logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவருட்பா Tiruvarutpa of ramalinga atikal part-VI section IV verses (5064 -5818)

tiruvarutpA of rAmalinga aTikaL
part -VI section IV (verses 5064 -5818)
திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஆறாம் அருட்பா - நான்காம் பகுதி 
பாடல்கள் (5064 -5818) 
 


திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் அருட்பா - நான்காம் பகுதி பாடல்கள் (4953 -5818)

 

  • உள்ளுறை
113.அம்பலத்தரசே(5064 ஖ 5155)மின்பதிப்பு
114சம்போ சங்கர(5156 ஖ 5177)மின்பதிப்பு
115சிவபோகம்(5178 ஖ 5217)மின்பதிப்பு
116அம்பலத்தமுதே(5218 ஖ 5225)மின்பதிப்பு
117திருநட மணியே(5226 ஖ 5240)மின்பதிப்பு
118ஞான சபாபதியே(5241 ஖ 5250)மின்பதிப்பு
119.விரைசேர் சடையாய்(5251 ஖ 5254)மின்பதிப்பு
120ஜோதி ஜோதி(5255 ஖ 5257)மின்பதிப்பு
121கண்புருவப் பூட்டு(5258 ஖ 5268)மின்பதிப்பு
122ஊதூது சங்கே(5269 ஖ 5284)மின்பதிப்பு
123சின்னம் பிடி(5285 ஖ 5294)மின்பதிப்பு
124முரசறைதல்(5295)மின்பதிப்பு
125தனித்திரு அலங்கல்(5296 ஖ 5456)மின்பதிப்பு
126சிற்சத்தி துதி(5457 ஖ 5466)மின்பதிப்பு
127இன்பத் திறன்(5467 ஖ 5476)மின்பதிப்பு
128உற்ற துரைத்தல்(5477 ஖ 5486)மின்பதிப்பு
129சுத்த சிவநிலை( 5487 ஖ 5533)மின்பதிப்பு
130உலகப் பேறு(5534 ஖ 5543)மின்பதிப்பு
131.அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்(5544 ஖ 5555)மின்பதிப்பு
132.உலகர்க்கு உய்வகை கூறல்(5556 ஖ 5565)மின்பதிப்பு
133புனிதகுலம் பெறுமாறு புகலல்(5566 ஖ 5575)மின்பதிப்பு
134மரணமிலாப் பெருவாழ்வு(5576 ஖ 5603)மின்பதிப்பு
135சமாதி வற்புறுத்தல்(5604 ஖ 5613)மின்பதிப்பு
136சன்மார்க்க உலகின் ஒருமைநிலை(5614 ஖ 5624)மின்பதிப்பு
137திருவடிப் பெருமை(5625 ஖ 5669)மின்பதிப்பு
138.தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்(5670 ஖ 5679)மின்பதிப்பு
139.நற்றாய் செவிலிக்குக் கூறல்(5680 ஖ 5689)மின்பதிப்பு
140தோழிக்குரிமை கிளத்தல்(5690 ஖ 5703)மின்பதிப்பு
141தலைவி கூறல்(5704 ஖ 5713)மின்பதிப்பு
142அனுபவ மாலை(5714 ஖ 5813)மின்பதிப்பு
143சத்திய வார்த்தை(5814)மின்பதிப்பு
144சத்திய அறிவிப்பு(5815 ஖ 5818)மின்பதிப்பு

அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு

  • 1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
    2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
    3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
    4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
    5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை
  •  
  •  
  •  

திருச்சிற்றம்பலம்


 

ஆறாம் அருட்பா - நான்காம் பகுதி - பாடல்கள் (5064 -5818)

 

113. அம்பலத்தரசே

நாமாவளி

 

சிந்து

 

5064.சிவசிவ கஜமுக கணநா தா 
சிவகண வந்தித குணநீ தா.
1
5065சிவசிவ சிவசிவ தத்துவ போதா 
சிவகுரு பரசிவ சண்முக நாதா.(374)
2
 (374)ஆ பா. பதிப்பைத் தவிர மற்றைப் பதிப்புகள் அனைத்திலும் 
"அம்பலத்தரசே" முதலாக நாமாவளி தொடங்குகிறது. ஆ. பா.பதிப்பில் மட்டும் 
இவ்விரண்டு நாமாவளிகளும் முன்வைக்கப் பெற்று "அம்பலத்தரசே" மூன்றாவதாக 
வைக்கப்பெற்றுள்ளது. இறுக்கம் இரத்தின முதலியார், வேட்டவலம் ஜமீன்தார் 
அப்பாசாமி பண்டாரியார் இவ்விருவரின் படிகளில் மட்டுமே இவ்விரண்டு 
நாமாவளிகள் காணப் பெறுவதாயும், கிடைத்த மற்றைப் படிகளில் இவை இல்லை என்றும், 
அவற்றில் "அம்பலத்தரசே" என்பதே தொடக்கம் என்றும் ஆ. பா. குறிக்கிறார். 
இப்பதிப்பில் இவ்விரு நாமாவளிகளும் தனியாக எண்ணிடப் பெற்றுத் தனிப்படுத்திக் 
காட்டப் பெற்றுள்ளன.அம்பலத்தரசே எனத் தொடங்கும் நாமாவளிக்கு இவ்விரண்டையும் 
காப்பாகக் கொள்ளலாம்.
 
5066அம்பலத் தரசே அருமருந் தே 
ஆனந்தத் தேனே அருள்விருந் தே.
1
5067பொதுநடத் தரசே புண்ணிய னே 
புலவரெ லாம்புகழ் கண்ணிய னே.
2
5068மலைதரு மகளே மடமயி லே 
மதிமுக அமுதே இளங்குயி லே.
3
5069ஆனந்தக் கொடியே இளம்பிடி யே 
அற்புதத் தேனே மலைமா னே.
4
5070சிவசிவ சிவசிவ சின்மய தேஜா 
சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா.
5
5071படன விவேக பரம்பர வேதா 
நடன சபேச சிதம்பர நாதா.
6
5072அரிபிர மாதியர் தேடிய நாதா 
அரகர சிவசிவ ஆடிய பாதா.
7
5073அந்தண அங்கண அம்பர போகா 
அம்பல நம்பர அம்பிகை பாகா.
8
5074அம்பர விம்ப சிதம்பர நாதா 
அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா.
9
5075தந்திர மந்திர யந்திர பாதா 
சங்கர சங்கர சங்கர நாதா.
10
5076கனக சிதம்பர கங்கர புரஹர 
அனக பரம்பர சங்கர ஹரஹர.
11
5077சகல கலாண்ட சராசர காரண 
சகுண சிவாண்ட பராபர பூரண.
12
5078இக்கரை கடந்திடில் அக்கரை யே 
இருப்பது சிதம்பர சர்க்கரை யே.
13
5079என்னுயிர் உடம்பொடு சித்தம தே 
இனிப்பது நடராஜ புத்தமு தே.
14
5080ஐயர் திருச்சபை ஆடக மே 
ஆடுதல் ஆனந்த நாடக மே.
15
5081உத்தர ஞான சிதம்பர மே 
சித்திஎ லாந்தரும் அம்பரமே.
16
5082அம்பல வாசிவ மாதே வா 
வம்பல வாவிங்கு வாவா வா.
17
5083நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே 
நல்லஎ லாம்செய வல்லவ னே.
18
5084ஆனந்த நாடகம் கண்டோ மே - பர 
மானந்த போனகம் கொண்டோ மே.
19
5085சகள உபகள நிட்கள நாதா 
உகள சததள மங்கள பாதா.
20
5086சந்தத மும்சிவ சங்கர பஜனம் 
சங்கிதம் என்பது சற்சன வசனம்.
21
5087சங்கர சிவசிவ மாதே வா 
எங்களை ஆட்கொள வாவா வா.
22
5088அரகர சிவசிவ மாதே வா 
அருளமு தம்தர வாவா வா.
23
5089நடனசி காமணி நவமணி யே 
திடனக மாமணி சிவமணி யே.
24
5090நடமிடும் அம்பல நன்மணி யே 
புடமிடு செம்பல பொன்மணி யே.
25
5091உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே 
தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே.
26
5092நடராஜ வள்ளலை நாடுத லே 
நம்தொழி லாம்விளை யாடுத லே.
27
5093அருட்பொது நடமிடு தாண்டவ னே 
அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே.
28
5094நடராஜ மாணிக்கம் ஒன்றது வே 
நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே.
29
5095நடராஜ பலமது நம்பல மே 
நடமாடு வதுதிரு அம்பல மே.
30
5096நடராஜர் பாட்டே நறும்பாட்டு 
ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு.
31
5097சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு 
ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு.
32
5098அம்பலப் பாட்டே அருட்பாட்டு 
அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு.
33
5099அம்பல வாணனை நாடின னே 
அவனடி யாரொடும் கூடின னே.
34
5100தம்பத மாம்புகழ் பாடின னே 
தந்தன என்றுகூத் தாடின னே.
35
5101நான்சொன்ன பாடலும் கேட்டா ரே 
ஞான சிதம்பர நாட்டா ரே.
36
5102இனித்துயர் படமாட்டேன் விட்டே னே 
என்குரு மேல்ஆணை இட்டே னே.
37
5103இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே 
என்னப்பன் மேல்ஆணை இட்டே னே.
38
5104சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம் 
சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்.
39
5105நாதாந்த நாட்டுக்கு நாயக ரே 
நடராஜ ரேசபா நாயக ரே.
40
5106நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே 
நடராஜ எனில்வரும் நித்திய மே.
41
5107நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே 
நல்வரம் ஈயும் தயாநிதி யே.
42
5108நடராஜர் தம்நடம் நன்னட மே 
நடம்புரி கின்றதும் என்னிட மே.
43
5109சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே 
திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே.
44
5110சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே 
சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே.
45
5111இறவா வரம்தரு நற்சபை யே 
எனமறை புகழ்வது சிற்சபை யே.
46
5112என்இரு கண்ணுள் இருந்தவ னே 
இறவா தருளும் மருந்தவ னே.
47
5113சிற்சபை அப்பனை உற்றே னே 
சித்திஎ லாம்செயப் பெற்றே னே.
48
5114அம்பல வாணர்தம் அடியவ ரே 
அருளர சாள்மணி முடியவ ரே.
49
5115அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே 
ஆனந்தத் தெள்ளமு துண்டே னே.
50
5116இருட்பெரு மாயையை விண்டே னே 
எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே.
51
5117கருணா நிதியே குணநிதி யே 
கதிமா நிதியே கலாநிதி யே.
52
5118தருணா பதியே சிவபதி யே 
தனிமா பதியே சபாபதி யே.
53
5119கருணா நிதியே சபாபதி யே 
கதிமா நிதியே பசுபதி யே.
54
5120சபாபதி பாதம் தபோப்ர சாதம் 
தயாநிதி போதம் சதோதய வேதம்.
55
5121கருணாம் பரவர கரசிவ பவபவ 
அருணாம் பரதர ஹரஹர சிவசிவ.
56
5122கனகா கரபுர ஹரசிர கரதர 
கருணா கரபர சுரவர ஹரஹர.
57
5123கனக சபாபதி பசுபதி நவபதி 
அனக உமாபதி அதிபதி சிவபதி.
58
5124வேதாந்த பராம்பர ஜயஜய(375) 
நாதாந்த நடாம்பர ஜயஜய.
59
 (375). சவுதய - ஆ. பா. பதிப்பு. 
5125ஏகாந்த சர்வேச சமோதம 
யோகாந்த நடேச நமோநம.
60
5126ஆதாம்பர ஆடக அதிசய 
பாதாம்புஜ நாடக ஜயஜய.
61
5127போதாந்த புரேச சிவாகம 
நாதாந்த நடேச நமோநம.
62
5128ஜால கோலகன காம்பர சாயக 
கால காலவன காம்பர நாயக.
63
5129நாத பாலசு லோசன வர்த்தன 
ஜாத ஜாலவி மோசன நிர்த்தன.
64
5130சதபரி சதவுப சதமத விதபவ 
சிதபரி கதபத சிவசிவ சிவசிவ.
65
5131அரகர வரசுப கரகர பவபவ 
சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ.
66
5132உபல சிரதல சுபகண வங்கண 
சுபல கரதல கணபண கங்கண.
67
5133அபயவ ரதகர தலபுரி காரண 
உபயப ரதபத பரபரி பூரண.
68
5134அகரஉ கரசுப கரவர சினகர 
தகரவ கரநவ புரசிர தினகர.
69
5135வகரசி கரதின கரசசி கரபுர 
மகரஅ கரவர புரஹர ஹரஹர.
70
5136பரமமந் திரசக ளாகன கரணா 
படனதந் திரநிக மாகம சரணா.
71
5137அனந்தகோ டிகுண கரகர ஜொலிதா 
அகண்டவே தசிர கரதர பலிதா.
72
5138பரிபூரண ஞானசி தம்பர 
பதிகாரண நாதப ரம்பர.
73
5139சிவஞானப தாடக நாடக 
சிவபோதப ரோகள கூடக.
74
5140சகல லோகபர காரக வாரக 
சபள யோகசர பூரக தாரக.
75
5141சத்வ போதக தாரண தன்மய 
சத்ய வேதக பூரண சின்மய.
76
5142வரகே சாந்த மகோதய காரிய 
பரபா சாந்த சுகோதய சூரிய.
77
5143பளித தீபக சோபித பாதா 
லளித ரூபக ஸ்தாபித நாதா.
78
5144அனிர்த(376) கோபகரு ணாம்பக நா தா 
அமிர்த ரூபதரு ணாம்புஜ பா தா.
79
 (376). அனுர்த - ச. மு. க. பதிப்பு. 
5145அம்போ ருகபத அரகர கங்கர 
சம்போ சிவசிவ சிவசிவ சங்கர.
80
5146சிதம்பிர காசா பரம்பிர கா சா 
சிதம்ப ரேசா சுயம்பிர கா சா.
81
5147அருட்பிர காசம் பரப்பிர காசம் 
அகப்பிர காசம் சிவப்பிர காசம்.
82
5148நடப்பிர காசம் தவப்பிர காசம் 
நவப்பிர காசம் சிவப்பிர காசம்.
83
5149நாத பரம்பர னே பர - நாத சிதம்பர னே 
நாத திகம்பர னே தச - நாத சுதந்தர னே.
84
5150ஞான நடத்தவ னே பர - ஞானிஇ டத்தவ னே 
ஞான வரத்தவ னே சிவ - ஞான புரத்தவ னே.
85
5151ஞான சபாபதி யே மறை - நாடு சதாகதி யே 
தீன தாயாநிதி யே பர - தேவி உமாபதி யே.
86
5152புத்தம்தரும் போதா வித்தம்தரும் தாதா 
நித்தம்தரும் பாதா சித்தம்திரும் பாதா.
87
5153நடுநாடி நடுநாடி நடமாடு பதியே 
நடராஜ நடராஜ நடராஜ நிதியே.
88
5154நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே 
நடராஜ நடராஜ நடராஜ குருவே.
89
5155நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே 
நடராஜ நடராஜ நடராஜ பலமே.
80


திருச்சிற்றம்பலம் 
Back


 

114. சம்போ சங்கர 

சிந்து

 

5156.தம்குறுவம்பு மங்கநிரம்பு சங்கம்இயம்பும் நம்கொழுகொம்பு 
சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு.
1
5157சந்தம்இயன்று அந்தணர்நன்று சந்ததம்நின்று வந்தனம்என்று 
சந்திசெய்மன்று மந்திரம்ஒன்று சங்கரசம்பு சங்கரசம்பு.
2
5158நனம்தலைவீதி நடந்திடுசாதி நலம்கொளும்ஆதி நடம்புரிநீதி 
தினம்கலைஓதி சிவம்தரும்ஓதி சிதம்பரஜோதி சிதம்பரஜோதி.
3
5159

நகப்பெருஞ்சோதி சுகப்பெருஞ்சோதி 

நவப்பெருஞ்சோதி சிவப்பெருஞ்சோதி 
அகப்பெருஞ்சோதி நடப்பெருஞ்சோதி 

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி.

4
5160.

உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி 

உவப்புறுவேதி நவப்பெருவாதி 
அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி 

அருட்சிவஜோதி அருட்சிவஜோதி.

5
5161

ஓதஅடங் காதுமடங் காதுதொடங் காது 

ஓகைஒடுங் காதுதடுங் காதுநடுங் காது 
சூதமலங் காதுவிலங் காதுகலங் காது 

ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.

6
5162

ஏதமுயங் காதுகயங் காதுமயங் காது 

ஏறிஇறங் காதுஉறங் காதுகறங் காது 
சூதமிணங் காதுபிணங் காதுவணங் காது 

ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.

7
5163அகரசபாபதி சிகரசபாபதி அனகசபாபதி கனகசபாபதி 
மகரசபாபதி உகரசபாபதி வரதசபாபதி சரதசபாபதி.
8
5164அமலசபாபதி அபயசபாபதி அமுதசபாபதி அகிலசபாபதி 
நிமலசபாபதி நிபுணசபாபதி நிலயசபாபதி நிபிடசபாபதி.
9
5165பரநடம்சிவ சிதம்பரநடமே பதிநடம்சிவ சபாபதிநடமே 
திருநடனம்பர குருநடமே சிவநடம்அம்பர நவநடமே.
10
5166அம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திருநடமே 
எம்பலத்தொருநடம் பெருநடமே இதன்பரத்திடுநடம் குருநடமே.
11
5167

அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே 

அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே 
தஞ்சோபம்கொலை சாராதே சந்தோடம்சிவ மாம்ஈதே 

சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா.

12
5168

எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத 

என்றோ டிந்தன நன்றா மங்கண வெங்கோ மங்கள வெஞ்சா நெஞ்சக 
சந்தே கங்கெட நந்தா மந்திர சந்தோ டம்பெற வந்தா ளந்தண 

சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.

13
5169

நஞ்சோ என்றிடு நங்கோ பங்கெட நன்றே தந்தனை நந்தா மந்தண 

நம்பா நெஞ்சில் நிரம்பா நம்பர நம்பா நம்பதி யம்பா தம்பதி 
தஞ்சோ வென்றவர் தஞ்சோ பந்தெறு தந்தா வந்தன நுந்தாள் தந்திடு 

சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.

14
5170

பொதுநிலை அருள்வது பொதுவினில் நிறைவது 

பொதுநலம் உடையது பொதுநடம் இடுவது 
அதுபரம் அதுபதி அதுபொருள் அதுசிவம் 

அரஅர அரஅர அரஅர அரஅர.

15
5171

நவநிலை தருவது நவவடி வுறுவது 

நவவெளி நடுவது நவநவ நவமது 
சிவமெனும் அதுபதம் அதுகதி அதுபொருள் 

சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ.

16
5172

சந்திர தரசிர சுந்தர சுரவர 

தந்திர நவபத மந்திர புரநட 
சங்கர சிவசிவ சங்கர சிவசிவ 

சங்கர சிவசிவ சங்கர சிவசிவ.

17
5173

வானசிற்கன மந்திரதந்திர வாதசிற்குண மந்தணவந்தண 

வாரசற்சன வந்திதசிந்தித வாமஅற்புத மங்கலைமங்கல 
ஞானசிற்சுக சங்கரகங்கர ஞாயசற்குண வங்கணஅங்கண 

நாதசிற்பர வம்பரநம்பர நாததற்பர விம்பசிதம்பர.

18
5174

பாரதத்துவ பஞ்சகரஞ்சக பாதசத்துவ சங்கஜபங்கஜ 

பாலநித்திய வம்பகநம்பக பாசபுத்தக பண்டிதகண்டித 
நாரவித்தக சங்கிதவிங்கித நாடகத்தவ நம்பதிநங்கதி 

நாதசிற்பர நம்பரஅம்பர நாததற்பர விம்பசிதம்பர.

19
5175

பதநம்புறு பவர்இங்குறு பவசங்கடம் அறநின்றிடு 

பரமம்பொது நடம்என்தன துளம்நம்புற அருள்அம்பர 
சிதகுஞ்சித பதரஞ்சித சிவசுந்தர சிவமந்திர 

சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர.

20
5176

கலகந்தரும் அவலம்பன கதிநம்பல நிதமும் 

கனகந்தரு மணிமன்றுறு கதிதந்தருள் உடலஞ் 
சலசந்திரன் எனநின்றவர் தழுவும்பத சரணம் 

சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.

21
5177

எனதென்பதும் நினதென்பதும் இதுஎன்றுணர் தருணம் 

இனம்ஒன்றது பிறிதன்றென இசைகின்றது பரமம் 
தனதென்பது மனதென்பது ஜகமென்றனை சரணம் 

சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.

22


திருச்சிற்றம்பலம் 
Back


 

115. சிவபோகம்

சிந்து

 

5178.போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம் 
ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம்.
1
5179நலமங்கலம் உறும்அம்பல நடனம்அது நடனம் 
பலநன்கருள் சிவசங்கர படனம்அது படனம்.
2
5180சூதுமன்னும் இந்தையே சூடல்என்ன விந்தையே 
கோதுவிண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே.
3
5181அன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே 
இன்பமென்பன் எந்தையே எந்தைதந்தை தந்தையே.
4
5182ஞானசித்தி புரத்தனே நாதசத்தி பரத்தனே 
வானம்ஒத்த தரத்தனே வாதவித்தை வரத்தனே.
5
5183நீஎன்னப்பன் அல்லவா நினக்கும்இன்னஞ் சொல்லவா 
தாயின்மிக்க நல்லவா சர்வசித்தி வல்லவா.
6
5184பலத்தில்தன்னம் பலத்தில்பொன்னம் பலத்தில்துன்னும் நலத்தனே 
பலத்தில்பன்னும் பரத்தில்துன்னும் பரத்தில்மன்னும் குலத்தனே.
7
5185ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே 
தூயவாய காயதேய தோயமேய ஜோதியே.
8
5186ஆதவாத வேதகீத வாதவாத வாதியே 
சூதவாத பாதநாத சூதஜாத ஜோதியே.
9
5187அங்கசங்க மங்கைபங்க ஆதிஆதி ஆதியே 
துங்கபுங்க அங்கலிங்க ஜோதிஜோதி ஜோதியே.
10
5188அத்தமுத்த அத்தமுத்த ஆதிஆதி ஆதியே 
சுத்தசித்த சப்தநிர்த்த ஜோதிஜோதி ஜோதியே.
11
5189அஞ்சல்அஞ்சல் என்றுவந்தென் நெஞ்சமர்ந்த குழகனே 
வஞ்சநஞ்சம் உண்டகண்ட மன்றுள்நின்ற அழகனே.
12
5190தொண்டர்கண்டு கண்டுமொண்டு கொண்டுள்உண்ட இன்பனே 
அண்டர்அண்டம் உண்டவிண்டு தொண்டுமண்டும் அன்பனே.
13
5191கந்ததொந்த பந்தசிந்து சிந்தவந்த காலமே 
எந்தஎந்த சந்தமுந்து மந்தவந்த கோலமே.
14
5192என்றும்என்றின் ஒன்றுமன்றுள் நன்றுநின்ற ஈசனே 
ஒன்றும்ஒன்றும் ஒன்றும்ஒன்றும் ஒன்றதென்ற தேசனே.
15
5193எட்டஎட்டி ஒட்டஒட்டும் இட்டதிட்ட கீர்த்தியே 
அட்டவட்டம் நட்டமிட்ட சிட்டவட்ட மூர்த்தியே.
16
5194சேர்இகார சாரவார சீர்அகார ஊரனே 
ஓர்உகார தேரதீர வாரவார தூரனே.
17
5195வெய்யநொய்ய நையநைய மெய்புகன்ற துய்யனே 
ஐயர்ஐய நையும்வையம் உய்யநின்ற ஐயனே.
18
5196பாசநாச பாபநாச பாததேச ஈசனே 
வாசவாச தாசர்நேச வாசகாச பேசனே.
19
5197உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே 
பிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே.
20
5198அகிலபுவன உயிர்கள்தழைய அபயம்உதவும் அமலனே 
அயனும்அரியும் அரனும்மகிழ அருளும்நடன விமலனே.
21
5199அகரஉகர மகரவகர அமுதசிகர சரணமே 
அபரசபர அமனசமன அமலநிமல சரணமே.
22
5200தகரககன நடனகடன சகளவகள சரணமே 
சகுணநிகுண சகமநிகம சகிதவிகித சரணமே.
23
5201அனகவனஜ அமிதஅமிர்த அகலஅகில சரணமே 
அதுலவனத அசுதவசல அநிலவனல சரணமே.
24
5202தனககனக சபையஅபய சரதவரத சரணமே 
சதுரசதர சகசசரித தருணசரண சரணமே.
25
5203உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே 
உருவின்உருவும் உருவுள்உருவும் உடையதலைவ சரணமே.
26
5204இளகும்இதய கமலம்அதனை இறைகொள்இறைவ சரணமே 
இருமைஒருமை நலமும்அருளும் இனியசமுக சரணமே.
27
5205அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே 
அடியர்இதய வெளியில்நடனம் அதுசெய்அதிப சரணமே.
28
5206ஒடிவில்கருணை அமுதம்உதவும் உபலவடிவ சரணமே 
உலகமுழுதும் உறையநிறையும் உபயசரண சரணமே.
29
5207அறிவுள்அறியும் அறிவைஅறிய அருளும்நிமல சரணமே 
அவசம்உறுமெய் யடியர்இதயம் அமரும்அமல சரணமே.
30
5208எறிவில்உலகில்(377) உயிரைஉடலில் இணைசெய்இறைவ சரணமே 
எனையும்ஒருவன் எனவுள்உணரும் எனதுதலைவ சரணமே.
31
 (377). இருமைஉலகில் - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு. 
5209நினையும்நினைவு கனியஇனிய நிறைவுதருக சரணமே 
நினையும்எனையும் ஒருமைபுரியும் நெறியில்நிறுவு சரணமே.
32
5210வனையுமதுர அமுதஉணவு மலியஉதவு சரணமே 
மருவுசபையில் நடனவரத வருகவருக சரணமே.
33
5211நினைக்கில்நெஞ்சம் இனிக்கும்என்ற நிருத்தமன்றில் ஒருத்தனே 
நினைக்கும்அன்பர் நிலைக்கநின்று பொருத்துகின்ற கருத்தனே.
34
5212மயங்கிநெஞ்சு கலங்கிநின்று மலங்கினேனை ஆண்டவா 
வயங்கிநின்று துலங்குமன்றில் இலங்குஞான தாண்டவா.
35
5213களங்கவாத களங்கொள்சூதர் உளங்கொளாத பாதனே 
களங்கிலாத உளங்கொள்வாருள் விளங்குஞான நாதனே.
36
5214தடுத்தமலத்தைக் கெடுத்துநலத்தைக் கொடுத்தகருணைத் தந்தையே 
தனித்தநிலத்தில் இனித்தகுலத்தில் குனித்தஅடிகொள் எந்தையே.
37
5215எச்சநீட்டி விச்சைகாட்டி இச்சைஊட்டும் இன்பனே 
அச்சம்ஓட்டி அச்சுநாட்டி வைச்சுள்ஆட்டும் அன்பனே.
38
5216சபாசிவா மஹாசிவா சகாசிவா சிகாசிவா 
சதாசிவா சதாசிவா சதாசிவா சதாசிவா.
39
5217வாசிவா சதாசிவா மஹாசிவா தயாசிவா 
வாசிவா சிவாசிவா சிவாசிவா சிவாசிவா.
40


திருச்சிற்றம்பலம் 
Back


 

116. அம்பலத்தமுதே 

கலிவிருத்தம்

 

5218.நீடிய வேதம் தேடிய பாதம் 
நேடிய கீதம் பாடிய பாதம் 
ஆடிய போதம் கூடிய பாதம் 
ஆடிய பாதம் ஆடிய பாதம்.
1
5219சாக்கிய வேதம் தேக்கிய பாதம் 
தாக்கிய ஏதம் போக்கிய பாதம் 
சோக்கிய வாதம் ஆக்கிய பாதம் 
தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.
2
5220ஏன்றிய சூதம் தோன்றிய பாதம் 
ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம் 
ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம் 
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம்.
3
5221சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம் 
தஞ்சித மாகும் சஞ்சித பாதம் 
கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம் 
குஞ்சித பாதம் குஞ்சித பாதம்.
4
5222எண்ணிய நானே திண்ணியன் ஆனேன் 
எண்ணிய வாறே நண்ணிய பேறே 
புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன் 
புண்ணிய வானே புண்ணிய வானே.
5
5223தொத்திய சீரே பொத்திய பேரே 
துத்திய பாவே பத்திய நாவே 
சத்தியம் நானே நித்தியன் ஆனேன் 
சத்திய வானே சத்திய வானே.
6
5224எம்புலப் பகையே எம்புலத் துறவே 
எம்குலத் தவமே எம்குலச் சிவமே 
அம்பினில் கனலே அந்தணர்க் கிறையே 
அம்பலத் தரசே அம்பலத் தரசே.
7
5225இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே 
எண்குணச் சுடரே இந்தகத் தொளியே 
அன்புடைக் குருவே அம்புயற் கிறையே 
அம்பலத் தமுதே அம்பலத் தமுதே.
1


திருச்சிற்றம்பலம் 
Back


 

117. திருநட மணியே 

தாழிசை

 

5226.

