logo

|

Home >

puranas-stories-from-hindu-epics >

kandha-puranam-of-kachchiyappa-chivachariyar-surapadman-vathai-padalam

கந்தபுராணம் - யுத்த காண்டம் - சூரபன்மன் வதைப் படலம்

Kandapuranam of Kachchiyappa Sivachariyar

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய

யுத்த காண்டம் - சூரபன்மன் வதைப் படலம்


செந்திலாண்டவன் துணை

திருச்சிற்றம்பலம்

 

4. யுத்த காண்டம்

 

13. சூரபன்மன் வதைப் படலம்*

 

        ( * ஏழா நாள்முதல் பத்தா நாள்வரை சூரபன்மன் வதை நிகழ்ச்சி ஆகும்.  

சூரபன்மன் இறுதியாகச் சண்முகக்கடவுளோடு நான்குநாள் போர்புரிந்து மடிந்தான் என்பதை 

“ஸ..ஈரிரு, நாள்வரைத் துன்னலன் தொலையாது அமராற்றியே” எனவரும் இந்நூல்  

இப்படலத்தின் 409-ம் செய்யுள் அடிகளால் அறியலாம்.  மகேந்திரபுரியில் சூரபன்மனாதியோர் 

சண்முகப்பெருமானுடன் எதிர்த்துப் போர்புரிந்தது பத்துநாட்கள் ஆகும்.  

இதனை “சொல்லும் ஐந்திருவைகலின் அவுணர்தம் தொகையும், அல்லல் 

ஆற்றய சூரனும் முடிந்திட அடுதும்” எனவரும் கந்தபுராணம் - மகேந்திரகாண்டம் 

- சயந்தன் கனவுகாண் படலம் 11-ம் செய்யுளின் அடிகளால் அறியலாம்.)

 

கொற்ற வேற்படை பரித்திடும் ஆயிர கோடி

ஒற்றர் தங்களை நோக்கியே சூரனாம் உரவோன்

மற்றென் ஆட்சியாம் அண்டங்கள் எங்கணும் வைகிச்

சுற்று தானையைத் தம்மினோ கடிதெனச் சொன்னான்.     1

 

சொன்ன காலையின் நன்றென வணங்கியே தூதர்

பன்ன ருங்கதி கொண்டனர் விண்டனர் படர்ந்து

பொன்னின் மேதகும் அண்டங்கள் இடைதொறும் புகுந்து

மன்னர் மன்னவன் தன்பணி முறையினை வகுத்தார்.             2

 

வகுத்த காலையில் ஆண்டுறை அவுணமன் னவர்கள்

தொகுத்த நாற்பெருந் தானையங் கடலொடுந் துவன்றி

மிகுத்த அண்டத்தின் புடைதொறும் புடைதொறும் மேனாட்

பகுத்து வைத்திடும் வாயிலின் நெறிகளாற் படர்ந்தார்.             3

 

முந்தை அண்டத்தின் நெறிதனில் முழங்கிருஞ சேனை

வந்து வந்திவட் செறிவன விதியொடு மாறாய்ச்

சுந்த ரங்கெழு மாயன்இவ் வுலகுயிர் துய்ப்ப

உந்தி யின்வழி அங்கவை தோன்றுமா றொப்ப.           4

 

பூதம் யாவையும் உயிர்களும் புவனமுள் ளனவும்

பேதம் நீங்கிய சுருதியா கமங்களும் பிறவும்

ஆதி காலத்தின் அநாதியாம் எம்பிரான் அளப்பில்

பாத பங்கயத் துதிப்பவும் போன்றன பகரின்.                     5

 

இனைய தன்மையால் அண்டத்தின் நெறிதனில் ஏகும்

வனைக ருங்கழல் அவுணர்தம் படையிவண் வரலுங்

கனலி தன்சுடர் மறைந்தன நடுங்கினன் கனலும்

அனிலன் தானுமெய் வியர்த்தனன் நெருக்கமுற் றயர்வான்.        6

 

ஆ£¢த்த ஓசையால் அகிலமுந் துளங்கிய அவுணர்

கார்த்த மெய்யொளி கதுவலால் இருண்டன ககனந்

தூர்த்த பூழியால் ஆழிகள் வறந்தன துணைத்தாள்

பேர்த்து வைத்திடு தன்மையால் அண்டமும் பிளந்த.              7

 

கூடும் இப்பெருந் தானையை நோக்கிமெய் குலைவுற்

றோடு தற்கிடம் இன்றிநின் றிரங்கினர் உம்பர்

வீடி னானென வாசவன் மருண்டனன் விதியும்

நீடு மாயனும் முடிவதென் னோவென நினைந்தார்.               8

 

பூத லந்தனில் அம்பர நெறிதனில் புடைசூழ்

மாதி ரங்களில் அளக்கரின் வரைகளில் வழியில்

பாத லங்களில் பிறவினில் அவுணர்தம் படைகள்

ஏதும் வௌ¢ளிடை இன்றியே சென்றன ஈண்டி.           9

 

மலர யன்பதம் மால்பதம் முனிவர்கள் வைகும்

உலகம் வாசவன் தொன்னகர் ஏனையோர் உறையுள்

அலரி யாதியர் செல்கதி பிலங்களில் அனிகம்

பலவும் நின்றன செல்லிடம் பெறாதபான் மையினால்.            10

 

மாறி லாதன தொல்லையண் டங்களின் வந்த 

வீறி லாததோர் தூசிகள் படர்ந்திடும் எல்லை

நூறு கோடியோ சனைகளென் றறிஞர்கள் நுவன்றார்

வேறு பின்வருந் தானையின் பெருமையார் விதிப்பார்.            11

 

குறுமை யாமுயிர் வாழ்க்கையர் கொண்டதொல் வளம்போற்

சிறுமை யோவிது விரித்திட அவுணர்கோன் சேனை

அறிஞர் கூறிய பெருந்தொகை தன்னினும் அடங்கா 

பிறிது மற்றிதற் குவமையும் ஒன்றிலை பேசின்.                  12

 

அஞ்சு பட்டிடு பூதங்கள் பல்லுரு வமைந்து

நெஞ்சு பட்டிடும் உயிர்கொடு நேருமேல் நிகரும்

அஞ்சு பட்டிடு பொருப்பெலாஞ் சூறைமுன் மயங்கும்

பஞ்சு பட்டிட நடந்திடு தூசிமுற் படையே.                13

 

அந்த மின்றியே அகன்புவி கொண்டஅண் டத்தில்

வந்தி டுந்திறற் படைகளின் பெருமையா£¢ வகுப்பார்

முந்து தூசிகள் மகேந்திரப் பெருநகர் மூடி

இந்த வண்டத்தின் இடமெலாம் நிறைந்தன இமைப்பில்.   14

 

ஆன காலையில் ஒற்றர்போய்ச் சூரனை யடைந்து

பானல் மெல்லடி கைதொழு தையநீ படைத்த

சேனை வந்தயல் நின்றன தூசிமுற் சென்று

வானு லாவுபேர் அண்டத்தை நெருக்கின மன்னோ.               15

 

என்னும் எல்லையில் நன்றென அவுணர்கோன் எழுந்து

தன்ன தாகிய உறையுள் போய்த் தடம்புன லாடித்

துன்னும் ஐவகை உணவுடன் அறுசுவை தொடர்ந்த

அன்னம் உண்டனன் நஞ்சுகொல் மருந்துகொல் அதுவே.   16

 

நீற ணிந்தனன் நெற்றிமெய்ந் நிரைவிரை களபச்

சேற ணிந்தனன் பூந்தொடை பங்கியிற் செறித்தான்

மாறில் பொற்சுடர்க் கலையுடன் அணிகலன் மாற்றி

வேறு வேறுநன் கினியன புனைந்தனன் விரைவில்.               17

 

ஈசன் மாப்படை ஏனையோர் பெரும்படை யாவும்

மாசில் ஆயிர கோடிதேர் செலுத்தியே அவையுங்

கேச ரித்திறல் யானமுங் கேடில்பொற் றேரும்

பாச னத்திறல் அவுணர்கொண் டேகுவான் பணித்தான்.    18

 

ஆங்க வெல்லையிற் சூரபன் மாவெனும் அவுணன்

பாங்கர் வந்திடு வலவர்தந் தொகையினைப் பாரா

ஓங்கு மோ£¢தடந் தேரினைக் கொணர்திரென் றுரைப்பப்

பூங்க ழற்றுணை வணங்கியே நன்றெனப் போனார்.               19

 

வாட்டு கேசரி எழுதி னாயிரம் வயமாக்

கூடடம் அங்கணோ ரெழுபதி னாயிரங் கூளி

ஈட்ட மாகிய தெழுபதி னாயிரம் ஈர்ப்பப்

பூட்டி நன்குறப் பண்ணினார் ஆங்கொரு பொலன்தேர்.     20

 

மண்ட லத்தினும் ஆன்றபேர் இடத்தது மருங்கில்

தெண்டி ரைக்கட லாமென ஆர்ப்பது செறிந்த

அண்ட மாயிர கோடியுந் தன்னிடத தாற்றிக்

கொண்டு நின்றிடும் வலியது மடங்கலங் கொடித்தேர்.      21

 

முடியும் எல்லையில் எழுதரு மருத்தினும் உந்திக்

கடிது செல்வது சென்றிடு விசையினால் ககுபத்

தடநெ டுங்கிரி அலமரத் தபனருங் குளிர 

வடவை யங்கிகள் விளிந்திடப் புரிவதம் மான்தேர்.               22

 

ஏழு நேமியும் இடைப்படு தீபமும் யாவுஞ்

சூழு கின்றபேர் அடுக்கலும் ஒன்றிய தொடர்பின்

கேழில்¢ பன்மணி ஓவியப் பத்திகள் கெழுவும்

ஆழி தாங்கிய அண்டமொத் திலங்கிய தகன்தேர்.          23

 

தொழுத குந்திறல் அவுணர்கோன் வேள்வியில் துஞ்சி

எழுவ தாகிய எல்லையில் தோன்றிய தெதிர்ந்தார்

குழுவி ரிந்திடத் துரப்பது நான்முகக் குரிசில்

அழியும் நாளினும் அழிந்திடா திருப்பதவ் வகல்தேர்.              24

 

கண்ண கன்படை அளப்பில பரித்தது காமர் 

விண்ண வர்க்குள வலியெலாங் கொண்டது மேனாள்

அண்ணல் நல்கிய இந்திர ஞாலமும் அனைய 

தெண்ணின் மேற்படு மியாணர்பெற் றுடையதவ் விரதம்.  25

 

அனைய தாகிய தேரினை வலவர்கொண் டணைந்து

தினக ரன்தனை வெகுண்டவன் தாதைமுன் செலுத்தத்

துணை மற்றதில் இவர்ந்தனன் இவர்தலுந் தொழுது

புனைதி வாகையென் றவுணர்கள் பூமழை பொழிந்தார்.    26

 

பொழிந்த காலையில் வலவர்கள் அங்கதிற் புக்குக்

கழிந்த சீர்த்தியான் ஆணையால் தேரினைக் கடவத்

தழிந்த ழீமெனப் பல்லியம் இயம்பின சகங்கள்

அழிந்த நாளெழு கடலென அவுணர்கள் ஆர்த்தார்.         27

 

அங்கி யன்னபொற் படியகங் கோடிகம் அடைப்பை

திங்கள் வெண்குடை கவரிகொண் டொழுகினர் சிலதர்

துங்க மிக்கவன் சீர்த்தியும் ஆணையுந் தொடர்ந்து

மங்க லந்திகழ் உருக்கொடு சூழ்ந்திடும் வகைபோல்.              28

 

அண்ணல் மேவரு கோநகர் எல்லையுள் அடைந்த

எண்ணில் மாப்பெருஞ் சிகரியின் வாயில்கள் இகந்தே

கண்ண கன்ஞௌ¢ளல் ஆயிர கோடியுங் கடந்து

வண்ண மாமணிக் கோபுர முதற்கடை வந்தான்.          29

 

வேறு

 

தானவர் கோமகன் தடம்பொற் றேரொடு 

மாநகர் முதற்கடை வாயில் போதலும்

ஆனது நோக்கியே அங்கட் சூழ்தரு

சேனைகள் ஆர்த்தன உடுக்கள் சிந்தவே.          30

 

ஞெலிததிடு பரவையின் நீல வெவ்விடம்

ஒலித்தெழுந் தாலென உலப்பில் தானைகள்

கலித்தன படர்ந்தன கண்ண கன்புவி

சலித்தது கொடியரைத் தரிக்கொ ணாமையால்.    31

 

நேரியம் பரியதோர் நிசாளஞ் சல்லிகை

பேரியம் பணைவயிர் பிறங்கு தண்ணுமை

தூரியம் காகளந் துடிமு தற்படு

சீரியம் பலவுடன் இயம்பிச் சென்றவே.                  32

 

சேயின குஞ்சிகள் செறிந்த தானவர்

பாயின தானையில் படர்ந்த பூழிகள்

வாயின பரவைமேல் வடவைத் தீவிராய்ப்

போயின நாளெழு புகையைப் போன்றவே.               33

 

வானினும் மண்ணினும் மாதி ரத்தினுந்

தானிறை கடலினுந் தணப்பின் றாகியே

மேனிறை பூழிகள் மிடைய எங்கணுஞ்

சோனைகொள் பின்பனித் தூவல் போன்றவே.     34

 

சூரனி கரத்தெழு தூளி அந்நகர்

ஆரகில் ஆவியும் யாரும் ஆடிய

பூரிகொள் சுண்ணமும் பொருந்திப் போவது

காரின மின்னொடு கடலுண் டேகல்போல்.        35

 

திண்டிறற் கரிகளில் தேரில் வெண்கொடி

மண்டுறு பூழிதோய் வானிற் செல்வன

கொண்டலின் இருதுவிற் கொக்கின் மாலைகள்

தண்டுளி யுறைப்புழிப் படருந் தன்மைபோல்.             36

 

படைவகை திசையெலாம் படரப் பாயிருள்

அடைவது சூரறிந் தண்டம் யாவினும்

மிடைதரு கதிர்களை விளிக்க வந்தெனக்

குடைநிரை எங்கணுங் குழுமு கின்றவே.         37

 

வெம்பரி  கரியுமிழ் விலாழி மாமதம்

இம்பரின் நகரெலாம் யாற்றின் ஏகலால்

உம்பர்மற் றல்லதை ஒருவன் தானைகள்

அம்புவி சென்றிடற் கரிய தானதே.                      38

 

இவ்வகை தானைகள் ஈண்டிச் சென்றிடத்

தெவ்வலி அவுணர்கோன் செம்பொற் றேரின்மேல்

மைவரை மேருவின் வருவ தாமெனக்

கவ்வையின் அமர்புரி களரி ஏகினான்.                   39

 

பூசலின் எல்லையில் புரவ லன்செலத்

தூசிய தாகியே தொடர்ந்த தானைகள்

ஈசன தருள்மகன் இனிது வைகிய

பாசறை சூழ்ந்தன படியும் வானுமாய்.                   40

 

உரற்றிய கணமழை உம்பர் சூழ்ந்தென

விரற்றொடு சூழ்படை ஈட்டம் நோக்கியே

மரற்றுறு பலங்களில வாரி கண்வர

அரற்றினர் வெருவினர் அமரர் யாவரும்.         41

 

அழுங்கினன் புரந்தரன் அகிலம் யாவையும்

விழுங்குறும் இருவரும் விம்மி னாருளம்

புழுங்கினர் வீரர்கள் பூதர் ஏங்கினார்

கொழுங்கனல் இடைப்படு விலங்கின் கொள்கைபோல்.42

 

ஆவதோர் காலையில் அரியும் நான்முகத்

தேவனும் ஏனைய திசையி னோர்களும்

மூவிரு முகமுடை முதல்வன் தன்னிரு

பூவடி பணிந்திவை புகறல் மேயினார்.                   43

 

வேறு

 

அந்தமி லாத அண்டம் ஆயிரத் தெட்டுத் தன்னில்

வந்திடு தானை யோடு மாபெருஞ் சூர பன்மன்

உந்திய தேரின் மேலான் உறுசமர் புரிவான் போந்தான்

முந்திய தூசி நந்தம் பாசறை மொய்த்த தென்றார்.                44

 

என்னலும் முறுவல் செய்தாங் கிலங்கெழில் தவிசின் வைகும்

பன்னிரு கரத்து வள்ளல் பவனனைக் குறிப்பின் நோக்க

முன்னம துணர்ந்து வல்லே முளவுகோல் கயிறு பற்றிப்

பொன்னவிர் மனவே கப்பேர்ப் புரவிமான் தேர்முன் உய்த்தான்.     45

 

உய்த்திடு கின்ற காலத் தொய்யென எழுந்து காமர்

புத்தலர் நீபத் தாரான் புகர்மழுக் குலிசஞ் சூலஞ்

சத்திவாள் பலகை நேமி தண்டெழுச் சிலைகோல் கைவேல்

கைத்தலங் கொண்டான் என்னின் அவன்தவங் கணிக்கற் பாற்றோ.  46

 

மாறிலா அருக்கன் நாப்பண் வைகிய பரம னேபோல்

ஆறுமா முகத்து வள்ளல் அலங்குளைப் புரவி மான்தேர்

ஏறினான் வீர வாகு இலக்கரோ டெண்ம ராகும்

பாறுலாங் குருதி வேலார் பாங்கராய்ப் பரசி வந்தார்.                      47

 

இராயிர வௌ¢ள மாகும் எண்டொகைப் பூதர் யாரும்

மராமரம் பிறங்கல் ஈட்டம் வரம்பறு படைகள் பற்றி

விராவினர் சூழ்ந்து சென்றார் விரிஞ்சனே முதலோர் யாரும்

பராவொடு புடையின் நின்று பனிமலர் மாரி தூர்த்தார்.                    48

 

தூர்த்திடு கின்ற காலைச் சுருதியின் தொகைக்கும் எட்டாத் 

தீர்த்தன்மான் றேர்மே லாகித் திண்புவி அண்டந் தன்னில்

பேர்த்திடும் உயிர்கள் மாற்றப் பின்னறு முன்னோன் போல

ஆர்த்திடு தானை வௌ¢ளத் தவுணர்கள் மீது போனான்.           49

 

ஆங்கது காலை தன்னில் ஆறிரு தடந்தோள் ஐயன்

பாங்குறு பூதர் யாரும் பாரொடு திசையும் வானும்

நீங்குத லின்றிச் சூழும் நேரலன் படையை நோக்கி

ஏங்கினர் தொல்லை வன்மை இழந்தனா¢ இனைய சொற்றார்.             50

 

தீயன புரியுஞ் சூரன் செய்திடு தவத்தாற் பெற்ற

ஆயிர விருநான் கண்டத் தவுணரும் போந்தார் அன்றே

ஏயதோ ரண்டம் ஒன்றில் இருந்தனர் இவர்மற் றன்றால்

மாயிருந் திசையும் விண்ணும் வையமுஞ் செறிந்து நின்றார்.             51

 

வரத்தினிற் பெரியர் மாய வன்மையிற் பெரியர் மொய்ம்பின்

உரத்தினிற் பெரியர் வெம்போர் ஊக்கத்திற் பெரியர் எண்ணில்

சிரத்தினிற் பெரியர் சீற்றச் செய்கையிற் பெரியர் தாங்குங்

கரத்தினிற் பெரியர் யாருங் காலனிற் பெரியர் அம்மா.                    52

 

மாகத்தின் வதிந்த வானோர் வன்மையும் வளனும் வவ்விச்

சோகத்தை விளைத்து வெம்போ£¢ தொடங்கியே தொலைவு செய்தோர்

மோகத்தின் வரம்பாய் நின்றோ£¢ முழுதுயிர்க் கடலுள் வேட்கை

மேகத்தின் வலிந்த தீயோர் விரிஞ்சன்ஏற் றிடினும் வெல்வோர்.    53

 

கூற்றெனும் நாமத் தண்ணல் கொண்டிடும் அரசுஞ் செங்கேழ்

நூற்றிதழ்க் கமல மேலான் நுனித்தனன் விதிக்கு மாறு

மாற்றிடுஞ் செய்கை வல்லோர் மாநில முழுதுண் டாலும்

மாற்றரும் பசிநோய் மிக்கோ ரண்டங்கள் அலைக்குங் கையோர்.    54

 

வெங்கனல் சொ£¤யுங் கண்ணார் விரிகடற் புரைபேழ் வாயார்

பங்கமில் வயமேற் கொண்டோ£¢ பவத்தினுக் குறையு ளானோர்

செங்கதிர் மதியந் தோயுஞ் சென்னியர் செயிர்தீர் ஆற்றல்

அங்கத விறையும் பேர அடிபெயர்த் துலவும் வெய்யோர்.          55

 

அங்கிமா முகத்தி னான்போல் அடைந்தனர் பல்லோர் யாளித்

துங்கமா முகத்தி னான்போல் தோன்றினர் பல்லோர் சூழி

வெங்கைமா முகத்தி னான்போல் மேயினர் பல்லோர் மேலாஞ்

சிங்கமா முகத்தி னான்போல் திகழ்ந்தனர் பல்லோர் அன்றே.               56

 

மதுவொடு ஆடை பன்போல் வந்தனர் பல்லோர் யாருந்

துதியுறு புகழச்சுந் தோப சுந்தரிற் செறிந்தோர் பல்லோர்

அதிர்கழற் சலந்த ரன்போல் ஆர்த்தனர் பல்லோர் ஆற்ற

முதிர்சின மகிடன் போல மொய்த்தனர் பல்லோர் அம்மா.          57

 

அரன்படை பரித்தோர் பல்லோர் அப்புயத் தவிசின் மேவும்

வரன்படை பரித்தோர் பல்லோர் மழுவொடு தண்டந் தாங்குங்

கரன்படை பரித்தோர் பல்லோர் கால்படை பரித்தோர் பல்லோர்

முரன்படை படுத்த கொண்டல் முதுபடை பரித்தோர் பல்லோ£¢.    58

 

ஆனதொ ரவுண வௌ¢ளம் அநந்தகோ டியதாம் என்றே

தானுரை செய்வ தல்லாற் சாற்றவோ ரளவும் உண்டோ

வானமும் நிலனும் ஏனை மாதிர வரைப்பும் எங்குஞ்

சேனைக ளாகிச் சூழின் யாமென்கொல் செய்வ தம்மா.            59

 

ஒரண்டத் தவுணர் போரால் உலைந்தயாம் ஒருங்கே யெல்லாப்

பேரண்டத் தோருந் தாக்கிற் பிழைப்புறு பரிசும் உண்டோ

காரண்ட அளக்கர் சாடிக் கனவரை எறியுங் கால்கள்

ஏரண்டச் சூழல் புக்கால் அவைபின்னும் இரக்க வற்றோ.          60

 

ஒருவரே எம்மை எல்லாம் உரப்பியே துரப்பர் பின்னை

இருவரே சென்று தாக்கின் யார்இவண் உய்ய வல்லார்

துருவரே யனைய துப்பிற் சூழுறும் அவுணர் யாரும்

பொருவரே என்னில் நேர்போய்ப் பூசலார் தொடங்கற் பாலார்.              61

 

எல்லையில் ஆற்றல் கொண்ட எம்முடைத் தலைவர் யாரும்

அல்லன வீரர் தாமும் அவுணரை எதிர்க்க லாற்றா£¢

கல்லொடு மரத்தால் யாமோ அவர்திறல் கடக்க வல்லேம்

ஒல்லைநம் உயிரும் இன்றே ஒழிந்தன போலும் அன்றே.         62

 

நாற்படை அவுணர் தாக்கின் நாமெலாம் விளிதும் வீரர்

காற்படு பூளை யேபோற் கதுமென இரிவர் வாகைப்

பாற்படு திறலோன் நிற்கிற் பழிபடும் இனைய ரோடும்

வேற்படை யொருவன் அன்றி வேறியார் எதி£¢க்க வல்லார்.               63

 

நீடுறு திசையும் வானும் நிலனும்வௌ¢ ளிடைய தின்றிப்

பாடுற வளைந்து கொண்டார் பற்றலர் அதனால் யாமும்

ஓடியும் உயய லாகா ஒல்லுமா றவரைத் தாக்கி

வீடுதல் உறுதி யென்றே விளம்பிமேற் சேற லுற்றா£¢.                   64

 

மற்றத காலை தன்னில் மாபெரும் பூத சேனைக்

கொற்றவர் பலரும் ஏனை வீரர்தங் குழுவி னோரும்

வெற்றிகொள் மொய்ம்பன் தானும் மிடைந்துசூழ் படையை நோக்கி

இற்றன கொல்லோ நந்தம் வன்மையென் றெண்ண முற்றார்.              65

 

அண்டர்கள் முதல்வன் தானும் அமரரும் அகில மெங்கு

தண்டுத லின்றிச் சூழுந் தானவர் அனிக மெல்லாங்

கண்டனர் துளங்கி அஞ்சிக் கவன்றனர் அவருட் காரி

வண்டுள அலங்கற் சென்நி வானவற் கினைய சொல்வான்.        66

 

ஆண்டகை முருகன் தன்மேல் ஆயிர விருநா லண்டத்

தீண்டிய தானை யெல்லாம் இறுத்தன இவற்றி னோடு

மூண்டமர் இயற்றி வெல்ல வூழிநாள் முடியும் என்றான்

மாண்டிடு கின்ற தெங்ஙன் அவுணா¢கள் மன்னன் மன்னோ.        67

 

