logo

|

Home >

devotees >

references-to-thirunilanakka-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் திருநீலநக்க நாயனார் பற்றிய குறிப்புகள்

 

திருஞானசம்பந்தர் தேவாரம்

பொடிதனைப் பூசுமார்பிற் புரிநூலொரு பாற்பொருந்தக்

கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதே

கடிமணம் மல்கிநாளுங் கமழும்பொழிற் சாத்தமங்கை

அடிகள்நக் கன்பரவ அயவந்திய மர்ந்தவனே.                     3.58.02

 

மறையினார் மல்குகாழித் தமிழ்ஞானசம் பந்தன்மன்னும்

நிறையினார் நீலநக்கன் நெடுமாநக ரென்றுதொண்டர்

அறையுமூர் சாத்தமங்கை அயவந்திமே லாய்ந்தபத்தும்

முறைமையா லேத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே.                3.58.11 

 

சுந்தரர் தேவாரம்

 

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

        திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்

பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்

        பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்

ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

        ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்

அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.4 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

பூதிப் புயத்தர் புயத்திற் சிலந்தி புகலும்அஞ்சி

ஊதித் துமிந்த மனைவியை நீப்பஉப் பாலவெல்லாம்

பேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் காட்டுமவன்

நீதித் திகழ்சாத்தை நீலநக் கன்எனும் வேதியனே.                 11.30-நம்பி 

 

பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல

சந்தார் அகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து

கொந்தார் சடையர் பதிகத்தில் இட்டடி யேன்கொடுத்த

அந்தாதி கொண்ட பிரான்அருட் காழியர் கொற்றவனே.            11.34-நம்பி

 

ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி

 

ஏந்தும் உலகுறு வீர்எழில் நீலநக் கற்கும்இன்பப்

பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போகமார்ப்பைக்

காந்துங் கனலிற் குளிர்படுத் துக்கடற் கூடலின்வாய்

வேந்தின் துயர்தவிர்த் தானைஎப் போதும் விரும்புமினே.          11.71-நம்பி

 

ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை

 

நிலவு முருகர்க்கும் நீலநக் கற்கும்

தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் - குலவிய 

 

தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை

மாழையொண்கண் மாதர் மதனனைச் - சூழொளிய 

 

கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில்

வாதில் அமணர் வலிதொலையக் - காதலால் 

 

புண்கெழுவு செம்புனலா றோடப் பொருதவரை

வண்கழுவில் தைத்த மறையோனை - ஒண்கெழுவு 

 

ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது

பாலை தனைநெய்தல் ஆக்கியும் - காலத்து                              11.75-நம்பி 

 

ஆளுடையபிள்ளையார் திருத்தொகை

 

பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை என்னவல்லான்

வர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ்முருகன்

பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான்

அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான்

துத்த மொழிக்குதலைத் தூயவாய் நன்னுதலி                             11.55-நம்பி 

 

 

 பெரியபுராணம்

 

ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று

See Also: 1. Life history of thirunIlanakkanAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

The Puranam of Tiruneelanakkar Nayanar

The History of Thirunilanakka Nayanar

திருநீலநக்கர் நாயனார் புராணம்

The Puranam of Tiruneelanakkar Nayanar

तिरुनीलनक्क नायनार दिव्य चरित्र