பசியாத அமுதே பகையாத பதியே

பகராத நிலையே பறையாத சுகமே 
நசியாத பொருளே நலியாத உறவே

நடராஜ மணியே நடராஜ மணியே.

1
5227

புரையாத மணியே புகலாத நிலையே

புகையாத கனலே புதையாத பொருளே 
நரையாத வரமே நடியாத நடமே

நடராஜ நிதியே நடராஜ நிதியே.

2
5228

சிவஞான நிலையே சிவயோக நிறைவே

சிவபோக உருவே சிவமான உணர்வே 
நவநீத மதியே நவநாத கதியே

நடராஜ பதியே நடராஜ பதியே.

3
5229

தவயோக பலமே சிவஞான நிலமே

தலையேறும் அணியே விலையேறு மணியே 
நவவார நடமே சுவகார புடமே

நடராஜ பரமே நடராஜ பரமே.

4
5230

துதிவேத உறவே சுகபோத நறவே

துனிதீரும் இடமே தனிஞான நடமே 
நதியார நிதியே அதிகார பதியே

நடராஜ குருவே நடராஜ குருவே.

5
5231

வயமான வரமே வியமான பரமே

மனமோன நிலையே கனஞான மலையே 
நயமான உரையே நடுவான வரையே

நடராஜ துரையே நடராஜ துரையே.

6
5232

பதியுறு பொருளே பொருளுறு பயனே 

பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே 
மதியுறும் அமுதே அமுதுறு சுவையே 

மறைமுடி மணியே மறைமுடி மணியே.

7
5233

அருளுறு வெளியே வெளியுறு பொருளே 

அதுவுறு மதுவே மதுவுறு சுவையே 
மருளறு தெருளே தெருளுறு மொளியே 

மறைமுடி மணியே மறைமுடி மணியே.

8
5234

தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே 

தடம்வளர் புனலே புனல்வளர் நலனே 
திருவளர் உருவே உருவளர் உயிரே 

திருநட மணியே திருநட மணியே.

9
5235

உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே 

ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே 
செயிரறு பதியே சிவநிறை நிதியே 

திருநட மணியே திருநட மணியே.

10
5236

கலைநிறை மதியே மதிநிறை அமுதே 

கதிநிறை கதிரே கதிர்நிறை சுடரே 
சிலைநிறை நிலையே நிலைநிறை சிவமே 

திருநட மணியே திருநட மணியே.

11
5237

மிகவுயர் நெறியே நெறியுயர் விளைவே 

விளைவுயர் சுகமே சுகமுயர் பதமே 
திகழுயர் உயர்வே உயருயர் உயர்வே 

திருநட மணியே திருநட மணியே.

12
5238

இயல்கிளர் மறையே மறைகிளர் இசையே 

இசைகிளர் துதியே துதிகிளர் இறையே 
செயல்கிளர் அடியே அடிகிளர் முடியே 

திருநட மணியே திருநட மணியே.

13
5239

புரையறு புகழே புகழ்பெறு பொருளே 

பொருளது முடிபே முடிவுறு புணர்வே 
திரையறு கடலே கடலெழு சுதையே 

திருநட மணியே திருநட மணியே.

14
5240

நிகழ்நவ நிலையே நிலையுயர் நிலையே 

நிறையருள் நிதியே நிதிதரு பதியே 
திகழ்சிவ பதமே சிவபத சுகமே 

திருநட மணியே திருநட மணியே.

10


திருச்சிற்றம்பலம் 
Back


 

118. ஞான சபாபதியே 

தாழிசை

 

5241.வேத சிகாமணியே போத சுகோதயமே 
மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே 
நாத பராபரமே சூத பராவமுதே 
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
1
5242ஏக சதாசிவமே யோக சுகாகரமே 
ஏம பராநலமே காம விமோசனமே 
நாக விகாசனமே நாத சுகோடணமே 
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
2
5243தூய சதாகதியே நேய சதாசிவமே 
சோம சிகாமணியே வாம உமாபதியே 
ஞாய பராகரமே காய புராதரமே 
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
3
5244ஆரண ஞாபகமே பூரண சோபனமே 
ஆதிஅ னாதியனே வேதிய னாதியனே 
நாரண னாதரமே காரண மேபரமே 
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
4
5245ஆகம போதகமே யாதர வேதகமே 
ஆமய மோசனமே ஆரமு தாகரமே 
நாக நடோ தயமே நாத புரோதயமே 
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
5
5246ஆடக நீடொளியே நேடக நாடளியே 
ஆதி புராதனனே வேதி பராபரனே 
நாடக நாயகனே நானவ னானவனே 
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
6
5247ஆரிய னேசிவனே ஆரண னேபவனே 
ஆலய னேஅரனே ஆதர னேசுரனே 
நாரிய னேவரனே நாடிய னேபரனே 
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
7
5248ஆதர வேதியனே ஆடக ஜோதியனே 
ஆரணி பாதியனே ஆதர வாதியனே 
நாத விபூதியனே நாம வனாதியனே 
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
8
5249தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே 
தீன சகாநிதியே சேகர மாநிதியே 
நாவல ரோர்பதியே நாரி உமாபதியே 
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
9
5250ஆடிய நாடகனே ஆலமர் ஆதியனே 
ஆகம மேலவனே ஆரண நாலவனே 
நாடிய காரணனே நீடிய பூரணனே 
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
10


திருச்சிற்றம்பலம் 
Back


 

119. விரைசேர் சடையாய் 

சிந்து

 

5251.விரைசேர் சடையாய் விடையாய் உடையாய் 
விகிர்தா விபவா விமலா அமலா 
வெஞ்சேர்(378) பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பர னே.
1
 (378). வெஞ்சோ - ஆ. பா. பதிப்பு. 
5252அரைசே குருவே அமுதே சிவமே 
அணியே மணியே அருளே பொருளே 
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.
2
5253உருவே உயிரே உணர்வே உறவே 
உரையே பொருளே ஒளியே வெளியே 
ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர(379) நம்பர னே.
3
 (379). உம்பரி னம்பரனே - ஆ. பா. பதிப்பு. 
5254அருவே திருவே அறிவே செறிவே 
அதுவே இதுவே அடியே முடியே 
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.
4


திருச்சிற்றம்பலம்
Back


 

120. ஜோதி ஜோதி 

சிந்து

 

5255.ஜோதி ஜோதி ஜோதி சுயஞ் 
ஜோதி ஜோதி ஜோதி பரஞ் 
ஜோதி ஜோதி ஜோதி யருட் 
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.
1
5256வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி 
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி 
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி 
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.
2
5257ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே 
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.
3


திருச்சிற்றம்பலம் 
Back


 

121. கண்புருவப் பூட்டு 

தாழிசை

 

5258.

கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு 

கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு 
ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு 

ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.

1
5259

சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு 

தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு 
இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு 

என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

2
5260

ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு 

ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு 
எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு 

என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

3
5261

ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம் 

ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம் 
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம் 

தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.

4
5262

மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி 

மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி 
சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி 

செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி.

5
5263

துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு 

தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு 
தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு 

செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.

6
5264

சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது 

தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது 
எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது 

இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது.

7
5265

சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு 

சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு 
இற்பகரும்(380) இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு 

என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

8
 (380). இப்பெரிய விவ்வுலகில் - முதற்பதிப்பு., ச. மு. க. பதிப்பு. 
5266

வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு 

மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு 
வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு 

மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு.

9
5267

அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம் 

அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம் 
வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம் 

வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.

10
5268

நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு 

நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு 
சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு 

செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.

11

Back


 

122. ஊதூது சங்கே

தாழிசை

 

5269.

கைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே 

கனக சபையான்என்று ஊதூது சங்கே 
பொய்விடச் செய்தான்என்று ஊதூது சங்கே 

பூசைப லித்ததென்று ஊதூது சங்கே.

1
5270

தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே 

துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே 
ஏக்கம் கெடுத்தான்என்று ஊதூது சங்கே 

ஏம சபையான்என்று ஊதூது சங்கே.

2
5271

பொன்னடி தந்தான்என்று ஊதூது சங்கே 

பொன்னம் பலத்தான்என்று ஊதூது சங்கே 
இன்னல் அறுத்தான்என்று ஊதூது சங்கே 

என்னுள் அமர்ந்தான்என்று ஊதூது சங்கே.

3
5272

அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே 

அம்பல வாணன்என்று ஊதூது சங்கே 
இச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே 

இன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே.

4
5273

என்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே 

இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே 
பொன்உருத் தந்தான்என்று ஊதூது சங்கே 

பொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.

5
5274

சிவமாக்கிக்கொண்டான்என்று ஊதூது சங்கே 

சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே 
நவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே 

நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே.

6
5275

நாத முடியான்என்று ஊதூது சங்கே 

ஞானசபையான்என்று ஊதூது சங்கே 
பாத மளித்தான்என்று ஊதூது சங்கே 

பலித்தது பூசைஎன்று ஊதூது சங்கே.

7
5276

தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே 

சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே 
உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே 

உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே.

8
5277

என்னறி வானான்என்று ஊதூது சங்கே 

எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே 
செந்நிலை தந்தான்என்று ஊதூது சங்கே 

சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.

9
5278

இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே 

எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே 
திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே 

சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே.

10
5279

கரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே 

கருணை கிடைத்ததென்று ஊதூது சங்கே 
இரவு விடிந்ததென்று ஊதூது சங்கே 

எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே.

11
5280

எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே 

எல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே 
எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே 

எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே.

12
5281

கருணா நிதியர்என்று ஊதூது சங்கே 

கடவுள் அவனேஎன்று ஊதூது சங்கே 
அருள்நா டகத்தான்என்று ஊதூது சங்கே 

அம்பலச் சோதிஎன்று ஊதூது சங்கே.

13
5282

தன்னிகர் இல்லான்என்று ஊதூது சங்கே 

தலைவன் அவனேஎன்று ஊதூது சங்கே 
பொன்னியல் வண்ணன்என்று ஊதூது சங்கே 

பொதுநடம் செய்வான்என்று ஊதூது சங்கே.

14
5283

ஆனந்த நாதன்என்று ஊதூது சங்கே 

அருளுடை அப்பன்என்று ஊதூது சங்கே 
தானந்தம் இல்லான்என்று ஊதூது சங்கே 

தத்துவச் சோதிஎன்று ஊதூது சங்கே.

15
5284

பொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே 

புண்ணியன் ஆனேன்என்று ஊதூது சங்கே 
மெய்தொட்டு நின்றேன்என்று ஊதூது சங்கே 

மேல்வெளி கண்டேன்என்று ஊதூது சங்கே.

16

திருச்சிற்றம்பலம் 
Back


 

123. சின்னம் பிடி 

தாழிசை

 

5285.

அம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி 

அற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி 
செம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி 

சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி.

1
5286

சிற்சபையைக் கண்டோ ம்என்று சின்னம் பிடி 

சித்திகள்செய் கின்றோம்என்று சின்னம் பிடி 
பொற்சபை புகுந்தோம்என்று சின்னம் பிடி 

புந்திமகிழ் கின்றோம்என்று சின்னம் பிடி.

2
5287

ஞானசித்திபுரம்என்று சின்னம் பிடி 

நாடகம்செய் இடம்என்று சின்னம் பிடி 
ஆனசித்தி செய்வோம்என்று சின்னம் பிடி 

அருட்சோதி பெற்றோம்என்று சின்னம் பிடி.

3
5288

கொடிகட்டிக்கொண்டோ ம்என்று சின்னம் பிடி 

கூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி 
அடிமுடியைக் கண்டோ ம்என்று சின்னம் பிடி 

அருளமுதம் உண்டோ ம்என்று சின்னம் பிடி.

4
5289

அப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி 

அற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி 
செப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி 

சித்திபுரம்இடமென்று சின்னம் பிடி.

5
5290

தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி 

சத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி 
ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி 

ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.

6
5291

வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி 

வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி 
சாகாததலைஅறிந்து சின்னம் பிடி 

சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.

7
5292

மீதான நிலைஏறிச் சின்னம் பிடி 

வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி 
வேதாக மம்கடந்து சின்னம் பிடி 

வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி.

8
5293

பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி 

பன்னிரண்டின் மீதுநின்று சின்னம் பிடி 
சன்மார்க்கம் மார்க்கம்என்று சின்னம் பிடி 

சத்தியம்செய் கின்றோம்என்று சின்னம் பிடி.

9
5294

சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி 

செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி 
இத்தா ரணியில்என்று சின்னம் பிடி 

இதுவே தருணம்என்று சின்னம் பிடி.

10


திருச்சிற்றம்பலம் 
Back


 

124. முரசறைதல் 

தாழிசை

 

5295.

அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு 

அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு 
மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு 

மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.

1


திருச்சிற்றம்பலம் 
Back


 

125. தனித் திருஅலங்கல் (381) 

  • (381) இத்தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ள 161 பாக்களும் தனிப்பாடல்கள். ஆறாம் 
    அருட்பா காலத்தில் பல சமயங் களிற் பாடப் பெற்றவை. முன் பதிப்புகளில் இவை தனிப் பாடல்கள் 
    என்ற தலைப்பில் ஆறாம் அருட்பாவின் பிற்பகுதியில் உள்ளன. ஆ. பா. இவற்றைத் 
    தனித்திருஅலங்கல்,< ா௉஢௲ா஢௕௲ ஦ா஡ந஼, ா௉஢௲ா஢௕ ு஡ந௄ ற௉ ௣௽௚ 
    கூறாக்கி முறையே ஆறாம் அருட்பா முன், இடை, முடிந்த பகுதிகளின் ஈற்றில் வைத்துள்ளார். 
    இப்பதிப்பில் இவை ஒருவாறு பொருள் வரிசையில் முன் பின்னாக அமைக்கப் பெற்று 
    இவண் வைக்கப்பட்டுள்ளன.


ஆன்மநேய ஒருமைப்பாடு (382)

 

(382). இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை.

 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

திருச்சிற்றம்பலம் 

5296.

எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப 

கரிக்கின்றார் யாவர் அந்தச் 
செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின் 

செயல்எனவே தெரிந்தேன் இங்கே 
கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர் 

தமக்கேவல் களிப்பால் செய்ய 
ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன் 

வாய்மிகவும் ஊர்வ தாலோ.

1
5297

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் 

தம்உயிர்போல் எண்ணி உள்ளே 
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் 

யாவர்அவர் உளந்தான் சுத்த 
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் 

இடம்எனநான் தெரிந்தேன் அந்த 
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன் 

சிந்தைமிக விழைந்த தாலோ.

2
5298

கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும் 

தம்உயிர்போல் கண்டு ஞானத் 
தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப் 

பெருநீதி செலுத்தா நின்ற 
பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம் 

திருவாயால் புகன்ற வார்த்தை 
அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல் 

வார்த்தைகள்என் றறைவ ராலோ.

1
 சாலையப்பனை வேண்டல் 

கொச்சகக் கலிப்பா
 
5299மன்னப்பா மன்றிடத்தே மாநடஞ்செய் அப்பாஎன் 
தன்னப்பா சண்முகங்கொள் சாமியப்பா எவ்வுயிர்க்கும் 
முன்னப்பா பின்னப்பா மூர்த்தியப்பா மூவாத 
பொன்னப்பா ஞானப் பொருளப்பா தந்தருளே.
1
 கட்டளைக் கலித்துறை 
5300ஆதிஅப் பாநம் அனாதியப் பாநங்கள் அம்மைஒரு 
பாதிஅப் பாநிரு பாதிஅப் பாசிவ பத்தர்அனு 
பூதிஅப் பாநல் விபூதிஅப் பாபொற் பொதுநடஞ்செய் 
சோதிஅப் பாசுயஞ் சோதிஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.
5
5301அண்டஅப் பாபகிர் அண்டஅப் பாநஞ் சணிந்தமணி 
கண்டஅப் பாமுற்றும் கண்டஅப் பாசிவ காமிஎனும் 
ஒண்தவப் பாவையைக் கொண்டஅப் பாசடை ஓங்குபிறைத் 
துண்டஅப் பாமறை விண்டஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.
6
5302வேலைஅப் பாபடை வேலைஅப் பாபவ வெய்யிலுக்கோர் 
சோலைஅப் பாபரஞ் சோதிஅப் பாசடைத் துன்றுகொன்றை 
மாலைஅப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச் 
சாலைஅப் பாஎனைத் தந்தஅப் பாவந்து தாங்கிக்கொள்ளே.
7
5303மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன் 
உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற 
அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா 
கச்சிஅப் பாதங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே.
8
5304எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ 
செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ 
திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற 
சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே.
9
5305ஒட்டிஎன் கோதறுத் தாட்கொண் டனைநினை ஓங்கறிவாம் 
திட்டிஎன் கோஉயர் சிற்றம் பலந்தனில் சேர்க்கும்நல்ல 
வெட்டிஎன் கோஅருட் பெட்டியில் ஓங்கி விளங்கும்தங்கக் 
கட்டிஎன் கோபொற் பொதுநடஞ் செய்யுமுக் கண்ணவனே.
1
 மாயை நீக்கம் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
5306அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப் 
பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன் 
மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே 
இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
11
5307மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில் 
தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன் 
கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே 
ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே.
12
5308தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச் 
சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே 
வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே 
இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
13
 சிதம்பரேசன் அருள்

கலி விருத்தம்
 
5309சிற்றறி வுடையநான் செய்த தீமைகள் 
முற்றவும் பொறுத்தருள் முனிந்திடேல் இன்றே 
தெற்றென அருட்பெருஞ் சோதிச் செல்வமும் 
மற்றவும் வழங்குக வரதனே என்றேன்.
14
5310என்றசொல் செவிமடுத் திறையும் அஞ்சிடேல் 
இன்றுனக் கருட்பெருஞ் சோதி ஈந்தனம் 
நன்றுற மகிழ்கஎந் நாளுஞ் சாவுறா 
வென்றியும் அளித்தனம் என்று மேவினான்.
15
5311மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என் 
ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர் 
பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த் 
தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே.
16
 போற்றிச் சந்த விருத்தம் 

சந்த விருத்தம்
 
5312போற்றி நின்அருள் போற்றி நின்பொது 
போற்றி நின்புகழ் போற்றி நின்உரு 
போற்றி நின்இயல் போற்றி நின்நிலை 
போற்றி நின்நெறி போற்றி நின்சுகம் 
போற்றி நின்உளம் போற்றி நின்மொழி 
போற்றி நின்செயல் போற்றி நின்குணம் 
போற்றி நின்முடி போற்றி நின்நடு 
போற்றி நின்அடி போற்றி போற்றியே.
17
5313போற்றி நின்இடம் போற்றி நின்வலம் 
போற்றி நின்நடம் போற்றி நின்நலம் 
போற்றி நின்திறம் போற்றி நின்தரம் 
போற்றி நின்வரம் போற்றி நின்கதி 
போற்றி நின்கலை போற்றி நின்பொருள் 
போற்றி நின்ஒளி போற்றி நின்வெளி 
போற்றி நின்தயை போற்றி நின்கொடை 
போற்றி நின்பதம் போற்றி போற்றியே.
18
5314

போற்று கின்றஎன் புன்மை யாவையும் 

பொறுத்த நின்பெரும் பொறுமை போற்றிஎன் 
ஆற்று வேன்உனக் கறிகி லேன்எனக் 

கறிவு தந்தபே ரறிவ போற்றிவான் 
காற்று நீடழல் ஆதி ஐந்துநான் 

காணக் காட்டிய கருத்த போற்றிவன் 
கூற்று தைத்துநீத் தழிவி லாஉருக் 

கொள்ள வைத்தநின் கொள்கை போற்றியே.

19
 பாடமும் படிப்பும்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
5315

அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன் 

அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன் 
உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன் 

ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன் 
நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை 

நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப் 
பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும் 

படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.

20
5316

கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன் 

கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன் 
தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன் 

செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன் 
அள்ளக் குறையா வள்ளற் பொருளை 

அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை 
பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும் 

படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.

21
5317

காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன் 

கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன் 
வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன் 

வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன் 
ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும் 

ஐயர் திருவடிக் கானந்த மாகப் 
பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும் 

படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.

22
 பாட்டும் திருத்தமும்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
5318தேன்பாடல் அன்புடையார் செயப்பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக் 
கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா நல்ல 
வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை 
யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
23
5319ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன் 
ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம் 
பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை 
யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
24
 அம்பலத்தரசே அபயம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
5320

பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப் 

புறத்தினும் அகத்தினும் புணர்ந்த 
தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச் 

செல்வமே நான்பெற்ற சிறப்பே 
மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை 

வாழ்வித்த என்பெரு வாழ்வே 
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே 

அம்மையே அப்பனே அபயம்.

25
5321

பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள் 

புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த 
தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம் 

தேடியும் காண்கிலாச் சிவமே 
மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட 

வள்ளலே தெள்ளிய அமுதே 
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே 

அம்மையே அப்பனே அபயம்.

26
5322

பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம் 

புகன்றபோ தாந்த நாதாந்தம் 
தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந் 

தத்தினும் தித்திக்கும் தேனே 
மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும் 

மாபெருங் கருணையா ரமுதே 
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே 

அம்மையே அப்பனே அபயம்.

27
 அருட்பெருஞ்சோதி அபயம்

நேரிசை வெண்பா
 
5323அருட்பெருஞ் சோதி அபயம் அபயம் 
அருட்பெருஞ் சோதி அபயம் - அருட்பெருஞ் 
சோதி அபயம்சிற் சோதி அபயம்பொற் 
சோதி அபயம் துணை.
28
5324துணைவா அபயம் துயர்அகல என்பால் 
அணைவா அபயம் அபயம் - பணைவாய் 
வடலா அபயம் வரதா அபயம் 
நடநாய காஅபயம் நான்.
29
5325நானாகித் தானாய் நடித்தருள்கின் றாய்அபயம் 
தேனாய் இனிக்கும் சிவஅபயம் - வானாடு 
மெய்யா அபயம் விமலா அபயமென்றன் 
ஐயா அபயமப யம்.
30
5326அபயம் பதியே அபயம் பரமே 
அபயம் சிவமே அபயம் - உபய 
பதத்திற் கபயம் பரிந்தென்உளத் தேநல் 
விதத்தில் கருணை விளை.
31
5327கருணா நிதியே அபயம் கனிந்த 
அருணா டகனே அபயம் - மருணாடும் 
உள்ளக் கவலை ஒழிப்பாய்என் வன்மனத்துப் 
பொள்ளற் பிழைகள் பொறுத்து.
32
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5328

இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர் 

இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த 
கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக் 

கலக்கம்அற நடிக்கின்ற துலக்கம்அறி வீரோ 
பிணக்கறிவீர் புரட்டறிவீர்(383) பிழைசெயவே அறிவீர் 

பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்தில்இட அறிவீர் 
மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே 

வடைக்குழம்பே சாறேஎன் றடைக்க அறிவீரே.

