logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சுருதி ஸூக்தி மாலா - பகுதி-3

 

சுருதி ஸூக்தி மாலா (PDF file)


|| ஓம் நம: சிவாய ||

சுருதி ஸூக்தி மாலா

அல்லது

சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்

சிவலிங்க பூபதியின்
ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி
தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும்

எழுதியவர்: பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள் தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி மயிலாப்பூர், சென்னை – 600 004


 

சுலோகம் 101

ஏக  : ச்ருதோஸி பரமேச்வர ! ஸத்விதீயம் மந்த்ரா யயா வ்யபதிசந்தி புன : புனஸ்த்வாம் | தஸ்யா : ப்ரபாவம் அதிவாங் மனஸம் சிவாயா : கார்த்ஸ்ன்யேன வக்து மனலம் கமலாஸனோபி ||

பதவுரை

பரமேச்வர – பரமேச்வரனே! ஏக : ச்ருதோஸி – நீர் ஒருவர் ஒப்பற்றவர் (அத்லிதீய ப்ரம்மம்) என்பதாக சுருதியால் போற்றப்படுகிறீர்.

ஏக  எவ  ருத்ரோ ந த்விதீயாய தஸ்தே ய ஏகோ ருத்ர உச்யதே –

என்றெல்லாம் சுருதிகள் உத்கோஷிக்கின்றன யயா யுக்தம் – எந்தப் பார்வதியோடு கூடியிருப்பதால், த்வாம் – உம்மை, மந்த்ரா:- மற்ற மந்த்ரங்கள், புன : புன :- அடிக்கடி ஸத்விதீயம் வதந்தி – ஸஹ ஸ்வஸ்ராம்பிகயா அம்பிகாபதயே – உமாபதயே என்றபடி, இரண்டாவதாகிய சக்தியுடன் கூடியவராகச் சொல்லுகின்றனவோ, தஸ்யா:- அப்பேர்ப்பட்ட, சிவாயா:- பராசக்தியின் அதிவாங்மனஸம் ப்ராபவம் – வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத மகிமையை கமலரஸனோபி – வேதங்களை உபதேசித்த ப்ரம்மாவும், கார்த்ஸ்ன்யேன – பூராவும், வக்து மனலம் – சொல்லச் சக்தியற்றவர் நிச்சயம்.

வாயவீய ஸம்ஹிதையில் தேவியின் மகிமை நன்கு விளக்கப்பட்டிருப்பது இங்கு கவனிக்க வேண்டும். கூர்ம புராணத்தில், பார்வதி தன் தந்தை மலையரசனான ஹிமவானுக்கு தன் விபூதியை விச்வரூபமாகச் காட்டியதாகவும், பிறகு பயமடைந்த தந்தைக்குத் தன் பழைய குழந்தை உருவத்தைக் காண்பித்து அனுக்ரஹித்ததாகவும், வரலாறு கூறப்பட்டு உமாதேவி மகிமை விளக்கப்பட்டிருக்கிறது.

சுலோகம் 102

ஏகம் முகம் த்ரிதய மீச்வர ! லோசனம் ச சத்வாரி தோம்ஷி விசதம் வபுரத்புதம் தே | நித்யம் ததேவ பஜதாம் உபகார ஹேதோ : நானா பவந்தி தநவஸ்தவ திவ்யரூபா : ||

பதவுரை

ஈச்வர! ஏகம் முகம் – உம் உருவத்துக்கு முகம் ஒன்று லோசனம் ச திரிதயம் – கண்கள் மூன்று, தே – உமக்கு தோம்ஷி – கைகள், சத்வாரி, நான்கு, விசதம் வபு:- நிர்மலமான சரீரம்; அத்புதம் – ஆச்சர்யத்தை உண்டுபண்ணுகிறது தவ – உம்முடைய நித்யம் – நித்யமான, அழியாத, சாச்வதமான, தத் ஏவ – அந்த உருவத்தையே, பஜதாம் – உபாஸிக்கிறவர்களுக்கு, உபகாரஹேதோ:- உபகாரமாக, திவ்யரூபா :- ஜரா, மரணமற்ற திவ்யரூபங்கள். நாநா தனவா – பல சரீரங்கள், தவ - உமக்கு, பவந்தி – ஏற்படுகின்றன.

ஸ்திரேபிரங்கை : புருரூப உக்ர : என்று ஒரே சாச்வதமான உருவமுள்ள குணமூர்த்தி உபாஸகர்களின் ருசிப்படி பல உருவங்கள் கொண்டவராக ஆகிறார். தோன்றுகிறார் என்பது கருத்து.

சுலோகம் 103

கைராத மீச்வர ! பினாகதரம் வபுஸ்தே க்ருத்திம் வஸான முமயா ஸஹ தர்மதாரை : | ஆராதயந்தி கலு பர்வணி ஸாகமேதே புண்யை ஸ்த்ர்யம்பக ஹவிர்பிரனன்ய பாவா: ||

பதவுரை

ஈச்வர! பினாகதரம் – பினாகவில்லை தரித்ததும், க்ருத்திம் – யானைத்தோலை, வஸானம் – அணிந்ததுமான, கைராதம் வபு: வேட சரீரத்தை, தே – உம்முடைய, தர்மதாரை: தர்மபத்னியான உமயா ஸஹ – உமாதேவியோடு கூட, ஸாகமேதே – சாதுர்மாஸ்ய யக்ஞத்தின் மூன்றாவது பர்வாவரகிய, த்ரிதின ஸாத்யமான ஸாகமேதக்ரதுவில், (பார்வதியுடன் பரமேச்வரன் ப்ரகாசிக்கும் யாகமாதலால் அந்த யாகம் ஸாகமேதம் என்று அன்வர்த்தமாகக் கூறப்படுகிறது) பர்வணி – பர்வகாலத்தில், அனன்யபாவா:- வேறு தெய்வத்தில் மனது வைக்காமல், ஏகாக்ரமனதுடன், புண்யை:- புண்யத்தையளிக்கும் பரிசுத்த, த்ரயம்பக ஹவிர்பி:- த்ரயம் பகம் என்ற ஹவிஸ்ஸால், த்ரயம் பகம் யஜாமஹே என்ற மந்த்ரத்தால், ஆராதயந்தி கலு – ஆராதிக்கிறார்கள் அல்லவா.

இந்த விஷயம் கல்ப்ப ஸூத்ரங்களில் தெளிவாகக் கூறப்பட்டிருப்பது காண்க.

சுலோகம் 104

மீட்வாஸமந்த விநிவேசித மீடுஷீகம் அந்தர்ஜயந்தம் அஜராமரவிக்ரஹம் த்வாம் | த்வத்வாரபம் தயிதயா ஸஹ தேவஸேனம் க்ஷேத்ரஸ்ய நாதமபி நாத ! யஜந்தி தன்யா : ||

பதவுரை

நாத – தலைவரே! ஈசானபலி என்ற கர்மாவில், மீட்வாம்ஸம் –இஷ்டங்களை வர்ஷிக்கிற, உலகத்தை ஸ்ருஷ்டிப்பதற்காக வீர்யஸேகஞ் செய்த, ஜகத்காரண வஸ்துவான, அந்த விநிவேசித மீடுஷீகம் – மீடுஷீ என்ற தேவியைப் பக்கத்தில் வைத்து, அந்தர் ஜயந்தம் – நடுவில் ஜயந்தன் என்ற ஸ்கந்தனை வைத்து, அஜராமரவிக்ரஹம் த்வாம் – கிழத்தனம், மரணம் இல்லாத உருவம் கொண்ட உம்மையும் தயிதயாஸஹ தேவ ஸேனம் – த்வாரபியுடன் கூடிய ஸேனையுடன் கூடிய, த்வத் த்வாரபம் – உமது த்வாரபாலகனையும், க்ஷேத்ரஸ்ய நாதமபி – க்ஷேத்தரபாலகனையும், தன்யா:- பாக்யம் பெற்றவர்கள் யஜந்தி – ஹவிர் பாகம் கொடுத்து ஆராதிக்கிறார்கள்.

சுலோகம் 105

பத்னியா ஸமம் ஸஹ கணை ; ஸஹ வா ஸுதாப்யாம் ஸார்த்தம் ததா பரிஷ தா விஷமேக்ஷண ! த்வாம் | அத்யஷ்டமீ திதி நிசாமுக மர்ச்சயந்த : பாபம் தரந்த்யபி ஜயந்தி மஹேச ! ம்ருத்யும் ||

பதவுரை

பத்னியா ஸமம் – பார்வதியோடுகூட, கணைஸ்ஸஹ – ப்ரமதகணங்களோடுகூட, ஸுதாப்யாம் வா ஸஹ – ஸ்கந்த விநாயகர்களுடன் கூட, ததா – அவ்விதமே, பரிஷதாஸஹ – ஸபையோர்களோடுகூட, விஷமேக்ஷண – முக்கண் கடவுளே, த்வாம் – உம்மை, அத்யஷ்ட மீதிதி நிசாமுகம் அஷ்ட மிதிதியின் ப்ரதோஷகாலத்தில், த்ரயம்பகம் யஜாமஹே என்ற மந்த்ரத்தால், அர்ச்சயந்த :- பூஜை செய்கிறவர்கள், பாபம் – பாபங்களை, தரந்தி – அழித்துத் தாண்டிச் செல்லுகிறார்கள், அபி – இன்னும், மஹேச – பரமசிவனே! ம்ருத்யும் ஜயந்தி – மரணத்தை ஜெயித்து, முக்தியையும் அடைகிறார்கள். இது போதாயனர், கல்ப்பகாரர் சொல்லிய பூஜாவிசேஷமாகும்.

சுலோகம் 106

மந்த்ரா பவந்தி விரளா விபுதாந்த ராணாம் ஸத்பாவ ஏவ சிவ தர்சித சக்தயஸ்தே | த்வந் நாமரூப குணவர்ணன லப்தவர்ணா மந்த்ரா ந சக்ய மவகந்துமியத்தயா தே ||

பதவுரை

விபுதாந்தராணாம் – மற்ற தேவர்களுக்கு, மந்த்ரா:- மந்த்ரங்கள், விரளா : பவந்தி – ஸ்வல்ப்பமாக இருக்கின்றன. சிவ – சிவனே, தே – அந்த மந்த்ரங்கள் ஸத்பாவ ஏவ – மற்ற தேவர்களின் ஸத் பாவத்தை மாத்ரம், தர்சித சக்தய:- காண்பிக்கப்பட்ட ஸாமர்த்தியத்தை உடையவைகள். த்வந்நாம ரூபகுண – உம்முடைய பெயர், உருவம், குணங்கள் இவைகளை வர்ணன – விவரித்துச் சொல்வதில், லப்தவர்ணா:- ஸாமர்த்யம் வாய்ந்த, தே – உம்முடைய, மந்த்ர:- மந்த்ரங்களோ, இயத்தயா – இவ்வளவு என்று கணக்கிட்டு, அவகந்தும் ந சக்யம – அறிய முடியாதவைகளாக இருக்கின்றன.

சுலோகம் 107

ருத்ரானுவாக படிதா நி பரஸ்ஸஹஸ்ரம் நாமானி திவ்யமபி ரூபமனேகச்ஸ்தே | சக்யம் குணா கணயிதும் கணனா யதிஸ்யாத் பெளமேஷு பாம்ஸுஷு விநா தவ தேவ மாயாம் ||

பதவுரை

தே – உம்முடைய, நாமாநி – பெயர்கள் ருத்ராநுவாகபடி, தாநி – சதருத்ரீயம் என்ற அநுவாகங்களில் சொல்லப்பட்டிருப்பவை, பரஸ்ஸஹஸ்ரம் – ஆயிரத்துக்கு மேற்பட்டவையாகும், தே – உம்முடைய திவ்ய மபி ரூபம் – மனோஹரமான உருவமும், அனேகச:- ஏராளமானவை, பெளமேஷு – பூமியிலிலுள்ள, பாம்ஸுஷு – தூளிகளை தேவ – கடவுளே! தவமாயாம் விநா – உமது தேவ மாயையைத் தவிர மற்றவர்களால், கணனயதிஸ்யாத் – எண்ண முடியுமானால், தே – உம்முடைய குணா:- குணங்களும், கணயிதும் சக்யா:- எண்ண முடியும்.

புழுதிகளை எண்ண முடியாதது போல குணங்களையும் எண்ண முடியாது.

யாவந்த: பரம்ஸவோ பூமே: ஸங்க்யாதா தேவ மாயயா – என்ற சுருதியை அனுஸரித்து தேவ மாயை ஒன்றினால் தான் புழுதிகளை எண்ண முடியும். மற்றதால் முடியாது என்பது விளங்குகிறது.

இவ்விதம் வேத மந்த்ரங்களனைத்தும் பரமேச்வரனை வெளிப்படுத்துவதிலேயே நோக்கமுள்ளவை என்று விளக்கிக் காட்டியுள்ளார்.

சுலோகம் 108

வேதஸ் ஸ்வயம் பவது வா தவ வா ப்ரணீதி: ஸர்வப்ரமாண மவிஹாய க்ருணாதி லோக: | தத் தத் ப்ரவக்த்ரு குண தர்சித தாரதம்யம் அந்யத் ப்ரமாணம் அவிரோதினி வேத வாக்யே ||

வேதத்தின் ப்ராமாண்யத்தை ஜைமினி, வ்யாஸ முனிவர்களால் கூறப்பட்ட பிரகாரம் விஸ்தரிக்க ஆரம்பிக்கிறார்.

பதவுரை

வேத:- வேதமானது, ஸ்வயம் பவது – பிறரால், ஈச்வரனால் கூட இயற்றப்படாமல், சாச்வதமாக, ப்ரளய காலத்திலும் அழியாப் புத்தகமாக மீமாம்ஸக மதப்படி, ஜைமினி விளக்கப்படி இருக்கட்டும், நையாயி க வைசேஷிக முனிவர் மதப்படி, தவ ப்ரணீதி : வா – உம்மால் அருளப்பட்ட கிரந்தமாகவாவது பவது – இருக்கட்டும், ஸர்வலோக:- எல்லா ஜனங்களும் ப்ரமாண மவிஹாய – வேதமென்ற ப்ரமாணத்தை யனுஸரித்துத்தான், க்ருணாதி – துதிக்கிறார்கள், வேத வாக்யே அவிரோதினி ஸதி – வேத வாக்யம் சொல்லும் விஷயத்தோடு, முரண்பாடு இல்லாமல் கர்த்தாவுடைய, குண – குணங்களால், தர்சித – காண்பிக்கப்பட்ட, தாரதம்யம் – உயர்வு, நடு, தாழ்வு என்ற வித்யாஸமுள்ளதாக அன்யத் – சுருதி மூலகமான மற்ற ஸ்ம்ருதி வாக்யமும், ப்ரமணம் பவதி – ப்ரமாணமாகக் கருதப்படுகிறது.

மனு, யாக்ஞவல்க்யர், பராசரர், ஆபஸ்தம்பர், போதாயனர் ஆச்வலாயனர், காத்யாயனர் முதலிய முனிவர்கள் செய்த க்ரந்தங்கள், ஸம்ருதியானதால், வேதார்த்தத்தைக் கூறுவதால், வேதம் அவைகளுக்கு மூலமானதால், வேதத்துக்கு அடுத்தபடியாக ஸ்ம்ருதிகள் ப்ரமாணம், வேதத்துக்கு முரண்பாடான முனிவர் வசனம் ப்ரமாணமாகாது, இவை ஜைமினியால் நன்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

சுலோகம் 109

வேதா : ப்ரமாண மிதி ஸங்கிரமாண ஏவ திவ்யம் தவாகம் மவைதி ஜன : ப்ரமாணம் | த்வத் த்யான வாக்ய விஷயெளபயிகை பதார்த்தை : ஆமூர்த்த மாகலித விக்ரமாச மூலாத் ||

பதவுரை

வேதா :- வேதங்கள், ப்ரமாணம், ஸ்வத: ப்ரமாணமாகின்றன, இதி – என்று, ஸங்கிரமாண ஏவ – ப்ரதிக்ஞை செய்கிற போதே, த்வத் – உம்முடைய, த்யான – த்யானத்தை விதிக்கும் வாக்ய – வாக்யத்துக்கு, விஷய – விஷயமாக விருப்பதை ஒளபயிகை:- அடைகின்றதுதான, பதார்த்தை:- பதி, பசு, பாசம், ஞானம், யோகம், க்ரியை, சரியை என்ற ஏழு பதார்த்தங்களால், ஆமூர்த்தம் – தலை முதல், ஆசமுலம் – அடிவரையில், ஆகலித விக்ரஹம் – அமைந்த சரீரத்தையுடைய, திவ்யம் தவ – திவ்யமான உம்முடைய, ஆகமம் – சிவாகம க்ரந்தங்களை, ஜன:- ஜனங்கள், ப்ரமாணம் அவைதி – ப்ரமாணமாக அங்கீகரிக்கிறார்கள்.

த்ரி பதார்த்தம் சதுஷ்பாதம் மஹாதந்த்ரமிதி ஸ்திதி:- சைவாகமம் என்ற மஹாதந்த்ரத்தில் பதியான பரமசிவனும், ப்ரம்மாதி ஸ்தம்ப பர்யந்தமான பசுக்களும், ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும், மூன்று பதார்த்தங்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஸம்ஸாரத்தைத் தாண்டுவதற்கு, சரியை, க்ரியை, யோகம், ஞானம் என்ற நாலு மார்க்கங்கள் கூறப்பட்டிருக்கின்றன.