அடுதிறல் வலிபெற் றுள்ள அவுணராம் பானாட் கங்குல்

விடிவதும் அமரர் தங்கள் வெஞ்சிறை வீடு மாறும்

நெடியதொல் வெறுக்கை தன்னை நீங்கிய நமது துன்பம்

முடிவது மில்லை கொல்லோ மொழிந்தருள் முதல்வ என்றான்.    68

 

இந்திரன் இனைய தன்மை இசைத்தலும் இலங்கை காத்த

ஐந்திரு சென்னி யானை அடுதிறல் கொண்டு நின்ற

செந்திரு மருமத் தண்ணல் தேவரை அளிக்குந் தொல்லோன்

புந்திகொள் கவலை நாடி இனையன புகலா நின்றான்.             69

 

காலமாய்க் காலம் இன்றிக் கருமமாய்க் கரும மின்றிக்

கோலமாய்க் கோலம் இன்றிக் குணங்களாய்க் குணங்கள் இன்றி

ஞாலமாய் ஞாலம் இன்றி அநாதியாய் நங்கட் கெல்லாம்

மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகங்கொண் டுற்றான்.                70

 

குன்றுதொ றாடல் செய்யுங் குமரவேள் மேரு வென்னும்

பொன்றிகழ் வெற்பின் வந்து புவனங்கள் முழுதும் அங்கட்

சென்றுறை உயிர்கள் முற்றுந் தேவருந் தன்பாற் காட்டி

அன்றொரு வடிவங் கொண்ட தயர்த்தியோ அறிந்த நீதான்.         71

 

பொன்னுரு வமைந்த கஞ்சப் புங்கவ னாகி நல்கும்

என்னுரு வாகிக் காக்கும் ஈசன்போல் இறுதி செய்யும் 

மின்னுரு வென்ன யார்க்கும் வௌ¤ப்படை போலும் அன்னான்

தன்னுரு மறைக ளாலுஞ் சாற்றுதற் கரிய தன்றே.                       72

 

பாயிருங் கடலிற் சூழ்ந்த பற்றலர் படையை எல்லாம்

ஏயெனும் முன்னம் வீட்டுஞ் சிறுவனென் றெண்ணல் ஐய

ஆயிர கோடி கொண்ட அண்டத்தின் உயிர்கட் கெல்லாம்

நாயகன் அவன்காண் நாஞ்செய் நல்வினைப் பயனால் வந்தான்.    73

 

சூரனே முதலோர் தம்மை இமைப்பினில் தொலைக்க உன்னின்

மூரலால் அடுவன் கொண்ட முனிவினால் அடுவன் வாய்மைச்

சீரினால் அடுவன் நாட்டச் செய்கையால் அடுவன் என்றால்

நேரிலா முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற் பாலார்.          74

 

பாரிடர் சேனை யோடு படர்ந்ததும் இலக்கத் தொன்பான்

வீரர்கள் புடையில் போற்ற மேயதும் படைகள் பற்றிச்

சூரனை அடுவான் வந்த சூழ்ச்சியுந் தூக்கின் மாதோ

வாரண முதலா மேலோற் கனைத்துமோ ராட லேகாண்.           75

 

துய்யதோர் குமர னேபோல் தோன்றிய முதல்வன் சூழ்ந்த

வெய்யதா னவரை யெல்லாம் விரைந்துடன் அறுத்து நீக்கிக்

கையில்வேல் அதனாற் சூரன் ஆற்றலுங் கடக்கும் யாதும்

ஐயுறேல் காண்டி யென்றான் அறிதுயில் அமா¢ந்த பெம்மான்.             76

 

மாலிவை பலவுங் கூறி மகபதி உளத்தைத் தேற்றி

ஓலமொ டவுண வௌ¢ளம் உம்பருஞ் செறிந்த செவ்வேள்

பாலுற நின்று போரின் பரிசினைப் பார்த்து மென்றே

வேலைடை முதல்வன் பாங்கா விண்ணவ ரோடும் போந்தான்.     77

 

வேறு

 

அன்ன தன்மைகண் டறுமுகன் முறுவல்செய் தடுபோர்

உன்னி யேகலும் வானமும் வையமும் ஒன்றாத்

துன்னு தானவப் பெருங்கடல் ஆர்த்தமர் தொடங்க

முன்ன மேகிய பாரிடர் யாவரும் முரிந்தார்.                             78

 

முரிந்த காலையில் பூதரின் முதல்வர்கள் முரட்போர்

புரிந்து சாய்ந்தனர் இலக்கரோ டெண்மரும் பொருதே

இரிந்து நீங்கினர் இன்னதோர் தன்மைகள் எல்லாந்

தெரிந்து திண்டிறல் மொய்ம்பினோன் சிலைகொடு சேர்ந்தான்.      79

 

சோ¢பு தன்சிலை வாங்கியே சரமழை சிதறி

நேர்பு குந்திடும் அவுணர்கள் நெடுந்தலை புயங்கள்

மார்பு வெங்கரங் கழலடி வரைகளாய் வீழ

ஈர்பு நின்றமர் இயற்றினன் சிறுவரை இகலி.                             80

 

மாக மேல்நிமிர் ஆயிர கோடிமா கடலுள்

நாக மொன்றுசென் றலைத்தென நண்ணலர் எதிர்போய்

ஆக வம்புரிந் துலப்புறாத் தன்மைகண் டழுங்கி

ஏக நாயகன் தனதுபால் வந்தனன் இளவல்.                              81

 

காலை யங்கதில் அவுணர்தந் தானையோர் கனத்தின்

சாலம் ஓடின பூதரில் தலைவருஞ் சாய்ந்தார்

கோல வெஞ்சிலை வீரரும் முரிந்தனர் குழவிப்

பால னேயிவண் வருமெனச் சூழ்ந்தனர் பலரும்.                 82

 

தண்டு நேமியுங் குலிசமுஞ் சூலமுந் தனுக்கள்

உண்டு மிழ்ந்திடு வாளியும் உடம்பிடித் தொகையும்

பிண்டி பாலமுங் கணிச்சியும் பாசமும் பிறவும்

அண்டர் தந்திடு படைகளுஞ் சொரிந்துநின் றார்த்தார்.             83

 

பாரி டங்களின் படையெலாம் நெக்கதும் பாங்கர்

வீர மொய்ம்பனும் இளைஞரும் வருந்திமீண் டதுவுங்

காரி னம்புரை அவுணர்தஞ் செய்கையுங் காணா

மூரல் செய்தனன் எவ்வகைத் தேவா¢க்கு முதல்வன்                      84

 

நாட்டம் மூன்றுடைத் தாதைபோற் சிறிதிறை நகைத்து

நீட்ட மிக்கதோர் சிலையினை நெடுங்கரம் பற்றிக்

கோட்டி நாணொலி கொண்டிட அண்டருங் குலைந்தார்

ஈட்ட மிக்கபல் லுயிர்களுந் துளக்கமெய் தினவே.                 85

 

வேறு

 

முக்கணன் உதவிய திருமுருகன் முரணுறு வரிசிலை முதிரொலிபோய்த்

தொக்கன செவிதொறும் நுழைதலுமே தொலைவறும் அவுணர்கள் தொகைமுழுதும்

நெக்கன பகிர்வன இரதமெலாம் நிரைபட வருபரி புரள்வனவே

மைக்கரி தரைமிசை விழுவனவான் மதிதொடுநெடுவரை மறிவனபோல்.    86

 

மாசறு மறைகளின் மறையதனை மலைமுனி யுணர்வகை யருள்புரியந்

தேசிக முதலவன் வரிசிலையிற் செறிமுகில் உறைவகை சிதறுவபோல்

ஆசுகம் அளவில கடவினனால் அடங்கெழும் அவுணர்கள் புடைவளையும்

காசினி அகலமும் விரிகடலுங் ககனமும் மிடைவன கணையெனவே.      87

 

கொடிகளை அடுவன அளவிலவே குடைகளை அடுவன அளவிலவே

படைகளை அடுவன அளவிலவே பரிகளை அடுவன அளவிலவே

கடகரி அடுவன அளவிலவே கனையொலி இரதமொ டவுணர்கள் தம்

முடிகளை அடுவன அளவிலவே முழுதுல குடையவன் விடுசரமே.        88

 

பரவிய தருவினம் என அவுணப் படைநிரை விழுவன தொடுகடலில்

திரையென விழுவன புரவிஇனந் திருநெடு வரைகளின் விழுவனதேர்

கருமைகொள் மணிமுகில் இனமெனவே கடகரி விழுவன கனவரைசூழ்

இரவியும் மதியமும் விழுவனபோல் எழுவன கவிகையும் விழுவனவே.   89

 

செல்லுறு தாள்களும் அடுபடைகள் சிந்திய செங்கைகளுந் திறலே

சொல்லிய வாய்களும் விம்மலுறுந் தோள்களும் நோக்குறு துணைவிழியுங்

கல்லென ஆர்த்திடு கந்தரமுங் கவசமும் வீரர்கள் துவசமுடன்

எல்லையி லாதமர் தனிமுதல்வன் எய்திடும் வாளிகள் கொய்திடுமே.               90

 

                       வேறு

 

வட்டணை கொண்டிடு மால்வரையும், எட்டெனும் ஓங்கலும் யானைகளும்

பட்டுரு விக்கணை பாறினவால், ஒட்டலர் எங்ஙனம் உய்குவதே.          91

 

பொன்னுல கெல்லைபு குந்துலவும் அன்னமு யர்த்திடும் அண்ணல்பதந்

துன்னுறும் அச்சுதர் தொல்லுலகின், மின்னென வேசெலும் வேள்கணையே. 92

 

மேதினி கீண்டு விரைந்துபுகும், பாதல மூல பரந்துசெலும்

மூதகும் அண்ட முகட்டுருவும், மாதிரம் ஏகுறும் வள்ளல்சரம்.                    93

 

மூவிரு செய்ய முகத்தொருவன், ஏவிய செஞ்சரம் எங்குமுறா

மேவலர் தங்களை வீட்டிடும்வே, றேவர்கள் கண்ணும் இறுத்திலவே.              94

 

ஆனனம் ஆறுள அண்ணல்சரம், தானவர் சென்னிகள் தள்ளுதலும்

வானிடை போயின மாண்கதிர்கள் மேனிம றைப்புறும் வெய்யவர்போல்.    95

 

வாளெழு வேல்பிற வாங்கினர்தந், தோள்களை வாளி துணித்தெறிய

நீளிடை சென்று நிரந்திடுதங், கேளிரை அட்டன கீழ்மையர்போல்.          96

 

மாசகல் வானக மாதிரவாய், காசினி வேலைகளத தின்அகம்

பாசறை சுற்றிய பாடியெலாம், ஆசற அட்டனன் அற்புதனே.                      97

 

அட்டிடு கின்றுழி அம்புயன்மால், ஒட்டுறு வாசவன் உள்மகிழாக்

கெட்டனர் தானவர் கேடில்துயர், விட்டனம் என்று விளம்பினரே.          98

 

அடைந்தனர் விம்மிதம் ஆங்கவுணர், மிடைந்த நோக்கினர் வேற்படையோன்

தடிந்தது காண்சிலர் தாரணிமேற், கிடந்தது கண்டனர் கேசரரே.            99

 

அலமரு பாரிடர் அவ்வவர்தந், தலைவர்கள் ஏனையர் தானவர்தம்

மலிபடை சாய்த்து வயம்புனைவிற், புலவனை ஆர்ப்பொடு போற்றினரே.   100

 

வள்ளல்ச ரம்பட வான்முகடு, கொள்ளுறு தானை குழாந்தொலைய

வௌ¢ளிடை யாயின விண்ணவர்தம், உள்ளக மாற்றவு வப்புறவே.               101

 

அண்டக டாகம தப்புறமாய்க், கொண்டிடு தானவர் கொள்கையிது

கண்டிறை வன்கழல் காணநெறி, உண்டினி யென்றனர் உள்மகிழ்வார்.      102

 

காற்றென அண்ட கடாகநெறி, தோற்றிய வாயில் தொடர்ந்துபுகா

மேற்றிகழ் தேர்கரி வெம்பரியின், ஏற்றமொ டொல்லென ஏகினரால்.               103

 

அந்நெறி ஏகியிவ் வண்டமெலாந், துன்னினர் வான்புவி சூழ்ந்துவௌ¤

என்னது மில்லென ஈண்டினரால், முன்னுறவந்து முடிந்தவர்போல்.         104

 

சூரன் எனப்படு தொல்லிறைவன், பேரமர் ஆற்றிடு பெற்றியினால்

தேரிடை வந்துறு செய்கைதெரீஇ, ஆர்வமொ டேநெடி தார்த்தனரே.               105

 

ஆர்த்தனர் தம்முன் அடைந்துளர்தாம், பேர்த்திடு கின்ற பிணக்கிரியாய்

ஈர்த்திடு சோரி இடைப்படுதல், பார்த்தனர் சிந்தை பரிந்தனரே.             106

 

பரிந்தனர் நம்படை பட்டிடவே, புரிந்திடு வானொடு போர்புரியா

விரைந்து வயங்கொடு மீடுமெனாத், தெரிந்தனர் சிந்தனை தேற்றினரே.     107

 

தேற்றிடு கின்றுழி தேவரெலாம், போற்றிட வீரர் புடைக்கணுற

ஆற்றல்கொள் பூதர்கள் ஆர்த்திடவே, தோற்றினன் ஈறொடு தோற்றமிலான். 108

 

சேயுரு வாகிய சீர்முதல்வன் மேயது கண்டு மிகச்சிறியன்

பாய்பரி யானை படைத்துமிலான், ஏயிவ னேநம தெண்ணலனே.          109

 

ஆண்டகை மைந்தனிவ் வண்டமெலாம், ஈண்டியதானை இமைப்பொழுதின்

மாண்டிட அட்டனன் மற்றிதுதான், ஈண்டிடும் அற்புத நீர்மையதே.          110

 

அன்னது நின்றிட அங்கவன்மேல், மன்னவர் மன்னவன் வந்துபொரு

முன்னமர் ஆற்றி முடிக்குதும்யாம், என்ன இயம்பினர் யாவருமே.         111

 

தற்பமொ டின்னன சாற்றியவண், முற்படு  தானவர் முக்கணுடைத்

தற்பரன் நல்கிய சண்முகனை, வற்புடன் ஆர்த்து வளைந்தனரால்.         112

 

வளைந்திடு காலையில் வானவர்கள், உளைந்தனர் பூதர்கள் உட்கிமனந்

தளர்ந்தனர் வீரர் சலித்தனரால், விளைந்த பேரமர் மீட்டுமெனா.           113

 

வேறு

 

ஐயன்ம ருத்தினை அத்துணை நோக்கிக் 

கையணி நெற்றி கடைக்குழை யாகி

வெய்யவர் தானைகள் மேவுழி யெல்லாம்

வையம்வி டுக்குதி வல்லையில் என்றான்.                       114

 

அட்டுறு நீப அலங்கல் புனைந்தோன்

கட்டுரை கொண்டு கரந்தொழு காலோன்

ஒட்டுறு நண்ணலர் உற்றுழ காணா

விட்டனன் அம்ம விறற்பரி மான்தோ¢.                          115

 

மண்ணிடை சென்றிடு மாதிர நீந்தும்

விண்ணிடை சூழ்தரும் வேலையின் மீதாங்

கண்ணுறும் எப்படி கைதொழும் வானோர்

எண்ணினும் நாடரி தெந்தைபி ரான்தேர்.                 116

 

சேயது காலை திறத்திற மாகி

மூயின தானவர் மொய்ம்புறு தானை

சாய்வுற ஓர்தொடை தன்னில் அநந்தம்

ஆயிர கோடிக ளாக்கணை தொட்டான்.                  117

 

பரிந்தன சூழ்ந்தவர் பாணிகள் மொய்ம்பு 

சிரந்துணி வுற்றன செம்புன லாழி

சொரிந்த பிணக்கிரி துற்றிய வற்றால்

நெரிந்தது வையம் நௌ¤ந்தது நாகம்.                           118

 

பொய்கொலை ஆற்றிய பூரியர் உக்கார்

செய்குவர் நன்மை செறிந்துள ரேனுங்

கைகெழு ஞாளிக ளேகறித் துண்ட

மைகெழு தானவர் மாண்டிடும் யாக்கை.                 119

 

ஒன்னலர் மீதின் உயிர்க்குயி ரானோன்

மின்னென வீசிய வெஞ்சர மாரி 

பின்னுற முந்து பெயர்ந்திடு மென்றால்

அன்னவன் தோ¢விரை வா£¢கணிக் கின்றா£¢.                    120

 

பரத்தினு மேதகு பண்ணவன் வா£¢வில்

கரத்தினை யும்விரை வாற்கரந் தூண்டுஞ்

சரத்தினை யுந்தடந் தேரினை யுங்கால்

உரத்தினை யும்புகழ் வார்புடை யுள்ளோர்.                       121

 

வெவ்விச யப்படை வீட்டிடும் வாளிச்

செவ்விசை தேர்விசை நாடினர் செவ்வேள்

கைவிசை யோநெடுங் கால்விசை தானோ

வெவ்விசை யோவிசை என்றனர் வானோர்.                     122

 

துய்யவன் வாளி துணிந்திட வீரர்

கையொடு வானிடை செல்வ கணிப்பில்

ஐயிரு வட்டம ராப்புடை பற்ற

வெய்யவர் பற்பலர் விண்ணெழல் போலும்.                      123

 

காலொரு பாங்கர் கழுத்தொரு பாங்கர்

வாலொரு பாங்கர் மருப்பொ டெருத்தம்

மேலொரு பாங்கர் வியன்கையொர் பாங்காத்

தோலினம் இவ்வகை யேதுணி கின்ற.                           124

 

பல்லணம் அற்றன பன்முழு தற்ற

செல்லுறு தாளடு சென்னியும் அற்ற

ஒல்லொலி அற்ற உரந்துணி வுற்ற

வல்லமா¢ நீந்துறு மாத்தொகை முற்றும்.                125

 

மாழைகொள் வையம் மடிந்திட நேமி

ஆழிகொள் சோரியின் ஆழ்வன மேருச்

சூழுறும் வெய்யவர் தொல்புவி கீண்டே

கீழுறும் எல்லை கெழீஇயின போலும்.                          126

 

ஏறிய தேர்களும் யானைகள் யாவுஞ்

சூறைகௌ¢ வாசிக ளுந்துணி வுற்றே

வீறகல் வீரர்மி சைப்பட வீழ்ந்த

மாறவை ஆற்றிடும் வல்வினை யேபோல்.                      127

 

ஞாலமும் வானமும் நண்ணலர் ஆவி

மாலொடு வாரி மடங்கல் உலைந்தான்

சாலுமி வற்கிது தாள்வலி யாற்கொல்

கால னெனப்புகல் கட்டுரை பெற்றான்.                   128

 

எறிபடை யாவையும் ஏமம தாகச்

செறிபடை யாவையுஞ் சேயவன் ஏவால்

முறிபடு கின்ற முனிந்துவ ணப்புட்

கறிபட மெய்துணி கட்செவி யேபோல்.                          129

 

முன்னுறு வார்கள் முரட்படை தூவிப்

பின்னுறு வார்பெய ராதுபு டைக்கண்

துன்னுறு வார்கள் எலாந்துணி வாக

மின்னென எங்கணும் வேள்கணை தூர்த்தான்.            130

 

சூலம தேகொல் கணிச்சிகொல் தொல்லை

மாலெறி நேமிகொல் வச்சிர மேகொல்

காலொடு சென்ற கனற்குழு வேகொல்

வேலது கொல்லென வேள்கணை விட்டான்.                     131

 

வேறு

 

மழைத்திடு மெய்யுடை மாற்றலர்கள், இழைத்திடு மாய இயற்கைகளும்

விழுத்தக வீசும் விற்படையும், பிழைத்தன தாங்கள் பிழைத்திலரால்.             132

 

முக்கணன் மாமகன் மொய்கணைகள், தொக்கவர் யாக்கை துணித்திடலும்

மெய்க்கிடு பல்கலன் மீன்விழல்போல், திக்குல விப்படி சிந்தினவே.        133

 

அண்ணல் சரங்கள் அறுத்திடலும், எண்ணலர் யாக்கைகள் இற்றவைதாம்

மண்ணை யளந்தயில் மாலெனவே, விண்ணை யளந்து விழுங்கினவே.    134

 

சூழுறு தானை துணிந்தஉடல், ஏழெனும் நேமியும் எண்டகுபேர்

ஆழியும் விண்ணும் அடைத்திமையோர், வாழுல கங்களை வௌவியவே. 135

 

காடி யிழந்து  கவந்தமதாய், ஆடின வௌ¢ளமும் ஆயிரமா

கோடி யதுண்டு குகன்கணையால், வீடின எல்லை விதிக்குநர்யார்.         136

 

வீழுறு மாற்றலர் மெய்க்குருதி, ஆழக ளாகி அகன்புவியில்

பூழைக ளோடு புகுந்துபிலம், ஏழுள எல்லையும் ஈண்டியதே.                     137

 

வேறு

 

பாதல எல்லை பரந்திடு சோரி

பூதல மீண்டு புகுந்து பராவி

ஓத நெடுங்கடல் ஓங்கிய வாபோல்

மாதிரம் எங்கும் மறைத்தன அன்றே.                    138

 

மீனுடு வாக விளங்கிய திங்கள்

பானு மலா¢ந்திடு பங்கய மாகச்

சோனைகொள் மாமுகில் தோணிய தாக

வானிமிர் செம்புனல் மாகடல் ஒக்கும்.                   139

 

மாசறு கூற்றனும் மற்றுளர் தாமுங்

கேசர ராகிய கிங்கரர் யாரும்

பாசம லைந்திடு பல்பிணி பற்றா

வீசினர் ஆருயிர் மீன்கள் கவர்ந்தார்.                     140

 

பாலுறு கின்ற பணிக்கிறை நாப்பண்

மாலரு ளில்துயில் மாட்சிமை யென்ன

நீலுறு திங்கள் நிணங்கெழு செந்நீர்

வேலையின் மீது விளங்கிய தம்மா.                     141

 

மட்டறு செம்புனல் வாரிதி நீந்தி

ஒட்டலர் யாக்கையின் ஓங்கல் அறுத்துத்

தட்டுறு செங்கதிர் சண்முக மேலோன்

விட்டிடு நேமியின் விண்மிசை செல்லும்.        142

 

சிறைப்புற வுக்கருள் செய்திட மெய்யூன்

அறுப்பவன் என்ன அடைந்தனர் விண்ணின்

நெறிப்படு வானவர் நேரலர் யாக்கை

உறப்படு சோரிமெய் உற்றிடு நீரால்.                     143

 

ஆனதொ ரெல்லையில் அண்ட நிறைந்த

சேனைகள் வீழ்ந்தன செம்மல் சரத்தால்

ஊனுயிர் பூதமொ ழந்தன முக்கண்

வானவன் மூரலின் மாய்ந்திடு மாபோல்.         144

 

வேறு

 

அண்டம் ஈங்கிது முற்றொருங் கீண்டிய அவுணர்

தண்ட மாய்தலும் ஏனைய அண்டங்கள் தம்மில்

கொண்ட தானைகள் பின்னரும் வந்திடக் குமரன்

கண்டு மற்றவை தொல்லைத்தனன் செலுத்திடு கணையால்.       145

 

அறுத்து வெம்முமுனத் தானையை யாண்டுசெல் லனிகம்

மறித்தும் வந்துவந் தடைதரும் இவணென மனத்துட்

குறித்து வெங்கணை மாரியால் அண்டகோ ளகையின்

நெறித்த ரும்பெரு வாயிலை யடைததனன் நிமலன்.              146

 

ஆண்டு சென்னெறி மாற்றியே அண்ணல்வெங் கணையால்

மாண்ட தானைகள் சோரியுங் களேவர மலிவும்

நீண்ட பாதலங் கடற்புவி கொண்டுவான் நிமிர்ந்தே

ஈண்டு கின்றது கண்டனன் வரைபக எறிந்தோன்.          147

 

நெற்றி நாட்டத்தின் உலகெலாம் அட்டிடு நிமலன்

பெற்ற மாமகன் பன்னிரு விழிகளும் பிறங்கு

கற்றை வெஞ்சுடர் வடவைபோல் ஆக்கியக் கணத்தில்

உற்று நோக்கினன் நெரிந்தன களேவரத் தோங்கல்.        148

 

வெந்து நுண்டுகள் பட்டன களேவரம் விசும்பின்

உந்து சோ£¤நீர் வறந்தன மூவகை உலகு

முந்து போலவே அமைந்தன முளரியான் முகுந்தன்

இந்தி ராதியர் ஆர்த்தனர் குமரனை ஏத்தி.                149

 

பாறு லாவரு களேவரத் தமலையும் படிமேல்

வீறு சோணித நீத்தமும் வேவுற விழித்து

நீற தாக்கினான் சூரனை அட்டிலன் நின்றான்

ஆறு மாமுகன் ஆடலை உன்னினன் ஆங்கொல்.          150

 

ஆகும் எல்லையின் ஒல்லையின் அடுகளத் தடைந்த

சேகு நெஞ்சுடைச் சூரன்இத் திறமெலாந் தெரிந்து

மாக நீடுநந் தானையை அலைத்தமாற் றலனை

நாகர் தம்மொடு முடிக்குவன் யானென நவின்றான்.               151

 

