Home >
நமது பாரத நாட்டுக் கலாசாரத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் அதிலும் குறிப்பாக ஆன்மீகத்திற்கு வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் ஆகியன அடிப்படையாகத் திகழ்கின்றன. வேதங்கள் நியாயவைசேஷிகம், ஸாங்கியம், மீமாம்ஸை முதலிய சாத்திரங்களைப் பின்பற்றுவோருக்கும் சைவம், வைணவம் முதலிய எல்லா மதங்களுக்கும் பொதுவான நூலாகக் கொள்ளப்படுகின்றன. வேதத்தின் அடிப்படையில் எழுந்த ஸ்மிருதி நூல்களும் பொதுமக்களின் ஆசார அனுஷ்டானங்களுக்கும் அரசாட்சிக்கும், பொது மக்களின் நீதி முதலியவற்றுக்கும் ஆதாரமாகக் கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறே, ஆகமங்கள் சிறப்பு நூல்களாகவும், வேதத்திற்கு இணையானதாகவும் அமைந்துள்ளன. சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு, ஆழ்ந்த பக்தியுடன் சிவபெருமானை வழிபட்டு சிவப்பேறடைவதே பொதுவாக சைவசம்பிரதாயத்தின் கொள்கை. தத்துவக்கோட்பாடுகளின் ஆதாரத்திலும், சமய அனுஷ்டானங்களின் அடிப்படையிலும் சைவம் பல பிரிவுகளை உடையது. பாசுபதம், காலாமுகம், காபாலிகம், சைவசித்தாந்தம், ஸோமசித்தாந்தம் ஆகியன அவற்றின் முக்கியப் பிரிவுகள். இவ்வெல்லாப் பிரிவினர்களும் தங்களுக்கு அடிப்படையாக சிவபெருமானால் அருளப்பட்ட ஆகமங்களைத் தனித்தனியே கொண்டுள்ளனர். காலப் போக்கில் அவற்றுள் பல அழிந்து போயின; சில ஆகமங்களே இன்று நமக்குக் கிடைத்துள்ளன. இன்றைய கருத்தரங்கில் நாம் சைவசித்தாந்த ஆகமங்களுள் சிலவற்றைச் சற்று ஆய்வோம்.
ஆகமநூற்கருத்துக்கள்
இன்று நமக்குக் கிடைத்துள்ள சைவாகமங்களின் அடிப்படையில் நோக்குங்கால், அவை நான்கு பெரும் பகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளன; மிக விரிவானதும், நுணுக்கமானதும், தீ¨க்ஷ முதலான பல்வகைப்பட்ட சடங்குகளை விளக்கிக் கூறுவதுமாக அமைந்தது கிரியாபாதம் எனப்படும், அனைத்து உலகங்களுக்கும் உயிர்களுக்கும் ஒப்பற்ற ஒரே இறைவனும், பதி என வழங்கப்படுபவனுமான சிவபெருமானின் உண்மை நிலை, உலகில் பிறந்து இறந்து உழலும் கணக்கற்ற உயிர்களான பசுக்களின் உண்மை இயல்பு, இவ்வுயிர்கள் இன்பதுன்பங்களை நுகர்வதற்கு ஒரே நிலைக்களனாகத் திகழ்வதும், ஜடமானதுமான இவ்வுலகத்தின் தோற்றம், முடிவில் அதன் ஒடுக்கம், தத்துவங்களின் விரிவு ஆகியவற்றைப் பற்றி விரிவாக விளக்குவது ஞானபாதம் அல்லது வித்தியாபாதம். சைவர்கள் அனைவரும் அடிப்படையில் பின்பற்றவேண்டிய நியமங்களை விளக்குவது சரியாபாதமாகும். சைவத்திற்கே உரிய சிறப்பான யோகத்தை விரிவாகக் கூறுவது யோகபாதம். சில ஆகமங்களில் இந்நான்கு பாதங்களும் தனித்து விரிவாகவும், சில ஆகமங்களில் சுருக்கமாவும் காணப்படுகின்றன. வித்தியாபாதம் விளக்கும் தத்துவங்களின் வெளிப்படையான விளக்கமே கிரியாபாதம் எனவும் கொள்ளலாம்.