ச்வேதாச்வதர உபநிஷத், ஸனத்குமார ஸம்ஹிதை, விஷ்ணு புராணம் 6 வது அம்சம், ஐந்தாவது அத்யாயத்தின் இறுதி பாகம், மகாபாரதம் ஆனுசாஸனிக பர்வம் முதலிய பல க்ரந்தங்களில், பரமசிவன் ஞானத்தைத் தவிர மற்ற ஞானம் ஞானமாகாது, ஸம்ஸார தாரகமாகாது; சிவனை யறிந்தவனுக்கு வேறு த்யானம் ருசிக்காது, என்று சொல்லப்பட்டிறுக்கிறது.

நம : சங்கராய ச நம : சிவாய ச நம : சிவதராய ச நம: ப்ரதரணாய சோத்தரணாய ச

என்பது சதருத்ரீய மந்த்ரம், பரமசிவன் தான் ஸம்ஸாரக் கடலைத் தாண்டச் செய்பவர் என்பது தெளிவு. வேத துல்யமாக சிவாகமம் ப்ரமாணமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் வேதம் பூராவும் பரமசிவனை ப்ரதிபாதிப்பதுபோல், சிவாகமங்களும் ஆரம்பம் முதல் முடிவுவரை பரமேச்வரனையே ப்ரதிபாதிக்கின்றன.

சுலோகம் 110

த்யானம் யதா பவதி தத்விஷயோ யதா த்வம் யாத்ருக்குண : ச பகவந் அதிகாரிவர்க : | ஸர்வாணி தாநி பவதாகம ஸம்ஹிதாபி : கல்ல்பைரிவாத்வரவிதே : உபபாதிதாநி ||

பதவுரை

த்யானம் – மனதை ஒரே விஷயத்தில் ஏகாக்ரமாக செலுத்துவது, யதா பவதி – எப்படிச் செய்யவேண்டுமோ. அதுவும் தத் விஷய: த்வம் – அந்த த்யானத்துக்கும் விஷயமானது, த்யானம் செய்யப்பட்ட வேண்டிய நீர், யதா – எந்த எந்த குணங்களோடு கூடியிருக்கிறீர் என்பதும், அதிகாரி வர்க்க:- த்யானம் செய்ய யோக்யதையுள்ள ஜனங்கள் யாத்ருக்குண: ச – எவ்விதமான குணங்களோடு கூடியிருக்க வேண்டுமென்பதும், பகவந் – பகவானே, தாநி ஸர்வாணி – அவையெல்லாம், பவத் ஆகம ஸம்ஹிதாபி:- உமது ஆகமம் என்கிற, சிவாகமம் என்ற ஸம்ஹிதைகளால் (வேத துல்யமானதால் வேதவாசகமான ஸம்ஹிதாபதம், ஆகமத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது) அத்வரவிதே :- யாகம் செய்ய வேண்டிய விதியின், தந்த்ராணி – முறைகள் கல்ப்பைரிவ – கல்ப்பஸூத்ர க்ரந்தங்களில் போல, உபபாதி தாநி – ரிஷி, சந்தஸ் தேவதா, விந்யோகம், ப்ராம்மணம், இவ்வைந்துகள் உள்பட நிருபிக்கப்பட்டிருக்கின்றன.

சுலோகம் 111

அத்வானம் அத்வபதிம் அத்வநி தாரதம்யம் ச்ரேஷ்டாத்வ பாரகமனம் ச பலம் ப்ரவீதி | மந்த்ரோத்வனாமிதி மஹேச்வர ! க்ருஹ்ய கார : பித்ரா குமார முபநீய வதன்ஹி வாக்யம் ||

பதவுரை

மஹேச்வர – பரமசிவனே! க்ருஹ்யகார: - ஆப ஸ்தம் பாதி க்ருஹ்ய ஸூத்ரம் எழுதிய முனிவர், பித்ரா – தகப்பனைக் கொண்டு, குமாரம் – பையனுக்கு, உபநீய – உபநயனம் என்ற ஸம்ஸ்காரத்தைச் செய்துவைத்து, வாக்யம் – வாக்யரூபமாக, உள்ள, யத் – எந்த மந்த்ரத்தை, ஆஹ - சொல்லுகிறாரோ, ஸ :- அந்த, அத்வனாமிதி மந்த்ர:- அத்வ நாம் அத்வபதே ச்ரேஷ்டஸ்யாத்வந:- பாரமசீய – என்ற மந்த்ரமானது அத்வானம் – வர்ணம் பதம், தந்த்ரம். கலா, தத்வம், புவனம் என்ற ஆறு வழிகளையும் அத்வபதிம் – ஷ ஆறு அத்வாக்களின் தலைவனையும், அத்வநி தாரதம்யம் – ஷ ஆறு அத்வாக்களில் ஒன்றுக்கொன்று உள்ள பரஸ்பர வித்யாஸத்தையும் ச்ரேஷ்டாத்வ பாரகமனம் – சிறந்த அத்வாவின் அக்கரை அடைவதாகிய. பலம் ச – பரம பிரயோசனத்தையும், ப்ரவீதி – சொல்லுகிறது.

ஆறு மார்க்கங்களில் சிறந்த அத்வாவாகிய வர்ணாத்வாவின் ஸாரபூதமான ஓங்காரம் என்ற ப்ரனவத்தின் தாத்பர்ய விஷயமாகிய மஹேச்வரனை அடையும்படி செய்யவேண்டுமென்பது அம்மந்திரத்தின் முக்ய ப்ரார்த்தனையாகும். உபநயனம் செய்து, வேதம் கற்று, அர்த்தம் அறிந்து, க்ரியை செய்து, பரமதாத்பர்ய விஷயமான, மஹேச்வரனை ஓங்கார ப்ரதிபாத்யனை அடைவதுதான் முக்கிய பலன். இது ஆரம்பத்தில், பூணூல் போடும்போது, வேண்டிக்கொள்வது கவனிக்கத்தகுந்தது.

சுலோகம் 112

கல்ப்பா : ப்ரமாணம் ரிஷிபி : யதி ந : ப்ரணீ தா : கிம் ந ப்ரமாணம் ரிஷிணா மகதா மஹர்ஷே | சக்யம் ந வக்து மபரிக்ரஹ தூஷிதா நி தந்த்ராந்தராணி பவதா சிவ கர்த்ருமந்தி ||

பதவுரை

ரிஷிபி: ஆபஸ்தம்ப ஆச்வலாயன, காத்யாயன ஸெளனக, போதாயன முனிவர்களால், ப்ரணீதா:- இயற்றப்பட்ட, கல்ப்பா: - கல்ப்பக்ரந்தங்கள், ந :- நமக்கு, ப்ரமாணம் யதி – ப்ரமாணமானவைகள், நிச்சயம் – மகர்ஷே – பெரியரிஷியான, வேதமுழுவதும் கண்டறிந்து உபாஸிக்கப்பட்ட கடவுளே! மஹதா ரிஷிணா – பெரிய ரிஷியாக உம்மால், ப்ரணீதம் – இயற்றப்பட்ட, ஆகமம், காமிகாதிகள், கிம் ந ப்ரமாணம் – ப்ரமாணங்கள் ஆகாதா என்ன – நிச்சயம் எல்லாம் ப்ரமாணம் தான். சிவ – பரமசிவனே! ஆதலால், பவதா – மகர்ஷியான உம்மால், கர்த்ருமந்தி – இயற்றப்பட்டவைகளாகக் கருதப்படும் காமிகாதி, தந்த்ராந்தராணி – வேறு பல தந்த்ரங்கள், அபரிக்ரஹ தூஷிதானி – பின்பு வந்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாததால், குற்றமுள்னவைகளாக, வக்தும் – சொல்வதற்கு, ந சக்யம் – முடியாது, சில த்வேஷிகள் அங்கீகரிக்காத காரணத்தால், மகரிஷியான உம்மால் ப்ரோக்த காமி காதி சைவ ஆகமங்கள் ப்ரமாணமாகாது என்று சொல்லக்கூடாது.

சுலோகம் 113

ஆசக்ஷதே யம் ரிஷி மார்ஷவிதஸ் தபோபி : ஏகைக மந்த்ரத்ருச மீச்வர ! வேதராசே : | த்ரஷ்டார மஸ்ய நிகிலேன நிஜானுபாவாத் அந்யான் ரிஷீன தி மகர்ஷி மதோ விதுஸ்த்வாம் ||

பதவுரை

ஆர்ஷவித :- வேதமறிந்தவர்கள், யத் – எந்த காரணத்தால், தபோபி:- பல தவ பலத்தால், ஏகைக மந்த்ர விதம் – ஒவ்வொரு மந்த்ரத்தைக் கண்டுபிடித்தவரை ரிஷிமாசக்ஷதே – ரிஷி என்று சொல்லுகிறார்கள். அத :- அந்தக் காரணத்தால், ஈச்வர – பரமசிவனே! அஸ்ய – இந்த, வேதராசே:- வேதக் கூட்டத்தை, நிகிலேன – பூராவும், நிஜானுபாவாத் – செயற்கையில்லாத, இயற்கையான, தன் சொந்த சக்தி விசேஷத்தினால், த்ரஷ்டாரம் – கண்டு பிடித்து, வெளிப்படுத்திய, த்வாம் – உம்மை, அந்யாந் – மற்ற, ரிஷீன் – ரிஷிகளை, அதி – தாண்டி, மேலாகயிருக்கிற, மகர்ஷிம் – மகரிஷியாக, விது: - அறிகிறார்கள்.

விச்வாதிகோ ருத்ரோ மகர்ஷி : என்ற வேதம் உலகத்திலுள்ள பல ரிஷிகளுக்கு மேல்பட்டவர். ருத்ர பகவான் மகர்ஷி எனப்படுகிறார், அஸாதாரணமாக என்று கூறுகிறார். ஈச்வர பதம் போல, மகரிஷி பதம் பரமசிவனுக்கே முக்கியமாகப் பொருத்தமான பதம் ஆகுமென்பது கருத்து.

சுலோகம் 114

உக்தம் ப்ரதான புருஷேச்வரமேவ ஸாங்க்யை : ஆக்யாய பாசபசுபத்யபிதான பேதாத் | ஞேயம் த்வதாகம் வித : சிவ ! ஸங்கிரந்தாம் ஏதாவதா கிமிதி நஸ்த துபேக்ஷணீயம் ||

பதவுரை

ஸாங்க்ய மதத்தில் சொல்லப்படும் தத்வங்கள் பாசுபத மதத்திலும் கூறப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது.

ஸாங்க்யை :- கபிலர் , பஞ்சசிகாசார்யார், ஆசூரி, ஈச்வர க்ருஷ்ணர், பதஞ்சலி முதலிய ஸாங்க்ய சாஸ்திர ப்ரவர்த்தகா சார்யார்களால், உக்தம் – சொல்லப்பட்ட, ப்ரதான புருஷேச் வரமேவ ப்ரக்ருதி பாசம் அதனால் கட்டப்பட்ட புருஷன் ஜீவன் அவ்விரண்டுக்கும் தலைவன் ஈச்வரன், என்ற மூன்று தத்வங்களையே, பாசம், பசு, பதி என்ற பதங்களின் மாறுதலால், அர்த்த மாறுதல் கொஞ்சம்கூட இல்லாமல், சிவ – பரமேச்வரா! ஞேயம் – அறியப்பட வேண்டிய, தத்வத்ரயம் என்ற மூன்று தத்வங்களை, த்வதாகமவித:- உமது சிவாகமம் அறிந்தவர்கள் ஆக்யாய – சொல்லி விவரித்து, ஸங்கிரந்தாம் – பிரதிக்ஞை செய்யட்டும். ஏதாவதா – இந்தப் பதவேற்றுமையால் மாத்திரம், தத் – அந்த ப்ரதான புருஷ ஈசதத்வத்ரயம், ந :- நம்மால், கிமித்யுபேக்ஷணீயம் – எங்ஙனம் அனாதரவு செய்ய முடியும்?

ஸாங்க்யமதக் கொள்கைதான் பூராவும் பெயர் வேற்றுமையால், பாசுபதமதத்தில் கூறப்படுகிறது. ஆதலால் கபில மதம் தேவஹூதிக்கு, அன்னைக்குப் புத்ரனால் உபதேசிக்கப்பட்டது எப்படி ஸகல ஜன க்ராஹ்யமோ, அவ்விதமே பாசுபத மதம், ஸகலஜனங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டிய உண்மையாகும்.

சுலோகம் 115

ப்ரத்யக்ஷவேத விஹிதம் ப்ரதிதம் புராணை : போதாயனேன முனிநா பஹுச : ப்ரணீதம் | ஸர்வார்த்த தர்சன பரைரபி க்ருஹ்யகாரை : யக்ஞோப வீதமிவ விஸ்ம்ருத மர்ச்சனம் தே ||

ப்ரதிதினம் ஈச்வர பூஜை போஜனத்துக்கு முன் செய்யப்பட வேண்டுமென்பது நித்திய கர்மாவாக வேதங்களிலும், அதன் தாத்பர்யத்தை விளக்கும் புராணங்களிலும், சிவ தர்ம ஸூக்திகளிலும், ஸ்பஷ்டமாக விதிக்கப் பட்டிருக்கிறது.ஆதலால், தினப்படி செய்யவேண்டிய கார்யங்களை விதிக்கும் க்ருஹ்ய க்ரந்தங்களில், ஸந்த்யாவந்தனம், ஒளபாஸனம் போல, சொல்லப்படவில்லையே என்ற சங்கைக்கு இடமில்லை. போதாயன மகரிஷியால் சொல்லப்பட்டிருப்பதால், மற்ற க்ருஹ்யகாரர்களுக்கும் சிவார்ச்சனம் பரமஸம்மதம் என்று விளக்கப்படுகிறது.

பதவுரை

ப்ரத்யக்ஷவேதவிஹிதம் – தமுஷ்டுஹி, ஆவோ ராஜானம், அந்தரிச்சந்தி முதலிய, ரிக்குகளாகிய, ப்ரத்யக்ஷ வேதங்களால் விதிக்கப்பட்டதும், புராணை : ப்ரதிதம் – புராணங்களால் விஸ்தரிக்கப் பட்டதும், போதாயனேன முனிநா – போதாயன மகரிஷியால், பஹுச: - மகாபிஷேகம், சூலகவம், ஈசார்ச்சனை என்று பல விதமாக, ப்ரணீதம் – லிரித்து விவரிக்கப்பட்டிருக்கும், தே – உம்முடைய, அர்ச்சனம் – நித்திய பூஜையானது, ஸர்வார்த்த தர்சனபரை: அபி – எல்லா நித்திய கர்மாக்களையும் தெரிவிக்கும் நோக்கமுள்ளவர்களாயினும், க்ருஹ்யகாரை :- மற்ற க்ருஹ்ய ஸூத்ரம், வீட்டில் செய்யவேண்டிய நித்ய கர்மாக்களைத் தெரிவிக்கும் க்ரந்தம் எழுதினவர்களால், யக்ஞோப வீதமிவ – உபநயனத்தில் பூணுல தரிப்பது போல, விஸ்ம்ருதம் மறக்கப்பட்டது. ஆயினும், ஆசீர்வாதங்கள் செய்த பிறகு ஸமிதா தானத்துக்கு முன்பு யஜ்ஞேரப வீதம் தரிக்கும் காலம் என்று சிவஸ்வாமி அபிப்ராயத்தை, மற்றவர்களால் சொல்லப்படாமல் விடப்பட்டாலும், அங்கீகரிக்கப்பட்டு, அனுஷ்டிக்கப் படுவதுபோல, சிவார்ச்சனமும் ஸர்வஸம்மதமாக அங்கீகரிக்கப்பட்டதால், அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

சுலோகம் 116

வேதோபப்ரம்மக புராணவச : ப்ரபஞ்சை : ஆகோஷ்யதே விஷமநேத்ர ! ஸமர்ச்சனம் தே | தந்த்ரைரலம் தத் உபப்ரம்மக வேதமுலை : வாத்யாஹதம் ந ஹி முகானலஸவ்யபேக்ஷம் ||

பதவுரை

விஷம் நேத்ர – முக்கண்ணனே! தே ஸமர்ச்சனம் – உமது பூஜையானது, வேத – வேதங்களாலும், உபப்ரம்மக – அதன் அர்த்தத்தை விளக்கும், புராணவச :- புராண வாக்யங்கள், ப்ரபஞ்சை:- மற்றவைகளாலும், அகோஷ்யதே – உத்கோஷம் செய்யப்பட்டிருக்கிறது. ஆதலால், ததுபப்ரம்மக வேத மூலை:- அந்த சிவார்ச்சனையை வெளிப் படுத்தும் வேதத்தை மூலப்ரமாணமாகக் கொண்டு அதனால் வேதமூலகத்தால், ப்ரமாணமென்று கருதப்படும் ஸ்ம்ருதி க்ரந்தங்களான தந்த்ரை:- தந்த்ரங்களால், (சிவார்ச்சனை சொல்லப்படாமல் இருந்தாலும்) நாலம் – பாதகமில்லை. அவைகளுக்கு மூலாதாரமான வேதங்கள் சொல்லிவிட்டதால் ஈசார்ச்சனம் நிர்விவாதமான நித்ய கர்மா, வாத்யாஹதம் – புயல் காற்றால் அடிக்கப்பட்ட வஸ்து, முகானலஸ்வ்யபேக்ஷம் – வாயால் ஊதித்தள்ள வேண்டியதாக, ந ஹி பவதி – ஆகாதல்லவா?

