6 வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்
திருச்சிற்றம்பலம்
6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்
28 திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்
1. வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் 1899-1
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத 1899-2
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர் 1899-3
பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம் 1899-4
2. சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார் தம் 1900-1
மன்னிய சைவத் துறையின் வழி வந்த குடி வளவர் 1900-2
பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால் 1900-3
கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர் 1900-4
3. அப் பதி தான் அந்தணர் தம் கிடைகள் அரு மறை முறையே 1901-1
செப்பும் ஒலி வளர் பூகச் செழும் சோலை புறம் சூழ 1901-2
ஒப்பில் நகர் ஓங்குதலால் உகக் கடை நாள் அன்றியே 1901-3
எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளதால் 1901-4
4. அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள் 1902-1
விரி சுடர் மா மணிப் பதணம் மீது எறிந்த திரை வரைகள் 1902-2
புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில் 1902-3
வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்குமால் 1902-4
5. வளம் பயிலும் புறம் பணைப் பால் வாசப் பாசடை மிடைந்த 1903-1
தளம் பொலியும் புனல் செந்தாமரைச் செவ்வித தட மலரால் 1903-2
களம் பயில் நீர்க் கடல் மலர்வது ஒரு பரிதி எனக் கருதி 1903-3
இளம் பரிதி பல மலர்ந்தாற் போல்ப உள இலஞ்சி பல 1903-4
6. உளம் கொள் மறை வேதியர் தம் ஓமத் தூமத்து இரவும் 1904-1
கிளர்ந்த திரு நீற்று ஒளியில் கெழுமிய நண் பகலும் அலர்ந்து 1904-2
அளந்து அறியாப் பலூழி ஆற்றுதலால் அகல் இடத்து 1904-3
விளங்கிய அம்மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை 1904-4
7. பரந்த விளைவயல் செய்ய பங்கயமாம் பொங்கு எரியில் 1905-1
வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய் 1905-2
நிரந்தரம் நீள் இலைக் கடையால் ஒழுகுதலால் நெடிது அவ்வூர் 1905-3
மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளதால் 1905-4
8. வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண்மதியம் 1906-1
சோலை தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்ப் 1906-2
பால் அணைந்து மதுத் தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி 1906-3
மாலை எழும் செவ்வொளிய மதியம் போல் வதியுமால் 1906-4
9. காமர் திருப்பதி அதன் கண் வேதியர் போல் கடி கமழும் 1907-1
தாமரையும் புல்லிதமும் தயங்கிய நூலும் தாங்கித் 1907-2
தூமரு நுண் துகள் அணிந்து துளி வருகண்ணீர் ததும்பித் 1907-3
தேமரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடுமால் 1907-4
10. புனைவார் பொன் குழை அசையப் பூந்தானை பின் போக்கி 1908-1
வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குற வெண் சுதை ஒழுக்கும் 1908-2
கனை வானமுகில் கூந்தல் கதிர் செய் வடமீன் கற்பின் 1908-3
மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம் பொலிவ மாடங்கள் 1908-4
11. வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப் பண்ணை தொறும் 1909-1
பூழியுற வகுத்து அமைத்துப் பொன் புனை கிண்கிணி ஒலிப்ப 1909-2
ஆழி மணிச் சிறு தேர் ஊர்ந்த அவ்விரதப் பொடியாடும் 1909-3
வாழி வளர் மறைச் சிறார் நெருங்கியுள மணி மறுகு 1909-4
12. விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம் 1910-1
தொடு குடுமி நாசி தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல் 1910-2
உடுஎனு நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால் 1910-3
நெடு விசும்பு தளிப்பது என நெருங்கியுள மருங்கு எல்லாம் 1910-4
13. மடை எங்கும் மணிக்குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம் 1911-1
புடை எங்கும் மலர்ப் பிறங்கல் புறம் எங்கும் மகப் பொலிவு 1911-2
கிடை எங்கும் கலைச் சூழல் கிளர் எங்கும் முரல் அளிகள் 1911-3
இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி 1911-4
14. பிரமபுரம் வேணுபுரம் புகலி பெருவெம் குரு நீர்ப் 1912-1
பொருவில் திருத் தோணிபுரம் பூம்தராய் சிரபுரம் முன் 1912-2
வருபுறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சை வயம் 1912-3
பரவு திருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால் 1912-4
15. அப்பதியின் அந்தணர் தம் குடி முதல்வர் ஆசில் மறை 1913-1
கைப்படுத்த சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச் 1913-2
செப்பும் நெறி வழிவந்தார் சீவபாத இருதயர் என்று 1913-3
இப் புவி வாழத் தவம் செய் இயல்பினார் உளர் ஆனார் 1913-4
16. மற்றவர் தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு 1914-1
பெற்றியினார் எவ்வுலகும் பெறற்கு அரிய பெருமையினார் 1914-2
பொற்புடைய பகவதியார் எனப் போற்றும் பெயர் உடையார் 1914-3
கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார் 1914-4
17. மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார் 1915-1
அரவு அணிந்த சடை முடியார் அடியலால் அறியாது 1915-2
பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய் 1915-3
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள் 1915-4
18. மேதினி மேல் சமண் கையர் சாக்கியர் தம் பொய்ம்மிகுந்த 1916-1
ஆதி அருமறை வழக்கம் அருகி அரன் அடியார் பால் 1916-2
பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழியக் கண்டு 1916-3
ஏதமில் சீர் சிவ பாத இருதயர் தாம் இடர் உழந்தார் 1916-4
19. மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார் 1917-1
அனையநிலை தலை நின்றே ஆய சேவடிக் கமலம் 1917-2
நினைவுற முன் பர சமயம் நிராகரித்து நீர் ஆக்கும் 1917-3
புனை மணிப்பூண் காதலனைப் பெறப் போற்றும் தவம் புரிந்தார் 1917-4
20. பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலித் 1918-1
திருத்தோணி வீற்று இருந்தார் சேவடிக் கீழ் வழிபட்டுக் 1918-2
கருத்து முடிந்திடம் பரவும் காதலியார் மணி வயிற்றில் 1918-3
உருத் தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளதாக 1918-4
21. ஆள் உடையாளுடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி 1919-1
மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறைநூல் முறைச் சடங்கு 1919-2
நாள் உடைய ஈரைந்து திங்களினும் நலம் சிறப்பக் 1919-3
கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வ்வுறுநாள் 1919-4
22. அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே 1920-1
பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழத் 1920-2
திருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத் 1920-3
தருக்கொழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க 1920-4
23. தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறி 1921-1
எண் திசையும் தனி நடப்ப ஏழ் உலகும் குளிர் தூங்க 1921-2
அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக 1921-3
வண் தமிழ் செய்தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப 1921-4
24. திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற 1922-1
மிசை உலகும் பிறவுலகும் மேதினியே தனி வெல்ல 1922-2
அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல 1922-3
இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக 1922-4
25. தாளுடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற 1923-1
நாளுடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க 1923-2
வாளுடைய மணிவீதி வளர்காழிப் பதிவாழ 1923-3
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக 1923-4
26. அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமயப் 1924-1
பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி தொறும் 1924-2
தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சராசரங்கள் எலாம் 1924-3
சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார் 1924-4
27. அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர் 1925-1
எப்பெயரினோரும் அயல் எய்தும் இடையின்றி 1925-2
மெய்ப்படு மயிர்ப் புளகம் மேவி அறியாமே 1925-3
ஓப்பில் களி கூர்வதோர் உவப்புற உரைப்பார் 1925-4
28. சிவன் அருள் எனப் பெருகும் சித்தம் மகிழ் தன்மை 1926-1
இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார் 1926-2
கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான் 1926-3
அவன் வருநிமித்தம் இது என்று அதிசயித்தார் 1926-4
29. பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும் 1927-1
தே மருவு தாதோடு துதைந்த திசை எல்லாம் 1927-2
தூ மருவு சோதி விரியத் துகள் அடக்கி 1927-3
மா மலய மாருதமும் வந்து அசையும் அன்றே 1927-4
30. மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பில் 1928-1
சோலை மலர் போல மலர் மா மழை சொரிந்தே 1928-2
ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும் 1928-3
சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார் 1928-4
31. பூத கண நாதர் புவி வாழ அருள் செய்த 1929-1
நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார் 1929-2
ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவா 1929-3
வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும் 1929-4
32. பயன் தருவ ப·றருவும் வல்லிகளும் மல்கித் 1930-1
தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும் 1930-2
வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா 1930-3
நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம் 1930-4
33. அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச் 1931-1
சங்கம் படகம் கருவி தாரை முதலான 1931-2
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் 1931-3
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம் 1931-4
34. இரும் புவனம் இத்தகைமை எய்த அவர் தம்மைத் 1932-1
தரும் குல மறைத் தலைவர் தம் பவன முன்றில் 1932-2
பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே 1932-3
அரும் திரு மகப் பெற அணைந்த அணி செய்வார் 1932-4
35. காதல் புரி சிந்தை மகிழக் களி சிறப்பார் 1933-1
மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார் 1933-2
சூத நிகழ் மங்கல வினைத் துழனி பொங்கச் 1933-3
சாதக முறைப் பல சடங்கு வினை செய்வார் 1933-4
36. மா மறை விழுக்குல மடந்தையர்கள் தமில் 1934-1
தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல் மயில் என்னத் 1934-2
தூ மணி விளக்கொடு சுடர்க் குழைகள் மின்னக் 1934-3
காமர் திரு மாளிகை கவின் பொலிவு செய்வார் 1934-4
37. சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி 1935-1
உண்ணிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார் 1935-2
வெண் முளைய பாலிகைகள் வேதி தொறும் வைப்பார் 1935-3
புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார் 1935-4
38. செம் பொன் முதலான பல தான வினை செய்வார் 1936-1
நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார் 1936-2
வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர் 1936-3
நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார் 1936-4
39. ஐயவி உடன் பல அமைத்த புகையாலும் 1937-1
நெய் அகில் நறுங்குறை நிறைத்த புகையாலும் 1937-2
வெய்ய தழல் ஆகுதி விழுப் புகையினாலும் 1937-3
தெய்வ மணம் நாறவரு செய் தொழில் விளைப்பார் 1937-4
40. ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர் 1938-1
நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த 1938-2
தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின் 1938-3
மேய விதி ஐயிரு தினத்தினும் விளைத்தார் 1938-4
41. நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்திச் 1939-1
சேம உதயப் பரிதியில் திகழ் பிரானைத் 1939-2
தாமரை மிசைத் தனி முதல் குழவி என்னத் 1939-3
தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார் 1939-4
42. பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால் 1940-1
அரு மறை குழைத்த அமுது செய்து அருளுவாரைத் 1940-2
தருமிறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே 1940-3
திருமுலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார் 1940-4
43. ஆறுலவு செய்ய சடை ஐயர் அருளாலே 1941-1
பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு 1941-2
வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார் 1941-3
நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார் 1941-4
44. தாயர் திரு மடித்தலத்தும் தயங்கு மணித் தவிசினிலும் 1942-1
தூய சுடர்த் தொட்டிலினும் தூங்கு மலர்ச் சயனத்தும் 1942-2
சேய பொருள் திருமறையும் தீம் தமிழும் சிறக்க வரு 1942-3
நாயகனைத் தாலாட்டும் நலம் பல பாராட்டினார் 1942-4
45. வரும் முறைமைப் பருவத்தில் வளர் புகலிப் பிள்ளையார் 1943-1
அரு மறைகள் தலை எடுப்ப ஆண்ட திருமுடி எடுத்துப் 1943-2
பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல் 1943-3
