logo

|

Home >

hindu-hub >

temples

திருமுருகன்பூண்டி

இறைவர் திருப்பெயர்: முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி.

இறைவியார் திருப்பெயர்: ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை (முயங்குபூண்முலையம்மை), ஆவுடைநாயகி, மங்களாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : பிரமதீர்த்தம், ஞானதீர்த்தம், சுப்பிரமணியதீர்த்தம். ஷண்முக தீர்த்தம்.

வழிபட்டோர்:சுந்தரர், அப்பர், சேக்கிழார், முருகப்பெருமான், அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் ஆகியோர்.

Sthala Puranam

 

Tirumuruganpundi templeFull view of temple

  • துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவி மர (குருக்கத்தி மர)த்தை இங்கு கொண்டு வந்தார் என்பர்; ஆதலால் இதற்கு மாதவிவனம் என்றும் பெயர்.

     

  • சுந்தரர் இவ்வழியே செல்லும்போது, இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்ட தலம்.

     

  • வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய (வேடுபறி நடந்த இடம்) 'கூப்பிடுவிநாயகர்' அவிநாசிக்கு போகும் வழியில் 1 கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார்.

     

  • இத்தலம் பிரமகத்தி தோஷம் நீங்கிய தலம்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சுந்தரர்    -    1. கொடுகு வெஞ்சிலை (7.49); 

பாடல்கள்      :    அப்பர்     -       தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1); 

                   சேக்கிழார்   -       ஆரூரர் அவர் தமக்கு (12.37.164,165 & 168) கழறிற்றறிவார் நாயனார் புராணம், 
                                         செறிவுண்டு (12.52.7)  முனையடுவார் நாயனார் புராணம், (சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி), 
                                         செற்றார் தம் புரம் எரித்த (12.64.2) அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம், (சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி).

Specialities

 

  • சுவாமியும் அம்பாளும் மேற்கு பார்த்த சந்நிதிகள்; மூலவர் அம்பாள் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கி உள்ளது.

     

  • பதினாறுகால் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்பால் வேடுவர் உருவமும் சுந்தரர் உருவங்கள் இரண்டும் (ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலையிலும், மற்றொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்) உள்ளன.

     

  • சித்தபிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்கு வந்து தங்கியிருந்து நீராடி வழிபடுவதை இன்றும் காணலாம்.

     

  • பிரமதாண்டவ நடராசர் சந்நிதிக்கு சற்று தொலைவில் மாலாதரன் எனும் வேட மன்னன் வழிபட்ட மாதவனேஸ்வரர் கோயில் உள்ளது; நல்ல கல் கட்டிடம்.

     

  • எங்கும் இல்லாத புதுமையாக கோயிலின் முன் மண்டபத்தின் மேல், பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.

     

  • இத்தலத்திற்கு செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடிய தலபுராணம் உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு அவிநாசியிலிருந்து 5-கி. மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதிகள் நிறைய உள்ளது. தொடர்பு : 04296 - 273507

Related Content