சுலோகம் 117

வேதார்த்த நிர்ணய விதெள ஹி புராண மங்கம் நிர்ணீத வேதவிஷயா ஸ்ம்ருதயோ பவந்தி | ஆத  : ச்ருதேரிவ புராண கிரஸ் ஸகாசே நாலம் ப்ரகாசயிதும் ஆத்மபலாவ லேபம் ||

பதவுரை

வேதார்த்த நிர்ணய விதெள – வேதங்களின் உண்மையான அர்த்தங்களை அறிந்து சொல்ல புராணம் அங்கம் – புராணங்கள் ஸாதனமாக இருக்கின்றன. ஸ்ம்ருதய :- யாக்ஞவல்க்யர், மனு முதலிய ரிஷிக்ரந்தங்களாகிய ஸ்ம்ருதிகள், நிர்ணீத வேத விஷயா: பவந்தி – புராணங்களால் தீர்மானிக்கப்பட்ட, வேதார்த்தத்தை, மூலமாகக் கொண்டு, வேத புராணங்களுக்குப் பிறகு செய்யப்பட்டவைகளாக இருக்கின்றன. ஆத :- ஆதலால், அந்த ஸ்ம்ருதிகள், ச்ருதேரிவ – வேதங்களுக்கு முந்நிலையில்போல, புராணகிர: ஸகாசே – புராண வசனங்களின் முன்னிலையிலும், ஆத்ம பலாவலேபம் – தன் பலத்தின் கர்வத்தை, ப்ரகாசயிதும் –வெளிபடுத்துவதற்கு, நாலம் – சக்தியற்றவைகள். சுருதிக்கு விரோதமான ஸ்மிருதி எப்படி ப்ரமாணமாகதோ, அப்படியே, சுருதியர்த்தத்தை அறிய உபகாரகமான புராண வசனங்களுக்கு விருத்தமான ஸ்ம்ருதிகளும் ப்ரமாணாமாகாது.

புராணங்களிலோ, சிவார்ச்சனை பலவாறாகக் கூறப்பட்டு விதிக்கப்பட்டிருக்கிறது. வாயவீய ஸம்ஹிதை. லிங்கபுராணம், ப்ரம்மாண்ட புராணம், வாமனம், மார்க்கண்டேயம், சிவதர்மம், ஸ்காந்தம், ப்ரம்ம கைவர்தம், சைவ ஏகாதச ருத்ர ஸம்ஹிதை, கூர்ம புராணம் முதலிய க்ரந்தங்களில் விஷ்ணுப்ரம்மாதி தேவர்களால், தங்கள் பதவி, சிவ பூஜையின் மகிமையால் கிடைத்ததாகவும்,

       த்யேய: பூஜ்ய : ச வந்த்ய : ச ஞேயோ லிங்கே மஹேச் வர:-

என்று முடிவான ஸித்தாந்தம் லிங்கத்தில் ஸந்திஹிதனான மகாதேவன் ஒருவந்தான் துதிக்கவும், நமஸ்கரிக்கவும் அறியவும் தகுந்தவன் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அக்னெள திஷ்டதி விப்ராணாம் – கர்மடர்களுக்கு அக்னியில் ஹோமம் செய்வதால் மகாதேவன் பூஜிக்கப்படுகிறான். ஹ்ருதி லிங்கே ச யோகினாம் – த்யானம் செய்பவர்களுக்கு, பூஜிப்பவர்களுக்கு ஹ்ருதயத்திலிருந்து லிங்கத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டு, ஷோடசோபசார பூஜை செய்தபிறகு லிங்கத்திலிருந்து, அதே ஹ்ருதய கமலத்தில் ப்ரவேசிக்கச் செய்யப்படுகிறார் – ஆதலால்தான், ப்ரதிதினம் சிவார்ச்சனையில் ஆரம்பத்தில்

ஹருத் பத்மகர்ணிகா மத்யாத் உமயாஸஹ சங்கர | ஆகச்ச த்வம் மகாபாக ! ஸர்வை ராவரணைஸ் ஸஹ || என்ற மந்த்ரரூபமான சுலோகமும், முடிவில், ஹ்ருத்பத்ம கர்ணிகா மத்யம் உமயா ஸஹ சங்கர | ப்ரவிச த்வம் மஹாபாக ஸர்வை ராவரணைஸ் ஸஹ || என்ற மந்த்ரரூபமான சுலோஹமும் உச்சரிக்கப்படுவது, ஸம்ப்ரதாய ஸிததமாக இருக்கிறது.

ப்ரதிமாஸ்வல்ப்ப புத்தீனாம் – மந்த புத்திகள் ப்ரதிமைகளில் சிவபடம் முதலியவைகளில் பூஜிக்க வேண்டும். அவர்கள் ப்ரதிமோபாஸகர்கள் வித்யுல்லோகம் வரையில் தான் உபாஸனா பலத்தால் போகிறார்கள். அங்கிருந்து அமானவ புருஷன் இந்திர ப்ரஹஸ்பதி, ப்ரஜாபதி உலகங்கள் வழியாக அவர்களை ப்ரம்மலோகம் அழைத்துச் செல்லுகிறதில்லை யென்பதும் வ்யாஸ மீமாம்ஸ சாஸ்திர ஸித்தாந்தம் காணப்படுகிறது.

ஸர்வத்ர ஸமதர்சினாம் – ஸமதர்சி எனப்படும் ஞானிகளுக்கு ஜீவன் முக்தாவஸ்தையில், கீதை இரண்டாம் அத்யாயத்தில் சொல்லப்பட்ட ஸ்திதி பிரஞ்ஞ லக்ஷணப்படி 12 வது அத்யாயத்தில் சொல்லப்பட்ட பக்தலக்ஷணப்படியும், 14 வது அத்யாயத்தில் சொல்லப்பட்ட குணா தீத லக்ஷணப்படியும், எந்த வஸ்துவும் மகேச்வரனாகத் தோன்றும் என பிரித்து சிவ கீதையில் கூறப்பட்டிருக்கிறது. 32 வித்யைகள், உபநிஷத்துக்களில் கூறப்பட்டவைகளில், தஹரோ பாஸனை எப்படிச் சிறந்ததோ, அப்படிப் பலவித சிவார்ச்சனைகளுள், லிங்கார்ச்சனை, ஹ்ருதய கமலத்திலுள்ள சிவார்ச்சனையானதால் சிறந்தது, ஏகலிங்கார்ச்சனம் ப்ரபக்தி மார்க்கமானதால், மிகச் சிறந்தது என்பது தாத்பர்யம்.

சுலோகம் 118

மூலச்ருதே ரனுபலம்ப பராஹதாயா: தூதீவ யா ந பவதி ஸ்வரஸாத் ப்ரமாணம் | ப்ரத்யக்ஷ வேத விஹிதம் யஜனம் த்வதீயம் தஸ்யாஸ் ஸ்ம்ருதேரபி கிமிச்சதி த்ருஷ்டி பாதம் ||

பதவுரை

அனுபலம்ப பராஹதாயா :- காணப்படாததால், இல்லையென்று, யோக்யானுபலப்தி ப்ரமாணத்தால் அறியப்பட்ட, மூலச்ருதே :- சில மூலச்ருதி ஸம்பந்தமான, யா – எந்த ஸ்ம்ருதியானது, நாயிகை இல்லை என்பது தீர்மானமாகியிருக்கும் போது, அவளைச் சேர்த்து வைக்கும் தூதீவ – தாதிபோல, ஸ்வரஸாத் – தானாகவே, ப்ரமாணம் – ப்ரமாணமாக, ந பவதி – ஆகாதோ , தஸ்யா:- அப்பேர்ப்பட்ட, ஸ்ம்ருதேரபி த்ருஷ்டி பாதம் – பரதந்த்ர ப்ரமாணத்தையுடைய, ஸ்வரஸ ப்ரமாணமாகாத ஸ்ம்ருதியின் அனுக்ரகத்தையும், ப்ரத்யக்ஷவேத விஹிதம் – ஸ்வரஸ ப்ரமாணமாகிய, காணப்படும் வேதவாக்யத்தால் விதிக்கப்பட்ட, த்வதீயம் – தங்களுடையதான, யஜனம் – பூஜை, அர்ச்சனை முதலிய ஞானாதிகள், இச்சதி கிம் – விரும்புமா என்ன?

ஸ்வத ப்ரமாணமான வேதம் பரதப்ரமாண ஸ்ம்ருதியை எப்படி அபேக்ஷிக்கும்? வேதத்தில் விதிக்கப்பட்ட சிவார்ச்சன கர்மாவிற்கு ஸ்ம்ருதி விதி தேவையில்லை யென்பது தாத்பர்யம்.

சுலோகம் 119

பெளர்வாணிகானுபதிசந் நியமான்யதேதத் அப்யர்ச்சனம் மனுரவோசத தேவதாயா : | தத்கிம் புனஸ்தவ மஹத்யஸி தேவதாத்வம் மருக்யே ச காச சகலேன மணேருபேக்ஷா ||

பதவுரை

பெளர்வாணிகான் – முன் பகலில் செய்யவேண்டிய நியமான் – அவசியமான கர்மாக்களை, உபதிசந் – தெரிவிக்கிற, மனு: - மனுவானவர், யத் – எந்த, தேவதாயா: அப்யர்ச்சனம் – தேவதாபூஜை தினந்தோறும் 12 மணிக்குள் செய்யப்பட வேண்டுமென்று, அவோசத – சொன்னாரோ, எதத் – இந்த தேவதார்ச்சன கார்யம், தவ - தேவதா விசேஷமான உம்மைச் சேர்ந்தது என்பது கிம் புன : கேட்பானேன்.

அர்த்தஸித்தம் ஸாமான்யமாக தேவதார்ச்சன விதி, தேவதா விசேஷமாகிய உம்மை, எப்படிச் சேராமலிருக்க முடியும்? மேலும் உம்மைத்தான் மனுவிதி குறிக்கும், ஏனெனில் த்வம் – நீர், மஹதி – பெரிய பூஜனீய, தேவதா – தேவதா கரக் விசேஷமாக, மகாதேவனாக, அஸி – இருக்கிறீர். காசசகலே – காக்காய்ப்பொன், ம்ருக்யே ஸதி – தேடப்படும் நிலையில் இருக்கும் போது, மணேருபேக்ஷா – ரத்னத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பது, ந – பொருந்தாதன்றோ.

ஸாமான்யமாக ஏதாவது ஒரு தேவதையை தினம் பூஜிக்க வேண்டும் என்று விதித்த மனு, மகா தேவனாகிய, மணிதுல்யனாகிய உம்மைக் கருதவில்லை என்பது எங்ஙனம் பொருந்தும்? ஆதலால், ஸ்ம்ருதிகளுக்குள் முதல்தரமான மனுஸ்ம்ருதியில், மகாதேவார்ச்சனை விதிக்கப்பட்டிருக்கிறது.

சுலோகம் 120

பத்னியா ஸமம் ஸஹ வ்ருஷேண வ்ருஷேந்த்ர கேதோ யஷ்மத் பலீனுபதிசந் ஸ்த்ரிதசாவ காசே | அப்யர்ச்சனம் பவன கல்ப்பன பூர்வகம் தே போதாயன : கதிதவான் அவயுத்ய க்ருஹ்யே ||

பதவுரை

வ்ருஷேந்த்ரகேதோ – சிறந்த தர்ம தேவதையான, வ்ருஷபத்தை வாகனமாகவும், கொடியாகவும், கொண்ட பரமேச்வரா! பத்ன்யா ஸமம் – மனைவியான உமையுடன், வ்ருஷேன் – தர்மரூபமான வ்ருஷபத்துடனும், த்ரிதசாவகாசே – தேவர்களைப் பூஜிக்கும் மத்திய காலத்தில், யுஷ்மத் பலீந் – ஈச்வரன், ஈச்வரி, வ்ருஷபம் ஜயந்தன் முதலிய உங்கள் பலிகளைப் போடும்படி, உபதிசந் – சூலகவம், ஈசான ஸ்தாலி பாகம் முதலிய கர்மாக்கள் மூலம் செய்யப்பட வேண்டியதாக உபதேசிக்கிற, போதாயன: - போதாயன க்ருஹ்ய கார மகரிஷி, பவன கப்ல்பன பூர்வகம் – ஆவாகனம் செய்து ஆஸனம் போடுவது முதலாக, தே – உம்முடைய, அப்யர்ச்சனம் – பூஜா விதியை அவயுத்ய – தனியாகப் பிரித்து, க்ருஹ்யே – க்ருஹ்ய க்ரந்தத்தில், கதிதவான் – சொல்லியிருக்கிறார்.

சுலோகம் 121

பாவாந்த ராணி பரிஹாய மஹத்ஸு நித்யம் விக்ஞானயோக விபவேஷு மஹீயஸே யத் | தேவோ மஹானபிஹிதோஸி தத : கபர்திந் நாம த்வதீய மிதமாங்கிரஸா நிராஹு : ||

பதவுரை

பாவாந்த ராணி – அவித்யையால் கல்ப்பிக்கப்பட்ட கானல் ஜலத்துக்கு ஸமானமான உலகப்பொருள்களை பரிஹாய – நீக்கிவிட்டு, மஹத்ஸு – சிறந்த, விக்ஞான – ஆத்மஞானமாகிய, யோக, - உபாயத்தின், விபவேஷு – இயற்கையான மகிமைகளில், யத் – எந்தக் காரணத்தால், நித்திய – என்றைக்கும், அநாதியாக, சாச்வதமாக மஹீயஸே – அகண்டஞான மூர்த்தியாக விளங்குகிறீரோ, தத் – அந்தக் காரணத்தால், கபர்திந் – கபர்தம் என்ற சிவந்த ஜடாபாரம் உடைய கடவுளே! மஹான் தேவ:- மகாதேவனென்று, அபிஹிதோஸி – சொல்லப்படுகிறீர். இதம் – இந்த, த்வதீயம் – உம்முடைய அஸாதாரணமான, நாம – மகாதேவனென்ற பெயரை, ஆங்கிரஸா:- அதர்வவேத மறிந்தவர்கள், நிராஹு:- நிர்வசனம் செய்து விளக்கிக் கூறுகிறார்கள்.

அத கஸ்மாத் உச்யதே மகாதேவ:- ஏன், மகாதேவன் என்று சொல்லப்படுகிறார்? ய: ஸர்வாந் பாவாந் பரித்யஜ்ய, அநித்தியமான உலகவிஷயங்அக்ளைவிட்டு, அவைகளுக்கப்பால் எவர், ஆத்மஞானம் யோகைச்வர்யே – ஆத்ம அறிவாகிய மிகுந்த ப்ரகாசத்தில் மஹதி – அகண்டத்தில், மஹீயதே ப்ரகாசிக்கிறாரோ, தஸ்மாத் – அந்தக் காரணத்தால் மகாதேவ : உச்யதே அவர் மகாதேனனென்று கூறப்படுகிறார் – என்கின்றது அதர்வசிரஸ்.

விபவேஷு என்ற சுலோகத்திலுள்ள பகுவசனம் ப்ரஸம்சைக்காகச் சொல்லப்பட்டது, மஹத்ஸுதிவ்யதீதி – மகாதேவ: என்று விக்ரஹம் அதர்வசிரஸ்ஸால் காட்டப்பட்டதாகக்கருத்து, ஆதலால், ஆன்மஹத : ஸமானாதிகரண ஜாதீயயோ:- என்ற பாணினி ஸூத்ரப்படி, ஆத்வம்வர அவகாசமில்லாவிடினும், சாந்தஸம், ஆர்ஷத்வாத் ஸாது எனக்கொள்ள வேண்டும். மஹதி மஹீயஸே என்ற அதர்வ சிரஸ்படி வையதிகரண்யமாகத்தான் ஏழாவது விபக்தி தத்புருஷஸமாஸம் செய்யப்பட வேண்டும்.

மகரம்ச்சாஸெள தேவ : ச மஹாதேவ: என்ற விக்ரஹம் அர்த்தபுஷ்டியில்லாததால், அதர்வசிரஸ் அநநு குணமாதலால், தள்ளப்பட்ட வேண்டும். உலகத்தில் நாம் ப்ரயோகம் செய்வது ரூடபதமான பிறகு சுருத்யநு கரணமானதால் ஸாதுவாக முடியும்.

சுலோகம் 122

த்வேதா தவார்ச்சன விதி: தருணேந்து மெளளே ! காமாய க : சிதபரோ  துரிதக்ஷயாய | அப்யக்னி ஹோத்ரமுபயம் வயமாமநாம : ஸ்வர்க்காய யத்பவதி யத்துரிதம் க்ஷிணோதி ||

பதவுரை

தருணேந்துமெளளே – இளம் சந்திரனைத் தலை ஆபரணமாக அணிந்த சந்த்ரசேகர் மூர்த்தியே! தவ – உம்முடைய அர்ச்சனாவிதி:- பூஜைசெய்யும் முறையானது, த்வேதா – இரண்டு விதமானது க : சித் – ஒருவிதம், காமாய – இஷ்டத்தையடைவதற்காக காம்யார்ச்சனம் எனப்படும். அபர: மற்றொருவித பூஜை துரிதக்ஷயாய – பாபங்களைப் போக்கி புனர்ஜன்மமில்லாமல், முக்தியைக் கொடுப்பதற்காக (நித்யார்ச்சனம் எனப்படும்) ஸ்வர்க்காய யத் பவதி – ஸ்வர்க்கத்தைக் கொடுப்பதற்காக விதிக்கப்பட்டிருப்பதாலும் யத்துரிதம் க்ஷிணோதி – பாவத்தையழிப்பதற்காகச் சித்தசுத்தியின் பொருட்டு, விதிக்கப்பட்டிருப்பதாலும் அக்னிஹோத்ரமபி – அக்னிஹோத்ரம் ஜ்யோதிஷ்டோமம் முதலிய கர்மாக்களையும், உபயம் – காம்யம் நித்யம் என்று இரண்டு விதமுள்ளதாக, வயமாமநாம:- நாங்கள் வேதப்ரமாணத்தைக் கொண்டு ஸம்யோக ப்ருதக்த்வந்யாயத்தைக்கொண்டு சொல்லுகிறோம். அவைபோல, சிவ பூஜையும் காம்யம், நித்யம் ஆக இரு வகைப்படும். போக, மோக்ஷம் இரண்டிற்கும் காரணமாகும் என்பது தாத்பர்யம்.