திருமுக மண்டலம் அசையச் செங்கீரை ஆடினார் 1943-4
46. நாம் அறியோம் பர சமயம் உலகிர் எதிர் நாடாது 1944-1
போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன் பால் 1944-2
காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல் 1944-3
தாமரைச் செங்கை களினால் சப்பாணி கொட்டினார் 1944-4
47. விதி தவறுபடும் வேற்றுச் சமயங்கள் இடை விழுந்து 1945-1
கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை 1945-2
நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார் 1945-3
மதி தவழ் மாளிகை முன்றின் மருங்கு தவழ்ந்து அருளினார் 1945-4
48. சூழ வரும் பெருஞ்சுற்றத்துத் தோகையரும் தாதியரும் 1946-1
காழியர் தம் சீர் ஆட்டே கவுணியர் கற்பகமே என்று 1946-2
ஏழ் இசையும் எவ் உலகும் தனித் தனியே 1946-3
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப 1946-4
49. திரு நகையால் அழைத்து அவர் தம் செழு முகங்கள் மலர்வித்தும் 1947-1
வருமகிழ்வு தலை சிறப்ப மற்றவர் மேல் செலவுகைத்தும் 1947-2
உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன் 1947-3
பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலிப் பிள்ளையார் 1947-4
50. வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரிவண்டு 1948-1
உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலையச் செந்நின்று 1948-2
கிளர் ஒலி கிண்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள் 1948-3
தளர் நடை இட்டு அறத் தாமும் தளர் நடை இட்டு அருளினார் 1948-4
51. தாதியர் தங்கைப் பற்றித் தளர் நடையின் அசைவு ஒழிந்து 1949-1
சோதி அணி மணிச் சதங்கை தொடுத்த வடம் புடை சூழ்ந்த 1949-2
பாத மலர் நிலம் பொருந்தப் பருவ முறை ஆண்டு ஒன்றின் 1949-3
மீது அணைய நடந்து அருளி விளையாடத் தொடங்கினார் 1949-4
52. சிறு மணித்தேர் தொடர்ந்து உருட்டிச் செழுமணல் சிற்றில்கள் இழை 1950-1
நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் 1950-2
குறு வியர்ப்புத் துளி அரும்பக் கொழும்பொடி ஆடிய கோல 1950-3
மறுகு இடைப் பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார் 1950-4
53. மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்று இருந்த 1951-1
திங்கள் சேர் சடையார் தம் திரு அருட்குச் செய் தவத்தின் 1951-2
அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு மறையோடு உலகு உய்ய 1951-3
எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்து தலும் 1951-4
54. நாவாண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்பப் 1952-1
பூவாண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்த 1952-2
சேவாண்ட கொடியவர் தம் சிரபுரத்துச் சிறுவருக்கு 1952-3
மூவாண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன் 1952-4
55. பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர் 1953-1
மண்டு தவ மறைக் குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருளத் 1953-2
தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால் 1953-3
கொண்டு எழலும் வெருக் கொண்டாற் போல் அழுவார் குறிப்பு அயலாய் 1953-4
56. மேதகைய இந் நாளில் வேறு ஒரு நாள் வேத விதி 1954-1
நீதி முறைச் சடங்கு நெறி முடிப்பதற்கு நீர் ஆடத் 1954-2
தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூடச் 1954-3
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார் 1954-4
57. பின் சென்ற பிள்ளையார் தமை நோக்கிப் பெருந்தவத்தோர் 1955-1
முன்செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும் 1955-2
மின் செய் பொலங் கிண் கிணிக் கால் கொட்டி அவர் மீளாமை 1955-3
உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார் 1955-4
58. கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல் 1956-1
இடை அறாப் பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பு இடமாய் 1956-2
விடை உயர்த்தார் திருத் தோணிப் பற்று விடா மேன்மை அதாம் 1956-3
தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார் 1956-4
59. பிள்ளையார்தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித் 1957-1
தெள்ளு நீர்ப் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி 1957-2
வள்ளலார் இருந்தாரை எதிர் வணங்கி மணி வாவி 1957-3
உள்ளிழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மகப் பெற்றார் 1957-4
60. நீர் ஆடித் தருப் பிடித்து நியமங்கள் பல செய்வார் 1958-1
நீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன்பின் 1958-2
ஆராத விருப்பினால் அகமர் உடம்படிய நீர் 1958-3
பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய் 1958-4
61. மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மைக் காணாது 1959-1
இறை தெரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல் 1959-2
முறை புரிந்த முன் உணர்வு மூள அழத் தொடங்கினார் 1959-3
நிறை புனல் வாவிக் கரையில் நின்று அருளும் பிள்ளையார் 1959-4
62. கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்து 1960-1
வண்ண மலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்ப 1960-2
எண்ணில் மறை ஒலி பெருக எவ் உயிரும் குதுகலிப்ப 1960-3
புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார் 1960-4
63. மெய்ம் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார் 1961-1
தம் மேலைச் சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளை மைதானோ 1961-2
செம் மேனி வெண் நீற்றார் திருத் தோணி சிகரம் பார்த்து 1961-3
அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள 1961-4
64. அந்நிலையில் திருத்தோணி வீற்று இருந்தார் அருள் நோக்கால் 1962-1
முன் நிலைமைத் திருத் தொண்டு முன்னி அவர்க்கு அருள் புரிவான் 1962-2
பொன் மலை வல்லியும் தாமும் பொருவிடை மேல் எழுந்து அருளிச் 1962-3
சென்னி இளம் பிறை திகழச் செழும் பொய்கை மருங்கு அணைந்தார் 1962-4
65. திரு மறைநூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த 1963-1
பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும் 1963-2
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த 1963-3
அரு மறையாள் உடையவளை அளித்து அருள அருள் செய்வார் 1963-4
66. அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருள் கருணை 1964-1
எழுகின்ற திரு உள்ளத்து இறையவர் தாம் எவ்வுலகும் 1964-2
தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்து அருளித் துணை முலைகள் 1964-3
பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன 1964-4
67. ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும் 1965-1
காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவான 1965-2
சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து 1965-3
வார் இணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்து அருளி 1965-4
68. எண்ணரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி 1966-1
உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர் நோக்கும் 1966-2
கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொன் கிண்ணம் அளித்து 1966-3
அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள் புரிந்தார் 1966-4
69. யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார் 1967-1
ஆவதனால் ஆளுடையப் பிள்ளையாராய் அகில 1967-2
தேவருக்கும் முனிவர்க்கும் தெரிஅரிய பொருளாகும் 1967-3
தாவில் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார் 1967-4
70. சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் 1968-1
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் 1968-2
உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம் 1968-3
தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் 1968-4
71. எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும் 1969-1
அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் 1969-2
இப்படியால் இது அன்றித் தம் இசைவு கொண்டு இயலும் 1969-3
துப்புரவில்லார் துணிவு துகளாகச் சூழ்ந்து எழுந்தார் 1969-4
72. சீர் மறையோர் சிவபாத இருதயரும் சிறு பொழுதில் 1970-1
நீர் மருவித் தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறி 1970-2
பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்தமை நோக்கி 1970-3
யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா 1970-4
73. எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு என்று 1971-1
கைச் சிறியது ஒருமாறு கொண்டோச்சக் கால் எடுத்தே 1971-2
அச் சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண் துளி பெய்து 1971-3
உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திருக்கை விரல் சுட்டி 1971-4
74. விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடைமேல் 1972-1
பண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப் பாவை உடன் 1972-2
எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி 1972-3
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞானத் திருமொழியால் 1972-4
75. எல்லை இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை 1973-1
மல்லல் நெடும் தமிழால் இம் மா நிலத்தோர்க்கு உரை சிறப்ப 1973-2
பல் உயிரும் களிகூரத் தம் பாடல் பரமர் பால் 1973-3
செல்லு முறை பெறுவதற்குத் திருசெவியைச் சிறப்பித்து 1973-4
76. செம்மை பெற எடுத்த திருத் தோடுடைய செவியன் எனும் 1974-1
மெய்ம்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார் 1974-2
தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு 1974-3
எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார் 1974-4
77. மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் 1975-1
கண் நுதலான் பெரும் கருணை கைக் கொள்ளும் எனக்காட்ட 1975-2
எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசைபாட 1975-3
அண்ணல் அவற்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார் 1975-4
78. தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார் 1976-1
வழுவான மனத்தாலே மாலாய மால் அயனும் 1976-2
இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை 1976-3
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார் 1976-4
79. வேத காரணராய வெண் பிறை சேர் செய்ய சடை 1977-1
நாதன் நெறி அறிந்து உய்யார் தம்மிலே நலம் கொள்ளும் 1977-2
போதம் இலாச் சமண் கையர் புத்தர் வழியாக்கும் 1977-3
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர் 1977-4
80. திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக் காப்புச் சாத்தி 1978-1
இருக்கு மொழிப் பிள்ளையார் எதிர் தொழுது நின்று அருள 1978-2
அருள் கருணைத் திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம் 1978-3
பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரசமலர் மழை பொழிந்தார் 1978-4
81. வந்து எழும் மங்கலமான வான் அகத் துந்துபி முழக்கும் 1979-1
கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும் 1979-2
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசைமுழக்கும் 1979-3
அந்தம் இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க 1979-4
82. மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர் தம் 1980-1
நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து 1980-2
உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவாமெய்ப் 1980-3
பொறை பெருகும் தவமுனிவர் எனும் கடல் புடை சூழ 1980-4
83. அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார் பால் 1981-1
இணை இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின் 1981-2
புணை அருள் அங்கணர் பொருவிடை தங்கிய புணர் பாகத்து 1981-3
துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெரும் தோணி 1981-4
84. அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே 1982-1
மண்மிசை நின்ற மறைச் சிறு போதகம் அன்னாரும் 1982-2
கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏகப் 1982-3
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார் 1982-4
85. ஈறில் பெரும் தவம் முன் செய்து தாதை எனப் பெற்றார் 1983-1
மாறு விழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்து ஆடி 1983-2
வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும் 1983-3
கூறும் அரும் தமிழின் பொருளான குறிப் போவார் 1983-4
86. தாணுவினைத் தனிகண்டு தொடர்ந்தவர் தம்மைப் போல் 1984-1
காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார் 1984-2
தோணி புரத்திறை தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம் 1984-3
பேணும் மனத்தொடு முன்புகு காதலர் பின் சென்றார் 1984-4
87. அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டவர் அல்லாதார் 1985-1
முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி 1985-2
இப்படி ஒப்பதோர் அற்புதம் எங்கு உளது என்று என்றே 1985-3
துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ 1985-4
88. பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி 1986-1
தங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டே 1986-2
இங்கு எனை ஆளும் உடையான் உமையோடும் இருந்தான் என்று 1986-3
அங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார் 1986-4
89. இன் இசை ஏழும் இசைந்த செழும் தமிழ் ஈசற்கே 1987-1
சொன்முறை பாடும் தொழும்பர் அருள் பெற்ற தொடக்கோடும் 1987-2
பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும் 1987-3
பொன்மணி வாயினர் கோயிலின் நின்று புறப்பட்டார் 1987-4
90. பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே 1988-1
நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி 1988-2
வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும் 1988-3
தோணி புரத்தவர் தாம் எதிர் கொண்டு துதிக்கின்றார் 1988-4
91. காழியர் தவமே கவுணியர் தனமே கலை ஞானத்து 1989-1
ஆழிய கடலே அதன் இடை அமுதே அடியார் முன் 1989-2
வாழிய வந்து இம்மண் மிசை வானோர் தனி நாதன் 1989-3
ஏழ் இசை மொழியாள் தன் திரு அருள் பெற்று அனை என்பார் 1989-4
92. மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞானப் 1990-1
பொறை அணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித் 1990-2
துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்து 1990-3
இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார் 1990-4
93. புண்ணிய முதலே புனை மணி அரை ஞாணொடு போதும் 1991-1
கண் நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும் 1991-2
பண் இயல் கதியே பருவமது ஒரு மூவருடத்தே 1991-3
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார் 1991-4
94. என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும் 1992-1
நின்று துதி செய்து அவர்தாள் நீள் முடிக்கண் மேல் ஏந்தி நிரந்த போது 1992-2
சென்று அணைந்த தாதையர் சிவபாத இருதயர் தாம் தெய்வ ஞானக் 1992-3
கன்றினை முன் புக்கு எடுத்துப் பியலின் மேல் கொண்டு களி கூர்ந்து செல்ல 1992-4
95. மா மறையோர் குழத்தின் உடன் மல்கு திருத் தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து 1993-1
தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே 1993-2
பூ மறுகு சிவானந்தப் பெருக்காறு போத அதன் மீது பொங்கும் 1993-3
காமர் நுரைக் குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்தாக 1993-4
96. நீடு திருக் கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல் நெருங்கி அங்கண் 1994-1
மாடு நிறை மடவார்கள் மங்கலமாம் மொழிகளால் வாழ்த்தி வாசத் 1994-2
தோடு மலி நறுமலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவிநிற்பர் 1994-3
கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்தாக 1994-4
97. மங்கல தூர் இயந்து வைப்பர் மறைச் சாமம் பாடுவார் மருங்கு வேதிப் 1995-1
பொங்கு மணி விளக்கு எடுத்து பூரண கும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார் 1995-2
அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பொங்கத் 1995-3
தங்கு திரு மலி வீதிச் சண்பை நகர் வலம் செய்து சாரும் காலை 1995-4
98. தம் திரு மாளிகையின் கண் எழுந்து அருளிப் புகும் பொழுது சங்க நாதம் 1996-1
அந்தர துந்துபி முதலா அளவில் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் 1996-2
சுந்தரப் பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும் 1996-3
பைந்தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழிப் பவள வாயார் 1996-4
99. தூ மணி மாளிகையின் கண் அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாத 1997-1
மா மறைகள் திரண்ட பெரும் திருத் தோணி மன்னி வீற்று இருந்தார் செய்ய 1997-2
கா மரு சேவடிக் கமலம் கருத்திலுற இடையறாக் காதல் கொண்டு 1997-3
நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத் தோணி நம்பர் கோயில் 1997-4
100. காதல் உடன் அணைந்து திருக் கழுமலத்துக் கலந்து வீற்று இருந்த தங்கள் 1998-1
தாதை யாரையும் வெளியே தாங்க அரிய மெய்ஞ்ஞானம் தம்பால் வந்து 1998-2
போதம் முலை சுரந்து அளித்த புண்ணியத் தாயாரையும் முன் வணங்கிப் போற்றி 1998-3
மே தகைய அருள் பெற்றுத் திருக்கோலக் கா இறைஞ்ச விருப்பில் சென்றார் 1998-4
101. பெருக் கோல் இட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த 1999-1
வரிக் கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி 1999-2
திருக் கோலக்கா எய்திதித் தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்று 1999-3
இருக்கோல் இட்டு அறிவு அரிய திருப்பாதம் ஏத்துவதற்கு எடுத்துக் கொள்வார் 1999-4
102. மெய்ந் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழுப் பொருளை வேணி மீது 2000-1
பைந் நிறைந்த அரவுடனே பசுங்குழவித் திங்கள் பரித்து அருளுவானை 2000-2
மைந் நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால் 2000-3
கைந் நிறைந்த ஒத்து அறுத்துக் கலைப் பதிகம் கவுணியர் கோன் பாடும் காலை 2000-4
103. கை அதனால் ஒத்து அறுத்துப் பாடுதலும் கண்டு அருளி கருணை கூர்ந்த 2001-1
செய்ய சடை வானவர் தம் அஞ்செழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் 2001-2
ஐயர் அவர் திரு அருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த 2001-3
வையம் எல்லாம் உய்ய வரு மறைச் சிறுவர் கைத் தலத்து வந்தது அன்றே 2001-4
104. காழி வரும் பெரும் தகையார் கையில் வரும் திருத் தாளக் கருவி கண்டு 2002-1
வாழிய தம் திருமுடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயில் 2002-2
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித் 2002-3
தாழும் மணிக் குழையார் முன் தக்க திருக் கடைக் காப்புச் சாத்தி நின்றார் 2002-4
105. உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கித் 2003-1
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசைத் துறை உள்ளோர் துதித்து மண் மேல் 2003-2
வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும் 2003-3
தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளிச் சண்பை நகர் சாரச் செல்வார் 2003-4
106. செங்கமல மலர்க் கரத்துத் திருத் தாளத்துடன் நடந்து செல்லும் போது 2004-1
தங்கள் குலத் தாதையார் தரியாது தோளின் மேல் தரித்துக் கொள்ள 2004-2
அங்கு அவர் தம் தோளின் மிசை எழுந்து அருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும் 2004-3
திங்கள் அணிமணி மாடத் திருத் தோணி புரத் தோணிச் சிகரக் கோயில் 2004-4
107. திருப் பெருகு பெரும் கோயில் சூழ வலம் கொண்டு அருளித் திருமுன் நின்றே 2005-1
அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று 2005-2
விருப்புறு பொன் திருத்தோணி வீற்று இருந்தார் தமைப் பாட மேவும் காதல் 2005-3
பொருத்தமுற அருள் பெற்றுப் போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை 2005-4
108. எடுத்த திருப் பதிகத்தின் இசை திருத் தாளத்தினால் இசைய ஒத்தி 2006-1
அடுத்த நடை பெறப் பாடி ஆர்வமுற வணங்கிப் போந்து அலைநீர்ப் பொன்னி 2006-2
மடுத்த வயல் பூந் தராய் அவர் வாழ மழ விளங் கோலத்துக் காட்சி 2006-3
கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞானக் கொண்டலார் தாம் 2006-4
109. அந் நிலையில் ஆளுடைய பிள்ளையார் தமை முன்னம் அளித்த தாயார் 2007-1
முன் உதிக்க முயன்ற தவத் திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் 2007-2
மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதிக் 2007-3
கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார் 2007-4
110. மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்ப பெற்ற பெரு வார்த்தையாலே 2008-1
எங்கணும் நீள் பதி மருங்கில் இரு பிறப்பாளரும் அல்லா ஏனையோரும் 2008-2
பொங்கு திருத் தொண்டர்களும் அதிசயித்துக் குழாங் கொண்டு புகலியார் தம் 2008-3
சிங்க இளஏற்றின் பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார் 2008-4
111. வந்த திருத் தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உளோர்க்கும் 2009-1
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை 2009-2
தம் தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர் 2009-3
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எவ் உலகும் ஏத்தும் நாளில் 2009-4
112. செழும் தரளப் பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள் 2010-1
கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே 2010-2
எழுந்து அருள வேண்டும் என இசைந்து அருளித் தோணி வீற்று இருந்தார் 2010-3
பாதம் தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்றுப் பிறபதியும் தொழமுன் செல்வார் 2010-4
113. தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது 2011-1
போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொறா அன்பு புரிந்த சிந்தை 2011-2
மாதவம் செய் தாதையார் வந்து எடுத்துத் தோளின்மேல் வைத்துக் கொள்ள 2011-3
நாதர் கழல் தம் முடிமேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார் 2011-4
114. தேன் அலரும் கொண்றையினார் திரு நன்னி பள்ளியினைச் சாரச் செல்வார் 2012-1
வான் அணையும் மலர்ச் சோலை தோன்றுவது எப் பதி என்ன மகிழ்ச்சி எய்திப் 2012-2
பானல் வயல் திரு நன்னி பள்ளி எனத் தாதையர் பணிப்பக் கேட்டு 2012-3
ஞான போனகர் தொழுது நல் தமிழ்ச் சொல் தொடை மாலை நவிலல் உற்றார் 2012-4
115. காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மைச் 2013-1
சீர் இயல் பதிகம் பாடித் திருக் கடைக் காப்புத்தன்னில் 2013-2
நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார் தம் 2013-3
பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார் 2013-4
116. ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர 2014-1
நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்றுப் 2014-2
போதுவார் தம்மைச் சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும் 2014-3
காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார் தாம் 2014-4
117. அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட 2015-1
நம் பெரும் தகையார் தம்மை எதிர் கொண்டு நண்ண வேண்டி 2015-2
உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவத் தொண்டரோடு 2015-3
தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம் 2015-4
118. காவணம் எங்கும் இட்டுக் கமுகொடு கதலி நாட்டி 2016-1
பூவணை தாமம் தூக்கிப் பூரண கும்பம் ஏந்தி 2016-2
ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை 2016-3
மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார் 2016-4
119. திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப் 2017-1
பெரு மறை ஓசை மல்கப் பெரும் திருக் கோயில் எய்தி 2017-2
அரு மறைப் பொருள் ஆனாரைப் பணிந்து அணிநல் சங்கத்தின் 2017-3
தரு முறை நெறி அக் கோயில் சார்ந்தமை அருளிச் செய்தார் 2017-4
120. கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி போந்து 2018-1
மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும் 2018-2
இறைவரைத் தொழுது பாடும் கொடியுடை ஏந்தி 2018-3
நிறைபுனல் திருச் சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார் 2018-4
121. பன்னகப் பூணினாரைப் பல்லவ னீச்சரத்துச் 2019-1
சென்னியால் வணங்கி ஏத்தித் திருந்து இசைப்பதிகம் பாடி 2019-2
பொன்னி சூழ் புகாரில் நீடு புனிர்தம் திருச்சாய்க் காட்டு 2019-3
மன்னுசீர்த் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர் கொள்ளப் புக்கார் 2019-4
122. வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம் கொண்டு புக்குத் 2020-1
தேன் அலர் கொன்றையார் தம் திருமுன்பு சென்று தாழ்ந்து 2020-2
மானிடம் தரித்தார் தம்மைப் போற்றுவார் மண்புகார் என்று 2020-3
ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செங்கை 2020-4
123. சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக் கடைக் காப்புப் போற்றிப் 2021-1
பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிடப் பயில்வார் பின்னும் 2021-2
ஏர் இசைப் பதிகம் பாடி ஏத்திப் போந்து இறைவர் வெண்காடு 2021-3
ஆரு மெய்க் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே 2021-4
124. பொன்னிதழ்க் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு 2022-1
சென்னியர் திருவெண் காட்டுத் திருத் தொண்டர் எதிரே சென்று 2022-2
இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க 2022-3
மன்னுசீர் சண்பை ஆளும் மன்னரைக் கொண்டு புக்கார் 2022-4
125. முத்தமிழ் விரகர் தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர்ச் 2023-1
சித்த நீடு உவகை யோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்குப் 2023-2
பத்தராம் அடியார் சூழப் பரமர் கோயிலைச் சூழ் வந்து 2023-3
நித்தனார் தம் முன்பு எய்தி நிலம் உறத் தொழுது வீழ்ந்தார் 2023-4
126. மெய்ப் பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரைச் 2024-1
செப்பரும்பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி 2024-2
முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி 2024-3
ஒப்பரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் 2024-4
127. அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில் 2025-1
திருமுல்லை வாயில் எய்திச் செந்தமிழ் மாலை சாத்தி 2025-2
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத் 2025-3
தருமலி புகலி வந்து ஞானசம்பர் சார்ந்தார் 2025-4
128. தோணி வீற்று இருந்தார் தம்மைத் தொழுது முன் நின்று தூய 2026-1
ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூரச் 2026-2
சேண் உயர் மாடம் ஓங்கும் திருப்பதி அதனில் செய்ய 2026-3
வேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார் 2026-4
129. வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திரப் பள்ளி வாசம் 2027-1
செய் பொழில் குருகா வூரும் திருமுல்லை வாயில் உள்ளிட்டு 2027-2
எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித் 2027-3
தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச் சொல் மாலை 2027-4
130. அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன் தாள் 2028-1
மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவிப் போற்றி 2028-2
உய் வகை மண் உளோருக்கு உதவிய பதிகம் பாடி 2028-3
எவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்தும் நாளில் 2028-4
131. திரு நீல கண்டத்துப் பெரும் பாணர் தெள் அமுதின் 2029-1
வருநீர்மை இசைப்பாட்டு மதங்க சூளா மணியார் 2029-2
ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்கத் 2029-3
தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார் 2029-4
132. பெரும் பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர் கொள்ளச் 2030-1
சுரும்பு ஆர் கமல மலர்த் துணைப் பாதம் தொழுது எழுந்து 2030-2
விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய்ம் மொழிகளால் துதித்து 2030-3
வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார் 2030-4
133. அளவு இலா மகிழ்ச்சியினார் தமை நோக்கி ஐயா நீர் 2031-1
உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே 2031-2
இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு 2031-3
கள நிலவு நஞ்சு அணிந்தார் பால் அணையும் கவுணியனார் 2031-4
134. கோயிலினில் புற முன்றில் கொடு புக்குக் கும்பிடுவித்து 2032-1
ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என 2032-2
ஆய புகழ்ப் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி 2032-3
மேய தொடைத் தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார் 2032-4
135. தான நிலைக் கோல் வடித்துப் படி முறைமைத் தகுதியினால் 2033-1
ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை 2033-2
மான முறைப் பாடினியார் உடன் பாடி வாசிக்க 2033-3
ஞான போனகர் மகிழ்ந்தார் நான் மறையோர் அதிசயித்தார் 2033-4
136. யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி 2034-1
வாழி திருத் தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினைத் 2034-2
தாழும் இரு சிறைப் பறவை படிந்த தனி விசும்பு இடை நின்று 2034-3
ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார் 2034-4
137. எண்ணரும் சீர் திருத்தோணி எம் பெருமான் கழல் பரவிப் 2035-1
பண் அமையாழ் இசை கூடப்பெரும் பாணர் பாடிய பின் 2035-2
கண் நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து 2035-3
நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப 2035-4
138. பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த 2036-1
வெள்ள நீர்ச் சடையாரை அவர் மொழிந்த மெய்ப் பதிகம் 2036-2
உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய்த் 2036-3
தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்பு உறத் தொழுதார் 2036-4
139. காழியர் தவப்பயனாம் கவுணியர் தம் தோன்றலார் 2037-1
ஆழி விடம் உண்டவர் தம் அடி போற்றும் பதிக இசை 2037-2
யாழின் முறைமையின் இட்டே எவ் உயிரும் மகிழ்வித்தார் 2037-3
ஏழ் இசையும் பணி கொண்ட நீல கண்ட யாழ்ப்பாணர் 2037-4
140. சிறிய மறைக் களிறு அளித்த திருப்பதிக இசை யாழின் 2038-1
நெறியில் இடும் பெரும் பாணர் பின்னும் நீர் அருள் செய்யும் 2038-2
அறிவரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன் 2038-3
பிறிவு இன்றிச் சேவிக்கப் பெற வேண்டும் எனத் தொழுதார் 2038-4
141. மற்றதற்குப் பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள 2039-1
பெற்றவர் தாம் தம்பிரான் அருள் இதுவே எனப் பேணிச் 2039-2
சொல் தமிழ் மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே 2039-3
அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார் 2039-4
142. சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞான சம்பந்தர் 2040-1
பரவு திருத் தில்லை நடம் பயில்வாரைப் பணிந்து ஏத்த 2040-2
விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில் 2040-3
தர இசையும் குறிப்பு அறியத் தவ முனிவர்க்கு அருள் செய்தார் 2040-4
143. பிள்ளையார் அருள் செய்யப் பெரும் தவத்தால் பெற்று எடுத்த 2041-1
வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப 2041-2
வெள்ளி மால் வரை என்னத் திருத் தோணி வீற்று இருந்த 2041-3
புள்ளி மான் உரியாரைத் தொழுது அருளால் புறப்பட்டார் 2041-4
144. தாழ்வில் யாழ்ப் பாணரொடும் தாதையார் தம்மோடும் 2042-1
மேவிய சீர் அடியார்கன் புடை வர வெம் குரு வேந்தர் 2042-2
பூவின் மேல் அயன் போற்றும் புகலியினைக் கடந்து போய்த் 2042-3
தேவர்கள் தம் பெரும் தேவர் திருத் தில்லை வழிச் செல்வார் 2042-4
145. நள்ளிருட்கண் நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றி 2043-1
முள்ளிடைப் புற வெள் இதழ்க் கோதை முகிழ் விரி மணம் சூழப் 2043-2
புள்ளிடைத் தடம் பழனமும் படு கரும்பு உடை கழிந்திடப் போந்து 2043-3
கொள்ளிடத் திரு நதிக்கரை அணைந்தார் கவுணியர் குல தீபர் 2043-4
146. வண்டிரைத்து எழு செழு மலர்ப் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தித் 2044-1
தண் தலைப் பல வளத்தொடும் வருபுனல் தாழ்ந்து சேவடித்தாழ 2044-2
தெண் திரைக் கடல் பவழமும் பணிலமும் செழு மணித் திரள் முத்தும் 2044-3
கொண்டிரட்டி வந்தோதமங்கெதிர் கொளக் கொள்ளிடம் கடந்து ஏறி 2044-4
147. பல்கு தொண்டர் தம் குழாத் தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழச் 2045-1
செல் கதிப் பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தரக் கண்டு 2045-2
மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம் 2045-3
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆரமுது உண்டார் 2045-4
148. செங்கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இத் திருந்து உலகினிற்கு எல்லாம் 2046-1
மங்கலம் தரு மழவிளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும் 2046-2
தங்கு புள்ளலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாசப் 2046-3
பொங்கு செம்முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை 2046-4
149. கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திடக் கடி மணக் குளிர் கால் வந்து 2047-1
உலவி முன் பணிந்து எதிர் கொளக் கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப 2047-2
இலகு செந்தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட 2047-3
மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர்ச் சோலை 2047-4
150. இழைத் தடம் கொங்கை இமய மாமலைக் கொடி இன் அமுது என ஞானம் 2048-1
குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வரக் கண்டு 2048-2
மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவித் 2048-3
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி 2048-4
151. ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்து அருளும் அந் நலம் கண்டு 2049-1
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீசச் 2049-2
சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களி கூர்வ 2049-3
போல் அசைந்து இரு புடைமிடைந்து ஆடின புறம்பு அணை நறும் பூகம் 2049-4
152. பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்விச் 2050-1
சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகை பரப்பாலே 2050-2
தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னே 2050-3
நிவந்த நீல நுண் துகில் விதானத்தது போன்றது நெடுவானம் 2050-4
153. கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி 2051-1
அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அணைத்தின் ஆகரம் ஆன 2051-2
மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி 2051-3
நெருங்கு தில்லை சூழ் நெடுமதில் தென் திரு வாயில் நேர் அணித்தாக 2051-4
154. பொங்கு கொங்கையில் கறந்த மெய் ஞானமாம் போனகம் பொன் குன்றம் 2052-1
மங்கை செங்கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று 2052-2
அங்கண் வாழ் பெரும் திருத்தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி 2052-3
எங்கும் மங்கல அணிமிக அலங்கரித்து எதிர் கொள அணைவார்கள் 2052-4
155. வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பு இடை நிறைந்து ஓங்க 2053-1
சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆரச் 2053-2
சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லிக் 2053-3
கோதிலாதவர் ஞானசம்பந்தரை எதிர் கொண்டு புக்கார் 2053-4
156. செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசைத் திருவாயில் 2054-1
எல்லை நீங்கி உள் புகும் திருமருங்கு நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ 2054-2
மல்லல் ஆவண மறுகிடைக் கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கைத் 2054-3
தொல்லை மாளிகை நிரைத் திரு வீதியைத் தொழுது அணைந்தனர் தூயோர் 2054-4
157. மலர்ந்த பேர் ஒளி குளிர் தரச் சிவமணம் கமழ்ந்து வான் துகள் மாறிச் 2055-1
சிலம்பு அலம்பு சேவடியவர் பயில் உறும் செம்மையால் திருத்தொண்டு 2055-2
கலந்த அன்பர் தம் சிந்தையில் திகழ் திருவீதி கண் களி செய்யப் 2055-3
பலன் கொள் மைந்தனார் எழுநிலைக் கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி 2055-4
158. நீடுநீள் நிலைக் கோபுரத்துள் புக்கு நிலவிய திரு முன்றின் 2056-1
மாடு செம் பொனின் மாளிகை வலம் கொண்டு வானுற வளர் திங்கள் 2056-2
சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அருமறை தொடர்ந்து ஏத்த 2056-3
ஆடுகின்றவர் முன்புற அணைந்தனர் அணிகிளர் மணிவாயில் 2056-4
159. நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட 2057-1
அந்தம் இல்லவர் அணுகி முன் தொழுதிரு அணுக்கனாம் திருவாயில் 2057-2
சிந்தை ஆர்வமும் பெருகிடச் சென்னியில் சிறிய செங்கை யேற 2057-3
உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார் 2057-4
160. அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ் ஞானமே ஆன அம்பல முந்தம் 2058-1
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனிக் கூத்தும் 2058-2
கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழிப் 2058-3
புண்ணியக் கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு 2058-4
161. உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின் கண் 2059-1
அணையும் ஐம் பொறி அளவினும் எளிவர அருளினை எனப் போற்றி 2059-2
இணை இல் வண் பெருங் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில் 2059-3
புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி 2059-4
162. ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில் சிறப்பால் 2060-1
வாழி திருத் தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே 2060-2
ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும் 2060-3
காழியர் தம் காவலனார் கற்றாங் கெரியோம்பி 2060-4
163. பண்ணார் பதிகத் திருக் கடை காப்புப் பரவி 2061-1
உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருகும் 2061-2
விண் நாயகன் கூத்து வெட்ட வெளியே திளைத்துக் 2061-3
கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார் 2061-4
164. முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்று 2062-1
சொல் மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சி 2062-2
பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற 2062-3
பொன் மாளிகையை வலம் கொண்டு புறம் போந்தார் 2062-4
165. செல்வத் திருமுன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம் 2063-1
மல்கும் திருவாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள் 2063-2
நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண் 2063-3
அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்டகையார் 2063-4
166. செய்ய சடையார் திருவேட்களம் சென்று 2064-1
கை தொழுது சொல் பதிகம் பாடிக் கழுமலக் கோன் 2064-2
வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்றாடும் 2064-3
ஐயன் திருக் கூத்துக் கும்பிட்டு அணை உறும் நாள் 2064-4
167. கைம் மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்து 2065-1
மெய்ம் மாலைச் சொல் பதிகம் பாடி விரைக் கொன்றைச் 2065-2
செம்மாலை வேணித் திரு உச்சி மேவியுறை 2065-3