மாற்றம் இத்திறம் இசைத்திடும் அவுணர்கோன் மனத்தில்

சீற்ற மூண்டிட அமர்வினை குறித்தனன் திகிரிக்

காற்றின் ஒல்லைவந் தேற்றலும் மருத்துவன் கடவிப்

போற்று தேர்மிசை முருகனுஞ் சென்றெதிர் புகுந்தான்.     152

 

புக்க காலையில் அறுமுகன் தோற்றமும் புடையின்

மிக்க பன்னிரு கரங்களும் வியன்படைக் கலனுந்

தொக்க வீரமும் வன்மையும் நோக்கியே தொல்லைத்

தக்க னேயென அவுணர்கோன் இன்னன சாற்றும்.         153

 

சிறந்த வான்மதி மிலைச்சினோன் அருள்புரி செயலால்

இறந்தி டேனியான் என்றுமிப் பெற்றியாய் இருப்பேன்

மறந்தும் என்னொடு பொருதிலர் தேவரும் மலைந்தே

இறந்து ளார்பலர் உணர்ந்திலை போலுநீ இதுவே.         154

 

உள்ளம் நொந்துநொந் தென்பணி ஆற்றியே உலைந்து

தள்ளு றுஞ்சுரர் மாழியினைச் சரதமென் றுன்னிப்

பிள்ளை மென்மதி யாலிவண் வந்தனை பெரிதும்

அள்ள லுற்றுழிப் புகுந்திடுங் கயமுனி யதுபோல்.         155

 

உடைப்பெ ரும்படை செறுத்தனை பாலனென் றுன்னை

விடுப்ப தில்லையால் வெரிநது கொடுக்கினும் விரைவில்

படுப்பன் வானவர் தொகையுடன் பாரிடர் தமையுங்

கெடுப்ப னென்றனன் தன்பெருங் கிளையுடன் கெடுவான்.   156

 

வெம்பு ரைத்தொழிற் கொருவனாங் கயவநீ வெறிதே

வம்பு ரைத்தனை யாவதொன் றில்லைநின் மார்பஞ்

செம்பு ரைப்பட யாம்விடு கின்றதோர் திறல்வாய்

அம்பு ரைத்திடு மாறுனக் கென்றனன் அமலன்.            157

 

ஆரும் நேரிலாப் புங்கவன் சேயின தறையச்

சூர னாகியே அவுணர்கோன் துண்ணெனச் செயிர்த்து

மேரு நேர்வதோர் வா¤சிலை யெடுத்துவிண் ணிழியும்

வாரிபோன் றிடு நாணினை ஏற்றியே வளைத்தான்.               158

 

வளைத்த டங்கிரி புரைவதோர் சிலையினை வயத்தால்

வளைத்த செய்கையைக் காண்டலும் பாரிடர் வானோர்

வளைத்த டங்கடல் வந்திடு நஞ்சொடு மலைவான்

வளைத்த தன்மைபோல் அவுணர்தம் முதல்வனை வளைத்தார்.159

 

சிலையை வீசினர் கொடுமரம் வீசினர் செறிமூ

விலையை வீசினர் படையெலாம் வீசினர் எதிர்ந்தார்

உலைய வீசியே அடல்செயும் மும்மதத் துவாவை

வலையை வீசியே பிணித்திட மதித்துளார் என்ன.        160

 

கண்டு மற்றதை அவுணர்கோன் வில்லுமிழ் கணையாங்

கொண்டால் நுண்துளி சிதறியே கணங்கள்கூட் டறுத்து

விண்டு லாவர அரக்கினாற் குயின்றதோ£¢ வெற்பைச்

சண்ட வெங்கனல் உடைப்பது போலவே தடிந்தான்.               161

 

வீடி னார்களும் புயங்கரந் துணிந்திட மெலிந்து

வாடி னார்களும் மயங்கிவீழ்ந் தார்களும் வல்லே

ஓடி னார்களும் ஓடவும் வெருவிவேற் றுருவங் 

கூடி னார்களும் ஆயினர் பாரிடக் குழாத்தோர்.            162

 

பூதர் சாய்ந்துழி இலக்கரோ டெண்மரும் பொருவில்

வேத நாயகன் தூதனுஞ் சூழ்ந்துடன் மேவிக்

கோதை தூங்கிய கொடுமர மாயின குனித்துச்

சோதி வான்கணை மாரிகள் அவுணன்மேற் சொரிந்தார்.   163

 

சொரிந்த வெங்கணை எங்கணும் வருதலுஞ் சூரன்

தெரிந்து வாளிதொட் டறுக்கலன் நின்றதோர் செல்வி

விரைந்து வந்தவை ஆங்கவன் மெய்ப்பட விளிந்து

பரிந்து போயின செய்ததொன் றில்லைஅப் பகழி.         164

 

பரப்பின் ஈண்டிய வீரதர்தஞ் சூழச்சியைப் பாரா

உரப்பி ஆவலங் கொட்டியே வெகுளிகொண் டொருதன்

பொருப்பு நேர்சிலை குனித்துவெஞ் சிலீமுகம் பொழிந்து

திருப்பெ ருந்தடந் தேரொடுஞ் சாரிஆகை திரிந்தான்.              165

 

நூறு கோடிவெஞ் சரமொரு தொடையுற நூக்கிச்

சூறை யாமென வட்டணை திரிந்துளான் சூழ்வோர்

மாறு தூண்டிய சரங்களைத் தணித்துமற் றவர்கள்

ஏறு தேருடன் பிடித்திடு சிலைகளை இறுத்தான்.          166

 

வையம் வில்லுடன் இற்றபின் மற்றவர் மலைவு

செய்ய உன்னுமுன் மொய்ம்பினும் உரத்தினுஞ் சிரத்துங்

கையி னுங்கணை ஆயிர மாயிரங் கடுந்தீப்

பெய்யும் மாரிபோற் செறித்தனன் செம்புனல் பெருக.              167

 

புரந்த னிற்செறி கறையினா£¢ புலம்புகொள் மனத்தார்

உரந்த ளர்ந்துளார் வில்வலி இழந்துளார் ஒருங்கே

இரிந்து நீங்கினர் இலக்கரோ டெண்மரும் இளவல்

திருந்த லன்தடந் தேர்மிசைப் பாய்ந்தனன் சினத்தால்.     168

 

பாய்ந்து திண்டிறல் மொய்ம்பினான் பரமன்முன் னளித்த

நாந்த கந்தனை யுரீஇக்கொடு நண்ணலர்க் கிறைவன்

ஏந்து வில்லினைத் துணித்தனன் துணித்தலும் எரிபோல்

காய்ந்து வெய்யவன் புடைத்தனன் உரத்திலோர் கரத்தால்.  169

 

அங்கை கொண்டுசூர் ஒருபுடை புடைத்தலும் அகலம்

பொங்கு சோணிதம் அலைத்திட வாகையம் புயத்துச்

சிங்கம் வீழ்ந்தயர் வுற்றிடத தூதனைச் செகுத்தல்

இங்கெ னக்கடா தென்றெடுத் தும்பரின் எறிந்தான்.        170

 

எறிந்த காலையில் விண்ணிடைப் படர்ந்திடும் ஏந்தல்

அறிந்து மீண்டுசென் றாறுமா முகன்புடை அடைந்தான்

தறிந்து போகிய சிலையினைத் தரைமிசை யிட்டுச்

சிறந்த தோர்தனு எடுத்தனன் தீயரில் தீயோன்.            171

 

அத்த மேல்கிரி உதயமால் வரைத்துணை யான்று

நித்த லும்பிறர்க் கிடர்செய்து மேருவின் ஈண்டு

கொத்து நீடுபல் குவடுடைத் தாகியே குமரன்

சத்தி யாலட நின்றவெற் பனையதத் தனுவே.                    172

 

வனைக ருங்கழல் அவுணனக் கார்முகம் வளைத்துப்

புனலும் அங்கியும் காலுடன் ஒலிப்பது புரைய

எனைவ ருந்துளக் குறும்வகை நாணொலி யெடுத்தான்

அனைய பெற்றியை அறிந்தனன் அமரரை அளித்தோன்.   173

 

புயலின் மேனியன் புவிநுகர் காலையும் போதகன்

துயிலு மாலையுந் துஞ்சிய தொலையா

தியலு மண்டத்தின் அடிமுடி உருவிநின் றிலங்குங்

கயிலை போல்வதோர் நெடுஞ்சிலை எடுத்தனன் கந்தன்.   174

 

வாரி யாலுல கழிந்திடும் எல்லையின் மருங்கின்

மேரு வாதியாம் வரைகளுங் கிரிகளும் விசும்பில்

காரு மேலுள உலகமும் அமரருங் கயிலைச்

சாரல் சூழதல்போல் விரவியார்ப் புடையததத் தனுவே.    175

 

நீட்ட மிக்கதோர் அப்பெருஞ் சிலையினை நிமலன்

தோட்டு ணைக்கொடு வாங்கியேழ் வகையினால் தோன்றும்

ஈட்ட மிக்கபல் லுயிர்களும் வான்உரும் ஏற்றின்

கூட்ட மாகிய மார்த்தெனக் குணத்தொலி கொண்டான்.     176

 

குணங்கொள் பேரொலி கோடலும் இரலையூர் கொற்றத்

தணங்கு லாவரு கார்முகங் குழைத்துளை யவதி

இணங்க வாங்கியே பத்துநூ றாயிரத் திரட்டி

கணங்கொள் வெஞ்சரம் உகைத்தனன் கூற்றினுங் கடியோன்.177

 

வான்ம றைத்தன மாதிரம் மறைத்தன மதிதோய்

மீன்ம றைத்தன கதிர்வெயின் மறைத்தன வேலை

தான்ம றைத்தன வசுமதி மறைத்தன தருவார்

கான்ம றைத்தன வரைகளை மறைத்தன கணைகள்.              178

 

காற்றிற் செல்வன அங்கியிற் படர்வன கடுங்கட்

கூற்றிற் கொல்வன வேலைவெவ் விடத்தினுங் கொடிய

பாற்றுத் தொல்சிறை உள்ளன ப•றலை படைத்த 

நாற்றிக் கும்புகழ் அவுணர்கோன் ஆணையின் நடப்ப.      179

 

பருமி தத்தன மேருவைத் துளைப்பன பாங்கர்

வரைகி ழிப்பன அண்டமும் பொதுப்பன வான்தோய்

உருமி டிக்குலம் பொருவன விடத்தையுண் டுமிழ்வ

கருமை பெற்றன சேயன தீயவன் கணைகள்.                    180

 

துண்ட வெண்பிறை வாளெயிற் றவுணர்கோன் துரப்ப

மிண்டு வெங்கணை யெங்கணுஞ் செறிந்திட விண்ணோ£¢

கண்டு கண்ணனை அணுகியே கைகுலைத் தைய

உண்டு கொல்நமக் கொளிப்பதோர் இடமென உரைத்தார்.   181

 

உரைத்து ளார்க்குமால் மாறுரை வழமுன் ஔ¢வேல்

கரத்தி லேந்திய குமரவேள் இன்னது கண்ணால்

தெரித்து வெங்கனல் விடுத்திடும் ஊதைபோற் சிலதன்

சரத்தி னாலவன் தூண்டிய கணையெலாந் தடிந்தான்.      182

 

மடிந்தி டும்படி மாற்றலன் சரங்களை வள்ளல்

தடிந்த தன்மைகண் டமரர்கள் உவகையில் தழைத்தார்

படர்ந்து நீடிய கங்குலின் பாயிருள் புலர 

விடிந்த காலையின் எழுங்கதிர் கண்டமே தினிபோல்.              183

 

வேறு

 

அங்க வெல்லை அவுணர்கோன், எங்கள் நாதன் எதிருற

மங்குல் போல்வ ரம்பிலாச், செங்கண் வாளி சிதறினான்.  184

 

ஆய காலை அறுமுகன், தீயன் உந்து செறிகணை

மாய வாளி மாமழை, ஏயெ னாமுன் ஏவினான்.         185

 

எங்கள் நாதன் ஏவிய, துங்க வாளி சூர்விடும்

புங்க வங்க ளைப்புரத், தங்கி போல றுத்தவே.                   186

 

அறுத்த பின்னும் அறனிலான், மறுத்தும் வாளி மாமழை

கறுத்த கண்டர் காளைமேல், செறுத்து வல்லை சிந்தினான்.       187

 

சிந்து கின்ற செஞ்சரம், வந்து றாமுன் வந்தெனக்

கந்தன் நூறு கணைதொடா, அந்தில் பூழி ஆக்கினான்.     188

 

பூழி செய்து பொள்ளென, ஊழி நாதன் ஒண்சரம்

ஏழு நூற தேவினான், சூழு மாயை தோன்றல்மேல்.              189

 

மாயை மைந்தன் மற்றதை, ஆய வாளி யால்அறுத்

தேவி னானி ராயிரஞ், சேயின் முன்சி லீமுகம்.                  190

 

வேறு

 

விட்டதனை அத்தொகை விறற்பகழி தன்னால்

அட்டுவிரை விற்கடவுள் ஆயிர விரட்டி

கட்டழலை யொத்துள கடுங்கணைகள் தம்மைத்

தொட்டனன் வருத்தமொடு சூர்கிளை துளங்க.             191

 

முராரியுத வுஞ்சுதனை முந்துதளை இட்டாண்

டொராயிரம் அளித்தபரன் உய்த்தகணை செல்ல

இராயிர நெடும்பகழி ஏவியவை நீக்கி

அராவிறையும் வையமும் அழுங்கலுற ஆர்த்தான்.               192

 

ஆர்த்தவன் விடுங்கணை அனைத்தினையும் முக்கண்

மூர்த்திதரு கான்முளை செலச்செல முடித்தான்

கார்த்தெழு புகைப்படலை கான்றுநிமிர் செந்தீச்

சேர்த்தினவை யாவையும் மிசைந்திடு திறம்போல்.               193

 

ஐயன்விடு வாளிகளை அவ்வசுரன் நீக்கும்

வெய்யன்விடு வாளிகளை வேள்கடி தறுக்கும்

எய்யுநெடு வெம்பகழ இற்றவைகள் சிந்தி

வையமிசை போகியன வானமணித் தென்ன.                     194

 

முற்றிய அமர்த்தலை முனிந்திவர் செலுத்துங்

கொற்றநெடு வாளிகள் குறைந்துழ எழுந்தீப்

பற்றியது பாரிடை பகிர்ந்தவரை முற்றும்

வற்றிய அளக்கரும் வறந்துளது கங்கை.                 195

 

தார்கெழுவு வேற்படை தடக்கையுடை யோனுஞ்

சூரனும் இவாறமர் இயற்றுதொழில் காணா

வீரமட  மாதுளம் வியந்திவர் தமக்குள்

ஆரிடை நடத்துமென ஐயமொடு நின்றான்.                       196

 

ஆளரிதன் முன்னிளவல் ஆனைவத னத்துக்

காளைமகிழ் பின்னிளவல் கார்முகம் உகைக்கும்

வாளிமழை ஏயலது மற்றவர்கள் தம்மை

நீள்விழியி னால்தெரிகி லார்புடையின் நின்றோர்.         197

 

நீடுசமர் இன்னணம் நிகழ்ச்சியுறும் எல்லை 

மேட்மிசை ஊர்பரன் விடுத்தகணை எல்லாம்

ஈடுபட நூறியவன் ஏறிவரு மான்தேர்

ஆடுறு பதாகையை அறுததுவிரைந் தார்த்தான்.           198

 

ஆ£¢த்துவிறல் வால்வளையை அம்பவள வாயில் 

தேர்த்தியிசைத் தான்தனது சீர்த்தியிசைத் தென்ன

மூர்த்தமது தாழ்க்கிலன் முனிந்துகணை பின்னுந்

தூர்த்துமுரு கன்தனது தோற்றமறைத் திட்டான்.          199

 

மறைத்தபக ழித்தொகையை வாளிமழை தன்னாற்

குறைத்தவுணன் ஊர்ந்திடு கொடிஞ்சிநெடு மான்தேர்

விறற்கொடி தனைக்கொடிய வெஞ்சரமொ ரேழால்

அறுத்துமுரு கன்பரவை யாழ்கடலின் இட்டான்.           200

 

வேறு

 

தான வர்க்குத் தலைவன் தனிக்கொடி

மீன வேலையில் அற்றுடன் வீழ்ந்துழிப்

பானு கம்பனெ னப்படு பாரிடர்

சேனை காவலன் தெற்றென நோக்கினான்.               201

 

கண்டு சிந்தை களித்துப் பெருமிதங்

கொண்டு குப்புற் றிசைத்துக் குனித்திடா

அண்டர் போற்றத்தன் ஆயிரம் வாயினும்

ஒண்தி ரட்சங்கம் ஒல்லைவைத் தூதினான்.              202

 

கானு கம்படு கந்துகத் தேருடைப்

பானு கம்பன் பனிமதி ஆயிரம்

மானு கம்பவை வாய்வைத் திசைத்தலுந்

தானு கம்பல தங்கிற்றவ் வோசையே.                   203

 

பாய்பெ ரும்புகழ்ப் பானுகம் பன்வளை

ஆயி ரங்களும் ஆர்த்திட அண்டர்தம்

நாய கன்தன் விறல்கண்டு நாரணன்

தூய சங்கு முழங்கிற்றுத் துண்ணென.            204

 

போதம் அங்கிற் புங்கவர் யாவருஞ்

சோதி வேற்படைத் தூயவன் ஏறுதேர்

மீது கேதனம் இல்லை வியன்கொடி

ஆதி நீயென் றழலினை ஏவினார்.                       205

 

ஏவ லோடும் எரிதழற் பண்ணவன்

வாவு குக்குட மாண்கொடி யாகியே

தேவதேவன் திருநெடுந் தேர்மிசை

மேவி ஆர்த்தனன் அண்டம் வெடிபட.                   206

 

படியி லாதமா¢ பண்ணவன் தேர்மிசைக்

கொடிய தாய்நின்று குக்கு டங்கூயது

கடிய தானவர் கங்குல் புலர்ந்திடும்

விடியல் வைகறை வேலையைக் காட்டல்போல்.  207

 

சங்க மோடு தபனனும் ஆர்த்தலும்

மங்குல் வண்ணத்து மாயவன் ஆர்த்தனன்

பங்க யாசனப் பண்ணவன் ஆர்த்தனன்

திங்கள் ஆர்த்தது செங்கதிர் ஆர்ப்பவே.           208

 

மறலி ஆர்த்தனன் மாருதங் கட்கெலாம்

இறைவன் ஆர்த்தனன் இந்திரன் ஆர்த்தனன்

அறைக டற்கர சானவன் ஆர்த்தனன்

குறைவில் செல்வக் குபேரனும் ஆர்த்தனன்.              209

 

ஆர்த்த ஓசைபோய் அண்டத்தை முட்டியே

சூர்த்த நோக்குடைச் சூரபன் மன்செவிச்

சீர்த்து  ளைக்குட் செறிதலுந் தேவரைப்

பார்த்த னன்கடு உண்டன்ன பான்மையான்.               210

 

மாறி லென்முன் வருவதற் கஞ்சியே

பாறு போன்று பழுவத்து லைந்துளார்

தேறி வந்து தெழித்தனர் என்முனும்

ஆறு மாமுகன் ஆற்றல்கொண் டேகொலாம்.             211

 

நன்று நன்றிது நான்முகன் ஆதியா

நின்ற தேவர் நிலையழித் தொல்லையில்

கொன்று பின்னர்க் குமரனை வெல்வனால்

என்று சீறினன் யாரையும் எண்ணலான்.          212

 

இருக்க மைந்தன் இகலிலண் விண்ணிடைச்

செருக்கு தேவர் திறலினைச் சிந்துவான்

அருக்க னோடிய அந்தரத் துய்க்குதி

தருக்கு தேரினைச் சாரதி நீயென்றான்.           213

 

மற்றிவ் வாறு வலவனை நோக்கியே

சொற்ற காலைத் தொழுதெந்தை நன்றெனாப்

பொற்றை போலும் பொலன்மணித் தேரினை

வெற்றி யாகென விண்மிசைத் தூண்டினான்.              214

 

பாகன் தூண்டிய பாண்டிலந் தேரெழீஇ

மேகங் கீண்டு மிசைப்படு சூறையின்

ஆகங் கீறி அமரர்கள் ஈண்டிய

மாகஞ் சென்றது வானிழிந் தென்னவே.          215

 

சென்ற தேரொடு  சேணிடைப் புக்குளான் 

குன்ற மன்ன கொடுஞ்சிலை கோட்டியே

துன்று தேவர் தொகைஇரிந் தோடுற

மன்ற வாளி மழைகளை வீசினான்.                     216

 

வீசு கின்றுழி விண்ணவர் மேற்சரம்

நீசன் விட்டிடு நீர்மையை நோக்கியே

ஈசன் மாமகன் ஈண்டுநின் றெண்ணிலா

ஆசு கங்களுய்த் தங்கவை சிந்தினான்.           217

 

வேறு

 

மற்றவை துணித்தபின் வடிக்கயிறு முட்கோல்

பற்றிய தடக்கையுள பாகுதனை நோக்கிக்

கொற்றஅயில் தூண்டியொரு குன்றைவௌ¤ கண்டோன்

தெற்றெனவிண் மேல்நமது தேர்விடுதி யென்றான்.                218

 

என்னலும் இறைஞ்சிஇர லைப்பரியின் மேலோன்

பொன்னுலகு பாருலகு புக்கெழுவ தென்

மின்னின்மிளிர் தேரதனை விண்மிசைக டாவி

நன்னெறி செலாஅவுணர் நாயகன்முன் உய்த்தான்.        219

 

வையநெடு வானமிசை வல்லைபுகும் எல்லை

ஐயன்இமை யோர்கள் அயர்ந் தோடுவது நோக்கி

நையலிர் புலம்பலிர் நடுங்கலிர்கள் என்றோர்

செய்யகரம் ஏந்திமுரு கன்கருணை செய்தான்.            220

 

கந்தன்மொழி வானவர்க ணத்தவர்கள் கேளா

எந்தையிவண் வந்திடலின் யாமுயிர் படைத்தே

உய்ந்தனம் எனாவிரைவில் ஓடுவது நீங்கிச்

சிந்தைமகிழ் வத்தொடு திகந்தமுற நின்றார்.                     221

 

நின்றிடலும் வெவ்வவுணன் நீர்மையது நோக்கிப்

பின்றிடுவ ராம்பிரம னேமுதல தேவர்

ஒன்றொர்சிறு வன்கொலெனை உற்றெதிரு நீரான்

நன்றிதென வேவெகுளி கொண்டுநகை செய்தான்.         222

 

காய்சின மிகுந்தவுணர் காவலன் அநந்தம்

ஆசுகம் விரைந்துபடர் ஆசுகம தென்ன

வீசுதலும் வாளிபல விட்டவை விலக்கி

ஈசனருள் மாமதலை ஏற்றிகல் புரிந்தான்.                223

 

சுறுக்கொள மயிர்ப்பொடி உயிர்ப்புவிடு சூரன்

கறைக்கதிர் அயிற்பொலி கரத்தன்இவர் தம்மில்

செறுத்துடன் வடிக்கணை செலுத்திஅகல் வானம்

மறைப்பது மறுக்குவது மாகிமலை வுற்றார்.                     224

 

வேறு

 

விரைந்திரு வோர்களும் வியன்கணை மாரிகள்

சொரிந்தனர் பேரமர் தொடர்ந்துசெய் போழ்தினில்

எரிந்தது மாதிரம் இரங்கினர் பாருளர்

திரிந்தன சாரிகை சிறந்தவர் தேர்களே.                  225

 

கறங்கினம் போல்வன கலஞ்செய் குலாலன

திறங்கொளும் ஆழிகள் திரிந்தன மானுவ

மறங்கெழு சூறைகள் மயங்கின போல்வன

துறுங்கணை மாரிகள் சொரிந்தவர் தேர்களே.                     226

 

பாதல மூழ்குவ பாரிடை சூழ்குவ

மாதிர மோடுவ வாரிதி சேர்குவ

பூதர மேவுவ பூமல ரோன்நகர்

மீதினும் ஏகுவ மீளுவ தேர்களே.                       227

 

எண்டிசை சூழும் இருங்கடல் பாய்வன

விண்டொடு நேமி வியன்கிரி வாவுல

கொண்டலின் ஆரிருள் கொண்டுழி போகுவ

அண்டமுன் ஏகுவ அங்கவர் ஏறுதேர்.                            228

 

பெயர்ந்திடு தேருறு பிழம்பவை காணுபு 

தியங்கினர் நான்முகர் தெரிந்திலர் சீருரு

மயங்கினர் ஆதவர் மருண்டனர் வானவர்

உயங்கினர் பாருளர் உலைந்தனர் நாகரே.                229

 

முதிர்ந்திடு போரினர் முழங்கிய தேர்செல

அதிர்ந்தது பாருல கலைந்தன வேலைகள்

பிதிர்ந்தன மால்வரை பிறந்தது வான்முக

டுதிர்ந்தன தாரகை உகுந்தன கார்களே.                   230

 

வேறு

 

தேரிவை இரண்டு மாகித் திகழுமூ தண்ட மெங்குஞ்

சாரிகை வருத லோடுஞ் சண்முகன் மீது செல்லச்

சூரெனும் அவுணர் கோமான் தொலையுநாள் எழிலி பொங்கி

ஆரழல் மழைகான் றென்ன அடுசர மாரி தூர்த்தான்.                      231

 