33
 (383). பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு. 
5329

உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர் 

ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர் 
கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக் 

கேதம்அற நடிக்கின்ற பாதம்அறி வீரோ 
வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர் 

வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றடைக்க அறிவீர் 
குழக்கறியே(384) பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே 

குழம்பேசா றேஎனவும் கூறஅறி வீரே.

34
 (384). குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க. 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
5330

உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் 

பேனுக்கும் உவப்புறப் பசிக்கின்றீர் 
துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் 

ஊர்தொறும் சுற்றிப்போய் அலைகின்றீர் 
பிணிக்கும் பீடைக்கும் உடலுளம் 

கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள் 
பணிக்கும் வேலைசெய் துண்டுடுத் 

தம்பலம் பரவுதற் கிசையீரே.

35
5331

மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி 

இருபிடிஊண் வழங்கில் இங்கே 
உழவுக்கு முதல்குறையும் எனவளர்த்தங் 

கவற்றைஎலாம் ஓகோ பேயின் 
விழவுக்கும் புலால்உண்ணும் விருந்துக்கும் 

மருந்துக்கும் மெலிந்து மாண்டார் 
இழவுக்கும் இடர்க்கொடுங்கோல் இறைவரிக்கும் 

கொடுத்திழப்பர் என்னே என்னே.

36
5332

கடுகாட்டுக் கறிக்கிடுக தாளிக்க 

எனக்கழறிக் களிக்கா நின்ற 
சுடுகாட்டுப் பிணங்காள்இச் சுகமனைத்தும் 

கணச்சுகமே சொல்லக் கேண்மின் 
முடுகாட்டுக் கூற்றுவரும் சாவீரால் 

சாவதற்கு முன்னே நீவீர் 
இடுகாட்டுப்பிணங்கண்டால் ஏத்துமினோ 

எமையும்இவ்வா றிடுகஎன்றே.

37
5333

மதிப்பாலை அருட்பாலை ஆனந்தப் 

பாலைஉண்ண மறந்தார் சில்லோர் 
விதிப்பாலை அறியேம்தாய்ப் பாலைஉண்டு 

கிடந்தழுது விளைவிற் கேற்பக் 
கொதிப்பாலை உணர்வழிக்கும் குடிப்பாலை 

மடிப்பாலைக் குடிப்பார்அந்தோ 
துதிப்பாலை அருள்தருநம் தேவசிகா 

மணித்தேவைத் துதியார் அன்றே.

38
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5334

சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச் 

சிறியவர் சிந்தைமாத் திரமோ 
பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும் 

புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக் 
கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய 

கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த 
எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும் 

இனிப்பிலே புகுகின்ற திலையே.

39
 கலிநிலைத்துறை 
5335பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர் 
ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி 
தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர் 
ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
40
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5336

நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் 

நான்செயத் தக்கதே தென்பாள் 
செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ 

தெய்வமே தெய்வமே என்பாள் 
வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார் 

விருப்பிலர் என்மிசை என்பாள் 
வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள் 

வருந்துவாள் நான்பெற்ற மகளே.

41
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5337

நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே 

நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார் 
வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர் 

வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே 
காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம் 

களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான் 
ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே 

எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே.

42
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்33
5338.

அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற

அரசேநின் அடிமேல் ஆணை 
என்பாடென் றிலைஎன்னால் துரும்பும்அசைத் 

திடமுடியா திதுகால் தொட்டுப் 
பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு 

நீதானே புரத்தல் வேண்டும் 
உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும் 

மாஇருக்க ஒண்ணா தண்ணா.

43
5339.

முன்பாடு பின்பயன்தந் திடும்எனவே 

உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம் 
இன்பாடும் இவ்வுலகில் என்னறிவில் 

இலைஅதனால் எல்லாம் வல்லோய் 
அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்றோய் 

அருட்சோதி அளித்துக் காத்தல் 
உன்பாடு நான்உரைத்தேன் எனக்கொருபா 

டுண்டோ நீ உரைப்பாய் அப்பா.

44
5340..

உன்ஆணை உன்னைவிட உற்றதுணை 

வேறிலைஎன் உடையாய் அந்தோ 
என்நாணைக் காத்தருளி இத்தினமே 

அருட்சோதி ஈதல் வேண்டும் 
அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த 

பெருங்கருணை அரசே என்னை 
முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த 

இந்நாள்என் மொழிந்தி டாதே.

45
5341.

தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் 

தெனைஆண்ட துரையே என்னை 
நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட 

பதியேகால் நீட்டிப் பின்னே 
வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும் 

தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும் 
தாங்காதே இதுநினது தனித்ததிரு 

வுளமறிந்த சரிதம் தானே.

46
5342.

இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட் 

டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில் 
சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம் 

தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப் 
பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள் 

எங்குளர்காண் பதியே என்னை 
வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப் 

பிள்ளைஎன மதித்தி டாயே.

47
5343.

சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர் 

பலபுகலத் தினந்தோ றுந்தான் 
உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப் 

பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய் 
தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பெற் 

றிடஅழியாத் தேகன் ஆகப் 
பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப் 

புரிகஎனைப் பெற்ற தேவே.

48
 கலிநிலைத்துறை 
5344அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார் 
இங்கே நீதான் என்னள வின்னும் இரங்காயேல் 
எங்கே போகேன் யாரொடு நோகேன் எதுசெய்கேன் 
செங்கேழ் வேணித் திங்கள் அணிந்தருள் சிவனேயோ.
49
5345ஈயோ டுறழும் சிறியேன் அளவில் எந்தாய்நின் 
சேயோ டுறழும் பேரருள் வண்ணத் திருவுள்ளம் 
காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன் 
தீயோ டுறழும் திருவருள் வடிவச் சிவனேயோ.
50
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5346

உடைய நாயகன் பிள்ளைநான் 

ஆகில்எவ் வுலகமும் ஒருங்கின்பம் 
அடைய நான்அருட் சோதிபெற் 

றழிவிலா யாக்கைகொண் டுலகெல்லாம் 
மிடைய அற்புதப் பெருஞ்செயல் 

நாடொறும் விளைத்தெங்கும் விளையாடத் 
தடைய தற்றநல் தருணம்இத் 

தருணமாத் தழைக்கஇத் தனியேற்கே.

51
5347

கோது கொடுத்த மனச்சிறியேன் 

குற்றம் குணமாக் கொண்டேஇப் 
போது கொடுத்த நின்அருளாம் 

பொருளை நினைக்கும் போதெல்லாம் 
தாது கொடுத்த பெருங்களிப்பும் 

சாலா தென்றால் சாமிநினக் 
கேது கொடுப்பேன் கேட்பதன்முன் 

எல்லாம் கொடுக்க வல்லாயே.

52
5348

கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும் 

அன்பரெலாம் காணக் காட்டும் 
என்றுடைய நாயகனே எல்லாஞ்செய் 

வல்லவனே இலங்குஞ் சோதி 
மன்றுடைய மணவாளா மன்னவனே 

என்னிருகண் மணியே நின்னை 
அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணைஉன்மேல் 

ஆணைஉன்மேல் ஆணை ஐயா.

53
5349

திருநி லைத்துநல் அருளொடும் 

அன்பொடும் சிறப்பொடும் செழித்தோங்க 
உருநி லைத்திவண் மகிழ்வொடு 

வாழ்வுற உவந்துநின் அருள்செய்வாய் 
இருநி லத்தவர் இன்புறத் 

திருவருள் இயல்வடி வொடுமன்றில் 
குருநி லைத்தசற் குருஎனும் 

இறைவநின் குரைகழற் பதம்போற்றி.

54
5350

குற்றம் புரிதல் எனக்கியல்பே 

குணமாக் கொள்ளல் உனக்கியல்பே 
சிற்றம் பலவா இனிச்சிறியேன் 

செப்பும் முகமன் யாதுளது 
தெற்றென் றடியேன் சிந்தைதனைத் 

தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே 
இற்றைப் பொழுதே அருட்சோதி 

ஈக தருணம் இதுவாமே.

55
5351

அருளா ரமுதே என்னுடைய 

அன்பே என்றன் அறிவேஎன் 
பொருளாய் அகத்தும் புறத்தும்என்னைப் 

புணர்ந்த கருணைப் பொருப்பேமெய்த் 
தெருளாம் ஒளியே வெளியாகச் 

சிற்றம் பலத்தே நடிக்கின்றோய் 
இருளா யினஎல் லாம்தவிர்த்தென் 

எண்ணம் முடிப்பாய் இப்போதே.

56
5352

மந்திரம் அறியேன் மற்றை 

மணிமருந் தறியேன் வேறு 
தந்திரம் அறியேன் எந்தத் 

தகவுகொண் டடைவேன் எந்தாய் 
இந்திரன் முதலாம் தேவர் 

இறைஞ்சப்பொன் மன்றில் வேணிச் 
சந்திரன் ஆட இன்பத் 

தனிநடம் புரியும் தேவே.

57
5353.

கருணைக் கடலே அதில்எழுந்த 

கருணை அமுதே கனியமுதில் 
தருணச் சுவையே சுவைஅனைத்தும் 

சார்ந்த பதமே தற்பதமே 
பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம் 

பொதுவில் நடிக்கும் பரம்பரமே 
தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும் 

சித்தி நிலைகள் தெரித்தருளே.

58
5354.

கலக்கம் அற்றுநான் நின்றனைப் 

பாடியே களிக்கின்ற நாள்எந்நாள் 
இலக்கம் உற்றறிந் திடஅருள் 

புரிகுவாய் எந்தைஇவ் விரவின்கண் 
துலக்க முற்றசிற் றம்பலத் 

தாடுமெய்ச் சோதியே சுகவாழ்வே 
அலக்கண் அற்றிடத் திருவருள் 

புரியும்என் அப்பனே அடியேற்கே.

59
 கட்டளைக் கலிப்பா 
5355

பண்டு நின்திருப் பாதம லரையே 

பாடி யாடிய பத்திமை யோரைப்போல் 
தொண்டு கொண்டெனை ஆண்டனை இன்றுதான் 

துட்டன் என்றுது ரத்திடல் நன்றுகொல் 
குண்டு நீர்க்கடல் சூழுல கத்துளோர் 

குற்றம் ஆயிரங் கோடிசெய் தாலும்முன் 
கொண்டு பின்குலம் பேசுவ ரோஎனைக் 

குறிக்கொள் வாய்எண் குணந்திகழ் வள்ளலே.

60
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5356

கண்ணெலாம் நிரம்பப் பேரொளி காட்டிக் 

கருணைமா மழைபொழி முகிலே 

விண்ணெலாம் நிறைந்த விளக்கமே என்னுள் 
மேவிய மெய்ம்மையே மன்றுள் 
எண்ணெலாம் கடந்தே இலங்கிய பதியே 

இன்றுநீ ஏழையேன் மனத்துப் 
புண்ணெலாம் தவிர்த்துப் பொருளெலாம் கொடுத்துப் 

புகுந்தென துளங்கலந் தருளே.

61
5357

அன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும் 

அன்றுவந் தாண்டனை அதனால் 
துன்பிலேன் எனஇவ் வுலகெலாம் அறியச் 

சொல்லினேன் சொல்லிய நானே 
இன்பிலேன் எனஇன் றுரைத்திடல் அழகோ 

எனைஉல கவமதித் திடில்என் 
என்பிலே கலந்தாய் நினக்கும்வந் திடுமே 

எய்துக விரைந்தென திடத்தே.

62
 கட்டளைக் கலித்துறை 
5358வான்வேண்டு சிற்றம் பலத்தே வயங்கி வளரமுதத் 
தேன்வேண்டி னேன்இத் தருணத் தருள்செய்க செய்திலையேல் 
ஊன்வேண்டும் என்னுயிர் நீத்துநின் மேற்பழி யோவிளைப்பேன் 
நான்வேண்டு மோபழி தான்வேண்டு மோசொல்க நாயகனே.
63
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5359

செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும் 

தேவரும் முனிவரும் பிறரும் 
இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம் 

எந்தைநின் திருவருள் திறத்தை 
எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன் 

என்தரத் தியலுவ தேயோ 
ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர் 

உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே.

64
5360

உணர்ந்துணர்ந் தாங்கே உணர்ந்துணர்ந் துணரா 

உணர்ந்தவர் உணர்ச்சியான் நுழைந்தே 
திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் 

சிவபதத் தலைவநின் இயலைப் 
புணர்ந்தநின் அருளே அறியும்நான் அறிந்து 

புகன்றிடும் தரஞ்சிறி துளனோ 
கொணர்ந்தொரு பொருள்என் கரங்கொளக் கொடுத்த 

குருஎனக் கூறல்என் குறிப்பே.

65
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5361

அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும் 

அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண் 
டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை 

ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன் 
மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே 

மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர் 
செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய் 

திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே.

66
5362

கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும் 

கூட்டிஉண்டாற் போல்இனிக்குங் குணங்கொள்சடைக் கனியே 
தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் 

தோன்றவிடம் கழுத்தினுளே தோன்றநின்ற சுடரே 
எழுந்தேறும் அன்பருளத் தேற்றுதிரு விளக்கே 

என்உயிர்க்குத் துணையேஎன் இருகண்ணுள் மணியே 
அழுந்தேற அறியாதென் அவலநெஞ்சம் அந்தோ 

அபயம்உனக் கபயம்எனை ஆண்டருள்க விரைந்தே.

67
5363

என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே 

எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும் 
நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே 

நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன் 
தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது 

சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும் 
பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன் 

பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.

68
5364

இச்சைஎலாம் புகன்றேன்என் இலச்சைஎலாம் விடுத்தேன் 

இனிச்சிறிதும் தரியேன்இங் கிதுதருணத் தடைந்தே 
அச்சைஎலாம் வெளிப்படுத்தி அச்சம்எலாம் அகற்றி 

அருட்சோதித் தனிஅரசே ஆங்காங்கும் ஓங்க 
விச்சைஎலாம் எனக்களித்தே அவிச்சைஎலாம் தவிர்த்து 

மெய்யுறஎன் னொடுகலந்து விளங்கிடுதல் வேண்டும் 
பச்சைஎலாம் செம்மைஎலாம் பொன்மைஎலாம் படர்ந்த 

படிகமணி விளக்கேஅம் பலம்விளங்கும் பதியே.

69
5365

தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே 

தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க இதுதான் 
ஒருவகைஈ திலைஎனில்வே றொருவகைஎன் னுடைய 

உடல்உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த 
இருவகையும் சம்மதமே திருவடிசாட் சியதாய் 

இயம்பினன்என் இதயம்உன்றன் இதயம்அறிந் ததுவே 
அருவகையோ உருவகையும் ஆகிஎன்னுள் அமர்ந்தாய் 

அம்மேஎன் அப்பாஎன் அய்யாஎன் அரசே.

70
5366

வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு 

வழக்கம் வள்ளல்நீ மகிழ்ந்தருட் சோதி 
தருமுன் தந்தனை என்றிருக் கின்றேன் 

தந்தை நீதரல் சத்தியம் என்றே 
குருமுன் பொய்யுரை கூறலேன் இனிஇக் 

குவலை யத்திடைக் கவலையைத் தரியேன் 
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணை 

செய்க வாழ்கநின் திருவருட் புகழே. .

71
5367

வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில் 

மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன் 
எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான் 

எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி 
தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில் 

செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று 
நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது 

நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே. .

72
 குறட்டாழிசை. 
5368அணியே எனதுமெய் யறிவே பொதுவளர் அரசே திருவளர் அமுதே 
இனிதருள் வாய்இது தருணம் அமுதரு ளாய்இது தருணம் 
மணியே எனதுகண் மணியே பொதுவளர் மதியே திருவருண் மதியே 
அருள்புரி வாய்இது தருணம் அருள்புரி வாய்இது தருணம். .
73
 நேரிசை வெண்பா. 
5369இதுவே தருணம் எனைஅணைதற் கிங்கே 
பொதுவே நடிக்கும் புனிதா - விதுவேய்ந்த 
சென்னியனே சுத்த சிவனே உனக்கடியேன் 
அன்னியனே அல்லேன் அறிந்து. .
74
 கலித்துறை. 
5370ஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே 
நீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே 
ஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான் 
சோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனியே. .
75
 கட்டளைக் கலித்துறை. 
5371போதோ விடிந்த தருளரசேஎன் பொருட்டுவந்தென் 
தாதோர் எழுமையும் நன்மையுற் றோங்கத் தருவதுதான் 
மாதோட நீக்கும் கனிரச மோவந்த வான்கனியின் 
கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே. .
76
5372அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல் 
அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள் 
அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை 
அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே. .
77
5373மாதோர் புடைவைத்த மாமருந் தேமணி யேஎன் மட்டில் 
யாதோ திருவுளம் யானறி யேன்இதற் கென்னசெய்வேன் 
போதோ கழிகின்ற தந்தோநின் தன்னைப் பொருந்துகின்ற 
சூதோர் அணுவும் தெரியேன்நின் பாதத் துணைதுணையே. .
78
 தரவு கொச்சகக் கலிப்பா. 
5374ஆர்ந்தஅருட் பெருஞ்சோதி அப்பாநான் அடுத்தவர்தம் 
சோர்ந்தமுகம் பார்க்கஇனித் துணியேன் நின்அருள்ஆணை 
நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும் 
ஓர்ந்துசெவி புகத்துணியேன் உன்ஆணை உன்ஆணை. .
79
5375அழியா நிலையாதது மேவிநின் அன்பினோடும் 
ஒழியா துனைப்பாடி நின்றாடி உலகினூடே 
வழியாம் உயிர்க்கின்பம் புரிந்து வயங்கல்வேண்டும் 
இழியா தருள்வாய் பொதுமேவிய எந்தைநீயே. .
80
5376கரும்பசைக்கும் மொழிச்சிறியார் கல்மனத்தில் பயின்றுபயின் 
றிரும்பசைக்கும் மனம்பெற்றேன் யானோஇவ் வேழைகள்தம் 
அரும்பசிக்கு மருந்தளிப்பேன் அந்தோஇங் கென்னாலே 
துரும்பசைக்க முடியாதே சோதிநடப் பெருமானே.
81
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5377.

மதிக்களவா மணிமன்றில் திருநடஞ்செய் 

திருத்தாளை வழுத்தல் இன்று 
பதிக்களவா நலந்தருவல் என்றுநினை 

ஏத்துதற்குப் பணிக்கின் றேன்நீ 
விதிக்களவாச் சித்திகள்முன் காட்டுகஇங் 

கென்கின்றாய் விரைந்த நெஞ்சே 
பொதிக்களவா முன்னர்இங்கே சத்தத்துக் 

களவென்பார் போன்றாய் அன்றே.

82
5378.

ஆடியகால் மலர்களுக்கே அன்புடையார் 

யாவரிங்கே அவர்க்கே இன்பம் 
கூடியதென் றாரணமும் ஆகமமும் 

ஆணையிட்டுக் கூறும்வார்த்தை 
ஓடியதோ நெஞ்சேநீ உன்னுவதென் 

பற்பலவாய் உன்னேல் இன்னே 
பாடிஅவன் திருப்பாட்டைப் படிகண்டாய் 

இன்புகலப் படிகண் டாயே.

83
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5379

ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த 

வுவைக்குமேற் றனைஅருள் ஒளியால் 
நன்றுகண் டாங்கே அருட்பெருஞ் சோதி 

நாதனைக் கண்டவன் நடிக்கும் 
மன்றுகண் டதனில் சித்தெலாம் வல்ல 

மருந்துகண் டுற்றது வடிவாய் 
நின்றுகொண் டாடுந் தருணம்இங் கிதுவே 

நெஞ்சமே அஞ்சலை நீயே.

84
5380

கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட 

கருணையங் கண்ணது ஞான 
நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற 

நின்றது நிறைபெருஞ் சோதி 
மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே 

வயங்குவ தின்பமே மயமாய்த் 
தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே 

தனித்தெனக் கினித்ததோர் கனியே.

85
5381

மன்றுள்நின் றாடும் வள்ளலே எனது 

வள்ளல்என் றெனக்குளே தெரிந்த 
அன்றுதான் தொடங்கி அம்மையே அப்பா 

ஐயனே அன்பனே அரசே 
என்றுநின் தனையே நினைத்திருக் கின்றேன் 

எட்டுணை எனினும்வே றிடத்தில் 
சென்றுநின் றறியேன் தெய்வமே இதுநின் 

திருவுளம் தெரிந்தது தானே.

86
5382

உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார் 

உறுபசி உழந்துவெந் துயரால் 
வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ 

மற்றிதை நினைத்திடுந் தோறும் 
எள்ளலேன் உள்ளம் எரிகின்ற துடம்பும் 

எரிகின்ற தென்செய்வேன் அந்தோ 
கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக் 

குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய்.

87
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5383.

ஐவகைத் தொழிலும் என்பால் 

அளித்தனை அதுகொண் டிந்நாள் 
செய்வகை தெரிவித் தென்னைச் 

சேர்ந்தொன்றாய் இருத்தல் வேண்டும் 
பொய்வகை அறியேன் வேறு 

புகலிலேன் பொதுவே நின்று 
மெய்வகை உரைத்தேன் இந்த 

விண்ணப்பம் காண்க நீயே.

88
5384.

உருவ ராகியும் அருவின 

ராகியும் உருஅரு வினராயும் 
ஒருவ ரேஉளார் கடவுள்கண் 

டறிமினோ உலகுளீர் உணர்வின்றி 
இருவ ராம்என்றும் மூவரே 

யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும் 
எருவ ராய்உரைத் துழல்வதென் 

உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே.

89
 கட்டளைக் கலித்துறை 
5385சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற 
தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக் 
காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே 
நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே.
90
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5386

வண்டணிபூங் குழல்அம்மை எங்கள்சிவ காம 

வல்லியொடு மணிமன்றில் வயங்கியநின் வடிவம் 
கண்டவரைக் கண்டவர்தம் கால்மலர்முத் தேவர் 

கனமுடிக்கே முடிக்கின்ற கடிமலராம் என்றால் 
பண்டகுநின் திருத்தொண்டர் அடிப்பெருமை எவரே 

பகர்ந்திடுவர் மறைகளெலாம் பகர்ந்திடுவான் புகுந்தே 
விண்டுலர்ந்து வெளுத்தஅவை வெளுத்தமட்டோ அவற்றை 

வியந்தோதும் வேதியரும் வெளுத்தனர்உள் உடம்பே.

91
5387

கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம் 

கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே 
சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம் 

சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக 
வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம் 

மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த 
முழக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க 

முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.