சுலோகம் 123

யத் ப்ராம்மணஸ் த்வமஸி நாகவதாம் நிகாயே துப்யம் நிவேதித மபோஜ்யமிதி ஸ்மரந்தி | உச்சிஷ்ட மீச்வர ! விசிஷ்டமபி த்விஜானாம் பூமெள நிகேயம் அதவாம்பஸி மஜ்ஜநீயம் ||

முன்னுரை

முன்பு ருத்ர பாகத்தைக் கொருத்த பிறகு அப உபஸ்பர்சனம் செய்வது மஹேசன் ஸந்நிதியில் ஸமமாக மற்ற தெய்வங்களை பூஜிப்பது கூடாது என்ற நோக்கத்தைத் தெரிவிப்பதாகக் கூறப்பட்டது. அதுபோல ருத்ர நைவேத்யத்தை சாப்பிடக்கூடாது என்ற முறை யாது காரணம் பற்றி என்று கேட்டால், அது இகழ்ந்தது என்று தாத்பர்யமல்ல. சிராத்தத்தில் ப்ராம்மண சேஷத்தை எவ்விதம் நாய், நரிகள் முகரக் கூடாது என்பது அதன் உயர்வைக் காட்டுகிறதோ, ஜலத்திலே போடுவது, அல்லது பூமியில் புதைப்பது ஸம்ப்ரதாயமோ, அதுபோல சிவ ஸம்ஸ்காரம், சிவ தீக்ஷையில்லாத ஸாமான்ய ஜனங்கள், சிறந்த சிவ நைவேத்யத்தைப் புஜிக்கக் கூடாது. சண்டேச்வரர் சிவபக்தர், விசிஷ்டர், விசிஷ்ட சிவ நைவேத்யத்தைப் புஜிக்கத் தகுந்தவர்; அவர் உத்தரவின் பேரில் பிறர் புஜிக்கலாம் என்ற உட்கருத்து விளக்கப்படுகிறது.

நாகவதாம் – ஸ்வர்க்கத்தில் வசிக்கும் தேவர்களுடைய, நிகாயே – கூட்டத்தில், த்வம் – நீர். யத் – எந்தக்காரணத்தால், ப்ராம்மண: அஸி – ப்ராம்மண ஜாதியாக இருக்கிறீரோ, (தேவர்களுக்குள்ளும் நாலு ஜாதி உண்டு) துப்யம் – உமக்கு நிவேதிதம் – நிவேதனம் செய்யப்பட்டதை, ப்ரஸாதத்தை, சிவ ஸம்ஸ்காரம் இல்லாதவர்களால் அபோஜ்யம் – சாப்பிடப்படக்கூடாது இதி – என்று, ஸ்ம்ரந்தி – சொல்லுகிறார்கள், ஈச்வர – பரமசிவனே! த்விஜானாம் – ப்ராம்மணர்களுடைய (சிராத்தாதி விசேஷ காலங்களில்) உச்சிஷ்டம் – மீதியானது, விசிஷ்டமபி – சிறந்ததாயினும், பூமெள – பள்ளத்தில், நிகேயம் – புதைக்கப்பட வேண்டும், அதவா – அல்லது அம்பஸி – ஜலத்தில், மஜ்ஜனீயம் – மூழ்கடித்துக் கரைக்கப்பட வேண்டும், என்பது தான் கல்ப்பஸூத்ரத்தின் விதி காணப்படுகிறது.

பிள்ளைக்கோ, சிஷ்யனுக்கோ, ப்ராம்மண உச்சிஷ்டமான விசிஷ்டபதார்த்தத்தைக் கொடுக்கலாம் என்பது கல்ப்ப வசனம் அதுபோல, சிவநைவேத்யம் சிவனுக்குப் புத்ர துல்யனான சண்டேச்வரருக்கு உரித்து.

பிறர், சிவஸம்ஸ்காரம் பெற்றவர்கள், அவர் அனுமதிபெற்று புஜிக்கலாம். மற்றவர்கள் புஜிக்கலாகாது என்பது உண்மையான கருத்து. ஆதலால்தான் ஜாபால உபநிஷத்தில், ருத்ரன் சாப்பிட்ட ஆகரத்தைச் சாப்பிட வேண்டும் ருத்ரன் குடித்த பானத்தைக் குடிக்க வேண்டும் என்று ஸ்பஷ்டமாக விதிகள் காணப்படுகின்றன.

சுலோகம் 124

த்வம் ப்ராம்மணஸ் த்வதுபதாவனமேவ கார்யம் தத்ப்ராம்மணஸ் த்வதிதரே ந பவந்த்யு பாஸ்யா :| ந ப்ராம்மணானவரவர்ண நிஷேவணேன ஸம்பாவயேம யதி ந ப்ரபதம் ப்ரமாணம் ||

பதவுரை

ப்ராம்மணர்கள் தேவர்களுள் பிராம்மணராகிய பரமேச்வரனைத்தான் உபாஸிக்க வேண்டும். தேவர்களுள் க்ஷத்ரியனான விஷ்ணுவை க்ஷத்ரியனல்லவோ உபாஸிக்க வேண்டும் என்று, யுக்தி ந்யாயம் கூறப்படுகிறது.

த்வம் – நீர், ப்ராம்மண:- தேவர்களுள் பிராம்மணராக இருக்கிறீ, தத – ஆதலால், ப்ராம்மணை: - மனிதர்களில் பிராம்மணரால், த்வதுபதாவனமேவ கார்யம் – உமது உபாஸனை தான் செய்யப்படவேண்டும், த்வத் இதரே – உம்மைத் தவிர மற்ற தைவங்கள், உபாஸ்யா :- உபாஸிக்கத் தகுந்தவர்களாக, ந பவந்தி – ஆகமாட்டார்கள், ந :- நமக்கு, ப்ரபதம் – ஸாமவேதத்திலுள்ள.

த்வம் தேவேஷுப்ராம்மணோஸி, அஹம் மனுஷ்யேஷு ப்ராம்மணோ வை ப்ராம்மணம் உபதாவதி உபத்வா தாவாமி, என்று ஆரம்பிக்கும் மந்திரம் (ப்ரபதம் என்று பெயர் பெற்றது), ப்ரமாணம் – ஸந்தேகம் வருமிடத்தில் ஸந்தேகத்தை தீக்கித் தீர்மானத்தைத் தெரிவிக்கும் மந்திரமாக, யதி – இருப்பதால், அவரவர்ண நிஷேவணேன – தனக்குத் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த விஷ்ணு ப்ரம்மா, இந்திரன் முதலியவர்களை ஆராதிப்பதால், ப்ராம்மணான் – ப்ராம்மணர்களென்று, ந ஸம்பாவயேம நினைக்க மாட்டோம். மற்ற க்ஷத்திரிய, வைச்ய, சூத்ர ஜாதியினர் என்றுதான் ஆராதனா கர்மாவைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும், முன் சொன்னபடி ருதம் ஸத்யம் என்ற மந்த்ரத்தில் விரூபாக்ஷணாகிய முக்கண்ணன் தான் பரப்ரம்மம் என்பது நிர்ணயிக்கப் பட்டிருப்பதால், அந்த பரப்ரம்மத்தை உபாஸிப்பதால் ப்ராம்மணர்களாக வேண்டியவர்கள் முக்கண்ணனைத்தான் உபாஸிப்பார்கள். இல்லாவிடில் ப்ராம்மணர்களாகக் கருதப்பட மாட்டார்கள். க்ஷத்ரியர்களாக, அர்தார்ஜனபரர்களாகத்தான் இருக்க வேண்டும். மகோப நிஷத்தில் – ஈசானமந்த்ரத்தில், ப்ரம்மாதிபதி: என்ற பதம், நிஷாதஸ்தபத் யதிகரணந்யாயப்படி ப்ராம்மணராகவும், அவர்களுக்கு அதிபதியாகவும் இருப்பவர் பரமேச்வரந்தான். பரமசிவன் தேவர்களுக்குள் ப்ராம்மணர். ப்ராம்மணர்களுக்கு உபாஸ்யர் என்பது யஜுர் வேதத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. பராசரபுராணம் ப்ரபத மந்த்ரத்தை விளக்கிக் கூறிவிட்டு முடிவில்.

மஹாப்ராம்மண மீசானம் உபதாவேந் ந சேதரம் என்று பரமசிவனை மகாப்ராம்மணராகச் சொல்லி, பிறரை பூஜிக்காதே என்றும் விலக்குதல் தெரிவிக்கிறது.

யோ வை ஸ்வாம் தேவதாம் அதியஜதே ப்ரஸ்வாயை தேவதாயை ப்ரச்யவதே ந பராம் ப்ராப்னோதி பாபீயான் பவதி – தன் தேவதையை விட்டுவிட்டு பிற தேவதையை உபாஸிப்பவனுக்குத் தன்னுடைய, பிறருடைய இரண்டு தேவதா ப்ரஸாதமுமில்லாமல் பாபம் ஏற்படும் என்று யஜுர் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

தஸ்மாத் ஸோம ராஜனோ ப்ராம்மணா: என்பது உமாஸகித பரமேச்வரன் அல்லது சந்திரனைத் தரித்த சந்த்ர சேகரர் தான் ப்ராம்மணர்களுக்கு தெய்வம். ஸாம வேதோ ப்ராம்மணானாம் ப்ரஸூதி: என்பதும் ருத்ர தேவதாக ஸாம வேதத்திலிருந்து பிறந்த ப்ராம்மணர்களுக்குப் பரமேச்வரன் சொந்த தெய்வம்.

சில ப்ராம்மணர்கள் தங்கள் முன்னோர்கள் உபாஸித்து வந்ததாகச் சொல்லுகிறார்கள். அதுவும் ஸரியல்ல. ஹிரண்ய கசிபு ஈச்வர பக்தன், பிள்ளை, ப்ரஹ்லாதன் விஷ்ணுபக்தன்: தசரதன் விஷ்ணு பக்தன்; ஸ்ரீராமர் சிவ பக்தர், என்றெல்லாம் புராணங்களில் படிக்கிறோம். ஆதலால் தந்தை உபாஸித்த தெய்வத்தைத்தான் பிள்ளை உபாஸிக்க வேண்டுமென்று விதிக்கப்படவில்லை, ஆதலால் அவரவர் வர்ணத்தைச் சேர்ந்த தெய்வத்தைத் தான் உபாஸிக்க வேண்டும் என்பது தான் வாஸனானுகுணமான விதியாகும், ராமஸேதுவ்ருத்தாந்தத்தால் ராமர் சிவபக்தரென்பதும், தஸ்மாத் வ்யாஸாத்பரோ நான்ய: சிவ பக்தோ ஜகத்த்ரயே – என்ற வசனத்தால் வ்யாஸர் சிவபக்தர் என்பதும், ந கிருஷ்ணாத் அதிக: தஸ்மாதஸ்தி மாஹேஸ்வராக்ரணீ :- என்ற வசனத்தால் கீதாசார்யன் மகாசிவபக்தன் என்பதும், ந அர்ஜுனேன ஸம – சம்போ: பக்த்யா பூதோ பவிஷ்யதி என்ற வசனத்தால் நரனாகிய அர்ஜுனன் சிவபக்தியும் அவிவாதமாகக் கொள்ளப்பட்டது.

சுலோகம் 125

உத்கர்ஷத : பரிஹரந்த் யபகர்ஷதோ வா கா வாஸனா பவதி கஸ்ய க்ருதே ந வித்ம : | யத் தீக்ஷிதஸ்ய பதிதஸ்ய ச துல்யரூபம் ப்ரத்யா திசந்தி முனய : கமனீய மன்னம் ||

பதவுரை

சிவ ஸம்ஸ்கார மற்றவர்கள் சிவப்ரஸாதத்தை புசிக்கக் கூடாது என்பதற்கு வேதங்கள் தான் ப்ரமாணம், யுக்திகேட்பது ஸரியல்ல என்று மூன்று சுலோகங்களால் 125, 126,127, விளக்குகிறார்.

உத்கர்ஷத:- உயர்ந்ததால் (சிவப்ரஸாதத்தை) பரிஹரந்தி – நீக்குகிறார்கள், அபவர்ஷதோ வா – தாழ்ந்ததாலேயே கா வாஸனா – பவதி – என்ன காரணம், கஸ்ய க்ருதே – என்ன பயனுக்காக என்பது, ந வித்ம: நமக்குப் புலப்படாது, வேதம் விதிக்கிறது, விலக்குகிறது என்பது தான் தெரியும். விதி விலக்குகளுக்குக் காரணமோ, ப்ரயோஜனம்மோ கேட்பதும் கூடாத கார்யம். காரணம், ப்ரயோஜனம் தெரியும் விஷயத்தில் வேதத்திற்கு வ்யாபாரம் கிடையாது. முனய:- ஹாரீதர் முதலிய ரிஷிகள், தீக்ஷிதஸ்ய –ஸோமயாக தீக்ஷை செய்து கொண்டிருக்கும், ஆகிதாக்னியான ச்ரோத்ரியருடையவும் பதிதஸ்ய – மகா பாதகம் செய்த பாபியினுடையவும், கமனீயம் – ஆசைப்படுகிற, அன்னம் – ஆகாரத்தை துல்ய ரூபம் – ஸமான ரூபமாக வைத்து, யத் – எந்தக் காரணத்தால், ப்ரத்யாதிசந்தி – இரண்டு அன்னத்தையும் சாப்பிடக்கூடாது என்று விலக்குகிறார்கள்? அதில் காரணம் பயன் சொல்ல முடியாது.

சுலோகம் 126

சண்டாள சண்டில சிதானல செளண்டிகானாம் கோப்ராம்மணஜ்வலன தீக்ஷிதயோஷிதாம் ச | ஸ்பர்ச : கயா பவதி வாஸனயா நிஷித்த : ஸ்ப்ருஷ்டேஷு வா சிவ கயா விஹிதா விசுத்தி : ||

பதவுரை

சண்டாள – சண்டாளன், பள்ளன், பறையன், சண்டில – அம்பட்டன், சிதானல – மயான அக்கினி, செளண்டி கானாம் – கள்ளுக்கடைக்காரன் இவர்களுடையவும் கோ – பசு, ப்ரரம்மண – ப்ராமமணர்கள், ஜ்வலன – ஒளபாஸன அக்கினி, தீக்ஷித – தீக்ஷா நியமத்திலிருப்பவர், யோஷிதாம் – ஸ்த்ரீகள் இவர்களுடையவும், (அகாரணமான) ஸ்பர்ச :- தொடுவது, கயா வாஸனயா – என்ன காரணத்தைக்கொண்டு நிஷித்த – விலக்கப்பட்டதாக, பவதி – இருக்கிறது, சிவ – ஹே பரமேச்வரா, ஸ்ப்ருஷ்டேஷு வா – அப்படித் தொட்டுவிட்டால், விசுத்தி:- ப்ராயச்சித்தமானது, கயா வாஸனயா – என்ன காரணத்தைக் கொண்டு, விஹிதா – விதிக்கப்பட்டிருக்கிறது, வேதத்தின் விதி விலக்கு விஷயத்தில் காரணம் சொல்லமுடியாது, வேதம் சொல்லுகிறது என்றுதான் பதில் கூறமுடியும்.

சுலோகம் 127

வர்ஜ்யான்னம் ஆஹுரபி தீக்ஷிதமக்னி கல்ப்பம் போஜ்யான்னமேவ க்ருதராஜ பரிக்ரயம் தம் | சங்க்காஸ்தி பாவனமபாவன மஸ்தி ந்ரூணாம் இத்தம் ஸ்திதே வசனமத்ர பராயணந்ந : ||

பதவுரை

அக்னிகல்ப்பம் – அக்னிக்கு ஸமமான தேஜஸ் உள்ளவராயிருந்தபோதிலும், தீக்ஷிதம் – தீக்ஷிதரை, வர்ஜ்யான்னமாஹு:- சாப்பிடத்தகாத அன்னமுடையவராகச் சொல்லுகிறார்கள், தமேவ – அந்த தீக்ஷிதரையே, க்ருதராஜ பரிக்ரயும் – ஸோமலதையென்றராஜாவை விலைக்குவாங்கி ஸிம்ஹாஸனமாகிய ஆஸந்தியில். ஸம்ராட் ஆஸந்தியில் வைத்தபிறகு, போஜ்யான்னமாஹு:- சாப்பிட தகுந்த அன்னத்தை உடையவராகச் சொல்லுகிறார்கள். சங்க்காஸ்தி – சங்கத்தின் எலும்பு, பாவனம் – சுத்தமானது பூஜைக்கு உபயோகப்படுத்தபடுகிறது ந்ரூணாம் – மனிதர்களுடைய, அஸ்தி – எலும்போ, அபாவனம் – அசுத்தம், தொடக் கூடாது, தொட்டால் ஸ்நானம் செய்ய வேண்டும். இத்தம் ஸ்திதே – இவ்விதம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்போது, அத்ர – இதுபோன்ற விஷயத்தில், ந: நமக்கு, வசனம் – வேதமாதாவின் வாக்யந்தான், பராயணம் – ப்ரமாணம் – சிறந்த காரணம், யுக்தி சொல்லமுடியாது.