அம்மானைக் கும்பிட்டு அரும் தமிழும் பாடினார் 2065-4
168. பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி 2066-1
நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார் 2066-2
நீடும் திருத்தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள் 2066-3
ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார் 2066-4
169. ஆங்கு அவர் தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தே 2067-1
ஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார் 2067-2
தேன் கமழும் சோலைத் திருவேட்களம் கடந்து 2067-3
பூங்கிடங்கு சூழ் புலியூர் புக்கு அணையும் போழ்தின்கண் 2067-4
170. அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை 2068-1
முண்டத் திருநீற்று மூவாயிரவர்களும் 2068-2
தொண்டத் தகைமைக் கண நாதராய்த் தோன்றக் 2068-3
கண்ட அப் பரிசு பெரும் பாணர்க்கும் காட்டினார் 2068-4
171. செல்வம் பிரிவு அறியாத் தில்லை வாழ் அந்தணரும் 2069-1
எல்லையில் சீர்ச் சண்பை இளவேறு எழுந்து அருளி 2069-2
ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி 2069-3
மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள் 2069-4
172. பொங்கி எழும் காதல் புலன் ஆகப் பூசுரர் தம் 2070-1
சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்த 2070-2
பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும் 2070-3
செங்கையொடும் சென்று திருவாயில் உட்புக்கார் 2070-4
173. ஒன்றிய சிந்தை உருக உயர் மேருக் 2071-1
குன்று அனைய பேர் அம்பலம் மருங்கு கும்பிட்டு 2071-2
மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்கக் கூத்தர் எதிர் 2071-3
சென்று அணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப் படிக் கீழ் 2071-4
174. ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால் 2072-1
பாடினார் பின்னும் அப்பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில் 2072-2
நீடு வாழ் தில்லை நான் மறையோர் தமைக் கண்ட அந் நிலை எல்லாம் 2072-3
கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்துச் சிற்றம் பலம் எனக் கூறி 2072-4
175. இன்ன தன்மையில் இன் இசைப் பதிகமும் திருக்கடைக் காப்பு ஏத்தி 2073-1
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும் 2073-2
பின்னுவார் சடைக் கூத்தர் பேர் அருள் பெறப் பிரியாத விடைபெற்றுப் 2073-3
பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்து அணைந்தனர் புறமுன்றில் 2073-4
176. அப் புறத்து இடை வணங்கி அங்கு அருளுடன் அணிமணித் திருவாயில் 2074-1
பொற்புறத் தொழுது எழுந்து உடன் போதரப் போற்றிய புகழ்ப் பாணர் 2074-2
நற்பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவாக்கரை மேய 2074-3
ஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் 2074-4
177. பொங்கு தெண்திரைப் புனித நீர் நிவாக்கரைக் குடதிசை மிசைப் போந்து 2075-1
தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்லச் 2075-2
செங்கை யாழ்த் திரு நீலக் கண்டப் பெரும் பாணருடன் சேர 2075-3
மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வரவந்தார் 2075-4
178. இரும் தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம் புலியூரின் 2076-1
மருங்கு சென்றுற நீல கண்டப் பெரும்பாணர் வணங்கிக் கார் 2076-2
நெருங்கு சோலை சூழ் இப்பதி அடியேன்பதி என நெடிது இன்புற்று 2076-3
அருங்கலைச் சிறு மழ இளங்களிறனார் அங்கணைந்து அருள் செய்வார் 2076-4
179. ஐயர் நீர் அவதரித்திட இப்பதி அளவில் மாதவம் முன்பு 2077-1
செய்வாறு எனச் சிறப்பு உரைத்து அருளி அச் செழும்பதி இடம் கொண்ட 2077-2
மை கொள் கண்டர் தம் கோயில் உட்புக்கு வலம் கொண்டு வணங்கி பார் 2077-3
உய்ய வந்தவர் செழும் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார் 2077-4
180. அங்கு நின்று எழுந்து அருளி மற்றவருடன் அம்பொன்மா மலை வல்லி 2078-1
பங்கர் தாம் இனிது உறையும் நற் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தித் 2078-2
துங்க வண்தமிழ்த் தொடை மலர் பாடிப் போய்த் தொல்லை வெங்குரு வேந்தர் 2078-3
செங்கண் ஏற்றவர் திரு முது குன்றினைத் தொழுது சென்று அணைகின்றார் 2078-4
181. மொய் கொள் மா மணிக் கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று 2079-1
எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி 2079-2
செய் தவத் திரு முனிவரும் தேவரும் திசையெலாம் நெருங்கப் புக்கு 2079-3
ஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில் ஆதரவுடன் சென்றார் 2079-4
182. வான நாயகர் திருமுது குன்றினை வழிபட வலம் கொள்வார் 2080-1
தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக் குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி 2080-2
ஞான போதகர் நம்பர் தம் கோயிலை நண்ணி அங்கு உள்புக்கு 2080-3
தேன் அலம்பு தண் கொன்றை யார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார் 2080-4
183. தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ் தொடை சாத்தி 2081-1
வாழ்ந்து போந்து அங்கண் வளம்பதி அதன் இடை வைகுவார் மணி வெற்புச் 2081-2
சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை 2081-3
வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள் 2081-4
184. ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம் அணைந்து அருமறை ஓசை 2082-1
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒரு தனிப் பரஞ்சோதிப் 2082-2
பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு பணிவுற்றுப் பரவு சொல் தமிழ் மாலை 2082-3
தீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும் இசைப் பதிகமும் தெரிவித்தார் 2082-4
185. கருவரைப்பில் புகாதவர் கை தொழும் 2083-1
ஒருவரைத் தொழுது உள்ளம் உவந்து போய்ப் 2083-2
பெருவரத்தினில் பெற்றவர் தம் உடன் 2083-3
திரு அரத்துறை சேர்தும் என்று ஏகுவார் 2083-4
186. முந்தை நாள்கள் ஒரோ ஒரு கால் முது 2084-1
தந்தையார்பியல் மேல் இருப்பார் தவிர்ந்து 2084-2
அந்தணாளர் அவர் அருகே செலச் 2084-3
சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர் 2084-4
187. ஆதியார் தம் அரத்துறை நோக்கியே 2085-1
காதலால் அணைவார் கடிது ஏகிட 2085-2
தாதையாரும் பரிவுறச் சம்பந்தர் 2085-3
பாத தாமரை நொந்தன பைப்பய 2085-4
188. மறை அனைத்தும் ஒரு வடிவாம் என 2086-1
நிறை மதிப் பிள்ளை நீள் நிலம் சேர்ந்து எனத் 2086-2
துறை அலைக் கங்கை சூடும் அரத்துறை 2086-3
இறைவரைத் தொழுவான் விரைந்து ஏகினார் 2086-4
189. பாசம் அற்றிலர் ஆயினும் பார் மிசை 2087-1
ஆசை சங்கரர்கு ஆயின தன்மையால் 2087-2
தேசு மிக்க திருவுரு ஆனவர் 2087-3
ஈசனைத் தொழுதே தொழுது ஏகினார் 2087-4
190. இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட 2088-1
வந்த வைதிக மாமணி ஆனவர் 2088-2
சிந்தை ஆரமுதாகிய செம் சடைத் 2088-3
தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார் 2088-4
191. மாறன் பாடி எனும் பதி வந்துற 2089-1
ஆறு செல் வருத்தத்தின் அசைவினால் 2089-2
வேறு செல்பவர் வெய் துறப் பிள்ளையார் 2089-3
ஏறும் அஞ்செழுத்து ஓதி அங்கு எய்திட 2089-4
192. உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு 2090-1
எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போலக் 2090-2
கைகள் ஆயிரம் வாங்கிக் கரந்து போய் 2090-3
வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன் 2090-4
193. அற்றை நாள் இரவு அப்பதியின் இடைச் 2091-1
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப் 2091-2
பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார் 2091-3
வெற்றி மாதவத்தோருடன் மேவினார் 2091-4
194. இந்நிலைக் கண் எழில் வளர் பூந்தராய் 2092-1
மன்னனார் தம் வழி வருத்தத் தினை 2092-2
அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறைச் 2092-3
சென்னியாற்றர் திருவுளம் செய்தனர் 2092-4
195. ஏறுதற்குச் சிவிகை இடக்குடை 2093-1
கூறி ஊதக் குலவு பொன் சின்னங்கள் 2093-2
மாறில் முத்தின் படியினால் மன்னிய 2093-3
நீறு வந்த நிமலர் அருளுவார் 2093-4
196. நீடு வாழ் பதி யாகும் நெல் வயலின் 2094-1
மாட மாமணை தோறும் மறையோர்க்குக் 2094-2
கூடு கங்குல் கனவில் குலமறை 2094-3
தேடு சேவடி தோன்ற முன் சென்று பின் 2094-4
197. ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான் 2095-1
மான முகத்தின் சிவிகை மணிக் குடை 2095-2
ஆன சின்னம் நம் பால் கொண்டு அருங்கலைக் 2095-3
கோன் அவன் பால் அணைந்து கொடும் என 2095-4
198. அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில் 2096-1
வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும் 2096-2
சிந்தையோடும் செழுநீர் அரத்துறை 2096-3
இந்து சேகரர் கோயில் வந்து எய்தினர் 2096-4
199. ஆங்கு மற்ற அருள் அடியாருடன் 2097-1
ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயின 2097-2
ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர் 2097-3
தாங்கள் அம்மறையோர்கள் முன் சாற்றினார் 2097-4
200. சால மிக்க வியப்புறு தன்மையின் 2098-1
பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின் 2098-2
காலம் எய்திடக் காதல் வழிப்படும் 2098-3
சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார் 2098-4
201. திங்கள் நீர்மைச் செழுந் திரள் முத்தினால் 2099-1
துங்க வெண் குடை தூய சிவிகையும் 2099-2
பொங்க ஊதும் பொருவரும் சின்னமும் 2099-3
அங்கண் நாதர் அருளினால் கண்டனர் 2099-4
202. கண்டபின் அவர் கை தலை மேல் குவித்து 2100-1
எண்திசைக்கும் விளக்கி இவையாம் எனத் 2100-2
தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து 2100-3
அண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர் 2100-4
203. சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல் 2101-1
பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ 2101-2
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் 2101-3
பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார் 2101-4
204. மாசில் வாய்மை நெல் வாயின் மறையவர் 2102-1
ஆசில் சீர்ச் சண்பை ஆண் தகையார்க்கு எதிர் 2102-2
தேசுடைச் சிவிகை முதலாயின 2102-3
ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார் 2102-4
205. இத்தலை இவர் இன்னணம் ஏகினார் 2103-1
அத்தலைச் சண்பை நாதர்க்கும் அவ் இரா 2103-2
முத்த நற் சிவிகை முதல் ஆயின 2103-3
உய்த்து அளிக்கும் படி முன் உணர்த்துவார் 2103-4
206. அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை 2104-1
வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை 2104-2
கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என 2104-3
உள்ளவாறு அருள் செய்ய உணர்ந்த பின் 2104-4
207. சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள் 2105-1
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர் 2105-2
தொண்டருக்கு அருள் செய்து தொழா முனம் 2105-3
விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும் 2105-4
208. மாலை யாமம் புலர் உறும் வைகறை 2106-1
வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி 2106-2
கோல மேனியர் ஆய்க் கைம் மலர் குவித்து 2106-3
ஏல அஞ்செழுத்து ஓதி எழுந்தனர் 2106-4
209. போத ஞானப் புகலிப் புனிதரைச் 2107-1
சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிடக் 2107-2
காதல் செய்பவன் போலக் கருங்கடல் 2107-3
மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன் 2107-4
210. ஆய போழ்தின் அரவு எனும் ஆர்ப்புடன் 2108-1
தூய முத்தின் சிவிகை சுடர்க் குடை 2108-2
மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்ப ரோடு 2108-3
ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார் 2108-4
211. வந்து தோன்றிய அந்தணர் மாதவர் 2109-1
கந்த வார் பொழில் காழி நல்ன்னாடர் முன் 2109-2
அந்தமில் சீர் அரத்துறை ஆதியார் 2109-3
தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர் 2109-4
212. என்று தங்களுக்கு ஈசர் அருள் செய்தது 2110-1
ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன் 2110-2
நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது 2110-3
மன்று உளரர் அருள் என்று வணங்கினார் 2110-4
213. மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால் 2111-1
தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர் 2111-2
செம்மை நித்தில ஆனச் சிறப்பு அருள் 2111-3
எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே 2111-4
214. எந்தை ஈசன் என எடுத்து இவ்வருள் 2112-1
வந்தவாறு மற்று எவ் வணமோ என்று 2112-2
சிந்தை செய்யும் திருப் பதிகத்து இசை 2112-3
புந்தியார் அப் புகன்று எதிர் போற்றுவார் 2112-4
215. பொடி அணிந்த புராணன் அரத்துறை 2113-1
அடிகள் தம் அருளே இதுவாம் எனப் 2113-2
படி இலாத சொல் மாலைகள் பாடியே 2113-3
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார் 2113-4
216. சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார் 2114-1
மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்று 2114-2
ஆதியார் அருள் ஆதலின் அஞ்செஎழுத்து 2114-3
ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம் 2114-4
217. தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை 2115-1
அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்தக் 2115-2
கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி 2115-3
வண்டு அறாப் பொலி மலர் மழை ஆர்த்தது வானம் 2115-4
218. விளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின் 2116-1
கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவும் 2116-2
களைகண் ஆர்த்ததொர் கருணையின் ஆர்த்தன முத்து 2116-3
விளையும் மா கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே 2116-4
219. பல்கு வெண்கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப் 2117-1
புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார் 2117-2
அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரைத் தரங்கம் 2117-3
மல்கு பால் கடல் வளர்மதி உதித்தது என வந்தார் 2117-4
220. நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி 2118-1
மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர்க்கை மேல் குவித்தே 2118-2
ஆடு கின்றனர் அயர்ந்தனர் அளவில் ஆனந்தம் 2118-3
கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார் 2118-4
221. செய்ய பொன் புனை வெண்டரளத்து அணிசிறக்க 2119-1
சைவ மா மறைத் தலைவர் பால் பெறும் தனிக் காளம் 2119-2
வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும் 2119-3
உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத 2119-4
222. சுற்று மாமறைச் சுருதியின் பெருகு ஒலி நடுவே 2120-1
தெற்றினார் புரம் எரித்தவர் தரு திருச்சின்னம் 2120-2
முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட 2120-3
பெற்ற பாலறா வாயன் வந்தான் எனப் பிடிக்க 2120-4
223. புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னே 2121-1
இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலங்கிளர் தாரை 2121-2
அணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது 2121-3
உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத 2121-4
224. தெருளும் மெய்க்கலை விளங்கவும் பார் உளோர் சிந்தை 2122-1
இருளும் நீங்கவும் எழுது சொன் மறை அளிப்பவர் தாம் 2122-2
பொருளும் ஞானமும் போகமும் போற்றி என்பாருக்கு 2122-3
அருளும் அங்கணர் திரு அரத் துறையை வந்து அணைந்தார் 2122-4
225. வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆகச் 2123-1
சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து எழுந்து 2123-2
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல 2123-3
அந்தி நாண்மதி அணிந்தவர் கோயிலுள் அடைந்தார் 2123-4
226. மன்னு கோயிலை வலம் கொண்டு திரு முன்பு வந்து 2124-1
சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார் 2124-2
என்னையும் பொருளாக இன் அருள் புரிந்து அருளும் 2124-3
பொன் அடித்தலத் தாமரை போற்றி என்று எழுந்தார் 2124-4
227. சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர் 2125-1
ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி 2125-2
நீடினார் திரு அருள் பெரும் கருணையே நிகழப் 2125-3
பாடினார் திருப் பதிகம் ஏழ் இசையொடும் பயில 2125-4
228. இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்தி 2126-1
மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு 2126-2
திசை விளங்கிடத் திரு அருள் பெற்றவர் சில நாள் 2126-3
அசைவில் சீர்த் தொண்டர் தம் உடன் அப்பதி அமர்ந்தார் 2126-4
229. தேவர் தம்பிரான் திரு அரத் துறையினில் இறைஞ்சி 2127-1
மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலாத் 2127-2
தாவில் அன்பர்கள் தம் உடன் தொழுது பின் சண்பைக் 2127-3
காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார் 2127-4
230. விளங்கு வேணு புரத்து திருத் தோணி வீற்று இருந்த 2128-1
களம் கொள் கண்டர் தம் காதலியார் உடன் கூட 2128-2
உளம் கொளப் புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி 2128-3
வளம் கொள் பூம் புனல் புகலிமேல் செல மனம் வைத்தார் 2128-4
231. அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி 2129-1
நண்ணு பேர் அருளால் விடை கொண்டு போய் நடம் கொண்டு 2129-2
உள் நிறைந்த பூங்கழல் இணை உச்சி மேல் கொண்டே 2129-3
வெள் நிலா மலர் நித்திலச் சிவிகை மேல் கொண்டார் 2129-4
232. சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்கப் 2130-1
கவிகை வெண்மதிக் குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்பக் 2130-2
குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆடப் 2130-3
புவிகை மாறு இன்றிப் போற்ற வந்து அருளினார் போந்தார் 2130-4
233. மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின் 2131-1
குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம் 2131-2
முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப் 2131-3
பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம் 2131-4
234. உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அப்பதியோர் 2132-1
புடை இரண்டினும் கொடியொடு பூந்துகில் விதானம் 2132-2
நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி 2132-3
மிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார் 2132-4
235. அனைய செய்கையால் எதிர் கொளும் பதிகள் ஆனவற்றின் 2133-1
வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவிப் 2133-2
புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் 2133-3
பனை நெடும் கை மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர் 2133-4
236. அங்கு அணைந்து இளம்பிறை அணிந்த சென்னியர் 2134-1
பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்க பின் 2134-2
துங்க நீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன் 2134-3
பங்கயச் சேவடி பணிந்து பாடுவார் 2134-4
237. மண்ணினில் பொலி குலமலையர் தாம் தொழுது 2135-1
எண் இல் சீர்ப் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில் 2135-2
நண்ணிய வகை சிறப்பித்து நாதரைப் 2135-3
பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார் 2135-4
238. பாவின இசை வழிபாடி அங்கு அகன்றி 2136-1
யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார் 2136-2
மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார் 2136-3
மேவிய பெரும் திரு விசய மங்கையில் 2136-4
239. அந்தணர் விசய மங்கையினில் அங்கணர் 2137-1
தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன் 2137-2
வந்தனை செய்து கோ தனத்தை மன்னிய 2137-3
செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார் 2137-4
240. விசய மங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள் 2138-1
அசைவில் வைகாவினில் அணைந்து பாடிப் போந்து 2138-2
இசை வளர் ஞான சம்பந்தர் எய்தினார் 2138-3
திசை உடை ஆடையர் திருப்புறம் பயம் 2138-4
241. புறம் பயத்து இறைவரை வணங்கிப் போற்றி செய் 2139-1
திறம் புரி நீர்மையில் பதிகச் செம்தமிழ் 2139-2
நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய 2139-3
அறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார் 2139-4
242. அத் திருப்பதி பணிந்து அகன்று போய் அனல் 2140-1
கைத் தலத்தவர் பதி பிறவும் கை தொழு 2140-2
முத் தமிழ் விரபராம் முதல்வர் நண்ணினார் 2140-3
செய்த் தலைப் பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர் 2140-4
243. திரு மலி புகலி மன் சேரச் சேய் ஞலூர் 2141-1
அரு மறையவர் பதி அலங்கரித்து முன் 2141-2
பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவே 2141-3
வருமுறை எதிர் கொள வந்து முந்தினார் 2141-4
244. ஞான சம்பந்தரும் நாயனார் சடைத் 2142-1
தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார் 2142-2
பான்மையில் வரும் பதி என்று நித்தில 2142-3
யானமுன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார் 2142-4
245. மா மறையாளர் வண் புகலிப் பிள்ளையார் 2143-1
தாம் எழுந்து அருளிடத் தங்கள் பிள்ளையார் 2143-2
காமரும் பதியில் வந்து அருளக் கண்டனர் 2143-3
ஆ மகிழ் உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர் 2143-4
246. களித்தனர் புண்ணியக் கரக வாசநீர் 2144-1
தெளித்தனர் பொரிகளும் மலரும் சிந்தினர் 2144-2
துளித்தனர் கண் மழை சுருதி ஆயிரம் 2144-3
அளித்தவர் கோயிலுள் அவர் முன்பு எய்தினார் 2144-4
247. வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலைப் 2145-1
பொங்கிய விருப்பினால் புடை வலம் கொடு 2145-2
செங்கைகள் சென்னிமேல் குவித்துச் சென்று புக்கு 2145-3
அங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர் 2145-4
248. வேதியர் சேய்ஞலூர் விமலர் தம் கழல் 2146-1
காதலில் பணிந்தவர் கருணை போற்றுவார் 2146-2
தாதை தாள் தடிந்த சண்டீசப் பிள்ளையார் 2146-3
பாதகப் பயன் பெறும் பரிசு பாடினார் 2146-4
249. இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே 2147-1
நன்னெடும் பதி உளோர் நயக்க வைகிய 2147-2
பின்னர் வெண்பிறை அணி வேணிப் பிஞ்ஞகர் 2147-3
மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார் 2147-4
250. ஆங்கணி சொன் மலர் மாலை சாத்தி அப் 2148-1
பாங்கு பந்தணை நலூர் பணிந்து பாடிப் போய்த் 2148-2
தீங்கு தீர் மா மறைச் செம்மை அந்தணர் 2148-3
ஓங்கும் ஓமாம் புலியூர் வந்து உற்றனர் 2148-4
251. மற்ற நல் பதி வட தளியின் மேவிய 2149-1
அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ்ச் 2149-2
சொல் தொடைபாடி அங்கு அகன்று சூழ் மதில் 2149-3
பொன் பதி வாழ் கொளி புத்தூர் புக்கனர் 2149-4
252. சீர் வளர் கோயிலை அணைந்து தேமலர்க் 2150-1
கார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர் 2150-2
பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார் 2150-3
வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர் 2150-4
253. நம்பரை நலம் திகழ் நாரை ஊரினில் 2151-1
கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய 2151-2
வம்பலர் செந்தமிழ் மாலை பாடி நின்று 2151-3
எம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார் 2151-4
254. அப்பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம் 2152-1
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள் அரன் 2152-2
பொன் பதி பலவும் முன் பணிந்து போந்தனர் 2152-3
பைப் பணியவர் கருப் பறியல் ஊரினில் 2152-4
255. பரமர் தம் திருக் கருப் பறியல் ஊரினைச் 2153-1
சிரபுரச் சிறுவர் கை தொழுது செந்தமிழ் 2153-2
உரை இசை பாடி அம் மருங்கின் உள்ளவாம் 2153-3
சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார் 2153-4
256. மண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி 2154-1
எணில் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊதக் 2154-2
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர்ச் செம்சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டுத் 2154-3
தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திருப் பிரம புரம் சாரச் செல்லும்போது 2154-4
257. பிள்ளையார் எழுந்து அருளக் கேட்ட செல்வப் பிரமபுரத்து அருமறையோர் பெருகு காதல்2155-1
உள்ளம் மகிழ் சிறந்து ஓங்கத் தோணி மேவும் உமைப் பாகர் கழல் வணங்கி உவகை கூர 2155-2
வெள்ள மறை ஒலிபெருகு மறுகு தோறும் மிடை மகர தோரணங்கள் கதலி பூகம் 2155-3
தெள்ளுபுனல் நிறை குடங்கள் தீப தூபம் செழும் கொடிகள் நிரைத்து எதிர் கொள் சிறப்பில் செய்வார் 2155-4
258. ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாசப் 2156-1
பூரண கும்பங்கள் நிறை கரகம் ஏந்திப் புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி 2156-2
வாரணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரைச் 2156-3
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழுந்தரளக் குடை நிழல் கீழ் சென்று கண்டார் 2156-4
259. கண்ட பொழுதே கைகள் தலைமேல் கொண்டு கண் களிப்ப மனம் களிப்பக் காதல் பொங்கித் 2157-1
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து சொல் இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை 2157-2
எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி 2157-3
வண்டமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார் 2157-4
260. திங்கள் அணி மணிமாடம் மிடைந்த வீதி சென்று அணைந்து தெய்வ மறைக் கற்பின் மாதர் 2158-1
மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து 2158-2
துங்க நிலைக் கோபுரத்தை இறைஞ்சி புக்குச் சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள் 2158-3
தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார் 2158-4
261. பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரன் கருணைத் திருவருளின் பரிசு போற்றி 2159-1
விரவு மலர்க் கண் பனிப்பப் கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மைச் 2159-2
சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது திரு நீல கண்ட யாழ்ப்பாணர் பின்னே 2159-3
வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள் செய்து தம் திரு மாளிகையின் வந்தார் 2159-4
262. மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும் மருங்கு அணைய மாளிகையில் அணையும்போதில் 2160-1
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறைக் குல மகளிர் நெருங்கி ஏந்த 2160-2
இறைவர் திரு நீற்றுக் காப்பு ஏந்தி முன் சென்று ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த 2160-3
முறைமை அவர்க்கு அருள் செய்து மடத்தில் புக்கார் முதல்வர் பால் மணி முத்தின் சிவிகை பெற்றார் 2160-4
263. செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும் திருத் தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து 2161-1
மல்கு திருப் பதிகங்கள் பலவும் பாடி மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகுநாளில் 2161-2
ஒல்லை முறை உபநயனப் பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணரப் பெற்றார் 2161-3
தொல்லை மறை விதிச் சடங்கு மறையோர் செய்யத் தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற 2161-4
264. ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமையாகும் 2162-1
இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று 2162-2
வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால் 2162-3
பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம் 2162-4
265. சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரைப் 2163-1
பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்னப் பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை 2163-2
கருதி ஆதரவோடும் வியப்பு உற்று ஏத்தும் கலை மறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன் 2163-3
வரும் தியானப் பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார் 2163-4
266. மந்திரங்கள் ஆன எல்லாம் அருளிச் செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த 2164-1
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால் 2164-2
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்தஞ்சு என்பார் 2164-3
அந்தியினுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளிச்செய்தார் 2164-4
267. அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய அந்தணர்கள் அருள் தலைமேல் கொண்டு தாழ்ந்து 2165-1
சித்தம்மகிழ்வொடு சிறப்பத் தாமும் தெய்வத் திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து 2165-2
மெய்த்த இசைப் பதிகங்கள் கொண்டு போற்றி விரை மலர்த்தாள் மனம் கொண்டு மீண்டு போந்து 2165-3
பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூடப் பரமர் தாள் பணிந்து ஏத்திப் பயிலும் நாளில் 2165-4
268. பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது 2166-1
வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பில் ஞானத்து அமுது உண்ட 2166-2
செந்தமிழ் ஞான சம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சு தற்காக 2166-3
அந்தணர் பூந்தராய் தன்னில் அணைந்தனர் நாவுக் கரையர் 2166-4
269. வாக்கின் பெருவிறல் மன்னர் வந்து அணைந்தார் எனக் கேட்டு 2167-1
பூக்கமழ் வாசத் தடம் சூழ் புகலிப் பெரும் தகையாரும் 2167-2
ஆக்கிய நல் வினைப் பேறு என்று அன்பர் குழாத் தொடும் எய்தி 2167-3
ஏற்கும் பெரு விருப்போடும் எதிர் கொள எய்தும் பொழுதில் 2167-4
270. சிந்தை இடை அறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும் 2168-1
கந்தம் மிகையாம் கருத்தும் கை உழவாரப் படையும் 2168-2
வந்திழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திரு நீறும் 2168-3
அந்தம் இலாத் திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய 2168-4
271. கண்ட கவுணியர்க் கன்றும் கருத்தில் பரவு மெய்க் காதல் 2169-1
தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று தொழுதே 2169-2
அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச 2169-3
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள் செய்தார் 2169-4
272. பேர் இசை நாவுக்கு அரசைப் பிள்ளையார் கொண்டு உடன் போந்து 2170-1
போர் விடையார் திருத்தோணிப் பொன் கோயில் உட்புகும் போதில் 2170-2
ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால் 2170-3
சீர்வளர் தொண்டரைக் கொண்டு திருமாளிகையினில் சேர்ந்தார் 2170-4
273. அணையும் திருத்தொண்டர் தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால் 2171-1
இணையில் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்துப் 2171-2
புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டு 2171-3
உணரும் சொல் மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார் 2171-4
274. அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கு அரசர் 2172-1
மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவிடம் கும்பிட வேண்டி 2172-2
பொன் மார்பில் முந்நூல் புனைந்த புகலிப் பிரான் இசைவோடும் 2172-3
பின்னாக எய்த இறைஞ்சிப் பிரியாத நண்பொடும் போந்தார் 2172-4
275. வாக்கின் தனி மன்னர் ஏக மாறாத் திரு உளத்தோடும் 2173-1
பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து 2173-2
தேக்கிய மாமறை வெள்ளத் திருத்தோணி வீற்று இருந்தாரைத் 2173-3
தூக்கின் தமிழ் மாலை பாடித் தொழுது அங்கு உறைகின்ற நாளில் 2173-4
276. செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுள்களான் மொழி மாற்றும் 2174-1
வந்த சொல் சீர் மாலை மாற்றும் வழி மொழி எல்லா மடக்குச் 2174-2
சந்த வியமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக் குறள் சாத்தி 2174-3
எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு 2174-4
277. நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம் 2175-1
சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக 2175-2
மூல இலக்கியமாக எல்லாப் பொருள்களும் முற்ற 2175-3
ஞாலத்து உயர் காழியாரைப் பாடினார் ஞான சம்பந்தர் 2175-4
278. இன்னிசை பாடின எல்லாம் யாழ்ப் பெரும் பாணனார் தாமும் 2176-1
மன்னும் இசை வடிவான மதங்க சூளா மணியாரும் 2176-2
பன்னிய ஏழ் இசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப் 2176-3
பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார் 2176-4
279. அங்கண் அமர் கின்ற நாளில் அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும் 2177-1
திங்கள் சடை அண்ணலார்தம் திருப்பதி யாவையும் கும்பிட்டு 2177-2
எங்கும் தமிழ் மாலை பாடி இங்கு எய்துவன் என்று 2177-3
தம் குலத் தாதையா ரோடும் தவ முனிவர்க்கு அருள் செய்தார் 2177-4
280. பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற குலத் தாதையாரும் 2178-1
அருமையால் உம்மைப் பயந்த அதனால் பிரிந்து உறைவு ஆற்றேன் 2178-2
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும் 2178-3
ஒருமையால் இன்னம் சிலநாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார் 2178-4
281. ஆண்டகையாரும் இசைந்து அங்கு அம்பொன் திருத்தேணி மேவும் 2179-1
நீண்ட சடையார் அடிக்கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே 2179-2
ஈண்டு புகழ்த் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும் 2179-3
காண் தகு காழி தொழுது காதலினால் புறம் போந்தார் 2179-4
282. அத்திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன்போதுவார் போத 2180-1
மெய்த்தவர் அந்தணர் நீங்கா விடை கொண்டு மீள்வார்கள் மீள 2180-2
முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளித் தாமம் நிரத்த 2180-3
நித்தில வெண்குடை மீது நிறை மதி போல நிழற்ற 2180-4
283. சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார் 2181-1
என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்ற 2181-2
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்ப 2181-3
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர் கொண்டு வணங்க 2181-4
284. சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க 2182-1
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத் 2182-2
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று 2182-3
பொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார் 2182-4
285. திருமறைச் சபையர் ஆளி சிவனார் திருக்கண்ணார் கோயில் 2183-1
பெரு விருப்பால் அணைந்து ஏத்திப் பிஞ்ஞகர் கோயில் பிறவும் 2183-2
உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ் மாலை கொண்டு ஏத்தி 2183-3
வரு புனல் பொன்னி வடபால் குட திசை நோக்கி வருவார் 2183-4
286. போற்றிய காதல் பெருக புள்ளிருக்கும் திருவேளூர் 2184-1
நால் தடம் தோளுடை மூன்று நயனப் பிரான் கோயில் நண்ணி 2184-2
ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி 2184-3
ஆற்றிய பூசனை சாற்றி அஞ்சொற் பதிகம் அணிந்தார் 2184-4
287. நீடு திரு நின்றி ஊரின் நிமலனார் நீள் கழல் ஏத்திக் 2185-1
கூடிய காதலில் போற்றிக் கும்பிட்டு வண் தமிழ் கூறி 2185-2
நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப் புன்கூர் நண்ணி 2185-3
ஆடிய பாதம் இறைஞ்சி அரும் தமிழ் பாடி அமர்ந்தார் 2185-4
288. அங்கு நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயில் ஆன 2186-1
எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான் மடந்தை 2186-2
பங்கர் உறை பழ மண்ணிப் படிக்கரைக் கோயில் வணங்கித் 2186-3
தங்கு தமிழ் மாலை சாத்தித் திருக்குறுக்கைப் பதி சார்ந்தார் 2186-4
289. திருக்குறுக்கைப் பதி மன்னித் திரு வீரட்டானத்து அமர்ந்த 2187-1
பொருப்புவில்லாளரை ஏத்திப் போந்து அன்னியூர் சென்று போற்றிப் 2187-2
பருக்கை வரை உரித்தார் தம் பந்தண நல்லூர் பணிந்து 2187-3
விருப்புடன் பாடல் இசைந்தார் வேதம் தமிழால் விரித்தார் 2187-4
290. அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணம் சேரி 2188-1
செப்பரும் சீர்த் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி 2188-2
எப்பொருளும் தரும் ஈசர் எதிர் கொள் பாடிப் பதி எய்தி 2188-3
ஒப்பில் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்விக் குடி உற்றார் 2188-4
291. செழுந்திரு வேள்விக் குடியில் திகழ் மணவாள நற்கோலம் 2189-1
பொழிந்த புனல் பொன்னி மேவும் புனிதத் துருத்தி இரவில் 2189-2
தழும்பிய தன்னைமையும் கூடத் தண் தமிழ் மாலையில் பாடிக் 2189-3
கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடிக் காவிற் சென்றடைந்தார் 2189-4
292. திருக்கோடி காவில் அமர்ந்த தேவர் சிகாமணி தன்னை 2190-1
எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள்ளேனப் 2190-2
பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து சொல் மாலைகள் பாடிக் 2190-3
கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கை தொழச் சென்றார் 2190-4
293. கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக் கண் உற்று இறைஞ்சி முன் போந்து 2191-1
மஞ்சணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி 2191-2
அஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாகச் 2191-3
செஞ்சடை வேதியர் மன்னும் திருமங்கலக் குடி சேர்ந்தார் 2191-4
294. வெங் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித் 2192-1
தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் பதிகத் தொடை சாத்தி 2192-2
அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்டத் தொழுது 2192-3
செங்கண் மாலுக்கு அரியார் தந்திருந்து தேவன் குடி சேர்ந்தார் 2192-4
295. திருந்து தேவன் குடி மன்னும் சிவ பெருமான் கோயில் எய்திப் 2193-1
பொருந்திய காதலில் புக்குப் போற்றி வணங்கிப் புரிவார் 2193-2
மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று 2193-3
அருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில் ஞானத்து அமுது உண்டார் 2193-4
296. மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அந் நெறி செல்வார் 2194-1
செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்து இடை போய் 2194-2
மை திகழ் கண்டர் தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கி 2194-3
எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் ஈசர்தம் கோயில் 2194-4
297. இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கான 2195-1
பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவி 2195-2
பொன்னங் கழல் இணை போற்றிப் புறம் போந்து அணைந்து புகுந்தார் 2195-3
மன்னும் தடம் கரைப் பொன்னி வட குரங்காடுதுறையில் 2195-4
298. வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்ட 2196-1
அடைவும் திருப்பதிகத்தில் அறிய சிறப்பித்து அருளிப் 2196-2
புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றி 2196-3
படை கொண்ட மூவிலை வேலர் பழனம் திருப்பதி சார்ந்தார் 2196-4
299. பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில் 2197-1
உழைபுக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி 2197-2
விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார் 2197-3
அழனக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார் 2197-4
300. மாட நிரை மணி வீதித் திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர் 2198-1
