logo

|

Home >

hindu-hub >

temples

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், ஜலந்தரேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் : விட்டுணு தீர்த்தம்

வழிபட்டோர்:ஓணன், காந்தன் (இவர்கள் வாணாசுரனின் சேனாதிபதிகளாவர்), சலந்தரன், சுந்தரர் , சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

Onakantantali temple

  • வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் இருவர் வழிபட்ட தலம்; ஆதலின் இது ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது.
  • இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன.
  • சலந்தரன் வழிபட்டதாக சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே உள்ளது; இக்கோயிலுக்கு வெளியேயிருந்த, சலந்தரன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனியை எடுத்துவந்து இங்கு தனிக்கோயிலாக ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவே சலந்தரேசம் எனப்படுகிறது; இது பிற்கால பிரதிஷ்டையாகும்.
  • இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, 'நெய்யும் பாலும் தயிரும் கொண்டு' என்று தொடங்கும் பதிகம் பாடி பொன் பெற்றார் என்பது வரலாறு.
  • மேற்படி பதிகத்துள் சுந்தரர் குறித்துள்ளதற்கேற்ப இக்கோயிலில் 'வயிறுதாரிப் பிள்ளையார் ' சந்நிதி உள்ளது.
  • மேற்படி பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும்போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும்; அஃதறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றார் என்பதாக இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது.
  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர்     - 1. நெய்யும் பாலுந் தயிருங் (7.5); பாடல்கள்  : சேக்கிழார்  -    ஓண காந்தன் தளி மேவும் (12.29.191) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

 

Specialities

  • காஞ்சிபுரத்திலுள்ள பாடல் பெற்ற திருக்கோயில்கள் ஐந்தினுள் இத்திருக்கோயிலும் ஒன்று.

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - அரக்கோணம் பேருந்து சாலையில் (கோயில் உள்ள பகுதி பஞ்சுப்பேட்டை எனப்படும்) உள்ளது. தொடர்பு : 098944 43108

Related Content

திருக்கச்சியேகம்பம் தல புராணம் (காஞ்சிபுரம்)

திருக்கச்சிமேற்றளி (திருமேற்றளீஸ்வரர் கோயில், பிள்ளையார்பாள

திருக்கச்சிஅனேகதங்காவதம் (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்தில

திருமாற்பேறு தலவரலாறு (திருமால்பூர்)