ஆகமங்கள் ஸம்ஹிதை என்றும், ஆலய அமைப்பு, பிரதிஷ்டை முதலியவற்றை விரிவாக விளக்கும் பிரதிஷ்டாதந்திரம் எனவும் குறிக்கப்படுகின்றன. சைவசித்தாந்தத்தில் 28 ஆகமங்கள் மூல ஆகமங்கள் எனவும், அதன் அடிப்படையில் எழுந்த 207 ஆகமங்கள் உபாகமங்கள் எனவும் வழங்கப்படுகின்றன. 28 மூலாகமங்களில் 10 சிவபேதம் எனவும், 18 ருத்திரபேதமெனவும் கொள்ளப்படுகின்றன.
ஆகமங்களின் பதிப்புகள்
அவற்றுள், சிவபேதத்தைச் சேர்ந்த 5 ஆகமங்கள் கடந்த நூறாண்டுகாலத்தில் பதிப்பிக்கப்பட்டு அச்சில் வெளிவந்துள்ளன. காமிகாகமம் (பூர்வபாகம், உத்தரபாகம் இரண்டும் தனித்தனியே) 1890 ஆம் ஆண்டு கிரந்தலிபியில் சென்னைச் சிவஞானபோதயந்திரசாலையில் மயிலை அழகப்பமுதலியாரால் அச்சிடப்பட்டு வெளியானது; பின்னர்த் தமிழில் பதவுரையுடனும், மொழிபெயர்ப்புடனும் வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் சில வருடங்களில் காரணாகமமும், ஸ¤ப்ரபேதாகமமும் அவ்வாறே கிரந்தலிபியில் அச்சிடப்பட்டன. புதுச்சேரி பிரெஞ்ச் இந்திய ஆராய்ச்சி நிலயத்தின் (French Institute) வாயிலாகப் பல சுவடிகளை ஒப்புநோக்கி நன்கு திருந்திய பதிப்பாக பல அடிக்குறிப்புகளுடன் முதன்முதலில் அஜிதாகமமும், தீப்தாகமமும் சில வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. சைவசித்தாந்தசமயத்தின் கிரியைகளைப் பற்றி இவ்வைந்து ஆகமங்கள் மூலம் நமக்கு ஓரளவு முக்கியச் செய்திகள் கிடைக்கின்றன. ஆயினும், சிவபேதத்தைச் சேர்ந்த மற்ற ஐந்து ஆகமங்களான யோகஜம், சிந்தியம், ஸ¥க்ஷ்மம், ஸஹஸ்ரம், அம்சுமான் ஆகியன இதுநாள் வரை பதிப்பிக்கப்படவே இல்லை; ஏனைய ஆகமங்களைப் போல் சில பொதுவான செய்திகளை அவை கொண்டிருப்பினும், பல முக்கிய அரிய செய்திகளையும், இதுவரை கண்டிராத சில கிரியைகளையும், தத்துவக்கோட்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளன. தற்காலத்தில் யாரேனும், இவ்வாகமகங்களைச் சற்றேனும் படித்திருக்கிறார்களா என்பது ஐயம், பெரும்பாலோர் அவை உள்ளனவா என்றே ஐயப்படுவர். சிவபெருமான் அருட்டுணையால் இவ்வாகமங்களின் சுவடிகளும், காகிதக் கையெழுத்துப் பிரதிகளும் புதுச்சேரி பிரெஞ்ச் இந்திய ஆராய்ச்சி நிலயத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் என்னுடைய இந்த சிறிய கட்டுரையை அறிஞர்கள் முன்னர் வாசிக்கிறேன்.
