திருச்சிற்றம்பலம்
21 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்
1. திரு நாவுக்கு அரசர் வளர் திருத் தொண்டின் நெறி வாழ 1266-1
வரு ஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ் 1266-2
பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேர் உலகில் 1266-3
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 1266-4
2. தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா 1267-1
நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச் 1267-2
சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள் 1267-3
மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு 1267-4
3. புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின் 1268-1
கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர் 1268-2
இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் 1268-3
வனப்பெண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் 1268-4
4. காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் 1269-1
பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு 1269-2
சாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் 1269-3
மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை 1269-4
5. கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு 1270-1
இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன் 1270-2
புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப் புனல் போல் மடை உடைப்ப 1270-3
உடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும் 1270-4
6. கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்ட 1271-1
மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப் 1271-2
பெருஞ்சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க 1271-3
நெருங்கிய சாதுரங்க பல நிகர்பனவாம் நிறை மருதம் 1271-4
7. நறையாற்றுங் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல் 1272-1
பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பு அலை தண்டலை வேலித் 1272-2
துறை ஆற்ற மணி வண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை 1272-3
நிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால் 1272-4
8. மரு மேவு மலர் மேய மா கடலினுட் படியும் 1273-1
உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் 1273-2
வரு மேனிச் செங்கண் வரால் மட முட்டப் பால் சொரியும் 1273-3
கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ திரை வாவி 1273-4
9. மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலையச் 1274-1
செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப 1274-2
மெய்யொளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை 1274-3
வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை 1274-4
10. எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் 1275-1
பயிர்க் கண்வியல் இடங்கள் பல பரந்து உயர் நெற் கூடுகளும் 1275-2
வெயில் கதிர்மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி 1275-3
மயில் குலமும் முகல் குலமும் மாறாட மருங்கு ஆடும் 1275-4
11. மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி 1276-1
அறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும் 1276-2
பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் 1276-3
சிறந்த திருமுனைப் பாடித் திறம் பாடும் சீர்ப் பாடு 1276-4
12. இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும் என்றும் 1277-1
மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் 1277-2
சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால் 1277-3
தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர் 1277-4
13. ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை 1278-1
ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக் காஞ்சி 1278-2
ஓங்குவன மாட நிரை ஒழுகுவன வழுவில் அறம் 1278-3
நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள் 1278-4
14. மலர் நீலம் வயல் காட்டும் மைஞ் ஞீலம் மதி காட்டும் 1279-1
அலர் நீடு மறு காட்டும் அணி ஊசல் பல காட்டும் 1279-2
புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும் 1279-3
கல நீடு மனை காட்டும் கரை காட்டாப் பெருவளங்கள் 1279-4
15. தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து வித 1280-1
நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் 1280-2
விலங்கின் மனை ஒழுக்கத்தின் மேதக்க ந்¢லைவேளாண் 1280-3
குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும் 1280-4
16. அக் குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார் 1281-1
மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் 1281-2
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் 1281-3
திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார் 1281-4
17. புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண் 1282-1
மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில் 1282-2
நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில் 1282-3
திகழ வருந் திரு அனைய திலகவதியார் பிறந்தார் 1282-4
18. திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் 1283-1
அலகில் கலைத் துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழ 1283-2
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் 1283-3
மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் 1283-4
19. மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகனார் 1284-1
காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள் 1284-2
மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் 1284-3
ஏதமில் பல் கிளை போற்ற இளங் குழவிப் பதம் கடந்தார் 1284-4
20. மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும் 1285-1
தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்து அதற்பின் 1285-2
பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மன முகிழ்த்த 1285-3
சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார் 1285-4
21. தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால் 1286-1
சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் 1286-2
முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை 1286-3
மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார் 1286-4
22. அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின் 1287-1
முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர் 1287-2
மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார் 1287-3
பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார் 1287-4
23. ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் 1288-1
காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார் 1288-2
பூண்ட கொடைப் புகழனார் பால் பொருவின் மகள் கொள்ள 1288-3
வேண்டி எழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார் 1288-4
24. அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு 1289-1
மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக் 1289-2
குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார் 1289-3
பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார் 1289-4
25. கன்னித் திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார் 1290-1
முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன் முன் 1290-2
மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர்மேல் 1290-3
அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார் 1290-4
26. வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு 1291-1
போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் 1291-2
காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்து கடும் சமர்க் கடலை 1291-3
நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர்த் துறை விளைத்தார் 1291-4
27. ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்த 1292-1
தூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமை 1292-2
மேய வினைப் பயத்தாலே இவ் உலகை விட்டு அகலத் 1292-3
தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார் 1292-4
28. மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார் 1293-1
சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்துப் 1293-2
பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் 1293-3
கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார் 1293-4
29. தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின் 1294-1
மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த 1294-2
காதலனார் மருண் நீக்கியாரும் மனக் கவலையினால் 1294-3
பேது உறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார் 1294-4
30. ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்து 1295-1
பெரு வானம் அடைந்தவர்க்குச் செய் கடன்கள் பெருக்கினார் 1295-2
மருவார்மேல் மன்னவற்காய் மலையப் போம் கலிப்பகையார் 1295-3
பொருவாரும் போர்க் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார் 1295-4
31. வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய் 1296-1
அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத் 1296-2
தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச் 1296-3
செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார் 1296-4
32. எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க இசைந்தார்கள் 1297-1
அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால் 1297-2
இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய 1297-3
வந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார் 1297-4
33. அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற 1298-1
பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன் 1298-2
என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் 1298-3
முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் 1298-4
34. தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா 1299-1
உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி 1299-2
அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி 1299-3
இம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் 1299-4
35. மாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித் 1300-1
தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வார் ஆய்க் 1300-2
காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால் 1300-3
ஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார் 1300-4
36. கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் 1301-1
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் 1301-2
நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர் 1301-3
யாவர்க்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார் 1301-4
37. நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை 1302-1
அல்லேன் என்று அறத் துறந்து சமயங்களான வற்றின் 1302-2
நல்ல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால் 1302-3
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார் 1302-4
38. பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி 1303-1
மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு 1303-2
வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் 1303-3
கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார் 1303-4
39. அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் 1304-1
பொங்கும் உணர்வுறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத் 1304-2
துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத் 1304-3
தங்களில்ன் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார் 1304-4
40. அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில் 1305-1
சித்த நிலை அறியாதாரையும் வாதின் கண் 1305-2
உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய 1305-3
வித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார் 1305-4
41. அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச் 1306-1
செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும் 1306-2
தொன்னெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவ 1306-3
நன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார் 1306-4
42. பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால் 1307-1
ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார் 1307-2
நீரார் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் 1307-3
சீரார் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார் 1307-4
43. சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக் 1308-1
குன்றை அடி பணிந்து கோதில் சிவ சின்னம் 1308-2
அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால் 1308-3
துன்று திருப் பணிகள் செய்யத் தொடங்கினார் 1308-4
44. புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனி அகன்ற 1309-1
நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு 1309-2
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப் 1309-3
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார் 1309-4
45. நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும் நன்னாளில் 1310-1
கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார் 1310-2
கோளுறு தீவினை முந்தப் பர சமயம் குறித்து அதற்கு 1310-3
மூளும் மனக் கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து 1310-4
46. தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னை 1311-1
ஆண்டு அருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனை 1311-2
ஈண்டு வினைப் பர சமயக் குழி நின்றும் எடுத்து ஆள 1311-3
வேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால் 1311-4
47. தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும் 1312-1
அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச் 1312-2
சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப் 1312-3
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார் 1312-4
48. மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார் 1313-1
உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் 1313-2
முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான் 1313-3
அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வான் என அருளி 1313-4
49. பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவில் இறை வழுவும் 1314-1
தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக் 1314-2
கண் தரு நெற்றியர் அருளக் கடும் கனல் போல் அடும் கொடிய 1314-3
மண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கதால் 1314-4
50. அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது 1315-1
வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம் 1315-2
கொடிய எலாம் ஒன்றாகும் எனக் குடரின் அகம் குடையப் 1315-3
படர் உழந்து நடுங்கி அமண் பாழியறை இடை விழுந்தார் 1315-4
51. அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும் 1316-1
விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகி 1316-2
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம் 1316-3
நச்சரவின் விடம் தலைக் கொண்டு என மயங்கி நவையுற்றார் 1316-4
52. அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக் 1317-1
கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலை 1317-2
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் 1317-3
தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார் 1317-4
53. புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது 1318-1
குண்டிகை நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமை 1318-2
கண்டு மிகப் பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் 1318-3
பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார் 1318-4
54. தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி 1319-1
ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தாராய் 1319-2
ஆ! ஆ! நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்ப் 1319-3
போவார்கள் இது நம்மால் போக்க அரிதாம் எனப் புகன்று 1319-4
55. குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசைக் கொண்டு 1320-1
மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதி மயங்கிப் 1320-2
பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராகக் 1320-3
கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த 1320-4
56. ஆங்கு அவன் போய்த் திருவதிகை தணை அடைய அரும் தவத்தார் 1321-1
பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி 1321-2
ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத் 1321-3
தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான் 1321-4
57. கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை 1322-1
எல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்த 1322-2
நல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு 1322-3
அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான் 1322-4
58. என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து 1323-1
நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் 1323-2
சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய 1323-3
அன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான் 1323-4
59. அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் 1324-1
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் 1324-2
ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச் 1324-3
செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என 1324-4
60. எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி 1325-1
அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருவதிகை அணைவதனுக்கு 1325-2
உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழியத் 1325-3
தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார் 1325-4
61. பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம் கழிந்து 1326-1
மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து 1326-2
கை தருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின் கண் 1326-3
செய் தவ மாதவர் வாழும் திருவதிகை சென்று அடைவார் 1326-4
62. சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடரக் 1327-1
குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்று 1327-2
இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருவதிகையினில் 1327-3
திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார் 1327-4
63. வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி 1328-1
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் 1328-2
இந்த உடல் கொடும் சூலைக் கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது 1328-3
உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என உரைத்து 1328-4
64. தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி 1329-1
ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது 1329-2
கோளில் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது 1329-3
மூளும் அரும் துயர் உழந்தீர்! எழுந்தீர்! என மொழிந்தார் 1329-4
65. மற்ற வுரை கேட்டலும் ஏ மருண் நீக்கியார் தாமும் 1330-1
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் 1330-2
கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர் 1330-3
பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார் 1330-4
66. என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச 1331-1
நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து 1331-2
சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக் 1331-3
குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார் 1331-4
67. திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்ப 1332-1
பெரு வாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்ற அங்கு 1332-2
உருவார அணிந்து தமக்குற்ற இடத்து உய்யும் நெறி 1332-3
தருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார் 1332-4
68. நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் 1333-1
மாற வரும் திருப் பள்ளி எழுச்சியினில் மாதவம் செய் 1333-2
சீர் அடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு 1333-3
ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரைக் கொடு புக்கார் 1333-4
69. திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்கனக 1334-1
வரைச் சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித் 1334-2
தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால் 1334-3
உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார் 1334-4
70. நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக 1335-1
மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான் 1335-2
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோதில் திருப்பதிகம் 1335-3
போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர் நின்று புகன்றனரால் 1335-4
71. மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான் 1336-1
அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச் 1336-2
செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம் திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர் 1336-3
முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணைக் கடல் மூழ்கினாரே 1336-4
72. அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப் புளகம் கண் முகிழ்த்து அலரப் 1337-1
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப் புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் 1337-2
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின் 1337-3
தங்கும் கருணைப் பெரு வெள்ளம் இடத் தகுமோ என இன்னன தாம் மொழிவார் 1337-4
73. பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம் 1338-1
அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் 1338-2
மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும் 1338-3
இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என் கொல் எனத் தொழுவார் 1338-4
74. மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் 1339-1
பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால் 1339-2
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று 1339-3
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒருவாய்மை எழுந்ததுவே 1339-4
75. இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இந் நெடுநாள் 1340-1
சித்தம் திகழ் தீவினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா 1340-2
அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணைத் திறமான அதன் 1340-3
மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே 1340-4
76. பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து 1341-1
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் 1341-2
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் 1341-3
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 1341-4
77. மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் 1342-1
மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே 1342-2
எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு இன்றி எழும் திருவாசகமும் 1342-3
கையில் திகழும் உழவாரமுடன் கைக் கொண்டு கலந்து கசிந்தனரே 1342-4
78. மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் 1343-1
தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அத் தன்மைப் பதி மேவியதா பதியார் 1343-2
பொய்மைச் சமயப் பிணி விட்டவர் முன் போதும் பிணி விட்டருளிப் பொருளா 1343-3
எம்மைப் பணிகொள் கருணைத் திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே 1343-4
79. இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி 1344-1
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கைய வண்ணம் 1344-2
பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில் 1344-3
புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய் 1344-4
80. தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை 1345-1
ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்யப் போய்ப் 1345-2
பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் 1345-3
மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார் 1345-4
81. மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால் 1346-1
நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக் 1346-2
கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர் 1346-3
தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார் 1346-4
82. இவ்வகைப் பல அமணர்கள் துயருன் ஈண்டி 1347-1
மெய் வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு 1347-2
சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் 1347-3
செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் 1347-4
83. தவ்வை கைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம் 1348-1
பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது எனப் போய் இங்கு 1348-2
எவ்வ மாக அங்கு எய்தி நம் சமய அங்கனமும் 1348-3
தெய்வ நிந்தையும் செய்தனர் எனச் சொலத் தெளிந்தார் 1348-4
84. சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் 1349-1
முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே 1349-2
இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல 1349-3
மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார் 1349-4
85. உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர் 1350-1
கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள் 1350-2
அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன 1350-3
இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் 1350-4
86. அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து 1351-1
கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூற 1351-2
வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் 1351-3
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் கொல் எனக் கவன்று உரைத்தான் 1351-4
87. கடை காவல் உடையார்கள் புகுத விடக் காவலன் பால் 1352-1
நடை ஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறு 1352-2
உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச் 1352-3
சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார் 1352-4
88. விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து 1353-1
புரை உடைய மனத்தினராய் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டு 1353-2
உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே 1353-3
கரையில் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான் 1353-4
89. தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய 1354-1
நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை 1354-2
அலை புரிவாய் எனப் பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் 1354-3
கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர் 1354-4
90. அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவென்று 1355-1
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித் 1355-2
தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப் 1355-3
பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும் எனப் புகன்றான் 1355-4
91. அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே 1356-1
முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து 1356-2
விரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவி 1356-3
பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார் 1356-4
92. சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து 1357-1
மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை 1357-2
இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என 1357-3
நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார் 1357-4
93. நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின் 1358-1
கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடை யானைத் 1358-2
தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி 1358-3
ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார் 1358-4
94. ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட வரும் அடி வணங்கி 1359-1
வேண்டியவர்க் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் 1359-2
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் 1359-3
மூண்ட சினப் போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார் 1359-4
95. பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை 1360-1
வல் அமணர் தமை நோக்கி மற்று அவனைச் செய்வது இனிச் 1360-2
சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத 1360-3
புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப் புகன்றார் 1360-4
96. அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப் 1361-1
பெருகு சினக் கொடுங் கோலான் மொழிந்திடலும் பெருந் தகையை 1361-2
உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தித் 1361-3
திருகு கரும் தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார் 1361-4
97. ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத் 1362-1
தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே 1362-2
ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று 1362-3
மூண்டமனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார் 1362-4
98. வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம் 1363-1
தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்று 1363-2
மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் 1363-3
ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே 1363-4
99. மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப் 1364-1
பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை 1364-2
ஈசனை எம்பெருமானை எவ் உயிரும் தருவானை 1364-3
ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் 1364-4
100. ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வில் அமணரை அழைத்துப் 1365-1
பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும் 1365-2
கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர் 1365-3
தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையைத் திறந்தார்கள் 1365-4
101. ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர் 1366-1
தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி 1366-2
ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே 1366-3
ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார் 1366-4
102. அதிசயம் அன்றிது முன்னை அமண் சமயச் சாதகத்தால் 1367-1
இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து 1367-2
மதி செய்வது இனிக் கொடிய வல் விடம் ஊட்டுவது என்று 1367-3
முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள் 1367-4
103. ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன் 1368-1
ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத் 1368-2
தேங்காதார் திருநாவுக்கரையரை அத் தீய விடப் 1368-3
பாங்கு உடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார் 1368-4
104. நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று 1369-1
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே 1369-2
செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் 1369-3
வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார் 1369-4
105. பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனம்கள் 1370-1
முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால் 1370-2
படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம் உடைய 1370-3
அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ 1370-4
106. அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப 1371-1
வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெருக் கொண்டே 1371-2
இவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத் 1371-3
தெவ் விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார் 1371-4
107. நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர் 1372-1
தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான் 1372-2
எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் 1372-3
துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார் 1372-4
108. மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் 1373-1
செற்ற அவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்ப 1373-2
உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின் 1373-3
கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார் 1373-4
109. மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம் 1374-1
கா பாலி அடியவர் பால் கடக் களிற்றை விடுக என்னப் 1374-2
பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம் மேல் 1374-3
கோ பாதி சயமான கொலைக் களிற்றை விடச் சொன்னான் 1374-4
110. கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு 1375-1
மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித் 1375-2
தாடத்தில் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின் 1375-3
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம் 1375-4
111. பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியா 1376-1
மீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணிவிலகா 1376-2
ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறா 1376-3
வாசக் கட மழை முற்பட மதவெற்பு எதிர் வருமால் 1376-4
112. இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில் 1377-1
படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில் 1377-2
கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் 1377-3
முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே 1377-4
113. மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக் 1378-1
கோடுற்று இரு பிளவிட்டு அறு குறை கைக்கொடு முறியச் 1378-2
சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்று 1378-3
ஆடுற்று அகல் வெளியுற்று அது அவ்வடர் கைக்குல வரையே 1378-4
114. பாவக் கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர் 1379-1
நாவுக்கரசர் எதிர் முற்கொடு நணுகிக் கருவரை போல் 1379-2
ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார் 1379-3
சேவிற்று திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர் 1379-4
115. அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டு 1380-1
விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச் 1380-2
சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப் பதிகத்தை 1380-3
மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார் 1380-4
116. வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச் 1381-1
செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் 1381-2
வெம்ஞ்சுடர் மூவிலைச் சுல வீரட்டர் தம் அடியோம் நாம் 1381-3
அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார் 1381-4
117. தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக் 1382-1
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத் 1382-2
தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் 1382-3
எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம் 1382-4
118. ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத் 1383-1
தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடத்துத் திரிந்து 1383-2
மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி 1383-3
ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே 1383-4
119. ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து 1384-1
நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக 1384-2
நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல 1384-3
ஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே 1384-4
120. யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் 1385-1
மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகித் 1385-2
தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்ப 1385-3
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான் 1385-4
121. நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால் 1386-1
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர் 1386-2
பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப் 1386-3
பொங்கழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார் 1386-4
122. அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் 1387-1
தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைவித்தவன் தன்னைச் 1387-2
சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் 1387-3
கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுவது என்றார் 1387-4
123. ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித் 1388-1
தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப் 1388-2
பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில் 1388-3
வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான் 1388-4
124. அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்த 1389-1
வெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர் 1389-2
செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் 1389-3
பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பாதகர் 1389-4
125. அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் 1390-1
ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும் 1390-2
எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று 1390-3
செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார் 1390-4
126. சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி 1391-1
நல் தமிழ் மாலை ஆம் நமச்சிவாய என்று 1391-2
அற்ற முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு 1391-3
பற்றி உணர்வினால் பதிகம் பாடினார் 1391-4
127. பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் 1392-1
அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு 1392-2
அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக் 1392-3
கரு நெடுங்கடலின் உட் கல் மிதந்ததே 1392-4
128. அப் பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொளத் 1393-1
தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும் 1393-2
தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர் 1393-3
மெய்ப் பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார் 1393-4
129. இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் 1394-1
வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட 1394-2
அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல் 1394-3
ஒரு கல் மேல் ஏற்று இடல் உரைக்க வேண்டுமோ 1394-4
130. அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக் 1395-1
கருணை நாவரசினைத் திரைக் கரங்களால் 1395-2
தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட 1395-3
வருணனும் செய்தனன் முன்பு மா தவம் 1395-4
131. வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச் 1396-1
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட 1396-2
ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன் 1396-3
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில் 1396-4
132. அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை 1397-1
மெய்த் தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்தெழ 1397-2
எத் திசையைனும் அர என்னும் ஓசைபோல் 1397-3
தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே 1397-4
133. தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் 1398-1
செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண் 1398-2
கொழுந்து அணி சடையாரைக் கும்பிட்டு அன்புற 1398-3
விழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார் 1398-4
134. ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத் 1399-1
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்று 1399-2
வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும் 1399-3
சான்றாம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினாரே 1399-4
135. மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி 1400-1
வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால் 1400-2
உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள் 1400-3
செற்றவர் வாழும் திருவதிகைப் பதி சென்று அடைவார் 1400-4
136. தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும் 1401-1
மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப் 1401-2
பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள் மொழியின் 1401-3
காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார் 1401-4
137. வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம் 1402-1
எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள 1402-2
மஞ்சிவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம் 1402-3
தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார் 1402-4
138. மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலி 1403-1
இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும் 1403-2
தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் செஞ் சாந்து நீவி 1403-3
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் 1403-4
139. மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் 1404-1
இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப் 1404-2
பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும் 1404-3
தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே 1404-4
140. தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் 1405-1
நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப் 1405-2
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ் சொல் 1405-3
மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே 1405-4
141. கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால் 1406-1
மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம் 1406-2
உண்டாய்¢ன வண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் 1406-3
தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே 1406-4
142. இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த 1407-1
மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல 1407-2
அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச் 1407-3
செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே 1407-4
143. உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி 1408-1
நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே 1408-2
எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று 1408-3
தம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார் 1408-4
144. அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை 1409-1
விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத் 1409-2
தெரிவரிய பெரும் தன்மைத் திருநாவுக் கரசு மனம் 1409-3
பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள் 1409-4
145. புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும் 1410-1
பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய 1410-2
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து 1410-3
வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான் 1410-4
146. வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த 1411-1
காடவனும் திருவதிகை நகரின் கண் கண் நுதற்குப் 1411-2
பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் 1411-3
கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான் 1411-4
147. இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு 1412-1
மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல் 1412-2
பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச் 1412-3
சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார் 1412-4
148. திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும் 1413-1
அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா 1413-2
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப் 1413-3
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகிடம் அணைந்தார் 1413-4
149. கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும் 1414-1
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி 1414-2
வார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப் 1414-3
பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார் 1414-4
150. புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன் 1415-1
தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு 1415-2
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று 1415-3
பன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார் 1415-4
151. பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து 1416-1
முன் ஆகி எப் பொருட்கும் முடிவாகி நின்றானைத் 1416-2
தன் ஆகத்து உமை பாகம் கொண்டானைச் சங்கரனை 1416-3
நல் நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும் 1416-4
152. நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு கின்ற 1417-1
ஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம் 1417-2
மாடொருவர் அறியாமே வாகீசர் திருத் தோலில் 1417-3
சேடுயர் மூவிலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த 1417-4
153. ஆங்கவர் தம் திருத் தோளில் ஆர்ந்த திரு இலச்சினையைத் 1418-1
தாம் கண்டு மனம் களித்துத் தம் பெருமான் அருள் நினைந்து 1418-2
தூங்கருவி கண் பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால் 1418-3
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார் 1418-4
154. தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப் 1419-1
பாங்காகத் திருத் தொண்டு செய்து பயின்று அமரும் நாள் 1419-2
பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அரத் துறையும் 1419-3
தேங்காவின் முகில் உறங்கும் திருமுது குன்றமும் பணிந்து 1419-4
155. வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ள 1420-1
தண் துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவிடம் 1420-2
கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல் 1420-3
புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக் கரையே போதுவார் 1420-4
156. ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற 1421-1
வானாறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கி 1421-2
ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து 1421-3
தேனாரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார் 1421-4
157. நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை பால் 1422-1
மேவித் தலம் உற மெய்யில் தொழுத பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும் 1422-2
காவில் களி மயில் மகிழ் உற்று எதிர் எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ் 1422-3
வாவித் தடமலர் வதனம் பொலிவுறு மருதத் தண்பணை வழி வந்தார் 1422-4
158. முருகில் செறி இதழ் முளரிப் படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும் 1423-1
அருகில் செறிவனம் என மிக்குயர் கழை அளவில் பெருகிட வளர் இக்குப் 1423-2
பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிக் கண்டு 1423-3
உருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன என முன்புள வயல் எங்கும் 1423-4
159. அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் 1424-1
பிறவிப் பகை நெறி விடுவீர் இருவினை பெருகித் தொடர்பிணி உறுபாசம் 1424-2
பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் 1424-3
செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார் 1424-4
160. அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் 1425-1
தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம் 1425-2
இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே 1425-3
சிவ முன் பயில் மொழி பகர் கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை 1425-4
161. அஞ்சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் 1426-1
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாறச் 1426-2
செஞ்சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லைத் திரு நகர் எல்லைப்பால் மஞ்சில் 1426-3
பொலி நெடு மதில் சூழ் குடதிசை மணி வாயில் புறம் வந்துற்றார் 1426-4
162. அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர் கொள அவரோடும் 1427-1
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார் 1427-2
கல்வித் துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் 1427-3
செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை வளர் சிவமே நிலவிய திருவீதி 1427-4
163. நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திருவீதிப் 1428-1
புவனங்களின் முதல் இமையோர் தடமுடி பொருந்திய மணி போகட்டிப் 1428-2
பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று 1428-3
எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர்புனல் விடுவார்கள் 1428-4
164. மேலம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெங்கதிர் நுழைவது அரிதாகும் 1429-1
கோலம் பெருகிய திருவீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே 1429-2
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் 1429-3
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உறமெய் கொடு தொழுதுள்புக்கார் 1429-4
165. வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா 1430-1
அளவில் பெருகிய ஆர்வத்து இடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும் 1430-2
புளகச் செறி நிரை விரவத் திருமலி பொன் கோபுரம் அது புகுவார் முன் 1430-3
களனில் பொலிவிடம் உடையார் நடநவில் கனகப் பொது எதிர் கண்ணுற்றார் 1430-4
166. நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே 1431-1
கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெறவரு நிலை கூடத் 1431-2
தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா 1431-3
ஆடுங்கழல் புரி அமுதத் திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார் 1431-4
167. கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே 1432-1
பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின 1432-2
பேறு எய்தும் மெய்யும் தரைமிசை விழுமுன் பெழுதரும் மின்தாழ் சடையொடு 1432-3
ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் 1432-4
168. இத் தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் 1433-1
அத்தன் திரு அருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம் 1433-2
மெய்த் தன்மை யினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையும் மேல் மேலும் 1433-3
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார் 1433-4
169. பத்தனாய்ப் பாட மாட்டேன் என்று முன் எடுத்துப் பண்ணால் 1434-1
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று 1434-2
இத்திறம் போற்றி நின்றே இன் தமிழ் மாலைப் பாடி 1434-3
கைத் திருத் தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார் 1434-4
170. நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும் 1435-1
ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும் 1435-2
கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகிப் 1435-3
பாடிய புனித வாக்கின் பணிகளும் பயிலச் செய்வார் 1435-4
171. அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும் 1436-1
திருக் குறுந் தொகைகள் பாடித் திரு உழவாரங் கொண்டு 1436-2
பெருத்து எழு காதலோடும் பெரும் திருத் தொண்டு செய்து 1436-3
விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட 1436-4
172. மேவிய பணிகள் செய்து விளங்குநாள் வேட்களத்துச் 1437-1
சேவுயர் கொடியார் தம்மைச் சென்று முன் வணங்கிப் பாடிக் 1437-2
காவியம் கண்டார் மன்னும் திருக்கழிப் பாலை தன்னில் 1437-3
நாவினுக்கு அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ 1437-4
173. சின விடை யேறுகைத் தோறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து 1438-1
வன பவள வாய்திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று 1438-2
அனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி 1438-3
நினைவரியார் தமைப் போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார் 1438-4
174. மனைப் படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழிப் பாலை மழுங்கு நீங்கி 1439-1
நனைச்சினை மென் குளிஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் 1439-2
நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத் 1439-3
தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ எனப் பாடி தில்லை சார்ந்தார் 1439-4
175. அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை 1440-1
பிரியாத பெரிய திருத் தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி 1440-2
விரியா நின்று எவ் உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேலி ஆடல் 1440-3
புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார் 1440-4
176. செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை 1441-1
அருஞ்சொல் வளத் தமிழ் மாலை அதிசயமாம் படி பாடி அன்பு சூழ்ந்த 1441-2
நெஞ்சு உருகப் பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் 1441-3
தம் செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில் 1441-4
177. கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த கழு மலத்தின் இருந்த செம்கண் 1442-1
விடை உகைத்தார் திரு அருளால் வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும் 1442-2
அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த 1442-3
உடை மறைப் பிள்ளையார் திருவார்த்தை அடியார்கள் உரைப்பக் கேட்டார் 1442-4
178. ஆழிவிடம் உண்ட வரை அம்மை திருப்பால் அமுதம் உண்ட போதே 1443-1
ஏழ் இசை வண் தமிழ் மாலை இவன் எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல 1443-2
காழி வரும் பெரும் தகை சீர் கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர 1443-3
வாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த 1443-4
179. அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்றுப் 1444-1
பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி புரண்டு வலம் கொண்டு போந்தே 1444-2
எப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச் 1444-3
செப்பரிய பெருமையினார் திரு நாரையூர் பணிந்து பாடிச் செல்வார் 1444-4
180. தொண்டர் குழாம் புடை சூழத் தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம் 1445-1
கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத் 1445-2
தெண் திரைவாய்க் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் 1445-3
வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் 1445-4
181. நீண்ட வரை வில்லியார் வெஞ்சூலை மடுத்து அருளி நேரே முன்னாள் 1446-1
ஆண்ட அரசு எழுந்து அருளக் கேட்டருளி ஆளுடைய பிள்ளையாரும் 1446-2
காண்டகைய பெரு விருப்புக் கைம் மிக்க திரு உள்ளக் கருத்தினோடு 1446-3
மூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ எழுந்து அருளி முன்னே வந்தார் 1446-4
182. தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருகத் தொண்டர் குழாத்திடையே சென்று 1447-1
பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப் பணிந்தவர்தம் கரங்கள் பற்றி 1447-2
எழுதரிய மலர்க்கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்தம்மை 1447-3
அழுது அழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார் 1447-4
183. அம்பிகை செம் பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த 1448-1
செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு அரசர் எனச் சிறந்த சீர்த்தி 1448-2
எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி 1448-3
உம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம் பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம் 1448-4
184. பிள்ளையார் கழல் வணங்கப் பெற்றேன் என்று அரசு உவப்பப் பெருகு ஞான 1449-1
வள்ளலார் வாகீசர் தமை வணங்கப் பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க 1449-2
உள்ளம் நிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மை யோடும் 1449-3
வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் 1449-4
185. அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் 1450-1
பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய 1450-2
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித் 1450-3
தெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே 1450-4
186. பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழிப் பரமர் திருக் கோபுரத்தைப் பணிந்துள்புக்கு 1451-1
விண் பணிய ஓங்கு பெரு விமானம் தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச் 1451-2
சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக் 1451-3
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி 1451-4
187. பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்று 1452-1
பரிவுறு செந்தமிழ் மாலை பத்தி யோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி 1452-2
அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து 1452-3
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் 1452-4
188. அத்தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு இலாத 1453-1
சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில் 1453-2
மைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற 1453-3
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் 1453-4
189. ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக் காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு 1454-1
மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான 1454-2
நீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடு திருக் குறுக்கை திரு நின்றி யூரும் 1454-3
காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் 1454-4
190. மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளிபாடிக் 1455-1
காவுயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக் கரைத் துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி 1455-2
பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே 1455-3
ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து பணைந்து ஆவடு தண் துறையைச் சார்ந்தார் 1455-4
191. ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திருத் தாண்டகம் முன்அருளிச் செய்து 1456-1
மேவு திருக் குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு 1456-2
பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித் தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் 1456-3
பூ வயலத்தவர் பரவப் பல நாள் தங்கிப் புரிஉறு கைத் தொண்டு போற்றிச் செய்வார் 1456-4
192. எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி இடை மருதைச் சென்று எய்திஅன்பினோடு 1457-1
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப் 1457-2
பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப் போற்றி அரும் தமிழ் மாலை புனைந்துபோந்து 1457-3
செறி விரை நன்மலர்ச் சோலைப் பழையாறு எய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார் 1457-4
193. சென்று சேர்ந்து திருச் சத்தி முற்றத்து இருந்த சிவக் கொழுந்தை 1458-1
குன்ற மகள் தன் மனக் காதல் குலவும் பூசை கொண்டு அருளும் 1458-2
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் 1458-3
முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார் 1458-4
194. கோவாய் முடுகி என்று எடுத்துக் கூற்றம் வந்து குமைப்பதன் முன் 1459-1
பூவார் அடிகள் என்று அலைமேல் பொறித்து வைப்பாய் எனப் புகன்று 1459-2
நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில் 1459-3
வா வா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர் 1459-4
195. நன்மை பெருகஅருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின் 1460-1
மன்னு திருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் 1460-2
உன்னுடைய நினைப்பதனை முடிகின்றோம் என்று அவர்தம் 1460-3
சென்னி மிசைப் பாத மலர் சூட்டினான் சிவபெருமான் 1460-4
196. நனைந்தனைய திருவடி என்தலைமேல் வைத்தார் என்று 1461-1
புனையும் திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்துப் புனிதர் அருள் 1461-2
நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத 1461-3
தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார் 1461-4
197. நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால் 1462-1
மேவுற்ற திருப் பணிகள் மேவுற நாளும் செய்து 1462-2
பாவுற்ற தமிழ் மாலை பாடிப் பணிந்து ஏத்தித் 1462-3
தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லு நாள் 1462-4
198. கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்து அருளும் 1463-1
திருவாவூர் திருப் பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சிப் 1463-2
பெருகு ஆர்வத் திருத் தொண்டு செய்து பெருந்திரு நல்லூர் 1463-3
ஒரு காலும் பிரியாதே உள் உருகிப் பணிகின்றார் 1463-4
199. ஆளுடைய நாயகன் தன் அருள் பெற்று அங்கு அகன்று போய் 1464-1
வாளை பாய் புனல் பழனத் திருப் பழனம் மருங்கு அணைந்து 1464-2
காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன் பூண்டு 1464-3
நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார் 1464-4
200. அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும் 1465-1
ஒப்பரிய தானங்கள் உள் உருகிப் பணிந்தணைவார் 1465-2
மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார் 1465-3
செப்பருஞ்சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர் 1465-4
201. அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார் 1466-1
தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப் 1466-2
பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை 1466-3
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண 1466-4
202. மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் 1467-1
சுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக் 1467-2
கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப் 1467-3
பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார் 1467-4
203. காண்டகைமை இன்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார் 1468-1
பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும் 1468-2
வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால் 1468-3
ஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து 1468-4
204. திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம் 1469-1
பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்பு 1469-2
தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக் 1469-3
குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார் 1469-4
205. ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே 1470-1
பூங் கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம் 1470-2
தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள 1470-3
ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான் 1470-4
206. தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத் 1471-1
தாயகரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம் 1471-2
மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம் 1471-3
தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார் 1471-4
207. தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி 1472-1
எம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச 1472-2
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் 1472-3
நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார் 1472-4
208. அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க் 1473-1
கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே 1473-2
ஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப் 1473-3
பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான் 1473-4
209. அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது 1474-1
இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க 1474-2
வருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர் 1474-3
விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள் 1474-4
210. திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப் 1475-1
பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்து 1475-2
தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து 1475-3
பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார் 1475-4
211. புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ் 1476-1
அடை மாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள் தமை 1476-2
நடைமாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின் 1476-3
தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார் 1476-4
212. எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும் 1477-1
தொழும்பணி மேற் கொண்டு அருளி திருச்சோற்றுத் துறை முதலாத் 1477-2
தழும்புறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பல பாடிச் 1477-3
செம்பழனத்து இறை கோயில் திருத் தொண்டு செய்து இருந்தார் 1477-4
213. சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த 1478-1
ஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்து 1478-2
சேலுலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்று 1478-3
கோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார் 1478-4
214. அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது 1479-1
பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப் பணி செயும் நாள் 1479-2
தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு 1479-3
செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார் 1479-4
215. நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறை 1480-1
பல்லூர் வெண்டலைக் கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து 1480-2
சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ் சுழியைத் தொழுது ஏத்தி 1480-3
அல்லூர் வெண் பிறை அணிந்தார் திருக் குடமூக்கு அணைந்து இறைஞ்சி 1480-4
216. நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர் 1481-1
பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி 1481-2
மேலூர்தி விடைக் கொடியார் மேவும் இடம் பல பாடிக் 1481-3
சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திரு வாஞ்சியம் அணைந்தார் 1481-4
217. பெருவாச மலர்ச் சோலைப் பெரு வேளூர் பணிந்து ஏத்தி 1482-1
முருகாரும் மலர்க் கொன்றை முதல்வனார் பதி பிறவும் 1482-2
திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர் 1482-3
மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார் 1482-4
218. ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம் 1483-1
நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார் 1483-2
காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும் 1483-3
சேண் திகழ் வீதிகள் பொலியத் திரு மலி மங்கலம் செய்தார் 1483-4
219. வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் 1484-1
கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால் 1484-2
எல்லையில் தொண்டர் எயில்புறம் சென்று எதிர் கொண்டபோது 1484-3
சொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரைசெய்து அணைவார் 1484-4
220. பற்று ஒன்று இலாவரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால் 1485-1
உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன் பெறல் ஆவது ஒன்றே 1485-2
புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் என்று 1485-3
அற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள் அணைந்தார் 1485-4
221. சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி 1486-1
வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி 1486-2
ஆழி வரைத் திரு மாளிகை வாயில் அவை புகுந்து 1486-3
நீள் சுடர் மா மணிப் புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார் 1486-4
222. கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம் 1487-1
கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூரக் கண்கள் 1487-2
தண்துளி மாரி பொழியத் திரு மூலட்டானர் தம்மைப் 1487-3
புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து 1487-4
223. காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப் பதிகம் 1488-1
தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி 1488-2
ஈண்டு மணிக் கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு 1488-3
பூண்ட மனத்தொடு நீள் திருவாயில் புறத்து அணைந்தார் 1488-4
224. செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து 1489-1
கொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரைக் 1489-2
கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன் என்று 1489-3
எய்து அரிய கை யறவால் திருப்பதிகம் அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே 1489-4
225. மார் பாரப் பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுரவாக்கில் 1490-1
சேர் வாகும் திருவாயில் தீம் தமிழின் மாலைகளும் செம் பொன் தாளே 1490-2
சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப் 1490-3
பார் வாழத் திரு வீதிப் பணி செய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார் 1490-4
226. நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப் புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக் 1491-1
கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப் 1491-2
பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி 1491-3
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார் 1491-4
227. நான் மறைநூல் பெருமை நமி நந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை 1492-1
பான்மை நிலையால் அவரைப் பரமர் திருவிருத்ததுள் வைத்துப் பாடி 1492-2
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மை 1492-3
ஆன திறமும் போற்றி அணி வீதிப் பணி செய்து அங்கு அமரும் நாளில் 1492-4
228. நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும் நினைந்து சென்று 1493-1
வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக் 1493-2
கார் ஆரும் கறைக் கண்டர் கீழ் வேளுர் கன்றாப் பூர் கலந்து பாடி 1493-3
ஆராத காதலினால் திருவாரூர் தனில் மீண்டும் அணைந்தார் அன்றே 1493-4
229. மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப் பெருமாள் பவனி தன்னில் 1494-1
தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து 1494-2
மூவுலகும் களி கூர வரும் பெருமை முறைமை யெலாம் கண்டு போற்றி 1494-3
நாவினுக்குத் தனி அரசர் நயக்கு நாள் நம்பர் திரு அருளினாலே 1494-4
230. திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் 1495-1
விருப்புடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர 1495-2
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப் 1495-3
பொருப்பரையன் மடப் பாவை இடப் பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார் 1495-4
231. அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன் கண் நின்றும் 1496-1
பன்னாகப் பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார் 1496-2
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்தி 1496-3
மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை 1496-4
232. ஆண்ட அரசு எழுந்து அருளி அணி ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும் 1497-1
நீண்ட சுடர் மா மணியைக் கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி 1497-2
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பி னோடும் 1497-3
ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை சூழ எழுந்து அருளி எதிரே சென்றார் 1497-4
233. கரண்டமலி தடம் பொய்கைக் காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு 1498-1
வரன்று மணிப் புனற்புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் 1498-2
திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில் 1498-3
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி அணைந்த போல் இசைந்த அன்றே 1498-4
234. திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மை 1499-1
பெரு ஞான சம்பந்தப் பிள்ளையார் எதிர் வணங்கி அப்பரே நீர் 1499-2
வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற 1499-3
அரு நாமத்து அஞ்செழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளிச் செய்தார் 1499-4
235. சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும் 1500-1
மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் 1500-2
இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார் 1500-3
முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை 1500-4
236. அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பை 1501-1
மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும் 1501-2
கொய்ம் மலர் வாவித் தென் திரு ஆரூர் கும்பிட்டே 1501-3
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார் 1501-4
237. மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச் செந் 1502-1
தாமரை ஓடைச் சண்பையர் நாதன் தான் ஏக 1502-2
நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார் 1502-3
பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில் 1502-4
238. அத் திரு மூதூர் மேவிய நாவுக் கரசுந்தம் 1503-1
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம் 1503-2
மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுதாரப் 1503-3
பைத் தலை நாகப் பூண் அணிவாரைப் பணி உற்றார் 1503-4
239. தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப் 1504-1
பா இயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடு 1504-2
மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே 1504-3
ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார் 1504-4
240. சீர் தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறு 1505-1
ஆர் தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி 1505-2
வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல் 1505-3
ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார் 1505-4
241. அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும் 1506-1
துப்பு உறழ் வேணிக் கண் நுதலாரைத் தொழுது இப்பால் 1506-2
மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்து எங்கள் 1506-3
பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில் 1506-4
242. பிள்ளையார் எழுந்து அருளப் பெரு விருப்பால் வாகீசர் 1507-1
உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்கண் 1507-2
வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று அவர் பால் எழுந்து அருள 1507-3
எள் அரும் சீர் நீல நக்கர் தாமும் எழுந்து அருளினார் 1507-4
243. ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம் 1508-1
ஓங்கு புகழ் முருகனார் திரு மடத்தில் உடனாகப் 1508-2
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை 1508-3
நீங்கரிய திருத் தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார் 1508-4
244. திருப் பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்றுப் 1509-1
பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகர் பொன் தாளில் 1509-2
விருப்பு உடைய திருத் தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு 1509-3
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார் 1509-4
245. அந் நாளில் தமக்கு ஏற்ற திருத் தொண்டின் நெறி ஆற்ற 1510-1
மின்னார் செஞ்சடை அண்ணல் மேவும் பதி எனைப் பலவும் 1510-2
முன்னாகச் சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்குப் 1510-3
பொன்னாரும் மணி மாடப் பூம் புகலூர் தொழுது அகன்றார் 1510-4
246. திரு நீல நக்க அடிகள் சிறுத்தொண்டர் முருகனார் 1511-1
பெருநீர்மை அடியார்கள் பிறரும் விடை கொண்டு ஏக 1511-2
ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும் 1511-3
வரும் சீர் செஞ்சடைக் கரந்தார் திரு அம்பர் வணங்கினார் 1511-4
247. செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்து அருளிப் 1512-1
பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்திக் 1512-2
குங்குலியக் கலயனார் திருமத்தில் குறை அறுப்ப 1512-3
அங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள் 1512-4
248. சீர் மன்னும் திருக் கடவூர்த் திருமயானமும் வணங்கி 1513-1
ஏர் மன்னும் இன்னிசைப்பாப் பல பாடி இனிது அமர்ந்து 1513-2
கார் மன்னும் கறைக் கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று 1513-3
தேர் மன்னும் மணி வீதித் திரு ஆக்கூர் சென்று அணைந்தார் 1513-4
249. சார்ந்தார் தம் புகல் இடத்தைத் தான் தோன்றி மாடத்துக் 1514-1
கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து கோதில் தமிழ்த்தொடை புனைந்து 1514-2
வார்த்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி உடன் 1514-3
சேர்ந்தார்கள் தம் பெருமான் திரு வீழி மிழலையினை 1514-4
250. வீழி மிழலை வந்து அணைய மேவும் நாவுக்கு அரசினையும் 1515-1
காழி ஞானப் பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலினால் 1515-2
ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன் 1515-3
வாழி மறையோர் எதிர் கொண்டு வணங்க வணங்கி உள்புக்கார் 1515-4
251. மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு 1516-1
நீடு கதலி தழைப் பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்துப் 1516-2
பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும் 1516-3
கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார் 1516-4
252. சென்று உள் புகுந்து திருவீழி மிழலை அமர்ந்த செங்கனகக் 1517-1
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு 1517-2
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி 1517-3
வென்றி விடையார் சேவடிக் கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார் 1517-4
253. கைகள் குவித்துக் கழல் போற்றிக் கலந்த அன்பு கரைந்து உருக 1518-1
மெய்யில் வழியும் கண் அருவி விரவப் பரவும் சொல் மாலை 1518-2
செய்ய சடையார் தமைச் சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று 1518-3
உய்யும் நெறித் தாண்ட தம் மொழிந்து அங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க 1518-4
254. முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத 1519-1
பொன்னார் மேனி மணி வெற்பைப் பூ நீர் மிழலையினில் போற்றிப் 1519-2
பல் நாள் பிரியா நிலைமையினால் பயிலக் கும்பிட்டு இருப்பாராய் 1519-3
அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள் 1519-4
255. சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின் 1520-1
மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும் 1520-2
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம் 1520-3
பாரின் மலிந்த இலம் பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால் 1520-4
256. வையம் எங்கும் வற்கடம் ஆய்ச் செல்ல உலகோர் வருத்தமுற 1521-1
நையும் நாளில் பிள்ளையார் தமக்கும் நாவுக்கு அரசருக்கும் 1521-2
கையில் மானும் மழுவும் உடன் காணக் கனவில் எழுந்து அருளிச் 1521-3
செய்ய சடையார் திருவீழி மிழலை உடையார் அருள் செய்வார் 1521-4
257. கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும் 1522-1
ஏல உம்மை வழி படுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று 1522-2
கோலம் காண எழுந்து அருளிக் குலவும் பெருமை இருவர்க்கும் 1522-3
ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார் 1522-4
258. விண்ணின் நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில் 1523-1
அண்ணல் புகலி ஆண் தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் 1523-2
நண்ணும் நாள்கள் தொறும் காசு படிவைத்து அருள நானிலத்தில் 1523-3
எண்ணில் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும் 1523-4
259. அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு 1524-1
பல்லாறு இயன்ற வளம் பெருகப் பரமன் அடியார் ஆனார்கள் 1524-2
எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு பொழுதும் பறை நிகழ்த்திச் 1524-3
சொல்லால் சாற்றிச் சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார் 1524-4
260. ஈசர் மிழலை இறையவர் பால் இமையப் பாவை திருமுலைப் பால் 1525-1
தேசம் உய்ய உண்டவர் தாம் திருமா மகனார் ஆதலினால் 1525-2
காசு வாசியுடன் பெற்றார் கைத் தொண்டு ஆகும் படிமையினால் 1525-3
வாசி இல்லாக் காசு படி பெற்று வந்தார் வாகீசர் 1525-4
261. ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படிக் காசால் 1526-1
ஈறு இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள் 1526-2
சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ண உண்ணத் தொலையாதே 1526-3
ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அந் நாளில் 1526-4
262. காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி வான் பொழிந்த புனல் கலந்து 1527-1
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப 1527-2
மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி 1527-3
நீல கண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார் 1527-4
263. வாய்ந்த மிழலை மா மணியை வணங்கிப் பிரியா விடை கொண்டு 1528-1
பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப் போற்றிப் புனிதர் வாழ்பதிகள் 1528-2
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய்ச் 1528-3
சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு எல்லை இல்லாச் சீர்த்தியினார் 1528-4
264. மன்றல் விரவு மலர்ப் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின் 1529-1
முன்றில் தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக் 1529-2
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம் கொண்டு 1529-3
சென்று சேர்ந்தார் தென் புகலிக் கோவும் அரசும் திரு முன்பு 1529-4
265. பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு நெருங்கும் அப் பதியில் 1530-1
அரவச் சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து 1530-2
உரவக் கதவம் திருக் காப்புச் செய்த அந்நாள் முதல் இந்நாள் 1530-3
வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார் 1530-4
266. தொல்லை வேதம் திருக் காப்புச் செய்த வாயில் தொடர் அகற்ற 1531-1
வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி 1531-2
அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு 1531-3
எல்லை இல்லாப் பெரும் புகழார் இதனை அங்குக் கேட்டு அறிந்தார் 1531-4
267. ஆங்கு அப் பரிசை அறிந்து அருளி ஆழித் தோணி புரத்து அரசர் 1532-1
ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்குத் 1532-2
தேம்கா திருவோம் நேர் இறைஞ்சத் திருமுன் கதவம் திருக்காப்பு 1532-3
நீங்கப் பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கு அரசர் 1532-4
268. உண்ணீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே 1533-1
பண்ணினேரு மொழியாள் என்று எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான் 1533-2
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு 1533-3
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும் 1533-4
269. வேத வளத்தின் மெய்ப் பொருளின் அருளால் விளங்கும் மணிக் கதவம் 1534-1
காதல் அன்பர் முன்பு திருக் காப்பு நீங்கக் கலை மொழிக்கு 1534-2
நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள் 1534-3
ஓத ஒலியின் மிக்கு எழுந்த தும்பர் ஆர்ப்பும் மறை ஒலியும் 1534-4
270. அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவக் கன்றும் 1535-1
இன்ப வெள்ளத்து இடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான் 1535-2
முன்பு பணிந்து போற்றி இசைத்துப் பரவி மொழி மாலைகள் பாடி 1535-3
என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார் 1535-4
271. புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இக் கதவம் 1536-1
திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திருமுலையில் 1536-2
கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலிக் கவுணியரை 1536-3
நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என 1536-4
272. சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திரு நாவுக்கரசர் 1537-1
பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில் 1537-2
கண் பொற்பமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிதுடனே 1537-3
திண் பொன் கதவம் திருக் காப்புச் செய்து எடுத்த திருப் பாட்டில் 1537-4
273. அது கண்டு உடைய பிள்ளையார் தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து 1538-1
இது நம் பெருமான் அருள் செய்யப் பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் 1538-2
பதிகம் நிரம்பப் பிள்ளையார் பாடித் தொழுது பணிவு உற்றார் 1538-3
எதிர் பொன் திருவாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல் 1538-4
274. அங்கு நிகழ்ந்த அச் செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்துப் 1539-1
பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய 1539-2
எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார் 1539-3
நங்கள் புகலிப் பெரும் தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின் 1539-4
275. அரிதில் திறக்கத் தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை 1540-1
கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் எனக் கவன்று 1540-2
பெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ் கணித்து 1540-3
மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர் 1540-4
276. மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண் 1541-1
உன்னித் துயிலும் பொழுதின் கண் உமை ஓர் பாகம் உடையவர் தாம் 1541-2
பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோலப் பொலிவினொடும் 1541-3
துன்னி அவர்க்கு வாய் மூரில் இருப்போம் தொடர வா என்றார் 1541-4
277. போதம் நிகழ வா என்று போனார் என் கொல் எனப் பாடி 1542-1
ஈது எம்பெருமான் அருளாகில் யானும் போவேன் என்று எழுந்து 1542-2
வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே 1542-3
ஆதி மூர்த்தி முன் காட்டும் அவ் வேடத்தால் எழுந்து அருள 1542-4
278. சீரார் பதியின் நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கு அரசர் 1543-1
ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண எய்தா வாறே போல் 1543-2
நீரார் சடையார் எழுந்து அருள நெடிது பின்பு செல்லும் அவர் 1543-3
பேராளரை முன் தொடர்ந்து அணையப் பெறுவார் எய்தப் பெற்று இலரால் 1543-4
279. அன்ன வண்ணம் எழுந்து அருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல் 1544-1
பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதனுள் புக்கு அருளத் 1544-2
துன்னும் தொண்டர் அம் மருங்கு விரைந்து தொடரப் போந்த படி 1544-3
மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார் 1544-4
280. அழைத்துக் கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து 1545-1
பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித் தேனுக்கே அல்லால் 1545-2
உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த 1545-3
தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என 1545-4
281. மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும் 1546-1
நேடி இன்னங் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள 1546-2
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காணக் காட்டுதலும் 1546-3
பாட அடியார் என்று எடுத்துப் பரமர் தம்மைப் பாடினார் 1546-4
282. பாடும் தமிழ் மாலைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்து அருள 1547-1
நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து 1547-2
சூடும் பிறையார் பெரும் தொண்டர் தொழுது போற்றித் துதி செய்து 1547-3
நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அந் நகரில் உடன் உறைந்தார் 1547-4
283. ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே அங்கண் இனிது அமர்ந்து 1548-1
பூண்ட காதல் பொங்கி எழ வாய் மூர் அடிகள் போற்றி 1548-2
மூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவர் ஒடு 1548-3
மீண்டு வந்து திருமறைக் காடு எய்தி விமலர் தாள் பணிந்தார் 1548-4
284. ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள் 1549-1
சீத மதி வெண் குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம் 1549-2
கோதில் குணத்துப் பாண்டி மா தேவியார் முன் குலச்சிறையார் 1549-3
போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர் தமைக் காண 1549-4
285. வந்து சிவனார் திருமறைக் காடு எய்தி மன்னு வேணுபுரி 1550-1
அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர் பால் எய்தி அடி வணங்க 1550-2
சிந்தை மகிழ்ந்து தீது இன்மை வனவத் தீங்கும் உளவாமோ 1550-3
இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார் 1550-4
286. சைவ நெறி வைதிகம் நிற்கச் சழக்கு நெறியைத் தவம் என்னும் 1551-1
பொய் வல் அமணர் செயல் தன்னைப் பொறுக்க கில்லோம் எனக் கேட்டே 1551-2
அவ் வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்கத் 1551-3
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பைத் திரு மறையோர் 1551-4
287. ஆய பொழுது திரு நாவுக்கரசு புகலி ஆண் தகைக்குக் 1552-1
காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடுவினை செய் 1552-2
மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த 1552-3
தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார் 1552-4
288. என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும் 1553-1
சென்று காணும் கருத்து உடையேன் அங்குத் தீங்கு புரி அமணர் 1553-2
நின்ற நிலைமை அழிவித்துச் சைவ நெறி பாரித்து அன்றி 1553-3
ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடைய பிள்ளையார் 1553-4
289. போமா துணிந்து நீர் அங்குப் போகப் போதா அவ் அமணர் 1554-1
தீ மாயையினை யானே போய்ச் சிதைத்து வருகின்றேன் என்ன 1554-2
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டது அரசு இருப்பத் 1554-3
தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞானத் தலைவனார் 1554-4
290. வேணு புரக்கோன் எழுந்து அருள விடைகொண்டு இருந்த வாகீசர் 1555-1
பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர் தம்மைப் போற்றி இசைத்துப் 1555-2
பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர் 1555-3
தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார் 1555-4
291. சோலை மறைக் காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் 1556-1
வேலை விடம் உண்டவர் வீழி மிழலை மீண்டும் செல்வன் என 1556-2
ஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம் பிறவும் தாம் பணிந்து 1556-3
சாலு மொழி வண் தமிழ்ப் பாடித் தலைவர் மிழலை வந்து அடைந்தார் 1556-4
292. வீழி மிழலை தனிப் பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப 1557-1
ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின் நின்று இழிந்த 1557-2
வாழி மலர்ந்த கோயில்தனில் மன்னும் பொருளை போற்றிசைத்துத் 1557-3
தாழும் நாளில் பிறபதியும் பணியும் காதல் தலை நிற்பார் 1557-4
293. பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்த 1558-1
ஆவுக்கு அருளும் ஆவடு தண் துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி 1558-2
நாவுக் கரசர் ஞானப் போன கர்க்குச் செம் பொன் ஆயிரமும் 1558-3
பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து பிறவும் பணிகின்றார் 1558-4
294. செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில் 1559-1
மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரைக் 1559-2
கைகள் கூப்பித் தொழுது அருளக் கண்டவாற்றால் அமணர்கள் தம் 1559-3
பொய் கொள் விமானம் எனக் கேட்டுப் பொறாத உள்ளம் மிகப் புழுங்கி 1559-4
295. அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக் 1560-1
கந்தம் மலரும் கடிக் கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி 1560-2
மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப் 1560-3
பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார் 1560-4
296. வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகேன் என்று 1561-1
எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே 1561-2
அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத் 1561-3
திண்ணமாக மன்னனுக்குக் கனவில் அருளிச் செய்கின்றார் 1561-4
297. அறிவில் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாளக் 1562-1
குறிகள் அறியச் செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான் 1562-2
நெறியில் அமணர் தமை அழித்து நீக்கிப் போக்கு என்று அருள் புரிய 1562-3
செறிவில் அறிவுற்று எழுந்து அவனும் செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி 1562-4
298. கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக் கூடக் கடிது எய்தி 1563-1
அண்டர் பெருமான் அருள் செய்த அடையாளத்தின் வழி கண்டு 1563-2
குண்டர் செய்த வஞ்சணையைக் குறித்து வேந்தன் குலவு பெரும் 1563-3
தொண்டர் தம்மை அடி வணங்கித் தொக்க அமணர் தூர் அறுத்தான் 1563-4
299. ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்தற் பின் 1564-1
மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கியபின் 1564-2
ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச 1564-3
ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார் 1564-4
300. தலையின் மயிரைப் பறித்து உண்ணூம் சாதி அமணர் மறைத்தாலும் 1565-1
நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும் 1565-2
விலை இல் வாய்மைக்குறும் தொகைகள் விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே 1565-3
இலை கொள் சூலப் படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார் 1565-4
301. பொங்கு புனலார் பொன்னியில் இரண்டு கரையும் பொருவிடையார் 1566-1
தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித் தமிழ் மாலைகளும் சாத்திப் போய் 1566-2
எங்கும் நிறைந்த புகழ் ஆளர் ஈறில் தொண்டர் எதிர் கொள்ளச் 1566-3
செங்கண் விடையார் திருவானைக் காவின் மருங்கு சென்று அணைந்தார் 1566-4
302. சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் செஞ்சொல் மாலை பல பாடி 1567-1
இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடியபின் 1567-2
சோதித் திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும் 1567-3
நலம் கொள் செல்வத் திருப்பராய்த் துறையும் தொழுவான் நண்ணினார் 1567-4
303. மற்றப் பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கை தொழுது 1568-1
பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி 1568-2
உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரியச் 1568-3
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினைச் சென்று சேர்கின்றார் 1568-4
304. வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தம் உற நீர் வேட்கையொடும் 1569-1
அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்குச் சித்தம் அலையாதே 1569-2
மொழி வேந்தரும் முன் எழுந்து அருள முருகு ஆர் சோலைப் பைஞ்ஞீலி 1569-3
விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய் 1569-4
305. காவும் குளமும் முன் சமைத்துக் காட்டி வழி போம் கருத்தினால் 1570-1
மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு 1570-2
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல் 1570-3
தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு அரியவர் தாம் 1570-4
306. அங்கண் இருந்த மறையவர் பால் ஆண்ட அரசும் எழுந்து அருள 1571-1
வெங்கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர் 1571-2
இங்கு என் பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இப் 1571-3
பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப் போக்கிப் போவீர் எனப் புகன்றார் 1571-4
307. நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல் 1572-1
உண்ணும் என்று திருமறையோர் உரைத்துப் பொதி சோறு அளித்தலுமே 1572-2
எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய 1572-3
தண்ணீர் அமுது செய்து அருளித் தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார் 1572-4
308. எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார் 1573-1
அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே 1573-2
செப்புவார் யான் திருப்பைஞ் ஞீலிக்குப் போவ என்று உரைப்ப 1573-3
ஒப்பு இலாரும் யான் அங்குப் போகின்றேன் என்று உடன் போந்தார் 1573-4
309. கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட 1574-1
வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர் தாம் 1574-2
ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளாய் அளித்த கருணை எனப் 1574-3
பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரிபயில் வித்தார் 1574-4
310. பைஞ் ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி 1575-1
மைஞ் ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து 1575-2
மெய்ஞ் ஞீலிர் மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள் பாடிக் 1575-3
கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார் 1575-4
311. நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும் 1576-1
காதல் கூரச் சென்று இறைஞ்சிக் கலந்த இசை வண் தமிழ் பாடி 1576-2
மாதோர் பாகர் அருளாலே வடபால் நோக்கி வாகீசர் 1576-3
ஆதி தேவர் அமர்ந்த திரு அண்ணாமலையை நண்ணினார் 1576-4
312. செங்கண் விடையார் திரு அண்ணா மலையைத் தொழுது வலம் கொண்டு 1577-1
துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர் நிற்கும் 1577-2
அங்கண் அரசைத் தொழுது எழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர் 1577-3
தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் 1577-4
313. அண்ணாமலை மலை மேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர் தம் 1578-1
கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக் கடலில் வந்து எழுந்த 1578-2
உண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட்டு உருகும் சிந்தை உடன் 1578-3
பண்ணார் பதிகத் தமிழ் பாடிப் பணிந்து பரவிப் பணி செய்தார் 1578-4
314. பணியார் வேணிச் சிவ பெருமான் பாதம் போற்றிப் பணி செயும் நாள் 1579-1
மணியார் கண்டத்து எம் பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும் 1579-2
தணியாக் காதலுடன் சென்று வணங்கித் தக்க பணி செய்வார் 1579-3
அணியார் தொண்டைத் திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார் 1579-4
315. காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான் ஆறும் 1580-1
சூதமலி தண் பணைப் பதிகன் பலவும் கடந்து சொல்லிக்கு 1580-2
நாதர் போந்து பெரும் தொண்டை நன்னாடு எய்தி முன் ஆகச் 1580-3
சீத மலர் மென் சோலை சூழ் திரு ஒத்தூரில் சென்று அடைந்தார் 1580-4
316. செக்கர் சடையார் திரு ஒத்துத்தூர் தேவர் பிரானார் தம் கோயில் 1581-1
புக்கு வலம் கொண்டு எதிர் இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல் பொழிய 1581-2
முக் கண் பிரானை விரும்பும் மொழித் திருத் தாண்டகங்கள் முதலாகத் 1581-3
தக்க மொழி மாலைகள் சாத்திச் சார்ந்து பணி செய்து ஒழுகுவார் 1581-4
317. செய்ய ஐயர் திரு ஒத்தூர் ஏத்திப் போந்து செழும் புவனம் 1582-1
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கித் 1582-2
தையல் தழுவக் குழைந்த பிரான் தங்கும் தெய்வப் பதி என்று 1582-3
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் 1582-4
318. ஞாலம் உய்யத் திருவதிகை நம்பர் தம் பேர் அருளினால் 1583-1
சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று 1583-2
காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம் 1583-3
சால மலர்ந்து களி சிறப்பத் தழைத்த மனங்கள் தாங்குவார் 1583-4
319. மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள் 1584-1
நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொற்குடம் தீபம் 1584-2
தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும் 1584-3
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணிந்£ள் காஞ்சி அலங்கரித்தார் 1584-4
320. தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர் பால் 1585-1
கொண்ட வேடப் பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும் 1585-2
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி 1585-3
இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர் தம்மை எதிர் கொண்டார் 1585-4
321. எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார் தம்மை இறைஞ்சி எழுந்து அருளி 1586-1
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வானநதி 1586-2
குதி கொண்டு இழிந்த சடைக் கம்பர் செம் பொன் கோயில் குறுகினார் 1586-3
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர் 1586-4
322. திரு வாயிலினைப் பணிந்து எழுந்து செல்வத் திரு முன்றிலை அணைந்து 1587-1
கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து 1587-2
வருவார் செம் பொன் மலை வல்லி தழுவக் குழைந்த மணி மேனிப் 1587-3
பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சிப் பேரா அன்பு பெருக்கினார் 1587-4
323. வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க் கால் தோறும் வரும் புளகம் 1588-1
ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்பச் 1588-2
சேர்ந்த நயனப் பயன் பெற்றுத் திளைப்பத் திருவேகம்பர் தமை 1588-3
நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார் 1588-4
324. கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப் 1589-1
பரவாய சொல் மாலைத் திருப் பதிகம் பாடிய பின் 1589-2
விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின் 1589-3
அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார் 1589-4
325. கையார்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும் 1590-1
செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி 1590-2
மையார்ந்த மிடற்றர் திரு மயானத்தை வலம் கொண்டு 1590-3
மெய்யார்வம் உறத் தொழுது விருப்பினோடு மேவு நாள் 1590-4
326. சீர் வளரும் மதில் கச்சி நகர்த் திரு மேல் தளி முதலாம் 1591-1
நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள் 1591-2
ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால் 1591-3
சார்வுறு மாலைகள் சாத்தித் தகும் தொண்டு செய்திருந்தார் 1591-4
327. அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து உறையும் நாளின் கண் 1592-1
மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச் 1592-2
சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சித் 1592-3
துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்த பெரும் காதலினால் 1592-4
328. ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப் 1593-1
பாகம் பெண் உருவானைப் பைங் கண் விடை உயர்த்தானை 1593-2
நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின் 1593-3
ஆகந்தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார் 1593-4
329. திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தித் திங்களார் 1594-1
நெருக்கச் செஞ்சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார் 1594-2
வருக்கைச் செஞ்சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டு இடை போய்ப் 1594-3
பருக்கைத் திண் களிற்று உரியார் கழுக் குன்றின் பாங்கு அணைந்தார் 1594-4
330. நீடு திருக் கழுக் குன்றில் நிருத்தனார் கழல் வணங்கிப் 1595-1
பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும் 1595-2
சூடும் இனம் பிறை முடியார் தமைத் தொழுது போற்றிப் போய் 1595-3
மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார் 1595-4
331. திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து பணிந்த அன்பினொடும் 1596-1
பெரு வாய்மைத் தமிழ்பாடி அம் மருங்கு பிறப்பு அறுத்துத் 1596-2
தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர் 1596-3
மருவாரும் மலர்ச் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார் 1596-4
332. வரை வளர் மா மயில் என்ன மாடமிசை மஞ்சாடும் 1597-1
தரை வளர் சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள் வணங்கி 1597-2
உரை வளர் மாலைகள் அணிவித்து உழவாரப் படை ஆளி 1597-3
திரை வளர் வேலைக் கரை போய் திரு ஒற்றியூர் சேர்ந்தார் 1597-4
333. ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி 1598-1
நற்கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டிப் 1598-2
பொற்குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து 1598-3
மற்றவரை எதிர் கொண்டு கொடு புக்கார் வழித் தொண்டர் 1598-4
334. திரு நாவுக் கரசரும் அத் திரு ஒற்றியூர் அமர்ந்த 1599-1
பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப் புக்கு 1599-2
ஒரு ஞானத் தொண்டர் உடன் உருகி வலம் கொண்டு அடியார் 1599-3
கரு நாமம் தவிர்ப்பாரைக் கை தொழுது முன் வீழ்ந்தார் 1599-4
335. எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானைத் 1600-1
தொழுத ஆர்வம் உற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம் 1600-2
முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க 1600-3
விழுதாரை கண் பொழிய விதிர்ப்பு உற்று விம்மினார் 1600-4
336. வண்டு ஓங்கும் செங் கமலம் என எடுத்து மனம் உருகப் 1601-1
பண் தோய்ந்த சொல் திருத் தாண்டகம் பாடிப் பரவுவார் 1601-2
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம் 1601-3
கண்டு ஓங்கு களிச் சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார் 1601-4
337. விளங்கு பெருந் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே 1602-1
உளங்கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக் குறுந் தொகைகள் 1602-2
களங்கொள் திரு நேரிசைகள் பல பாடிக் கை தொழுது 1602-3
வளங்கொள் திருப் பதியம் தனில் பல நாள்கள் வைகினார் 1602-4
338. அங்குறையும் நாளின்கண் அருகுளவாம் சிவாலயங்கள் 1603-1
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால் 1603-2
பொங்கு புனல் திரு ஒற்றியூர் தொழுது போந்து உமையாள் 1603-3
பங்குடையார் அமர்ந்திருப் பாசூராம் பதி அணைந்தார் 1603-4
339. திருப்பாசூர் நகர் எய்திச் சிந்தையினில் வந்து ஊறும் 1604-1
விருப்பு ஆர்வம் மேற் கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய 1604-2
இருப்பாரைப் புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனிப் 1604-3
பொருப்பார் வெஞ்சிலையாரைத் தொழுது எழுந்து போற்றுவார் 1604-4
340. முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்துச் 1605-1
சிந்தை கரைந்து உருகு திருக் குறுந் தொகையும் தாண்டகமும் 1605-2
சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி 1605-3
எந்தையார் திரு அருள் பெற்று ஏகுவார் வாகீசர் 1605-4
341. அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின் 1606-1
மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி 1606-2
மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழுக் குடிமைச் 1606-3
செம்மையினால் பழையனூர்த் திரு ஆல வனம் பணிந்தார் 1606-4
342. திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச் சிறப்பின் 1607-1
ஒருவாத பெரும் திருத் தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்ப் 1607-2
பெரு வாய்மைத் தொடை மாலை பல பாடிப் பிற பதியும் 1607-3
மருஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார் 1607-4
343. பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார் 1608-1
செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரிக் கரை பணிந்து 1608-2
தொல் கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம் 1608-3
மல்கு திருக் காளத்தி மா மலை வந்து எய்தினார் 1608-4
344. பொன் முகலித் திருநதியின் புனித நெடும் தீர்த்தத்தில் 1609-1
முன் முழுகிக் காளத்தி மொய் வரையின் தாழ்வரையில் 1609-2
சென்னி உறப் பணிந்து எழுந்து செம் கண் விடைத் தனிப்பாகர் 1609-3
மன்னும் மலை மிசை ஏறி வலம் கொண்டு வணங்குவார் 1609-4
345. காதணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தை 1610-1
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும் 1610-2
காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய் 1610-3
நாதனை என்கண்ணுளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார் 1610-4
346. மலைச் சிகரச் சிகா மணியின் மருங்கு உற முன்னே நிற்கும் 1611-1
சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி 1611-2
அலைத்து விழும் கண் அருவி ஆகத்துப் பாய்ந்து இழியத் 1611-3
தலைக் குவித்த கையினராய்த் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார் 1611-4
347. சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து 1612-1
தாணுவினை அம்மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால் 1612-2
பேணிதிருக் கயிலை மலை வீற்று இருந்த பெருங் கோலம் 1612-3
காணுமது காதலித்தார் கலை வாய்மைக் காவலனார் 1612-4
348. அங்கண் மா மலைமேல் மருந்தை வணங்கியார் அருளால் மிகப் 1613-1
பொங்கு காதலின் உத்தரத் திசை மேல் விருப்போடு போதுவார் 1613-2
துங்க மால் வரை கானியாறு தொடர்ந்த நாடு கடந்தபின் 1613-3
செங்கண் மால் விடை அண்ணல் மேவும் திருப் பருப்பதம் எய்தினார் 1613-4
349. மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள் 1614-1
கான கின்னரர் பன்னகாதிபர் காம சாரிகளே முதல் 1614-2
ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும் 1614-3
தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார் 1614-4
350. அம் மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படைச் 1615-1
செம்மல் வெண் கயிலைப் பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால் 1615-2
எம் மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு பாலும் வியந்து உளோர் 1615-3
கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார் 1615-4
351. கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும் 1616-1
திரு நதித் துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும் 1616-2
பெரு நலம் கிளர் நாடும் எண்ணில பின்படப் பொற்பினால் 1616-3
வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார் 1616-4
352. அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று 1617-1
எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய் 1617-2
மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல் 1617-3
பங்கயப் பழனத்து மத்திய பை திரத்தினை எய்தினார் 1617-4
353. அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும் 1618-1
மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன் 1618-2
பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய் 1618-3
மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார் 1618-4
354. மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால் 1619-1
போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழச் 1619-2
சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர் 1619-3
ஏகினார் இரவும் பெரும் கயிலைக் குலக்கிரி எய்துவார் 1619-4
355. ஆயவார் இருளின் கண் ஏகும் அவ் அன்பர் தம்மை அணைந்து முன் 1620-1
தீயவாய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சுகால் 1620-2
வாய நாக மணிப் பணங் கொள் விளக்கு எடுத்தன வந்து 1620-3
தோய வானவராயினும் தனி துன் அருஞ்சுரம் முன்னினார் 1620-4
356. வெங்கதிர்ப் பகல் அக்கடத்து இடை வெய்யவன் கதிர் கை பரந்து 1621-1
எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன 1621-2
பொங்கழற்று எறு பாலை வெந்நிழல் புக்க சூழல் புகும் பகல் 1621-3
செங்கதிர்க் கனல் போலும் அத்திசை திண்மை மெய்த்தவர் நண்ணினார் 1621-4
357. இங்ஙனம் இரவும் பகற் பொழுதும் அரும் சுரம் எய்துவார் 1622-1
பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும் 1622-2
மங்கை பங்கர் தம் வெள்ளிமால் வரை வைத்த சிந்தை மறப்பரோ 1622-3
தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார் 1622-4
358. கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தபின் 1623-1
மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட 1623-2
மொய் கடுங் கனல் வெம்பரல் புகை மூளும் அத்த முயங்கியே 1623-3
மை கொள் கண்டர் தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால் 1623-4
359. மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட 1624-1
நேர் வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடு நீடு 1624-2
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு ஊகைக்கும் உடம்பு அடங்கம் ஊன் கெடச் 1624-3
சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர் 1624-4
360. அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம் எங்கும் அரைந்திடச் 1625-1
செப்ப அரும் கயிலைச் சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால் 1625-2
மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும் 1625-3
தப்புறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார் 1625-4
361. அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார் 1626-1
மன்னும் தீந்தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த 1626-2
நன்னெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார் 1626-3
பன்னகம் புனை பரமர் ஓர் முனிவராம் படியால் 1626-4
362. வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று 1627-1
நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார் 1627-2
சிந்தி இவ் உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால் 1627-3
இந்த வெங்கடத்து எய்தியது என் என இசைத்தார் 1627-4
363. மாசில் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும் 1628-1
தேசுடைச் சடை மவுலியும் நீறும் மெய் திகழ 1628-2
ஆசில் மெய்த்தவர் ஆகி நின்றவர் தமை நோக்கிப் 1628-3
பேச உற்றதோர் உணர்வு உற விளம்புவார் பெரியோர் 1628-4
364. வண்டுலாங் குழல் மலை மகளுடன் வட கயிலை 1629-1
அண்டர் நாயகர் இருக்கும் அப் பரிசு அவர் அடியேன் 1629-2
கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன் 1629-3
கொண்ட என் குறிப்பு இது முனியே எனக் கூற 1629-4
365. கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு 1630-1
பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ 1630-2
அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிதால் 1630-3
வெயில் கொள் வெஞ்சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி 1630-4
366. மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும் 1631-1
தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல 1631-2
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால் 1631-3
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார் 1631-4
367. ஆங்கு மற்றவர் துணிவு அறிந்தவர் தமை அறிய 1632-1
நீங்கு மாதவர் விசும்பு இடைக் கரந்து நீள் மொழியால் 1632-2
ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்பத் 1632-3
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார் 1632-4
368. அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே 1633-1
விண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனே 1633-2
கண்ணினால் திருக் கயிலையில் இருந்த நின் கோலம் 1633-3
நண்ணி நான் தொழ நயந்து அருள் புரி எனப் பணிந்தார் 1633-4
369. தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில் 1634-1
எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இப் பொய்கை 1634-2
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம் முறைமை 1634-3
பழுதில் சீர்த் திருவையாற்றில் காண் எனப் பணித்தார் 1634-4
370. ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி 1635-1
வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி 1635-2
ஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் அஞ்சு எழுத்து ஓதிப் 1635-3
பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால் 1635-4
371. ஆதி தேவர் தம் திரு அருள் பெருமை யார் அறிந்தார் 1636-1
போத மாதவர் பனிமலர்ப் பொய்கையில் மூழ்கி 1636-2
மாதோர் பாகனார் மகிழும் ஐ ஆற்றில் ஓர் வாவி 1636-3
மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகெலாம் வியப்ப 1636-4
372. வம்புலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி 1637-1
உம்பர் நாயகர் திரு அருள் பெருமையை உணர்வார் 1637-2
எம் பிரான் தரும் கருணை கொல் இது என இரு கண் 1637-3
பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார் 1637-4
373. மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு 1638-1
உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார் 1638-2
அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன 1638-3
புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார் 1638-4
374. பொன் மலைக் கொடியுடன் அமர்வெள்ளியம் பொருப்பில் 1639-1
தன்மை ஆம் படி சத்தியும் சிவமுமாம் சரிதைப் 1639-2
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே 1639-3
மன்னும் மாதவர் தம்பிரான் கோயில் முன் வந்தார் 1639-4
375. காணும் அப்பெருங் கோயிலும் கயிலை மால் வரையாய்ப் 1640-1
பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெருந்தேவர் 1640-2
பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்கத் 1640-3
தாணு மா மறை யாவையும் தனித் தனி முழங்க 1640-4
376. தேவர் தானவர் சித்தர் விச் சாதரர் இயக்கர் 1641-1
மேவு மாதவர் முனிவர்கள் புடையெலாம் மிடையக் 1641-2
காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும் 1641-3
தாவில் ஏழ் கடல் முழக்கினும் பெருகொலி தழைப்ப 1641-4
377. கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள் 1642-1
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க 1642-2
எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்சப் 1642-3
பொங்கியங்களால் பூத வேதாளங்கள் போற்ற 1642-4
378. அந்தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர் 1643-1
சிந்தை செய்திடச் செங்கண் மால் விடை எதிர் நிற்ப 1643-2
முந்தை மாதவப் பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே 1643-3
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக 1643-4
379. வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடி உடன் விளங்கும் 1644-1
தெள்ளு பேர் ஒளிப் பவள வெற்பு என இடப்பாகம் 1644-2
கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்று இருந்த 1644-3
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார் 1644-4
380. கண்ட ஆனந்தக் கடவினைக் கண்களால் முகந்து 1645-1
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய 1645-2
அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார் 1645-3
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார் 1645-4
381. முன்பு கண்டு கொண்டு அருளினார் அமுது உண்ண மூவா 1646-1
அன்பு பெற்றவர் அளவு இலா ஆர்வம் முன் பொங்கப் 1646-2
பொன் பிறங்கிய சடையாரைப் போற்று தாண்டகங்கள் 1646-3
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லையில் தவத்தோர் 1646-4
382. ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புறக் கயிலை 1647-1
மேய நாதர் தம் துணையொடும் வீற்று இருந்து அருளித் 1647-2
தூய தொண்டரும் தொழுது எதிர் நிற்க அக் கோலம் 1647-3
சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்தமை திகழ 1647-4
383. ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர் 1648-1
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்குச் 1648-2
செய்ய வேணியர் அருள் இதுவோ எனத் தெளிந்து 1648-3
வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து 1648-4
384. மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளடும் என்னும் 1649-1
கோதறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள் 1649-2
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம் 1649-3
காதல் துணை ஒடும் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார் 1649-4
385. கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார் தமைப் போற்றிக் 1650-1
கொண்ட திருத் தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின் 1650-2
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே 1650-3
அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர் 1650-4
386. நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாக 1651-1
மாடுயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கிப் 1651-2
பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித் 1651-3
தேடிய மாலுக்கு அரியார் திருப் பூந் துருத்தியைச் சேர்ந்தார் 1651-4
387. சேர்ந்து விருப்பொடும் புக்குத் திரு நட மாளிகை முன்னர்ச் 1652-1
சார்ந்து வலம் கொண்டு இறைஞ்சித் தம் பெருமான் திரு முன்பு 1652-2
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க 1652-3
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர் உறும் தன்மையர் ஆனார் 1652-4
388. திருப்பூந் துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்றுப் 1653-1
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய்யிலியைக் கண்டேன் என்று 1653-2
விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப 1653-3
இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் குறுந் தொகை பாடி 1653-4
389. அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று 1654-1
பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து 1654-2
தங்கித் திருத் தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்றுத் 1654-3
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார் 1654-4
390. பல் வகைத் தாண்டகத் தோடும் பரவும் தனித் தாண்டகமும் 1655-1
அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத் தாண்டகமும் 1655-2
செல் கதி காட்டிடப் போற்றும் திரு அங்க மாலையும் உள்ளிட்டு 1655-3
எல்லையில் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார் 1655-4
391. பொன்னி வலம் கொண்ட திருப் பூந்துருத்தி அவர் இருப்பக் 1656-1
கல் மனத்து வல் அமணர் தமை வாதில் கட்டு அழித்துத் 1656-2
தென்னவன் கூன் நிமிர்த்தி அருளித் திரு நீற்றின் ஒளி கண்டு 1656-3
மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார் 1656-4
392. தீம் தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச் செழும் பொன்னி 1657-1
வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு 1657-2
வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர் பால் செல்வன் எனப் 1657-3
பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார் 1657-4
393. சண்பை வருந் தமிழ் விரகர் எழுந்தருளத் தாங்கேட்டு 1658-1
மண் பரவும் பெருங் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து 1658-2
கண் பெருகுங் களிகொள்ளக் கண்டு இறைஞ்சும் காதலினால் 1658-3
எண் பெருகும் விருப்பு எய்த எழுந்து அருளி எதிர் சென்றார் 1658-4
394. காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்திக் காதலித்தார் 1659-1
சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி 1659-2
வாழி அவர் தமைத் தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத் 1659-3
தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் எனத் தரித்தார் 1659-4
395. வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி 1660-1
அந்தணனார் ஏறி எழுந்து அருளி வரும் மணி முத்தின் 1660-2
சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச் 1660-3
சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து இலரால் 1660-4
396. திரு ஞான மாமுனிவர் அரசு இருந்த பூந் துருத்திக்கு 1661-1
அருகுகாக எழுந்து அருளி எங்கு உற்றார் அப்பர் என 1661-2
உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் 1661-3
பெரு வாழ்வு வந்து எய்தப் பெற்று இங்கு உற்றேன் என்றார் 1661-4
397. பிள்ளையார் அதுகேளாப் பெருகு விரைவு உடன் இழிந்தே 1662-1
உள்ளமிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க 1662-2
வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்கத் 1662-3
துள்ளு மான் மறிக் கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார் 1662-4
398. கழு மலக் கோன் திருநாவுக்கு அரசருடன் கலந்து அருளிச் 1663-1
செழு மதியம் தவழ் சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின் 1663-2
மழுவினொடு மான் ஏந்தும் திருக்கரத்தார் மலர்த் தாள்கள் 1663-3
தொழுது உருகி இன்புற்றுத் துதி செய்து அங்கு உடன் இருந்தார் 1663-4
399. வல் அமணர் தமை வாதில் வென்றதுவும் வழுதி பால் 1664-1
புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்தப் புனல் நாட்டில் 1664-2
எல்லை இலாத் திரு நீறு வளர்த்து அதுவும் இருந் தவத்தோர் 1664-3
சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர் 1664-4
400. பண்புடைய பாண்டி மா தேவியார் தம் பரிவும் 1665-1
நண்புடைய குலச் சிறையார் பெருமையும் ஞானத் தலைவர் 1665-2
எண் பெருக உரைத்து அருள எல்லையில் சீர் வாகீசர் 1665-3
மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார் 1665-4
401. பிரம புரத் திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில் 1666-1
அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு 1666-2
உரன் உடைய திரு நாவுக்கு அரசர் உரை செய்து அருளப் 1666-3
புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார் 1666-4
402. ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்றப் பதி நின்றும் 1667-1
பாண்டி நாட்டு எழுந்து அருளும் பான்மையராய்த் தென் திசை போய்க் 1667-2
காண் தகைய திருப் புத்தூர் பணிந்து ஏத்திக் கதிர் மதியம் 1667-3
தீண்டு கொடி மதில் மதுரைத் திரு ஆலவாய் சேர்ந்தார் 1667-4
403. சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள் 1668-1
அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் 1668-2
முன்றிலினை வலம் கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு 1668-3
வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார் 1668-4
404. எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி 1669-1
மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச் 1669-2
செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார் 1669-3
கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார் 1669-4
405. சீர் திகழும் பாண்டிமா தேவியார் திரு நீற்றின் 1670-1
சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே 1670-2
பார் பரவும் குலச் சிறையார் வாகீசர் தமைப் பணி உற்று 1670-3
ஆரகிலாக் காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார் 1670-4
406. திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருள் நூல் 1671-1
தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான 1671-2
பெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்து 1671-3
மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார் 1671-4
407. கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள் 1672-1
நெடியானுக்கு அறிய அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி 1672-2
வடிவேலு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப் 1672-3
பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார் 1672-4
408. தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்த 1673-1
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த 1673-2
பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து போய்ப் பெரு மகிழ்ச்சி 1673-3
துன்னி மனம் கரைந்து உருகத் தொழுது எழுந்தார் சொல் அரசர் 1673-4
409. தேவர் தொழும் தனி முதலைத் திரு இராமேச்சுரத்து 1674-1
மேவிய சங்கரனை எதிர் நின்று விருப்புறு மொழியால் 1674-2
பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி 1674-3
நாவரசர் திருத் தொண்டு நலம் பெருகச் செய்து அமர்ந்தார் 1674-4
410. அங்குறைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போய்ப் 1675-1
பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலி 1675-2
செங்கண் விடையார் மன்னும் திருக் கானப் பேர் முதலாம் 1675-3
எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார் 1675-4
411. தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி 1676-1
வழுவில் திருப்பணி செய்து மனம் கசிவு உற்று எப் பொழுதும் 1676-2
ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள் 1676-3
தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார் 1676-4
412. தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப் 1677-1
பாம்பு அணிவார் தமைப் பணிவார் பொன்னி நாடது அணைந்து 1677-2
வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே 1677-3
பூம் புகலூர் வந்து அடைந்தார் பொய்ப் பாசம் போக்குவார் 1677-4
413. பொய்கை சூழ் பூம் புகலூர்ப் புனிதர் மலர்த் தாள் வணங்கி 1678-1
நையும் மனப் பரிவினோடும் நாள் தோறும் திரு முன்றில் 1678-2
கை கலந்த திருத் தொண்டு செய்து பெரும் காதல் உடன் 1678-3
வைகு நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார் 1678-4
414. நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும் 1679-1
மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத் தாண்டகமும் 1679-2
கொன்றை மலர்ச் சடையார் பால் குறைந்த திரு நேர் இசையும் 1679-3
துன்று தனி நேர் இசையும் முதலான தொடுத்து அமைத்தார் 1679-4
415. ஆருயிரின் திரு விருத்தம் தச புராணத்து அடைவும் 1680-1
பார் பரவும் பாவ நாசப் பதிகம் பன்முறையும் 1680-2
நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும் 1680-3
பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடினார் 1680-4
416. அந் நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர் 1681-1
நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில் 1681-2
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும் 1681-3
பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள் செய்தார் 1681-4
417. செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கொவையும் 1682-1
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க 1682-2
எம் பெருமான் வாகீசர் உழ வாரத்தினில் ஏந்தி 1682-3
வம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார் 1682-4
418. புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் 1683-1
சொல்லோடும் வேறு பாடு இலா நிலைமை துணிந்து இருந்த 1683-2
நல்லோர் முன் திருப் புகலூர் நாயகனார் திரு அருளால் 1683-3
வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார் 1683-4
419. வானகம் மின்னுக் கொடிகள் வந்து இழிந்தால் என வந்து 1684-1
தான நிறை சுருதிகளில் தகும் அலங்காரத் தன்மை 1684-2
கான அமுதம் பரக்கும் கனிவாயில் ஒளி பரப்பப் 1684-3
பானல் நெடுங் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார் 1684-4
420. கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய 1685-1
உற்பலம் மென் முகிழ் விரல் வட்டு அணையோடும் கை பெயரப் 1685-2
பொற்புறும் அக் கையின் வழிப் பொரு கயல் கண் புடை பெயர 1685-3
அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடுவார் 1685-4
421. ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார் 1686-1
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க 1686-2
ஓடுவார் மார வேளுடன் மீள்வார் ஒளி பெருக 1686-3
நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார் 1686-4
422. இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய 1687-1
அத்தனார் திருவடிக் கீழ் நினைவு அகலா அன்பு உருகும் 1687-2
மெய்த் தன்மை உணர்வு உடைய விழுத் தவத்து மேலோர் தம் 1687-3
சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார் 1687-4
423. இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி 1688-1
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் 1688-2
அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று 1688-3
பொய்ம் மாயப் பெருங் கடலுள் எனும் திருத் தாண்டகம் புகன்றார் 1688-4
424. மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வசக் 1689-1
காதலர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும் 1689-2
பேதம் இலா ஓர் உணர்வில் பெரிய வரைப் பெயர்விக்க 1689-3
யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார் 1689-4
425. இந் நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த 1690-1
மன்னிய அன்பு உறு பத்தி வடிவு ஆன வாகீசர் 1690-2
மின் நிலவும் சடையார் தம் மெய் அருள் தான் எய்த வரும் 1690-3
அந்நிலைமை அணித்து ஆகச் சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார் 1690-4
426. மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால் 1691-1
தன்னுடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன் 1691-2
என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்ற 1691-3
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார் 1691-4
427. மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப் 1692-1
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று 1692-2
நண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி 1692-3
அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார் 1692-4
428. வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின் 1693-1
மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல் 1693-2
யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி 1693-3
தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில் 1693-4
429. அடியன் ஏன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப் 1694-1
படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பர முனிவன் 1694-2
கடி மலர் மென் சேவடிகள் கை தொழுது குலச் சிறையார் 1694-3
முடிவில் புகழ்த் திருத் தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன் 1694-4
22 குலச்சிறை நாயனார் புராணம்
1. பன்னு தொல் புகழ்ப் பாண்டி நன் நாட்டு இடைச் 1695-1
செந்நெலார் வயல் தீம் கரும்பின் அயல் 1695-2
துன்னு பூகப் புறம் பணை சூழ்ந்தது 1695-3
மன்னு வண்மையினார் மண மேற்குடி 1695-4
2. அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர் தாம் 1696-1
ஒப்பரும் பெரு நம்பி என்று ஓதிய 1696-2
செப்பரும் சீர்க் குலச் சிறையார் திண்மை 1696-3
வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர் 1696-4
3. காரணங்கள் கண் நுதற்கு அன்பர் என்னவே 1697-1
வாரம் ஆகி மகிழ்ந்தவர் தாள் மிசை 1697-2
யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து 1697-3
ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார் 1697-4
4. குறியில் நான்கு குலத்தினர் ஆயினும் 1698-1
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும் 1698-2
அறிவு சங்கரற்கு அன்பர் எனப் பெறில் 1698-3
செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார் 1698-4
5. உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும் 1699-1
அலகில் தீமையர் ஆயினும் அம்புலி 1699-2
இலகு செஞ்சடையார்க்கு அடியார் எனில் 1699-3
தலம் உறப் பணிந்து ஏத்தும் தகைமையார் 1699-4
6. பண்பு மிக்கார் பலராய் அணையினும் 1700-1
உண்ப வேண்டி ஒருவர் அணையினும் 1700-2
எண் பெருக்கிய அன்பால் எதிர் கொண்டு 1700-3
நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார் 1700-4
7. பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து 1701-1
ஆதி தேவர் தம் அஞ்செழுத்தாம் அவை 1701-2
ஓது நா வணக்கத்தால் உரைப்பவர் 1701-3
பாதம் நாளும் பரவிய பண்பினார் 1701-4
8. இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறில் சீர்த் 1702-1
தென்னவன் நெடு மாறற்குச் சீர் திகழ் 1702-2
மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார் 1702-3
ஒன்னலர்ச் செற்று உறுதிக் கண் நின்று உளார் 1702-4
9. ஆய செய்கையர் ஆயவர் ஆறணி 1703-1
நாயனார் திருப் பாதம் நவின்று உளார் 1703-2
பாய சீர் புனை பாண்டி மா தேவியார் 1703-3
மேய தொண்டுக்கு மெய்த் தொண்டர் ஆயினார் 1703-4
10. புன்னையத் தருகந்தர் பொய் நீக்கவும் 1704-1
தென்னர் நாடு திருநீறு போற்றவும் 1704-2
மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி 1704-3
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார் 1704-4
11. வாதில் தோற்ற அமணரை வன் கழுத் 1705-1
தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம் 1705-2
யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன் 1705-3
வேத நீதி மிழலைக் குறும்பர் தாள் 1705-4
23 பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம்
1. சூதம் நெருங்கு குலைத் தெங்கு பலவும் பூகஞ்சூழ்புடைத்தாய் 1706-1
வீதிதோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி 1706-2
நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து 1706-3
மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை 1706-4
2. அன்ன தொன்மைத் திருப்பதிக் கண் அதிபர் மிழலைக் குறும்பனார் 1707-1
சென்னி மதியம் வைத்தவர் தம் அடியார்க்கு ஆன செய் பணிகள் 1707-2
இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று 1707-3
முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் 1707-4
3. தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுது ஊட்டிக் 1708-1
கொண்டு செல்ல இரு நிதியம் முகந்து கொடுத்துக் குறைந்த அடைவார் 1708-2
வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் 1708-3
புண்ட ரீகம் அக மலரில் வைத்துப் போற்றும் பொற்பினார் 1708-4
4. இத் தன்மையராய் நிகழும் நாள் எல்லை இல்லாத் திருத் தொண்டின் 1709-1
மெய்த் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார் 1709-2
சித்தம் நிலவும் திருத் தொண்டத் தொகை பாடிய நம்பியைப் பணிந்து 1709-3
நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியமத் தலை நின்றார் 1709-4
5. மையார் தடங் கண் பரவையார் மணவாளன் தன் மலர்க் கழல்கள் 1710-1
கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப் பாட்டில் 1710-2
செய்யாள் கோனும் நான்முகனும் அறியாச் செம்பொன் தாள் இணைக் கீழ் 1710-3
உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் 1710-4
6. நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே 1711-1
ஆளும் படியால் அணி மாதி சித்தியான அணைந்த அதற்பின் 1711-2
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும் 1711-3
கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார் 1711-4
7. இன்ன வாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர் தம் 1712-1
பொன்னங் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து 1712-2
மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர் 1712-3
சென்னி மதி தோய் மாட மலி கொடுங் கோளூரைச் சேர்வுற்றார் 1712-4
8. அஞ்சைக் களத்து நஞ்சு உண்ட அமுதைப் பரவி அணைவுறுவார் 1713-1
செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே 1713-2
மஞ்சில் திகழும் வட கயிலைப் பொருப்பில் எய்த வரும் வாழ்வு 1713-3
நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக் குறும்பனார் 1713-4
9. மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த வன் தொண்டர் 1714-1
நண்ணற்கு அரிய திருக் கயிலை நாளை எய்த நான் பிரிந்து 1714-2
கண்ணில் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று 1714-3
எண்ணிச் சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் 1714-4
10. நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேல் கொண்டு 1715-1
காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு 1715-2
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப 1715-3
மூல முதல்வர் திருப் பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் 1715-4
11. பயிலைச் செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுறக் 1716-1
கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கி 1716-2
மயிலைப் புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் 1716-3
குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம் 1716-4
24 காரைக்கால் அம்மையார் புராணம்
1. மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில் 1717-1
ஊனமில் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி 1717-2
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக் 1717-3
கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால் 1717-4
2. வங்க மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர் 1718-1
தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால் 1718-2
அங்கு அவர் பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து 1718-3
பொங்கிய பேர் அழகு மிகப் புனிதவதியார் பிறந்தார் 1718-4
3. வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளியபின் 1719-1
அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடைப் பருவத்தே 1719-2
பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெறத் 1719-3
தணிவில் பெரு மனக் காதல் ததும்ப வரும் மொழி பயின்றார் 1719-4
4. பல் பெரு நற்கிளை உவப்பப் பயில் பருவச் சிறப்பு எல்லாம் 1720-1
செல்வ மிகு தந்தையார் திருப் பெருகும் செயல் புரிய 1720-2
மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர் பால் 1720-3
அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார் 1720-4
5. வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை 1721-1
அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று 1721-2
தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்றத் துணை முலைகள் 1721-3
கொண்ட நுசுப்பு ஒதுங்கு பதக் கொள்கையினில் குறுகினார் 1721-4
6. நல்லவென உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி 1722-1
மல்கு பெரு வனப்பு மீக் கூர வரு மாட்சியினால் 1722-2
இல்லிகவாப் பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும் 1722-3
தொல் குலத்து வணிகர் மகன் பேசுதற்குத் தொடங்குவார் 1722-4
7. நீடிய சீர்க் கடல் நாகை நிதிபதி என்று உலகின் கண் 1723-1
பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்குத் 1723-2
தேடவரும் திருமரபில் சேயிழையை மகன் பேச 1723-3
மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார் 1723-4
8. வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து 1724-1
தந்தையாம் தனதத்தன் தனை நேர்ந்து நீ பயந்த 1724-2
பைந் தொடியை நிதிபதி மைந்தன் பரம தத்தனுக்கு 1724-3
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார் 1724-4
9. மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இடச் சென்று 1725-1
உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்புப் 1725-2
பெற்றனன் போல் உவந்து தனிப் பெரு மகட்குத் திருமலியும் 1725-3
சுற்றம் உடன் களி கூர்ந்து வதுவை வினைத் தொழில் பூண்டான் 1725-4
10. மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள் 1726-1
அணைய வதுவைத் தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே 1726-2
இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி 1726-3
பணை முரசம் எழுந்து ஆர்ப்பக் காரைக்கால் பதி புகுந்தார் 1726-4
11. அளி மிடை ஆர்த்த தன தத்தன் அணி மாடத்துள் புகுந்து 1727-1
தெளிதரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்துத் 1727-2
தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ் தார்க் காளைக்குக் 1727-3
களி மகிழ் சுற்றம் போற்றக் கலியாணம் செய்தார்கள் 1727-4
12. மங்கல மா மண வினைகள் முடித்து இயல்பின் வைகு நாள் 1728-1
தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தன தத்தன் 1728-2
பொங்கொலி நீர் நாகையினில் போகாமே கணவன் உடன் 1728-3
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான் 1728-4
13. மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில் தனம் கொடுத்து அதன்பின் 1729-1
நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி தன் குல மகனும் 1729-2
தகைப்பில் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி 1729-3
மிகப் புரியும் கொள்கையினில் மேம் படுதல் மேவினான் 1729-4
14. ஆங்கு அவன் தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற 1730-1
பூங்குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடிக் கீழ் 1730-2
ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிகப் பெருகப் 1730-3
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார் 1730-4
15. நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும் 1731-1
செம்பொன்னும் நவ மணியும் செழுந் துகிலும் முதலான 1731-2
தம் பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும் 1731-3
உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகு நாள் 1731-4
16. பாங்குடைய நெறியின் கண் பயில் பரம தத்தனுக்கு 1732-1
மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப 1732-2
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே 1732-3
ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான் 1732-4
17. கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கைக் கொண்டு 1733-1
மணம் மலியும் மலர்க் கூந்தல் மாதரார் வைத்து அதற்பின் 1733-2
பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத் தொண்டர் 1733-3
உணவின் மிகு வேட்கை யினால் ஒருவர் மனையுள் புகுந்தார் 1733-4
18. வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த் தொண்டர் நிலை கண்டு 1734-1
நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன் என நண்ணிப் 1734-2
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்துப் பரிகலம் வைத்து 1734-3
ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார் 1734-4
19. கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட 1735-1
வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன் தன் அடியாரே 1735-2
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும் 1735-3
அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார் 1735-4
20. இல்லாளன் வைக்க எனத்தம் பக்கல் முன் இருந்த 1736-1
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு 1736-2
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால் 1736-3
அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார் 1736-4
