இறைவர் திருப்பெயர்: | நவநீதேஸ்வரர், வெண்ணெய்ப் பிரான். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | வேல் நெடுங்கண்ணி, சத்தியதாட்சி. |
தல மரம்: | மல்லிகை, பவளமல்லி(பாரிசாதம்) |
தீர்த்தம் : | க்ஷீர புஷ்கரணி, கயாதீர்த்தம், லட்சுமிதீர்த்தம். |
வழிபட்டோர்: | சம்பந்தர்,முருகப் பெருமான், திருமால், வசிஷ்டர், காமதேனு. |
வசிஷ்ட முனிவர், காமதேனுவின் வெண்ணெயினால், சிவலிங்கம் அமைத்து வழிபட்ட பின்னர், அதனை எடுக்கமுடியாது சிக்கிக்கொண்டமையால், சிக்கல் எனப்படுகிறது.
முருகப் பெருமான், சூரனை வதைக்க, அம்பிகையிடம் வேல் பெற்ற இடம்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வானுலாவுமதி வந்துலவும் (2.8); பாடல்கள் : சேக்கிழார் - கழிக் கானல் மருங்கு (12.28.467) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
கோவில் மலை மேல் உள்ளது. ஸ்கந்தபுராண மஹாத்மியத்தையும், கோவில் தலமரம், வழிபட்ட ரிஷிகள் ஆகியனவைப் பற்றி கூறும் எட்டு கல்வெட்டுகள் உள்ளன.
சிறப்புகள் இத்தல முருகர், சிங்கார வேலர் என மிகப் புகழ்ப்பெற்றவர்.. சூர சம்ஹார விழா ,இங்கு மிகச்சிறப்பு. கோவில் மலை மேல் உள்ளது. ஸ்கந்தபுராண மஹாத்மியத்தையும், கோவில் தலமரம், வழிபட்ட ரிஷிகள் ஆகியனவைப் பற்றி கூறும் எட்டு கல்வெட்டுகள் உள்ளன. தொடர்புக்கு : 04365 - 245350 , 245452.