யோகஜாகமம்
பொதுவாக நோக்கின், யோகஜாகமம் மற்ற ஆகமங்களில் காணப்படாததும், மிகப் பழமையானதாக இருக்குமோ எனத் தோன்றுவதுமான சில கிரியைகளை விளக்குகின்றது. Colophon என ஆங்கிலத்தில் கூறப்படும் படலபுஷ்பிகாக்கள் சிலவற்றில் இவ்வாகமம் பிரதிஷ்டாதந்திரம் எனக் குறிக்கப்படுகிறது. அதற்கேற்ப, சிவலிங்கப் பிரதிஷ்டை, சிவாலயத்தில் காணப்படும் ஏனைய தெய்வமூர்த்திகளின் பிரதிஷ்டை ஆகியன விரிவாகவே விளக்கப்படுகின்றன. சௌசம், தந்ததாவனம், முதலான நித்யகர்மானுஷ்டானங்களைச் செய்யும் முறையை விரிவாகக் கூறுகிறது நித்தியானுஷ்டானவிதி படலம். பின்னர், ஸந்தியாவந்தனத்திற்கு அங்கமான ப்ராசனம், மார்ஜனம் ஆகியவற்றின் செய்முறை விளக்கப்படுகிறது. இக்கிரியைகளில் வேதமந்திரங்களையே கூறவேண்டும் என்பது இங்கு விதிக்கப்படுகிறது:
सूर्यश्चेति मन्त्रेण उदकं प्राश्य यत्नतः . . . . . दधिक्राव्णोति प्रोक्षयेत् .
அவ்வாறே, ஸந்தியாவந்தனமுடிவில், வ்யோமவ்யாபீ மந்திரம், புருஷஸ¥க்தம், விஷ்ணுஸ¥க்தம் ஆகியமந்திரங்களையும் ஜபிக்கவேண்டும் என்னும் விதியையும் நாம் காண்கிறோம். ஸ்நானவிதியில், வாருணம், பஸ்மஸ்நானம், மாஹேந்திரம், மாருதம், மந்திரஸ்நானம் ஆகிய ஐவகை ஸ்நானங்கள் விதிக்கப்படுகின்றன. ஆபோஹிஷ்டா எனத் தொடங்கும் மந்திரமும், பாவமானமந்திரமும் மந்திரஸ்நானத்திற்குரியனவாகக் கூறப்படுகின்றன. ஆனால், 12 ஆம் நூற்றாண்டில் மத்தியப்பிரதேசத்தில் இயற்றப்பட்ட ஸோமசம்புபத்ததியில்,
सद्योजातादिभिर्मन्त्रैरम्भोभिरभिषेचयेत् . मन्त्रस्नानं भवेदेवं . . . என்று நாம் காண்கிறோம்.
ஆலயத்தில் விருஷபம் முதல் பலிபீடம் ஈறான பரிவாரதேவதைகளை வழிபடும்போது பல வேதமந்திரங்களை ஜபிக்கவேண்டுமென்னும் விதியை யோகஜாகமத்தில் காண்கிறோம். அவை
वृषादिबलिपीठान्तं परिवारं प्रपूजयेत् . पूर्वे तु वृषभं पूज्य तीक्ष्णशृङ्गायमन्त्रतः . आग्नेय्यां दुर्गां . . . कात्यायनीति मन्त्रतः . नैरृत्यां गणेशं सम्पूज्य गणानां त्वेति मन्त्रतः . सौम्ये विष्णुम् इदं विष्ण्विति मन्त्रतः . கருவறையில் பூஜை செய்யுங்கால் கீழ்கண்ட மந்திரங்களைக் கூறவேண்டும். पञ्चब्रह्मशिवाङ्गैश्च त्र्यम्बकं विष्णुसूक्तकम् . ब्रह्मसूक्तं गौरीसूक्तं श्रीरुद्रं पवमानकम् . षट्सूक्तारुणं चैव त्वरितरुद्रमतः परम् .