92
 நிலைமண்டில ஆசிரியப்பா 
5388சிற்சபைக் கண்ணும் பொற்சபைக் கண்ணும் 
திருநடம் புரியும் திருநட ராஜ 
எனக்கருள் புரிந்த நினக்கடி யேன்கைம் 
மாற்றை அறிந்திலன் போற்றிநின் அருளே.
93
5389நாயினும் சிறியேன் ஆயினும் பெரியேன் 
யாதிற் பெரியேன் தீதிற் பெரியேன் 
என்னைஆண் டருளினை என்னைஆண் டவனே 
அம்பலத் தாடல்செய் எம்பெரும் பொருளே. 94
94
 நேரிசை வெண்பா 
5390உண்மைஉரைத் தருள்என் றோதினேன் எந்தைபிரான் 
வண்மையுடன் என்அறிவில் வாய்ந்துரைத்தான் - திண்மையுறு 
சித்திநிலை எல்லாம் தெரிவித் தருள்கின்றேம் 
இத்தருணம் சத்தியமே என்று.
95
5391உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி 
இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என 
நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான் 
தானே எனக்குத் தனித்து.
96
5392தனித்துணையாய் என்றன்னைத் தாங்கிக்கொண் டென்றன் 
மனித்த உடம்பழியா வாறே - கனித்துணையாம் 
இன்னமுதம் தந்தெனக்கே எல்லாமும் வல்லசித்தி 
தன்னையுந்தந் துட்கலந்தான் றான்.
97
5393சர்க்கரைஒத் தான்எனக்கே தந்தான் அருளென்மனக் 
கற்கரையச் செய்தே களிப்பித்தான் - கற்க 
இனியான் அருட்சோதி எந்தைஎன்னுள் உற்றான் 
இனியான் மயங்கேன் இருந்து.
98
5394உன்னைவிட மாட்டேன்நான் உன்ஆணை எம்பெருமான் 
என்னைவிட மாட்டாய் இருவருமாய் - மன்னிஎன்றும் 
வண்மை எலாம்வல்ல வாய்மைஅரு ளால்உலகுக் 
குண்மைஇன்பம் செய்தும் உவந்து.
99
 கட்டளைக் கலித்துறை 
5395நஞ்சுண் டுயிர்களைக் காத்தவ னேநட நாயகனே 
பஞ்சுண்ட சிற்றடிப் பாவைபங் காநம் பராபரனே 
மஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா 
பிஞ்சுண்ட வாய்க்குப் பழம்அளித் தாண்ட பெரியவனே.
100
5396அப்பூறு செஞ்சடை அப்பாசிற் றம்பலத் தாடுகின்றோய் 
துப்பூறு வண்ணச் செழுஞ்சுட ரேதனிச் சோதியனே 
வெப்பூறு நீக்கிய வெண்ணீறு பூத்தபொன் மேனியனே 
உப்பூறு வாய்க்குத்தித் திப்பூறு காட்டிய உத்தமனே.
101
5397நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர் 
வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன் 
ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன் 
கோன்செய்த விச்சை குணிக்கவல் லார்எவர் கூறுமினே.
102
5398பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம் பலநடங்கண் 
டெண்ணிய எண்ணம் பலித்தன மெய்இன்பம் எய்தியதோர் 
தண்ணியல் ஆரமு துண்டனன் கண்டனன் சாமியைநான் 
நண்ணிய புண்ணியம் என்னுரைக் கேன்இந்த நானிலத்தே.
103
5399அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம் 
அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால் 
அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தம்தந் தழிவற்றதோர் 
அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே.
104
 கலிவிருத்தம் 
5400அருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின 
மருட்பெரும் திரைஎலாம் மடிந்து நீங்கின 
இருட்பெரு மலமுதல் யாவும் தீர்ந்தன 
தெருட்பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே.
105
5401ஓவுறாத் துயர்செயும் உடம்புதான் என்றும் 
சாவுறா தின்பமே சார்ந்து வாழலாம் 
மாவுறாச் சுத்தசன் மார்க்க நன்னெறி 
மேவுறார் தங்களை விடுக நெஞ்சமே.
106
5402பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் 
சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால் 
நித்திய மாகியே நிகழும் என்பது 
சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே.
107
 கொச்சகக் கலிப்பா 
5403வானாகி வானடுவே மன்னும்ஒளி யாகிஅதில் 
தானாடு வானாகிச் சன்மார்க்கர் உள்ளினிக்கும் 
தேனாகித் தெள்ளமுதாய்த் தித்திக்கும் தேவேநீ 
யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ.
108
5404ஞானா கரச்சுடரே ஞான மணிவிளக்கே 
ஆனா அருட்பெருஞ்சிற் றம்பலத்தே ஆனந்தத் 
தேனார் அமுதாம் சிவமே சிவமேநீ 
நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ.
109
5405என்தரத்துக் கேலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன் 
முன்தரத்தின் எல்லாம் முடித்துக் கொடுக்கின்றாய் 
நின்தரத்தை என்புகல்வேன் நின்இடப்பால்(385) மேவுபசும் 
பொன்தரத்தை என்உரைக்கேன் பொற்பொதுவில் நடிக்கின்றோய்.
110
 (385). வலப்பால் - முதற்பதிப்பு., பொ. சு. ச. மு. க. 
5406என்னுடைய விண்ணப்பம் இதுகேட்க எம்பெருமான் 
நின்னுடைய பெருங்கருணை நிதிஉடையேன் ஆதலினால் 
பொன்னுடையான் அயன்முதலாம் புங்கவரை வியவேன்என் 
தன்னுடைய செயலெல்லாம் தம்பிரான் செயலன்றே.
111
5407ஓங்கும்அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்கத் 
தூங்கிய என்தன்னை எழுப்பிஅருள் தூயபொருள் 
வாங்குகஎன் றென்பால் வலியக் கொடுத்தமுதும் 
பாங்குறநின் றூட்டினையே எந்தாய்நின் பண்பிதுவே.
112
5408நாட்பாரில் அன்பரெலாம் நல்குகஎன் றேத்திநிற்ப 
ஆட்பாரில் அன்போர் அணுத்துணையும் இல்லேற்கே 
நீட்பாய் அருளமுதம் நீகொடுத்தாய் நின்னை இங்கே 
கேட்பார் இலைஎன்று கீழ்மேல தாக்கினையே.
113
5409எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே 
எல்லார்க்கும் துணையாகி இருக்கவைத்தாய் எம்பெருமான் 
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம் 
எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே.
114
5410நான்ஆனான் தான்ஆனான் நானும்தா னும்ஆனான் 
தேன்ஆனான் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்றான் 
வான்ஆனான் ஞான மணிமன்றில் ஆடுகின்றான் 
கோன்ஆனான் என்னுட் குலாவுகின்ற கோமானே.
115
 கட்டளைக் கலித்துறை 
5411எல்லாக் குறையும் தவிர்ந்தேன்உன் இன்னருள் எய்தினன்நான் 
வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்தருந்தி 
நல்லார் எவர்க்கும் உபகரிப் பான்இங்கு நண்ணுகின்றேன் 
கொல்லா விரதத்தில் என்னைக் குறிக்கொண்ட கோலத்தனே.
116
5412முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால் 
இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா 
றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன் 
என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.
117
5413கண்டேன் சிற்றம்பலத் தானந்த நாடகம் கண்டுகளி 
கொண்டேன் எல்லாம்வல்ல சித்தனைக் கூடிக் குலவிஅமு 
துண்டேன் மெய்ஞ்ஞான உருஅடைந் தேன்பொய் உலகொழுக்கம் 
விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பிதுவே.
118
5414கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே 
பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார் 
விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற 
தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே.
119
5415தாழைப் பழம்பிழி(386) பாலொடு சர்க்கரைச் சாறளிந்த 
வாழைப் பழம்பசு நெய்நறுந் தேனும் மருவச்செய்து 
மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்தளவி 
ஏழைக் களித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
120
 (386). தாழைப்பழம் - தேங்காய். 
5416தென்பால் முகங்கொண்ட தேவேசெந் தேனில் சிறந்தபசு 
வின்பால் கலந்தளி முக்கனிச் சாறும் எடுத்தளவி 
அன்பால் மகிழ்ந்து மகனே வருகென் றழைத்தருளி 
என்பால் அளித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
121
5417செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான் 
ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே 
சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன் 
இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.
122
 கலிநிலைத்துறை 
5418கருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே 
தருண வாரிச மலர்ப்பதம் தந்தனை நின்னை 
அருண வண்ணஒண் சுடர்மணி மண்டபத் தடியேன் 
பொருள்ந யப்புறக் கண்டுகண் டுளமகிழ் போதே.
123
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5419

முந்தைநாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் எனஎன் 

முன்னர்நீ தோன்றினை அந்தோ 
அந்தநாள் தொடங்கி மகிழ்ந்திருக் கின்றேன் 

அப்பனே அய்யனே அரசே 
இந்தநாள் கவலை இடர்பயம் எல்லாம் 

என்னைவிட் டொழிந்திடப் புரிந்தாய் 
எந்தநாள் புரிந்தேன் இப்பெரும் பேறிங் 

கெய்துதற் குரியமெய்த் தவமே.

124
5420

வாய்க்குறும் புரைத்துத் திரிந்துவீண் கழித்து 

மலத்திலே கிடந்துழைத் திட்ட 
நாய்க்குயர் தவிசிட் டொருமணி முடியும் 

நன்றுறச் சூட்டினை அந்தோ 
தூய்க்குணத் தவர்கள் புகழ்மணி மன்றில் 

சோதியே நின்பெருந் தயவைத் 
தாய்க்குறு தயவென் றெண்ணுகோ தாயின் 

தயவும்உன் தனிப்பெருந் தயவே.

125
5421

பேரிடர் தவிர்த்துப் பேரருள் புரிந்த 

பெருமநின் தன்னைஎன் றனக்கே 
சாருறு தாயே என்றுரைப் பேனோ 

தந்தையே என்றுரைப் பேனோ 
சீருறு குருவே என்றுரைப் பேனோ 

தெய்வமே என்றுரைப் பேனோ 
யாரென உரைப்பேன் என்னெனப் புகழ்வேன் 

யாதுமொன் றறிந்திலேன் அந்தோ.

126
5422

சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய 

தீமன மாயையைக் கணத்தே 
வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட 

மெய்யநின் கருணைஎன் புகல்வேன் 
உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில் 

உற்றசா றட்டசர்க் கரையும் 
நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே 

ஞானமன் றோங்கும்என் நட்பே.

127
5423

புல்லிய நெறிக்கே இழுத்தெனை அலைத்த 

பொய்ம்மன மாயையைக் கணத்தே 
மெல்லிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட 

மெய்யநின் கருணைஎன் புகல்வேன் 
வல்லிநின் அம்மை மகிழமன் றோங்கும் 

வள்ளலே மறைகள்ஆ கமங்கள் 
சொல்லிய பதியே மிகுதயா நிதியே 

தொண்டனேன் உயிர்க்குமெய்த் துணையே.

128
5424

அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை 

அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே 
இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான் 

என்னையோ என்னையோ என்றாள் 
திருந்துதெள் ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த 

திருவுரு அடைந்தனன் ஞான 
மருந்துமா மணியும் மந்திர நிறைவும் 

வாய்த்தன வாய்ப்பின்என் றாளே.

129
5425

இன்பிலே வயங்கும் சிவபரம் பொருளே 

என்உயிர்க் கமுதமே என்தன் 
அன்பிலே பழுத்த தனிப்பெரும் பழமே 

அருள்நடம் புரியும்என் அரசே 
வன்பிலே விளைந்த மாயையும் வினையும் 

மடிந்தன விடிந்ததால் இரவும் 
துன்பிலேன் இனிநான் அருட்பெருஞ் சோதிச் 

சூழலில் துலங்குகின் றேனே.

130
5426

உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும் 

ஒருதிருப் பொதுஎன அறிந்தேன் 
செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன் 

சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன் 
மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து 

மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப் 
பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப் 

பாடுகின் றேன்பொதுப் பாட்டே.

131
5427

படித்தஎன் படிப்பும் கேள்வியும் இவற்றின் 

பயனதாம் உணர்ச்சியும் அடியேன் 
பிடித்தநல் நிலையும் உயிரும்மெய் இன்பும் 

பெருமையும் சிறப்பும்நான் உண்ணும் 
வடித்ததெள் ளமுதும் வயங்குமெய் வாழ்வும் 

வாழ்க்கைநன் முதலும்மன் றகத்தே 
நடித்தபொன் னடியும் திருச்சிற்றம் பலத்தே 

நண்ணிய பொருளும்என் றறிந்தேன்.

132
5428

கலையனே எல்லாம் வல்லஓர் தலைமைக் 

கடவுளே என்இரு கண்ணே 
நிலையனே ஞான நீதிமன் றிடத்தே 

நிருத்தஞ்செய் கருணைமா நிதியே 
புலையனேன் பொருட்டுன் திருவடி அவனி 

பொருந்திய புதுமைஎன் புகல்வேன் 
சிலையைநேர் மனத்தேன் செய்தவம் பெரிதோ 

திருவருட் பெருந்திறல் பெரிதே.

133
5429

தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண் 

தனிமுதல் பேரருட் சோதிப் 
பரம்பர ஞான சிதம்பர நடஞ்செய் 

பராபர நிராமய நிமல 
உரம்பெறும் அயன்மால் முதற்பெருந் தேவர் 

உளத்ததி சயித்திட எனக்கே 
வரந்தரு கின்றாய் வள்ளல்நின் கருணை 

மாகடற் கெல்லைகண் டிலனே.

134
5430

யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ 

என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ 
ஊன்மனம் உருக என்தனைத் தேற்றி 

ஒளிஉருக் காட்டிய தலைவா 
ஏன்மனம் இரங்காய் இன்றுநீ என்றேன் 

என்றசொல் ஒலிஅடங் குதன்முன் 
ஆன்மகிழ் கன்றின் அணைத்தெனை எடுத்தாய் 

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

135
5431

பனிப்பறுத் தெல்லாம் வல்லசித் தாக்கிப் 

பரம்பரம் தருகின்ற தென்றோர் 
தனிப்பழம் எனக்கே தந்தைதான் தந்தான் 

தமியனேன் உண்டனன் அதன்தன் 
இனிப்பைநான் என்என் றியம்புவேன் அந்தோ 

என்னுயிர் இனித்ததென் கரணம் 
சனிப்பற இனித்த தத்துவம் எல்லாம் 

தனித்தனி இனித்தன தழைத்தே.

136
5432

விண்ணெலாம் கலந்த வெளியில்ஆ னந்தம் 

விளைந்தது விளைந்தது மனனே 
கண்ணெலாம் களிக்கக் காணலாம் 

பொதுவில் கடவுளே என்றுநம் கருத்தில் 
எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி 

ஏத்தலாம் எடுத்தெடுத் துவந்தே 
உண்ணலாம் விழைந்தார்க் குதவலாம் உலகில் 

ஓங்கலாம் ஓங்கலாம் இனியே.

137
5433

வள்ளலாம் கருணை மன்றிலே அமுத 

வாரியைக் கண்டனம் மனமே 
அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி 

ஆடலாம் அடிக்கடி வியந்தே 
உள்எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில் 

ஓங்கலாம் உதவலாம் உறலாம் 
கள்எலாம் உண்ட வண்டென இன்பம் 

காணலாம் களிக்கலாம் இனியே.

138
5434.

சனிதொ லைந்தது தடைத விர்ந்தது 

தயைமி குந்தது சலமொடே 
துனிதொ லைந்தது சுமைத விர்ந்தது 

சுபமி குந்தது சுகமொடே 
கனிஎ திர்ந்தது களைத விர்ந்தது 

களிமி குந்தது கனிவொடே 
புனித மன்றிறை நடம லிந்தது 

புகழ்உ யர்ந்தது புவியிலே.

139
5435,

உரையும் உற்றது ஒளியும் உற்றது 

உணர்வும் உற்றது உண்மையே 
பரையும் உற்றது பதியும் உற்றது 

பதமும் உற்றது பற்றியே 
புரையும் அற்றது குறையும் அற்றது 

புலையும் அற்றது புன்மைசேர் 
திரையும் அற்றது நரையும் அற்றது 

திரையும் அற்றுவி ழுந்ததே.

140
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5436

அம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே 

ஆனந்த மாகடலே அறிவேஎன் அன்பே 
உம்பர்கட்கே அன்றிஇந்த உலகர்கட்கும் அருள்வான் 

ஒளிர்கின்ற ஒளியேமெய் உணர்ந்தோர்தம் உறவே 
எம்பலத்தே வாகிஎனக் கெழுமையும்நற் றுணையாய் 

என்உளத்தே விளங்குகின்ற என்இறையே நினது 
செம்பதத்தே மலர்விளங்கக் கண்டுகொண்டேன் எனது 

சிறுமைஎலாம் தீர்ந்தேமெய்ச் செல்வமடைந் தேனே.

141
5437

அடிவிளங்கக் கனகசபைத் தனிநடனம் புரியும் 

அருட்சுடரே என்உயிருக் கானபெருந் துணையே 
துடிவிளங்கக் கரத்தேத்தும் சோதிமலை மருந்தே 

சொற்பதம்எல் லாம்கடந்த சிற்சொருபப் பொருளே 
பொடிவிளங்கத் திருமேனிப் புண்ணியனே ஞானப் 

போனகரைச் சிவிகையின்மேல் பொருந்தவைத்த புனிதா 
படிவிளங்கச் சிறியேன்நின் பதமலர்கண் டுவந்தேன் 

பரிவொழிந்தேன் அருட்செல்வம் பரிசெனப்பெற் றேனே.

142
5438

அன்புடை யவரேஎல் லாம்உடை யவரே 

அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேஎன் 
வன்புடை மனத்தைநன் மனமாக்கி எனது 

வசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே 
இன்புடை யவரேஎன் இறையவ ரேஎன் 

இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே 
என்புடை எனைத்தூக்கி எடுத்தீர்இங் கிதனை 

எண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே.

143
5439

கலக்கம் நீங்கினேன் களிப்புறு கின்றேன் 

கனக அம்பலம் கனிந்தசெங் கனியே 
துலக்கம் உற்றசிற் றம்பலத் தமுதே 

தூய சோதியே சுகப்பெரு வாழ்வே 
விலக்கல் இல்லதோர் தனிமுதல் அரசே 

வேத ஆகமம் விளம்புமெய்ப் பொருளே 
அலக்கண் அற்றமெய் அன்பர்தம் உளத்தே 

அமர்ந்த தோர்சச்சி தானந்த சிவமே.

144
5440

ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம் 

உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே 
ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார் 

இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ 
ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ 

தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை 
ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே 

உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.

145
5441

சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம் 

துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே 
வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய் 

விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால் 
செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே 

தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய் 
ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றேன் அடிநான் 

உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.

146
5442

தந்தை தன்மையே தனையன்தன் தன்மை 

என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர் 
எந்தை எம்பிரான் ஐந்தொழில் புரியும் 

இறைவன் மன்றுளே இயல்நடம் புரிவான் 
மைந்தன் என்றெனை ஆண்டவன் எல்லாம் 

வல்ல நாயகன் நல்லசீர் உடையான் 
அந்த ணாளன்மெய் அறிவுடை யவன்என் 

அப்பன் தன்மைஎன் தன்மைஎன் றறிமின்.

147
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5443

என்உடலும் என்உயிரும் என்பொருளும் 

நின்னஎன இசைந்தஞ் ஞான்றே 
உன்னிடைநான் கொடுத்தனன்மற் றென்னிடைவே 

றொன்றும்இலை உடையாய் இங்கே 
புன்னிகரேன் குற்றமெலாம் பொறுத்ததுவும் 

போதாமல் புணர்ந்து கொண்டே 
தன்னிகர்என் றெனவைத்தாய் இஞ்ஞான்றென் 

கொடுப்பேன்நின் தன்மைக் கந்தோ.

148
5444

என்னுரைக்கேன் என்னுரைக்கேன் இந்தஅதி 

சயந்தன்னை எம்ம னோர்காள் 
பொன்னுரைக்கும் மணிமன்றில் திருநடனம் 

புரிகின்ற புனிதன் என்னுள் 
மின்உரைக்கும் படிகலந்தான் பிரியாமல் 

விளங்குகின்றான் மெய்ம்மை யான 
தன்னுரைக்கும் என்னுரைக்கும் சமரசம்செய் 

தருள்கின்றான் சகத்தின் மீதே.

149
5445

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் 

மாளாத ஆக்கை பெற்றேன் 
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே 

நடுவிருந்து குலாவு கின்றேன் 
பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை 

அன்பினொடும் பாடிப் பாடி 
நீடுகின்றேன் இன்பக்கூத் தாடுகின்றேன் 

எண்ணமெலாம் நிரம்பி னேனே.

150
5446

ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை 

அருள்ஒளி தருகின்றாம் 
கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே 

குறிக்கொள்வர் நினக்கேஎம் 
ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம் 

வாழ்கநீ மகனேஎன் 
றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின் 

இணைமலர்ப் பதம்போற்றி.

151
 கட்டளைக் கலிப்பா 
5447

நாய்க்கும் ஓர்தவி சிட்டுப்பொன் மாமுடி 

நன்று சூட்டினை என்றுநின் அன்பர்கள் 
வாய்க்கு வந்த படிபல பேசவே 

மதியி லேனையும் மன்னருட் சத்தியாம் 
தாய்க்குக் காட்டிநல் தண்ணமு தூட்டிஓர் 

தவள மாடப்பொன் மண்டபத் தேற்றியே 
சேய்க்கு நேரஎன் கையில்பொற் கங்கணம் 

திகழக் கட்டினை என்னைநின் செய்கையே.

152
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5448

தன்னைவிடத் தலைமைஒரு தகவினும்இங் கியலாத் 

தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே 
பொன்னடிஎன் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே 

புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான் 
என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன் 

இருவரும்ஒன் றாகிஇங்கே இருக்கின்றோம் இதுதான் 
நின்னருளே அறிந்ததெனில் செயுஞ்செய்கை அனைத்தும் 

நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே.

153
5449

கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் 

கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன் 
அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும் 

அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன் 
உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன் 

உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன் 
இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே 

இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.

154
5450

காற்றாலே புவியாலே ககனமத னாலே 

கனலாலே புனலாலே கதிராதி யாலே 
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே 

கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே 
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் 

மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே 
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் 

எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.

155
5451

எல்லா உலகமும் என்வசம் ஆயின 

எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின 
எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின 

எல்லா வித்தையும் என்வித்தை ஆயின 
எல்லா போகமும் என்போகம் ஆயின 

எல்லாஇன்பமும் என்இன்பம் ஆயின 
எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர் 

எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.

156
5452

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது 

தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர் 
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர் 

எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர் 
புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே 

புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த் 
தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே 

தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.

157
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5453

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா 

அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே 
நீதியில் கலந்து நிறைந்தது நானும் 

நித்தியன் ஆயினேன் உலகீர் 
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே 

சத்தியச் சுத்தசன் மார்க்க 
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை 

விளம்பினேன் வம்மினோ விரைந்தே.

158
5454

வாது பேசிய மனிதர் காள்ஒரு 

வார்த்தை கேண்மீன்கள் வந்துநும் 
போது போவதன் முன்ன ரேஅருட் 

பொதுவி லேநடம் போற்றுவீர் 
தீது பேசினீர் என்றி டாதுமைத் 

திருவு ளங்கொளும் காண்மினோ 
சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன் 

சுற்றம் என்பது பற்றியே.

159
5455

தூக்கமும் துயரும் அச்சமும் இடரும் 

தொலைந்தன தொலைந்தன எனைவிட் 
டேக்கமும் வினையும் மாயையும் இருளும் 

இரிந்தன ஒழிந்தன முழுதும் 
ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும் 

அழிவுறா உடம்பும்மெய் இன்ப 
ஊக்கமும் எனையே உற்றன உலகீர் 

உண்மைஇவ் வாசகம் உணர்மின்.

160
 கலிப்பா 
5456பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன் 
இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே 
அச்சம்எலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் 
நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.
161


திருச்சிற்றம்பலம் 
Back


 

126. சிற்சத்தி துதி 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

5457.

சோதிக் கொடியே ஆனந்த 

சொருபக் கொடியே சோதிஉருப் 
பாதிக் கொடியே சோதிவலப் 

பாகக் கொடியே(387) எனைஈன்ற 
ஆதிக் கொடியே உலகுகட்டி 

ஆளுங் கொடியே சன்மார்க்க 
நீதிக் கொடியே சிவகாம 

நிமலக் கொடியே அருளுகவே.

1
 (387). இடப்பாகக் கொடியே - பி. இரா. பதிப்பு. 
5458.

பொருணற் கொடியே மாற்றுயர்ந்த 

பொன்னங் கொடியே போதாந்த 
வருணக் கொடியே எல்லாஞ்செய் 

வல்லார் இடஞ்சேர் மணிக்கொடியே 
தருணக் கொடியே என்தன்னைக் 

தாங்கி ஓங்குந் தனிக்கொடியே 
கருணைக் கொடியே ஞானசிவ 

காமக் கொடியே அருளுகவே.

2
5459.

நீட்டுக் கொடியே சன்மார்க்க 

நீதிக் கொடியே சிவகீதப் 
பாட்டுக் கொடியே இறைவர்வலப் 

பாகக் கொடியே(388) பரநாத 
நாட்டுக் கொடியே எனைஈன்ற 

ஞானக் கொடியே என்னுறவாம் 
கூட்டுக் கொடியே சிவகாமக் 

கொடியே அடியேற் கருளுகவே.

3
 (388). இடப்பாகக் கொடியே - பி. இரா. பதிப்பு. 
5460.

மாலக் கொடியேன் குற்றமெலாம் 

மன்னித் தருளி மரணமெனும் 
சாலக் கொடியை ஒடித்தெனக்குட் 

சார்ந்து விளங்கும் தவக்கொடியே 
காலக் கருவைக் கடந்தொளிர்வான் 

கருவும் கடந்து வயங்குகின்ற 
கோலக் கொடியே சிவஞானக் 

கொடியே அடியேற் கருளுகவே.

4
5461.

நாடாக் கொடிய மனம்அடக்கி 

நல்ல மனத்தைக் கனிவித்துப் 
பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும் 

பதம்ஈந் தாண்ட பதிக்கொடியே 
தேடாக் கரும சித்திஎலாம் 

திகழத் தயவால் தெரிவித்த 
கோடாக் கொடியே சிவதருமக் 

கொடியே அடியேற் கருளுகவே.

5
5462.

மணங்கொள் கொடிப்பூ முதல்நான்கு 

வகைப்பூ வடிவுள் வயங்குகின்ற 
வணங்கொள் கொடியே ஐம்பூவும் 

மலிய மலர்ந்த வான்கொடியே 
கணங்கொள் யோக சித்திஎலாம் 

காட்டுங் கொடியே கலங்காத 
குணங்கொள் கொடியே சிவபோகக் 

கொடியே அடியேற் கருளுகவே.

6
5463.

புலங்கொள் கொடிய மனம்போன 

போக்கில் போகா தெனைமீட்டு 
நலங்கொள் கருணைச் சன்மார்க்க 

நாட்டில் விடுத்த நற்கொடியே 
வலங்கொள் ஞான சித்திஎலாம் 

வயங்க விளங்கு மணிமன்றில் 
குலங்கொள் கொடியே மெய்ஞ்ஞானக் 

கொடியே அடியேற் கருளுகவே.

7
5464.

வெறிக்கும் சமயக் குழியில்விழ 

விரைந்தேன் தன்னை விழாதவகை 
மறிக்கும் ஒருபே ரறிவளித்த 

வள்ளற் கொடியே மனக்கொடியைச் 
செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் 

தெய்வக் கொடியே சிவஞானம் 
குறிக்கும் கொடியே ஆனந்தக் 

கொடியே அடியேற் கருளுகவே.

8
5465.

கடுத்த விடர்வன் பயம்கவலை 

எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே 
அடுத்த கொடியே அருளமுதம் 

அளித்தென் தனைமெய் அருட்கரத்தால் 
எடுத்த கொடியே சித்திஎலாம் 

இந்தா மகனே என்றெனக்கே 
கொடுத்த கொடியே ஆனந்தக் 

கொடியே அடியேற் கருளுகவே.

9
5466.

ஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம் 

எய்த ஒளிதந் தியான்வனைந்த 
பாட்டைப் புனைந்து பரிசளித்த 

பரம ஞானப் பதிக்கொடியே 
தேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல் 

செலுத்தும் சுத்த சன்மார்க்கக் 
கோட்டைக் கொடியே ஆனந்தக் 

கொடியே அடியேற் கருளுகவே.

10


திருச்சிற்றம்பலம் 
Back


 

127. இன்பத் திறன் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

5467.

உலகுபுகழ் திருவமுதம் திருச்சிற்றம் பலத்தே 

உடையவர்இன் றுதவினர்நான் உண்டுகுறை தீர்ந்தேன் 
இலகுசிவ போகவடி வாகிமகிழ் கின்றேன் 

இளைப்பறியேன் தவிப்பறியேன் இடர்செய்பசி அறியேன் 
விலகல்இலாத் திருவனையீர் நீவிர்எலாம் பொசித்தே 

விரைந்துவம்மின் அம்பலத்தே விளங்குதிருக் கூத்தின் 
அலகறியாத் திறம்பாடி ஆடுதும்நாம் இதுவே 

அருள்அடையும் நெறிஎனவே தாகமம்ஆர்ப் பனவே.

1
5468

மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது 

வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே 
போதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட 

பொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே 
தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச் 

செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே 
பூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே 

புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே.

2
5469

அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும் 

அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி 
வளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே 

மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே 
தளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம் 

தந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா 
உளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே 

உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே.

3
5470

நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப 

நண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில் 
ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே 

இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ 
பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே 

பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன் 
கோடுதவ றாதுனைநான் பாடுதற்கிங் கேற்ற 

குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே.

4
5471

நண்புடையாய் என்னுடைய நாயகனே எனது 

நல்உறவே சிற்சபையில் நடம்புரியும் தலைவா 
எண்புடையா மறைமுடிக்கும் எட்டாநின் புகழை 

யாதறிவேன் பாடுகஎன் றெனக்கேவல் இட்டாய் 
பண்புடைநின் மெய்யன்பர் பாடியபே ரன்பில் 

பழுத்தபழம் பாட்டில்ஒரு பாட்டும்அறி யேனே 
தண்புடைநன் மொழித்திரளும்(389) சுவைப்பொருளும் அவைக்கே 

தக்கஇயல் இலக்கியமும் தந்தருள்வாய் எனக்கே.

5
 (389). மொழித்திறனும் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க. 
5472

பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே 

பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே 
கணிந்தமறை பலகோடி ஆகமம்பல் கோடி 

கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால் 
துணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள் 

சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென் 
றணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ 

அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே.

6
5473

விதிப்பவர்கள் பலகோடி திதிப்பவர்பல் கோடி 

மேலவர்கள் ஒருகோடி விரைந்துவிரைந் துனையே 
மதிப்பவர்கள் ஆகிஅவர் மதியாலே பலகால் 

மதித்துமதித் தவர்மதிபெண் மதியாகி அலந்தே 
துதிப்பதுவே நலம்எனக்கொண் டிற்றைவரை ஏற்ற 

சொற்பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால் 
குதிப்பொழியா மனச்சிறிய குரங்கொடுழல் கின்றேன் 

குறித்துரைப்பேன் என்னஉளம் கூசுகின்ற தரசே.

7
5474

ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய் 

ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய் 
வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய் 

மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய் 
அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி 

அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம் 
தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான 

சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே.

8
5475

வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின் 

வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும் 
போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாய் அதுவும் 

போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ 
நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேஎன் னுடைய 

நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே 
ஏக்கொழிந்தார் உளத்திருக்கும் இறையேஎன் குருவே 

எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே.

9
5476

என்இயலே யான்அறியேன் இவ்வுலகின் இயல்ஓர் 

எள்அளவும் தான்அறியேன் எல்லாமும் உடையோய் 
நின்இயலை அறிவேனோ அறிந்தவனே போல 

நிகழ்த்துகின்றேன் பிள்ளைஎன நிலைப்பெயர்பெற் றிருந்தேன் 
தன்இயலாம் தனிஞான சபைத்தலைமைப் பதியே 

சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம் 
பின்இயல்மா னிடப்பிள்ளை பேச்சினும்ஓர் பறவைப் 

பிறப்பின்உறும் கிளிப்பிள்ளைப் பேச்சுவக்கின் றதுவே.

10


திருச்சிற்றம்பலம் 
Back


 

128. உற்ற துரைத்தல் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

5477.

துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் 

தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும் 
கனிநாள் இதுவே என்றறிந்தேன் 

கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன் 
தனிநா யகனே கனகசபைத் 

தலைவா ஞான சபாபதியே 
இனிநான் இறையும் கலக்கமுறேன் 

இளைக்க மாட்டேன் எனக்கருளே.

1
5478

அருளும் பொருளும் யான்பெறவே 

அடுத்த தருணம் இதுஎன்றே 
தெருளும் படிநின் அருள்உணர்த்தத் 

தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன் 
மருளும் மனந்தான் என்னுடைய 

வசத்தே நின்று வயங்கியதால் 
இருளும் தொலைந்த தினிச்சிறிதும் 

இளைக்க மாட்டேன் எனக்கருளே.

2
5479

அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் 

அடுத்த தருணம் இதுஎன்றே 
இருளே தொலைந்த திடர்அனைத்தும் 

எனைவிட் டகன்றே ஒழிந்தனவால் 
தெருளே சிற்றம் பலத்தாடும் 

சிவமே எல்லாம் செய்யவல்ல 
பொருளே இனிநான் வீண்போது 

போக்க மாட்டேன் கண்டாயே.

3
5480

கண்டே களிக்கும் பின்பாட்டுக் 

காலை இதுஎன் றருள்உணர்த்தக் 
கொண்டே அறிந்து கொண்டேன்நல் 

குறிகள் பலவுங் கூடுகின்ற 
தொண்டே புரிவார்க் கருளும்அருட் 

சோதிக் கருணைப் பெருமனே 
உண்டேன் அமுதம் உண்கின்றேன் 

உண்பேன் துன்பை ஒழித்தேனே.

4
5481

ஒழித்தேன் அவலம் அச்சம்எலாம் 

ஓடத் துறந்தேன் உறுகண்எலாம் 
கழித்தேன் மரணக் களைப்பற்றேன் 

களித்தேன் பிறவிக் கடல்கடந்தேன் 
பழித்தேன் சிற்றம் பலம்என்னாப் 

பாட்டை மறந்தேன் பரம்பரத்தே 
விழித்தேன் கருத்தின் படிஎல்லாம் 

விளையா டுதற்கு விரைந்தேனே.

5
5482

விரைந்து விரைந்து படிகடந்தேன் 

மேற்பால் அமுதம் வியந்துண்டேன் 
கரைந்து கரைந்து மனம்உருகக் 

கண்ணீர் பெருகக் கருத்தலர்ந்தே 
வரைந்து ஞான மணம்பொங்க 

மணிமன் றரசைக் கண்டுகொண்டேன் 
திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் 

செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.

6
5483

தேனே கன்னல் செழும்பாகே 

என்ன மிகவும் தித்தித்தென் 
ஊனே புகுந்தென் உளத்தில்அமர்ந் 

துயிரில் கலந்த ஒருபொருளை 
வானே நிறைந்த பெருங்கருணை 

வாழ்வை மணிமன் றுடையானை 
நானே பாடிக் களிக்கின்றேன் 

நாட்டார் வாழ்த்த நானிலத்தே.

7
5484

நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் 

நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன் 
வலத்தே அழியா வரம்பெற்றேன் 

மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன் 
குலத்தே சமயக் குழியிடத்தே 
விழுந்திவ் வுலகம் குமையாதே 
நலத்தே சுத்த சன்மார்க்கம் 
நாட்டா நின்றேன் நாட்டகத்தே.

8
5485

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் 

திருந்த உலகர் அனைவரையும் 
சகத்தே திருத்திச் சன்மார்க்க 

சங்கத் தடைவித் திடஅவரும் 
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் 

திடுதற் கென்றே எனைஇந்த 
உகத்தே இறைவன் வருவிக்க 

உற்றேன் அருளைப் பெற்றேனே.

9
5486

பெற்றேன் என்றும் இறவாமை 

பேதம் தவிர்ந்தே இறைவன்எனை 
உற்றே கலந்தான் நானவனை 

உற்றே கலந்தேன் ஒன்றானேம் 
எற்றே அடியேன் செய்ததவம் 

யாரே புரிந்தார் இன்னமுதம் 
துற்றே உலகீர் நீவிர்எலாம் 

வாழ்க வாழ்க துனிஅற்றே.

10


திருச்சிற்றம்பலம் 
Back


 

129. சுத்த சிவநிலை 

நேரிசை வெண்பா

 

5487.கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என் 
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற் 
கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில் 
கலந்தான் கருணை கலந்து.
1
5488எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான் 
எல்லாம் செயவல்லான் எம்பெருமான் - எல்லாமாய் 
நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான் 
ஒன்றாகி நின்றான் உவந்து.
2
5489எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான் 
பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன் 
தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான் 
வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.
3
5490சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும் 
நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ 
தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம் 
சந்தோட மாய்இருமின் சார்ந்து.
4
5491அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே 
எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன் 
அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர் 
செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து.
5
5492அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே 
அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார் 
சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான் 
உடையான் உளத்தே உவந்து.
6
5493தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான் 
தானே எனக்குத் தருகின்றான் - தானேநான் 
ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை 
மேகத்திற் குண்டோ விளம்பு.
7
5494பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவுக் 
கோலும் கொடுத்தான் குணங்கொடுத்தான் - காலும் 
தலையும் அறியும் தரமும் கொடுத்தான் 
நிலையும் கொடுத்தான் நிறைந்து.
8
5495வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே 
செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும் 
ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம் 
தேன்நான் உண் டோ ங்கியது தேர்ந்து.
9
5496வஞ்சவினை எல்லாம் மடிந்தனவன் மாயைஇருள் 
அஞ்சிஎனை விட்டே அகன்றனவால் - எஞ்சலிலா 
இன்பமெலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால் 
துன்பமெலாம் போன தொலைந்து.
10
5497அம்மை திரோதை அகன்றாள் எனைவிரும்பி 
அம்மையருட் சத்தி அடைந்தனளே - இம்மையிலே 
மாமாயை நீங்கினள்பொன் வண்ணவடி வுற்றதென்றும் 
சாமா றிலைஎனக்குத் தான்.
11
5498நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன் 
தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் - ஊனே 
புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில் 
புகுந்தான் கருணை புரிந்து.
12
5499ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு 
நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச் 
சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி 
பத்திஎலாம் பெற்ற பலன்.
13
5500தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே 
ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்கமிகத் 
தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க 
வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.
14
5501வாட்டமெலாம் தீர்த்தான் மகிழ்வளித்தான் மெய்ஞ்ஞான 
நாட்டமெலாம் தந்தான் நலங்கொடுத்தான் - ஆட்டமெலாம் 
ஆடுகநீ என்றான்தன் ஆனந்த வார்கழலைப் 
பாடுகநீ என்றான் பரன்.
15
5502தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான் 
ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர் 
செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன் 
எய்தற் கரியசுகம் ஏய்ந்து.
16
5503சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார 
நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர் 
ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும் 
தானவிளை யாட்டியற்றத் தான்.
17
5504நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி 
நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன் 
நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம் 
ஊன்நாடி நில்லா உழி.
18
5505ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குரைக்கின்ற 
காரணமும் காரியமும் காட்டுவித்தான் - தாரணியில் 
கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத் 
துண்டேன் அமுதம் உவந்து.
19
5506துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ 
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம் 
நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார் 
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.
20
5507பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே 
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத் 
தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான் 
கொல்லா நெறிஅருளைக் கொண்டு.
21
5508சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப 
நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற 
பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம் 
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
22
5509சிந்தா குலந்தவிர்த்துச் சிற்றம் பலப்பெருமான் 
வந்தான் எனைத்தான் வலிந்தழைத்தே - ஐந்தொழிலும் 
நீயேசெய் என்றெனக்கே நேர்ந்தளித்தான் என்னுடைய 
தாயே அனையான் தனித்து.
23
5510கூகா எனஅடுத்தோர் கூடி அழாதவண்ணம் 
சாகா வரம்எனக்கே தந்திட்டான் - ஏகாஅன் 
ஏகா எனமறைகள் ஏத்துஞ்சிற் றம்பலத்தான் 
மாகா தலனா மகிழ்ந்து.
24
5511நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமதே நான்உலகில் 
ஆடுகின்ற தெந்தைஅருள் ஆட்டமதே - பாடுகின்ற 
பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே 
நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு.
25
5512சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள் 
சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே - நித்தியம்என் 
றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும் 
நண்ணுமின்பத் தேன்என்று நான்.
26
5513நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்அருளால் 
நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே 
அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன் 
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.
27
5514எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண 
இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும் 
சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே 
என்மார்க்கம் காண்பேன் இனி.
28
5515சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி 
நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள் 
சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே 
உற்றிங் கறிந்தேன் உவந்து.
29
5516வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர் 
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச் 
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை 
என்ன பயனோ இவை.
30
5517சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும் 
வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத் 
தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை 
நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.
31
5518பொய்உரைஎன் றெண்ணுதிரேல் போமின் புறக்கடையில் 
மெய்யுரைஎன் றெண்ணுதிரேல் மேவுமினோ - ஐயனருள் 
சித்திஎலாம் வல்ல திருக்கூத் துலவாமல் 
இத்தினந்தொட் டாடுகிற்பான் இங்கு.
32
5519வான்வந்த தேவர்களும் மால்அயனும் மற்றவரும் 
தான்வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் - தேன்வந்த 
மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான் 
இங்குநடஞ் செய்வான் இனி.
33
5520சத்திஎலாம் கொண்டதனித் தந்தை நடராயன் 
சித்திஎலாம் வல்லான் திருவாளன் - நித்தியன்தான் 
ஊழிபல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே 
வாழிநடஞ் செய்வான் மகிழ்ந்து.
34
5521இன்று தொடங்கியிங்கே எம்பெருமான் எந்நாளும் 
நன்று துலங்க நடம்புரிவான் - என்றுமென்சொல் 
சத்தியம்என் றெண்ணிச் சகத்தீர் அடைமின்கள் 
நித்தியம்பெற் றுய்யலாம் நீர்.
35
5522என்உடலும் என்பொருளும் என்உயிரும் தான்கொண்டான் 
தன்உடலும் தன்பொருளும் தன்உயிரும் - என்னிடத்தே 
தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன் 
வந்தான்வந் தான்உள் மகிழ்ந்து.
36
5523செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங் 
கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம் 
அருட்பெருஞ் சோதி அதனால் முடியும் 
தெருட்பெருஞ் சத்தியம்ஈ தே.
37
5524இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகஎனில் 
எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் - செவ்வுலகில் 
சிற்றம் பலத்தான் திருவருள்பெற் றார்நோக்கம் 
உற்றவரை உற்றவர்கள் உற்று.
38
5525யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை 
ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான் புரிந்த 
அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த 
கம்பலத்தால் ஆகும் களித்து.
39
5526என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக 
அன்னே அதிசயமென் றாடுகின்றார் - இன்னே 
திருவம் பலத்தான் திருநோக்கம் பெற்றார்க் 
குருவம் பலத்தேஎன் றுன்.
40
5527ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை 
நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர் 
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங் 
கென்மார்க்க மும்ஒன்றா மே.
41
5528மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது 
தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச் 
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம்நீர் 
நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள்.
42
5529இந்நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற 
நன்னாள்என் வார்த்தைகளை நம்புமினோ - இந்நாள் 
அருட்பெருஞ் சோதி அடைகின்ற நாள்மெய் 
அருட்பெருஞ் சத்தியம்ஈ தாம்.
43
5530ஏமாந் திருக்கும் எமரங்காள் இவ்வுலகில் 
சாமாந்தர் ஆகாத் தரம்பெறவே - காமாந்த 
காரத்தை விட்டுக் கருதுமினோ இத்தருணம் 
நீரத்தைச் சேர்வீர் நிஜம்.
44
5531வீணே பராக்கில் விடாதீர் உமதுளத்தை 
நாணே உடைய நமரங்காள் - ஊணாகத் 
தெள்ளமுதம் இன்றெனக்குச் சேர்த்தளித்தான் சித்தாட 
உள்ளியநாள் ஈதறிமின் உற்று.
45
5532போற்றி உரைக்கின்றேன் பொய்என் றிகழாதீர் 
நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள் - ஆற்றலருள் 
அப்பன்வரு கின்றான் அருள்விளையாட் டாடுதற்கென் 
றிப்புவியில் இத்தருணம் இங்கு.
46
5533ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற 
நாள்எதுவோ என்று நலியாதீர் - நீள 
நினையாதீர் சத்தியம்நான் நேர்ந்துரைத்தேன் இந்நாள் 
அனையான் வருகின்றான் ஆய்ந்து.
47


திருச்சிற்றம்பலம் 
Back


 

130. உலகப்பேறு 

கலிவிருத்தம்

 

5534.இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின 
துன்பால் இறந்தவர் துன்பற்றுத் தோன்றினர் 
அன்பால் அடியவர் ஆடினர் பாடினர் 
என்பால் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
1
5535பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன 
தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன 
ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத் 
தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.
2
5536மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர் 
வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது 
பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர் 
நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
3
5537முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன 
மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது 
பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின 
என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.
4
5538இடம்பெற்ற உயிர்எலாம் விடம்அற்று வாழ்ந்தன 
மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார் 
திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினந்தினம் 
நடம்பெற்ற அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
5
5539அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக் 
கொண்டன ஓங்கின குறைஎலாம் தீர்ந்தன 
பண்டங்கள் பலித்தன பரிந்தென துள்ளத்தில் 
எண்டகும் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
6
5540குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன 
மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின 
பிணங்கள் எலாம்உயிர் பெற்றெழுந் தோங்கின 
இணங்க அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
7
5541பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர் 
முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர் 
சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர் 
சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே.
8
5542ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை 
ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன் 
ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள் 
வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே.
9
5543இருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது 
மருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின 
தெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத் 
தருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே.
10


திருச்சிற்றம்பலம் 
Back


 

131. அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல் 

கலிநிலைத் துறை

 

5544.அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும் 
பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர் 
மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம் 
தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே.
1
5545வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே 
ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர் 
வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை 
ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர்.
2
5546ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும் 
சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர் 
நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும் 
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.
3
5547நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும் 
பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின் 
வேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க 
வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே.
4
5548துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும் 
பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும் 
அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின் 
உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்.
5
5549ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும் 
பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர் 
மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும் 
யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.
6
5550வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும் 
ஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும் 
ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும் 
ஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே.
7
5551சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும் 
அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத் 
தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும் 
அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.(390)
8
 (390). அமைய அம்பலத்தாடும் பொற்பதமும் என்றறிமின் - முதற்பதிப்பு, 
பொ. சு., பி. இரா.
 
5552ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல் 
வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம் 
தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி 
வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.
9
5553கலைஇ ருந்ததோர் திருச்சிற்றம் பலத்திலே கருணை 
நிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம் 
மலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக் 
கொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே.
10
5554கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை 
நிதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம் 
பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல் 
விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே.
11
5555அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப் 
பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர் 
மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால் 
தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின்.
12

திருச்சிற்றம்பலம் 
Back


 

132. உலகர்க்கு உய்வகை கூறல் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

5556.

கட்டோ டே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் 

கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர் 
பட்டோ டே பணியோடே திரிகின்றீர் தெருவில் 

பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர் 
கொட்டோ டே முழக்கோடே கோலங்காண் கின்றீர் 

குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர் 
எட்டோ டே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர் 

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

1
5557

ஆறாமல் அவியாமல் அடைந்தகோ பத்தீர் 

அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர் 
மாறாமல் மனஞ்சென்ற வழிசென்று திகைப்பீர் 

வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே 
நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு 

நரைதிரை மரணத்துக் கென்செயக் கடவீர் 
ஏறாமல் வீணிலே இறங்குகின் றீரே 
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

2
5558

ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி 

ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர் 
மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர் 

மறவாமை நினையாமை வகைசிறி தறியீர் 
காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர் 

கண்மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க் 
கீயாமை ஒன்றையே இன்துணை என்பீர் 

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

3
5559

சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர் 

தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர் 
மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர் 

வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர் 
காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர் 

கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா 
தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர் 

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

4
5560

அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர் 

அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர் 
பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப் 

பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர் 
பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர் 

பின்படு தீமையின் முன்படு கின்றீர் 
இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர் 

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

5
5561

வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர் 

வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர் 
பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப் 

பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர் 
பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர் 

பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் 
எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர் 

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

6
5562

வன்சொல்லின் அல்லது வாய்திறப் பறியீர் 

வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர் 
முன்சொல்லும் ஆறொன்று பின்சொல்வ தொன்றாய் 

மூட்டுகின் றீர்வினை மூட்டையைக் கட்டி 
மன்சொல்லும் மார்க்கத்தை மறந்துதுன் மார்க்க 

வழிநடக் கின்றீர்அம் மரணத்தீர்ப் புக்கே 
என்சொல்ல இருக்கின்றீர் பின்சொல்வ தறியீர் 

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

7
5563

துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே 

தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர் 
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர் 

சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர் 
பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர் 

பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர் 
என்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை 

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

8
5564

பொய்கட்டிக் கொண்டுநீர் வாழ்கின்றீர் இங்கே 

புலைகட்டிக் கொண்டஇப் பொய்யுடல் வீழ்ந்தால் 
செய்கட்டி வாழ்கின்ற செருக்கற்று நரகில் 

சிறுபுழு ஆகித் திகைத்திடல் அறியீர் 
கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே 

கைகொட்டிச் சிரிக்கின்றீர் கருணைஒன் றில்லீர் 
எய்கட்டி இடைமொய்க்கும் ஈயினும் சிறியீர் 

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

9
5565

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே 

பகராத வன்மொழி பகருகின் றீரே 
நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே 

நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே 
கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே 

கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே 
எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம் 

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

10


திருச்சிற்றம்பலம் 
Back


 

133. புனித குலம் பெறுமாறு புகலல் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

5566.

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே 

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே 
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் 

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே 
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த 

நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே 
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய 

மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.

1
5567

காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக் 

கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர் 
கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே 

குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே 
பாடுபட்டீர்(391) பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர் 

பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம் 
ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர் 

எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.

2
 (391). பாடுபட்டுப் - ச. மு. க. பதிப்பு. 
5568

ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர் 

அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர் 
கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ 

கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே 
வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர் 

வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின் 
சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற 

தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.

3
5569

பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர் 

புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர் 
கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற 

களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர் 
ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால் 

அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர் 
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம் 

மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே.

4
5570

எய்வகைசார்392 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள் 

எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று 
கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர் 

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர் 
ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர் 

அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர் 
உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம் 

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.

5
 (392). எவ்வகைசார் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு. 
5571

உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர் 

உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர் 
மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை 

வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர் 
இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே 

எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே 
நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம் 

நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.

6
5572

நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே 

நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர் 
வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும் 

வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர் 
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே 

புத்தமுதம் உண்டோ ங்கும் புனிதகுலம் பெறவே 
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம் 

உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.

7
5573

கனமுடையேம் கட்டுடையேம் என்றுநினைத் திங்கே 

களித்திறுமாந் திருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர் 
சினமுடைய கூற்றுவரும் செய்திஅறி யீரோ 

செத்தநும தினத்தாரைச் சிறிதும்நினை யீரோ 
தினகரன்போல் சாகாத தேகமுடை யவரே 

திருவுடையார் எனஅறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே 
மனமகிழ்ந்து கேட்கின்ற வரமெல்லாம் எனக்கே 

வழங்குதற்கென் தனித்தந்தை வருதருணம் இதுவே.393

8
 (393). முதற்பதிப்பிலும், பொ. சு. பதிப்பிலும் 'கனமுடையேம்' 
என்பது ஒன்பதாம் பாடலாகவும் 'வையகத்தீர்' என்பது 
எட்டாம் பாடலாகவும் உள்ளன.
 
5574

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது 

வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர் 
மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த 

வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே 
மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது 

மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே 
செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே 

சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.

9
5575

கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும் 

கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர் 
மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ 

மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே 
திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும் 

சித்திபுரம் எனஓங்கும் உத்தரசிற் சபையில் 
சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது 

தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.

10


திருச்சிற்றம்பலம் 
Back


 

134. மரணமிலாப் பெருவாழ்வு 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

5576.

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே 

நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு 
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான 

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர் 

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் 

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.

1
5577

புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான் 

புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர் 
உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் 

உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே 
மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே 

மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே 
தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே 

சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.

2
5578

பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர் 

பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே 
துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே 

துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த் 
தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க 

சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று 
கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே 

காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் ஆமே.

3
5579

கண்டதெலாம் அனித்தியமே கேட்டதெலாம் பழுதே 

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே 
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே 

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே 
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க 

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே 
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின் 

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.

4
5580

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம் 

எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம் 
அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம் 

அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப் 
பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான 

பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே 
வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின் 

மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.