சுலோகம் 128

அப்ராம்மணை : க்ஷுதபகாதகவஸ்து போஜ்யம் யத் தேவதாந்தா நிவேதிதமுக்த மன்னம் | தத்ப்ராம்மணைரபி கிமீச்வர வைச்வதேவே ஹார்யோ பலி: பலிமதாமசிதேன தேன ||

பதவுரை

தேவதாந்தர நிவேதித முக்தம் – மற்றதேவதைகளுக்கு நிவேதனம் செய்யப்பட்டு மிகுதியான, யதன்னம் – யாதொரு அன்னமுண்டோ, தத் – அது, அப்ராம்மணை:- பிராம்மணர்களைத்தவிர மற்றவர்களால், க்ஷுதபகாதகம் – பசியைப்போக்கிக்கொள்வதற்காக போஜ்யமஸ்து – சாப்பிடத்தகுந்ததாக இருக்கட்டும். ஈச்வர – பரமேச்வரனே! தேநாசிதேன – அந்த நிவேதனம் செய்யப்பட்ட அன்னத்தால், ப்ராம்மணைரபி – ப்ராம்மணர்களாலும், வைச்வதேவே – வைச்வதேவமென்னும் கார்யத்தில், பலிமதாம் – பலி (ஹவிஸ்) செலுத்தவேண்டிய அக்கினி முதலிய தேவர்களுக்கு, பலி:- ஹவிஸ்ஸானது. ஹார்ய :- போடத்தகுந்தது கிம் – என்ன? அந்த நிவேதனம் செய்த அன்னத்தினால், வைச்வதேவ பலிஹரணம் செய்யலாமா – செய்யக்கூடாதல்லவா?

சுலோகம் 129

தேவாந்தரை ரசிதமுக்தமனங்க சாஸிந் அச்னந்தி சேதநசிதேன பலிம் ஹரந்த: | ஆச்யைக தேச, விஹிதோ பலிரந்யதாஸந் நாலம் பலாய விபரீத பலாய தேஷாம் ||

பதவுரை

அனங்கசாஸின் – மன்மதனைக்கொளுத்தி தண்டனை செய்த கடவுளே, அனசிதேன – தைவத்துக்கு நிவேதனம் செய்யப்படாத அன்னத்தால் பலிஹரணத்தை வைச்வதேவகர்மாவில், செய்கிறவர்கள், தேவாந்தரை:- விஷ்ணு முதலிய மற்ற தேவர்களால், அசிதமுக்தம் – நிவேதனம் செய்யப்பட்டு மீதியான அன்னத்தை, அச்நந்திசேத் – சாப்பிடுவர்களேயானால், ஆச்யைக தேச விஹித : - சாப்பிடும் ஆஹாரத்தின் ஒருபாகத்தில் செய்யப்படவேண்டும் என்று விதிக்கப்பட்ட, பலி: வைச்வதேவ பலிஹரணமானது, அந்யதா – வேறுவிதமாகச் செய்யப்பட்டதாக, ஸந் – இருந்துகொண்டு, தேஷாம் – அவர்களுக்கு, பலாய நாலம் – பயனைக்கொடுக்க வல்லமையற்ற தாகிவிடும். விபரீத பலாய – விபரீதமான பலத்தையும் கொடுக்கும். சைவ புராணம், சுருதிகள், ஸ்காந்தம், கடச்ருதி, இவைகள், பிராம்மணர்கள் சிவநிவேதனம் செய்யப்படாததை, புஜிக்கலாகாது என்று தெளிவான விலக்குதல் காணப்படுகிறது.

சுலோகம் 130

ப்ரம்மாணம் ஈச்வர ! புரா ஹதவானஸீதி பிக்ஷாடனம் விம்ருசத : ப்ரதிபானமாத்ரம் | யத்பஞ்சமே சிரஸி புஷ்பஸமம் நிக்ருத்தே ஜீவந்தமேனம் அமிதாயுஷமாஹுராப்தா : ||

பதவுரை

ஈச்வர – பரமசிவனே! புரர – முன்பு, ப்ரம்மாணம் – பிரம்ம தேவனை, ஹதவானஸி – கொன்றவராக இருக்கிறீர், இதி – என்பது, பிக்ஷாடனம் – பிக்ஷைவாங்கும் உமது சரித்திரத்தை, விம்ருசத:- ஆராய்ச்சி செய்தவனுடைய, ப்ரதிபான மாத்ரம் – ஆபாஸமான ஸித்தாந்தம், யத் – எந்தக் காரணத்தால், பஞ்சமே சிரஸி – பிரம்மாவின் ஐந்தாவது தலை, புஷ்ப ஸமம் – பூவைக்கிள்ளுவதுபோல, கொஞ்சமும் சிரமம் உண்டாக்காமல் நிக்ருத்தே ஸதி, கிள்ளப்பட்டிருப்பதால், ஜீவந்தம் – உயிருடன் இருப்பதாகவும், அமிதாயுஷம் – பொய் சொன்ன தோஷத்திற்குத் தந்தையால் தண்டனை செய்யப்படு விட்டபடியால், உயிர்கோகாமல், 5வது தலைமாத்திரம் கிள்ளப்பட்டு, பாபம் நீங்கி, பரார்த்தத்வய ஜீவியாக இருப்பவராக, ஏனம் – இந்த ப்ரம்மதேவரை, ஆப்தா:- பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

பிரம்மாவின் உயிர் நீங்கியிருந்தா லல்லவோ, ப்ரம்மஹத்தி தோஷம் ஸம்பவிக்கும். அதற்கு ப்ராயச்சித்தமாக பிக்ஷாடனம் செய்யப்படுகிறது என்று விமர்சகர்கள் சொன்னால் பொருந்தும் தண்டித்துப் பாவத்தைப்போக்கி ஆயுளைப் பூரணமாக பிரம்மாவிற்கு அளித்திருக்கும் பரமசிவனுக்கு, பிரம்ம ஹத்தி தோஷம் எப்படி ஏற்படும். அதற்கு எங்ஙனம் ப்ராயச்சித்த மாகும்? ஆதலால் அரசன் திருடனை அபராதம் போட்டு தண்டிப்பது போல, ஈச்வரன் தனயனுக்குச் செய்த அனுக்ரஹலீலையாகும்.

சுலோகம் 131

ஆனாபிஜானு வஸிதம் வஸனம் ந சரணம் பாணெள கபால சகலம் ந விலோகிதம் தே | நாலம்பதே சவசிரஸ்தவ கேதுயஷ்டெள பைக்ஷம் ந ஸாப்தபவனம் ஸகலம் ததாஸ் தாம் ||

பதவுரை

பிரம்மஹத்தி ப்ராயச்சித்தமாகில், எல்லா லக்ஷணங்களும் பிக்ஷாடன மூர்த்தியிடம் காணப்படவில்லை. ஆனாபிஜாநு – தொப்புளில் ஆரம்பித்து முழங்கால் வரையிலும், சாணம் வஸனம் – சணல் மயமான வஸ்திரம், ந வஸிதம் – உடுத்திக் கொள்ளப்படவில்லை. தே – உம்முடைய, பாணெள – கையில், கபாலசகலம் – மண்டையோட்டுத் துண்டு, ந விலோகிதம் – பார்க்கப்படவில்லை, தவ - உம்முடைய, கேதுயஷ்டெள – கொடிக்கம்பில், சவகிர:- கொன்ற பிணத்தின் தலை, நாலம்பதே – தொங்கப்படவில்லை, ஸாப்தபவனம் பைக்ஷம் – ஏழுவீட்டில் வாங்க வேண்டிய பிக்ஷைத்ரவ்யத்தின் கூட்டமும், ஸகலம் – ப்ராயச்சித்தத்தில் சொல்லப்படும் இவையெல்லாம், லக்ஷணங்கள், ந – பிக்ஷாடன மூர்த்தியான உம்மிடம் காணப்படவில்லை, ஆஸ்தாம் தத் – இவையனைத்தும், வேதவிதி நிஷேதங்களுக்கு உட்பட்ட உலகத்து ஜனங்களுக்கு இருக்கட்டும்.

வேதோபதேசகனுக்கு கர்மாவிற்கு உட்படாத லோகாதீதனுக்கு, ஈசனுக்கு எப்படிப் பொருந்தும்? அவருக்கு, அனுக்ரஹ மூர்த்திக்கு ப்ரத்யவாயமும் கிடையாது. ப்ராயச் சித்தமும் கிடையாது. ஆதலால் தான், தக்ஷிணாமூர்த்தி நடராஜாமூர்த்திகள் போல, பிக்ஷாடன மூர்த்தியும், ஆனந்த மாகக், கண்குளிர தர்சிக்கப்படுவதும், ஜனங்கள் அனுக்ரஹம் பெற்று, தீர்க்காயுளாக இருப்பதும், நடராஜா ஆனந்தமூர்த்தி; ஞானோபதேசம் செய்யும் தக்ஷிணாமூர்த்தி பிக்ஷாடனமூர்த்தி ஸத்தாமூர்த்தி, ஸத் சித் ஆனந்த பரப்ரம்மரூபம் : பரமேச்வரன்.

சுலோகம் 132

யத் காலபைரவக்ருதம் பதனீய மேன: கிம் தேன தே பவதி பைக்ஷமதாபி வ்ருத்தி :| தந் மத்ய பாதிநி வதே விபுதாந்தரஸ்ய நிர்வேத மாசரஸி கின்னு பவானஜஸ்ரம் ||

பதவுரை

அதாபி – பிறர் சொல்வதை அங்கீகரித்தாலும், காலபைரவக்ருதம் – உமது அம்சமாகிய காலபைரவரால் செய்யப்பட்ட, யத் – யாதொரு பதனீயமேன :- மகாபாதகமாகும் பிரம்மவத தோஷமுண்டோ, தேன – அதனால், தே – உமக்கு, பைக்ஷம் வ்ருத்தி:- பிக்ஷவாங்கும் பயன், பவதி கிம் – வருமா என்ன?

கால பைரவர் செய்த பிரம்மஹத்திக்கு, பிக்ஷை வாங்கும் தண்டனை அவருக்கு இல்லாமல், உமக்கா? இது என்ன? தன்மத்ய பாதினி – அந்த ப்ரம்மஹத்தியடங்கிய, விபுதாந்தரஸ்யவதே – ப்ரம்மா, விஷ்ணு, யமன், இந்திராதி மற்ற தேவதைகளின் ஸம்ஹாரத்தில், அஜஸ்ரம் – ப்ரதி கல்ப்பம், பல தடவைகள் செய்யப்படும்போது, பவான் – தாங்கள், நிர்வே த மாசரஸி – கிம் – வெறுப்பை, துக்கத்தைக் கைக்கொள்ளுகிறீர்களா என்ன?

ஸம்ஹார மூர்த்தியான தாங்கள் ப்ரதி கல்ப்ப முடிவிலும், ஸகல தேவதைகளையும் ஸம்ஹரிப்பது ஸ்வதர்மமே யல்லவா? அதுவும் வத ரூபமல்ல, உப ஸம்ஹார ரூபம்.அனுக்ரஹத்திற்காக, திரோதான துல்யமல்லவா? சுருதியும் ஹரிம்ஹரந்தம் அனுயந்தி தேவா: என்பது, நரஸிம்ம மூர்த்தியை ஸம்ஹரித்தவராகவும், வ்ருஷபம் மநீனாம் – நல்ல புத்தியை வர்ஷித்து அனுக்ரஹிக்கிறவராகவும், விச்வஸ்யேசானம் – ஸகல ஜக த்துக்கும் தலைவன் மஹேசன் என்றும், ஸம்ஹாரமூர்த்தியை அனுக்ரஹ மூர்த்தியாகவல்லவா விளக்கிக் கூறுகிறது. புராணங்களும் ஹரன் என்ற நாம நிர்வசனத்துக்கக, இச்சுருதி அர்த்தத்தையே விளக்குகின்றன.

சுலோகம் 133

யத்பாசுபத்யம்வ்ருணோ தமராந்தரேப்யோ பிக்ஷாம் பவனக்ருத யத் பரமேச்வரோபி | சோத்யம் ததேதத் உபயம் பரிஹர்த்துகாமோ மன்யே ப்ருஹஸ்பதிரபி ப்ரதிபத்தி சூன்ய : ||

பதவுரை

பவான் – தாங்கள், பரமேச்வரோபி – ப்ரம ஐச்வர்ய ஸம்பன்னராகவிருந்தும், அமராந்தரேப்ய:- மற்ற சில்லரை தேவதைகளிடமிருந்து, பாசுபத்யம் – பசுக்களுக்குத் தலைவர் என்ற பதவியை, அவ்ருணோத் : வரமாகப் பெற்றுக்கொண்டீர், இதியத் – என்று யாதொரு கட்டுக்கதை சொல்லப்படுகிறதோ, பிக்ஷாம் அக்ருத் இதியத் – பிக்ஷைவாங்கினீர் என்றும் யாதொரு அபத்தச் சொல்லுண்டோ, ததேதத் உபயம் – இந்த இரண்டு கேள்விகளை, பரிஹஸ்பதிரபி – பிரஹஸ்பதியும் கூட, ப்ரதி பத்தி சூன்ய :- லீலை என்று சொலதைத் தவிர வேறு ஸரியான ஸமாதானம் சொல்ல அறிவில்லாதவரென்றே மன்யே – நினைக்கிறேன்.

விசேஷ உரை

“த்ரிபுர ஸம்ஹார காலத்தில், எனக்கு பாசுபதி த்வம் இயற்கையாக அமைந்தது, இதை இப்போது, பணபந்த முறையில் காண்பிக்கிறேன்.” என்று தேவர்களைப் பார்த்துப் பரமசிவன் சொல்வதாகப் புராணங்கள் விளங்கக கூறுகின்றன, அப்படியே சிவரகஸ்யக்ரந்தத்தில், பார்வதிக்குப் பரமசிவன் தன் பிக்ஷாடனத்தைப் பற்றிக் கூறுகிறார்:- “நான் கொடுத்த மகிமையால் மயங்கின தேவர்களுக்கு, நல்ல புத்தி விளக்க என்னை யறியாத அவர்கள் கர்வத்தையும் அக்ஞானத்தையும் நீக்க, ரத்த பிக்ஷை வாங்கும் போலிச்செயல் செய்கிறேன், அதனால் கர்வம் நீங்கி ஞானவான்களாகட்டும்.” என்று சொல்வதாக ப்ரமாண வசனங்கள் இருக்கின்றன.

சுலோகம் 134

ப்ரம்மாஸி விஷ்ணுரஸி ஸர்வமஸீ தி யத் த்வாம் ஆஸ்தாமுபாஸனவிதிம் கதயந்தி மூடா : | தத்தேவதாந்தர நிகர்ஷ நிகூஹனாய மோஹாய வா பவது ஜல்ப்பித மல்ப்ப புத்தே : ||       ஹரிஹர அபேத ப்ரதிபாதக புராண வசனங்களின் உட்கருத்து சொல்லப்படுகிறது.

பதவுரை

த்வாம் – உம்மனிக்குறித்து, பிரம்மாஸி – பிரம்மாவாக விருக்கிறீர், விஷ்ணுரஸி – விஷ்ணுவாக இருக்கிறீர், ஸர்வமஸீதி – எல்லாமாக இருக்கிறீர், இதி என்று, உபாஸனவிதம் – உபாஸிக்கும்படி விதியை, மூடா : கத யந்தி – மூடர்கள் சொல்வது, ஆஸ்தாம் – இருக்கட்டும், தத் – அது, தேவதாந்தா நிகர்ஷ – மற்ற தேவர்களின் தாழ்மையை, நிகூஹனாய – மறைப்பதற்காக, அல்ப்ப புத்தே :- மந்தமதிகளின், மோஹாய வா – மயக்கத் துக்காகவாவது, ஜலப்பிதம் பவது – உளரலாகவிருக்கட்டும்.

சுலோகம் 135

அத்வைத மாகமசிரோபி ருபாஸனாயாம் உக்தம் தவேதி பரமார்த்த தயா ந வாச்யம் | பேதஸ்புடோ கருட மாந்த்திரிகயோரலீகம் தாதாத்ம்ய பாவன மதாபி விஷம் ப்ரமார்ஷ்டி ||

பதவுரை

அத்வைதம் – அத்வைதமானது, ஆகமசிரோபி:- வேதாந்தங்களால், உபாஸனாயாம் தவ – உம்முடைய உபாஸனைக்கு அங்கமாக, உக்தம் இதி – சொல்லப்பட்டது என்பதால், பரமார்த்ததயா ந வாச்யம் – அத்வைதம் தான் சேஷி, முக்திஸாதனம், ப்ராதானமென்று சொல்லக் கூடாது. கருட மாந்த்ரி கயோ: கருடனுக்கும், விஷத்துக்கு மந்த்ரிக்கும் மந்த்ரவாதிக்கும் பேத ஸ்புட:- வேற்றுமை ப்ரத்யக்ஷமாகத் தெரிகிறது, அதாபி – ஆனாலும், அலீகம் – பொய்யான, தாதாத்ம்ய பாவனம் – இருவரும் ஒன்று என்று கருட தாதாத்மயமாக த்யானம் செய்தால், விஷம் – பாம்பு கடித்த விஷத்தை, ப்ரமார்ஷ்டி – போக்குகிறது. ஆதலால் பரமாத்மாவாகிய – பரமேச்வரனுக்கும், ஜீவாத்மாகிய ஜீவனுக்கும், பேதம் உண்மை, தாதாத்ம்யமாக த்யானம் செய்து உபாஸனையால் முக்தி பெற வேண்டும்.