மஹோத்ஸவம் 16 தினங்களுக்குக் கொண்டாடப்படவேண்டும்; துவஜாரோஹணத்திற்கு முன் செய்யப்படும் விருஷயாகத்தில் பல வேதமந்திரங்கள் கூறப்படவேண்டும் முதலியன மஹோத்ஸவவிதிபடலம் கூறும் சில முக்கியமான செய்திகள். பலபாகவிதி என்னும் படலம் சில அரிய செய்திகளை உடையது: சிவாலயத்தையும், அதன் பிராகாரங்களையும் செங்கற்களால் இழைத்தல், பல திரவியங்களைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தல், செய்வித்தல் முதலான பல புண்ணியச் செயல்களைச் செய்வோர் அடையும் பயன்கள் இங்கு விளக்கிக் கூறப்படுகின்றன. இதுவரை அச்சில் வராததும், மிகப் பழமையானதும், சோழமன்னர்கள் நிறைய நிவந்தங்களைத் தந்து பல சிவாலயங்களில் வக்காணிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட பெருமை கொண்டதுமான சிவதர்மம் என்னும் பழமையான நூலிலும் மேற்கண்ட பல சிவதருமங்கள் மிக விரிவாகக் கூறப்படுகின்றன. குறிப்பாக, ஐந்து, எட்டு ஆகிய அத்தியாயங்கள் இச்செய்திகளை மிக விரிவாகக் கொண்டவை. உதாரணமாக,
घृतधाराफलं तस्य माघे पौर्णिमपर्वणि .. १९ .. जागरं गीतनृत्ताद्यैः सकृत् कृत्वा तु पर्वणि . मन्वन्तरशतं साग्रं शिवलोके महीयते .. २० .. छत्राभिरामनाट्याद्यं शिवस्यायतनाग्रतः . सम्यक् प्रेक्षणकं दत्वा रुद्रलोके महीयते .. २१ .. स्वरूपः सुभगः श्रीमान् परिहृष्टोऽत्र जायते . सप्तद्वीपसमुद्रायाः क्षितेरधिपतिर्भवेत् .. २२ .. शिवस्योपरि यः कुर्यात् सुघनं पुष्पमण्डपम् . शोभितं पुष्पमालाद्यैः आपीठान्तं प्रलम्बिभिः . अत्याश्चर्यैर्महायानैः दिव्यपुष्पोपशोभितैः . सर्वैः परिवृतः श्रीमान् गच्छेच्छिवपुरं सुखी .
மேற்கண்ட சுலோகங்களுடன் ஒத்த கருத்தைக் கொண்டவை திருஞானசம்பந்தப்பெருமானின் பெரும்பான்மையான தேவாரப்பதிகங்களின் திருக்கடைக்காப்புப் பாடல்கள். உதாரணமாக, முதல் திருமுறை, ஒன்பதாம் பதிகம், பத்தாம் பாடலும், பதினைந்தாம் பதிகத்தின் பதினோராவது பாடலுமாகும்
ஏதத்தினை இல்லா இவைபத்தும் மிசை வல்லார் கேதத்தினை இல்லார் சிவகெதியைப் பெறுவாரே. பலம் மல்கிய பாடல்லிவை பத்தும் மிக வல்லார் சிலமல்கிய செல்வனடி சேர்வர் சிவகதியே..
அசிந்தியவிசுவஸாதாக்கியமென்னும் அச்சில் வராத மற்றோர் ஆகமத்தின் 52 மற்றும் 53 ம் படலங்கள் பல சிவபுண்ணியங்களையும், அதைச் செய்வோர் அடையும் பல நற்பேறுகளையும் பட்டியலிட்டுக் கூறுவதும் இங்கு நினைவு கூரத்தக்கது. இவ்விரு படலங்களையும் பதினாறாம் நூற்றாண்டில் தில்லையில் வாழ்ந்த மிகப் புகழ்பெற்ற சைவசமய ஆசாரியரான மறைஞானதேசிகர் “சிவபுண்ணியத்தெளிவு” என்னும் தமது மிக அருமையான நூலில் மொழிபெயர்த்துள்ளார். அந்நூல் திருவாவடுதுறை ஆதீனப்பதிப்பாக ஒருமுறை வெளிவந்துள்ளது.
அடுத்து யோகஜாகமத்தில் நாம் காண்பது சிவபெருமானுக்கு ஆடல் பாடல்களால் வழிபாடாற்றும் தேவதாசிகளுக்கும், மற்றும் இசை வாணர்களுக்கும் செய்யவேண்டிய தீ¨க்ஷயை விளக்கும் ருத்திரகணிகாதீக்ஷ¡விதி என்னும் படலம். இதில், தினமும் புஷ்பாஞ்ஜலி செய்யும் போது இசைக்கவேண்டிய பலவித ராகங்கள், ஆடவேண்டிய நாட்டியவகைகள் ஆகியனவும் விளக்கிக் கூறப்படுகின்றன. சிவபெருமான் மீது துதியாகப் பல உரைநடை வாக்கியங்களும் இங்கு காணப்படுவது ஒரு சிறப்பு.