மழுப்படை அநந்த கோடி வச்சிரந் திகழ்முச் சென்னிக்

கழுப்படை அநந்த கோடி கப்பணம் அநந்த கோடி

கொழுப்படை அநந்த கோடி குலிசம்வேல் அநந்த கோடி

எழுப்படை அநந்த கோடி இடையிடை இடிபோல் உய்த்தான்.              232

 

கூற்றுயிர் முடிக்குந் துப்பிற் கொடும்படை மாரி தன்னை

ஆற்றலின் அவுணர் கோமான் விடுத்துழி அவற்றை யெல்லாங்

காற்றெனப் பகழி தூண்டி முறைமுறை கடிதிற் சிந்தி

மாற்றினன் திரிந்தான் ஐயன் மூதண்ட வரைப்பு முற்றும்.         233

 

இத்திறந் திரிந்த செவ்வேள் இடைதெரிந் தேழொ டேழு

பொத்திரந் தன்னைத் தூண்டிப் புகழுறும் அவுணர் செம்மல்

சித்திரத் தேரும் மாவின் தொகுதியுஞ் சிந்தி நீக்கக்

கைத்தனு வோடுந் தீயோன் கதுமெனப் புவிக்கண் உற்றான்.               234

 

நாணுடை வரிவில் வாங்கி நண்ணலன் நஞ்சு பில்கும்

ஏணுடை வயிர வாளி எண்ணில தூண்டி ஏற்பத்

தாணுவின் மதலை கண்டு தன்பெருஞ் சிலையைக் கோட்டித்

தூணிகொள் கணையின் மாரி தொடுத்தவை துணித்து விட்டான்.   235

 

துணிப்புறும் எல்லை வல்லே சுடர்க்கணை அநந்த கோடி

தணப்பற விடுத்த லோடுஞ் சண்முகன் அவற்றை யெல்லாங்

கணைப்பெரு மழையால் மாற்றிக் காசிபன் தனது செம்மல்

அணிப்படு தோற்மேற் பின்னும் ஆயிரம் பகழி உய்த்தான்.         236

 

றுழியின் முதல்வன் மைந்தன் ஒராயிரங் கணையுஞ் சூரன்

பாழியம் புயத்து மீது படுதலுங் கடிதே இற்றுச்

சூழுறச் சிதறிற் றம்மா தொவிலா வயிரங் கொண்ட

காழ்கிளர் வரைமேல் வீழ்ந்த கன்மழைத் தன்மை யேபோல்.              237

 

அந்தமில் வன்மை சான்ற அவுணன்மற் றதனை நோக்கி

முந்துறு வெகுளி தூண்ட முறுவலும் உயி£¢ப்புந் தோன்ற

எந்தைதன் மொய்ம்பிற் செல்ல இராயிரம் பகழி வாங்கிச்

சிந்தையிற் கடிது தூண்டித் தேவரும் மருள ஆர்த்தான்.           238

 

உட்டௌ¤ வுற்றோர் காணும் ஒப்பிலா முதல்வன் தோள்மேல்

விட்டிடு பகழி முற்றும் வெந்துவெந் துகள தாகிப்

பட்டன திசைகள் முற்றும் பரந்தன பரத்தின் மேலோன்

கட்டழல் அதனால் மாய்ந்த காமவேள் யாக்கை யேபோல்.         239

 

ஆங்கது காலை தன்னில் அறுமுகம் படைத்த ஐயன்

நீங்கரு நெறியால் உய்த்த நெடுஞ்சரம் அனைத்தும் மாற்றிப்

பாங்கமர் வயவர் மீதும் பாரிடப் படைகள் மீதுந்

தீங்கணை அழுத்த லுற்றான் தேவரை இடுக்கண் செய்தான்.       240

 

தன்னிணை தானே யாகி நின்றிடுந் தனிவேல் வீரன்

அன்னதோர் தன்மை கண்டோ ராயிரம் பகழி பூட்டித் 

துன்னலன் குனித்த சாபந் துணித்தனன் துணியா முன்னம்

பின்னுமோர் சிலையை ஏந்திப் பெருமுகில் இரிய ஆர்த்தான்.              241

 

இம்பரின் மலைந்த சூரன் இம்மென வருக்கொண் டேகி

அம்பரத் திடையே தோன்ற அன்னது குமரன் காணா

உம்பரிற் சென்று தாக்க ஓரிறை எதிர்ந்து நின்று

நம்பியொ டாடல் செய்வான் நவிலரும் மாயை சூழ்வான்.         242

 

விண்ணிடை நின்ற சூரன் விரைந்துடன் கரந்து சென்று

மண்ணிடை மீட்டுஞ் செல்ல மாநில வரைப்பிற் செவ்வேள்

துண்ணென வந்து வெம்போ£¢ தொடங்கலுந் தோற்ற மாற்றிக்

கண்ணகல் தூய நீத்தக் கனைகடல் நடுவண் ஆனான்.             243

 

ஆயிடை முமுக வேள்சென் றடுசமர் இயற்றும் எல்லை

மாயையின் மறைந்து சூரன் மாதிர முடிவில் தோன்ற

ஏயென ஆண்டுஞ் செவ்வேள் ஏகியே நெடும்போர் ஆற்றக்

காய்கனல் உமிழும் வேலான் கரந்துபா தலத்தின் நின்றான்.        244

 

ஆறிரு தடந்நதாள் வள்ளல் அதுகண்டு பிலத்து ளேகி

மாறமர் இயற்றும் எல்லை வல்லைதன் னுருவ மாற்றி

வீறுள சிமையச் செம்பொன் மேருவின் குவட்டின் நிற்ப

ஏறுடை முதல்வன் மைந்தன் இம்மென அங்கட் சென்றான்.               245

 

மேருவின் சிகரம் நண்ணி வேலுடைத் தடக்கை வீரன்

பேரமர் இயற்றத் தீயோன் பின்னரும் ஆண்டு நீங்கி

நாரணன் உலகில் தோன்ற நம்பியுந் தொடர்ந்து போந்து

சூரெனும் அவுண னோடு தொல்சமர் ஆற்றி நின்றான்.             246

 

ஆற்றிடு கின்ற காலத் தவுணர்கோன் அண்ட கோள

மேற்றிகழ் வாயில் செல்ல விமலனும் அங்கண் ஏகி

ஏற்றெதிர் மலையா அன்னான் ஏறிய இவுளித் தேரைக்

கூற்றுறழ் பகழி தன்னால் அட்டனன் கொற்றங் கொண்டான்.       247

 

கந்துக விசய மான்தேர் இற்றலுங் கடுங்கோன் மன்னன்

இந்திர ஞாலம் என்னும் எறுழ்மணித் தடந்தேர் தன்னைச்

சிந்தனை செய்த லோடுஞ் சேணகிளர் செலவிற் றாகி

வந்திட அதன்மேல் ஏறி வல்லைபோர் புரிதல் உற்றான்.           248

 

மண்டமர் புரியும் எல்லை வள்ளல்தன் பகழி தன்னால்

அண்டம தடைந்த வாயில் அடைத்ததும் அப்பால் உள்ள

தண்டம தெல்லாஞ் செல்லாத் தன்மையுந் தகுவர் கோமான்

கண்டனன் நன்று நன்றென் இறைத்தொழிற் காவ லென்றான்.      249

 

இறைத்தொழில் அவுணர் செம்மல் ஏந்துதன் சிலையை வாங்கித்

திறத்தொடும் அநந்த கோடி செஞ்சரந் தூண்டி அண்ட 

நெறிப்படு வாயில் பொத்து நெடுங்கணைக் கதவ முற்றும்

அறுத்துநுண் தூளி ஆக்கி அம்பரஞ சுழல விட்டான்.                      250

 

காவலன் அண்ட வாயிற் கணைகளின் கபாடம் நீக்கி

மாவொடு களிறுந் தேரும் வயவரும் வரம்பின் றாகி

ஓவரு நெறியின் அப்பால் உற்றதன் தானை தன்னைக்

கூவினன் வருக என்று  குவவுத்தோள் கொட்டி ஆர்த்தான்.        251

 

ஆர்த்திடு கின்ற காலத் தண்டத்தின் அப்பால் நின்ற

தேர்த்தொகை களிற்றின் ஈட்டந் திறல்கெழும் இவுளிப் பந்தி

சூர்த்திடும் அவுண வௌ¢ளந் துண்ணென ஈண்டை ஏகிப்

போர்த்தொழில் முயன்று செவ்வேள் புடையுறத் தெழித்துச் சூழ்ந்த. 252

 

நீணுதல் விழியின் வந்த நிருமலக் கடவுள் தன்னை

ஏணொடும் அண்டத் தப்பால் இருந்திடு தானை சுற்றச்

சேணுறு நெறிக்கண்  நின்ற திசைமுகன் முதலாந் தேவர்

காணுத லோடும் உள்ளங் கலங்கிமற் றினைய சொல்வார்.         253

 

காலமொ டுலகம் உண்ணக் கனன்றெழு கரிய தீயின்

கோலமோ அண்டத் தப்பாற் குரைபுனல் நீத்தந் தானோ

ஆலமோ அசனிக் கொண்மூ ஆயிர கோடி சூழ்ந்த

சாலமோ யாதோ என்று தலைபனித் திரியல் போனார்.                    254

 

ஆயின காலை தன்னில் அண்டங்கள் தோறும் நின்ற

மாயிருந் தகுவன் தானை வந்துதன் மருங்கு சுற்றிப்

பாய்புனல் முகில்கான் றென்னப் படைத்தொகை வீசி ஆர்ப்பத்

தீயுரு வான செம்மல் சிறிதுதன் நாட்டம் வைத்தான்.                     255

 

அடலையின் நலத்தை வீட்டி அரும்பெறல் ஆக்கஞ் சிந்தி

அடலையின் உணர்வின் றாகும் அவுணர்கோன் தானை முற்றும்

அடலையின் நெடுவேல் அண்ணல் அழலெழ விழத்த லோடும்

அடலையின்  உருவாய் அண்டத் தொல்லுரு வழித்த மன்னோ.    256

 

முற்படும் அனிக மற்றும் முடிதலும் முடித லின்றி

எற்படும் அண்டத் தப்பால் ஈண்டிய பதாகி னிக்குள்

பிற்பட அளப்பில் சேனை பெயர்ந்துமற் றீண்டை துன்னிச்

சிற்பரன் குமரன் தன்பாற் படைமுறை சிதறிச் சூழ்ந்த.            257

 

பரப்பொடு மிடைந்த தானைப பரவையை நோக்கி ஐயன்

நெருப்புமிழ் தன்மைத் தென்ன நெட்டுயிர்ப் பனில முந்தி

உரப்பினன் சிறிதே அற்றால் உம்பரில் குவிந்த பூளைப்

பொருப்பிடை அழல்புக் கென்னப் பூழியாய் உலகம் போர்த்த.              258

 

மாட்சியின் உலவு சேனை வடிவெலாம் விடுத்துத் தொல்லை

மாட்சியின் உயிரே தாங்கி மலைதுமென் றுன்னிப் பின்னுஞ்

சூட்சியின் வளைந்த வாபோற் சோதிவேற் குமரன் தன்பாற்

சூட்சியின் மேவிற் றம்மா தூயநுண் துகளின் ஈட்டம்.                     259

 

அந்தமில் தானை முற்றும் அத்தன்ஓர் உங்கா ரத்தால்

வெநதுக ளாகப் பின்னும் மேலையண் டத்துள் நின்ற

தந்தியும் பரியுந் தேருந் தானவப் படையும் ஆர்த்து

வந்துவந் தயலிற் சூழ வரம்பிலா முதல்வன் கண்டான்.           260

 

திருத்தமிழ் மதுரை தன்னிற் சிவன்பொருள் நிறுக்கு மாற்றால்

உருத்திர சரும னாகி உற்றிடு நிமலன் வெம்போர்

அருத்திகொள் கணிச்சி சூலம் ஆழிதண் டெழுவ தாகுங்

கரத்தினிற் படைகள் தம்மை நோக்கியே கழற் லுற்றான்.          261

 

வென்றியம் படைகாள் கேண்மோ விரைந்துடன் தழுவி நம்பாற்

சென்றிடும் அனிகந் தன்னைச் சென்னெறி பெறாமல் அப்பால்

நின்றிடு படையை எல்லா£ம் நீவிர்பல் லுருக்கொண் டேகிக்

கொன்றிவண் வருதி ரென்று கூறிமற் றிவற்றைத் தொட்டான்.     262

 

ஆதிநா யகன்விட் டுள்ள படையெலாம் அநந்த கோடி

சோதியார் கதிருந் தீயும் பணிகளும் போலத் தோன்றி 

ஏதிலான் அனிக மாகி இம்பருற் றனவி மைப்பின்

பாதியின் முன்னம் அட்டுப் பெருவிறல் படைத்த மன்னோ.        263

 

தூயதோர் குமரற் சூழ்ந்த படையைமுன் தொலைத்து வீட்டி

ஏயின படையோ ரைந்தும் இம்பரோ ஒழிய நின்ற

ஆயிரத் தோரேழ் அணடத் தகலமுஞ் சென்று சென்றாங்

கோய்வற எழுந்த தானை முழுதுமட் டுலவு கின்ற.                       264

 

ஐவகைப் படைகள் முற்றும் அண்டங்கள் தோறும் நின்ற

வெவ்விய அவுணர்த் தேய்த்து விரைவொடு திரித லோடுந்

தெவ்வியல் அவுணர் மன்னன் செயிர்த்துமற் றிதனை நோக்கி

இவ்வொரு கணத்தின் முன்னம் இவனுதிர் உண்பன் என்றான்.     265

 

சாற்றியித் தன்மை தன்னைத் தானவர்க் கரசன் முன்னங்

கூற்றுயிர் குடித்த நோன்றாட் பண்ணவன் கொடுப்பக் கொண்ட

மாற்றருந் திகிரி தன்னை வாங்கினன் வழிபட் டேத்திகக்

காற்றினுங் கடிது செல்லக் கந்தவேள் மீது விட்டான்.                     266

 

விட்டிடு திகிரி யாரும் வெருக்கொள விரைந்து சென்று

கிட்டிய காலைச் செவ்வேள் கிளர்ந்ததோர் பாணி நீட்டி

வட்டணை நேமி தன்னை வருதியால் என்று பற்ற

ஒட்டலன் அதனை நோக்கி உளந்தளர்ந் துயிர்த்து நின்றான்.                267

 

உண்ணிலா மாயை வல்ல ஒருதனித் தேர்மேல் நின்றோன்

எண்ணிலா உருவங் கொண்டே இருங்கணை மாரி தூர்ப்பத்

தெண்ணிலா மௌல அண்ணல் உதவிய செம்மல் நோக்கி

நண்ணலான் ஒருவன் மாய நன்றுநன் றென்று நக்கான்.           268

 

சிறுநகை செய்து மேலாஞ் தேசனப் பகழி பூட்டி

அறுமுகன் அவுணர் செம்மல் ஆற்றிடு மாய முற்றும்

இறைதனில் முடித்தி யென்றே ஏவலும் விரைவின் ஏகி

முறைநெறி பிழைத்தோன் மாயம் முற்றொருங் கடட தன்றே.             269

 

மாயையின் உருவ நீங்க வலியழந் துள்ளம் மாழ்கித்

தீயவன் ஒருவ னாகிச் சேணுயர் தேரின் நின்றான்

ஆயது தெரிந்து வானோர் அறுமுகத் தவனைப் போற்றிப்

பாய்புனற் கடலின் ஆர்த்துப் பனிமலர் மாரி தூர்த்தார்.             270

 

தூர்த்தலுந் தேருந் தானுந் துண்ணெனக் கரந்து சூரன்

பேர்த்திடு மண்ட கூடப் பித்திகை வாயி லெய்தி

ஆர்த்தறை கூவிப் புக்காங் கப்புறத் தண்டஞ செல்லத்

தீர்த்தனும் அதனை நோக்கித் தீயனைத் தொடர்ந்து போனான்.      271

 

தொடா¢ந்துதன் மனத்திற் செல்லுந் தொல்லைமால் இரதத் தோடுங்

கடந்தபோ¢ ஆடல் மிக்க காசிபன் தனயன் நின்ற

இடந்தலைப் படலும் அன்னான் எந்தையோ டிகற்போ ராற்றி

அடுந்திறல் மாயை நீரால் அப்புறத் தண்டம் போனான்.            272

 

இந்நிலை அவுணர் கோமான் இருநிலத் தண்ட முற்றும்

மின்னெனப் படர்ந்து தோன்றி வெய்யபோர்  விளைத்து நின்று

பின்னருங் கரந்து செல்லப் பிரானும்அவ் வண்டந் தோறும்

துன்னலம் தனைவி டாது தொடர்ந்தமர் இயற்றிப் போனான்.              273

 

வேறு

 

ஆய காலை அயன்முதல் தேவர்கள்

நேய மிக்க குரவரை நீங்கிய

சேயி னோர்களில் தேம்பித் திருமகள்

 நாய கன்றனை நோக்கி நவிலுவார்.                    274

 

வலங்கை வாளுடை மாயைதன் மாமகன்

பொலன்கொள் அண்டப் புரைதனுட் போயினான்

இலங்கு வேற்படை யெந்தைதன் போரிடை

விலங்கி னானலன் என்றும் விளிகிலான்.         275

 

மாயை ஆற்றவும் வல்லவன் ஈண்டொ£¦இப்

போய தன்மை புணர்ச்சிய தேயலால்

ஆயின் வேறிலை ஆறிரு மொய்ம்புடைத்

தூயன் மற்றது சூழ்ந்திலன் போலுமால்.          276

 

வாடி னானென மாற்றல னைத்தொடர்ந்

தோடி னான்எந்தை ஒல்லையிற் சூரனைக்

கூடி னான்கொல் குறுகல னாகியே

நாடி னான்கொல் அறிகிலம் நாமெலாம்.          277

 

மாக மேல்நிமிர் மற்றையண் டத்தினுஞ்

சேகு லாவிய சிந்தையன் தன்னுடன்

ஏகி னான்ஐயன் என்னினித் தான்விளை

வாகு மோவென்னும் அஞ்சுதும் ஏழையேம்.              278

 

என்ற காலையில் அங்கெழிற் பூவைபோல்

நின்ற மாயவன் நீள்மல ரோன்முதல்

துன்றும வானவர் சூழலை நோக்கியே

ஒன்றும் அன்பொ டுளப்பட ஓதுவான்.                   279

 

வேறு

 

வஞ்ச மேதகும் அவுணர்கோன் ஆற்றலை மதித்தீண்

டஞ்சி அஞ்சியே இரங்கலிர் அறுமுகத் தொருவன்

செஞ்சி லைத்தனி வன்மையும் வீரமுந் தெரிந்து

நெஞ்ச கத்திடை ஐயுறு கின்றது நெறியோ.                      280

 

ஓதி யாகியும் உணர்ந்தவர்க் குணரவும் ஒண்ணா 

நீதி யாகியும் நிமலம தாகியே நிகழுஞ்   

சோதி யாகியுந் தொழுதிடும் எம்மனோர்க் கெல்லாம்      

ஆதி யாகியும் நின்றவன் அறுமுகன் அன்றோ.            281

 

ஈறி லாதவர் பரமனே குழவியின் இயல்பாய்

ஆறு மாமுகங் கொண்டுவித் தானென்ப தல்லால்

வேறு செப்புதற் கியையுமோ மேலவன் தன்மை

தேறி யுந்தௌ¤ கின்றில உமதுசிந் தையுமே.                     282

 

ஐயம் எய்தலிர் ஆயிர கோடி அண்டத்தும்

வெய்ய னேகினுந் தொடர்ந்துபோய் வெஞ்சமர் இயற்றிச்

செய்ய வேலவன் துரந்துவந் திடுந்தினைத் துணையில்

கையில் நெல்லிபோற் காட்டுவன் நீவிருங் காண்டீர்.              283

 

என்று மாயவன் கழறலும் அயன்முதல் எவரும்

நன்றெ னத்தௌ¤ வுற்றனர் அவ்வழ நண்ணான்

ஒன்றின் ஆயிர கோடியண் டத்தினும் ஓடி

நின்று நின்றமர் ஆடினன் எந்தையை நேர்ந்து.                    284

 

வெந்தி றற்சமர் ஆற்றியே அவுணர்கோன் மீட்டும்

இந்த வண்டத்து மகேந்திர வரைப்பில்வந் திறுத்தான்

முந்து நீழலை விடாதுசெல் வோரென முனிந்து

கந்த னுந்தொடர்ந் தவனொடு போந்தனன் கடிது.          285

 

வேறு

 

போந்திடு தன்மை நோக்கிப் புராரிதன் புதல்வன நங்கள்

ஏந்தலைத் தொடர்ந்தான் என்ன இம்பரில் அவுணர் தானை

தீந்தழ லென்னப் பொங்கிச் செங்கையிற் படைகள் வீசி

ஆய்ந்திடும் உணர்வின் மேலாம் ஆதிதன் புடைசூழ்ந் தார்த்தார்.    286

 

நாதனும் அதனை நோக்கி நன்றிவர் முயற்சி யென்னா

ஓதினன் முறுவல் செய்ய ஒன்னலன் தானை தொன்னாள்

மூதெயில் என்ன நீறாய் வெந்துடன் முடிந்த தம்மா

தாதைதன் செய்கை மைந்தன் செய்வது தக்க தன்றோ.            287

 

ஆனதோர் காலை தன்னில் அறுமுகம் படைத்த அண்ணல்

தூநகை அங்கி செல்லத் துண்ணெனப் பதைத்து வீழ்ந்து

தானவர் அனிகம் வெந்த சாம்பரின் குன்றை நோக்கி

வானவர் மகிழ்ந்து பூத்தூய் வள்ளலை வழுத்தி நின்றார்.          288

 

முருகவிழ் தொடைய லான்றன் முறுவலான் அனிக முற்றும்

விரைவின் நுண் துகளதாகி வீழதலும் அவுணர் வேந்தன்

ஒருவனுந் தமியன் நின்றான் ஒண்டமிழ் முனிவன் உண்ணத்

திரைகட லின்றித் தோன்றுந் தீப்பெருங் கடவுள் ஒத்தான்.          289

 

முன்படை குமரன் அங்கண் முறுவலித் திட்ட வாறும்

தன்படை அழிந்த வாறும் தமியன்றான் நின்ற வாறும்

கொன்படை வீர ரோடு குறட்படை ஆர்க்கு மாறும் 

துன்படை அவுணன் கண்டாங் குளத்தொடுஞ் சொல்ல லுற்றான்.   290

 

பின்னறு துணைவர் மைந்தர் பேரியல் அமைச்சர் ஏனோர்

முன்னுற முடிந்தார் இன்று முடிவுறாத் தானை முற்றும்

பன்னிரு கரத்து மைந்தன் படுத்தனன் தமிய னானேன்

என்னிவண் செய்வ தென்னா உயிர்த்தனன் எண்ண மிக்கான்.       291

 

மாயவள் தன்னை மன்னன் மனத்திடை நினைத்த லோடும்

ஆயவள் வந்து தோன்றி அரும்பெறல் ஆற்றல் மைந்த

நீயொரு தமிய னாகி நின்றுளந் தளர்ந்தே என்னைக்

கூயினை முன்னிற் றென்னை தெரிவுறக் கூறு கென்றாள்.         292

 

அறிந்திடு மாயை இவ்வா றறைதலுங் குமரன் போரின்

மறந்தகு துணைவர் மைந்தர் மந்திரி தானை முற்றும்

இறந்திட எஞ்சி னேன்யா னியாவரும் எழுதற் கொத்த

திறந்தனை அருண்மோ என்ன நகைத்தவள் செப்ப லுற்றாள்.      293

 

உறுபடை சுற்றுந் துஞ்ச ஒருவனே யாயும் விண்ணோர்

சிறைவிடுத் துய்யு மாறு சிந்தனை செய்தி லாய்நீ

அறுமுகன் தன்னோ டின்னும் அமர்செயக் குறித்தி யாயின்

நிறைபெருஞ் செல்வ வாழ்க்கை நீங்கினை போலும் அன்றே.              294

 

பன்னிரு தடந்தோள் கொண்ட பகவனைப் பாலன் என்றே

உன்னலை அவன்கை வேலால் ஒல்லையிற் படுதி கண்டாய்

இன்னுயிர் துறக்க நின்றாய் என்மொழி கேட்பாய் அன்றே

சென்னியில் விதியை யாவ ராயினுந் தீர்ந்தார் உண்டோ.          295

 

நின்றிட அனைய தன்மை நின்னுளம் மகிழு மாற்றால்

பொன்றினர் எழுதல் வேண்டில் புறக்கடற் கொருசா ராக

மன்றல்கொள் அமுத சீத மந்தர கூடம் என்றோர்

குன்றுள ததனை ஈண்டே கொணருதி கூடும் என்றாள்.            296

 

இவ்வகை உரைத்து மாயை ஏகினான் ஏக லோடும்

மைவரை யென்ன நின்ற மன்னவர் மன்னன் கேளா

அவ்வைதன் சூழச்சி நன்றால் அடுகளத் தவிந்தோர் யாரும்

உய்வகை இதுவே என்னா உன்னினன் உவகை மிக்கான்.          297

 