கர்ம காண்டத்தில், கர்மானுஷ்டத்தால் மனது சுத்தப்படுவதால், கர்ம காண்டம் , ஞான காண்டம் இரண்டும் பரமேச்வரன் உபாஸனைக்கு சேஷமானது என்பது ஹரதத்தாசார்யார் ஸித்தாந்தமாகும். அத்வைத ப்ரதிபாதனம் உபாஸனைக்காகத்தான்; உண்மையல்ல, மஹோபநிஷத்தில் உபக்ரம உபஸம்ஹாராதி தாத்பர்ய நிர்ணயக ப்ரமாணங்களால் சேஷியான பரமசிவனுபாஸனை தீர்மானிக்கப்பட்டிருப்பதால், இதர உபநிஷத்துக்கள் மஹோபநிஷத்தையனுஸரித்து மாற்றப்படுவது யுக்தமாகும் என்று ஹரதத்தசிவாசார்யார் சொல்லுகிறார். பக்திரஸாயனம் முதலிய க்ரந்தங்களியற்றிய, அத்வைதாசார்யரான மதுஸூதன ஸரஸ்வதீ முதலியவர்கள் அபிப்ராயமும் இதற்குச் சான்றும் அனுகுணமுமாகும். ஞானம் சேஷி என்ற சங்கரபகவத்பாதாள் அபிப்ராயத்திலும் உபாஸிக்கப்பட்ட பரமசிவன் அருளால்தான் ஞானம் உதயமாகும். ஸர்வ வித்யானாம் ஈசானர் அவர் என்பது எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதே ஆதலால் விரோதம் அணுவளவும் கிடையாது.

சுலோகம் 136

யத் ப்ரம்ம பஞ்சம சிரோலவனா பதானம் யத் ப்ரம்மணா ச ஹரிணா ச விமார்கணம் தே | யத்வா தயோர் ஜனயிதார மதீமஹே த்வாம் தத்ஸர்வ மீச்வர ! விமூடதியாமஸஹ்யம் ||

பதவுரை

ப்ரம்ம பஞ்சம சிர:- ப்ரம்மாவின் 5வது தலையை, லவன - கிள்ளிய, அபதானம் யத் – விருத்தாந்தம், யாதொன்று உண்டோ, ப்ரம்மணா – பிரம்மதேவராலும், ஹரிணா – நாராயணனாலும் தே – உம்முடைய, (முடி, அடி, காண்பதற்காக) விமார்கணம் யத் – தேடச்சென்ற விருத்தாந்தம் யாதொன்று உண்டோ, தயோ: - அவ்விரு ப்ரம்ம விஷ்ணு தேவர்களுக்கு, ஜனயிதாரம் – (வலது பாகத்திலிருந்து ப்ரம்மா உண்டானார், இடது பாகத்திலிருந்து விஷ்ணு உண்டானார் என்றதால்_ தந்தையாக இருப்பதாக, த்வாம் – உம்மை, யத்வா அதீமஹே – வேதங்களிலிருந்து அறிகிறோம் என்பது யாதென்று உண்டோ, ஈச்வரா – ஹே பரமேச்வரா! தத் ஸர்வம் – அவையெல்லாம், விமூடதியாம் – மூட ஜனங்களால், அஸஹ்யம் – பொறுக்கமுடியாமல் இருக்கிறது.

சுலோகம் 137

ஸோமே லதாத்மனி மஹேச்வர ! கெளண விருத்யா விஷ்ணோரவாதி ஜனகத்வம் ருசா கயாபி | த்வய்யேவ தத் பவிது மர்ஹதி முக்ய வ்ருத்யா நேந்த்ரே ந பங்கஜபவே நிதராம் முராரெள ||

பதவுரை

மஹேச்வர, லதாத்மனி – கொடியுருவம் கொண்ட ஸோமலதையில், விஷ்ணோ: ஜனகத்வம் – விஷ்ணுவின் தந்தையாக இருத்தல், கயாபி ருசா – ஓர் ரி மந்த்ரத்தால், கெளணவ்ருத்யா – ஸ்துதிக்காக, கெளணமாக பையன் சிங்கம் என்ற ப்ரயோகம்போல, அவாதி – சொல்லப்பட்டிருக்கிறது, தத் – அந்த விஷ்ணுவின் தந்தையாக இருப்பது, முக்யவ்ருத்யா – உண்மையாக சுருதி, ஸ்ம்ருதி புராணப்ரமாணங்களை அனுஸரித்து த்வய்யேவ – உம்மிடத்திலேயே பவிது மர்ஹதி – இருப்பது தகுந்தது, இந்த்ரே – இந்திரனிடம் பொருந்தாது, பங்கஜபவே – ப்ரம்மாவிடம் பொருந்தாது, முராரெள ச – விஷ்ணுவினிடம் நிதராம் ந – அடியோடு பொருந்தாது.

சுலோகம் 138

அன்யோன்யதோ யதி பவேதஹமீச்வரஸ்யாம் த்வம் சாஹ மீச்வர ! கிமத்ர நியாமகம் ந : | கோவா விபர்யஸிதுமர்ஹதி வஸ்து சக்திம் தத் தத் ஸ்வபாவநியதாம் பவதாக்ஞையாபி ||       ஹரி ஹரர் இருவர்களுக்கும் உற்பத்தியுண்டு.

நாராயணாத் ருத்ரோ ஜாயதே என்றும், நாராயணனிடமிருந்து சிவன் பிறந்ததாக சுருதி கூறுகிறது என்பதற்கு பதில் கூறப்படுகிறது.

பதவுரை

அன்ய – ஹரி ஹரர்களில் ஒருவர், அன்யத :- மற்றவரிடமிருந்து, யதிபவேத் – ஹரனிடமிருந்து ஹரி, ஹரியிடமிருந்து ஹரன் உண்டானதாக இருந்தால், அஹம் ஈச்வர: ஸ்யாத் – நான் கடவுளாக இருக்கலாம், த்வம் ச அஹம் – நீங்களும் ஜீவனாக இருக்கலாம், ஈச்வர – கடவுளே! ந :- நமக்கு, கிம் அத்ர நியாமகம் – என்ன விதி கமகமான காரணம் சொல்ல முடியும்? ஆதலால் பரமேச்வரன் உத்பத்தியை அங்கீகரிப்பது வ்யவஸ்தைக்கு விரோதமாதலால், அவருக்கு உத்பத்தி கிடையாது, அவரிடமிருந்து தான் மற்ற தேவதைகள் விஷ்ணு உள்பட உண்டானார்கள், விஷ்ணுவின் பிதா பரமசிவன் என்பது தான் சுருதி தாத்பர்யமாகும் நாராயணனிடமிருந்து காலாக்னிருத்ரன் என்ற ஸம்ஹார மூர்த்திக்கு, தமோகுண ப்ரதானனுக்கு உற்பத்தி கூறப்பட்டிருக்கிறது. குணா தீதனான, துரீயனாகிய பரப்ரம்ம லக்ஷணம் வாய்ந்த பரமேச்வரனுக்கு உத்பத்தி கிடையாது. ஜகத் காரணனல்லவா அப்பரம்பொருள்? ருத்ர : என்று ஜ்வரத்துக்கும் பெயரானதால், வாஸுதேவன் கோபத்தால் ஜ்வரம் உண்டாயிற்று என்று அந்த சுருதியின் அர்த்தம் கொள்ள வேண்டும். பவதாக்ஞயாபி – உம்முடைய உத்தரவால்கூட, தத் தத் ஸ்வபாவ நியதாம் – அந்த அந்த இயற்கையாக அமைந்த வஸ்து சக்திம் – வஸ்து ஸாமர்த்தியத்தை, விபர்யஸிதும் – மாற்றுவதற்கு, கோவார்ஹதி – யாரால் முடியும்?

பரமசிவனுக்கு அனைத்தையும் உண்டுபண்ணும் வல்லமை, வஸ்து ஸ்வபாவ நியதமானதை, யாரால் அபலபிக்க முடியும் என்பது கருத்து.

சுலோகம் 139

ஏகம் தவாப்யஸுகரம் ததுதாஹ ராமோ ஜாதேன பாவ்ய மமராந்தரவத் த்வயாபி | அப்யர்த்திதோபி ஹி மஹேச ! மகர்ஷிதாரை : அந்தர்ஹிதஸ் த்வமஸி கர்ஹித கர்ப்பவாஸ : ||

பதவுரை

மஹேச – பரமசிவனே! தவாபி – உமக்கும், ஏகம் – ஒரு கார்யம், அஸுகரம் – செய்ய முடியாது, தத் – அதை, உதாஹராம :- விளக்கிக்கூறுகிறோம், எல்லாராலும் பிறக்ககுடியும், பிறப்பது என்பது த்வயாபி – உம்மாலும் செய்ய முடியாத கார்யம், உம்மால் கர்ப்ப வாஸம் செய்ய முடியாது திண்ணம், அமராந்தரவத் – ப்ரம்மா, விஷ்ணுவைப்போல, ஜாதேன பாவ்யம் – தனக்குச் குழந்தையாகப் பிறக்கவேண்டுமென்று, மகர்ஷிதாரை:- அத்ரிமுனிவர் பத்னியான அநுஸூயை தேவியால், அப்யர்த்திதோபி – வரம் வேண்டிக் கொள்ளப்பட்ட போதிலும், த்வம் – நீர், கார்ஹித கர்ப்பவாஸ: - கர்ப்பவாஸம் நித்திக்கப்பட்டதால், அந்தர்ஹித :- மறைவாக, வேறுவிதமாக, கர்ப்பவாஸம் இல்லாமல், அஸி – பிள்ளையாக அநுஸூயைக்கு ஆனீர்.

அநுஸூயைக்கு சிவன் உருவமான புத்ரன் துர்வாஸர், அநுஸூயையின் கையிலிருந்து, புஷ்பாஞ்ஜலீயிலிருந்து, மறைவாக இருந்தவர்போல ஆவிர்ப்பவித்தார். ப்ரம்மா, விஷ்ணு இருவர்கள் தாம் சுக்ல, ச்ரோணிதமாகப் பிறந்தவர்கள், (ஸோமனாகவும், தத்தாத்ரேயராகவும்) கர்ப்பவாஸம் மிகவும் கஷ்டமானது என்பதைப் பெயரில் காட்டி, புஷ்பாஞ்ஜலியில் மறைந்து, அநுஸூயா தேவியின் கையிலிருந்து துர்வாஸ முனிவராக, சிவன் ப்ராதுர்ப்பவித்தார் என்ற விஷயம் ஸனத்குமார ஸம்ஹிதையில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது, ஆதலால் விஷ்ணு, ப்ரம்மா முதலிய அனைவரும் பசுக்கள், பரமேஸ்வரன் ஒருவர் நாம் பிறக்காதவர், பசுபதி.

கர்ப்பவாஸோ ஹி துர்வாஸ: ஸர்வா வாஸேஷ் விதீவ யத் | துர்வாஸா நாம புத்ரோ பூத் தஸ்யா: புஷ்பாஞ்ஜலே : சிசு: || என்பது முடிவான ஸனத்குமார ஸம்ஹிதையின் உண்மை வசனம், விஷ்ணுவால் சொல்லப்பட்டது.

சுலோகம் 140

இச்சாவதீர்ண முரசாஸனகர்ப்பவாஸ: ஸ்யாத்சேத் உதாஹரணமேவ விமர்சனீய : | கர்ப்பே வஸாமி பரிவேஷ்ட்ய ஜராயுணாஹம் மாஸான பஹூனிதி மஹேச்வர ! கஸ்ய காம : ||

பதவுரை

இச்சாவதீர்ண – தன்னிஷ்டத்தின் பேரில், லோக க்ஷேமார்த்தமாக அவதாரம் செய்த, முரசாஸன – முராசுரனைக் கொன்ற நாராயணனுடைய கர்ப்பவாஸ :- கர்ப்பவாஸமானது, உதாஹரணம் ஸ்யாத் சேத் உதாரணமாகத் கொடுக்கப்படுமானால், ஏஷ: - இந்த கர்ப்பவாஸம், விமர்சனீய :- யோஜித்து முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம், இஷ்டப்படிக்கு, ஒருவனும் கர்ப்பத்தில் வசிக்கமாட்டான் என்பது தாத்பர்யம், மஹேச்வர, அஹம் – நான், பஹூன்மாஸான் – பல மாதங்கள் இடை விடாமல், ஜராயுணா – காப்பப்பையால், பரிவேஷ்ட்ய – சுற்றப்பட்டு, கர்ப்பே வஸாமி – கர்ப்பத்தில் வசிக்கிறேன், இதி – என்ற காம:- விருப்பம், கஸ்ய – யாருக்குத்தான் ஏற்படும்? ஒருவனும் கர்ப்பத்தில் வஸிக்க விரும்பமாட்டான். ஆதலால், கர்மாதீனமாகக் கர்ப்ப வாஸத்தில் தள்ளப்பட்டாலன்றி: ஒருவன் தானாக இஷ்டப்பட்டு கர்ப்பவாஸம் செய்தான் என்பது அர்த்தமற்ற வசனமாகும்.

சுலோகம் 141

இச்சாபி நூன மனுயாதி புரா க்ருதானி கர்மாணி சங்கர ! சுபாசுபபலக்ஷணானி | இச்சாவதார வசனானி து பாரதாதெள நாராயணஸ்ய குணவாத முதாஹரந்தி ||

இஷ்டப்படி அவதரித்தலை அங்கீகரித்தாலும் இந்த விருப்பம் கர்மாதீனமாகத்தான் ஏற்படும். ஆகவே விஷ்ணுவின் அவதாரங்களும் கர்மாதீனம் தான்.

பதவுரை

சங்கர, இச்சாபி – விருப்பமும், புராக்ருதானி – முன் செய்யப்பட்ட, சுபாசுபலக்ஷணானி – புண்ணியம், பாவம், என்று பிரஸித்தியடைந்த, கர்மாணி – கர்மாக்களை, நூனம் – நிச்சயமாக, அனுயாதி – பின்பற்றிய உண்டாகும். பாரததெள – பாரதம் முதலிய க்ரந்தங்களில் இச்சாவதராவசனானி – ப்ரம்மாண்டபுராணத்திலும் உத்தர ராமாயணத்திலும், ப்ருகுபத்னியைக் கொன்ற சாபத்தால் மத்ஸ்ய கூர்மாதி 10 ஜன்மாக்கள் விஷ்ணுவிற்கு, அவர் ஜனியமாகக் கர்ம நிமித்தமாக ஏற்பட்டதாகவும், கிருஷ்ணனுடைய சொந்தவாக்கியத்தாலும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்போது ஸம்பவாமி யுகேயுகே – என்று உலகத்தை காக்க இஷ்டப்படி அவதாரம் செய்ததாகக்கூறும் வாக்கியங்கள், நாராயணஸ்ய – நாராயணனுக்கு, குணவாத முதாஹரந்தி – விரோதம் உண்டாவதால், புகழ்ந்து சொன்னவாக்கியங்கள் என்பதாக மீமாம்ஸகர்கள், ஸித்தாந்தம் செய்திருக்கிறார்கள். பூதார்த்தவாதம், விரோதமில்லாத ஸம்யத்தில் தான் அங்கீகரிக்கப்படுகிறது.

சுலோகம் 142

விதாதாரம் க : சித் பஜதி பஜதே க : சனஹரிம் ஸுரானன்யானன்யே ஜகதி ஸபலா : ஸர்வ விதய : | ததாபி த்வத்பக்தே சிவசிவ யதாசர்மவதிதி ச்ருதோ மந்த்ரோ தேவாந்தர பஜன தைன்யம் ந ஸஹதே ||

பதவுரை

க : சித் – ஒருவன், விதாதாரம் யிரம்மதேவனை, பஜதி – ஸேவிக்கிறான், க : சன - மற்றொருவன், ஹரிம் – நாராயணனை, பஜதே – ஸேவிக்கிறான், அன்யே – மற்றவர்கள், அன்யான் ஸுரான் – மற்றதேவர்களை, பஜந்தே – ஸேவிக்கிறார்கள், ஜகதி – உலகில், ஸர்வவிதய :- எல்லா ஸேவைகளும் பலன் தருகின்றன. ததாபி – அப்படியிருந்தபோதிலும், யதாசர்மவத் இதிச்ருதோமந்த்ர:-

       யதாசர்மவதாகாசம் வேஷ்டயிஷ்யந்தி மானவா: |       ததா சிவமவிக்ஞாய துக்கஸ்யாந்தோ பவிஷ்யதி ||

என்ற ச்வேதாச்வதர உபநிஷத்தில் கூறப்பட்ட மந்த்ரமானது, த்வத் பக்தே – உன் பக்தன் விஷயத்தில், சிவ சிவ, தேவாந்தர பஜனதைன்யம் – பிரம்மா விஷ்ணு முதலிய தெய்வங்களை ஸேவிப்பதால் ஏற்படும் தீனபாவத்தை, ந ஸஹ தே – பொறுக்கவில்லை.