5
5581

தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச் 

சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை 
ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய் 

அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர் 
ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த 

ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை 
நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர் 

நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே.

6
5582

நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ 

நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ 
சார்புறவே அருளமுதம் தந்தெனைமேல் ஏற்றித் 

தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான் 
சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச் 

சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த 
ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின் 

உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.

7
5583

விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே 

மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர் 
திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும் 

செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய 
வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே 

வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர் 
கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக் 

கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.

8
5584

களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம் 

களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம் 
தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே 

செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர் 
ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன் 

ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன் 
அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே 

ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.

9
5585

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான் 

அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன் 
ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான் 

எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான் 
தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத் 

திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே 
மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர் 

முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.

10
5586

அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர் 

அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம் 
கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே 

காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம் 
இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர் 

யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன் 
உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா 

ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.

11
5587

திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச் 

சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு 
வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து 

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல் 
பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப் 

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே 
கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர் 

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.

12
5588

உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர் 

உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர் 
எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான் 

என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர் 
தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில் 

சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக் 
கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும் 

கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.

13
5589

தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த் 

தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை 
வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே 

வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத் 
தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச் 

சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர் 
ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும் 

உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே.

14
5590

சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்தம் எல்லாம் 

தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய் 
நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும் 

நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை 
அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன் 

ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச் 
சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர் 

சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.

15
5591

நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை 

நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை 
எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை 

என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை 
சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும் 

செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர் 
முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண 

முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே.

16
5592

முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும் 

முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே 
இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும் 

எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர் 
துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம் 

தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர் 
பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப் 

படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.

17
5593

சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர் 

சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே 
இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ 

தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ 
அகமறிந்தீர்(394) அனகமறிந் தழியாத ஞான 

அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே 
முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ 

முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.

18
 (394). அகமறியீர் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. 
5594

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை 

நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே 
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான் 

வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே 
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர் 

தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும் 
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் 

யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.

19
5595

குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின் 

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர் 
வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது 

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர் 
பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில் 

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின் 
செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின் 

சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.

20
5596

சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத் 

திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம் 
ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் 

உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே 
வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ 

மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா 
சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர் 

தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.

21
5597

செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில் 

திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை 
மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம் 

மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான் 
வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன் 

மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன் 
பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே 

புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.

22
5598

பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான் 

புகலுவதென் நாடொறுநும் புந்தியிற்கண் டதுவே 
மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே 

மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே 
பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில் 

பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே 
அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை 

அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.

23
5599

மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் 

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ 
சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே 

சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை 
எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும் 

இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர் 
பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம் 

பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.

24
5600

இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர் 

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர் 
மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு 

மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர் 
சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம் 

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே 
பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு 

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.

25
5601

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே 

உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர் 
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர் 

கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ 
சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது 

தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன் 
இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின் 

என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.

26
5602

சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத் 

தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை 
நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க 

நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப் 
புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான 

பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை 
அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய் 

அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.

27
5603

சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே 

சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை 
நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம் 

நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி 
ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை 

எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை 
ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின் 

உள்ளம்எலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.

28


திருச்சிற்றம்பலம் 
Back


 

135. சமாதி வற்புறுத்தல் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

5604.

ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற 

தருணம்இதே அறிமின் என்றே 
வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என்

கின்றார்இம் மனிதர்அந்தோ 
தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென் 

உளங்கலந்த தலைவா இங்கே 
நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார் 

இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே.

1
5605

இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற 

தருணம்இதே என்று வாய்மை 
அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள்என் 

வார்த்தைகள்என் றறைகின் றாரால் 
மறந்தசிறி யேன்உரைக்க வல்லேனோ 

எல்லாஞ்செய் வல்லோய் உன்றன் 
சிறந்ததிரு வார்த்தைஎனத் தெரிந்திலர்இம் 

மனிதர்மதித் திறமை என்னே.

2
5606

சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப் 

படுவாரைத் துணிந்து கொல்லக் 
கூற்றாசைப் படும்எனநான் கூறுகின்ற 

துண்மையினில் கொண்டு நீவீர் 
நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார் 

போலும்அன்றி நினைத்த வாங்கே 
பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா 

பதிப்புகழைப் பேசு வீரே.

3
5607

தொண்டாளப் பணந்தேடுந் துறையாள 

உலகாளச் சூழ்ந்த காமப் 
பெண்டாளத் திரிகின்ற பேய்மனத்தீர் 

நும்முயிரைப் பிடிக்க நாளைச் 
சண்டாளக் கூற்றுவரில் என்புகல்வீர் 

ஞானசபைத் தலைவன் உம்மைக் 
கொண்டாளக் கருதுமினோ ஆண்டபின்னர் 

இவ்வுலகில் குலாவு வீரே.

4
5608

பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த் 

திடுகின்றீர் பேய ரேநீர் 
இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம் 

மதித்தீரோ இரவில் தூங்கி 
மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால் 

நும்மனத்தை வயிரம் ஆன 
சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர் 

ஏன்பிறந்து திரிகின் றீரே.

5
5609

அணங்கெழுபே ரோசையொடும் பறையோசை 

பொங்கக்கோ ரணிகொண் டந்தோ 
பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர் 

இனிச்சாகும் பிணங்க ளேநீர் 
கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே 

என்னபயன் கண்டீர் சுட்டே 
எணங்கெழுசாம் பலைக்கண்டீர் அதுபுன்செய் 

எருவுக்கும் இயலா தன்றே.

6
5610

குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட் 

டால்அதுதான் கொலையாம் என்றே 
வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச் 

சொல்கின்றேன் வார்த்தை கேட்டும் 
பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச் 

சம்மதிக்கும் பேய ரேநீர் 
எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற் 

கஞ்சுவரே இழுதை யீரே.

7
5611

கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற 

பேயுலகீர் கலைசோர்ந் தாரைப் 
பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச் 

சுடுகின்றீர் புதைக்க நேரீர் 
சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு 

துடியாதென் சொல்லீர் நும்மைத் 
தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும் 

கதியிலைமேல் சூழ்வீர் அன்றே.

8
5612

பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப 

ராதம்எனப் பகர்கின் றேன்நீர் 
சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள் 

பற்பலரும் சித்த சாமி 
உரனளிக்க எழுகின்ற திருநாள்வந் 

தடுத்தனஈ துணர்ந்து நல்லோர் 
வரனளிக்கப் புதைத்தநிலை காணீரோ 

கண்கெட்ட மாட்டி னீரே.

9
5613

புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக் 

கருங்கடலில் போக விட்டீர் 
கொலைத்தொழிலில் கொடியீர்நீர் செத்தாரைச் 

சுடுகின்ற கொடுமை நோக்கிக் 
கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக் 

கலக்கம்எலாம் கடவுள்நீக்கித் 
தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப் 

புரிகுவதித் தருணம் தானே.

10


திருச்சிற்றம்பலம் 
Back


 

136. சன்மார்க்க உலகின் ஒருமைநிலை

நேரிசை வெண்பா

 

5614.சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொளருள் 
சத்திவிழா நீடித் தழைத்தோங்க - எத்திசையில் 
உள்ளவரும் வந்தே உவகை உறுகமதத் 
துள்ளல் ஒழிக தொலைந்து.
1
5615ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம் 
நன்றே ஒருமையுற்று நண்ணியே - மன்றே 
நடம்புரியும் பாத நளினமலர்க் குள்ளம் 
இடம்புரிக வாழ்க இசைந்து.
2
5616சிற்சபையும் பொற்சபையும் சித்தி விளக்கத்தால் 
நற்சகமேல் நீடூழி நண்ணிடுக - சற்சபையோர் 
போற்றிவரம் பெற்றுவகை பூரிக்க வாழ்ந்திடுக 
நாற்றிசையும் வாழ்க நயந்து.
3
5617அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற 
விச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம் 
ஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக 
நீதிக் கொடிவிளங்க நீண்டு.
4
5618கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக 
அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த 
நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத் 
தெல்லோரும் வாழ்க இசைந்து.
5
5619புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக 
நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில் 
செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம் 
ஒத்தாராய் வாழ்க உவந்து.
6
5620செத்தார் எழுக சிவமே பொருள்என்றே 
இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ 
சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத் 
துன்மார்க்கம் போக தொலைந்து.
7
5621செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச் 
சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ 
சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும் 
என்மார்க்கம் நின்மார்க்க மே.
8
5622நல்லாரும் என்னை நயந்தாரும் நன்மைசொல 
வல்லாரும் என்னை வளர்த்தாரும் - எல்லாரும் 
நீஎன் றிருக்கின்றேன் நின்மலனே நீபெற்ற 
சேய்என் றிருக்கின்றேன் சேர்ந்து.
9
5623ஆடஎடுத் தான்என் றறைகின்றீர் என்தலைமேல் 
சூடஎடுத் தான்என்று சொல்கின்றேன் - நாடறிய 
இவ்வழக்கை யார்பால் இசைத்தறுத்துக் கொள்கிற்பாம் 
கவ்வைஅற்ற அம்பலத்தான் கால்.
10
5624நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் 
சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின் 
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில் 
யார்உளர்நீ சற்றே அறை.
11


திருச்சிற்றம்பலம் 
Back


 

137. திருவடிப் பெருமை 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

5625.

திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார் 

தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார் 
உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய் 

ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம் 
பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே 

பேசுவதார் மறைகள்எலாம் கூசுகின்ற என்றால் 
துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன் 

சொல்அளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.

1
5626

அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய் 

ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன் 
தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த 

சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார் 
மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம் 

மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ 
இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன் 

என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.

2
5627

செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ 

செழுஞ்சோதித் தனிப்பிழம்போ செவ்வண்ணத் திரளோ 
அம்பதுமத் திருவிளங்கும் அகலத்தான் பிரமன் 

அரன்முதலோர் ஐவர்களும் அப்பால்நின் றோரும் 
எம்பரம்என் றெம்பெருமான் புறவண்ணம் எதுவோ 

என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார் 
தம்பரம்என் றென்னைஅன்று மணம்புரிந்தார் கனக 

சபைநாதர் அவர்பெருமை சாற்றுவதென் தோழி.

3
5628

தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ 

சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோ ரோ 
மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ 

முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர் 
யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்ல 

அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் 
ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார் 

அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி.

4
5629

பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார் 

பணம்பரித்த395 வரையர்என்னை மணம்புரிந்த கணவர் 
விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான 

விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த 
மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார் 

மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல் 
நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால் 

நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி.

5
 (395). பணம்புரிந்த - பி. இரா. பதிப்பு. 
5630

வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே 

விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து 
தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத் 

தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல் 
இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை 

இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான் 
பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம் 

புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி.

6
5631

திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம் 

திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும் 
அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய் 

அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகி 
உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்தப் பாற்சித் 

துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல் 
பெருச்சித்தெல் லாம்வல்ல நடராஜப் பெருமான் 

பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி.

7
5632

நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி 

நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத 
போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப் 

புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல் 
பாதவரை வெண்ணீறு படிந்திலங்கச் சோதிப் 

படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும் 
போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால் 

புகலவச மாமோநீ புகலாய்என் தோழி.

8
5633

பரைஇருந்த வெளிமுழுதும் பரவிஅப்பால் பரையின் 

பரமாகி அப்பரத்தில் பரம்பரமாய் விளங்கித் 
திரைகடந்த திருவெளியில் ஆனந்தா தீதத் 

திருநடஞ்செய் யாதுசெயும் திருவடிகள் என்றே 
புரைகடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால் 

புண்ணியர்என் தனித்தலைவர் புனிதநட ராஜர் 
வரைகடந்த திருத்தோள்மேல் திருநீற்றர் அவர்தம் 

வாய்மைசொல வல்லேனோ அல்லேன்காண் தோழி.

9
5634

ஏய்ப்பந்தி வண்ணர்என்றும் படிகவண்ணர் என்றும் 

இணையில்ஒளி உருவர்என்றும் இயல்அருவர் என்றும் 
வாய்ப்பந்தல் இடுதலன்றி உண்மைசொல வல்லார் 

மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே 
காய்ப்பந்த மரம்என்று கண்டுசொல்வ தன்றிக் 

காய்த்தவண்ணம் பூத்தவண்ணம் கண்டுகொள மாட்டாத் 
தாய்ப்பந்த உணர்வுடையேன் யானோசிற் சபையில் 

தனிமுதல்வர் திருவண்ணம் சாற்றவல்லேன் தோழி.

10
5635

கலைக்கடலைக் கடந்தமுனிக் கணங்களும்மும் மலமாம் 

கரிசகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டா 
தலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் மன்றுள் 

ஆடுகின்றார் என்பதலால் அவர்வண்ணம் அதுவும் 
நிலைக்குரிய திருச்சபையின் வண்ணமும்அச் சபைக்கண் 

நிருத்தத்தின் வண்ணமும்இந் நீர்மையன என்றே 
மலைக்குநிறை கண்டாலும் காணவொணா தம்ம 

வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும்பயன்என் தோழி.

11
5636

சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும் 

திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும் 
பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில் 

படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ 
இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர் 

இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால் 
நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர் 

நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி.

12
5637

சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல் 

துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம் 
இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம் 

இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில் 
நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய் 

நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர் 
சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து 

செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி.

13
5638

காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார் 

காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால் 
வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால் 

விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார் 
தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும் 

துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி 
மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான் 

வடிவுரைக்க வல்லவர்ஆர் வழுத்தாய்என் தோழி.

14
5639

நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம் 

நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம் 
ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம் 

இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே 
ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம் 

அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம் 
ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின் 

உண்மைசொல வல்லவர்ஆர் உரையாய்என் தோழி.

15
5640

தோன்றுசத்தி பலகோடி அளவுசொல ஒண்ணாத் 

தோற்றுசத்தி பலகோடித் தொகைஉரைக்க முடியா 
சான்றுலகம் தோற்றுவிக்கும் சத்திபல கோடி 

தனைவிளம்பல் ஆகாஅச் சத்திகளைக் கூட்டி 
ஏன்றவகை விடுக்கின்ற சத்திபல கோடி 

இத்தனைக்கும் அதிகாரி என்கணவர் என்றால் 
ஆன்றமணி மன்றில்இன்ப வடிவாகி நடிக்கும் 

அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.

16
5641

தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும் 

சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று 
ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி 

அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று 
ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக் 

கிறைஒன்றாம் இத்தனைக்கும் என்கணவர் அல்லால் 
ஆற்றமற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில் 

ஆடும்அவர் பெருந்தகைமை யார்உரைப்பார் தோழி.

17
5642

ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு 

ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றிலஇங் கிவற்றை 
இருமையினும் மும்மைமுதல் எழுமையினும் கூட்டி 

இலங்கியசிற் சத்திநடு இரண்டொன்றென் னாத 
பெருமைபெற்று விளங்கஅதின் நடுஅருள்நின் றிலங்கப் 

பெரியஅருள் நடுநின்று துரியநடம் புரியும் 
அருமைஎவர் கண்டுகொள்வர் அவர்பெருமை அவரே 

அறியாரே என்னடிநீ அறைந்தவண்ணம் தோழி.

18
5643

படைத்தபடைப் பொன்றதிலே பரம்அதிற்கா ரணமாம் 

பகுதிஅதில் பகுக்கின்ற பணிகள்பல பலவாம் 
புடைத்தஅவை புகுந்துலவும் புரம்ஒன்றப் புரத்தில் 

பூபதிஒன் றவர்க்குணர்த்தும் பூரணசித் தொன்று 
மிடைத்தஇவை எல்லாஞ்சிற் றம்பலத்தே நடிக்கும் 

மென்பதத்தோர் சிற்றிடத்து விளங்கிநிலை பெறவே 
அடைத்துமற்றிங் கிவைக்கெல்லாம் அப்புறத்தே நிற்பார் 

அவர்பெருமை எவர்அறிவார் அறியாய்நீ தோழி.

19
5644

சிருட்டிஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது 

சினைத்தகர ணக்கருஅச் சினைக்கருவில் சிறிது 
வெருட்டியமான் அம்மானில் சிறிதுமதி மதியின் 

மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர்ஒன் றதனில் 
தெருட்டுகின்ற சத்திமிகச் சிறிததனில் கோடித் 

திறத்தினில்ஓர் சிறிதாகும் திருச்சிற்றம் பலத்தே 
அருட்டிறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர் 

அருட்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.

20
5645

நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர் 

நாரணர்கள் மற்றவரின்396 நாடின்மிகப் பெரியர் 
வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர் 

மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர் 
மீன்முகத்த விந்ததனில் பெரிததனில் நாதம் 

மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின் 
ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய் 

ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி.

21
 (396). மற்றவர்கள் - ச. மு. க. பதிப்பு. 
5646

மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில் 

வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி 
எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம் 

எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான் 
விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை 

விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம் 
அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால் 

அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி.

22
5647

மண்ணாதி ஐம்பூத வகைஇரண்டின் ஒன்று 

வடிவுவண்ணம் இயற்கைஒரு வாலணுச்சத் தியலாய்க் 
கண்ணென்னும் உணர்ச்சிசொலாக் காட்சியவாய்க் நிற்பக் 

கருதும்அவைக் குட்புறங்கீழ் மேற்பக்கம் நடுவில் 
நண்ணிஒரு மூன்றைந்து நாலொடுமூன் றெட்டாய் 

நவமாகி மூலத்தின் நவின்றசத்திக் கெல்லாம் 
அண்ணுறும்ஓர் ஆதார சத்திகொடுத் தாடும் 

அடிப்பெருமை யார்அறிவார் அவர்அறிவார் தோழி.

23
5648

மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய் 

மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய் 
எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ் 

வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி(397) நடுவே 
பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும் 

பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல் 
நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான் 

நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.

24
 (397). இந்தவெளி - பி. இரா. பதிப்பு. 
5649

வண்கலப்பில் சந்திசெயும் சத்தியுளே ஒருமை 

வயங்கொளிமா சத்திஅத னுள்ஒருகா ரணமாம் 
விண்கரண சத்திஅத னுள்தலைமை யாக 

விளங்குகுருச் சத்திஅதின் மெய்ம்மைவடி வான 
எண்குணமா சத்தி இந்தச் சத்திதனக் குள்ளே 

இறையாகி அதுஅதுவாய் இலங்கிநடம் புரியும் 
தண்கருணைத் திருவடியின் பெருமைஅறி வரிதேல் 

சாமிதிரு மேனியின்சீர் சாற்றுவதென் தோழி.

25
5650

பெரியஎனப் புகல்கின்ற பூதவகை எல்லாம் 

பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை 
உரியபெரும் பகுதியும்அப் பகுதிமுதல் குடிலை 

உளங்கொள்பரை முதல்சத்தி யோகமெலாம் பொதுவில் 
துரியநடம் புரிகின்ற சோதிமலர்த் தாளில் 

தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால் 
அரியபெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர் 

அருட்பெருமை என்அளவோ அறியாய் என்தோழி.

26
5651

பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே 

பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை 
தன்வண்ணப் பசுமையொடு கருமைகலப் பாகும் 

தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய் 
மன்வண்ணத் தொளிஉருவம் உயிர்ப்பினொடு தோன்ற 

வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும் 
மின்வண்ணத் திருச்சபையில் ஆடுகின்ற பதத்தின் 

மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி.

27
5652

பொற்புடைய ஐங்கருவுக் காதார கரணம் 

புகன்றஅறு கோடிஅவைக் காறிலக்கம் அவற்றுக் 
கற்புறும்ஓர் அறுபதினா யிரம்அவற்றுக் கடையா 

றாயிரமாங் கவற்றுக்கோர் அறுநூறிங் கிவைக்கே 
விற்பொலியும் அறுபதுமற் றிவைக்காறிங் கிந்த 

வியன்கரண சத்திகளை விரித்துவிளக் குவதாய்ச் 
சிற்பரமாய் மணிமன்றில் திருநடனம் புரியும் 

திருவடியின் பெருமைஎவர் செப்புவர்காண் தோழி.

28
5653

ஏற்றமுறும் ஐங்கருவுக் கியல்பகுதிக் கரணம் 

எழுகோடி ஈங்கிவற்றுக் கேழ்இலக்கம் இவைக்கே 
தோற்றமுறும் எழுபதினா யிரமிவற்றுக் கெழுமை 

துன்னியநூ றிவற்றினுக்குச் சொல்லும் எழுபதுதான் 
ஆற்றலுறும் இவைதமக்கோர் ஏழாம்இக் கரணம் 

அனைத்தினையும் தனித்தனியே தோற்றிநிலை பொருத்திச் 
சாற்றரிய வடிவுவண்ணம் சுவைப்பயன்உண் டாக்கும் 

சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.

29
5654

விளங்கியஐங் கருச்சத்தி ஓர்அனந்தங் கருவில் 

விளைகின்ற சத்திகள்ஓர் அனந்தம்விளை வெல்லாம் 
வளம்பெறவே தருகின்ற சத்திகள்ஓர் அனந்தம் 

மாண்படையத் தருவிக்கும் சத்திகள்ஓர் அனந்தம் 
உளங்கொளநின் றதிட்டிக்கும் சத்திகள்ஓர் அனந்தம் 

ஓங்கியஇச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித் 
தளங்கொளஈண் டவ்வவற்றிற் குட்புறம்நின் றொளிரும் 

சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.

30
5655

காணுகின்ற ஐங்கருவின் வித்தின்இயல் பலவும் 

கருதுறும்அங் குரத்தின்இயல் பற்பலவும் அடியின் 
மாணுகின்ற இயல்கள்பல பலப்பலவும் நடுவில் 

மன்னும்இயல் பலபலவும் பலப்பலவும் முடியின் 
பூணும்இயல் அனந்தவகை புரிந்தபல பலவும் 

பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையுந்தான் ஆகி 
ஏணுகின்ற அவைகளுக்குட் பற்றாமல் நடிக்கும் 

எழிற்கருணைப் பதப்பெருமை இயம்புவதார் தோழி.

31
5656

மண்முதலாம் தத்துவத்தின் தன்மைபல கோடி 

வயங்குசத்திக் கூட்டத்தால் வந்தனஓர் அனந்தம் 
பண்ணுறும்அத் தன்மையுளே திண்மை(398) ஒருகோடி 

பலித்தசத்திக் கூட்டத்தால் பணித்தனஓர் அனந்தம் 
எண்ணுறும்இத் திண்மைகளும் இவற்றினது விகற்பம் 

எல்லாமும் தனித்தனிநின் றிலங்கநிலை புரிந்தே 
விண்ணென்னும் படிஅவற்றில் கலந்துகல வாது 

விளையாடும் அடிப்பெருமை விளம்புவதார் தோழி.

32
 (398). திண்மையுளே திண்மை - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு. 
தண்மையுளே திண்மை - பி. இரா. பதிப்பு. 
திண்மையுளே தண்மை - ச. மு. க. பதிப்பு
 
5657

விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ 

விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக் 
கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே 

கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும் 
பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப் 

பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம் 
நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும் 

நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி.

33
5658

வண்பூவில் வடிவுபல வண்ணங்கள் பலமேல் 

மதிக்கும்இயல் பலஒளியின் வாய்மைபல ஒளிக்குள் 
நண்பூறும் சத்திபல சத்திகளுள் வயங்கும் 

நாதங்கள் பலநாத நடுவணைஓர் கலையில் 
பண்பாய நடங்கள்பல பலபெயர்ப்பும் காட்டும் 

பதிகள்பல இவைக்கெல்லாம் பதியாகிப் பொதுவில் 
கண்பாய இவற்றினொடு கலந்துகல வாமல் 

காணுகின்ற திருவடிச்சீர் கழறுவதார் தோழி.

34
5659

ஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை 

உற்றனமற் றதுஅதுவும் பற்றுவன பற்றத் 
தாங்கியமா சத்திகளின் பெருங்கூட்டம் கலையாத் 

தன்மைபுரிந் தாங்காங்குத் தனித்தனிநின் றிலங்கித் 
தேங்கியபோ தவைகலையச் செய்கைபல புரிந்து 

திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி(399) வெளியில் 
பாங்குறநேர் விளங்குகின்ற திருவடியின் பெருமை 

பகுத்துரைக்க வல்லவர்ஆர் பகராய்என் தோழி.

35
 (399). திருவில்ஒளி - பி. இரா. திருவிலொளி என்றும் 
பாடம் - ச. மு. க. அடிக்குறிப்பு.
 
5660

விரிந்திடும்ஐங் கருவினிலே விடயசத்தி அனந்த 

விதமுகங்கொண் டிலகஅவை விகிதவிகற் பாகிப் 
பிரிந்திடுமான் இலக்கணங்கள் பலகோடி பிரியாப் 

பெருஞ்சத்தி இலக்கணங்கள் பற்பலகோ டிகளாய்த் 
தெரிந்திடுநா னிலைக்குள்ளே இருந்துவெளிப் படவும் 

செய்கைபல புரிகின்ற திறல்உடைத்தா ரகமேல் 
எரிந்திடுதீ நடுவெளிக்கண் இருந்ததிரு வடியின் 

எல்லையையார் சொல்லவல்லார் இயம்பாய்என் தோழி.