அடுத்து, அக்னிகார்யவிதியில் அக்னியை கார்ஹபத்யம், தக்ஷ¢ணாக்னி, ஆஹவனீயம் என மூன்றாகப் பிரித்தல், கீழ்க்கண்டவாறு பல வேதமந்திரங்களை ஜபித்தல் ஆகியன இங்குள்ள சிறப்பு.
अदितेऽन्वादिमन्त्रेण परिषेचनमाचरेत् . युक्तोवाहादिमन्त्रेण . . . अग्निमुखं प्रकल्पयेत् . कर्मान्ते चित्ताहुतिं कुर्यात् . . . राष्ट्रभृत् तदा .
மாறாக, ஸோமசம்புபத்ததியில் இதைப் போன்று எந்த வாக்கியத்தையும் நாம் காணவில்லை.
ஆசாரியரின் தகுதிகளைப் பற்றிக் கூறுமிடத்து, ஆதிசைவ ஆசாரியனானவர் வேதம், வேதாந்தம் ஆகிய சாத்திரங்களில் நிபுணராகவும், சிவபெருமான், அக்னி, தன்னுடைய குரு ஆகிய மூவரையும் நன்கு வழிபடுபவராகவும், சைவ ஆகமங்களில் நல்ல தேர்ச்சியும் உடையவராயிருக்க வேண்டும் என இவ்வாகமம் கூறுவது மற்றுமோர் அரிய செய்தி. மறைஞானசம்பந்தரும் தன்னுடைய சைவசமயநெறியில் ஆசாரியரின் கல்வித்தகுதியைக் கூறுமிடத்து,
ஆரியன்பா லன்பாகி யாய்ந்தா கமமனைத்து நேரியவே தாந்த நிலையும். (குறள், 21)
எனக் கூறுவது இங்கு நோக்கத்தக்கது. இக்குறளுக்கு உரை வரைந்த ஆறுமுகநாவலரவர்கள் இங்கு வேதாந்தமென்றது வேதத்தின் ஞானகாண்டமான உபநிடதங்களும், பிரம்மசூத்திரமும், வேதசிவாகமமிரண்டையும் நன்குணர்ந்து
वयं वेदशिवागमयोर्भेदं न पश्यामः। वेदोऽपि शिवागमः
என்ற அடிப்படையில் பிரம்மசூத்திற்கு உரை வகுத்த ஸ்ரீகண்டபாஷியமும் கொள்ளப்படவேண்டும் எனக் கூறுவதும் நோக்கத்தக்கது. எனினும், காரணாகமத்தில் அவ்வாறு காணப்படவில்லை. சிவலிங்கபிரதிஷ்டாவிதி படலத்தில்
ब्रह्मजज्ञानं, इदं विष्ण्विति, मधुवाता, घृतं मिमिक्ष्वेति
முதலிய வேதமந்திரங்களை யாகசாலையில் ஜபம் செய்யவேண்டுமென்னும் விதி காணப்படுகிறது. ரத்னலிங்கபிரதிஷ்டாவிதி ரத்னங்களாலான லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்யும் முறையை விளக்குகிறது. விபவநிச்சயம் என்னும் படலம் சிவாலயத்தில் அர்ச்சனை செய்யும் அர்ர்ச்சகர்கள், பரிசாரகர்கள், மாலைகட்டுவோர், குயவன், தேவதாசிகள், வண்ணான் முதலியோரின் எண்ணிக்கைகளையும், பிற செய்திகளையும் கூறுகிறது.
சிந்தியாகமம்
அச்சிலேறாத இவ்வாகமம் நிறைய படலங்களைக் கொண்டது; மந்திரோத்தரபடலத்தில் ஆகமமந்திரங்களை ச்¢வம், மஹேசம், ஸதாசிவம் என்னும் மூன்று வகையாகப் பிரித்தல், அகாராதிக்ஷகாராந்தமான 16 ஸ்வரங்களையும் ஜீவவர்ணம் எனப் பிரித்தல் முதலியன கூறப்படுகின்றன.