ஆகாயத்தைத் தோலைச் சுற்றிக்கட்டுவதுபோல், மனிதன் கட்டமுடிந்தால், சிவனையறியாமல் மற்றதேவ வழிப்பாட்டால், துக்கக்கடலைத் தாண்டி, இன்பநிலையை அடைவது, ஸாத்யமாகும். என்று தீர்மானமாகக் கூறப்பட்டிருப்ப்தால், மற்ற பயன்களை அடைந்தாலும், ப்ரம்மவிஷ்ணு பஜனத்தால் முக்தியடைய முடியாது. சிவபஜனம் ஒன்றுதான் அதற்கு உபாயம். அப்படியிருக்க முக்தியை விரும்புகிறவன் மற்ற தெய்வங்களை பூஜிக்க வேண்டிய அவசியமில்லை.

சுலோகம் 143

சசே ச்ருங்கம் புஷ்பம் நபஸி ம்ருகத்ருஷ்ணாஸு ஸலிலம் ப்ரஸூதிர் வந்த்யாயாமனவதி மதாயுஸ் தநு ப்ருதாம் | விமுக்திர்வா தேவாந்தர பஜனலப்யா பசுபதே ! ந சக்யம் ந : ஸம்பாவயிதுமபி ஸர்வம் விம்ருசதாம் ||

பதவுரை

சசே ச்ருங்கம் – முயல் கொம்பைப்போல, நபஸி புஷ்பம் – ஆகாயத்தில் புஷ்பம்போல், ம்ருகத்ருஷ்ணாஸு ஸலிலம் – கானலில் ஜலத்தைப்போல வந்த்யாயாம் ப்ரஸூதிர்வா – மலடிக்கு மகனைப்போல, தநுப்ருதாம் – சரீரமெடுத்தவர்களுக்கு, அநவதிமதாயுர்வா – முடிவில்லாத, அளவற்ற ஆயுளையும் போல, பசுபதே – பாசபத்த பசுக்களை விடுவிப்பவரே, தேவாந்தர பஜனலப்யா – மற்றதேவதைகளை ஸேவித்து அடையக்கூடிய, ஸ்ம்ருதி, புராணம், நியாயங்கள் எல்லாவற்றையும் யோசித்துப்பார்க்கும், ந :- எங்களுக்கு, ஸம்பாவியிதும்பி ந சக்யம் – ஸம்பானாஸ் பதமாகக்கூடக் காணப்படவில்லை.

சுலோகம் 144

ந பின்னா நெளரன்யானலமுதநிதேருத்கமயிதும் சிலா நைவேந்நேதும் ப்ரபவதி சிலாமந்தக ரிபோ | ஜனித்வா ம்ருத்வா வா ஜகதி பரிவர்த்தீ ஸுரகண : கதம் மே ஸம்ஸார ப்ரமண பய பாஜஸ்து சரணம் ||

பதவுரை

பின்னா – பின்னமான உடைந்துபோன ஓட்டைவிழுந்த நெள:- ஒருதோணியானது, அன்யான் – மற்ற ஓர் உடைந்த கப்பலை, ஓட்டைவிழுந்த கப்பலை உதநிதே :- ஸமுத்ரத்திலிருந்து உத்கமயிதும் – அக்கரைசேர்ப்பதற்கு, நாலம் – சக்தியற்றது அந்தகரிபோ – யமனைக் காலால் உதைத்தழித்த கடவுளே , சிலா – கல், சிலாம் – கல்லை, உன்னேடும் – உயரத்தூக்க, நைவ ப்ரபவதி – சக்தியற்றதுதான், ஜகதி – உலகில், ஜனித்வா – பிறந்து, ம்ருத்வா வா – இறந்தும் பரிவர்த்தீ – சுற்றிக்கொண்டிருக்கும், ஸுரகண:- தேவக்கூட்டம், ஸ்ம்ஸார ப்ரமண பயபாஜ:- உலகில் பிறந்து இறந்து, பிறந்து இறந்து – சுழன்று தவிக்கும் அவஸ்தையிலிருக்கிற மே – எனக்கு – எப்படி, சரணம் – காக்கமுடியும், சரணமாக இருக்கமுடியும் முடியவே முடியாது, மார்க்கண்டேய மகரிஷி – யம பயம் நீங்க யாரைச் சரணமடைந்தார்? யார் அனுக்ஹரகத்தால் சிரஞ்சீவியாக ஆனார்? காலகாலனல்லவா யமபயத்தைப் போக்க முடியும். மற்ற எந்த தெய்வமும் காலனுக்கு உட்பட்டதே.

சுலோகம் 145

தேவதாந்தர புன : புனர்பவம் பச்யத் : பசுபதே ! பயம் மம | க்ரீடதோபி தவ ஜன்ம மாஸ்மபூத் தீயதாம் அயம் அப : சிமோ வர : ||

பதவுரை

தேவதாந்தரபுன: புனர்பவம் – மற்றதெய்வங்கள் அடிக்கடி பிறப்பதை (பிறந்து இறப்பதை) பச்யத:- பார்க்கிற, மே – எனக்கு, பசுபதே – பசுக்களின் பாசத்தை நீக்கியருளும் பதியே, பயம் – பயம் உண்டாகிறது, தவ - உமக்கு, க்ரீடதோபி – விளையாட்டிற்காகக்கூட, லீலாமாத்ரமாகவும், கூட, ஜன்மமாஸ்ம்பூத் – பிறவி ஏற்படவேண்டாம் (த்வயி – உம்மிடத்தில், க்ரீடதோபி – அலக்ஷ்யமாக, விளையாட்டாக, பக்தி செலுத்துகிறவனுக்குக்கூட) ஜன்மமாஸ்மபூத் – மறுபடி பிறவி ஏற்பட வேண்டாம் அயம்: இந்த, அப: சிமோ வர: முதல் தரமான ஒரு வரத்தை மட்டும். தீயதாம் – எனக்குத் தங்களால் அனுக்ரஹிக்கப்பட வேண்டும்.

சுலோகம் 146

வாஸனா பரிக்ருஹீத தேவதா வர்ணனெளபயிக ஸர்வ வாங்மயம் | திக்திக் ஈச்வர ! ஜடாசயம் ஜனம் தாவகை ரஹமஸானி ஸங்கத : ||

பதவுரை

வாஸனா – பழைய ஜென்மவாஸனையால், பரிக்ருஹீத – ஏற்றுக்கொள்ளப்பட்ட தேவதா – தைவத்தை, வர்ணன – வர்ணிப்பதில், ஒளபயிக – உபயோகப்படுகின்ற, ஸர்வ வாங்மயம் – எல்லாவார்த்தைகளையுடைய, ஜடாசயம் ஜனம் – மூடபுத்தியுள்ள மனிதனை, ஈச்வர, திக்திக் – நிந்திக்க வேண்டும், நிந்திக்க வேண்டும், அஹம் நான், தாவகை:- உமது பக்தியில் ஈடுபட்ட ஜனங்களுடன், ஸங்கத:- சேர்ந்தவனாக, அஸானி – இருக்க வேண்டும்.

பிற தைவங்களை வழிபடும் மனிதர்களுடன் எனக்கு ஸ்னேகம், சேர்க்கை வேண்டாம்.

சுலோகம் 147

பாம்ஸுகேளிரபி யஸ்ய சைசவே சைவ பாசுபத பாதபாம்ஸுபி : | ஸ்தோத்ரகர்மணி ந தஸ்ய மே குண : தத்குணோயம் உபபத்யதே த்வயி ||

பதவுரை

யஸ்ய – யாதொரு எனக்கு, சைசவே – இளம்பருவத்தில், பாம்ஸுகேளிரபி – மண்ணில் விளையாடுவது கூட, சைவபாசிபத பாதபாம்ஸுபி:- சிவபக்தர்கள், பசுபதி பக்தர்கள் பாததூளிகளாலேயே, நேர்ந்ததோ, தஸ்ய மே – அப்பேர்ப்பட்ட எனக்கு ஸ்தோத்ரகர்மணி – உம்மைத்துதிக்கும் கார்யத்தில் ந குணம் :- என்ன சக்தியிருக்கிறது, அயம் – இந்த தத்குண: துதிக்கும் சக்தி, த்வயி ஏவ, உபபத்யபதே – உம்மைச் சேர்ந்தது என்பது தான் யுக்தமானதாகும்.

சுலோகம் 148

ஸ்தோத்ரீயமர்த்தம் உபபாதிதவானஹம் தே பக்தேதி பக்தஜனவத்ஸல ! பாஷமாண : | ஆவிர்பபூவித சிகீ ஸுசினாம்பரேண யக்ஞோபவிதமுபவீய த்ருத த்ரிபுண்ட்ர : ||       இந்த 147 சுலோகங்களடங்கிய சுருதிஸூக்திமாலா ஸ்துதியைச் செய்த பலனைத் தன் அனுபவத்தை யொட்டி விளக்குகிறார்.

பதவுரை

அஹம் – நான், தே – உம்முடைய, ஸ்தோந்ரீயம் – ஸ்துதிக்குத் தகுந்த, அர்த்தம் – சுருதி அர்த்தத்தை, உபபாதித வான் – வெளிப்படுத்தினேன். ஹே பக்தவத்ஸல – பக்தனிடத்தில் குழந்தையன்பு வைத்துக்காக்கும் கடவுளே, சிகீ – குடுமிவைத் தவரும், ஸுசினாம்பரேண உபலக்ஷித – வெண்மையான ஆடைதரித்தவரும், யக்ஞோபவீதமுபவீய – வெண்ணிறமான பூணூலையணிந்தவரும், த்ருதத்ரிபுண்ட்ர:- த்ர்யக் த்ரிபுண்ட்ரமாக, வெண்பஸ்மத்தால் நெற்றியில் அடையாளம் இட்டுக் கொண்டவராயும், பக்த இதி பாஷமாண:- என் அன்புமிகுந்த பக்தனே, என்று என்னைக் கூப்பிட்டுக் கொண்டு, ஆவிர் பபூவித – என் முன்னே தோற்றமளித்து, அனுக்ரஹம் செய்தீர்களல்லவா?

சுலோகம் 149

பக்தம் பவானதித பார்ச்வ சரோபநீதம் மஹ்யம் மஹேச்வர ! பய  : ச்ரபிதம் ப்ரஸன்னம் | புஞ்சான ஏவ ததஹம் ஜடிதி ப்ரபுத்த : ஸ்வப்னஸ்ஸமாதிரிதி யுக்ததியாம் அபின்ன : ||

பதவுரை

மஹேச்வரா, பார்ச்வ சரோப நீதம் – பக்கத்தில் வைத்த, கணத்தால் கொண்டுவரப்பட்ட, பய :- ச்ரபிதம் – பாலில் வெந்த, பக்தம் – பாயஸான்னத்தை, பவான் – தாங்கள், மஹ்யம் என் பொருட்டு, அதித – கொடுத்தீர்கள், தத்ப்ரஸன்னம் – அந்த ப்ரஸாதத்தை, புஞ்சமான ஏவ – சாப்பிட்பிட்டுக்கொண்டிருக்கும்பொழுதே, ஜடிதி – திடீரென்று, அஹம் – நான், ப்ரபுத்த :- விழித்துக் கொண்டுவிட்டேன். யுக்தியாம் – யோகத்தில் செலுத்திய மனதையுடையவர்களுக்கு, ஸ்வப்ன :- ஸ்வப்னமும், ஸமாதிரிதி – ஸமாதி நிலையென்பதும் அபின்ன :- வேறுபடாதது, ஒன்றுதான், ஆதலால் ஸமாதியில் அடைந்தது எவ்விதம் பொய்யாகாதோ, உண்மையோ, அவ்விதம் ஸ்வப்னத்தில் கிடைத்ததும், அக்காரவடிசில் பாயஸம் சாப்பிட்டதும், உண்மையாகவே, யோகஸமயத்தில் எனக்கு தேர்ந்தது என்பது பொருள்.

சுலோகம் 150

ஸ்தோத்ரம் ஏதத் அவதாய க்ருஹ்ணதாம் அர்த்தமஸ்ய நிகிலேன ஜானதாம் | க்ராஹ்யமன்யதபி நாவ சிஷ்யதே ஞேயமன்யதபி வா ந கிஞ்சன ||

பதவுரை

அவதாய – மனதைக் கடவுளிடத்தில் செலுத்தி, ஏதத் ஸ்தோத்ரம் – இந்த சுருதி ஸூக்தி மாலை என்றும் ஸ்தோத்ரத்தை, க்ருஹ்ணதாம் – படிப்பவரகளுக்கும் அஸ்யார்த்தம் – இதன் அர்த்தத்தை, நிகிலேன – பூராவும், ஜானதாம் – அறிகிறவர்களுக்கும், அன்யத் க்ராஹ்யம் அபி – வேறு கிரஹித்துக் கொள்ள வேண்டிய விஷயம், நாவசிஷ்யதே – மிகுதியாக இருக்கவில்லை, ஞேயம் – அறியவேண்டிய, அன்யத் கிஞ்சன அபிவா – வேறு ஏதாவது ஒன்றும், ந – இல்லை, எல்லாம் இந்த துதியில் இதன் அர்த்தமாகப் பரமசிவனிடம் அடங்கியிருப்பதால், வேறு தெரிந்து கொள்ளவேண்டியது ஒன்றுமில்லையென்பது.

ஏகவிஞ்ஞானேன ஸர்வவிஞ்ஞானப்ரதிக்ஞாரூபமாக சுருதியில் சொல்லப்பட்டதுபோல், இங்கும் சொல்லப்பட்டது.

சுலோகம் 151

பஞ்சா சதுத்தரசதா – சுருதி ஸூக்திமாலா போகாவளீ புஜகராஜ மனோஹரா தே | வேதேஷு பக்தி மபராகம வைதிகேஷு தந்த்ரேஷு பக்தி மதுலாம் த்வயி ச ப்ரஸூ தே ||

பதவுரை

புஜகராஜ மனோஹரா – நாகராஜனை ஆபரணமாகப் பூண்டு, அவன் மனதிற்கு ஆனந்தத்தைக் கொடுக்கும் பரமேச்வரா, தே – உம்முடையதான போகாவளீ – கீர்த்திபரம் பரம்பரையான, பஞ்சா சதுத்தரசதா – 150 சுலோகங்களடங்கிய சுருதிஸூக்திமாலா – வேதங்களாகிற, கல்ப விருக்ஷத்திலிருந்து எடுத்த நல்ல வசனங்களாகிற தொகுக்கப்பட்ட பாமாலையானது, வேதேஷு – வேதங்களில், பக்தியும் – பக்தியையும், அவைதி கேஷு தந்தரேஷு அபராகம் – வேத விருத்தமான முறைகளில் வெறுப்பையும், த்வயி – உம்மிடத்தில் (பரமசிவனிடத்தில்) அதுலாம் பக்திம் ச – ஒப்பற்ற பக்தி விசேஷத்தையும், ப்ரஸூதே – உண்டுபண்ணுகிறது.

பொய்வசனங்களை உண்மையாக்க முயல்பவர்களுக்கு இது இடியும் புயலுமாகும்.

சிவலிங்கபூபதியால் செய்யப்பட்ட, தத்வப்ரகாசிகை என்ற வ்யாக்யானத்தின் இந்தத் தமிழ் விரிவுரை, பரமேச்வரன் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் படுகிறது.

உமாஸஹாயம் வந்தேஹம் ஓங்கார வேத்யம் வ்ருஷவாஹம் நம : பார்வதி பதயே – ஹர   ஹர   மகாதேவ சைவஸ்தாபக ஸ்ரீ ஹரதத்த ஆசார்ய வர்யாய – நமோ நம :

மங்கள ச்லோகம்

கல்ப்பாந்தே சமித த்ரிவிக்ரம     மகா கங்காள பத்த ஸ்புரத் சேஷஸ்யூத ந்ருஸிம்ஹ பாணி     நகரப் ப்ரோதாதி கோலாமிஷ: | விச்வைகார்ணவ ஸம்விஹார முதிதெள     யோ மத்ஸ்ய கூர்மா வுபெள கர்ஷந் தீவரதாம் கதோஅஸ்யது     ஸதாம் மோஹம் மஹாபைரவ: ||

பதவுரை

கல்ப்பாந்தே – கல்ப்பத்தின் முடிவில், சமித – அடக்கி உயிரில்லாமல் செய்யப்பட்ட, த்ரிவிக்ரம – த்ரிவிக்ரம் அவதாரம் எடுத்த விஷ்ணுவின், மகாகங்காள – பெரிய எலும்பான தூண்டிலில், பத்த – கட்டப்பட்ட, ஸ்புரத் – ப்ரமாசமாகத் தொங்கவிடப்பட்ட, சேஷ – ஆதிசேஷன் என்ற பாம்பாகிய கயிற்றில், ஸ்யூத – கோக்கப்பட்ட ந்ருஸிம்ம மூர்த்தியினுடைய, பாணி – கையின், நகர – நகங்களாகிய முட்களில் ப்ரோத – குத்திவைக்கப்பட்ட, ஆதிகோல – விஷ்ணுவின் அவதாரமான ஆதிவராஹத்தின் அமிஷ :- மாம்சத்தைக்கொண்டு , விச்வைகார்ணவ – உலகம் முழுவதும் ஸமுத்ரமாக விருக்கும் அந்த ஸமயம் அகண்ட ஸாகரத்தில், ய :- எவர் ஸம்விஹார – நன்கு விளையாடிக்கொண்டு, முதிதெள – பேரானந்தம் கொண்டவராய் மத்ஸ்யகூர்மாவுபெள – மீன் – (விஷ்ணுவின் மத்ஸ்யாவதாரம்), கூர்ம (கூர்மாவதாரம்) இரண்டையும் கர்ஷந் – தூண்டிலில் இழுத்துக் கொண்டு, தீவரதாம் கத:- மீன், ஆமை பிடிக்கும் செம்படவனாக இருக்கும் தன்மையை அடைந்தாரோ, அப்பேர்ப்பட்ட ஸர்வேச்வரனான, மஹாபைரவ:- மகாபைரவர், ஸதாம் – ஸாதுக்களுக்கு, மோஹம் – மாயை என்ற அஞ்ஞானத்தை, அஸ்யது – நிச்சேஷமாக, முற்றிலும் – அழிக்கட்டும்.