ஆவகை உலவவவ கொள்ளா அமுதமந் தரங்கொண் டேக

ஏவரை விடுத்தும் என்றே இறைப்பொழு தவுணர் தங்கள்

காவலன் முன்னி மாயக் கடுமுரண் தேரின் நீங்கித்

தேவியல் அரிமான் ஏற்றுத் திறலுடை எருத்தம் புக்கான்.          298

 

இந்திர ஞாலந் தன்னை இறையவன் விளித்து நீயென்

புந்தியின் விரைந்து சென்று புறக்கடல் மருங்கின் மேவி

அந்தம தடைந்தோர்க் காவி அளித்திடும் அமுதங் கொண்ட

மந்தர கிரியைக் கீண்டு மற்றிவண் கொணர்தி யென்றான்.         299

 

விழுமிய மாய மான்தேர் வினவியோர் கணத்தின் முன்னம்

எழுகட லினுக்கும் அப்பால் இருந்திடு கடலின் சார்போய்

அழிவுறா தங்கண் நின்ற அமுதமந் தரத்தைக் கொண்டு

வழிபடர் கதியின் மீண்டு மகேந்திரம் புக்க தன்றே.                300

 

வேறு

 

அக்காலையில் இரதந்தரும் அமுதத்தனி வரையின்

மெய்க்கால்வர அந்நாள்வரை வெம்பூசல் இயற்றி

மைக்காலன்மெய் யுயிருண்டிட மறியும்படை முழுதும்

தொக்காலம தெழுந்தாலெனத் துண்ணென் றெழுந்தனவே.         301

 

பரியின்தொகை முழுதுய்ந்தன பனைபோலிய நெடுங்கைக்

கரியின்தொகை முழுதுய்ந்தன கடுந்தேர்த்தொகை ஈர்க்கும்

அரியின்தொகை முழுதுய்ந்தன அவுணப்படை யாகி

விரியுந்தொகை முழுதுய்ந்தன மெய்யூறது நீங்கி.                 302

 

வடிவற்றுடல் அழிந்திட்டிடும் உயிரானவும் மருமம்

வடிகைத்தலம் முடிதோள்முதல் அங்கங்கள் குறைந்தே

முடிவுற்றிடும் உயிரானவும முளரிக்கனல் உண்ணப்

பொடிபட்டிடும் உயிரானவும் எழுந்திட்டன புவிமேல்.                      303

 

மிண்டிககடி துயிர்பெற்றெழு வெஞ்சூர்முதல் அனிகம்

எண்டிக்கொடு புவிபாதலம் இருநாற்கடல் எங்கும்

மண்டிக்கக னத்தேழ்வகை உலகங்களும் மல்கி

அண்டத்தனி முடிகாறும் அடைந்திட்டன மிடைந்தே.                      304

 

மாதண்டம்எ ழுத்தோமரம் வயிரப்படை வாள்தோல்

கோதண்டமு தற்பல்படை கொடுதானவர் அனிகம் 

வேண்டமெ னச்சேணுயர் வேழம்பரி நிரைகள்

மூதண்டம்வெ டிக்கும்படி முழங்குற்றன அன்றே.                 305

 

எழுந்தான்வயப் புலிமாமுகன் இரவிப்பகை எழுந்தான்

எழுந்தான்எரி முகவெய்யவன் இளமைந்தனும் எழுந்தான்

எழுந்தான்அறத் தினைக்காய்பவன் இருபாலரும் எழுந்தார் 

எழுந்தார்ஒரு மூவாயிரர் ஏனோர்களும் எழுந்தார்.                306

 

சூர்க்கின்றதொல் வடிவங்கொடு துண்ணென்றெழு கின்றோர்

பார்க்கின்றனர் அனிகங்களைப் பகுவாய்திறந் திடிபோல்

ஆர்க்கின்றனர் தமதாடலை அறைகின்றனர் நம்மேல்

போர்க்கின்றுவந் தனர்யாரெனப் புகல்கின்றனர் இகலால்.           307

 

ஈடுற்றிடு சமரெல்லையில் இடையுற்றி படைகள்

நாடுற்றிவண் எடுத்திட்டனர் நறையுற்றிடு தும்பை

சூடுற்றிடு மணிமாமுடிச் சூரன்புடை தன்னில்

கூடுற்றனர் வெம்போர்செயுங் குறிப்புற்றனர் அன்றே.                      308

 

வேறு

 

உய்ந்திவர் யாவரும் ஒல்லை எழுந்தே

அந்தமில் சேனையொ டார்த்திடு காலை

இந்திர ஞாலம்  எனப்படு மான்தேர்

வந்தது தானவர் மன்னவன் முன்னம்.                           309

 

பொற்றையி அஅ£டு பொலன்கெழு மான்தேர்

உற்றதும் அன்பினர் உய்ந்தெழு மாறும்

இற்றப தாதி இரைத்தெழு மாறுந்

தெற்றென மாயவள் செம்மல் தெரிந்தான்.                       310

 

மகிழ்ந்தனன் ஆர்த்தனன் வானவர் தம்மை

இகழ்ந்தனன் விம்மிதம் எய்தினன் யாயைப்

புகழ்ந்தனன் மேனி பொடித்தனன் நெஞ்சந்

திகழ்ந்தனன் நன்னகை செய்தனன் அன்றே.                      311

 

உந்திநி ரப்புறும் உண்டிய தின்றி 

முந்திநி ரப்பிடை மூழ்கினன் வல்லே    

வெந்திறல் ஆளி வியன்றவி சேறி      

இந்திர நல்வளம் எய்திய தொத்தான்.                            312

 

ஓங்கிய சென்னி உயர்ந்தன மொய்ம்பு

வீங்கிய தாலுடன் மிக்கு மதர்ப்புத்

தேங்கிய சிந்தை சிலிர்த்த உரோமம்

ஆங்கவன் எய்திய தாரறை கிற்பார்.                             313

 

வஞ்சன் இதந்திடு மைந்தன்இவ் வாற்றல்

நெஞ்ச மகிழ்ந்தவண் நின்றிடு காலை

நஞ்சம் எழுந்திடு நாள்கொலி தென்றே

அஞ்சி நடுங்கினர் அண்டர்கள் எல்லாம்.                  314

 

பொன்னகர் வாழ்க்கை புவித்திசை வாழ்க்கை

பின்னுறு கின்ற பெரும்பத வாழ்க்கை

எந்நகர் வாழ்க்கையும் எய்திய இன்னே

ஒன்னலர் கொல்லுமுன் ஓடுதும் என்றார்.                315

 

ஊர்ந்திடும் ஊர்திகள் ஓர்புடை தம்பாற்

சார்ந்தவர் ஓ£¢புடை தாமொரு பாலாய்ச்

சேர்ந்திடு கைப்படை சிந்திவிண் ணோர்கள்

பேர்ந்திரி கின்றனர் பின்னது நோக்கார்.                   316

 

கிள்ளை புறாமயில் கேழ்கிளா¢ அன்னம் 

பிள்ளை மணிக்குயில் பேரிசை ஆந்தை

கள்ளுணும் வண்டு கரண்டம தாதிப்

புள்ளுரு வங்கொடு வானவர் போனார்.                   317

 

அங்கது நோக்கி  டற்கண வீரர்

மங்கிய தானையும் மாண்டுளர் யாரும்

இங்கெழு கின்றனர் யாமிவண் வீந்தாஞ்

சங்கையி லென்று தளர்ந்தலை வுற்றா£¢.                318

 

இலக்கரும் எண்மரும் ஏந்தலும் நோக்கி

அலக்கணும் அச்சமும் அற்புத நீருங்

கலக்கமும் வெய்ய கடுஞ்சின முங்கொண்

டுலைக்கனல் அன்ன உயிர்ப்பொடு நின்றார்.                      319

 

வேறு

 

வென்றி கொண்டவேற் குமரன்இவ் விளைவெலாம் நோக்கி

நின்ற ஒன்னலன் சூழ்ச்சியும் வலவைசொல் நெறியும்

குன்றின் வன்மையும் உய்ந்தெழு பரிசனர் குழுவும்

நன்று நன்றெனக் கையெறிந் தழலெழ நகைத்தான்.                       320

 

ஆன காலையில் அரிமுகன் அலரிதன் பகைஞன்

ஏனை மைந்தர்கள் அறத்தினை வெகுண்டிடும் ஏந்தல்

சேனை காவலர் யாவருஞ் சூரன்முன் சென்று

மான வீரமோ டிறைஞ்சிநின் றினையன வகுப்பார்.                321

 

எந்தை நீயிவண் நிற்குதி யாமெலாம் ஏகிக்

கந்த வேளுடன் அவன்படை வீரரைக் கடிந்து

சிந்த ராகிய பூதர்தந் தொகையையுஞ் செகுத்து

வந்து நின்னடி வணங்குதும் வல் விரைந் தென்றார்.                      322

 

கொற்ற வீரர்கள் இவ்வகை உரைத்தலுங் கொடியோன்

மற்றிவ் வாசகம் நன்றெனைப் போற்றுவான் வந்தீர்

பற்ற லன்பெரு வன்மையும் வீரமும் படுத்து

வெற்றி இன்றெனக் கரளுதி ராலென விடுத்தான்.                 323

 

விடுத்த காலையில் விடாதுசூழ் அனிகங்கள் விரவி

அடுத்து வந்திடப் பொளன ஏகியே ஆர்த்துப்

பிடித்த பல்வகைப் படைகளும் உருமெனப் பெய்து

வடித்த வேற்படை நம்பியை அன்னவர் வளைத்தார்.                     324

 

தீங்க னற்பெருங் கடவுள்பாற் செறியிருட் டொகைபோல் 

வாங்கு விற்கரத் தையனை அவுணர்கள் வளைப்ப

ஏங்கல் உற்றனர் பாரிடர் ஏனையோர் எம்மால்

தாங்கு தற்கரி திப்பெரும் படையெனத் தளர்ந்தார்.                325

 

விறலு டைப்ப• றானையும் வெய்யவர் தொகையும்

நொறிது டைக்கதி கொண்டுசூழ் வுற்றது  நோக்கி 

அறுமு கத்தனிப பண்ணவன் உயிர்த்தொகை அனைத்தும் 

இறுதி யைப்புரி கடவுள்மாப் படையினை  எடுத்தான்.                    326

 

அங்கை யிற்கொடு சிந்தையால் வழிபடல் ஆற்றிச்

சிங்க மாமுகன் ஆதியாம் அவுணர்தந் திறத்தைச்

சங்கை இன்றியே நின்றிடு தானைகள் தம்மை

இங்கு வல்லையில் அடுதியால்எனவிடுத் திட்டான்.                       327

 

விடுத்த காலையில் கட்செவி நிரைகளும் விடமும்

இடிக்கு ழாங்களும் உருத்திரர் உருக்களும் எரியுங்

கடற்பெ ருங்கணத் தொகுதியும் அளவிலாக் கடவுட்

படைக்க லங்களு மாய்விரிந் ததுசிவன் படையே.                 328

 

இன்ன தன்மையால் அரன்படை மூதண்டம் எங்குந்

துன்னி யார்த்தெழீஇத் துண்ணெனச் சென்றுசூழ் வுற்று

முன்னர் உய்ந்தெழும் அவுணர்தம் படையெலாம் முருக்கி

ஒன்ன லன்தமர் யாரையும் ஒருங்குகொன் றதுவே.                       329

 

முந்து வெய்யசூர்ப் பரிசனத் தொகையெலாம் முருக்கி

இந்திரப்பெரு ஞாலமாந் தேர்மிசை இருந்த       

மந்த ரப்பெருங் கிரியினைத் துகளெழ மாய்த்துக் 

கந்த வேள்படை மீண்டது சிவன்படைக் கலமே.                  330

 

அரிமு கத்தவன் ஆதவன் தனைமுனம் அழன்றோன்

எரிமு கத்தவன் வச்சிர மொய்ம்பன்நூற் றிருவர்

முரண்மி குத்தமூ வாயிரர் அறப்பகை முதலோ£¢

விரிக டற்படை வெற்பொடு முடிந்தவண் வீழ்ந்தார்.                      331

 

தன்மை அங்கவை யாவையுங் கண்டனன் தளர்ந்தான்

வன்மை நீங்கினன் கவன்றனன் இரங்கிமெய் மறந்தான்

புன்மை யாயினன் உயிர்த்தனன் செயிர்த்தனன் புலர்ந்தான்

தொன்மை போலவே தமித்தனன் துணையிலாச் சூரன்.            332

 

கண்ட கன்படை முற்றொருங் கிறந்தது காணா

எண்டொ கைப்படு பூதரும் ஏனைவீ ரர்களும் 

முண்ட கந்தனில் இருந்திடு புங்கவன் முதலாம்

அண்டர் யாவருந் துயரொரீஇ உவகைபெற் றா£¢த்தார்.            333

 

 

அழுந்தும் ஆரிருள் ஒருவிவிண் மிசைதனில் அடைவோர் 

கழிந்த தோரிடை ஊற்றினான் மீட்டும்அக் கதியில்

விழுந்த தேயெனத் துன்பொடு நின்றனன் விளிவுற்

றெழுந்த தானையை இழந்திடும் அவுணருக் கிறைவன்.           334

 

அனைய தன்மையின் நின்றிடும் அவுணர்கோன் ஆற்றச்

சினம தெய்தியென் படையெலாஞ் சிதைத்தபா லனையுந் 

தனிமை செய்துபின் வெல்வனென் றுளங்கொடு தழற்கண்

முனைவன் நல்கிய தேரினை நோக்கியே மொழிவான்.            335

 

கொச்ச கத்தியற் குதலைவாய் மதலைபாற் குழீஇய

வச்சி ரத்தெயி றுடையவெம் பூதரை வயின்சூழ்

கைச்சி லைத்திறல் வீரரைக் கவர்ந்துபோய் அண்டத்

துச்சி யிற்கொடு வைத்தனை இருத்தியென் றுரைத்தான்.          336

 

உரைத்த காலையில் நன்றென வினவியே ஓடித்

திருத்த குந்திறல் வாகுவை முதலினோர் திறத்தைக்

கிருத்தி மப்பெருந் தானையைக் கிளையொடும் வாரிக்

கருத்தை மாமயல் செய்தது வைதவன் கடுந்தேர்.                 337

 

கையர் தன்மையிற் கடற்படை முழுவதுங் கவர்ந்து

மையல் சிந்தையிற் செய்துதன் வயினிடைத் தாங்கி

ஒய்யெ னச்சென்று மூதண்ட கோளகை யுழிப்போய்

வெய்ய வன்பணி ஆற்றிஆண் டிருந்தது வியன்தேர்.                      338

 

நிமலன் அவ்வழித் தானையம் பெருங்கடல் நீங்கத்

தமியன் நின்றனன் ஆங்கது தகுவர்கோன் காணா

நமது தேர்வலி நன்றென உவகையால் நகைத்தான்

அமரர் அச்செயல் நோக்கியே பின்னரும் அயர்ந்தார்.                      339

 

சூரி டத்துறு சூழ்ச்சியுந் துணைவர்கள் தம்மைப்

பாரி டத்தொடு முகந்தெழீஇ மாயையிற் படர்ந்து

தேரி டத்தியல் வன்மையும் ஆங்ஙனந் தெரிந்தான்

நேரி டப்பிறர் இன்றியே தமியனாம் நெடியோன்.                  340

 

கண்டு சீறியோர் கார்முகம் வாங்கியே கடிதோர்

திண்டி றற்கணை பூட்டிநஞ் சேனையைப் பற்றி

அண்ட கோளகை புக்குறும் அடுமுரண் தேரைக்

கொண்டு வல்லையின் வருகென விடுத்தனன் குமரன்.            341

 

விடுந்த னிக்கணை வேலெனச் சென்றுவில் வீசி

இடந்தி கழ்ந்திடும் ஏழ்வகை உலகமும் இமைப்பில்

கடந்து மற்றுள பதங்களும் நீங்கியோர் கணத்தில்

தொடர்ந்து மூதண்ட கோளகை புகுந்தது துன்னி.                  342

 

துன்னி வெஞ்சரம்  £யமான் தேர்வலி தொலைச்சி

அன்ன தைக்கொணர்ந் தொல்லையின் மீண்டுள தம்மா

மின்னு லாய்நிமிர் எழிலியை விண்ணினும் பற்றி

இந்நி லத்தினிற் கொடுவரும் மாருதத் தியல்போல்.                       343

 

வேறு

 

வெந்திறல் நெடுங்கணை மீண்டு ஞாலமேல்

இந்திர ஞாலமாம் இரதத் தைக்கொடு

கொந்தவிழ மாலைவேற் குமரன் தன்முனம்

வந்தது வானவர் வழுத்தி ஆர்ப்பவே.                            344

 

முப்புரம் முடித்தவன்  ருகன் தன்கணை

இப்புவி வருதலும் இலக்கத் தெண்மரும்

ஒப்பரும் இளவலும் ஒல்லென் பூதருங்

குப்புறல் உற்றனர் கொடியன் தேரினும்.                  345

 

குதித்தனர் புடவியில் குமர வேண்இரு

பதத்திரு மலர்தனைப் பணிந்து பன்முறை

துதித்தனர் புடையராய்த் துன்னி நின்றனர்

கதித்திடு பேரருட் கடலின் மூழ்கியே.                            346

 

ஆவதோர் காலையில் அகிலம் யாவுமாம்

மூவிரு முகனுடை முக்க ணான்மகன்

வாவியல் வனப்புடை மாயத் தேர்தெரீஇத்

தேவர்கள் பரசுற இனைய செப்புவான்.                   347

 

தொல்லையில் வரம்பெறு சூரன் தன்புடை

செல்லலை ஆங்கவன் முடிகை திண்ணமால்

மல்லலந் திருவுடை மாயத் தேரைநீ

நில்லிவண் என்றனன் நிகரில் ஆணையான்.                      348

 

ஆண்டது வினவுறா அவுணர் கோன்புடை 

மீண்டிடல் அஞ்சியே மேலை வன்மைபோய்

மாண்டிடல் பிறப்பிலான் மதலை மாடுறப்

பாண்டிலந் தேரது பணியின் நின்றதே.                           349

 

அண்டம தடைந்ததேர் ஐயன் வாளியால்

மண்டலம் இழிந்து தன்மருங் குறாததும்

எண்டகு பூதரும் யாரும் மீண்டதுங்

கண்டனன் அவுணர்கோன் கனலிற் சீறினான்.             350

 

அன்னது காண்டலும் அவுணன் ஆங்கொரு

கொன்னெடுஞ் சிலையினைக் குனித்து வல்லையிற் 

பன்னிரு கரமுடைப் பண்ண வன்மிசை

மின்னிகர் பகழிகள் மீட்டும் வீசினான்.                           351

 

மாசறு கங்கைதன் மதலை அவ்வழிக்

காய்சினங் கொண்டொரு கார்மு கம்வளைஇ

ஆசுக மாரிபெய் தவுணர் கோமகன்

வீசிய கணையெலாம் விலக்கி னானரோ.                352

 

கையனும் அத்துணை காய்சி னங்கொளீஇ

ஒய்யென எந்தைதேர் உய்க்கும் வன்மையோன்

மெய்யிடம் எங்கணும் வௌ¤யு றாவகை

செய்யன பகழிகள் செறித்துப் போர்செய்தான்.             353

 

பொருந்தலன் கணைபடப் புலம்பிக் காற்றினோன்

வருந்தினன் மயங்கினன் மாக்கள் தூண்டலன்

இருந்தனன் வறிதவன் இயற்கை யாவையுந் 

தெரிந்தனன் குமரவேள் அருளின் செய்கையான்.          354

 

கண்டிடு முருகவேள் கணைகள் ஆயிரம்

விண்டொடர் செலவினால் விடுத்து வெய்யசூர்

கொண்டிடு சிலையினைக் குறைத்துப் பல்பெருந்

துண்டம தாக்கினான் அமரர் துள்ளவே.                  355

 

வேறு

 

கைச்சிலை முரியச் சூரன் கண்ணுதற் பெருமான் தந்த

முச்சிகைப் படையொன் றேந்தி முடங்குளை யூர்தி தன்னை

உச்சியின் நீபஞ் சூடும் உலகுடை யொருவ னூர்ந்த

அச்சுறு தடந்தேர் முன்னர் அணுகுறத் தூண்டிச் சென்றான்.        356

 

தூண்டிய அரிமான் ஏறு சூரன துளத்திற் போந்து

மாண்டகு தனது தீய வள்ளுகிர்க் கரத்தால் எந்தை

பாண்டிலந் தேரை ஆற்றும் பரித்தொஆஆ பதைப்ப மோதி

ஆண்டயல் நின்ற பூதர் அலமர ஆர்த்த தன்றே.                   357

 

அன்னது பொழுது தன்னில் அரிமிசைச் சென்ற சூரன்

தன்னுடை வலங்கை கொண்ட தனிப்பெருஞ் சூலந் தன்னைப்

பன்னிரு தடந்தோள் கொண்ட பகவன்மேற் றிரித்து வீச

மின்னென நிலவு கான்று விண்வழப் படர்ந்த தன்றே.                     358

 

நீடிய சூலஞ் செல்ல நிமிர்ந்தன எழுந்து செந்தீக்

கூடின அசனி ஈட்டங் குழீஇயின படையின் கொள்ளை

ஆடியல் கணங்கள் ஈண்டி ஆர்த்தன அதனை நோக்கி 

ஓடினர் அமரர் ஆனோர் உலகெலாம் வெருவிற் றம்மா.           359

 

அண்ணலும் அதனை நோக்கி ஆயிர கோடி வாளி

கண்ணகன் சிலையிற் பூட்டிக் கதுமென எதிர்தந் துய்ப்பத்

துண்ணென அவற்றை எல்லாஞ் சூலவேல் துணித்து வீட்டி

நண்ணலன் வெகுளித் தீயின் உருவென நடந்த தன்றே.           360

 

நடத்தலும் முகமா றுள்ளோன் ஞானநா யகன்ஈந் துள்ள

படைத்திறல் வன்மை உன்னிப் பாணியொன் றதனின் மேவி

அடுத்திடு குலிசந் தன்னை அடையலன் உய்த்த சூலம்

பிடித்தனை  வருதி யென்று பேசினன் செல்ல விட்டான்.          361

 

விட்டிடு கின்ற எல்லை வியன்பெருங் குலிசம் ஏகி

நெட்டழற் சிகைமீக் கான்று நிமிர்ந்திடு சூலந் தன்னைக்

கிட்டுத லொடும் பற்றிக் கிளர்ந்தமுத் தலையுங் கவ்வி

ஒட்டலன் சிந்தை உட்க ஒய்யென மீண்ட தன்றே.                362

 

முத்தலைப் படையைக் கொண்டு முரண்மிகு குலிசஞ் செவ்வேள்

கைத்தலம் உய்த்துத் தானுங் கதுமென இருந்த தம்மா

பைத்தலைப் பாந்தள் போற்றும் பருவரைச் சிகர மூன்றும்

இத்தலப் புணரி தன்னில் இடுமருத் தியற்கை யேபோல்.           363

 

ஆண்டது காலை தன்னில் அறுமுகத் தையன் கையில

தூண்டிய குலிசத் தோடு சூலமும் வருத லோடுங்

காண்டகும் அமரர் எல்லாங் கரதலம் உச்சி கூப்பி

ஈண்டிவன் தன்னை அட்டே எமையளித் திடுதி யென்றார்.         364

 

என்னலும் எந்தை கேளா இராயிரம் பகழி பூட்டி

ஒன்னலம் ஊர்ந்து செல்லும் ஒருபெரு மடங்கல் ஏற்றின்

சென்னியில் அழுத்த லோடுஞ் சேண்கிளர்ந் தரற்றி வீழ்ந்து

தன்னுயிர் ஒல்லை வீந்து தரையிடைப் பட்ட தன்றே.                    365

 

ஊர்திய திறந்து வீழ ஒருதனிச் சூரன் காணாப்

பார்தனிற் பாய்ந்து நின்று பராபரன் செம்மல் கையில்

கூர்தரு சூலம் போன கொள்கையுந் தெரிந்து பின்னான்

சேர்தரு வடவை என்னச் செயிர்த்திவை சிந்தை செய்வான்.               366

 

தேரொடு படையை வௌவித் திறலுடை மடங்கல் சிந்தி

நேரலன் வலிய னேபோல் நின்றனன் அனையன் தன்னைச்

சாரதர் தொகையை ஏனைத் தலைவர்கள் தம்மை எல்லாம்

ஓருருக் கொண்டி யானே விழுங்குவன் ஒல்லை என்றான்.         367

 

என்றிவை மனத்தி லுன்னி இணையறு மாயை நீரால்

நின்றுள, அவுணர் செம்மல் நேமியம் புள்ளே போல

ஒன்றொரு வடிவ மெய்தி ஒலிதிரைக் கடலின் ஆர்த்துத்

தன்துணைச் சிறகர் பெற்ற தனிப்பெருங் கிரிபோ லுற்றான்.        368

 

கறையடித் தந்தி சிந்துங் காய்சின அரிமேல் உய்க்கும்

நறையடிக் கமலத் தையை ஞாட்பிடை ஆடற் கொத்த

பறையடித் திட்ட தேபோல் படிமகள் உடலம் விள்ளச்

சிறையடிக் கொண்டு தீயோன் சேணிடை எழுத லுற்றான்.         369

 