अकारादिक्षकारान्तं जीववर्णं षोडशस्वरम् .
தமிழ் மொழி இலக்கணத்திலும் அவ்வாறே ஸ்வராக்ஷரங்கள் உயிர் எழுத்துக்கள் எனப் பிரிக்கப்படுவது நாம் எல்லோருமறிந்த ஒன்று.
நித்தியானுஷ்டானவிதியில் வாருணம், ஆக்னேயம், மானஸம் (அதாவது மந்திரம்) ஆகிய மூவகை ஸ்நானங்களே விதிக்கப்படுகின்றன. ஸந்தியாவந்தனத்தை போதாயனஸ¥த்ரமுறைப்படியே செய்யவேண்டும் என்னும் விதியும் காணப்படுகிறது.
तस्माद्बोधायनेनैव सन्ध्यामन्त्रक्रमं शृणु .
சிவார்ச்சனவிதிபடலம் மிக விரிவானதொன்று; ஆத்மசுத்தி முதலான ஐவகைச் சுத்திகள் மிகவும் விரிவாக விளக்கப்படுகின்றன. ஆத்மசுத்தி ஒன்பது பகுதிகளை உடையது:
उपस्थानं भस्मसु स्नानं पञ्चग्रन्थिहरं तथा . शिवाङ्गोपकरन्यासमङ्गन्यासस्थितिर्भवेत् . अष्टत्रिंशत्कलान्यासम् अक्षरन्यासमेव च .
உபஸ்தானமெனப்படும் காயத்ரீஜபம் ஆலயத்தில் ஸ¥ரியப்பெருமான் சந்நிதியில் செய்யப்படவேண்டியது, உறுதியான ஆசனமும், மூன்று முறை பிராணாயாமம் செய்தலும் பஞ்சகிரந்திஹரம் எனப்படுவது முதலியன இங்கு கூறப்படும் முக்கியச் செய்திகள். ஸதாசிவன் தொடங்கி அனைத்திலும் சிவபெருமான் ஒருவரே அந்தர்யாமியாகவும், அவை யாவற்றுக்கும் ஆன்மாவாகவும் விளங்குகிறார் என்பதைப் பின் வரும் சுலோகம் மிக அழகாக எடுத்துரைப்பதைக் காணலாம்:
पुष्पेषु मधुवज्ज्ञेयः तिलेषु तैलवत्तथा . देहेषु प्राणवत् प्राणः शिवः सदाशिवस्य तु .
“பூக்களில் மதுவைப் போன்றும், எள்ளில் எண்ணெயைப் போலும், உடலில் பிராணசக்தியைப் போன்றும் சிவபெருமான் ஸதாசிவருக்குப் பிராணசக்தியாக விளங்குகிறார்” அடுத்து, ஈசானம் முதலான பஞ்சபிரஹ்மங்கள், ஹ்ருதயம் முதலான ஆறு அங்கங்கள் ஆகியவற்றிற்குத் தனித்தனியே அவற்றின், நிறம், உருவம், சக்திகள் ஆகியனவும் எடுத்துரைக்கப்படுவது ஓர் அரிய செய்தி. ஈசானன் முதலியவற்றுக்கு முறையே அம்பிகா, குணாபீ, கங்கா, கௌரீ, உமாதேவீ ஆகியோர் சக்திகள். மேற்கண்ட செய்திகள் மற்ற ஆகமங்களில் பெரும்பாலும் காணப்படவில்லை. அதைப் போன்றே அஷ்டவித்தியேசுவரர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய சக்திகள் கூறப்பட்டுள்ளன.
மற்றொரு படலம் சிவபூஜையினைச் சுருக்கமாக விளக்குகிறது. அதில் ஸதாசிவனுடைய தியானம் சற்று வேறுவிதமாகவும், சைவாகமநூலில் காண அரிதானதாகவும் உள்ளது.
