logo

|

Home >

devotees >

references-to-tirunalaippovar-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் திருநாளைப்போவார் நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்

        முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்

        திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

        வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்

        ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.                          7.39.3 

 

நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன் 

        நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்

கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி 

        கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்

குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் 

        கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்

பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் 

        பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.                           7.55.4 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

நாவார் புகழ்த்தில்லை அம்பலத் தான்அருள் பெற்றுநாளைப்

போவான் அவனாம் புறத்திருத் தொண்டன்தன் புன்புலைபோய்

மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்

மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே.                  11.20-நம்பி

 

 பெரியபுராணம்

 

சீரேறும் இசைபாடித் திருத்தொண்டர் திருவாயில்

See Also: Life history of thiru nAlaippOvar nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The Puranam of Tiru Nalai-p-povar

The history of Thiru-Naalaip-Povaar Nayanar (Nandanar)

திருநாளைப்போவார் (நந்தனார்) நாயனார் புராணம் - Tiru Nalaippov

Nandhanar Sariththirak Keerththanaikal

तिरुनालैप्पोवार नायनार दिव्य चरित्र