விளக்கம்:-

ஒவ்வொரு கல்ப்பத்தின் முடிவிலும் பரமேச்வரன் விஷ்ணு ப்ரம்மாதிகளையும், ஸகல ஜீவராசிகளையும் ஒடுக்குகிறார் என்பது வேதோக்தம். இந்த சுலோகத்தில் ஒருமிக அழகான கற்பனை யமைந்திருக்கிறது. விஷ்ணுவின் அவதாரங்களில் பத்து மிக ப்ரஸித்தம். முதல் ஐந்து அவதாரங்களில் அவதரித்த கார்யம் முடிந்த பிறகு விஷ்ணுவானவர் தன் நிலை மறந்து கர்வம் கொண்டு, உலகத்தைப் பீடிக்கிறார்.(ஜனார்த்தனன் என்ற பதத்திற்கு உலகத்தைப் பீடிக்கிறவன் என்றும் அர்த்தம் உண்டு). அதனால் ஈச்வரன் அந்த அந்த அவதாரங்களைப் பிரத்யேகமாகத் தண்டித்து ஒடுக்குகிறார்.

(1) மகாவிஷ்ணு மத்ஸ்யாவதராமெடுத்து வேதங்களை மீட்டு வந்தார்; பிறகு தன் நிலை மறந்து ஸமுத்ரத்தில் அட்டகாஸம் பண்ணினார். ஈச்வரன் மீனுடைய கண்களைப் பிடுங்கி ஒடுக்கினார்.

(2) அமிர்தமதன காலத்தில் கூர்மாவதாரமெடுத்து மத்தாக உபயோகிக்கப்பட்ட மந்தரமலையைத் தாங்கினார், பிறகு தன் நிலைமறந்து நீரிலும், பூமியிலும் அட்டகாஸம் செய்தார். ஆமைக்கு முதுகு ஓட்டில் பலம். ஈச்வரன் ஆமையின் ஓட்டைப் பிடுங்கி ஒடுக்கினார். ஓட்டை ஆபரணமாகவும் பூண்டார்.

(3) வராக அவதாரம் எடுத்து, பூமியை மறைத்து வைத்த ஹிரண்யாக்ஷனைக் கொன்று பூமியை மீட்டுவந்தார் (மூக்கில் உள்ள கொம்பால் தாங்கி வந்தார்). பிறகு பூமியில் அட்டஹாஸம் செய்த போது, ஈச்வரன் மிக்க பலம் கொண்ட அந்தக் கொம்பைப் பிடுங்கி அதையும் ஆபரணமாக கொண்டார்.

(4) ந்ருஸிம்ம அவதாரம் எடுத்து, ஹிரண்ய கசிபுவின் ரத்தத்தைக் குடித்த வெறியால், தேவர்களையும் மனிதர்களையும் பீடிக்கத் தொடங்கின போது, ஈச்வரன் சரபாவதாரம் எடுத்து ந்ருஸிம்மத்தைக் கிழித்து தோலைத் தாமே போர்த்திக் கொண்டார்.

(5) த்ரிவிக்ர அவதாரமெடுத்து, உலகில் அட்டஹாஸம் செய்த பொது, ஈச்வரன் பலம் கொண்ட முதுகு எலும்பைப் (கங்காளம்) பிடுங்கி அதையும் ஆபரணமாகக் கொண்டார்.

       பரமேச்வரனுடைய 64 மூர்த்தங்களில்       (1)    மத்ஸ்ய ஸம்ஹார மூர்த்தி         - 60 வது மூர்த்தம்       (2)    கூர்ம ஸம்ஹார மூர்த்தி           - 59 வது மூர்த்தம்       (3)    வாரஹ ஸம்ஹார மூர்த்தி          - 61 வது மூர்த்தம்       (4)    ஸிம்மக்ன மூர்த்தி                 - 30 வது மூர்த்தம்       (5)    கங்காள மூர்த்தி                   - 27 வது மூர்த்தம்       இந்த மூர்த்தங்களின் முழுவிவரங்களையும் சிவபராக்ரமம் என்ற புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளவும். ஆதாரம்       இந்த ஸம்ஹாரங்களுக்கு ஆதாரம் சரபோப நிஷத் வாக்யம்       (தேவாரம் வேதஸாரம் – பக்கம் 177)

யோ மத்ஸ்யகூர்மவராஹ ஸிம்ஹான் விஷ்ணும் க்ரம்ந்தம் வாமனம் ஆதி தேவ : |விவிக்லவம் பீட்யமானம் ஜகாந பஸ்மீ சகார மன்மதம் யமம் ச | தஸ்மை ருத்ராய நமோஸ்து ||

இதன் பொருள்:-

எந்த ஆதிதேவரான (முழுமுதற்கடவுளான) பரமேச்வரர், உலகத்தினரைத் துன்புறுத்தி அதிக்ரமித்து நின்ற விஷ்ணுவின், மத்ஸ்ய, கூர்ம, வராஹ, ந்ருஸிம்ஹ, (வாமன) த்ரிவிக்ரம அவதாரங்களையும் யமனையும் வதைத்து, மன்மதனையும் சாம்பராக்கினாரோ, அந்தப் பரமேச்வரருக்கு நமஸ்காரம்.

ஆகவே இந்த சுலோகத்தில் பரமேச்வரன் விஷ்ணுவின் ஐந்து அவதாரங்களை ஸம்ஹாரம் செய்து ஒடுக்கினார் என்பது தான் முக்கிய விஷயம்.

ஒரு மகா (ஜல) ப்ரளயத்தில், மகாபைரவர் செம்படவனாக – மீன்பிடித்து விளையாடுவதாக இந்த சுலோகத்தால் போற்றப்படுகிறார்.

அவர்கையில் மீன்பிடிக்கும் தூண்டில், த்ரிவிக்ரமத்தின் முதுகெலும்பு, அதில் கட்டப்பட்ட கயிறு – ஆதிசேஷன், கயிற்றின் முடிவில் முள்களாக, ந்ருஸிம்ஹத்தின் நகங்கள்; முட்களில் சொருகின மாம்சமாக வராஹத்தின் மாம்சம்; பிடிப்பது – மீன், கூர்மம் ஆக இரண்டு ஜல ஜந்துக்கள்.

விசேஷ தாத்பர்யங்கள்:-

சுருதி ஸூக்திமாலை என்ற இந்த சிவபரத்வக்ரந்தத்துக்கு மங்கள சுலோகமாக இந்த சுலோகத்தை எடுத்துக் கொண்டது – மிகவும் பொருத்தம். சரித்திரச் சுருக்கத்தில் சொன்ன பிரகாரம், ஸ்ரீஹரதத்தர், மகா விஷ்ணுபரம் என்று சொன்ன தம் பிதா, அவர் சிஷ்யர்களுடன் (வைஷ்ணவர்களுடன்) வாதம் செய்து, விஷ்ணு பரதெய்வமல்ல, பரமேச்வரனே பரதெய்வமென்று ஸ்தாபிக்கிறார். மகாவிஷ்ணு அவர் அவதாரங்களில் ஒடுக்கப்பட்ட இந்த விஷயங்களையும் கல்ப்பங்கள் தோறும் விஷ்ணுவும் (மற்று பிரம்மாதிகளும்) பரமேச்வரனால் ஒடுக்கப்படுகிறார் என்ற விஷயங்களையும் ஆரம்பிக்கும் போதே, இந்த மங்கள சுலோகத்தில் குறித்து ஈச்வரனை வணங்குவது,

விஷ்ணு பரதெய்வமல்ல; அவரை யொடுக்கும் பரமேச்வரன் தான் பர தெய்வம் என்று ஸ்தாபித்தவாறு ஆயிற்று. இவ்வாறு விஷ்ணு ப்ரம்மாதிகள் கல்ப்பங்கள் தோறும் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதற்குப் பின்னும் சில குறிப்புகள்:-

திருஞானஸம்பந்தர் 1-2

முற்றலாமை யிள நாகமோடேன முளைக் கொம்பவை பூண்டு கோளறு பதிகம் 2. என்போடு கொம்பொடாமையிவை மார்பிலங்க.

மாணிக்கவாசகர் திருச்சாழல்:

       நங்காய் ஈதென்ன தவம் நரம்போடெலும் பணிந்து       கங்காளம் தோள்மேல் காதலித்தான் காணேடி       கங்காளம் ஆமாகேள் காலாந்தரத்திருவர்       தம் காலம் செல்லத் தரித்தினன் காண் சாழலோ.              (இருவர் – பிரமம் விஷ்ணுக்கள்) ஸ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதர் – பிரம்ம தர்க்கஸ்தவம் (40)       கல்ப்பாந்தர த்ருஹிண கோடி கரோடிமாலா       பஸ்மாங்க ராக கமடாங்க வராஹ ச்ருங்கை: |       ஆகல்ப்ப ஏவ தவமங்கள விக்ரஹஸ்ய       ஸர்வோத்தரம் தவ பலம் கிமு ந வ்யனக்தி ||

இதன் பொருள்:-

கல்ப்பாந்தத்தில் முடிகின்ற கோடிக்கணக்கான ப்ரம்மாக்களின் கபாலங்களும், பஸ்மாவும், கூர்மத்தின் அங்கமும் (ஓடும்) வராஹத்தின் கொம்புகளும் மங்கள விக்ரஹமான உமக்கு ஆபரணங்கள். இந்த விஷயமே உமது ஸர்வோத் க்ருஷ்டமான பலத்தை விளக்கலில்லையா?

மங்கள சுலோகத்தில் பின்னும் சில அர்த்த விசேஷங்கள்:

மோஹம் – மாயை என்ற அக்ஞானத்தை, அஸ்யது – நிச்சேஷமாக, முற்றிலும் அழிக்கட்டும், உண்மை, அஞ்ஞானத்தையும் அவஞானத்தையும் போக்கி, மெய்ஞ்ஞானமாகிய சிவஞானத்தை யருள் செய்து, நித்யமான ஆனந்த வெள்ளத்தில் திளைக்க்கும் படி அனுக்ரஹிக்க வேண்டுமென்று பிரார்த்திக்கப் படுகிறது.

மோஹம் – மாயை – அஞ்ஞானம், பரமேச்வரர்தான்.

மாயையை அடக்கியாள்பவர்:- மாயாம் து ப்ரக்ருதிம் வித்யான், மாயின து மஹேச்வரம் – (ச்வேதாச்வதர – உபநிஷத்) அவருடைய மாயை விஷ்ணுப்ரம்மாதிகளையும் மயக்கிவிடும்.

வேதங்களை வகுத்தவரும், பத்து சைவ புராணங்களை யெழுதியவருமான வ்யாஸரே, பரமேச்வரன் அடக்கியாளும் மாயையின் வசப்பட்டு, ஒரு ஸமயம் காசி விச்வேசர் ஸந்நிதியில் தன்னிரு கைகலையும் உயரத்தூக்கி, கோவிந்த்னைக்காட்டிலும் உயர்ந்த தெய்வம் வேறில்லை என்று சொல்ல வாயெடுத்த போது, நந்திகேசருடைய ஹூங்காரத்தில் வ்யாஸருடைய கைகளும் நாக்கும் ஸ்தம்பித்துப்போயின. இந்த வரலாறு கந்தபுராணத்தில் இருக்கிறது.

நந்திகேசர் துதி

       ஐயிறு புராணநூல் அமலர்க் கோதியும்       செய்ய பன் மறைகளும் தெரிந்தும், மாயையால்       மெய்யறு சூள் புகல் வ்யாதன் நீட்டிய       கையடு நந்திதன் கழல்கள் போற்றுவாம்.

வேதவ்யாஸரே – மயங்கினாரென்றால், இந்த காலத்தில் ஸாமான்ய ஜனங்கள் விஷ்ணுவிற்குப் பரத்வம் கொடுப்பதும், விஷ்ணுவும் பரமேச்வரனும் ஒன்று என்று சொல்வதும் ஆச்சர்யமில்லை!

       ஆகவே இந்த மாயையை, அஞ்ஞானத்தை, மயக்கத்தைப் பரமேச்வரன் தான் தீர்த்தருள வேண்டும்.       ஆதி ஸ்ரீசங்கர பகவத்பாதாள் சிவானந்தகஹரியில் (8-வது சுலோகம்) சொல்வதையும் கவனிக்க.       யதா புத்தி சுக்தெள ரஜதமிதி காசாச்மணி மணி:       ஜலே பைஷ்டே க்ஷீரம் பவதி ம்ருகத்ருஷ்ணாஸு ஸலிலம் |       ததா தேவப்ராந்த்யா பவதன்யம் பஜதி ஜட ஜன :       மகாதேவ! ஈசம் த்வாம் மனஸி ச ந மத்வா பசுபதே ||

“ஜனங்கள் கிளிஞ்சலை வெள்ளி யென்று நினைத்தும் கணணாடி உடைசல்களை – ரத்னங்கள் என்றும் மாவுகரைத்த நீரைப் பால் என்றும் கானலில் நீர் என்றும் மயங்குகிறார்கள் எல்லாம் மாயை – அது ப்ரமை அஞ்ஞானம். அது போல் தான், ஹே மகாதேவ, பசுபதியே, நீர்தாம் முழுமுதற் கடவுள், பரதெய்வமென்று அறியாமல், மூட ஜனங்கள் உமக்கு அன்யமான விஷ்ணு, ப்ரம்மா முதலியவர்களை, ஈச்வரனென்று மயங்கி வழிபடுகிறார்கள்.” என்று ஆதி சங்கர மூட ஜனங்களில் மயக்கத்தைக் கண்டு, ஏங்குகிறார்.

ஆதலால், இந்த முதல் மங்கள சுலோகத்தில் விஷ்ணு பரமேச்வரனால் ஒடுக்கப்பட்ட விவரங்களைக் குறிப்பிட்டு, விஷ்ணுபர தெய்வம் என்றும் பரமேச்வரனும் விஷ்ணுவும் ஒன்று என்றும் மயங்கும் மூட ஜனங்களின் அஞ்ஞானத்தை – மகாபைரவர் தாம் தீர்த்து வைக்க வேண்டுமென்று வேண்டப்படுகிறது.

திருஞானஸம்பந்தர் தம் மூன்றாம் வயதில் பரமேச்வரியால் ஞானப்பால் அருளப் பெற்று சிவஞானத்தையும், ஸர்வக்ஞத்வத்தையும் அடைந்தார்.

சேக்கிழார்

       சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்       பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்       உவமையிலா கலை ஞானம் உணர்வரிய மெய்ஞானம்       தவமுதல்வர் ஸம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்

ஸ்ரீ ஹரதத்தரும் தம் ஐந்தாம் வயதில் ஸாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தியால் ஸர்வக்ஞ்த்வம் அனுக்ரஹிக்கப் பெற்று, மெய்ஞானமாகிய சிவஞானத்தை யடைந்தார்.

ஆக, இந்த மங்கள சுலோகத்தில் பரமேச்வனுடைய வேறு பல குண விசேஷங்களையும் அனுக்ரஹ லீலைகளையும், வீரச் செயல்களையும் பற்றி சொல்லாமல்,

விஷ்ணுவை ஓடுக்கின வரலாறுகளைச் சொல்வதால், விஷ்ணு பரதெய்வமல்ல வென்றும் அவரை ஒடுக்கின பரமேச்வரனே பரதெய்வமென்றும் ஸ்தாபித்தவாறு ஆயிற்று, அஞ்ஞானத்தைப் போக்கியருள வேண்டுமென்று பிரார்த்திப்பதால், விஷ்ணுபரம் என்ற அஞ்ஞானத்தைத் தீர்த்து, சிவஞானம் அளிப்பவர் அந்தப் பரமேச்வரன் தான் என்பது தெளிவாயிற்று.

சுபம்


 

  1. சுருதி ஸூக்தி மாலை சுலோகம் 1 முதல் 50 முடிய
  2. சுருதி ஸூக்தி மாலை சுலோகம் 51 முதல் 100 முடிய

 

 

Related Content

அரிகரதாரதம்மியம் - தமிழ்ப் பாடல் உருவில்

சுருதி ஸூக்தி மாலா - பகுதி-1

சுருதி ஸூக்தி மாலா - பகுதி-2

சுருதி ஸூக்தி மாலா 1-50

சுருதி ஸூக்தி மாலா 101-151