21. மூப்புறும் அத் தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கைத் 1737-1
தீப் பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத் தொண்டர் 1737-2
வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்திப் 1737-3
பூப்பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார் 1737-4
22. மற்றவர் தாம் போயின பின் மனைப் பதி ஆகிய வணிகன் 1738-1
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்திப் 1738-2
பொற்புற முன் நீர் ஆடிப் புகுந்து அடிசில் புரிந்து அயிலக் 1738-3
கற்புடைய மடவாரும் கடப் பாட்டில் ஊட்டுவார் 1738-4
23. இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன்பின் 1739-1
மன்னிய சீர்க் கணவன் தான் மனை இடை முன் வைப்பித்த 1739-2
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல் 1739-3
அன்ன மனையார் தாமும் கொடு வந்து கலத்து அளித்தார் 1739-4
24. மனைவியார் தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி 1740-1
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன் 1740-2
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என 1740-3
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார் 1740-4
25. அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என்செய்வார் 1741-1
மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான் 1741-2
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார் 1741-3
கைம் மருங்கு வந்து இருந்தது அதிமதுரக் கனி ஒன்று 1741-4
26. மற்றதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில் 1742-1
உற்ற சுவை அமுதினும் மேல் பட உளதாயிட இது தான் 1742-2
முன் தரு மாங் கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிதால் 1742-3
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார் தமைக் கேட்டான் 1742-4
27. அவ்வுரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும் 1743-1
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார் 1743-2
கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை 1743-3
மெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார் 1743-4
28. செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார் 1744-1
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி 1744-2
எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு 1744-3
மொய் தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார் 1744-4
29. ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான் 1745-1
வாச மலர்த் திரு அனையார் தமை நோக்கி மற்று இது தான் 1745-2
தேசுடைய சடைப் பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர் 1745-3
ஆசில் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான் 1745-4
30. பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார் தமைப் பரவி 1746-1
ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன 1746-2
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை 1746-3
ஆங்கு அவன் கைக் கொடுதலுமே அதிசயித்து வாங்கினான் 1746-4
31. வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான் 1747-1
தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி 1747-2
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி நீங்கும் 1747-3
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில் 1747-4
32. விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான் 1748-1
படுதிரைப் பரவை மீது படர் கலம் கொண்டு போகி 1748-2
நெடு நிதி கொண்வேன் என்ன நிரந்தபல் கிளைஞர் ஆகும் 1748-3
வடுவில் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள் 1748-4
33. கலஞ் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும் 1749-1
புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி 1749-2
சலம் தரு கடவுள் போற்றித் தலைமையாம் நாய்கன் தானும் 1749-3
நலம் தரு நாளில் ஏறி நளிர் திரைக் கடல் மேல் போனான் 1749-4
34. கடல் மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில் 1750-1
அடை உறச் சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி 1750-2
இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அக் கலத்தில் ஏறிப் 1750-3
படர் புனல் கன்னி நாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான் 1750-4
35. அப் பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும் 1751-1
ஒப்பில் மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்து 1751-2
மெய்ப் புகழ் விளங்கும் அவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற 1751-3
செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான் 1751-4
36. பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம் புணர்ந்து முன்னை 1752-1
அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம் 1752-2
புறம் ஒரு வெளி உறாமல் பொதிந்த சிந்தனையின் ஓடு 1752-3
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில் 1752-4
37. முருகலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும் 1753-1
இரு நிதிக் கிழவன் எய்திய திருவின் மிக்குப் 1753-2
பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால் 1753-3
பெருகொளி விளக்குப் போல் ஓர் பெண்கொடி அரிதில் பெற்றான் 1753-4
38. மட மகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்பு 1754-1
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவி யாரைத் 1754-2
தொடர் அற நினைந்து தெய்வத் தொழு குலம் என்றே கொண்டு 1754-3
கடன் அமைத்தவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான் 1754-4
39. இந்நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும் 1755-1
கன்னி மா மதில் சூழ் மாடக் காரைக்கால் வணிகன் ஆன 1755-2
தன் நிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும் 1755-3
மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக 1755-4
40. விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரம தத்தன் 1756-1
வளர் புகழ்ப் பாண்டி நாட்டு ஓர் மா நகர் தன்னில் மன்னி 1756-2
அளவில் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று 1756-3
கிளர் ஒளி மணிக் கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே 1756-4
41. அம் மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும் 1757-1
தம் உறு கிளைஞர்ப் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு 1757-2
மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர் 1757-3
கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார் 1757-4
42. மா மணிச் சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரைத் 1758-1
தாமரைத் தவிசில் வைகும் தனித் திரு என்ன ஏற்றிக் 1758-2
காமரு கழனி வீழ்த்துக் காதல் செய் சுற்றத்தாரும் 1758-3
தே மொழியவரும் சூழச் சேண் இடைக் கழிந்து சென்றார் 1758-4
43. சில பகல் கடந்து சென்று செம் தமிழ்த் திருநாடு எய்தி 1759-1
மலர் புகழ்ப் பரம தத்தன் மா நகர் மருங்கு வந்து 1759-2
குல முதல் மனைவியாரைக் கொண்டு வந்து அணைந்த தன்மை 1759-3
தொலைவில் சீர்க் கணவனார்க்குச் சொல்லி முன் செல்ல விட்டார் 1759-4
44. வந்தவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும் 1760-1
சிந்தையில் அச்சம் எய்திச் செழு மணம் பின்பு செய்த 1760-2
பைந் தொடி தனையும் கொண்டு பயந்த பெண் மகவின் ஒடு 1760-3
முந்துறச் செல்வேன் என்று மொய் குழல் அவர் பால் வந்தான் 1760-4
45. தானும் அம் மனைவி யோடும் தளிர் நடை மகவி னோடும் 1761-1
மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே 1761-2
யான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும் 1761-3
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான் 1761-4
46. கணவன் தான் வணங்கக் கண்ட காமர் பூங்கொடியனாரும் 1762-1
அணைவுறும் சுற்றத்தார் பால் அச்ச மோடு ஒதுங்கி நிற்ப 1762-2
உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி தன்னை 1762-3
மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என் கொல் என்றார் 1762-4
47. மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர் 1763-1
நற் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு 1763-2
பெற்ற இம் மகவு தன்னைப் பேர் இட்டேன் ஆதலாலே 1763-3
பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான் 1763-4
48. என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல் என்று நின்றார் 1764-1
மன்றலங் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக் 1764-2
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றிச் சிந்தை 1764-3
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார் 1764-4
49. ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத் 1765-1
தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால் 1765-2
ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப் 1765-3
பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார் 1765-4
50. ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே 1766-1
மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில் 1766-2
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக 1766-3
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார் 1766-4
51. மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம் 1767-1
உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும் 1767-2
குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற 1767-3
தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் 1767-4
52. உற் பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன் தன்னை 1768-1
அற் புதத் திரு அந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார் 1768-2
பொற்புடைச் செய்ய பாத புண்ட ரீகங்கள் போற்றும் 1768-3
நற் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி 1768-4
53. ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடி 1769-1
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள் 1769-2
காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலை மால் வரையை நண்ண 1769-3
வாய்ந்த பேர் அருள் முன் கூற வழி படும் வழியால் வந்தார் 1769-4
54. கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள் 1770-1
கொண்டது ஓர் வேடத் தன்மை உள்ளவாறு கூறக் கேட்டே 1770-2
அண்ட நாயகனாரென்னை அறிவரேல் அறியா வாய்மை 1770-3
எண் திசை மக்களுக்கு யான் எவ்வுருவாய் என் என்பார் 1770-4
55. வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று 1771-1
தொடை அவிழ் இதழி மாலைச் சூல பாணியனார் மேவும் 1771-2
படர் ஒளிக் கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்குக் காலின் 1771-3
நடையினைத் தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார் 1771-4
56. தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி 1772-1
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக் 1772-2
கலை இளம் திங்கள் கண்ணிக் கண் நுதல் ஒரு பாகத்துச் 1772-3
சிலை நுதல் இமய வல்லி திருக் கண் நோக்குற்றது அன்றே 1772-4
57. அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்து 1773-1
தம் பெருமானை நோக்கித் தலையினால் நடந்து இங்கு ஏறும் 1773-2
எம் பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன 1773-3
நம் பெரு மாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான் 1773-4
58. வரும் இவன் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப் 1774-1
பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை 1774-2
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை 1774-3
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார் 1774-4
59. அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று 1775-1
பங்கயச் செம் பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச் 1775-2
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால் 1775-3
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார் 1775-4
60. இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார் 1776-1
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் 1776-2
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி 1776-3
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் 1776-4
61. கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் என்றும் 1777-1
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலம் காட்டில் 1777-2
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும் 1777-3
பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான் 1777-4
62. அப் பரிசு அருளப் பெற்ற அம்மையும் செம்மை வேத 1778-1
மெய்ப் பொருள் ஆனார் தம்மை விடை கொண்டு வணங்கிப் போந்து 1778-2
செப்பரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலம் காடாம் 1778-3
நற் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே 1778-4
63. ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற 1779-1
கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு 1779-2
மூலம் காண்பரியார் தம்மை மூத்த நல் பதிகம் பாடி 1779-3
ஞாலம் காதலித்துப் போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில் 1779-4
64. மட்டவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும் 1780-1
இட்ட மிகு பெருங் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி 1780-2
எட்டி இலவம் மீகை என எடுத்துத் திருப் பதிகம் 1780-3
கொட்ட முழவம் குழகன் ஆடும் எனப் பாடினார் 1780-4
65. மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி 1781-1
கொடுத்து அருளப் பெற்றாரைக் குலவிய தாண்டவத்தில் அவர் 1781-2
எடுத்து அருளும் சேவடிக் கீழ் என்றும் இருக்கின்றாரை 1781-3
அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவாயினது அம்மா 1781-4
66. ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது 1782-1
கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றிச் 1782-2
சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம் 1782-3
போத மா முனிவர் செய்த திருத் தொண்டு புகலல் உற்றேன் 1782-4
25 அப்பூதி அடிகள் நாயனார் புராணம்
1. தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர் 1783-1
ஈண்டிய புகழின் பாலார் எல்லையில் தவத்தின் மிக்கார் 1783-2
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்தவர் அறியா முன்னே 1783-3
காண் தகு காதல் கூரக் கலந்த அன்பினராய் உள்ளார் 1783-4
2. களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார் 1784-1
வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனைப் பால் உள்ள 1784-2
அளவைகள் நிறைகோல் மக்கள் ஆ வொடு மேதி மற்றும் 1784-3
உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழுகல் ஆற்றார் 1784-4
3. வடிவு தாம் காணார் ஆயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர் 1785-1
அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டவர் நாமத்தால் 1785-2
படி நிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலாய் உள்ள 1785-3
முடிவு இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் 1785-4
4. பொருப்பரையன் மடப் பிடியின் உடன் புணரும் சிவக்களிற்றின் 1786-1
திருப் பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கு அரசர் 1786-2
ஒருப் படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும் 1786-3
விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார் 1786-4
5. அளவில் சனம் செலவு ஒழியா வழிக்கரையில் அருள் உடையார் 1787-1
உளம் அனைய தண் அளித்தாய் உறுவேனில் பரிவு அகற்றிக் 1787-2
குளம் நிறைந்த நீர்த் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய் 1787-3
வளம் மருவும் நிழல் தரு தண்ணீர்ப் பந்தர் வந்து அணைந்தார் 1787-4
6. வந்து அனைந்த வாகீசர் மந்த மாருத சீதப் 1788-1
பந்தர் உடன் அமுதமாம் தண்ணீரும் பார்த்து அருளிச் 1788-2
சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசெனும் பேர் 1788-3
சந்தம் உற வரைந்து அதனை எம் மருங்கும் தாம் கண்டார் 1788-4
7. இப் பந்தர் இப் பெயர் இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு 1789-1
அப் பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால் 1789-2
செப்பருஞ் சீர் அப்பூதி அடிகளார் செய்து அமைத்தார் 1789-3
தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார் 1789-4
8. என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று 1790-1
நின்ற வரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவத் 1790-2
துன்றிய நூல் மார்பரும் இத் தொல் பதியார் மனையின் கண் 1790-3
சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார் 1790-4
9. அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதி அடிகளார் 1791-1
தங்கும் மனைக் கடைத் தலை முன் சார்வாக உள் இருந்த 1791-2
திங்களூர் மறைத் தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார் 1791-3
நங்கள் பிரான் தமர் ஒருவர் எனக் கேட்டு நண்ணினார் 1791-4
10. கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர் தம் 1792-1
அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார் 1792-2
முடிவில் தவம் செய்தேன் கொல் முன்பு ஒழியும் கருணை புரி 1792-3
வடிவுடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார் 1792-4
11. ஒரு குன்ற வில்லாரைத் திருப் பழனத்துள் இறைஞ்சி 1793-1
வருகின்றோம் வழிக் கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம் 1793-2
தருகின்ற நிழல் தண்ணீர்ப் பந்தரும் கண்ட அத் தகைமை 1793-3
புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் எனப் புகல்வார் 1793-4
12. ஆறணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த 1794-1
ஈறில் தண்ணீர்ப் பந்தரில் நும் பேர் எழுதாதே 1794-2
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என் கொல் 1794-3
கூறும் என எதிர் மொழிந்தார் கோதில் மொழிக் கொற்றவனார் 1794-4
13. நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய் 1795-1
நன்று அருளிச் செய்து இலீர் நாணில் அமண் பதகர் உடன் 1795-2
ஒன்றிய மன்னவன் சூட்சி திருத் தொண்டின் உறைப் பாலே 1795-3
வென்றவர் தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார் 1795-4
14. நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத் தொண்டாலே 1796-1
இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளியச் 1796-2
செம்மை புரி திருநாவுக்கரசர் திருப் பெயர் எழுத 1796-3
வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி 1796-4
15. பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமை 1797-1
அங்கணர் தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே 1797-2
மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர் 1797-3
எங்கு உறைவீர் நீர் தாம் யார் இயம்பும் என இயம்பினார் 1797-4
16. திரு மறையோர் அது மொழியத் திரு நாவுக்கரசர் அவர் 1798-1
பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையின் நின்றேற 1798-2
அருளும் பெரும் சூலையினால் ஆட் கொள்ள அடைந்து உய்ந்த 1798-3
தெருளும் உணர்வு இல்லாத சிறுமை யேன் யான் என்றார் 1798-4
17. அரசு அறிய உரை செய்ய அப்பூதி அடிகள் தாம் 1799-1
கர கமலம் மிசை குவியக் கண் அருவி பொழிந்து இழிய 1799-2
உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலியத் 1799-3
தரையின் மிசை வீழ்ந்தவர் தம் சரண கமலம் பூண்டார் 1799-4
18. மற்றவரை எதிர் வணங்கி வாகீசர் எடுத்து அருள 1800-1
அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு மறையோர் 1800-2
முற்றவும் களி கூற முன் நின்று கூத்தாடி 1800-3
உற்ற விருப்பு உடன் சூழ ஓடினார் பாடினார் 1800-4
19. மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே 1801-1
ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும் 1801-2
ஆண்ட அரசு எழுந்து அருளும் ஓகை உரைத்து ஆர்வம் உறப் 1801-3
பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீளப் புறப்பட்டார் 1801-4
20. மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர் 1802-1
அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதல் உடன் 1802-2
முனைவரை உள் எழுந்து அருளுவித்து அவர் தாள் முன் விளக்கும் 1802-3
புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார் 1802-4
21. ஆசனத்தில் பூசனைகள் அமர் வித்து விருப்பின் உடன் 1803-1
வாசம் நிறை திரு நீற்றுக் காப்பு ஏந்தி மனம் தழைப்பத் 1803-2
தேசம் உய்ய வந்த வரைத் திரு அமுது செய்விக்கும் 1803-3
நேசம் உற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார் 1803-4
22. செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி 1804-1
எய்திய பேறு நம்பால் இருந்தவாறு என்னே என்று 1804-2
மை திகழ் மிடற்றினான் தன் அருளினால் வந்தது என்றே 1804-3
உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் 1804-4
23. தூய நல் கறிகள் ஆன அறுவகைச் சுவையால் ஆக்கி 1805-1
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருளத் தங்கள் 1805-2
சேயவர் தம்மில் மூத்த திருநாவுக்கு அரசை வாழை 1805-3
மேய பொன் குருத்துக் கொண்டுவா என விரைந்து விட்டார் 1805-4
24. நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப் பெற்றேன் என்று 1806-1
ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்குப் பெரிய வாழை 1806-2
மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று 1806-3
அல்லல் உற்று அழுங்கிச் சோர அங்கையில் தீண்டிற்று அன்றே 1806-4
25. கையினில் கவர்ந்து சுற்றிக் கண் எரி காந்துகின்ற 1807-1
பை அரா உதறி வீழ்த்துப் பதைப்பு உடன் பாந்தாள் பற்றும் 1807-2
வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்திக் 1807-3
கொய்த இக் குருத்தைச் சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான் 1807-4
26. பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்த 1808-1
வருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும் 1808-2
அரும் தவர் அமுது செய்யத் தாழ்க்க யான் அறையேன் என்று 1808-3
திருந்திய கருத்தினோடும் செழுமனை சென்று புக்கான் 1808-4
27. எரிவிடம் முறையே ஏறித் தலைக் கொண்ட ஏழாம் வேகம் 1809-1
தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகித் தீந்து 1809-2
விரியுரை குழறி ஆவி விடக் கொண்டு மயங்கி வீழ்வான் 1809-3
பரி கலக் குருத்தைத் தாயார் பால் வைத்துப் படி மேல் வீழ்ந்தான் 1809-4
28. தளர்ந்து வீழ் மகனைக் கண்டு தாயரும் தந்தை யாரும் 1810-1
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி 1810-2
விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று 1810-3
துளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ்வார் 1810-4
29. பெறல் அரும் புதல்வன் தன்னைப் பாயினுள் பெய்து மூடிப் 1811-1
புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே 1811-2
அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று 1811-3
விறல் உடைத் தொண்டனார் பால் விருப்பொடு விரைந்து வந்தார் 1811-4
30. கடிது வந்து அமுது செய்யக் காலம் தாழ்கின்றது என்றே 1812-1
அடிசிலும் கறியும் எல்லாம் அழகு உற அணைய வைத்துப் 1812-2
படியில் சீர்த் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம் 1812-3
குடி முழுதும் உய்யக் கொள்வீர் என்று அவர் கூறக் கேட்டு 1812-4
31. அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர் 1813-1
திருந்தும் ஆசனத்தில் ஏறிப் பரிகலம் திருத்தும் முன்னர் 1813-2
இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும் 1813-3
பொருந்திய நீறு நல்கிப் புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில் 1813-4
32. ஆதி நான்மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கிக் 1814-1
காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே 1814-2
மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை 1814-3
யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார் 1814-4
33. அவ்வுரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர் 1815-1
செவ்விய திரு உள்ளத்து ஓர் தடு மாற்றம் சேர நோக்கி 1815-2
இவ் உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால் 1815-3
மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்பு உற்று அஞ்சி 1815-4
34. பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ 1816-1
வருவது என்று உரையார் ஏனும் மாதவர் வினவ வாய்மை 1816-2
தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து 1816-3
பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே 1816-4
35. நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம் 1817-1
யாவர் இத் தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே 1817-2
ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம் 1817-3