மண்ணிடை வரைப்பு முற்றும் மணிச்சிறை யதனான் மூடி

விண்ணிடைப் பரிதி யொள்வாள் விலக்கியே சுழலும் வேலைக்

கண்ணிடைப் பெருமீன் குபபை கவர்ந்திட ஊக்கிற் றென்னத்

துண்ணெனப் பூதர் தானைச் சூழல்புக் கெறியு மாதோ.             370

 

அடுத்திடுஞ் சிறகர் தன்னால் அளவையில் பூதர் தம்மைப்

பிடித்திடும் புலவு நாறும் பெருந்தனி மூக்கிற் குத்தி

மிடற்றிடைச் செறித்து மெல்ல விழுங்கிடும் விறல்வேல் அண்ணல்

கொடித்தடந் தேரைச் சூழுங் கொடியபுள் வடிவக் கூற்றம்.          371

 

சுற்றிடுங் குமரன் தேரைத் தூண்டிய வலவன் தன்னை

எற்றிடுங் கொடிஞ்சி எஞ்ச இறுத்திடும் பரிகள் தம்மைக்

குற்றிடு முக்கிற் சென்னி கொய்திடுங் குழீஇய வீரர்ப்

பற்றிடும் படைகள் முற்றும் பறித்திடு முறித்து வீசும்.                    372

 

இத்திறம் அவுணர் செம்மல் இருஞ்சிறைப் புள்ள தாகி

அத்தலைக் கறங்கி வீழ்வுற் றந்தரந் திரித லோடும்

முத்தியை உதவு நோன்றாள் மூவிரு முகத்தன் காணாக்

கைத்தலம் புடைத்து நக்கு நன்றிவன் கற்பி தென்றான்.            373

 

எறித்தரு சுடர்வேல் அண்ணல் இம்மென வெகுண்டு போரில்

நிறுத்திய மேரு வென்ன நிமிர்ந்ததோர் வரிவில் வாங்கி

விறற்கணை அநந்த கோடி மிசைமிசைக் கடிது பூட்டித் 

திறத்தியல் புள்ளாய்ச் சூழும் அவுணன்மேற் செல்ல வுய்த்தான்.    374

 

நெறித்திகழ் பகழ மாரி நிமலன்விட் டிடலும் வெய்யோன்

சிறைப்புடைக் கொண்டு பாங்கிற் சிந்திட அவற்றை மோதிக்

குறைத்திடுந் துண்டந் தன்னாற் கொய்திடுந் தாளிற் பற்றி

முறித்திடுங் கிளர்ந்து வானம் முழுவதுஞ் சுழன்று செல்லும்.              375

 

வேலைகள் எல்லை முற்றும் படர்ந்திடும் விராவி மேவு

ஞாலம தகல முற்றும் படர்ந்திடு நாகர் வைகும் 

வாலிய உலக முற்றும் படர்ந்திடும் வந்து பூத

சாலம தெறிந்து கல்வித் தலைத்தலை  மயங்கிச் செல்லும்.               376

 

சூரன்மற் றினைய வாற்றல் சுலாய்க்கொடு திரித லோடும்

பூரணன் அதனைக் காணாப் புள்ளெனப் பெயர்வான் தன்னைத்

தேரொடுந் தொடர்ந்து கோறல் பழயெனச் சிந்தை செய்து

வாரணம் உயர்த்தோன் தன்னை நோக்கினன் வானோர் தம்முள்.    377

 

இந்திரன் அனைய காலை எம்பிரான் குறிப்புந் தன்மேல்

அந்தமில் அருள்வைத் துள்ள தன்மையும் அறிந்து நோக்கிச்

சுந்தர நெடுங்கட் பீலித் தோகைமா மயிலாய்த் தோன்றி

வந்தனன் குமரற் போற்றி மரகத மலைபோல் நின்றான்.           378

 

நின்றிடு மஞ்ஞைப் புத்தேள் நெடுநிலங் கிழிய மேருக்

குன்றமும் புறஞ்சூழ வெற்புங் குலைந்திடக் கரிகள் வீழ

வன்றிரை அளக்கர் நீத்தம் வறந்திடப் பணிகள் அஞசத்

தன்றுணைச் சிறகால் மோதி இனையன சாற்ற லுற்றான்.         379

 

ஐயகேள் அஅர ரெல்லாம் வழிபட அளியன் தன்பால்

செய்ய பேரருளை வைத்தாய் ஆதலிற் சிறுமை தீர்ந்தேன்

உய்யலாம் நெறியுங் கண்டேன் உன்னடி பரிக்கப் பெற்றேன்

பொய்யுலா மாய வாழக்கைப் புன்மையும் அகல்வன் மன்னோ.     380

 

அல்லல்செய் தெமரை எல்லா மருஞ்சிறைப் படுத்தி வீட்டிப்

பல்வகை உலகை யயண்ட அவுணர்கோன் பறவை யாக்கை

செல்லுழச் சென்று சென்று செருவினை இழைத்து வெல்வான்

ஒல்லையில் அடியேன் தன்மேல் ஏறுதி ஊர்தற் கென்றான்.        381

 

என்னலும் உளத்திற் செல்லும் இவுளிமான் தேரின் நீங்கிப்

பன்னிரு நாட்டத் தண்ணல் படர்ச்சிறை மயூரி மாகி      

முன்னுறு மகவான் தன்மேல் மொய்ம்புடன் புக்கு வைகி  

ஒன்னலன் செலவு நோக்கி உம்பரில் ஊர்த லுற்றான்.                     382

 

ஆறுமா முகத்தெம் மண்ணல் அசனிபோல் அகவி ஆர்க்கும்

மாறிலா மயூர மென்னும் வயப்பரி தனைந டாத்தி

ஈறுசேர் பொழுதிற் சூழும் எரியினை அடுவான் முன்னிச்  

சூறைமா ருதஞ்சென் றென்ன அவுணனைத் தொடா¢ந்து சூழ்ந்தான்.383

 

ஆகிய பொழுது தன்னில் ஆழயம் புள்ளாய்த் தோன்றி

மாகம துலவு கின்ற மாற்றலன் அதனை நோக்கிச்

சீகர அளக்க ரென்னத் தெழித்துமேற் சென்று தாக்கக்

கேகய அரசன் தானுங் கிடைத்தமர் புரித லுற்றான்.                       384

 

நிறங்கிளர் பசலைத் துண்ட நீட்டியே யாக்கை முற்றும்

மறங்கொடு கீண்டு செந்நீர் வாய்ப்படக் கவ்வி வாங்கிப்

புறங்கிளர் சிறைகள் தம்மாற் புடைத்துவெங் காலில் தாக்கிப்

புறங்குபுள் ளுருவ மானோர் இவ்வகை பெரும்போர் செய்தார்.     385

 

இத்திறம் பொருத காலைப் பிணிமுகத் தேந்தல் தன்னைப்

பைத்தலை யுடைய தூவி பறித்திடா வதன முற்றுங்

குத்திவெங் குருதி வீட்டிக் குருமணிக் கலாபம் ஈர்த்து

மெய்த்துயர் புரிந்தான் நேமிப் புள்ளுருக் கொண்ட வெய்யோன்.    386

 

அச்செயல் முருகன் காணா ஆரழல் என்ன நக்குக்

கைச்சிலை யதனை வாங்கிக் கடுந்தொழில் அவுணர் மன்னன்

உச்சியின் முகத்திற் காலில் உரத்தினில் சிறைகள் தம்மில்

வச்சிர நெடுங்கண் வாளி வரம்பில தொடுத்து விட்டான்.          387

 

விட்டிடு கின்ற வாளி வெய்யவன் அங்க மெங்கும்

பட்டிடு கின்ற காலைப் பதைபதைத துதறிச் சிந்தி

எட்டுள திசையும் வானும் இருங்கடல் உலக மெங்குங்

கட்டழல் சிந்திச் சீறிக் கறங்கெனத் திரியா நின்றான்.                      388

 

திரிந்திடு கின்ற காலைச் செஞ்சுடர்த் தனிவேல் அண்ணல்

புரந்தரன் உருவாய் நின்ற பொறிமயில நடாத்தி யேகி

அரந்தெறு கணைகள் தூண்டி அகிலமும் அவுணன் தன்னைத்

துரந்தமர் இழைக்க லுற்றான் விண்ணவர் தொழுது போற்ற.               389

 

அத்தகும் எல்லை தன்னின் அவுணர்கள் எவர்க்கும் மேலோன்

எய்த்துளம் மெலிந்து சால இடருழந் திரக்க மெய்தி

மெய்த்தழ லென்னச் சீறி வேற்படை கொண்ட செம்மல்

கைத்தலத் திருந்த வில்லைக் கறிப்பது கருதி வந்தான்.           390

 

வருவது நிமலன் காணா மலர்க்கரம் ஒன்றில் வைகும்

ஒருதனி ஔ¢வாள் வீசி ஒன்னலன் பறவை யாக்கை

இருதுணி யாகி வீழ எறிந்தனன் எறித லோடும்

அரியயன் முதலாந் தேவர் அனைவரும் ஆடல் கொண்டார்.               391

 

வேறு

 

தாரார் வாகை சூடிய வேலோன் தன்கையிற்

கூரார் வாளாற் புள்ளுரு வத்தைக் குறைவிக்கச்

சூராம் வெய்யோன் அண்டமு கட்டைத் தொடவோங்கிப்

பாராய் நின்றான் விண்ணவர் யாரும் பரிவெய்த.         392

 

ஏழுட் பட்ட ஆழ்திரை நேமி யிடைதூர்த்துத்

தாழ்விற் செல்லு மாதவர் தேரைத் தடைசெய்து

சூழிக் கால்கள் வானெறி செல்லுந் துறைமாற்றிப்

பாழித் திக்கை மூடினன் நின்றான் படியானோன்.          393

 

ஆறார் சென்னிப் பண்ணவன் மைந்த னதுகாணாச்

சீறா நன்றாற் சூர்புரி மாயத் திறன்என்னாக்

கூறா அங்கைச் செஞ்சிலை தன்னைக் குனிவித்தே

ஊறார் வெங்கோல் ஏழு தொடுத்தே யுரைவெய்வான்.     394

 

நெடுவா னத்தின் காறும் எழுந்தே நிமிர்வெய்தி

முடிவான் வெய்யோன் பாரக மாய்என் முன்நின்றான்

கடலேழ் என்னுந் தன்மையின் நீவிர் கடிதேகி

அடுவீர் என்றே விட்டனன் யா£¢க்கும் அறிவொண்ணான்.  395

 

ஒற்றைச் செவ்வே லோன்விடு வாளி யுலகெல்லாஞ்

சுற்றிக் கொண்டே உண்டிடு நேமித் தொகைபோலாய்ச்

செற்றத் தோடும் ஆர்ப்பொடும் ஏகித் திரைவீசி

மற்றச் சூரன் தன்னுரு வத்தை வளைவுற்ற.                     396

 

வளையா வெஞ்சூர் மாயிரு ஞால வடிவத்தைக்

களையா உண்டே இன்மைய தாக்கிக் கணையேழுந் 

திளையார் நீத்தத் தொல்லுரு நீங்கிச் செருவின்கண்

விளையா டுற்ற எம்பெரு மானபால் மீண்டுற்ற.          397

 

காணா வெய்யோன் பாருரு நீங்கிக் கடல்எல்லாம்

ஊணா வையம் வானொடும் உண்டற் கெழுமாபோல்

ஏணார் நீத்தத் தோர்வடி வாகி யிறைமுன்னம்

நீணா கத்தின் காறும் நிமிர்ந்தே நின்றிட்டான்.             398

 

நேரான் மாயத் தொல்லுரு வத்தின் நிலைநோக்கிக்

கூரார் வாளி நூறு தொடுத்தே கோடியோன்பாற்

சேரா வூழித் தீயியல் பாகிச் செறிவுற்றுப்

பேரா தட்டே வம்மென விட்டான் பெயர்வில்லான்.               399

 

அவ்வா றாக வாளிகள் நூறும் அருள்நீரால்

வெவ்வாய் அங்கிப் பேருரு வாகி விரவிப்போய்த்

தெவ்வாய் நின்றோன் நீத்தம தாகுஞ் செயல்நீங்க

வெவ்வா யுஞ்சென் றுண்டன அம்மா இறைதன்னில்.              400

 

தண்டா தார்க்கும் நீத்த இயற்சை தனையெல்லாம்

உண்டா லித்தே வாளிகள் மீண்டே யுறுகாலைக் 

கண்டான் மாயத் தன்மை படைத்தோன் கனல்மேனி

கொண்டான் அண்டங் காறும் நிமிர்ந்தே குலவுற்றான்.     401

 

குலவுங் காலைக் கண்டு நகைத்தே கூற்றென்ன

நிலவுஞ் செங்கோல் ஆயிரம் வாங்கா நீடூழி

சுலவுஞ் சண்டச் சூறையின் ஏகிச் சூர்மாயம்

பலவுஞ் செற்றே வம்மென உய்த்தான் பரமானோன்.              402

 

உய்க்குங் காலத் தொய்யென ஏகி யுலகெங்குந்

திக்கும் வானுஞ் சூழு மருத்தின் திறனெய்தி

மைக்குந் தூமம் போல்பவன் மெய்த்தீ வடிவெல்லாம்

பொய்க்கும் வண்ணஞ் சாடின ஐயன் புகர்வாளி.           403

 

வேறு

 

வண்டு லாவரு வாகைய்ந் தாரினான்

கொண்டே ழுந்த கொழுந்தழல் யாக்கையை

உண்டு வாளிகள் ஒய்யென மீண்டொராய்

அண்டர் நாயகன் பாங்கர் அணைந்தவே.          404

 

ஆங்க வெல்லையில் அவ்வடி வத்தினை

நீங்கு மாற்றலன் நீள்சில மேற்கொளா

ஓங்கு மோதை உருவுகொண் டார்த்தலும்

ஞாங்கர் எந்தை நகையொடு நோக்கினான்.               405

 

ஆய்ந்து வாளியொ ராயிர நூற்றினை

வாய்ந்த கைக்கொடு மாற்றலன் வன்மையைப்

பாந்த ளாகிப் படுத்து வம்மோவெனா

ஏந்தல் கூறி இமைப்பினில் தூண்டினான்.         406

 

அவ்வ யிற்கணை அந்தரத் திற்செலாச்

செவ்வி திற்கிளர் செந்தழல் போல்எழீஇப்

பைவி ரித்த ப•றலைப் பன்னகம்

வெவ்வு ருக்கொடு சூர்மிசை மேயதே.            407

 

கூற்றம் அன்ன கொடுந்தொழில் மன்னவன்

காற்றின் யாக்கை கரப்ப மிசைந்திடா

ஆற்றல் மேவி அணைந்துடன் மீண்டன

வேற்ற டக்கை விமலன் புடைதனில்.                    408

 

இன்ன தன்மையில் ஈரிரு நாள்வரைத்

துன்ன லன்தொலை யாதமர் ஆற்றியே

பின்னும் மாயையின் பெற்றியைப் புந்தியுள்

உன்னி யேபல் லுருக்கொடு தோன்றினான்.               409

 

வேறு

 

ஓவாஇயல் புரிமூவரில் ஒருசார்வரு மொழியுந்

தேவாசுரர் பிறராமென ஒருசார்வரும் சேணாள்

கோவாமென ஒருசார்வரும் ஒருசார்வருங் குறள்போல்

ஆவாவெனக் கொடுங்கூற்றென ஒருசார்வரும் அன்றே.    410

 

பேயாமென ஒருபால்வரும் பிறழ்வெம்புகைப் படலைத்

தீயாமென ஒருபால்வரும் திசைஎங்கணும் சுழலும்

ஓயாமருத் தினமாமென ஒருபால்வரும் அகிலம்

பாயாவெழு திரையாழயில் ஒருபால்வரும் பரவி.         411

 

ஒருசார்விட மெனவந்திடும் ஒருசார்வரும் பணிபோல்

ஒருசார்முகி லெனவந்திடும் ஒருசார்வரு மிருள்போல்

ஒருசாருரு மெனவந்திடும் ஒருசார்வரும் வரைபோல்

ஒருசார்தன துருவாய்வரும் ஒருசார்வருங் கதிர்போல்.    412

 

தொக்கார்பல படையாமென ஒருசார்வருஞ் சூழுந்

திக்கார்களிற் றினமாமென ஒருசார்வருஞ் சினத்தால்

நக்கர்ர்தரும் அரியேறென ஒருசார்வரும் நலிவான்

அக்கால்வரு தனிப்புள்ளென ஒருசார்வரும் அன்றே.               413

 

கரியின்முகத் துணைவன்னென ஒருசார்வருங் கடுங்கண்

அரியின்முகத் திளையோனென ஒருசார்வரும் அளக்கர்ப்

பரியின்முகத் தினில்வந்திடு பாழிக்கனல் படுக்கும்

எரியின்முகத் தனிமைந்தனில் ஒருசாரிடை யேகும்.              414

 

எல்லோன்றனை வெகுண்டோனென ஒருசார்வரும் ஏனைச்

சொல்லோங்கிய திறன்மைந்தரில் ஒருசார்வருஞ் சூழ்ச்சி

வல்லோனென ஒருசார்வரு மானப்படை மள்ளர்

பல்லோர்களுஞ் செறிந்தாலென ஒருசாரிடைப் படரும்.    415

 

இத்தன்மையில் அவுணர்க்கிறை யாண்டுஞ்செறி வாகி

அத்தன்தனைப் புடைசூழ்தலும் அவைநோக்கிய இமையோர்

சித்தந்தளர்ந் திரிகுற்றனர் திரிகுற்றனர் அம்மா

கத்துங்கடற் புவிமாய்ந்திடு காலத்துயிர் எனவே.          416

 

வேறு

 

அங்கதன் நிலைமைநோக்கி ஆயிர கோடி வாளி

செங்கையில் வாங்கி வாங்குந் திருநெடுஞ் சிலையிற் பூட்டி

இங்குள அமரர் தஙகள் இருஞ்சிறை அகற்றது வந்து

பங்கயற் சிறைசெய் திட்ட பகவன்மற் றிதனைச் சொல்வான்.              417

 

தெவ்வடு பகழி யென்னும் தேவிகாள் நீவி ரேகி

மெய்வலி படைத்து நின்ற மேவலன் ஒருவன் கொண்ட

அவ்வுரு வனைத்து மெய்தி ஆங்கவன் மாய முற்றும்

இவ்விடை அட்டு நீக்கி ஏகி ரென்று விட்டான்.                   418

 

விட்டிடு சிலீமு கங்கள் விரைந்துபோய் வெகுளி வீங்கி

ஒட்டலன் கொண்ட ஒவ்வொன் றுருவினுக்* கெழுமை யாகி

எட்டுள புலமும் வானும் இருநில வரைப்பும் ஈண்டி

அட்டடல் பெற்ற அம்மா அனையவன் மாயந் தன்னை.            419

 

( * ஒவ்வொன்றுருவினுக்கு என்பதனை உரு ஒவ்வொன்-

  றினுக்கு என மாற்றிப் பொருள் கொள்க.)

 

உடல்சின மோடு சூரன் ஒருவனாய் அங்கண் நின்றான்

அடல்வலி கொண்ட வாளி அந்தர  நெறியான் மீண்டு

புடையுறு சரங்க ளோடு பொள்ளெனத் தூணி புக்க

சுடர்நெடுந் தனிவே லண்ணல் அவன்முகம் நோக்கிக் செல்வான்.   420

 

வெம்புய லிடையில் தோன்றி விளிந்திடு மின்னு வென்ன

இம்பரில் எமது முன்னம் எல்லையில் உருவங் கொண்டாய்

அம்பினில் அவற்றை யெல்லாம் அட்டனம் அழிவி லாத

நம்பெரு வடிவங் கொள்வ நன்றுகண் டிடுதி யென்றான்.           421

 

கூறிமற் றினைய தன்மை குரைகடல் உலகந் திக்கு

மாறிலாப் புவனம் அண்டம் வானவா¢ உயிர்கள் யாவும்

ஆறுமா முகத்து வள்ளல் மேனியில் அமைந்த தன்றி

வேறிலை என்ன ஆங்கோர் வியன்பெரு வடிவங் கொண்டான்.     422

 

உள்ளடி வரைகள் யாவும் ஒண்புற வடியின் நீத்தம்

வள்ளுகிர் விரல்கள் முற்றும் வான்உரு மேறு நாள்கோள்

எள்ளரும் பரடு தன்னில் இரும்புனற் கிறைவன் சோமன்

நள்ளிருள் அனைய மேனி நிருதியோ டரக்கர் நண்ண.             423

 

அடிதிரள்  கணைக்கால் தன்னில் ஆரிடர் மணிகள் சானு

வடிவமை முழந்தாள் விஞ்சை வானவ ராதி யானோ£¢

தொடைதனின் மகவான் மைந்தன் தொடைமுதல் நடுவன் காலன்

கடிதடத் தசுரர் பக்கங் கடவுளர் யாரும் நிற்ப.                            424

 

இருப்பினில் நாகர் கோச எல்லையில் மருந்தே யுந்திக் 

கருப்படும் உயிர்கள் மார்பிற் கலைகள்முந் நூலிற் போதம்

அருப்பயில் உரோமத் தண்டம் அங்கையில் அகில போகந்

திருப்பெருந் தடந்தோள் வைப்பிற் செங்கண்மால் விரிஞ்சன் மேவ. 425

 

மெல்லிதழ் அஆயை செங்கை விரல்மிசை அணங்கின் நல்லார்

ஒல்லொலி அங்கி கண்டம் ஒப்பிலா மணிவாய் வேதம்

பல்லிடை யெழுந்து நாவிற் பரமவா கமத்தின் பேதம்

நல்லிதழ் மனுவின் விஞ்சை நாசியிற் பவனன் மன்ன.                   426

 

கருணைகொள் விழியில் சோமன் கதிரவன் செவியில் திக்குத்

திருநுதற் குடிலை வைப்புச் சென்னியில் பரம ஆன்மா

மரபினின் மேவித் தோன்ற மாறிலா திருக்குந் தொல்லை

ஒருதன துருவங் காட்டி நிற்றலும் உம்பர் கண்டார்.                      427

 

செஞ்சுடர் அநந்த கோடி செறிந்தொருங் குதித்த தென்ன

விஞ்சிய கதிர்கான் றுள்ள வியன்பெரு வடிவை நோக்கி

நெஞ்சகந் துளங்கி விண்ணோர் நின்றனர் நிமல மூர்த்தி

அஞ்சல்மின் அஞ்சல் மின்னென் றருளினன் அமைத்த கையான்.    428

 

அண்டர்கள் யாரும் எந்தை அருள்முறை வினவி யுள்ளம்

உண்டிடு விதிர்ப்பு நீங்கி உவகையால் தொழுது நின்றார்

தண்டுளி வரைய தென்னத் தணப்பறச் சிதறும் ஊழிக்

கொண்டலின் தோற்றம் நோக்கிக் குலவுறு மஞ்ஞை யேபோல்.     429

 

இறுதியும் முதலும் இல்லா இப்பெரு வடிவந் தன்னைக்

கறைவிட முறழுஞ் சூரன் கண்டுவிம் மிதத்தின் நிற்ப

அறிவரும் உணர்தல் தேற்றா ஆறுமா முகத்து வள்ளல்

சிறிதுநல் லுணர்ச்சி நல்க இனையன செப்ப லுற்றான்.            430

 

எண்ணிலா அவுணர் தானை யாவையும் இமைப்பிற் செற்று

விண்ணுலா அண்டந் தோறும் வியன்சமர் ஆற்றி என்பால்

நண்ணினார் தம்மை எல்லாம் நாமறத் தடிந்து வீட்டி

வண்ணமான் தேரும் மீண்டு வராநெறி தடுத்தான் மன்னோ.               431

 

திண்டிறல் உடையேன் தூண்டுந் திறற்படை யாவும் நீக்கிக்

கொண்டவென் மாய முற்றுங் கொடுஞ்சரம் அதனான் மாற்றி 

அண்டமும் புவனம் யாவும் அமரரும் பிறவுந் தன்பாற்

கண்டிடும் வடிவ மொன்று காட்டியென் கண்முன் நின்றான்.               432

 

கோலமா மஞ்ஞை தன்னிற் குலவிய குமரன் தன்னைப்

பாலனென் றிருந்தேன் அந்நாட் பரிசிவை யுணர்ந்தி லேன்யான்

மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்

மூலகா ரணமாய் நின்ற மூர்த்திஇம் மூர்த்தி அன்றோ.             433

 

ஒற்றென முன்னம் வந்தோன் ஒருதனி வேலோன் தன்னைப்

பற்றிக லின்றி நின்ற பராபர முதல்வன் என்றே

சொற்றனன் சொற்ற எல்லாந் துணிபெனக் கொண்டி லேனால்

இற்றையிப் பொழுதில் ஈசன் இவனெனுந் தன்மை கண்டேன்.      434

 

மீயுயர்  வடிவங் கொண்டு மேவிய தூதன் சொற்ற

வாய்மைகள் சரதம் அம்மா மற்றியான் பெற்ற அண்டம்

ஆயவை முழுது மற்றும் அறுமுகம் படைத்த செம்மல்

தூயபொற் பதரோ மத்தில் தோன்றியே நிற்கும் அன்றே.           435

 