त्वं शब्दनिलयं योगी असिशब्दे व्यवस्थितम् . तत्त्वमस्यादिवाक्यार्थं . . . स ब्रह्मा स शिवः सेन्द्रः सोऽक्षरः परमः स्वराट् . ऋतं सत्यमिति ख्यातं परं ब्रह्म परात्परम् . ऊर्ध्वरेतो विरूपाक्षं विश्वरूपमुमापतिम् . एवं सदाशिवं ध्यायेत् . . .
விஷ¤வாயனபூஜாவிதி என்னும் படலத்தில் விஷ¤, அயனம் முதலிய புண்ணியகாலங்களில் செய்யவேண்டிய விசேஷ பூஜை விரித்துக் கூறப்படுகிறது. புஷ்பாஞ்ஜலி செய்யும் போது இசைக்கவேண்டிய கீழ்க்காணும் தோத்திரம் மிக அருமையானது.
उत्पलैः पङ्कजैर्दूर्वैः क्रमेणार्चयेच्छिवम् . विघ्नराजार्च्यते तुभ्यं सदाशिवाय नमो नमः . गाणपाभ्यर्च्यते तुभ्यं व्योमव्यापि नमो नमः . सुब्रह्मण्यार्च्यते तुभ्यं सर्वव्यापिन् नमो नमः . सूर्यसोमार्च्यते तुभ्यं ज्योतीरूपाय ते नमः . गिरिकन्यार्च्यते तुभ्यं हौं शिवाय नमो नमः .
தீ¨க்ஷகளை மிக விரிவாக விளக்கும் தீக்ஷாவிதிபடலத்தில் மனிதர்கள் எல்லோருக்கும் அவர்களுடைய ஜாதிபேதங்களை நோக்காது தீ¨க்ஷ செய்விக்கப்படவேண்டும் எ ன்னும் வாக்கியம் காணப்படுகிறது.
जातिभेदा न विद्यन्ते सर्वमानुषं दीक्षयेत् .
தத்துவநிர்ணயவிதி என்னும் படலம் தத்துவங்களின் தோற்றம், உலகின் உற்பத்தி, தீக்ஷைகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்குகிறது. மனித உடலிலமைந்துள்ள நாடிகளைப் பற்றிய விளக்கக்கள் ஸமாதிவிதி என்னும் படலத்திலும், ஆத்மதத்துவம், வித்தியாதத்துவம், சிவதத்துவம், நிவிருத்தி முதலான ஐந்து கலைகள், ஸரஸ்வதீ முதலிய சக்திகள் ஆகிய ஒவ்வொன்றின் மீதும் பாவனை எனப்படும் ஆழ்ந்த தியானத்தை மேற்கொள்ளுதல் ஆகியன ஸமாதிராஜவிதி என்னும் படலம் கூறும் அரிய செய்திகள். பாசத்தளையில் கட்டுண்டு உழலும் ஆன்மாவான பசுவின் தன்மை கீழ்க்காணுமாறு விளக்கப்படுகிறது:
किञ्चिज्ज्ञो मलिनः शुद्धः चैतन्यो माययावृतः . कर्ता भोक्ता शरीराद्यैः कृती व्यापी तु मूर्तिमान् . निर्गुणो निष्क्रियश्चैव शिवत्वप्राप्तिमान् भवेत् . शिवत्वप्राप्तिमान् भवेत् என்னும் வாக்கியம் இங்கு ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. பசுவின் பரியாய நாமங்களாக अणुरात्मा च जीवश्च पशुः पुद्गल एव च . क्षेत्रज्ञः पुरुषश्चैव पञ्चविंशक इत्यपि . पशुरित्यादिनामानि . . . கூறப்படுகின்றன.
இவ்வாறாக, யோகஜம், சிந்தியம் என்னும் இதுவரை பதிப்பிக்கப்படாத இரு மூல ஆகமங்களின் முக்கிய விஷயங்களைச் சுருக்கமாக நாம் கண்டோம். ஏனைய ஆகமங்களைப் பற்றிப் பிரிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம்.
See Also :
1. Shivagama
2. Agamas - Related Scripture
3. Upagamas of Shivagamas