logo

|

Home >

hindu-hub >

temples

பெருவேளூர் (மணக்கால் ஐயம்பேட்டை)

இறைவர் திருப்பெயர்: அபிமுக்தீஸ்வரர், பிரியாஈஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அபின்னாம்பிகை, ஏலவார்குழலி.

தல மரம்:

தீர்த்தம் : சரவணப் பொய்கை.

வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், பிருங்கி, கௌதமர் ஆகியோர்.

Sthala Puranam

 

Peruvelur temple

  • தற்போது மக்கள் வழக்கில் மணக்கால் ஐயம்பேட்டை என்று வழங்கப்படுகின்றது.

     

  • பழைய நூல்களில் இத்தலம் 'காட்டூர் ஐயம்பேட்டை' என்று குறிக்கப்பட்டுள்ளது.

     

  • முருகன் வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுவதால் "வேளூர்" என்றும்; 'பெருவேள்' என்பவன் வாழ்ந்த இடமாதலின் "பெருவேளூர்" என்றும் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகின்றது.

     

  • வாயுவுக்கும் ஆதிசேடனுக்குமிடையே நடந்த போட்டியில் வந்து விழுந்த கயிலைச் சிகரங்களுள் இதுவும் ஒன்று.

     

  • மோகினி வடிவம் எடுத்த திருமால், அவ்வவதார நோக்கம் நிறைவேறிய பின்பு இறைவனை வழிபட்டுத் தன் ஆண் வடிவினைப் பெற்ற தலம் எனப்படுகிறது. (திருமால் கோயில் ஆலயத்துள் உள்ளது.)

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. அண்ணாவுங் கழுக்குன்றும் (3.64);

                      அப்பர்     -    1. மறையணி நாவினானை (4.60); 

பாடல்கள்      :     அப்பர்     -        மருக லுறை (4.15.6), 
                                          நல்லூரே நன்றாக (6.25.10),  
                                          மண்ணிப் படிக்கரை (6.70.6); 

                      சுந்தரர்    -        பேறனூர் (7.31.9); 

                    சேக்கிழார்   -        பெருவாச மலர்ச் சோலைப் (12.21.217) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                           நீடு திரு வாஞ்சியத்தில் (12.28.573) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • கோச்செங்கட் சோழனின் திருப்பணியாலான மாடக்கோயில்.

     

  • நடராஜ சபை உள்ளது; இம்மண்டபம் 'வெளவால் நெத்தி மண்டபம்' அமைப்புடையது.

     

  • மூலவர் - சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையார்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - குடவாசல், திருவாரூர்ப் பேருந்துச் சாலையில், மணக்கால் என்ற இடத்தில் இறங்கி, இடப்புறமாக 1/2- கி. மீ. சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.

Related Content