36
5661

தோன்றியஐங் கருவினிலே சொல்லரும்ஓர் இயற்கைத் 

துலங்கும்அதில் பலகோடிக் குலங்கொள்குருத் துவிகள் 
ஆன்றுவிளங் கிடும்அவற்றின் அசலைபல கோடி 

அமைந்திடும்மற் றவைகளுளே அமலைகள் ஓர்அனந்தம் 
ஏன்றுநிறைந் திடும்அவற்றிற் கணிப்பதனுக் கரிதாய் 

இலங்குபிர காசிகள்தாம் இருந்தனமற் றிவற்றில் 
ஊன்றியதா ரகசத்தி ஓங்குமதின் நடுவே 

உற்றதிரு வடிப்பெருமை உரைப்பவரார் தோழி.

37
5662

உறைந்திடும்ஐங் கருவினிலே உருவசத்தி விகற்பம் 

உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணாஎண் ணிலவே 
நிறைந்தஅவை தனித்தனியே நிகழ்ந்திலங்க அவைக்குள் 

நேர்மைஒண்மை உறுவித்தந் நேர்மைஒண்மை அகத்தே 
குறைந்திலவாம் பலவேறு குணங்கள்உறப் புரிந்து 

குணங்களுளே குறிகள்பல கூட்டுவித்தாங் கமர்ந்தே 
மறைந்தமணம் வெளிப்படுத்தும் மலரடியின் பெருமை 

வகுத்துரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.

38
5663

சூழ்ந்திடும்ஐங் கருவினிலே சொருபசத்தி பேதம் 

சொல்லினொடு மனங்கடந்த எல்லையிலா தனவே 
தாழ்ந்திலவாய் அவைஅவையும் தனித்தனிநின் றிலங்கத் 

தகும்அவைக்குள் நவவிளக்கம் தரித்தந்த விளக்கம் 
வாழ்ந்திடஓர் சத்திநிலை வயங்கியுறப் புரிந்து 

மதிக்கும்அந்தச் சத்திதனில் மன்னுசத்தர் ஆகி 
ஆழ்ந்திடும்ஓர் பரம்பரத்தை அசைத்துநின்று நடிக்கும் 

அடிப்பெருமை உரைப்பவரார் அறியாய்என் தோழி.

39
5664

பசுநிறத்த ஐங்கருவில் பகர்ந்தசுவைத் தன்மை 

பற்பலகோ டிகளாம்அவ் வுற்பவசத் திகளில் 
வசுநிறத்த விவிதநவ சத்திபல கோடி 

வயங்கும்அவைக் குள்ஆதி வயங்குவள்அவ் வாதி 
தசநிறத்த வாகஅதில் தனித்தனிஓங் காரி 

சார்ந்திடுவள் அவள்அகத்தே தனிப்பரைசார்ந் திடுவள் 
திசைநிறத்தப் பரைநடுவில் திருநடனம் புரியும் 

திருவடியின் பெருவடியைச் செப்புவதார் தோழி.

40
5665

பூத்தசுடர்ப் பூஅகத்தே புறத்தேசூழ் இடத்தே 

பூத்துமிகக் காய்த்துமதி அமுதொழுகப் பழுத்து 
மாத்தகைய பெருஞ்ஜோதி மணிமன்றுள் விளங்கும் 

வண்ணம்ஒரு சிறிதறிய மாட்டாமல் மறைகள் 
ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி 

இருக்கின்ற என்றுணர்ந்தோர் இயம்பிடில்இச் சிறியேன் 
தோத்திரஞ்செய் தம்மைகண்டு மகிழ்ந்திடஅம் மன்றில் 

துலங்கும்அடிப் பெருமையைஎன் சொல்லுவது தோழி.

41
5666

வளம்பெறுவிண் அணுக்குள்ஒரு மதிஇரவி அழலாய் 

வயங்கியதா ரகையாய்இவ் வகைஅனைத்தும் தோற்றும் 
தளம்பெறுசிற் சொலிதபரா சத்திமயம் ஆகித் 

தனித்தசத்தி மான்ஆகித் தத்துவம்எல் லாம்போய் 
உளம்புகுத மணிமன்றில் திருநடம்செய் தருளும் 

ஒருதலைவன் சேவடிச்சிர் உரைப்பவர்எவ் வுலகில் 
அளந்தறிதும் எனமறைகள் அரற்றும்எனில் சிறிய 

அடிச்சியுரைத் திடப்படுமோ அறியாய்என் தோழி.

42
5667

பரவியஐங் கருவினிலே பருவசத்தி வயத்தே 

பரைஅதிட்டித் திடநாத விந்துமயக் கத்தே 
விரவியதத் துவஅணுக்கள் ஒன்றொடொன் றாய்ஒன்றி 

விளங்கஅவற் றடிநடுவீ றிவற்றினில்மூ விதமாய் 
உரவியலுற் றுயிர்இயக்கி அறிவைஅறி வித்தே 

ஓங்குதிரு அம்பலத்தில் ஒளிநடனம் புரியும் 
தரவியலிற் றிதுஎனயார் தெரிந்துரைப்பார் சிறிய 

தமியள்உரைத் திடுந்தரமோ சாற்றாய்என் தோழி.

43
5668

சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச் 

சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி 
ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி 

உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி 
ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய் 

அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை 
வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார் 

விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி.

44
5669

பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம் 

பூஇருபத் தைம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும் 
நாஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா 

நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில் 
மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான 

வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின் 
பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன் 

பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி.

45


திருச்சிற்றம்பலம் 
Back


 

138. தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

5670.

அன்னப்பார்ப் பால்(400)அழ காம்நிலை யூடே 

அம்பலம் செய்துநின் றாடும் அழகர் 
துன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும் நானும் 

சூதாடு கின்றஅச் சூழலில் வந்தே 
உன்னைப்பார்த் துன்னுள்ளே என்னைப்பா ராதே 

ஊரைப்பார்த் தோடி உழல்கின்ற பெண்ணே 
என்னைப்பார் என்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

1
 (400). அன்னைப்பார்ப்பால் - ஆ. பா. பதிப்பு. 
5671

அதுபா வகமுகத் தானந்த நாட்டில் 

அம்பலம் செய்துநின் றாடும் அழகர் 
விதுபா வகமுகத் தோழியும் நானும் 

மெய்ப்பா வனைசெய்யும் வேளையில் வந்து 
பொதுபா வனைசெய்யப் போகாதோ பெண்ணே 

பொய்ப்பா வனைசெய்து கைப்பானேன் ஐயோ 
இதுபாவம் என்கின்றார் என்னடிஅம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

2
5672

அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே 

அருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர் 
உறங்காத வண்ணஞ்சிற் றம்பலம பாடி 

உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது 
புறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே 

பொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால் 
இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

3
5673

அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த 

அய்யர் அமுதர்என் அன்பர் அழகர் 
நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு 

நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது 
பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே 

பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள் 
இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

4
5674

தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார் 

சத்தியர் உத்தமர் நித்தம ணாளர் 
ஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின் 

உண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன் 
அப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே 

அன்புடை நின்னையாம் இன்புறக் கூடல் 
இப்போதே என்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

5
5675

மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர் 

வித்தகர் அம்பலம் மேவும் அழகர் 
இக்குல மாதரும் யானும்என் நாதர் 

இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது 
பொய்க்குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே 

பூரண நோக்கம் பொருந்தினை நீதான் 
எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

6
5676

வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார் 

வெம்பல மாற்றும்என் அம்பல வாணர் 
சம்மத மாமட வார்களும் நானும் 

தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது 
இம்மதம் பேசி இறங்காதே பெண்ணே 

ஏகசி வோகத்தை எய்தினை நீதான் 
எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

7
5677

பாரொடு விண்ணும் படைத்தபண் பாளர் 

பற்றம் பலத்தார்சொல் சிற்றம் பலத்தார் 
வாரிடு கொங்கையர் மங்கைய ரோடே 

மன்றகம் பாடி மகிழ்கின்ற போது 
ஏருடம் பொன்றென எண்ணேல்நீ பெண்னே 

எம்முடம் புன்னை(401) இணைந்திங் கெமக்கே 
ஈருடம் பென்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

8
 (401). எம்முடம் பும்மை - ஆ. பா. பதிப்பு., 
5678

மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல் 

மலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர் 
சிறப்புற்ற மங்கையர் தம்மொடு நான்தான் 

சிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது 
புறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே 

புலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே 
இறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

9
5679

ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும் 

அம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர் 
தேறறி வாகிச் சிவானு பவத்தே 

சின்மய மாய்நான் திளைக்கின்ற போது 
மாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே 

வல்லவள் நீயேஇம் மாநிலை மேலே 
ஏறினை என்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

10


திருச்சிற்றம்பலம் 
Back


 

139. நற்றாய் செவிலிக்குக் கூறல் 

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

5680.

உணர்ந்தவர் தமக்கும் உணர்வரி யான்என் 

உள்ளகத் தமர்ந்தனன் என்றாள் 
அணிந்தனன் எனக்கே அருண்மண மாலை 

அதிசயம் அதிசயம் என்றாள் 
துணிந்துநான் தனித்த போதுவந் தென்கை 

தொட்டனன் பிடித்தனன் என்றாள் 
புணர்ந்தனன் கலந்தான் என்றுளே களித்துப் 

பொங்கினாள் நான்பெற்ற பொன்னே.

1
5681

தனிப்பெரும் பதியே என்பதி ஆகத் 

தவம்எது புரிந்ததோ என்றாள் 
அனித்தநீத் தெனைத்தான் அன்பினால் அணைத்தான் 

அதிசயம் அதிசயம் என்றாள் 
இனித்துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள் 

எனக்கிணை யார்கொலோ என்றாள் 
சனிப்பிறப் பறுத்தேன் என்றுளே களிப்புத் 

ததும்பினாள் நான்பெற்ற தனியே.

2
5682

புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான்செய் 

புண்ணியம் புகல்அரி தென்றாள் 
தண்ணிய மதியின் அமுதெனக் களித்த 

தயவைநான் மறப்பனோ என்றாள் 
எண்ணிய அனைத்தும் ஈந்தருள் கின்றான் 

என்னையோ என்னையோ என்றாள் 
அண்ணிய பேரா னந்தமே வடிவம் 

ஆயினாள் நான்பெற்ற அணங்கே.

3
5683

சத்திய ஞான சபாபதி எனக்கே 

தனிப்பதி ஆயினான் என்றாள் 
நித்திய வாழ்வு பெற்றுநான் இன்ப 

நிலைதனில் நிறைந்தனன் என்றாள் 
பித்தியல் உலகீர் காண்மினோ சித்திப் 

பேறெலாம் என்வசத் தென்றாள் 
எத்திசை யீரும் ஒத்திவண் வருக 

என்றனள் எனதுமெல் லியலே.

4
5684

திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன் 

சிந்தையில் கலந்தனன் என்றாள் 
பெருமையில் சிறந்தேன் என்பெருந் தவத்தைப் 

பேசுதல் அரிதரி தென்றாள் 
இருமையும் என்போல் ஒருமையில் பெற்றார் 

யாண்டுளர் யாண்டுளர் என்றாள் 
மருமலர் முகத்தே இளநகை துளும்ப 

வயங்கினாள் நான்பெற்ற மகளே.

5
5685

வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான் 

மாலையோ காலையோ என்றாள் 
எள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே 

ஏவல்செய் கின்றன என்றாள் 
தெள்ளமு தருந்தி அழிவிலா உடம்பும் 

சித்தியும் பெற்றனன் என்றாள் 
துள்ளிய மடவீர் காண்மினோ என்றாள் 

சோர்விலாள் நான்பெற்ற சுதையே.

6
5686

கனகமா மன்றில் நடம்புரி பதங்கள் 

கண்டனன் கண்டனன் என்றாள் 
அனகசிற் சபையில் ஒருபெரும் பதிஎன் 

அன்பிலே கலந்தனன் என்றாள் 
தினகர சோமாக் கினிஎலாம் எனக்கே 

செயல்செயத் தந்தனன் என்றாள் 
தனகரத் தெனைத்தான் தழுவினான் என்றாள் 

தவத்தினால் பெற்றநம் தனியே.

7
5687

கொடிப்பெரு மணிப்பொற் கோயில்என் உளமாக் 

கொண்டுவந் தமர்ந்தனன் என்றாள் 
கடிப்புது மலர்ப்பூங் கண்ணிவேய்ந் தெனைத்தான் 

கடிமணம் புரிந்தனன் என்றாள் 
ஒடிப்பற எல்லாம் வல்லதோர் சித்தாம் 

ஒளிஎனக் களித்தனன் என்றாள் 
இடிப்பொடு நொடித்தீர் காண்மினோ என்றாள் 

என்தவத் தியன்றமெல் லியலே.

8
5688

வாழிமா மணிமன் றிறைவனே எனக்கு 

மாலைவந் தணிந்தனன் என்றாள் 
ஊழிதோ றூழி உலவினும் அழியா 

உடம்பெனக் களித்தனன் என்றாள் 
ஆழிசூழ் உலகோ டண்டங்கள் அனைத்தும் 

அளிக்கஎன் றருளினான் என்றாள் 
ஏழியன் மாட மிசையுற வைத்தான் 

என்றனள் எனதுமெல் லியலே.

9
5689

ஏலுநன் மணிமா மன்றருட் சோதி 

என்னுளத் தமர்ந்தனன் என்றாள் 
பாலும்இன் சுவையும் போன்றென தாவி 

பற்றினன் கலந்தனன் என்றாள் 
சாலும்எவ் வுலகும் தழைக்கஎன் தனக்கே 

சத்தியை அளித்தனன் என்றாள் 
மேலும்எக் காலும் அழிவிலேன் என்றாள் 

மிகுகளிப் புற்றனள் வியந்தே.

10


திருச்சிற்றம்பலம் 
Back


 

140. தோழிக் குரிமை கிளத்தல் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

5690.

நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும் 

நாடியமந் திரங்கள்சில கூடிஉரை யிடவே 
வியந்துமற்றைத் தேவர்எலாம் வரவும்அவர் நேயம் 

விரும்பாதே இருப்பதென்நீ என்கின்றாய் தோழி 
வயந்தரும்இந் திரர்பிரமர் நாரணர்கா ரணர்கள் 

மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும் 
பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே 

பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.

1
5691

நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும் 

நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர் 
வியந்துவரு கின்றதுகண் டுபசரியா திங்கே 

மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி 
வயந்தருபார் முதல்நாத வரையுளநாட் டவர்க்கும் 

மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும் 
பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே 

பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.

2
5692

நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும் 

நாடும்மற்றைத் தலைவர்தமைக் கண்டபொழு தெனினும் 
வியந்தவர்க்கோர் நல்லுரையும் சொல்லாதே தருக்கி 

வீதியிலே நடப்பதென்நீ என்கின்றாய் தோழி 
வயந்தரும்இவ் வண்டபகி ரண்டமட்டோ நாத 

வரையோஅப் பாலும்உள மாநாட்டார் தமக்கும் 
பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே 

பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.

3
5693

கடுங்குணத்தோர் பெறற்கரிய நடத்தரசே நினக்குக் 

கணவர்எனி னும்பிறரைக் கண்டபொழு தெனினும் 
நடுங்குணத்தால் நின்றுசில நல்வார்த்தை பகராய் 

நங்காய்ஈ தென்எனநீ நவில்கின்றாய் தோழி 
ஒடுங்குபல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும் 

உபயநிலைத் தலைவருக்கும் அவர்தலைவர் களுக்கும் 
நடுங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே 

நடஞ்செய்அடிப் பணிக்கென்றே நாட்டியநற் குடியே.

4
5694

மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு 

மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துரைக்க 
இடங்கலந்த மூர்த்திகள்தாம் வந்தால்அங் கவர்பால் 

எண்ணம்இலா திருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி 
மடங்குசம யத்தலைவர் மதத்தலைவர் இவர்க்கும் 

வயங்கும்இவர்க் குபகரிக்கும் மாத்தலைவர் களுக்கும் 
அடங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே 

ஆடல்அடிப் பணிக்கென்றே அமைத்தகுடி அறியே.

5
5695

அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை 

அறிவறியார் வார்த்தைஎத னால்எனில்இம் மொழிகேள் 
உறங்குவதும் விழிப்பதும்பின் உண்ணுவதும் இறத்தல் 

உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும் 
மறங்குலவும் அணுக்கள்பலர் செய்தவிர தத்தால் 

மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால் 
இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய் 

இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.

6
5696

சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே 

தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன் 
தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர் 

தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர் 
இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை 

இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி 
நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம் 

நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே.

7
5697

ஒளிஒன்றே அண்டபகிர் அண்டம்எலாம் விளங்கி 

ஓங்குகின்ற தன்றிஅண்ட பகிர்அண்டங் களிலும் 
வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும் 

விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே 
உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை 

உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி 
தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும் 

தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே.

8
5698

ஏற்றிடுவே தாகமங்கள் ஒளிமயமே எல்லாம் 

என்றமொழி தனைநினைத்தே இரவில்இருட் டறையில் 
சாற்றிடுமண் பாத்திரத்தை மரவட்டில் களைக்கல் 

சட்டிகளை வேறுபல சார்ந்தகரு விகளைத் 
தேற்றமிகு தண்ணீரைச் சீவர்கள்பற் பலரைச் 

செப்பியஅவ் விருட்டறையில் தனித்தனிசேர்த் தாலும் 
ஊற்றம்உறும் இருள்நீங்கி ஒளிகாண்ப துளதோ 

உளதேல்நீ உரைத்தமொழி உளதாகும் தோழி.

9
5699

பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம் 

பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே 
பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே 

பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல் 
உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால் 

உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே 
தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம் 

தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே.

10
5700

பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான் 

பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே 
தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ 

சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய் 
திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும் 

திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம் 
சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே 

திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே.

11
5701

இலங்குகின்ற பொதுஉண்மை இருந்தநிலை புகல்என் 

றியம்புகின்றாய் மடவாய்கேள் யான்அறியுந் தரமோ 
துலங்கும்அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ 

சொல்அளவோ பொருள்அளவோ துன்னும்அறி வளவோ 
விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த 

மேனிலைஎன் றந்தமெலாம் விளம்புகின்ற தன்றி 
வலங்கொளும்அம் மேனிலையின் உண்மைஎது என்றால் 

மவுனஞ்சா திப்பதன்றி வாய்திறப்ப திலையே.

12
5702

வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி 

மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும் 
தூயபரா பரம்அதுவே என்றால்அங் கதுதான் 

துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண் 
மேயநடு வெளிஎன்றால் தற்பரமாம் வெளியில் 

விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும் 
ஆயபெரு வெளிதனிலே அடங்கும்இது மட்டே 

அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே.

13
5703

கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை 

கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை 
விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம் 

மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே 
அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே 

அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே 
துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன் 

சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.

14


திருச்சிற்றம்பலம் 
Back


 

141. தலைவி கூறல் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

5704.

தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும் 

தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார் 
எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார் 

என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே 
வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே 

மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச் 
சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

1
5705

நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார் 

நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி 
என்பாட்டுக் கிருந்தேனை வலிந்துகலந் தணைந்தே 

இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர் 
முன்பாட்டுக் காலையிலே வருகுவர்மா ளிகையை 

முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ 
தன்பாட்டுக் கிருந்துளறேல் ஐயர்திரு வார்த்தை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

2
5706

முன்பாட்டுக் காலையிலே வருகுவர்என் கணவர் 

மோசம்இலை மோசம்என மொழிகின்றார் மொழிக 
பின்பாட்டுக் காலையிலே நினைத்தஎலாம் முடியும் 

பிசகிலைஇம் மொழிசிறிதும் பிசகிலைஇவ் வுலகில் 
துன்பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழிகேட் டுள்ளம் 

துளங்கேல்நம் மாளிகையைச் சூழஅலங் கரிப்பாய் 
தன்பாட்டுத் திருப்பொதுவில் நடத்திறைவர் ஆணை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

3
5707

உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை 

உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக் 
கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது 

கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய் 
நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப 

நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத் 
தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

4
5708

என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை 

யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார் 
உன்னல்அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார் 

உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத் 
துன்னுறும்மங் கலம்விளங்க அலங்கரிப்பாய் இங்கே 

தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில் 
தன்னுடைய நடம்புரியும் தலைவர்திரு ஆணை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

5
5709

என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார் 

எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை 
இன்னஉல கினர்அறியார் ஆதலினால் பலவே 

இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம் 
மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து 

மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல் 
தன்நிகர்தான் ஆம்பொதுவில் நடம்புரிவார் ஆணை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

6
5710

கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக் 

கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர் 
அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர் 

அறிவாரோ அவர்உரைகொண் டையம்உறேல் இங்கே 
இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப 

இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய் 
தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

7
5711

ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே 

அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார் 
பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ 

பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய் 
நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை 

நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே 
தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

8
5712

ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை 

யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால் 
பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே 

புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல் 
மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம் 

மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே 
தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

9
5713

உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை 

உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே 
இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே 

இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே 
அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர் 

அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க 
சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

10


திருச்சிற்றம்பலம் 
Back


 

142. அனுபவ மாலை 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

5714.

அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல் 

அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன் 
எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி 

என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே 
வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன் 

மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண் 
நம்புறுபார் முதல்நாத வரையுளநாட் டவரும் 

நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே.

1
5715

கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும் 

கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும் 
எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே 

இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார் 
மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும் 

மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது 
பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார் 

பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.

2
5716

எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார் 

எவ்வுலகில் யார்எனக்கிங் கீடுரைநீ தோழீ 
நல்லாய்மீக் கோளுடையார் இந்திரர்மா முனிவர் 

நான்முகர்நா ரணர்எல்லாம் வான்முகராய் நின்றே 
பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை நம்மால் 

பகர்வரிதென் கின்றார்சிற் பதியில்நடம் புரியும் 
வல்லானை மணந்திடவும் பெற்றனள்இங் கிவளே 

வல்லாள்என் றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே.

3
5717

இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார் 

யான்செய்தவம் யார்செய்தார் இதுகேள்என் தோழி 
எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பென் றேனும் 

எண்ணுவனோ புண்ணியரை எண்ணுமனத் தாலே 
பிச்சிஎன நினைத்தாலும் நினையடிநீ அவரைப் 

பிரிவேனோ பிரிவென்று பேசுகினும் தரியேன் 
விச்சைநடம் கண்டேன்நான் நடங்கண்டால் பேயும் 

விடத்துணியா தென்பர்கள்என் விளைவுரைப்ப தென்னே.

4
5718

வஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன் 

மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும் 
எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே 

எற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய் 
அஞ்சுமுகம் காட்டியஎன் தாயர்எலாம் எனக்கே 

ஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார் 
பஞ்சடிப்பா வையர்எல்லாம் விஞ்சடிப்பால் இருந்தே 

பரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே.

5
5719

அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான் 

அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன் 
உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும் 

ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம் 
இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின் 

இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர் 
கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே 

களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.

6
5720

பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும் 

புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார் 
இதுவரையோ பலகோடி என்னினும்ஓர் அளவோ 

எண்இறந்த அண்டவகை எத்தனைகோ டிகளும் 
சதுமறைசொல் அண்டவகை தனித்தனியே நடத்தும் 

சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ 
துதிபெறும்அத் திருவாளர் புன்னகையை நினைக்குந் 

தோறும்மனம் ஊறுகின்ற சுகஅமுதம் பெறுமே.

7
5721

கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம் 

கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும் 
எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர் 

இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன் 
விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம் 

வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம் 
உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ 

துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி.

8
5722

மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே எனது 

மணவாளர் கொடுத்ததிரு அருளமுதம் மகிழ்ந்தே 
ஏடவிழ்பூங் குழலாய்நான் உண்டதொரு தருணம் 

என்னைஅறிந் திலன்உலகம் தன்னையும்நான் அறியேன் 
தேடறிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும் 

தேனும்ஒக்கக் கலந்ததெனச் செப்பினும்சா லாதே 
ஈடறியாச் சுவைபுகல என்னாலே முடியா 

தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே.

9
5723

கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும் 

கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான் 
இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய் 

இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே 
பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர் 

புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே 
நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி 

நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.

10
5724

மன்னுதிருச் சபைநடுவே வயங்குநடம் புரியும் 

மணவாளர் திருமேனி வண்ணங்கண் டுவந்தேன் 
என்னடிஇத் திருமேனி இருந்தவண்ணம் தோழி 

என்புகல்வேன் மதிஇரவி இலங்கும்அங்கி உடனே 
மின்னும்ஒன்றாய்க் கூடியவை எண்கடந்த கோடி 

விளங்கும்வண்ணம் என்றுரைக்கோ உரைக்கினும்சா லாதே 
அன்னவண்ணம் மறைமுடிவும் அறைவரிதே அந்த 

அரும்பெருஞ்சோ தியின்வண்ணம் யார்உரைப்பர் அந்தோ.

11
5725

கள்ளுண்டாள் எனப்புகன்றார் கனகசபை நடுவே 

கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும்உண் டடிநான் 
எள்ளுண்ட பலவிடயத் திறங்குங்கள் அன்றே 

என்றும்இற வாநிலையில் இருத்துங்கள் உலகர் 
உள்ளுண்ட போதுமயக் குற்றிடுங்கள் அலவே 

உள்ளமயக் கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய் 
அள்ளுண்ட பிறரும்எனை அடுத்தடுத்துக் கண்டால் 

அறிவுதரும் அவர்க்கும்இங்கே யான்உண்ட கள்ளே.

