் டந்தம்
பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே”- என்றதும்.

நீலகண்டபாஷியம்.

"வயந்துவேத ஶிவாகமயோர்ப்பேதம் நபஶ்யாம:வேதோபி ஶிவாகம:” - வேதசிவாகமங்கட்குப் பேதங்காண்கின்றிலம். வேத மேசிவாகமம். - என்றதும்; இப்பெற்றி நோக்கியேயென்க.
 

ஆகமங்கள்

கிரந்தசங்கியை

உபபேதங்கள்

திருஅங்கம்

காமிகம்பரார்த்தம்மூன்று

திருவடி

யோகஜம்இலக்ஷம்ஐந்து

கணைக்கால்

சிந்தியம்இலக்ஷம்ஆறு

திருவடிவிரல்கள்

காரணம்கோடிஏழு

கெண்டைக்கால்

அசிதம்நியுதம்நான்கு

முழந்தாள்

தீப்தம்நியுதம்ஒன்பது

தொடை

சூக்ஷ்மம்பதுமம்ஒன்று

குய்யம்

ஸஹஸ்ரம்சங்கம்பத்து

கடித்தானம்

அஞ்சுமான்ஐந்துலக்ஷம்பன்னிரண்டு

முதுகு

சுப்ரபேதம்மூன்றுகோடிஒன்று

கொப்பூழ்

விஜயம்மூன்றுகோடிஎட்டு

உதரம்

நிஸ்வாஸம்கோடிஎட்டு

நாபி

ஸ்வயம்பூதம்ஒன்றரைக்கோடிமூன்று

முலை

ஆக்நேயம்முப்பதினாயிரம்ஒன்று

கண்

வீரம்நியுதம்பதின்மூன்று

கழுத்து

ரெளரவம்எட்டற்புதம்ஆறு

செவி

மகுடம்இலக்ஷம்இரண்டு

திருமுடி

விமலம்மூன்றிலக்ஷம்பதினாறு

கை

சந்திரஞானம்மூன்றுகோடிபதினான்கு

மார்பு

முகவிம்பம்இலக்ஷம்பதினைந்து

திருமுகம்

புரோற்கீதம்மூன்றிலக்ஷம்பதினாறு 

திருநாக்கு

இலளிதம்எண்ணாயிரம்மூன்று

கபோலம்

சித்தம்ஒன்றரைக்கோடிநான்கு

நெற்றி

சந்தானம்ஆறாயிரம்ஏழு

குண்டலம்

சர்வோக்தம்இரண்டிலக்ஷம்ஐந்து

உபவீதம்

பாரமேசுவரம்12-இலக்ஷம்ஏழு

ஆரம்

கிரணம்ஐந்துகோடிஒன்பது

இரத்தினாபரணம்

வாதுளம்இலக்ஷம்பன்னிரண்டு

பரிவட்டம்

இவ்வாகமங்கள் சாதாக்கிய மூர்த்தியாகிய இப்பெருமானுக்கு இவ்வாறு திருமேனியாகக் கூறப்படும். [திருவை அங்கங்களுக் கெல்லாங் கூட்டி யுரைத்துக் கொள்க.]

இவர் படிகநிறம் – சடைமுடி - ஐந்து திருமுகம் - பத்துக்கரங்கள் – ஒருதேகம் - இரண்டு திருவடிகள் - வலக்கரத்து இச்சை ஞாநக்கிரியையென்னும் மூவிலைச் சூலமும், பராசத்தி ரூபமாயமழுவும், கர்த்துருபாவமான கட்வங்கமும், வாளும், பீஜாபூரகமும், வச்ரமும், ஜநநபயத்தைப் போக்குவதான அபயமும், இடக்கரத் துரித்தி குணமாகிய நாகமும், தூல சூக்கும பூதங்களை நடத்தும் மாயாரூபமாகிய பாசமும், குணமாகிய நீலோற்பலமும், அங்குசமும், சுத்தா சுத்த அத்துவாவைப் பிரவர்த்திக்குங் குணமான தமருகமும், போகத்தைத்தரும் வரதமும், நாதகுணமா கிய மணியும், சங்கார குணமாகிய அக்கிநியும், திரோதாயி யென்னும் பரிவட்டமும், அருளாகிய சுகந்தமும் பரையாகிய மாலையும், அநுக்கிரகாங்குரமான சிறுநகையும் பொருந்தித் தியானபூஜாநிமித்தம் சகளத் திருவுருக் கொண் டெழுந்தருளி யிருப்பினும், இவையிற்றிற்கு அப்பாற்பட்டு மிருப்பர். இது கன்மசாதாக்கியத் திருவுருவாதலின், மேற் சிவலிங்கமூர்த்திக்குக் கூறிய அனைத்தும் ஈங்கு மொக்கு மெனவறிக. இவ்வகைப் பிரபாவங்களையுடையது ஸதாசிவமூர்த்தமெனப்படும்.

ஆகமம்.

''பத்மாஸநஸ்தம்பஞ்சாஸ்யம் ப்ரதிவக்த்ரம்திரிலோசனம்
த்ருக்க்ரியேச்சாவிஶாலாக்ஷம் ஜ்ஞாநசந்த்ரகலாந்விதம்
தவளேஶாநவதநம் பீதம்தத்புருஷாநநம்
க்ருஷ்ணாகோரமுகோபேதம் ரக்தாபம்வாமதேவகம்
ஸுஶ்வேதம்பஶ்சிமாஸ்யைகம் ஸத்யோஜாதம் ஸமூர்த்தகம்
நாகோபவீதிநம்ஶாந்தம் ஜடாகண்டேந்துமண்டிதம்
ஶக்த்யஸீஸூகட்வாங்கம் வரவ்யக்ரகராம்புஜம்
தக்ஷிணேவாமஹஸ்தேச டமரும்பீஜபூரகம்
நாகாக்ஷஸூத்ரநீலோப்ஜம் பிப்ராணம்பஞ்சபி:கரை:”

ஸதாசிவாய நம:

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்
 

Related Content

இலிங்கோற்பவ மூர்த்தி

முகலிங்க மூர்த்தி

மஹாசதாசிவ மூர்த்தி

உமாமஹேச மூர்த்தி

ஸுகாஸந மூர்த்தி