பா இசைப் பதிகம் பாடிப் பணி விடம் பாற்று வித்தார் 1817-4
36. தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும் 1818-1
மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானைப் போன்று 1818-2
சேவுகைத்தவர் ஆட் கொண்ட திருநாவுக்கரசர் செய்ய 1818-3
பூவடி வணங்கக் கண்டு புனித நீறு அளித்தார் அன்றே 1818-4
37. பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின் 1819-1
நெறியினைப் போற்றி வாழ்ந்தார் நின்ற அப் பயந்தார் தாங்கள் 1819-2
அறிவரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்குச் 1819-3
சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார் 1819-4
38. ஆங்கவர் வாட்டம் தன்னை அறிந்து சொல் அரசர் கூட 1820-1
ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற 1820-2
பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர் தாமும் 1820-3
தாங்கிய மகிழ்ச்சி யோடும் தகுவன சமைத்துச் சார்வார் 1820-4
39. புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித் 1821-1
திகழ்ந்த வான் சுதையும் போக்கிச் சிறப்புடைத் தீபம் ஏற்றி 1821-2
நிகழ்ந்த அக் கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால் 1821-3
மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம் பெற மரபின் வைத்தார் 1821-4
40. திருந்திய வாச நல் நீர் அளித்திட திருக்கை நீவும் 1822-1
பெருந்தவர் மறையோர் தம்மைப் பிள்ளைகள் உடனே நோக்கி 1822-2
அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன 1822-3
விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார் 1822-4
41. மைந்தரும் மறையோர் தாமும் மருங்கு இருந்து அமுது செய்யச் 1823-1
சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்கக் 1823-2
கொந்து அவிழ் கொன்றை வேணிக் கூத்தனார் அடியாரோடும் 1823-3
அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே 1823-4
42. மா தவ மறையோர் செல்வ மனை இடை அமுது செய்து 1824-1
காதல் நண்பு அளித்துப் பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை 1824-2
மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர் 1824-3
நாதர் தம் பாதம் சேர்ந்து நல் தமிழ்ப் பதிகம் செய்வார் 1824-4
43. அப்பூதி அடிகளார் தம் அடிமையைச் சிறப்பித்து ஆன்ற 1825-1
மெய்ப் பூதி அணிந்தார் தம்மை விரும்பு சொல் மாலை வேய்ந்த 1825-2
இப் பூதி பெற்ற நல்லோர் எல்லை இல் அன்பால் என்றும் 1825-3
செப்பு ஊதியம் கைக் கொண்டார் திருநாவுக்கரசர் பாதம் 1825-4
44. இவ் வகை அரசின் நாமம் ஏத்தி எப் பொருளும் நாளும் 1826-1
அவ்வரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும் 1826-2
செவ்விய நெறியது ஆகத் திருத் தில்லை மன்றுள் ஆடும் 1826-3
நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே 1826-4
45. மான் மறிக் கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற 1827-1
மேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றிப் 1827-2
கான் மலர்க் கமல வாவிக் கழனி சூழ் சாத்த மங்கை 1827-3
நான் மறை நீல நக்கர் திருத் தொழில் நவிலல் உற்றேன் 1827-4
26 திரு நீல நக்க நாயனார் புராணம்
1. பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகயல் உகளும் 1828-1
காய்த்த செந் நெலின் காடு சூழ் காவிரி நாட்டுச் 1828-2
சாத்த மங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால் 1828-3
வாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு 1828-4
2. நன்மை சாலும் அப்பதி இடை நறு நுதல் மடவார் 1829-1
மென் மலர்த் தடம் படிய மற்றவருடன் விரவி 1829-2
அன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம் 1829-3
பன் மறைக் கிடையுடன் பயிற்றுவ பல பூவை 1829-4
3. ஆய்ந்த மெய்ப் பொருள் நீறு என வளர்க்கும் அக் காப்பில் 1830-1
ஏய்ந்த மூன்று தீ வளர்த்துளார் இரு பிறப்பாளர் 1830-2
நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அத்தீயை 1830-3
வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார் 1830-4
4. சீலம் உய்த்த அத் திருமறையோர் செழு மூதூர் 1831-1
ஞாலம் மிக்க நான் மறைப் பொருள் விளக்கிய நலத்தார் 1831-2
ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர் 1831-3
நீல நக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார் 1831-4
5. வேத உள்ளுறை ஆவன விரிபுனல் வேணி 1832-1
நாதர் தம்மையும் அவர் அடியாரையும் நயந்து 1832-2
பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே 1832-3
காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார் 1832-4
6. மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை 1833-1
நித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தே 1833-2
அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா 1833-3
எத் திறத்தன பணிகளும் ஏற்று எதிர் செய்வார் 1833-4
7. ஆய செய் கையில் அமரும் நாள் ஆதிரை நாளில் 1834-1
மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத் 1834-2
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த 1834-3
நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார் 1834-4
8. உறையுள் ஆகிய மனை நின்றும் ஒருமை அன்புற்ற 1835-1
முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன 1835-2
குறைவறக் கொண்டு மனைவியார் தம்மொடும் கூட 1835-3
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லையில் தவத்தோர் 1835-4
9. அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின் 1836-1
துணை மலர்க் கழல் தொழுது பூசனை செயத் தொடங்கி 1836-2
இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த 1836-3
உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார் 1836-4
10. நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார் 1837-1
மாடு சூழ் புடை வலம் கொண்டு வணங்கி முன் வழுத்தித் 1837-2
தேடு மா மறைப் பொருளினைத் தெளிவுற நோக்கி 1837-3
நாடும் அஞ்செழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார் 1837-4
11. தொலைவில் செய் தவத் தொண்டனார் சுருதியே முதலாம் 1838-1
கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற காலை 1838-2
நிலையின் நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேருச் 1838-3
சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி 1838-4
12. விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று 1839-1
எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி 1839-2
ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போலப் 1839-3
பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக 1839-4
13. பதைத்த செய்கையால் மனைவியார் முன் செயப் பந்தம் 1840-1
சிதைக்கு மா தவத் திரு மறையவர் கண்டு தம் கண் 1840-2
புதைத்து மற்றிது செய்தது என் பொறி இலாய் என்னச் 1840-3
சுதைச் சிலம்பி மேல் விழ ஊதித் துமிந்தனன் என்றார் 1840-4
14. மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார் 1841-1
புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனைத் திறத்தில் 1841-2
இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும் 1841-3
நினைவினால் அவர் தம்மை விட்டு அகன்றிட நீப்பார் 1841-4
15. மின் நெடுஞ்சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி 1842-1
தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர 1842-2
முன் அனைந்து வந்து ஊதி வாய் நீர்ப் பட முயன்றாய் 1842-3
உன்னை யான் இனித் துறந்தனன் ஈங்கு என உரைத்தார் 1842-4
16. மற்ற வேலையில் கதிரவன் மலைமிசை மறைந்தான் 1843-1
உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க 1843-2
முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்துக் 1843-3
கற்றை வேணியார் தொண்டரும் கடிமனை புகுந்தார் 1843-4
17. அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார் 1844-1
நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார் 1844-2
செஞ்சொல் நான் மறைத் திரு நீல நக்கர்தாம் இரவு 1844-3
பஞ்சின் மெல் அணைப் பள்ளியில் பள்ளி கொள்கின்றார் 1844-4
18. பள்ளி கொள் பொழுது தயவந்திப் பரமர் தாம் கனவில் 1845-1
வெள்ள நீர்ச் சடையொடு நின்று மேனியைக் காட்டி 1845-2
உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழியக் 1845-3
கொள்ளும் இப் புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள 1845-4
19. கண்ட அப்பெரும் கனவினை நனவு எனக் கருதிக் 1846-1
கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்துத் 1846-2
தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார் 1846-3
அண்டர் நாயகர் கருணையைப் போற்றி நின்று அழுதார் 1846-4
20. போது போய் இருள் புலர்ந்திடக் கோயில் உள் புகுந்தே 1847-1
ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்தம் 1847-2
பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி 1847-3
மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார் 1847-4
21. பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்துஎய்த 1848-1
இன்புறும் திறத்து எல்லையில் பூசனை இயற்றி 1848-2
அன்பு மேம் படும் அடியவர் மிக அணை வார்க்கு 1848-3
முன்பு போல் அவர் வேண்டுவ விருப்ப முடன் முடிப்பார் 1848-4
22. அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாள்¢ல் 1849-1
மன்னு பூம் தராய் வரு மறைப் பிள்ளையார் பெருமை 1849-2
பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம் 1849-3
சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார் 1849-4
23. பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அப்பருவ 1850-1
மண் பெரும் தவப் பயன் பெற மருவு நல் பதிகள் 1850-2
விண் பிறங்கு நீர் வேணியார் தமைத் தொழ அணைவார் 1850-3
சண்பை மன்னரும் சாத்த மங்கையில் வந்து சார்ந்தார் 1850-4
24. நீடு சீர்த் திரு நீலகண்டப் பெரும் பாணர் 1851-1
தோடுலாங் குழல் விறலியார் உடன் வரத் தொண்டர் 1851-2
கூடும் அப் பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான் 1851-3
மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீல நக்கர் 1851-4
25. கேட்ட அப் பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து 1852-1
தோட்டலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள் 1852-2
நாட்டி நீள் நடைக் காவணம் இட்டு நல் சுற்றத்து 1852-3
ஈடமும் கொடு தாமும் முன் எதிர் கொள எழுந்தார் 1852-4
26. சென்று பிள்ளையார் எழுந்து அருளும் திருக் கூட்டம் 1853-1
ஒன்றி அங்கு எதிர் கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு 1853-2
அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார் 1853-3
பொன் தயங்கு நீள் மனை இடை உடன் கொண்டு புகுந்தார் 1853-4
27. பிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்குத் தக்க 1854-1
வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப 1854-2
உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி 1854-3
வள்ளலாரைத் தம் மனை இடை அமுது செய்வித்தார் 1854-4
28. அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணையக் 1855-1
குமுத வாவியில் குளிர் மதிக் கதிர் அணை போதில் 1855-2
இமய மங்கை தன் திருமுலை அமுது உண்டார் இரவும் 1855-3
தமது சீர் மனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார் 1855-4
29. சீல மெய்த் திருத் தொண்டரோடு அமுது செய்து அருளி 1856-1
ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும் 1856-2
காலம் முற்பெற அழுதவர் அழைத்திடக் கடிது 1856-3
நீல நக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார் 1856-4
30. நின்ற அன்பரை நீல கண்டப் பெரும் பாணர்க்கு 1857-1
இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன 1857-2
நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர்ச் 1857-3
சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர் 1857-4
31. ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று 1858-1
ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர 1858-2
தாங்கு நூலவர் மகிழ் உறச் சகோட யாழ்த் தலைவர் 1858-3
பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளி கொண்டார் 1858-4
32. கங்குலில் பள்ளி கொண்ட பின் கவுணியர்க்கு இறைவர் 1859-1
அங்கு நின்று எழுந்து அருளுவார் அயவந்தி அமர்ந்த 1859-2
திங்கள் சூடியை நீல நக்கரைச் சிறப்பித்தே 1859-3
பொங்கு செந்தமிழ் திருப்பதிகத் தொடை புனைந்தார் 1859-4
33. பதிக நான் மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி 1860-1
அதிக நண்பினை நீல நக்கருக்கு அளித்து அருளி 1860-2
எதிர் கொளும் பதிகளில் எழுந்து அருளினார் என்றும் 1860-3
புதிய செந்தமிழ்ப் பழ மறை மொழிந்த பூசுரனார் 1860-4
34. பிள்ளையார் எழுந்து அருள அத்தொண்டர் தாம் பின்பு 1861-1
தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பில எனினும் 1861-2
வள்ளலார் திரு அருளினை வலிய மாட்டாமை 1861-3
உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார் 1861-4
35. மேவு நாளில் அவ் வேதியர் முன்பு போல் விரும்பும் 1862-1
தாவில் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்பச் 1862-2
சேவின் மேலவர் மைந்தராம் திரு மறைச் சிறுவர் 1862-3
பூவடித் தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார் 1862-4
36. சண்பை ஆளியார் தாம் எழுந்து அருளும் எப் பதியும் 1863-1
நண்பு மேம்பட நாள் இடைச் செலவிட்டு நண்ணி 1863-2
வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார் 1863-3
திண் பெரும் தொண்டர் ஆகிய திரு நீலக்கர் 1863-4
37. பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க 1864-1
வருபெரும் தவ மறையவர் வாழி சீகாழி 1864-2
ஒருவர் தம் திருக் கல்லியாணத்தினில் உடனே 1864-3
திருமணத் திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார் 1864-4
38. தரு தொழில் திரு மறையவர் சாத்த மங்கையினில் 1865-1
வருமுதல் பெரும் திருநீல நக்கர் தாள் வணங்கி 1865-2
இரு பிறப்புடை அந்தணர் ஏறுயர்த்தவர் பால் 1865-3
ஒருமை உய்த்துணர் நமி நந்தியார் தொழில் உரைப்பாம் 1865-4
27 நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
1. வையம் புரக்கும் தனிச் செங்கோல் வளவர் பொன்னித் திருநாட்டுச் 1866-1
செய்ய கமலத் தடம் பணையும் செழும் நீர்த் தடமும் புடை உடைத்தாய் 1866-2
பொய்தீர் வாய்மை அருமறை நூல் புரிந்த சீலப் புகழ் அதனால் 1866-3
எய்தும் பெருமை எண் திசையும் ஏறூர் ஏமப் பேர் ஊரால் 1866-4
2. மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகு 1867-1
வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள் 1867-2
சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும்பூகம் 1867-3
காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழுநீர்ச் செய் 1867-4
3. பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது படச் செய்ய 1868-1
துணர் மென் கமலம் இடை இடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன 1868-2
புணர் வெண் புரி நூலவர் வேள்விக் களத்தில் புனைந்த வேதிகை மேல் 1868-3
மணல் வெண் பரப்பின் இடை இடையே வளர்த்த செந்தீமானுமால் 1868-4
4. பெருமை விளங்கும் அப்பதியில் பேணும் நீற்றுச் சைவ நெறி 1869-1
ஒருமை நெறி வாழ் அந்தணர் தம் ஓங்கு குலத்தினுள் வந்தார் 1869-2
இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப் பெற்ற தவத்து 1869-3
அருமை புரிவார் நமி நந்தி அடிகள் என்பார் ஆயினார் 1869-4
5. வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செந்தீ எனத் தகுவார் 1870-1
தூய்மைத் திரு நீற்று அடைவே மெய்ப் பொருள் என்று அறியும் துணிவினார் 1870-2
சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை 1870-3
யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார் 1870-4
6. அவ்வூர் நின்றும் திருவாரூர் அதனை அடைவார் அடியார்மேல் 1871-1
வெவ்வூறு அகற்றும் பெருமான் தன் விரை சூழ் மலர்த்தாள் பணி உறுதல் 1871-2
எவ்வூதியமும் எனக் கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும் 1871-3
தெவ்வூர் எரித்த வரைச்சிலையார் திருப் பாதங்கள் வணங்கினார் 1871-4
7. செம் பொன் புற்றின் மாணிக்கச் செழும் சோதியை நேர் தொழுஞ் சீலம் 1872-1
தம் பற்றாக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து 1872-2
அம் பொன் புரிசைத் திருமுன்றில் அணைவார் பாங்கோர் அரன் நெறியின் 1872-3
நம்பர்க்கு இடமாம் கோயிலின் உட்புக்கு வணங்க நண்ணினார் 1872-4
8. நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்பு உற்று எழுந்த காதல் உடன் 1873-1
அண்ணலாரைப் பணிந்து எழுவார் அடுத்த நிலைமைக் குறிப்பினால் 1873-2
பண்ணுந் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார் 1873-3
எண்ணில் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார் 1873-4
9. எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை எய்துதலும் 1874-1
செழுந்தண் பதியின் இடை அப்பால் செல்லில் செல்லும் பொழுது என்ன 1874-2
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும் 1874-3
அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார் 1874-4
10. கையில் விளங்கும் கனல் உடையார் தமக்கு விளக்கு மிகை காணும் 1875-1
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர் ஆகில் நீரை முகந்து எரித்தல் 1875-2
செய்யும் என்று திருத் தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே 1875-3
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார் 1875-4
11. அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே 1876-1
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த 1876-2
முருகு விரியும் மலர்க் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி 1876-3
உருகும் அன்பர் பணிந்து விழ ஒருவாக்கு எழுந்தது உயர் விசும்பில் 1876-4
12. வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணி மாற 1877-1
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடு வந்து ஏற்றும் என 1877-2
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளாச் 1877-3
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலரால் 1877-4
13. சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார் 1878-1
நன்னீர் பொய்கை நடுப்புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி 1878-2
அந்நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள் 1878-3
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார் 1878-4
14. சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி 1879-1
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி 1879-2
ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன் 1879-3
நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய 1879-4
15. நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரியக் 1880-1
குறையும் தகளிகலுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து 1880-2
மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல் 1880-3
உறையும் பதியின் அவ்விரவே அணைவார் பணி உற்று ஒருப்பட்டார் 1880-4
16. இரவு சென்று தம் பதியில் எய்தி மனைப்புக்கு என்றும் போல் 1881-1
விரவி நியமத் தொழில் முறையே விமலர் தம்மை அருச்சித்துப் 1881-2
பரவி அமுது செய்து அருளிப் பள்ளி கொண்டு புலர் காலை 1881-3
அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார் 1881-4
17. வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம் கொண்டு 1882-1
சிந்தை மகிழப் பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள் 1882-2
முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார் 1882-3
அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார் 1882-4
18. பண்டு போலப் பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுகத் 1883-1
தண்டி அடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வில் அமண் 1883-2
குண்டர் அழிய ஏழ் உலகும் குலவும் பெருமை நிலவியதால் 1883-3
அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர் 1883-4
19. நாத மறை தேர் நமிநந்தி அடிகளார் நல் தொண்டு ஆகப் 1884-1
பூத நாதர் புற்றிடங் கொள் புனிதர்க்கு அமுதுபடி முதலாம் 1884-2
நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரி அணையின் 1884-3
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம விதி விளங்க 1884-4
20. வென்றி விடையார் மதிச் சடையார் வீதி விடங்கப் பெருமாள் தாம் 1885-1
என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு 1885-2
ஒன்றும் செயலும் பங்குனி உத்திரமாம் திருநாள் உயர் சிறப்பும் 1885-3
நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார் 1885-4
21. இன்ன பரிசு திருப் பணிகள் பலவும் செய்தே ஏழ் உலகும் 1886-1
மன்னும் பெருமைத் திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார் 1886-2
அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும் 1886-3
நன்மை பெருக நமி நந்தி அடிகள் தொழுதார் நாம் உய்ய 1886-4
22. தேவர் பெருமான் எழுச்சி திரு மணலிக்கு ஒரு நாள் எழுந்து அருள 1887-1
யாவர் என்னாது உடன் சேவித்து எல்லாக் குலத்தில் உள்ளோரும் 1887-2
மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்தம் 1887-3
காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார் 1887-4
23. பொழுது வைகச் சேவித்துப் புனிதர் மீண்டும் கோயில் புகத் 1888-1
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே 1888-2
இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து 1888-3
முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழ்கின்றார் 1888-4
24. திங்கள் முடியார் பூசனைகள் முடித்துச் செய்யும் கடன் முறையால் 1889-1
அங்கி தனை வேட்டு அமுது செய்து பள்ளி கொள்வீர் என அவர்க்குத் 1889-2
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண 1889-3
எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று 1889-4
25. ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம்புகுந்து 1890-1
வேத நாதர் பூசனையைத் தொடங்க வேண்டும் அதற்கு நீ 1890-2
சீத நன்னீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் எனச் செப்பக் 1890-3
காதலால் மனையார் தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார் 1890-4
26. ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ? மேனியினில் 1891-1
ஏயும் அசைவின் அயர்வாலோ? அறியோம் இறையும் தாழாதே 1891-2
மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து 1891-3
தூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின் கண் 1891-4
27. மேன்மை விளங்கும் திருவாரூர் வீதி விடங்கப் பெருமாள் தாம் 1892-1
மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்து அருளி 1892-2
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் 1892-3
ஆன பரிசு காண்பாய் என்று அருளிச் செய்து அங்கு எதிர் அகன்றார் 1892-4
28. ஆதி தேவர் எழுந்து அருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது 1893-1
ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்த படியே வழிபட்டு 1893-2
மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு 1893-3
நாதனார் தம் திருவாரூர் புகுத எதிர் அந் நகர் காண்பார் 1893-4
29. தெய்வப் பெருமாள் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார் எல்லாரும் 1894-1
மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகிப் பெருகு ஒளியால் 1894-2
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடிகுவித்த 1894-3
கைவைத்து அஞ்சி அவனிமிசை விழுந்து பணிந்து கள்¢சிறந்தார் 1894-4
30. படிவம் மாற்றிப் பழம் படியே நிகழ்வும் கண்டு பரமர் பால் 1895-1
அடியேன் பிழையைப் பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால் 1895-2
குடியும் திருவாரூர் அகத்துப் புகுந்து வாழ்வார் குவலயத்து 1895-3
நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழச் செய்து நிலவுவார் 1895-4
31. நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதி ஆகவே 1896-1
வேறு வேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால் 1896-2
ஏறு சிறப்பின் மணிப் புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும் 1896-3
பேறு திருநாவுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார் 1896-4
32. இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழச் செய்து 1897-1
நன்மை பெருகும் நமிநந்தி அடிகள் நயமார் திருவீதிச் 1897-2
சென்னி மதியும் திருநதியும் அலைய வருவார் திருவாரூர் 1897-3
மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார் 1897-4
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
1. நாட்டார் அறிய முன்னாளில் நன்னாள் உலந்த ஐம் படையின் 1898-1
பூட்டார் மார்பில் சிறிய மறைப் புதல்வன் தன்னைப் புக்கு ஒளியூர்த் 1898-2
தட்டா மரையின் மடுவின் கண் தனி மா முதலை வாய் நின்றும் 1898-3
மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே 1898-4
திருச்சிற்றம்பலம்
திருநின்ற சருக்கம் முற்றிற்று.
This webpage was last updated on 16 May 2004
See Also:
1. Stories of the nAyanmAr in English with Pictures