12
5726

காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ 

கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை 
ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல் 

இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ 
பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் 

பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப் 
பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப் 

பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்ததிலை அம்மா.

13
5727

கண்ணாறு(402) படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால் 

கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில் 
எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா 

தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ 
பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும் 

பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே 
உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல் 

உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே.

14
 (402). இப்பதிகத்தில் அடிகளார் எழுத்து 'கண்ணாறு' 
என்பதுபோல் காண்கிறது. ஓர் அன்பர் படியில் 
உள்ளதும் 'கண்ணாறு'. திருத்தணிகைப் பகுதி 
ஜீவசாட்சி மாலையில் அவர்கள் எழுதி உள்ளது 
'கண்ணேறு' என்பது. முதல் அச்சும் 'கண்ணேறு'.- ஆ. பா.
 
5728

கற்பூரம் கொணர்ந்திடுக தனித்தோழி எனது 

கணவர்வரு தருணம்இது கண்ணாறு கழிப்பாம் 
எற்பூத நிலைஅவர்தம் திருவடித்தா மரைக்கீழ் 

இருப்பதடி கீழிருப்ப தென்றுநினை யேல்காண் 
பற்பூத நிலைகடந்து நாதநிலைக் கப்பால் 

பரநாத நிலைஅதன்மேல் விளங்குகின்ற தறிநீ 
இற்பூவை அவ்வடிக்குக் கண்ணாறு கழித்தால் 

எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் இனிதுநலந் தருமே.

15
5729

மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது 

மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும் 
தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான் 

சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே 
தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே 

திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ 
உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ 

துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே.

16
5730

தாழ்குழலாய் எனைச்சற்றே தனிக்கவிட்டால் ஞான 

சபைத்தலைவர் வருகின்ற தருணம்இது நான்தான் 
வாழ்வடைபொன் மண்டபத்தே பளிக்கறையி னூடே 

மலரணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும் 
சூழுறநான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி 

துரைக்குமனம் இல்லைஅது துணிந்தறிந்தேன் பலகால் 
ஏழ்கடலில் பெரிதன்றோ நான்அடைந்த சுகம்இங் 

கிதைவிடநான் செய்பணிவே றெப்பணிநீ இயம்பே.

17
5731

தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி 

தனிக்கஎனை விடுநீயும் தனித்தொருபால் இருத்தி 
இனித்தசுவைத் திரள்கலந்த திருவார்த்தை நீயும் 

இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே 
மனித்தர்களோ வானவரோ மலர்அயனோ மாலோ 

மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும் 
தனித்தஒரு திருவார்த்தை கேட்பதற்கே கோடித் 

தவஞ்செய்து நிற்கின்றார் நவஞ்செய்த நிலத்தே.

18
5732

மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய் 

மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக 
குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே 

குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன் 
தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ 

சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா 
அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக 

அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே.

19
5733

அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம் 

ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம் 
விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை 

விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக 
கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும் 

கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக 
இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும் 

இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே.

20
5734

பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழி(403) 

பராக்கடையேல் மணிமாடப் பக்கமெலாம் புனைக 
அதிகநலம் பெறுபளிக்கு மணிமேடை நடுவே 

அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே 
கதிதருவார் நல்வரவு சத்தியம்சத் தியம்நீ 

களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே 
புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக 

புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே.

21
 (403) இப்பதிகத்தில் சிற்சில இடங்களில் "தோழீ" 
என்பதுபோல் காண்கிறது - ஆ. பா.
 
5735

மன்றாடும் கணவர்திரு வரவைநினைக் கின்றேன் 

மகிழ்ந்துநினைத் திடுந்தோறும் மனங்கனிவுற் றுருகி 
நன்றாவின் பால்திரளின் நறுநெய்யும் தேனும் 

நற்கருப்பஞ் சாறெடுத்த சர்க்கரையும் கூட்டி 
இன்றார உண்டதென இனித்தினித்துப் பொங்கி 

எழுந்தெனையும் விழுங்குகின்ற தென்றால்என் தோழி 
இன்றாவி அன்னவரைக் கண்டுகொளும் தருணம் 

என்சரிதம் எப்படியோ என்புகல்வேன் அந்தோ.

22
5736

கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே 

குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான் 
நீடியபொன் மலைமுடிமேல் வாழ்வடைந்த தேவர் 

நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி 
ஆடியபொற் சபைநடுவே சிற்சபையின் நடுவே 

ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ 
ஏடவிழ்பூங் குழலாய்என் இறைவரைக்கண் ணுற்றால் 

என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ.

23
5737

அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி 

ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக 
தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல் 

திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும் 
இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ 

என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய் 
மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த 

மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே.

24
5738

என்னிருகண் மணிஅனையார் என்னுயிர்நா யகனார் 

என்உயிருக் கமுதானார் எல்லாஞ்செய் வல்லார் 
பொன்அணிபொற் சபையாளர் சிற்சபையார் என்னைப் 

புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார் 
அன்னியர்அல் லடிஅவரே எனதுகுல தெய்வம் 

அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ 
மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே 

மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே.

25
5739

தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய் 

தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய் 
சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும் 

திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம் 
அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே 

அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே 
எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா 

வீறுமவர்(404) திருமேனி நானும்என அறியே.

26
 ( 404). ஈங்கவர்தம் - முதற்பதிப்பு, பொ.சு., பி. இரா., ச. மு. க. 
5740

எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில் 

இருந்துநடம் புரிகின்ற அரும்பெருஞ்சோ தியினார் 
நல்லாய்நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய 

நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால் 
இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன் 

என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் அம்மா 
செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும் 

சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே.

27
5741

வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும் 

மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ 
நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில் 

நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன் 
கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட 

கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர் 
தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன் 

தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே.

28
5742

என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே 

எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி 
பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர் 

புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ 
புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல் 

புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா 
உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான் 

உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே.

29
5743

ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார் 

என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா 
ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே 

உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன் 
தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது 

செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா 
ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை 

இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே.

30
5744

ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார் 

அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர் 
மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய 

வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென் 
கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார் 

கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ 
வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு 

மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே.

31
5745

தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே 

தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர் 
பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம் 

புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி 
என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம் 

இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான் 
முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும் 

முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே.

32
5746

இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி 

என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி 
அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி 

அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும் 
எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே 

இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார் 
நவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான் 

நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே.

33
5747

திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார் 

சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார் 
உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய் 

ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம் 
பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர் 

பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன் 
துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும் 

சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.

34
5748

அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய் 

ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான் 
தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த 

திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார் 
மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்

மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ 
இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம் 

என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.

35
5749

செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ 

தெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ 
பம்புமணி ஒளியோநற் பசும்பொன்னின் சுடரோ 

படிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே 
எம்பரமன் றெம்பெருமான் புறவண்ணம் யாதோ 

என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார் 
தம்பரமென் றென்னைஅன்று மணம்புரிந்தார் ஞான 

சபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி.

36
5750

தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ 

தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோ ரோ 
மூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ 

முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார் 
யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற் 

கமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் 
ஆவலொடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார் 

அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே.

37
5751

திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத் 

திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய் 
அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய் 

அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப் 
பரிச்சிக்கும்405 அவ்வமுதின் நிறைந்தசுவை ஆகிப் 

பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே 
உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம் 

ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே.

38
 (405). பரிச்சிக்கும் - பரிசிக்கும் என்பதன் விகாரம். 
5752

வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே 

விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்தே 
தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத் 

தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல் 
இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை 

இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான் 
பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம் 

புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ.

39
5753

கன்னிஎனை மணந்தபதி கனிதருசிற் சபைக்கே 

கலந்ததனிப் பதிவயங்கு கனகசபா பதிவான் 
பன்னியருக் கருள்புரிந்த பதிஉலக மெல்லாம் 

படைத்தபதி காத்தருளும் பசுபதிஎவ் வுயிர்க்கும் 
அன்னியம்அல் லாதகத்தும் புறத்தும்அகப் புறத்தும் 

அருட்செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால் 
என்னியல்போல் பிறர்இயலை எண்ணியிடேல் பிறரோ 

என்பதிபால் அன்பதிலார் அன்புளரேல் எண்ணே.

40
5754

என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன் 

இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய் 
பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர் 

பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் 
உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும் 

உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே 
மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண் 

மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.

41
5755

பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும் 

பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற 
சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது 

திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே 
ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார் 

ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம் 
ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும் 

உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே.

42
5756

நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல் 

நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ 
போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும் 

புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும் 
வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும் 

விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும் 
வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும் 

மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே.

43
5757

புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர் 

பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை 
எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே 

இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய் 
பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தாடுஞ் சபையைப் 

பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே 
அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல் 
ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே.

44
5758

கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும் 

கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே 
ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகிர் அண்டத் 

திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும் 
பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின் 

பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே 
வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே 

வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.

45
5759

குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும் 

கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே 
புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி 

புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள் 
அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல் 

அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும் 
விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று 

மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.

46
5760

கொடிஇடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும் 

கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய் 
படிஇடத்தே வான்இடத்தே பாதலத்தே அண்ட 

பகிர்அண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம் 
அடிமலர்கொண் டையர்செய்யும் திருக்கூத்தின் விளக்கம் 

ஆகும்இது சத்தியம்என் றருமறைஆ கமங்கள் 
கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக் 

கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாம் தவிர்ந்தே.

47
5761

இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார் 

எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார் 
அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார் 

அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார் 
என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார் 

என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா 
துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும் 

சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே.

48
5762

துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார் 

சுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார் 
பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார் 

பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார் 
இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார் 

என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா 
உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன 

ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே.

49
5763

ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர் 

எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான் 
ஏசறவே அகத்திருந்தால் என்எனக்கேட் கின்றாய் 

என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே 
ஆசைவெட்கம் அறியாது நான்அவரைத் தழுவி 

அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார் 
கூசறியாள் இவள்என்றே பேசுவர்அங் கதனால் 

கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழீ.

50
5764

அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான் 

ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி 
முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும் 

முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான் 
விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக 

வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க 
பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப் 

பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே.

51
5765

தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே 

சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி 
வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி 

மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள் 
ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே 

ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக் 
கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம் 

கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ.

52
5766

துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென் 

சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர் 
பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின் 

பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே 
இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான் 

எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின் 
படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம் 

பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே.

53
5767

ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ 

என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான் 
காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம் 

கண்டபரி சென்புகல்வேன் அண்டபகிர் அண்டம் 
தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே 

தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான் 
மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும் 

வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.

54
5768

நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய் 

நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய் 
இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர் 

எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள் 
திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே 

திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே 
கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு 

கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ.

55
5769

பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப் 

பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர் 
மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம் 

விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது 
கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன் 

களித்திடுக இனியுனைநாம் கைவிடோ ம் என்றும் 
மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண 

மாலையிட்டோ ம் என்றெனக்கு மாலையணிந் தாரே.

56
5770

பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப் 

பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர் 
திருத்தம்உற அருகணைந்து கைபிடித்தார் நானும் 

தெய்வமலர் அடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே 
வருத்தம்உறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா 

வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக் 
கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது 

கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.

57
5771

தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச் 

சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர் 
இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண 

இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர 
எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும் 

என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன் 
சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச் 

சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி.

58
5772

ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய் 

அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும் போது 
மைஅகத்தே பொருந்தாத வள்ளல்அரு கணைத்தென் 

மடிபிடித்தார் நானும்அவர் அடிபிடித்துக் கொண்டேன் 
மெய்அகத்தே நம்மைவைத்து விழித்திருக்கின் றாய்நீ 

விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகஎன் றெனது 
கைஅகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார் 

கருணையினில் தாய்அனையார் கண்டாய்என் தோழி.

59
5773

காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார் 

கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார் 
கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம் 

குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார் 
ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே 

அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார் 
தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான் 

தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே.

60
5774

காமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும் 

கருதுபல குறிகொண்ட கண்ணர்என்றும் புகன்றேன் 
ஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள் 

அன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன 
தாமாலைச் சிறுமாயா சத்திகளாம் இவர்கள் 

தாமோமா மாயைவரு சத்திகள்ஓங் காரத் 
தேமாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே 

திருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி.

61
5775

மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத 

மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள் 
மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி 

வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி 
போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி 

புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே 
ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால் 

ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி.

62
5776

உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி 

உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி 
பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும் 

பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித் 
திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று 

தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ 
வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி 

மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.

63
5777

பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள் 

பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர் 
ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க 

எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன் 
சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத் 

திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப் 
பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும் 

பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.

64
5778

என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி 

இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய் 
அன்புறுசித் தாந்தநடம் வேதாந்த நடமும் 

ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன் 
இன்பமய மாய்ஒன்றாய் இரண்டாய்ஒன் றிரண்டும் 

இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித் 
தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பேர் அந்தத் 

தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே.

65
5779

தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது 

துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ 
ஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால் 

என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி 
ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழி 

என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே 
ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும் 

ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே.

66
5780

ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம் 

ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய் 
வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு 

விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம் 
தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால் 

சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே 
உய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும் 

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.

67
5781

மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார் 

வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி 
துன்றியபேர் இருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத் 

துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால் 
இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால் 

இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே 
ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும் 

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.

68
5782

வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது 

வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும் 
சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும் 

தாழ்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில் 
பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ 

புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே 
உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும் 

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.

69
5783

காலையிலே வருகுவர்என் கணவர்என்றே நினக்குக் 

கழறினன்நான் என்னல்அது காதில்உற்ற திலையோ 
வேலைஇலா தவள்போலே வம்பளக்கின் றாய்நீ 

விடிந்ததுநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால் 
சோலையிலே மலர்கொய்து தொடுத்துவந்தே புறத்தில் 

சூழ்ந்திருப்பாய் தோழிஎன்றன் துணைவர்வந்த உடனே 
ஓலைஉறா தியானவரைக் கலந்தவரும் நானும் 

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.

70
5784

விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது 

வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை 
ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுதிரைதீர்ந் ததுபேர் 

ஒளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம் 
திடம்பெறநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால் 

தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே 
உடம்புறவே நான்அவரைக் கலந்தவரும் நானும் 

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.

71
5785

மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல் 

வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே 
காலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய் 

கண்டிலன்ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி 
ஓலையிலே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதி 

உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச் 
சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே 

சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே.

72
5786

இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர் 

இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார் 
கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம் 

கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ 
துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில் 

சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார் 
உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே 

உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி.

73
5787

என்னுடைய தனித்தோழி இதுகேள்நீ மயங்கேல் 

எல்லாஞ்செய் வல்லவர்என் இன்னுயிர்நா யகனார் 
தன்னுடைய திருத்தோளை நான்தழுவும் தருணம் 

தனித்தசிவ சாக்கிரம்என் றினித்தநிலை கண்டாய் 
பன்னும்இந்த நிலைபரசாக் கிரமாக உணரேல் 

பகர்பரசாக் கிரம்அடங்கும் பதியாகும் புணர்ந்து 
மன்னுநிலை மற்றிரண்டும் கடந்தகுரு துரிய 

மாநிலைஎன் றுணர்கஒளிர் மேனிலையில் இருந்தே.

74
5788

நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி 

நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம் 
வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர் 

வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த் 
தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த் 

திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே 
தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த 

சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே.

75
5789

இவ்வுலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை 

எங்ஙனம்நான் இசைப்பதுவோ என்னினும்மற் றிதுகேள் 
எவ்வமுறும் இருட்பொழுதில் இருட்டறையில் அறிவோர் 

எள்ளளவும் காணாதே கள்ளளவின் றருந்திக் 
கவ்வைபெறக் கண்களையும் கட்டிமறைத் தம்மா 

கலக்கின்றார் கணச்சுகமும் கண்டறியார் கண்டாய் 
செவ்வையுறக் காலையில்என் கணவரொடு நான்தான் 

சேர்தருணச் சுகம்புகல யார்தருணத் தவரே.

76
5790

பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய் 

பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய் 
அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம் 

ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி 
இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய் 

இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான் 
துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும் 

தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே.

77
5791

அருளுடையார் எனையுடையார் அம்பலத்தே நடிக்கும் 

அழகர்எலாம் வல்லவர்தாம் அணைந்தருளும் காலம் 
இருளுடைய இரவகத்தே எய்தாது கண்டாய் 

எதனால்என் றெண்ணுதியேல் இயம்புவன்கேள் மடவாய் 
தெருளுடைஎன் தனித்தலைவர் திருமேனிச் சோதி 

செப்புறுபார் முதல்நாத பரியந்தம் கடந்தே 
அருளுறும்ஓர் பரநாத வெளிகடந்தப் பாலும் 

அப்பாலும் விளங்குமடி அகம்புறத்தும் நிறைந்தே.

78
5792

அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான் 

ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி 
இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி 

யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ 
செம்மாப்பில் உரைத்தனைஇச் சிறுமொழிஎன் செவிக்கே 

தீநுழைந்தால் போன்றதுநின் சிந்தையும்நின் நாவும் 
பன்மாலைத் தத்துவத்தால் அன்றிரும்பொன் றாலே 

படைத்ததுனைப் பழக்கத்தால் பொறுத்தனன்என் றறியே.

79
5793

நாடுகின்ற பலகோடி அண்டபகிர் அண்ட 

நாட்டார்கள் யாவரும்அந் நாட்டாண்மை வேண்டி 
நீடுகின்ற தேவர்என்றும் மூர்த்திகள்தாம் என்றும் 

நித்தியர்கள் என்றும்அங்கே நிலைத்ததெலாம் மன்றில் 
ஆடுகின்ற திருவடிக்கே தங்கள்தங்கள் தரத்துக் 

கானவகை சொல்மாலை அணிந்ததனால் அன்றோ 
பாடுகின்ற என்னுடைய பாட்டெல்லாம் பொன்னம் 

பலப்பாட்டே திருச்சிற்றம் பலப்பாட்டே தோழி.

80
5794

தொடுக்கின்றேன் மாலைஇது மணிமன்றில் நடிக்கும் 

துரைஅவர்க்கே அவருடைய தூக்கியகால் மலர்க்கே 
அடுக்கின்றோர்க் கருள்அளிக்கும் ஊன்றியசே வடிக்கே 

அவ்வடிகள் அணிந்ததிரு அலங்காரக் கழற்கே 
கொடுக்கின்றேன் மற்றவர்க்குக் கொடுப்பேனோ அவர்தாம் 

குறித்திதனை வாங்குவரோ அணிதரம்தாம் உளரோ 
எடுக்கின்றேன் கையில்மழுச் சிற்சபைபொற் சபைவாழ் 

இறைவர்அலால் என்மாலைக் கிறைவர்இலை எனவே.

81
5795

நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே 

நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய் 
வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும் 

மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே 
தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை 

தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும் 
ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே 

ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி.

82
5796

வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும் 

வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே 
தான்கொடுக்க நான்வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத் 

தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ 
தேன்கொடுத்த சுவைபோலே தித்தித்தென் உளத்தே 

திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம் 
யான்கொடுக்கும் பரிசிந்த மாலைமட்டோ தோழி 

என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே.

83
5797

என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும் 

இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம் 
நன்மாலை ஆகும்அந்தச் சொன்மாலை தனக்கே 

நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன் 
புன்மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா 

பொய்புகுந்தால் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே 
வன்மாலை நோய்செயுமே கேட்டிடவும் படுமோ 

மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே.

84
5798

உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின் 

உட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும் 
துரியர்துரி யங்கடந்த சுகசொருபர் பொதுவில் 

சுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே 
பெரியபதத் தலைவர்எலாம் நிற்குநிலை இதுஓர் 

பெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி 
அரியபெரும் பொருள்மறைகள் ஆகமங்கள் உரைக்கும் 

ஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே.

85
5799

மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம் 

மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ 
சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே 

சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ 
பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம் 

பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய் 
சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று 

தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.

86
5800

எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே 

இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம் 
கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே 

கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார் 
நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய் 

ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன் 
செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே 

சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.

87
5801

பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும் 

பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய் 
அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா 

யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன் 
பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன் 

பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன் 
துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன் 

சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே.

88
5802

சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச் 

சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய் 
பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய் 

பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ 
அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும் 

அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே 
சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத் 

திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி.

89
5803

எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் 

இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் 
மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும் 

விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்406 மீட்டும் 
இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில் 

இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ 
பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம் 

பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.

90
 406. கிளத்துகின்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க. 
5804

காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில் 

கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன் 
கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில் 

குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன் 
நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி 

நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே 
மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன் 

வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி.

91
5805

சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த 

சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே 
ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே 

அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன் 
ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம் 

உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம் 
சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச் 

சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.

92
5806

சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும் 

தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன் 
உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால் 

ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன் 
அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம் 

ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும் 
பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம் 

பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.

93
5807

நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி 

நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே 
ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய 

உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார் 
வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும் 

மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம் 
தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன் 

சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம்407 உரைப் பதுவே.

94
 (407). புணர்ச்சியினோ வேற்றம் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க. 
புணர்ச்சியினோ ரேற்றம் - பி. இரா. பதிப்பு.
 
5808

துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம 

சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன் 
குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம் 

குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன் 
குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம் 

கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர் 
மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து 

வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி.

95
5809

தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில் 

தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன் 
கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன் 

கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச் 
செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த 

சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன் 
இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால் 

இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி.

96
5810

அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர் 

அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம் 
இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால் 

எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம் 
மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம் 

மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன் 
தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத் 

திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே.

97
5811

புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான் 

புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம் 
சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம் 

செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ 
பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப் 

பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே 
மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன் 

மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே.

98
5812

தாயினும்பே ரருளுடையார் என்னுயிரில் கலந்த 

தனித்தலைவர் நான்செய்பெருந் தவத்தாலே கிடைத்தார் 
வாயினும்ஓர் மனத்தினும்மா மதியினும்எத் திறத்தும் 

மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார் 
ஆயினும்என் அளவின்மிக எளியர்என என்னை 

அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம் 
தூயஒளி பெற்றழியா தோங்குவடி வானேன் 

சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ.

99
5813

அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே 

ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார் 
செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம் 

திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார் 
பிறியாமல் என்னுயிரில் கலந்துகலந் தினிக்கும் 

பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம் 
அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க 

அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே.

100


திருச்சிற்றம்பலம் 
Back


 

143. சத்திய வார்த்தை (408) 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

5814.சிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமுகத்தே 
நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில் 
தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான் 
எவன்அ வன்திரு வாணைஈ திசைத்தனன் இனித்துய ரடையேனே.
1
 (408) அடிகள் அருளிய தலைப்பு. 


திருச்சிற்றம்பலம் 
Back


 

144. சத்திய அறிவிப்பு 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

5815.

ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர் 

ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை 
மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில் 

விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன் 
துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன் 

சுகஅமுதன் என்னுடைய துரைஅமர்ந்திங் கிருக்க 
வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே 

மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.

1
5816

தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற 

தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின் 
இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க 

இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற 
மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி 

மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே 
கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே 

களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.(409)

2
 (409) இத்திருப்பாட்டின் இறுதியில் "சத்திய அறிவிப்பு, சத்திய வார்த்தை" என அடிகள் 
எழுதியருளியுள்ளதாக ஆ.பா. குறிப்பிட்டுள்ளார்.
 
5817

சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய் 

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய் 
இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம் 

இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள் 
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும் 

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும் 
செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார் 

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.

3
5818

என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார் 

இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார் 
பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது 

பேர்உடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார் 
தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான் 

சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே 
மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே 

வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.(410)

4
 (410) இத்திருப்பாட்டின் இறுதியில் "இங்ஙனம் எல்லாம் வல்லவர் ஓதுக என்றபடி 
உரைத்துளேன்" என அடிகள் எழுதியருளியுள்ளதாக ஆ.பா. குறிப்பிட்டுள்ளார்.
 


திருச்சிற்றம்பலம்

ஆறாம் அருட்பா முற்றிற்று 

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய திருவருட்பா முற்றும் 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே

திருச்சிற்றம்பலம்

Related Content

Ramalingam Swamigal

Thiruvarutpa of ramalinga adikal (aka vallalar) - Part-II (v

Thiruvarutpayan of Umapathisivam - G U Pope

Thiruvarutpayan Of Umapathisivam - English Explanation By Mr

Thiruvasagam Part-1 - Romanized version