இறைவர் திருப்பெயர்: | ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | கோபரத்னாம்பிகை, இமயமடக்கொடி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | அக்கினி தீர்த்தம் |
வழிபட்டோர்: | அம்பாள், அப்பர், சேக்கிழார், சனற்குமாரர், கெளதம ரிஷி ஆகியோர். |
தொண்டை நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது 27வது தலமாகும்.
மக்கள் வழக்கில் தற்போது "திருவடிசூலம்" என்று வழங்குகிறது.
திருமுறைப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. வரிவள ரவிரொளி (1.78). 2. அப்பர் - சிந்தும் புனற்கெடில (6.7.10). 3. சேக்கிழார் - சென்னி இள மதி (12.28.1125,1126 & 1128) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்
மலைகள் சூழ்ந்த இயற்கை சூழலில் கோயில் அமைந்துள்ளது.
கருங்கல் கட்டமைப்புடைய பழைமையான திருக்கோயில்; கருவறை அகழி அமைப்புடையது.
மூலவர் - மரகத (பச்சைக்கல்) சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி. தீபாராதனையின்போது தீபம் மரகத மேனியில்பட்டு பிரகாசிப்பது மனதிற்கு நிறைவைத் தருகிறது. இத்தல சம்பந்தர் தேவார பதிகம் முழுவதிலும் மரகதலிங்கத்தின் அழகு புகழ்ந்து பாடப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு செங்கற்பட்டு - திருப்போரூர் சாலையில் இத்தலம் உள்ளது. "திருவடிசூலம்" பேருந்து நிறுத்தத்திலிருந்து உள்ளே 1-கி. மீ. சென்றால் ஊரை அடையலாம். வாகனங்களில் கோயில் வரை செல்லலாம். தொடர்பு : 044 - 27420485, 09444523890