அண்டர்கள் முனிவர் ஏனோர் அகிலமுங் காட்டி அண்ணல்

கொண்டிடு படிவ முற்றுங் குறித்தியார் தெரிதற் பாலார்

எண்டரு விழிகள் யாக்கை எங்கணும் படைத்தோர்க் கேனுங்

கண்டிட அநந்த கோடி கற்பமுங் கடக்கும் அன்றே.                436

 

சீர்க்கும ரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில்

ஏர்க்குறும் ஔ¤யுஞ் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்

ஆர்க்குள வுலகில் அம்மா அற்புதத் தோடும் பல்காற்

பார்க்கினுந் தெவிட்டிற் றில்லை இன்னுமென் பார்வை தானும்.    437

 

நேரில னாகி ஈண்டே நின்றிடும் முதல்வன் நீடும்

பேருரு வதனை நோக்கிப் பெரிதுமச் சுறுவ தல்லால்

ஆரிது நின்று காண்பார் அமரரில் அழிவி லாத

சீரிய வரங்கொண் டுள்ளேன் ஆதலில் தெரிகின் றேனால்.          438

 

ஆயிர கோடி காமர் அழகெலாந் திரண்டொன் றாகி

மேயின எனினுஞ் செவ்வேள் விமலமாஞ் சரணந் தன்னில்

தூயநல் லெழிலுக் காற்றா தென்றிடின் இனைய தொல்லோன்

மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்.        439

 

இங்கென துயிர்போல் உற்ற இளவலும் இளைய சேயுஞ்

செங்கையில் வேலோன் றன்னைச் சிறுவனென் றெண்ணல் கண்டாய்

பங்கயன் முதலோர் காணாப் பரமனே யாகும் என்றார்

அங்கவர் மொழந்த வாறுஞ் சரதமே ஆன தன்றே.                440

 

அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடியின் காறும்

எண்ணிலா வூழி காலம் எத்திறம் நோக்கி னாலுங்

கண்ணினால் அடங்கா துன்னிற் கருத்தினால் அடங்கா தென்பால்

நண்ணினான் அமருக் கென்கை அருளென நாட்ட லாமே.          441

 

திருகிய வெகுளி முற்றுந் தீர்ந்தன செருவின் ஊக்கம்

அருகிய துரோமம புள்ளி ஆயின விழியில தூநீ£¢

பெருகிய திவன்பால் அன்பு பிறந்தன தமியேற் குள்ளம் 

உருகிய தென்பு தானும் உலைமெழு காகும் அன்றே.                     442

 

போயின அகந்தை போதம் புகுந்தன வலத்த தான

தூயதோர் தோளுங் கண்ணுந் துடித்தன புவன மெங்கும்

மேயின பொருள்கள் முற்றும் வௌ¤ப்படு கின்ற விண்ணோர்

நாயகன் வடிவங் கண்டேன் நற்றவப் பயனீ தன்றோ.                     443

 

சூழுதல் வேண்டுந் தாள்கள் தொழுதிடல் வேண்டும் அங்கை

தாழுதல் வேண்டுஞ் சென்னி துதித்திடல் வேண்டுந் தாலு

ஆழுதல் வேண்டுந் தீமை அகன்றுநான் இவற்கா ளாகி

வாழுதல் வேண்டும் நெஞ்சம் தடுத்தது மானம் ஒன்றே.           444

 

ஒன்னலர் பொருட்ட லேகி உறுசமர் இழைத்த செம்மல்

தன்னுரு வதனைக் காண்கின் முனிவதே தகுதி யாகும்

வன்னிகொள் வெண்ணெ யேபோல் வலியழிந் துருகிற் றென்றால்

என்னுடைய வயத்த வன்றோ உணர்ச்சியு மியாக்கை முற்றும்.     445

 

ஏடவிழ் அலங்கல் மார்பன் என்னுடன் இந்நாள் காறும்

நீடிய இகற்போர் ஆற்றி நீங்கலான் நின்ற தெல்லாம்

ஆடலின் இயற்கை யென்றே அறிந்தனன் அ•தான் றன்னான்

சாடிய வேண்டு மென்னின் யாரது தாங்கற் பாலார்.                       446

 

ஏதமில் அமரர் தம்மை யான்சிறை செய்த தெல்லாந்

தீதென உரைத்தார் பல்லோர் அன்னதன் செயற்கை யாலே

வேதமும் அயனும் ஏனை விண்ணவர் பலருங் காணா

நாதனிங் கணுகப் பெற்றேன் நன்றதே யான தன்றே.                      447

 

ஒன்றொரு முதல்வ னனகி உரைதரு மூர்த்தி முன்னம்

நின்றமர் செய்தேன் இந்நாள் நெஞ்சினித் தளரேன் அம்மா

நன்றிதோர் பெருமை பெற்றேன் வீரனும் நானே யானேன்

என்றுமிப் புகழே நிற்கும் இவ்வுடல் நிற்ப துண்டோ.                      448

 

வானுளோர் சிஆறையை நீக்கி வள்ளலை வணங்கி இந்த

ஊனுலாம் உயிரைப் போற்றி அளியர்போல் உறுவன் என்னின்

ஆனதோ எனக்கி தம்மா ஆயிர கோடி யண்டம் 

போனதோர் புகழும் வீரத் தன்மையும் பொன்றி டாவோ.           449

 

என்னஇத தகைய பன்னி நிற்றலும் எவர்க்கும் மேலோன்

உன்னருந் தகைத்தாய் நின்ற ஒருபெருந் தோற்றம் நீத்து

மின்னிவர் கலாபம் ஊர்ந்த வியனுருக் கொண்டு நண்ணித்

துன்னலன் போத மாற்றித் தொன்மைபோ லாகச் செய்தான்.               450

 

காரண னாகித் தானே கருணையால் எவையும் நல்கி

ஆருயிர் முழுது மேவி அனைத்தையும் இயற்றி நிற்கும்

பூரண முதல்வன் மைந்தன் போதகம் அளித்து மாற்றிச்

சூரனை மயக்கஞ் செய்யுஞ் சூழச்சியோ அரிய தன்றே.            451

 

அத்தகு காலை தானே அவுணர்கோன் உணர்ச்சி நீங்கிச்

சித்தம திடையே தொல்லைச் சீற்றமும் இகலும் உற்ற

மெய்த்தகு குழவித் திங்கள் விண்ணெறி செல்லச் செல்லும்

எத்திசை இருளும் அன்ன தகன்றுழி எழுந்த தேபோல்.            452

 

பிணிமுகம் உயர்த்து நின்ற பெருந்தகை தோற்றங் காணூஉத்

தணிவருஞ் சினமேற் கொண்டு சமரின் மேல் ஊக்கஞ் சேர்த்தி

அணியதென் றிண்மை என்னா அங்கையோ டங்கை தாக்கி

மணிமுடி துளக்கி நக்கு மற்றிவை புகலல் உற்றான்.                      453

 

சேயுரு வமைந்த கள்வன் செருவிஙூஎ இழைக்க லாற்றான்

மாயையி னொன்று காட்டி எனையிவண் மையல் செய்தான்

ஆயது துடைத்தேன் என்றால் ஆரெனக் கொப்புண் டென்றுங்

காயம தழிவி லாதேன் கருத்தழி கின்ற துண்டோ.                454

 

குன்றினை எறிந்த வேற்கைக் குமரனோ டமர தாற்றி

வென்றிடு கின்றேன் மெல்ல மேலது நிற்க இந்த

வன்றிறற் சமரை மூட்டி நின்றவா னவரை யெல்லாம்

தின்றுயிர் குடித்து முன்னென் சினஞ்சிறி தகல்வன் என்றான்.       455

 

ஆயது துணிவாக் கொண்ட அவுணர்கள் மன்னன் பின்னும்

தீயதோர் தொல்லை மாயச் சீர்கொள்மந் திரத்தைப் பன்னி

ஞாயிறு மருட்கை கொள்ள ஞாலமுங் ககன முற்றும்

மாயிருள் உருவங் கொண்டு மறைந்துநின் றார்க்க லுற்றான்.              456

 

தெண்டிரை நேமி தன்னில் தீவிடம் எழுந்த தென்ன

எண்டிசை எல்லை முற்றும் இருநில வரைப்பும் எல்லா

அண்டமு மாகி ஈண்டும் ஆரிருள் வடிவை வானோர்

கண்டனர் அவுணன் மாய மீதெனக் கலக்க முற்றா£¢.                     457

 

அத்துணை அவுணர் மன்னன் அவ்விருள் இடையே பாய்ந்து

பத்திகொள் சிகர மன்ன ப•றலை அளவை தீர்ந்த

கைத்தல முளதோர் யாக்கை கதுமெனக் கொண்டு விண்ணோர்

மெய்த்தொகை நுகர்வான் உன்னி விண்ணிடைக் கிளர்ந்து சென்றான்.458

 

ஆடியல் கொண்ட சூரன் அந்தரத் தெழலும் வானோர்

கூடிய ஓதி தன்னால் குறிப்பினால் தெரிந்து நம்மைச்

சாடிய வருவன் என்னாத் தலைத்தலை சிதறி நில்லா

தோடினர் கூற்றை நேர்ந்த உயிரென இரங்க லுற்றார்.                     459

 

நணணினர்க் கினியாய் ஓலம் ஞானநா யகனே ஓலம்

பண்ணவர்க் கிறையே ஓலம் பரஞ்சுடர் முதலே ஓலம்

எண்ணுதற் கா¤யாய் ஓலம் யாவையும் படைத்தாய் ஓலம்

கண்ணுதற் பெருமான் நல்குங் கடவுளே ஓலம் ஓலம்.                    460

 

தேவர்கள் தேவே ஓலம் சிறந்தசிற் பரனே ஓலம்

மேவலர்க் கிடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்

பாவலர்க் கௌ¤யாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்

மூவரு மாகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்.                            461

 

கங்குலின் எழுந்த கா£¢போல் கனையிருள் மறைவின் ஏகி

நுங்கிய செல்வான் சூரன் ஓடவும் நோன்மை யில்லேம்

எங்கினி உய்வம் ஐய இறையுநீ தாழ்க்கல் கண்டாய்

அங்கவன் உயிரை உண்டெம் மாவியை யருளு கென்றார்.         462

 

தேற்றலை போலு மீது சிறிதுநீ பாணிப் பாயேல்

ஆற்றலின் மறைந்து நின்றே அகிலமுந் தானே யுண்ணும்

மாற்றலன் ஆவி தன்னை வாங்குதி  வல்லை யென்னாப்

போற்றினன் முதல்வன் தன்னை மயூரமாய்க் கொண்ட புத்தேள்.    463

 

அங்கவர் மொழியும் வெய்யோன் ஆற்றலுந் தெரிந்து செவ்வேள்

செங்கைய தொன்றில் வைகுந் திருநெடு வேலை நோக்கி

இங்கிவன் ஆகம் போழ்ந்தே ஏகுதி இமைப்பின் என்னாத்

துங்கம துடைய சீர்த்திச் சூரன்மேற் செல்லத் தொட்டான்.          464

 

ஏயென முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்

ஆயிர கோடி என்னும் அருக்கரில் கிகழ்ந்து தோன்றித்

தீயழற் சிகழி கான்று சென்றிட அவுணன் கொண்ட

மாயிருள் உருவ முற்றும் வல்விரைந் தகன்ற தன்றே.                   465

 

அன்னவன் தனது மாயம் அழிந்ததும் ஐயன் வைவேல்

முன்னுறு மாறு நோக்கி முடிவிலா வரத்தி னேனை

என்னிவட் செய்யும் அம்மா இவன்விடும் எ•க மென்னா

உன்னினன் முறுவல் எய்தி உருகெழு சீற்றங் கொண்டான்.        466

 

வாரிதி வளாகந் தன்னை மாதிர வரைப்பை மீக்கீழ்ச்

சேருறு நிலயந் தன்னைத் திசைமுகன் முதலா வுள்ள

ஆருயி ரோடும் வீட்டி அடுவன்மே லிதனை என்னாச்

சூரெனும் அவுணன் மற்றைத் தொடுகடல் நடுவண் ஆனான்.       467

 

வன்னியின் அலங்கல் கான்று வான்தழை புகையின் நல்கிப்

பொன்னென இணர்கள் ஈன்று மரகதம் புரையக் காய்த்துச்

செந்நிற மணிகள் என்னத் தீம்பழங் கொண்டு கார்போல்

துன்னுபல் கவடு போக்கிச் சூதமாய் அவுணன் நின்றான்.           468

 

மாசறு ககன கூட வரம்பதன் அளவு மேல்போய்

ஆசையின் எல்லை காறும் அளவைதீ ருலவை ஓச்சிக்

காசினி அகலந் தாங்குங் கச்சபத் துணைத்தூ ரோட்டிப்

பாசடை பொதுளி வெஞ்சூர் பராரைமால வரையின் நின்றான்.      469

 

ஒராயிர நூற தென்னும் ஓசனை அளவை யான்ற

பராரைமா வுருவ மாகிப் பலவுடைச் சினைமாண் கொம்பர்

விராவிய சூழ்ச்சி தன்னால் வேலைகள் முழுதும் விண்ணும்

தராதல வரைப்பும் எல்லாந் தண்ணிழல் பரப்பி நின்றான்.         470

 

நெடுங்கலை முயல்மான் கொண்டு நிலவும்அம் புலியும் நீத்தம்

அடுங்கதிர் படைத்த கோவும் அளகையை யாளி தானுங்

கடங்கலுழ் கின்ற ஆசைக் கரிகளுங் கடாவிற் செல்லும்

மடங்கலும் வெருவச் சூரன் மாவுருக் கொண்டு நின்றான்.          471

 

மிக்குயர் உவணம் அன்ன மிசைப்படும் எகினப் புள்ளும்

மைக்குயில் சேவ லாகிய மயூரமாம் வலியன் தானும்

புக்கமர் தெரிக்கும் ஆடற் பூவையுங் கொடிய தான

குக்குட முதலும் அஞ்சக் கொக்குரு வாகி நின்றான்.                      472

 

காலெனு மொய்ம்பன் உட்கக் கட்செவி கவிழ்ந்து சோர

வாலிய வசுக்கள் ஏங்கி மலர்க்கரம் மறிக்க வெய்யோன்

பாலர்மெய் வியரா நிற்பப் பணைமுலை அரிவை மார்கள்

சேலெனும் விழிகள் பொத்தச் சேகர மாகி நின்றான்.                      473

 

அத்தியின் அரசு பேர ஆலமும் தெரிக்கில் ஏங்க

மெய்த்திறல் வாகை வன்னி மெலிவுற வீரை யாவுந்

தத்தம திருப்பை நீங்கத் தாதவிழ் நீபத் தாரோன்

உய்த்திடு தனிவேல் முன்னர் ஒருதனி மாவாய் நின்றான்.         474

 

நிலமிசை இனைய வாறோர் நெடும்பெருஞ் சூத மாகி

உலவையின் செறிவு தன்னால் உம்பருந் திசையும் எற்றித்

தலைமுதல் அடியின் காறுஞ் சாலவுந் தளர்ந்து தள்ளுற்

றலமரு வாரிற் றானே அசைந்தனன் அசைவி லாதான்.           475

 

பைவிரி பாந்தட் புத்தேள் பரம்பொறா தழுங்கப் பாரின்

மைவிரி வடிவச் சூறை மாருதம் எறிய மாழை

மெய்விரி குடுமிக் கோட்டு மேருவெற் பசைந்தா லென்ன

மொய்விரி அவுணன் யாக்கை அலைத்தனன் முடிவ தோரான்.     476

 

இடிந்தன சரிந்த ஞாலம் ஏழ்வகைப் பிலங்கள் முற்றும் 

பொடிந்தன கமட நாகம் புரண்டன புழைக்க மாக்கள்

முடிந்தன மறிந்த வேலை முழுவதும் ஒன்றா குற்ற

மடிந்தன உயிரின் பொம்மல் வரைக்குலம் அறிந்த அன்றே.               477

 

தாரகை உதிர்ந்த கோளுந் தலைபனித் திரிந்த வெய்யோன்

தேரொடு மாவுந் தானுந் தியங்கினன் திங்கட் புத்தேள்

பேருறு மானம் நீங்கிப் பெயர்ந்தனன் ஏனை வானோர்

மேருவுங் கயிலை வெற்பும் புக்கனர் வெருவு நீரார்.                      478

 

ஏற்றமில் சுவர்க்க முற்றும் இற்றன அதற்கும் அப்பால்

மேற்றிகழ் முனிவர் வைகும் உலகமும் பகிர்ந்து வீழ்ந்த

நாற்றிசை முகத்தன் மாயோன் நண்ணிய உலகும் அற்றே

சாற்றுவ தென்கொல் அண்டச் சூழலுந் தகர்ந்த தன்றே.            479

 

தெண்டிரை நடுவண் நின்ற தீயவன் செயலும் அன்னான்

கொண்டிடும் உருவும் உள்ளக் கொள்கையும் வலியுஞ் சீரும்

அண்டர்கள் எவர்க்கும் மேலாம் ஆதியம் பகவன் தொட்ட

விண்டொடர் தனிவேல் காணா வெஞ்சினம் விளைத்த தன்றே.     480

 

தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும் பிறங்கு ஞாலத்

தாயிர கோடி அண்டத் தங்கியும் ஒன்றிற் றென்ன

மீயுயர்ந் தொழுகி ஆன்றோர் வெருவருந் தோற்றங் கொண்டு

நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்த தன்றே.                     481

 

வயிர்த்திடு நிலைமை சான்ற வன்கணான் உயிரை வௌவச்

செயிர்த்திடுந் தெய்வச் செவ்வேல் திணிநில வரைப்பில் அண்டம்

மயிர்த்தொகை யாக ஏனைப் பூதமும் அழிய அங்கண்

உயிர்த்தொகை முருக்கத் தோன்றும் ஒருவனிற் சென்ற தன்றே.    482

 

மாறமர் உழந்து பன்னாள் வரம்பறு பிரம மாவார்

வேறிலை யாமே என்ற இருவரும் வெருவி நீங்க

ஈறொடு முதலும் இன்றி எழுகிரி விலக்கி விண்மேற்

சேறலின் நிலைமை காட்டிப் படர்ந்தது கடவுட் செவ்வேல்.        483

 

வேதனை அகத்த ராகும் விண்ணவர் படைகள் தம்முள்

யாதனை இதற்கு நேரா இயம்புவ தெரியில் தோன்றிப்

பூதனை உயிருண் கள்வன் புண்டரீ கத்தன் வன்மை

சோதனை புரிந்த மேலோன் சூலமே என்ப தல்லால்.                      484

 

மண்டல நிலத்தின் வைப்பும் வாரிதி ஏழு மற்றைத்

தெண்டிரைக் கடலும் வானுஞ் சேணுயர் பிறங்கல் முற்றும் 

எண்டிசைப் புறமும் அண்டத் தேணியின் பரப்பும் ஈண்ட

ஒண்டழற் சிகையின் கற்றை உமிழ்ந்ததால் ஒருங்கு ஞாங்கர்.             485

 

பற்றிய ஞெகிழி பாரில் படர்ந்தன பௌவம் யாவுஞ்

சுற்றி திசையும் வானுஞ் சூழ்ந்தன சோதி வைகும்

பொற்றைய தொன்றே அல்லாப் பொருப்பெலாஞ் செறிந்த பொன்றோய்

கற்றையங் கதிரின் அண்டச் சூழலுங் கதுவ லுற்ற.                       486

 

விடம்பிடித்த தமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி

இடம்பிடித் திட்ட தீயில் தோய்த்துமுன் இயற்றி யன்ன

உடம்பிடித் தெய்வம் இவ்வா றுருகெழு செலவின் ஏகி

மடம்பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தன்றே.                     487

 

ஆடல்வேல் எறித லோடும் ஆமிர வடிவாய் அண்ட

கூடமும் அலைத்த கள்வன் அரற்றொடு குறைந்து வீழ்ந்தும்

வீடிலன் என்ப மன்னோ மேலைநாள் வரத்தின் என்றால்

பீடுறு தவமே அன்றி வலியது பிறிதொன் றுண்டோ.                      488

 

கிள்ளையின் வதனம் அன்ன கேழ்கிளர் பசுங்காய் தூங்கித்

தள்ளரும் நிலைத்தாய் நின்ற மாவுருச் சாய்த லோடும்

உள்ளுறு சினமீக் கொள்ள ஒல்லைதொல் லுருவம் எய்தி

வள்ளுறை யுடைவாள் வாங்கி மலைவது கருதி ஆர்த்தான்.               489

 

செங்கதிர் அயில்வாள் கொண்டு செருமுயன் றுருமின் ஆர்த்துத்

துங்கமொ டெதிர்ந்து சீறுஞ் சூருரங் கிழித்துப் பின்னும

அங்கம திருகூ றாக்கி அலைகடல் வரைப்பில் வீட்டி

எங்கணும் மறைகள் ஆர்ப்ப எ•கம்வான் போயிற் றம்மா.          490

 

புங்கவர் வழுத்திச் சிந்தும் பூமழை யிடையின் ஏகி

அங்கியின் வடிவம் நீங்கி அருளுருக் கொண்டு வான்றோய்

கங்கையிற் படிந்து மீண்டு கடவுளர் இடுக்கண் தீர்த்த

எங்கள்தம் பெருமான் செங்கை எய்திவீற் றிருந்த தவ்வேல்.               491

 

தாவடி நெடுவேல் மீளத் தற்பரன் வரத்தால் வீடா

மேவலன் எழுந்து மீட்டும் மெய்பகிர் இரண்டு கூறுஞ்

சேவலும் மயிலு மாகிச் சினங்கொடு தேவர் சேனை

காவலன் தன்னை நாடி அமர்த்தொழில் கருதி வந்தான்.           492

 

மணிகிளர் வரைய தொன்றும் மரகதப் பிறங்க லொன்றுந்

துணையடி சிறகர் பெற்றுச் சூற்புயல் அழிய ஆர்த்துத்

திணிநில விசும்பின் மாட்டே சென்றெனச் சேவ லோடு

பிணிமுக வுருவாய் வந்து பெருந்தகை முன்னம் புக்கான்.         493

 

ஆட்படு நெறியிற் சேர்த்தும் ஆதியின் ஊழ்தந் துய்க்கத்

தாட்படை மயூர மாகித் தன்னிகர் இல்லாச் சூரன்

காட்படை யுளத்த னாகிக் கடவுளர் இரியல் போக

ஞாட்பியல் செருக்கில் வந்தான் ஞானநா யகன்றன் முன்னம்.              494

 

மருள்கெழு புள்ளே போல வந்திடு சூரன் எந்தை

அருள்கெழு நாட்டாஞ் சேர்த்த ஆங்கவன் இகலை நீங்கித்

தெருள்கெழு மனத்த னாகி நின்றனன் சிறந்தார் நோக்கால்

இருள்கெழு கரும்பொன் செம்பொன் னாகிய இயற்கை யேபோல்.   495

 

தீயவை புரிந்தா ரேனுங் குமரவேள் திருமுன் உற்றால்

தூயவ ராகி மேலைத் தொல்கதி யடையவர் என்கை

ஆயவும் வேண்டுங் கொல்லோ அடுசமர் இந்நாட் செய்த

மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள்பெற் றுய்ந்தான்.   496

 

அக்கணம் எம்பிரான்தன் அருளினால் உணர்வு சான்ற

குக்குட வுருவை நோக்கிக் கடிதில்நீ கொடியே ஆகி

மிக்குயர் நமது தேரின் மேவினை ஆர்த்தி என்னத்

தக்கதே பணியி தென்னா எழுந்தது தமித்து விண்மேல்.           497

 

செந்நிறங் கெழீஇய சூட்டுச் சேவலங் கொடியொன் றாகி

முன்னுறு மனத்திற் செல்லும் முரண்டகு தடந்தேர் மீப்போய்

இந்நில வரைப்பின் அண்டம் இடிபட உருமே றுட்க

வன்னியும் வெருவ ஆர்த்து மற்றவண் உற்ற தன்றே.                    498

 

சீர்திகழ் குமர மூர்த்தி செறிவிழி கொண்ட தொல்லை

ஊர்தியின் இருக்கை நீங்கி உணர்வுகொண் டொழுகி நின்ற

சூர்திகழ் மஞ்ஞை யேறிச் சுமக்குதி எம்மை என்னாப்

பார்திசை வானம் முற்றும் பரியென நடாத்த லுற்றான்.           499

 

தடக்கடல் உடைய மேருத் தடவரை இடிய மற்றைப்

படித்தலம் வெடிப்பச் செந்தீப் பதைபதைத் தொடுங்கச் சூறை

துடித்திட அண்ட கூடந் துளக்குறக் கலாபம் வீசி

இடித்தொகை புரள ஆர்த்திட் டேகிற்றுத் தோகை மஞ்ஞை.        500

 

படத்தினின் உலகம் போற்றும் பணிக்கிறை பதைப்பப் பாங்கர்

அடுத்திடு புயங்கம் முற்றும் அலமர அவனி கேள்வன்

இடத்தமர் கின்ற பாம்பும் ஏங்குற விசும்பிற் செல்லும் 

உடற்குறை அரவும் உட்க உலாயது கலாப மஞ்ஞை.                     501

 

பாரொடு விரிஞ்சன் தன்னைப் படைத்திட பன்னாள் மாயன்

காரென வந்து முக்கட் கடவுளைப் பரித்த தேபோல்

வீரருள் வீரனாகும் வேலுடைக் குமரன் தன்னைச்

சூருரு வாகி நின்ற தோகைமேல் கொண்ட தம்மா.                502

 

வெயில்விடும் அநந்த கோடி வெய்யவர் திரண்டொன் றாகிப்

புயல்தவழ் கடவுள் வானில் போந்திடு தன்மை யேபோல்

அயிலினை யுடைய செவ்வேள் மரகதத் தழகு சான்ற

மயிலிடை வைகி ஊர்ந்தான் மாமுகந் திசைகள் முற்றும்.         503

 

நேமிகள் ஏழும் ஒன்றாய் நிமிர்ந்தெழும் வடவை முற்றுந்

தாமொரு வடிவாய் அங்கட் சார்ந்திடு நிலைமை யென்ன

மாமயில் உய்த்துச் சென்ற வாகைவேல் வீரன் மீண்டு

தீமைகொள் அவுணன் மூதூர்ச் செருநிலத் தெல்லை புக்கான்.      504

 

புக்குள குமர மூர்த்தி பொறிமயில் உருவ மாயுங்

குக்குட மாயும் நின்ற அமரரைக் குறித்து நோக்கி

மிக்கநும் மியற்கை யாகி மேவுதிர் விரைவின் என்ன

அக்கணம் அவருந்தொல்லை வடிவுகொண் டடியில் வீழ்ந்தார்.     505

 

வள்ளலை வணங்கிப் பல்கால் வழுத்தியே தொழுது தத்தம்

உள்ளமும் புறத்தில் என்பும் உருகிட விழியில் தூநீர்

தள்ளுற வுரைகள் முற்றுந் தவறிடப் பொடிப்ப யாக்கை

கள்ளுண வுற்ற வண்டின் களிமகிழ் சிறந்து நின்றா£¢.                    506

 

வீசுறு சுடர்வேல் ஐயன் வெய்யசூர் முதலைச் சாடித்

தேசுறு மஞ்ஞை ஊர்ந்து வந்தது தொந்து போர்செய்

காசினி யிடையே நின்ற கணங்களும் வீரர் யாரும்

ஆசறும் இளவ லுஞ்சென் றடிதொழு தார்த்துச் சூழ்ந்தார்.          507

 

ஆகத் திருவிருத்தம் - 2904

     - - -

 

 

14.  தே வ ர் க ள்  போ ற் று  ப ட ல ம்

 

நேரொரு சிறிதும் இல்லா நின்மலன் தனது வேலால்

சூருடல் பிளந்தி யாணர் மஞ்ஞையில் தோன்று காலைப்

பாருல கயின்ற கண்ணன் பங்கயன் அமரர் கட்கோர்

ஆரமிர் தெய்திற் றென்ன அன்னது கண்டே ஆர்த்தார்.             1

 

ஆ£¢த்தனர் எழுந்து துள்ளி ஆடினர் பாடா நின்றார்

போர்த்தனர் பொடிப்பின் போ£¢வை பொலங்கெழு பூவின்மாரி 

தூர்த்தனர் அருளை முன்னித் தொழுதனர் சுடர்வேல் கொண்ட

தீர்த்தனை எய்திச் சூழ்ந்து சிறந்துவாழ்த் தெடுக்க லுற்றார்.        2

 

வேறு

 

கார்தடிந்து துய்க்குங் கனைகடலின் நீர்வறப்பப்

போ£¢ தடிந்து செல்லும் புகர்வேல் தனைவிடுத்துச்

சூர்தடிந்தாய் அன்றே தொழுமடியேம் வல்வினையின்

வேர்தடிந்தாய் மற்றெமக்கு வேறோர் குறையுண்டோ.             3

 

மாறுமுகங் கொண்டுபொரு வல்லவுணர் மாளாமல்

நூறு முகமெட்டு நோதக் கனபுரியத்

தேறு முகமின்றித் திரிந்தேமை ஆளவன்றோ

ஆறு முகங்கொண்டே அவதரித்தாய் எம்பெருமான்.               4

 

நீதி முறையதனில் நில்லா அசுரர்புரி 

தீது பலவுளவுந் தீர்ந்தோம் பழியகன்றோம்

வேத நெறிதொல்லை வெறுக்கையொடு பெற்றனமால்

ஏதும் இலையால் எமக்கோர் குறையெந்தாய்.                    5

 

மன்ற அவுணர் வருத்திடஇந் நாள்வரையும்

பொன்றி னவரென்னப் புலம்பித் திரிந்தனமால்

இன்று பகைமாற்றி எமக்கருள்நீ செய்கையினால்

சென்றஉயிர் மீண்ட திறம்பெற்ற னம்ஐயா.                       6

 

செய்யும்அவ னும்புலனுஞ் செய்வித்து நிற்போனும்

எய்த வரும்பொருளும் யாவையுநீ யேயென்கை

ஐய அடியேங்கள் அறிந்தனமால் அன்னதனால்

வெய்ய பவமகன்று வீடுமினிக் கூடுதுமால்.                      7

 

ஈண்டே எமருக் கிடர்செய் அவுணரெலாம்

மாண்டே விளியும் வகைபுரிந்து காத்தனையால்

வேண்டேம் இனியாதும் மேலாய நின்கழற்கே

பூண்டேந் தொழும்பு புகழேம் பிறர்தமையே.                      8

 

என்னா இயம்பி எவருமினி தேத்துதலுங்

கொன்னார் அயில்வேற் குமர னதுகேளா

அந்நா ரணன்விரிஞ்சன் ஆதியாம் வானோர்க்குத்

தன்னா ரருளின் தலைமை புரிந்தனனே.                 9

 

ஆகத் திருவிருத்தம் - 2913

     - - -

 

 

15.  இ ர ணி ய ன்  பு ல ம் பு று  ப ட ல ம்

 

அதுநிகழ்ந் துழியகன்பதி அவுணர் கள்ஒரு சில்லோர்

கதுமெனச் சென்று காவலன் கந்தவேள் உய்த்திட்ட

நுதிகொள் வேலினான் மாய்ந்தனன் என்பதை நுவலுற்றா£¢

பதுமை அம்மொழி கேட்டனள் துணைவியர் பலரோடும்.          1

 

காவல் மன்னவன் இறந்தனன் எனுமுரை கன்னத்துள்

மேவு மெல்லை யில்அசனி ஏறுண்ட வெம்பணியேபோல்

தேவி யாகிய பதுமகோ மளையெனுந் திருமங்கை

ஆவி நீங்கினள் தலையளி ஆகிய ததுவன்றோ.                   2

 

எவ்வெ வர்க்கும்மே லாகிய அவுணர்கோற் கில்லாகி

அவ்வி டத்துறை துணைவியர் வயிறலைத் தழுங்குற்று

வெவ்வ ழற்பெருங் குண்டமொன் றாக்கியே விளிவுற்ற

தெய்வ தப்புனை வன்மகள் யாக்கைமுன் செலஉய்த்தார்.          3

 

1மான்கி ளர்ந்தன அரிமதர் மழைக்கண்மெல் லியரெல்லாம்

வான்கி ளர்ந்தெழு கின்றதோர் மாபெருங் கனலூடே

கான்கி ளர்ந்திட மலர்தருந் தாமரைக் கானத்திற்

தேன்கி ளர்ந்துதம் மினத்தொடும் புகுந்தெனச் செல்லுற்றார்.               4

 

(பா-ம்  - 1 மீன்கிளர்ந்தன.)

 

செல்லல் போதுமென் றொழிந்திட அரற்றினோர் செந்தீயில்

செல்லல் போதுநாள் மாலையும் அங்கியிற் சேர்ந்தோங்கும்

அல்லல் போதுமுன் நின்றிடு நிசியெலாம் அகன்றென்ன

அல்லல் போதுமா நகர்ந்திரு ஏகினள் அதுகாலை.                 5

 

இந்த வாறிவர் அங்கியுள் மாண்டனர் இதுநிற்கத்

தந்தை பட்டதுஞ் சேவலும் மஞ்ஞையுந் தானாகிக்

கந்த வேள்புடை வந்ததுங் கண்டனன் கலங்குற்றுப்

புந்தி நொந்துநின் றிரணியன் வானிடைப் புலம்புற்றான்.            6

 

வேறு

 

நன்றென் பதைஉணராய் நானுரைத்த வாசகங்கள்

ஒன்றுஞ் சிறிதும் உறுதியெனக் கொண்டிலையே

பொன்றும் படிக்கோ பொருதாய் புரவலனே

என்றுன்னை முன்போல இருந்திடநான் காண்பதுவே.      7

 

அன்புடையன் கொல்லென் றயலா ரெடுத்துரைப்பத்

துன்புடையேன் போலத் துயரா அயா¢கின்றேன்

என்புடையே முன்னர் எனதுயிர்கொண் டேகினனால்

நின்புடையே நின்று நெடும்பழியின் நீங்காதேன்.           8

 

மாற்றார் வலிகண்டு மற்றுன்னை வன்செருவில்

போற்றா தொளித்த பொறியிலியேன் தன்முன்னந்

தோற்றாமல் எங்கொளித்தாய் சொல்லாய் சுதன்போலக்

கூற்றான வனைஇன்னுங் கூடமனங் கொள்ளுதியோ.      9

 

கையார் அழலேந்துங் கண்ணுதலோன் தந்தவரம்

மெய்யாம் ஒருகாலும் வீடாய்அ• தெல்லாம்

பொய்யாகும் வண்ணம் புதல்வனென வந்துதித்தோன்

ஐயா உனகோர் அருங்கூற்றம் ஆயினனே.                10

 

நில்லா உடலை நிலையா மெனக்கருதிப்

பல்லா ருங்கண்டு பழிக்கும் படிஉனக்குஞ்

சொல்லா தகன்றேன்நீ துஞ்சியபின் வந்தனனால்

நல்லார் களில்தேரின் நானே தலைஅன்றோர்.                    11

 

அத்திர நேர்கூறும் அவுணர் தமக்குள் மிகக்

குத்திர னேயாகுங் கொடியேன்நீ துஞ்சியபின் 

மித்திரனே போன்றிரங்கி மீண்டேன் உனக்கென்னைப்

புத்திர னேயெனகை புவிக்குப் பொறையன்றோ.           12

 

ஆழியான் வேதன் அமரர்க் கிறைமுதலோர்

வாழியா யென்று வழுத்தியிட வைகியநீ 

பூயார் மேனிப் புராரிசிறு வன்தேரில்

கோழியாய் நின்று விலாவொடியக் கூவுதியோ.           13

 

ஓகையால் அண்டத் துயிர்களெலாம் வந்திறைஞ்சச்

சேகையாய் மல்குந் திருத்தாள்கொண் டுற்றிடுநீ

வாகையார் கின்ற வடிவேற் கரத்தோனைத்

தோகையாய் நின்று சுமக்குதியோ தோன்றாலோ.          14

 

மேற்றான் விளையும் இ•தென்றே வினயமுடன்

ஆற்றான் மொழிந்தேன் அதுசிறிதுங் கேட்டிலையே

மாற்றான் எனவந்த மைந்தனுடன் போர்செய்தே

தோற்றாயே அற்றால் மயிலாய்ச் சுமக்குதியோ.          15

 

மாறுற்றி டாத்தொல் வடிவந்தனை இழந்து

வேறுற்ற புள்வடிவாய் மேவினாய் ஆங்கதனால்

ஈறுற்  றனைஅன்றே என்செய்கை செய்வதற்கும்

பேறுற் றிலன்வாளா பேணினேன் இவ்வுயிரே.                    16

 

பிள்ளைப் பிறைபுனைந்த பிஞ்ஞகன்றன் காதலனைப்

புள்ளிக் கலாபப் பொறிமயிலாய்ப் போற்றுமெல்லை

எள்ளற் பொருட்டா லியான்முன்னு ரைத்தவற்றை

உள்ளத் திடைஎந்தாய் உன்னுதியோ உன்னாயோ.         17

 

பொங்குற்ற சீற்றம் பொரும்போர் இகலுள்ளந் 

தங்குற்ற மானஞ் சயமகந்தை வன்மையெலாம்

அங்குற்ற நின்னை அடைந்ததிலை அவ்வனைத்தும்

எங்குற்ற தையா இயம்பாய் எனக்கதுவே.                18

 

என்று கனகன் இரங்கி நெடுஞ்சேணில்

நின்று தளர்ந்து நெடிதுயிர்த்துப் பூதரெனைத்

தின்று சினந்தீர்வர் தெரியினெனச் சிந்தைசெய்து

துன்றுதிரை வேலையிடைத் தொன்மைபோற் புக்கனனே.   19

 

புக்க கனகன் புலர்ந்து புகரோன்பால்

அக்கணமே எய்தி அழிவுற்ற தந்தையர்க்குந்

தக்க துணைவர்க்குந் தாயர்க்கும் ஏனையர்க்கும்

மிக்க கடன்கள் விதிமுறையே செய்தனனே.                      20

 

தாக்கிச் சமர்மலைந்த தானவர்க்குச் செய்பரிசே

தூக்கிப் புரிந்து துயரினுக்கோர் வித்தென்றே

ஆக்கத் தினைவெறுத்தே ஆதிப் பிரானையுள்ளே

நோக்கிக் கதியடைவான் நோற்றொருசா£¢ உற்றனனே.    21

 

ஆகத் திருவிருத்தம் - 2934

     - - -

 

 

16. மீ ட் சி ப்  ப ட ல ம் 

 

மற்றது காலத்து மணிதூங் கியபசும்பொற் 

பொற்றை புரையும் பொறிமஞ்ஞை மீதுவைகும்

வெற்றி நெடுவேற்ஆ விமலன் விறலோனைப்

பற்றி னொடுநோக்கி இனைய பகர்கின்றான்.                      1

 

கேட்டி இதுவீர கெடலுற்ற வெஞ்சூரன்

ஈட்டு திருவென்ன இருஞ்சிறையின் 

வாட்டமுறு சயந்தன் வானோர் தமையெல்லாம்

மீட்டு வருதி எனவே விளம்பினனால்.                           2

 

குன்றம் எறிந்த குமரன்இது  கூறுதலும்

நன்றி தெனவே தொழுது நனிமகிழ்ந்து

வென்றி விடலை விடைபெற்றுப் போர்க்களத்தின்

நின்றும் அவுணன் நெடுநகரத் தேகினனால்.                      3

 

மீது படுதிண்டோன் விடலை அறந்திறம்புங்

கோது படுதீயோர் குழீஇயநக ருட்புக்குத்

தாது படுதண்டார்ச் சயந்தன் அமரருடன்

தீது படுவெயய சிறைக்களத்துச் சென்றனனே.            4

 

செல்லும் விறலோன் திறத்தை நனிநோக்கி

அல்லல் அகலும் அரிசுதனும் வானோர்கள்

எல்லவரும் அற்புதநீர் எய்திப் பதம்பூட்டும்

வல்லி பரிய மலர்க்கை குவித்தனரே.                           5

 

செங்கை குவித்தே திறலோய் சிறைப்பட்ட

நங்கள் துயர் அகற்ற நண்ணினையோ நீயென்றே

அங்கவர்கள் எல்லோரும் ஆர்த்தெழுந்து கூறுதலும்

எங்கள் பெருமான் இளவல் இதுபுகன்றான்.                       6

 

வம்மின்கள் வம்மின்கள் வானத்தீர் எல்லீரும்

நும்மை அயர்வித்த நொறில்பரித்தேர் வெஞ்சூரை

அம்ம அவுணர் அனிகத் துடன்எங்கோன்

இம்மெனவே வேலால் இதுபோழ் தெறிந்தனனே.          7

 

என்றாங் கிசைப்ப இமையோர் அதுகேளாப்

பொன்றாது முத்தி புகுந்ததோர் எனமகிழ்ந்து

வன்றாள் மிசைப்பிணித்த வல்லிகளின் மூட்டறுத்துச்

சென்றார் அவுணன் திருநகரம் நீங்கினரே.                8

 

வேறு

 

நுணங்கு நூலுடை இளையன் முன்செல நொய்தென்ன 

அணங்கி னோருடன் சயந்தனுந் தேவரும் அவண்நீங்கிக்

குணங்கர் ஈண்டிய களத்திடை நணுகியே குமரன்தாள்

வணங்கி மும்முறை புகழ்ந்தனர் திகழ்ந்தனர் மகிழ்வுற்றார்.               9

 

குன்றெ றிந்தவன் அமரர்பாற் பேரருள் கொடுநோக்கி

நன்றி யில்லவன் சிறையிடைப் பலபகல் நணுகுற்றீர்

துன்று பேரிடர் மூழ்கினீர் ஈங்கினித் துரின்றி

என்றும் வாழ்குதிர் துறக்கமேல் வெறுக்கையில் இருந்தென்றான்.   10

 

கந்தன் இம்மொழி வழங்கலுங் கடவுளர் களிப்பெய்தி

உய்ந்த னம்மெனப் பின்னரும் வணங்கினர் உதுகாணா

முந்து தொல்லிடர் நீங்கியே புந்தியில் *முதமெய்தி

இந்தி ரன்திருப் பெற்ற ஞான்றினும் இனிதுற்றான்.                11

 

( * முதம் - மகிழ்ச்சி.)

 

கண்ட னன்தொழு மைந்தனைப் புல்லினன் களிப்புள்ளங்

கொண்ட னன்புறம் நீவினன் பல்லுகங் கொடியோன்செய்

ஒண்ட ளைப்புகுந் தெய்த்தனை போலும்என் றுரைசெய்யா

அண்டர் யாரையும் முறைமுறை தழீஇயினன் அமரேசன்.         12

 

செற்ற மேதகு மவுணர் தங்காவலன் செருவத்தில்

அற்றை காறுமா விளிந்திடு பூதர்தம் அனிகங்கள்

முற்று மாயிடை வரும்வகை முருகவேள் முன்னுற்றான்

மற்ற வெல்லையில் துஞ்சிய கணமெலாம் வந்துற்ற.                     13

 

முஞ்சு தானைக ளார்ப்பொடு குழீஇக்குழீஇ முருகேசன்

செஞ்ச ரண்முனம் பணிந்துதம் மினத்தொடுஞ் செறிகின்ற

எஞ்ச லில்லதோ ரெல்லைநீர்ப் புணரியில் எண்ணில்லா

மஞ்சு கான்றிடு நீத்தம்வந் தீண்டிய மரபென்ன.                   14

 

கருணை யங்கட லாகியோன் கனைகடற் கிறையாகும்

வருணன் மாமுக நோக்கியே வெய்யசூர் வைகுற்ற

முரணு றுந்திறல் மகேந்திர நகரினை முடிவெல்லைத்

தரணி யாமென உண்குதி ஒல்லையில் தடிந்தென்றான்.           15

 

என்ற மாத்திரைச் சலபதி விழுமிதென் றிசைவுற்றுத்

துன்று பல்லுயிர் தம்மொடு மகேந்திரத் தொல்லூரை

அன்று வன்மைசேர் புணரியுள் அழுத்தினன் அவனிக்கீழ்

நின்று மாயவன் அடுவுல குண்டிடு நெறியேபோல்.                16

 

ஆன காலையில் அறுமுகன் முகுந்தனும் மலரோனும்

வானு ளோர்களும் இறைவனும் வழுத்தினர் மருங்காக

ஏனை வீரர்கள் யாவரும் புடைவர இகற்பூதத்

தானை ஆர்த்துடன் சென்றிடச் செருநிலந் தணப்புற்றான்.          17

 

கலங்கல் கொண்டிடு மகேந்திர வரைப்பினைக் கடந்தேபின்

இலங்கை மாநகர் ஒருவியே அளக்கரை இகந்தேகி

நலங்கொள் சீருடைச்செந்தியில் தொல்லைமா நகரெய்தி

அலங்கல் அஞ்சுடர் மஞ்ஞைநின் றிழிந்தனன் அயில்வேலோன்.    18

 

கேக யத்தின்நின் றிழிந்துதொல் சினகரங் கிடைத்திட்டுப்

பாக சாதன னாதியாம் அமரர்கள் பணிந்தேத்த

வாகை சேர்அரித் தவிசின்மேல் வதனமூ விரண்டுள்ள

ஏக நாயகன் உலகருள் கருணையோ டினிதுற்றான்.                       19

 

வேறு

 

ஈண்டிது நிகழ்ந்த எல்லை இப்பகல் அவுண ராகி

மாண்டவர் நமர்கள் அன்றே மற்றவர் படிவ முற்றுந்

தீண்டினங் கதிர்க்கை யாலுந் தீர்விதற் கிதுவென் பான்போல்

பூண்டகு தடந்தேர் வெய்யோன் புனற்பெருங் கடலுட் புக்கான்.20

 

வேலையின் நடுவு புக்கு மேவரும் வடவைச் செந்தீக்

காலம திறுதி யாகக் கடிதெழீஇக் ககன நக்கிப்

பாலுற விரிந்தி யாண்டும் படர்ந்துகொண் டென்ன வந்தி

மாலையம் பொழுதில் செக்கர் வான்முழு தீண்டிற் றன்றே. 21

 

வேறு

 

அன்னதொரு போழ்துதனில் ஆறிரு தடந்தோள் 

முன்னவனை நான்முகவ னேமுதல தேவர்

சென்னிகொடு தாழ்ந்துசிறி யேங்கள்இவ ணுன்றன்

பொன்னடி அருச்சனை புரிந்திடுதும் என்றா£¢.                    22

 

என்றுரைசெய் காலைஎமை யாளுடைய வண்ணல்

நன்றென இசைந்திட நறைக்கொள்புனல் சாந்தத்

துன்றுமலர் தீபம்அவி தூப முதலெல்லாம்

அன்றொரு கணத்தின்முன் அழைத்தனர் கள்அங்ஙன்.      23

 

எந்தையுமை தேர்ந்திட இயம்பிய குமார

தந்திர நெறிப்படி தவாதறு முகற்கு

முந்திய* குடங்கர்முதல் மூவகை யிடத்தும்

புந்திமகிழ் பூசனை புரிந்தனர் பரிந்தே.                           24

 

( * குடங்கர் முதல் மூவகை இடம் - கும்பம், அக்கினி, 

  உருவமாகிய திருமேனி என்னும் மூன்று இடங்களில்.)

 

எஞ்சலில் அருச்சனை இயற்றி இணைஇல்லோன்

செஞ்சரணி னைத்தமது சென்னிகொடு தாழா

அஞ்சலிசெய் தேத்திடலும் ஆங்க வரைநோக்கி

நெஞ்சுறு மகிழ்ச்சியொடு நீட ருள்புரிந்தான்.                      25

 

நீண்டவருள் செய்திடு நெடுந்தகை நுமக்கு

வேண்டுகுறை யுண்டனெ¤ன் விளம்புதிர்கள் என்னக்

காண்டகைய சூர்முதல் களைந்தெமை அளித்தாய்

ஈண்டுனருள் பெற்றன மியாதுகுறை மாதோ.                     26

 

ஒன்றினி அளிப்பதுள துன்னடியம் யாக்கை

நின்றிடு பகற்றுணையும் நின்னிரு கழற்கண்

மன்றதலை யன்புற வரந்தருதி எந்தாய்

என்றிடலும் நன்றென இரங்கியருள் செய்தான்.            27

 

வேறு

 

மலரய னாதியாம் வரம்பி லோரெலாம்

பலர்புகழ குமரனைப் பரவி  வைகினார்

உலகினில் யாரையும் ஒறுத்த தானவர்

குலமென மாய்ந்தது கொடிய கங்குலே.                  28

 

கங்குலுந் தாரகா கணமும் மாய்ந்திடப்

பொங்கொளி வீசியே பொருவில் ஆதவன்

இங்குள வுலகெலாம் ஈறு செய்திடுஞ்

சங்கர னாமெனத் தமியன் தோன்றினான்.                 29

 

குணதிசை அமர்புரி கொடியர் உய்த்திடுங்

கணையென விரிகதிர் காட்டி அங்கவை

அணைதலுங் குருதிநீர் அடைந்த தன்மைபோல்

இணையறு செக்கர்பெற் றிரவி தோன்றினான்.            30

 

அப்பொழுது தவ்விடை அமரா¢ கம்மியன்

கைப்படு செய்கையாற் கந்த வேள்ஒரு

செப்பரு நிகேதனஞ் செய்வித் தீசனை

வைப்புறு தாணுவில் வருவித் தானரோ.                 31

 

ஆமயம் முதலிய ஐந்து கந்திகள்

மாமலர் மஞ்சனம் அமிர்தம் வான்துகில்

தூமணி விளக்கொடு தூபங் கண்ணடி

சாமரை ஆதிகள் அமரர் தந்திட.                        32

 

முழுதொருங் குணர்ந்திடு முருகன் யாவருந்

தொழுதகும இறைவனுல் தொடர்பு நாடியே

விழுமிய கண்ணுதல் விமலன் தாள்மலர்

வழிபடல் புரிந்தனன் மனங்கொள் காதலால்.                     33

 

ஆகத் திருவிருத்தம் - 2967

     - - - 

 

யுத்தகாண்டம் முற்றுப் பெற்றது

ஆகக் காண்டம் நான்குக்கு திருவிருத்தம் - 7857

* * *


·  முந்தையது : யுத்த காண்டம் - பகுதி 6...

·  அடுத்தது : தேவ காண்டம்...


 

Related Content

Discourse - The Great Vratas - Significance

Skanda Puranam Lectures

History of Thirumurai Composers - Drama-திருமுறை கண்ட புராணம

கந்தபுராணம் - பாயிரம்

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருக்கைலாசப்படலம்