நாடு உய்யப் புகலிவரு ஞான போனகர் வந்து நண்ணினார் என்று 2198-2
ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து 2198-3
நீடு மனக் களிப்பினொடும் எதிர் கொள்ள நித்தில யானத்து நீங்கி 2198-4
301. வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்பால் 2199-1
நந்தி திரு அருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில் 2199-2
ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று 2199-3
புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர் 2199-4
302. மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில் 2200-1
அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவில் காதல் 2200-2
தணியாத கருத்தின் ஓடும் தம்பெருமான் கோயில் வலம் கொண்டு தாழ்ந்து 2200-3
பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார் 2200-4
303. கோடல் கோங்கம் குளி கூவிளம் என்னும் திருப்பதிகக் குலவு மாலை 2201-1
நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த திரு உள்ளத்து நிலைமை தோன்ற 2201-2
ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்று 2201-3
பாடினார் ஆடினார் பண்பினொடும் கண் பொழி நீர் பரந்து பாய 2201-4
304. பல முறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத் தொண்டரோடு 2202-1
நிலவு திருப்பதி அதன் கண் நிகழும் நாள் நிகர் இலா நெடுநீர்க் கங்கை 2202-2
அலையும் மதி முடியார் தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றிக் 2202-3
குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில் 2202-4
305. குடதிசை மேல் போவதற்குக் கும்பிட்டு அங்கு அருள் பெற்றுக் குறிப்பின் ஓடும் 2203-1
படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தானப் பதியில் நண்ணி 2203-2
அடையும் மனம் உற வணங்கி அரும் தமிழ் மாலைகள் பாடி அங்கு நின்றும் 2203-3
புடைவளர் மென் கரும்பினொடு பூகம் இடை மழபாடி போற்றச் சென்றார் 2203-4
306. செங்கை மான்மறியார் தம் திருமழபாடிப் புறத்துச் சேரச் செல்வார் 2204-1
அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்து அருளி அணைந்த போழ்தில் 2204-2
மங்கை வாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள் 2204-3
பொங்கு மா தவம் உடையார் எனத் தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார் 2204-4
307. மழபாடி வயிர மணித் தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம் கொண்டு எய்தி 2205-1
செழுவாச மலர்க் கமலச் சேவடிக் கீழ்ச் சென்று தாழ்ந்து எழுந்து நின்று 2205-2
தொழுது ஆடிப் பாடி நறும் சொல் மாலைத் தொடை அணிந்து துதித்துப் போந்தே 2205-3
ஒழியாத நேசம் உடன் உடையவரைக் கும்பிட்டு அங்கு உறைந்தார் சின்னாள் 2205-4
308. அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ 2206-1
முதன் மறையோர் அன்பிலாந் துறையின் முன்னவனைத் தொழுது போற்றிப் 2206-2
பதம் நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார் பயில் பதியும் பணிந்து பாடி 2206-3
மத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர் 2206-4
309. சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் துறை நதி வாழ் சென்னியார் தம் 2207-1
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள்புக்கு முன்பு தாழ்ந்து 2207-2
துன்று கதிர்ப் பரிதிமதி மருந்துக்கள் தொழுது வழிபாடு செய்ய 2207-3
நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில் சொல் மாலை நிகழப் பாடி 2207-4
310. அங்கண் அகன்று அம் மருங்கில் அங்கணர் தம் பதி பிறவும் அணைந்து போற்றிச் 2208-1
செங்கமலப் பொதி அவிழச் சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறாப் 2208-2
பொங்கு ஒலி நீர் மழ நாட்டுப் பொன்னி வட கரை மிசைப் போய்ப் புகலி வேந்தர் 2208-3
நங்கள் பிரான் திருப்பாச்சிலாச்சிரமம் பணிய நண்ணும் போதில் 2208-4
311. அந் நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல் 2209-1
கன்னி இள மடப்பிணையாம் காமரு கோமளக் கொழுந்தின் கதிர் செய் மேனி 2209-2
மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தித் 2209-3
தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்தத் தானும் மனம் தளர்வு கொள்வான் 2209-4
312. மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும் கையார் பாதம் 2210-1
பற்றியே வரும் குலத்துப் பான்மையினான் ஆதலினால் பரிவு தீரப் 2210-2
பொன் தொடியைக் கொடு வந்து போர் கோலச் சேவகராய் புரங்கள் மூன்றும் 2210-3
செற்றவர் தம் கோயில் உட் கொடு புகுந்து திரு முன்பே இட்டு வைத்தான் 2210-4
313. அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார் எழுந்து அருளி அணுக எய்தச் 2211-1
செவ்விய மெய்ஞ் ஞானம் உணர் திருஞான சம்பந்தன் வந்தான் என்றே 2211-2
எவ் உலகும் துயர் நீங்கப் பணி மாறும் தனிக் காளத்து எழுந்த ஓசை 2211-3
எவ் உயிர்க்கும் அவன் கேளா மெல் இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான் 2211-4
314. மா நகரம் அலங்கரிமின் மகர தோரணம் நாட்டும் மணி நீர் வாசத் 2212-1
தூ நறும் பூரண கும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும் 2212-2
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவித் தானும் 2212-3
வானவர் நாயகர் மகனார் வருமுன்பு தொழுது அணைந்தான் மழவர் கோமான் 2212-4
315. பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன் என்று ஆனந்தம் பெருகு காதல் 2213-1
வெள்ளம் நீர் கண் பொழியத் திருமுத்தின் சிவிகையின் முன் வீழ்ந்த போது 2213-2
வள்ளலார் எழுக என மலர்வித்த திருவாக்கால் மலர்க்கை சென்னி 2213-3
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குலப்பதியின் மணிவீதி கொண்டு புக்கான் 2213-4
316. மங்க தூரியம் முழங்கும் மணி வீதி கடந்து மதிச் சடையார் கோயில் 2214-1
பொங்கு சுடர்க் கோபுரத்துக்கு அணித்து ஆக புனை முத்தின் சிவிகை நின்றும் 2214-2
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணிவாயில் பணிந்து புக்கு 2214-3
தங்கள் பிரான் கோயில் வலம் கொண்டு திருமுன் வணங்கச் சாரும் காலை 2214-4
317. கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து நிலம் சேர்ந்து அதனைக் கண்டு நோக்கி 2215-1
என் இது என்று அருள் செய்ய மழவன்தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற 2215-2
பொன் இவளை முயலகனாம் பொருவில் அரும்பிணி பொருந்தப் புனிதர் கோயில் 2215-3
முன் அணையக் கொணர்வித்தேன் இது புகுந்தபடி என்று மொழிந்து நின்றான் 2215-4
318. அணிகிளர் தார் அவன் சொன்ன மாற்றம் அருளடும் கேட்டு அந் நிலையின் நின்றே 2216-1
பணி வளர் செஞ்சடைப் பாச்சின் மேய பரம் பொருள் ஆயினாரைப் பணிந்து 2216-2
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று 2216-3
தணிவில் பிணி தவிர்க்கும் பதிகத் தண்தமிழ் பாடினார் சண்பை நாதர் 2216-4
319. பன்னு தமிழ் மறையாம் பதிகம் பாடி திருக்கடைக் காப்புச் சாத்தி 2217-1
மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலை மென் சொல் 2217-2
கன்னி உறு பிணி விட்டு நீங்கக் கதும் எனப் பார் மிசை நின்று எழுந்து 2217-3
பொன்னின் கொடி என ஒல்கிவந்து பெருவலித் தாதை புடை அணைந்தாள் 2217-4
320. வன்பிணி நீங்கு மகளைக் கண்ட மழவன் பெரு மகிழ்ச்சி பொங்கக் 2218-1
தன்தனிப் பாவையும் தானும் கூடச் சண்பையர் காவலர் தாளில் வீழ 2218-2
நின்ற அருமறைப் பிள்ளையாரும் நீர் அணிவேணி நிமலர் பாதம் 2218-3
ஒன்றிய சிந்தை உடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார் 2218-4
321. நீடு திரு வாச்சிரமம் மன்னும் நேரிழை பாகத்தர் தாள் வணங்கிக் 2219-1
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தே 2219-2
ஆடல் பயின்றார் பதிபிறவும் அணைந்து பணிந்து அடிபோற்றி ஏகிச் 2219-3
சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலிச் சிவபெருமானை இறைஞ்சச் சென்றார் 2219-4
322. பண்பயில் வண்டு இனம்பாடும் சோலைப் பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து 2220-1
மண் பரவும் தமிழ் மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து 2220-2
திண்பெரும் தெய்வக் கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சிச் 2220-3
சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம் திரு ஈகோய் மலையைச் சார்ந்தார் 2220-4
323. செங்கண் குறவரைத் தேவர் போற்றும் திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும் 2221-1
கங்கை சடையார் கழல் பணிந்து கலந்த இசைப் பதிகம் புனைந்து 2221-2
பொங்கர்ப் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்துள்ள தானங்கள் எல்லாம் போற்றிக் 2221-3
கொங்கில் குட புலம் சென்று அணைந்தார் கோதில் மெய்ஞ்ஞான கொழுந்து அனையார் 2221-4
324. அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து 2222-1
தெண்திரை நீர்த் தடம் பொன்னித் தென் கரையாம் கொங்கின் இடை 2222-2
வண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார் 2222-3
கொண்டல் பயில் நெடும் புரிசை கொடி மாடச் செங்குன்றூர் 2222-4
325. அந் நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து 2223-1
பன்னெடுந்தோரணமுதலாப் பயில் அணிகள் பல அமைத்து 2223-2
முன் உறவந்து எதிர் கொண்டு பணிந்து ஏத்திமொய் கரங்கள் 2223-3
சென்னியுறக் கொண்டு அணைந்தார் சினவிடையார் செழுங்கோயில் 2223-4
326. தம் பெருமான் கோயிலினுள் எழுந்து அருளித் தமிழ் விரகர் 2224-1
நம்பரவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க 2224-2
இம்பரும் உம்பரும் ஏத்த இன்னிசை வண் தமிழ் பாடிக் 2224-3
கும்பிடும் ஆதரவு உடன் அக் கோ நகரில் இனிது அமர்ந்தார் 2224-4
327. அப்பாலைக் குட புலத்தில் ஆறணிந்தார் அமர் கோயில் 2225-1
எப்பாலும் சென்று ஏத்தித் திரு நணாவினை இறைஞ்சிப் 2225-2
பைப் பாந்தள் புணைந்த வரைப் பரவிப் பண்டு அமர்கின்ற 2225-3
வைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார் 2225-4
328. ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்கண் 2226-1
தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழிகாலை 2226-2
வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வரப் 2226-3
பாங்கர் வரையும் குளிரும் பனிப் பருவம் எய்தியதால் 2226-4
329. அளிக்குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலரப் 2227-1
பளிங்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை எனத் 2227-2
துளித் தலைமேல் அறுகு பனி தொடுத்து அசையச் சூழ் பனியால் 2227-3
குளிர்க் குடைந்து வெண் படாம் போர்த்து அனைய குன்றுகளும் 2227-4
330. மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய்க் 2228-1
கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி 2228-2
வெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான் போல் விசும்பின் இடை 2228-3
ஐது வெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகுமால். 2228-4
331. நீடிய அப் பதிகள் எலாம் நிறை மாடத் திறைகள் தொறும் 2229-1
பேடையுடன் பவளக்கால் புறவு ஒடுங்கப் பித்திகையின் 2229-2
தோடு அலர் மென் குழல் மடவார் துணைக் கலச வெம் முலையுள் 2229-3
ஆடவர் தம் பணைத்தோளும் மணி மார்பும் அடங்குவன 2229-4
332. அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம் 2230-1
பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம் 2230-2
எரி உமிழ் பேழ் வாய்த் தோணி இரும்பு ஈர்ப்பார் இடை எல்லாம் 2230-3
விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம் 2230-4
333. அந்நாளில் கொடி மாடச் செங் குன்றூர் அமர்ந்து இருந்த 2231-1
மெய்ஞ்ஞானப் பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள் 2231-2
பன்னாளும் அந்நாட்டில் பயின்ற அதனால் பனித்த குளிர் 2231-3
முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும் 2231-4
334. அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்கள் எல்லாம் 2232-1
முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே 2232-2
இந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்தப் பெறு என்று 2232-3
சென்னி மதி அணிந்தாரைத் திருப்பதிகம் பாடுவார் 2232-4
335. அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த 2233-1
வெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால் 2233-2
எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே 2233-3
செய்வினைத் தீண்டா திரு நீல கண்டம் எனச் செப்பினார் 2233-4
336. ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளிச் செய்து 2234-1
தூய பதிகத் திருக் கடைக் காப்புத் தொடுத்து அணிய 2234-2
மேய அப்பொன்பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள் 2234-3
தீய பனிப் பிணி அந்நாட்டு அடங்கவும் தீர்ந்தது அன்றே 2234-4
337. அப்பதியின் கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்று 2235-1
துப்புறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி 2235-2
முப்புரி நூலுடன் தோல் அணி மார்பர் முனிவரொடும் 2235-3
செப்பரும் சீர்த் திருப்பாண்டிக் கொடுமுடி சென்று அணைந்தார் 2235-4
338. பருவம் அருப் பொன்னிப் பாண்டிக் கொடு முடியார் தம்பாதம் 2236-1
மருவி வணங்கி வளத் தமிழ் மாலை மகிழ்ந்து சாத்தி 2236-2
விரி சுடர் மாளிகை வெஞ்ச மாக் கூடல் விடையவர் தம் 2236-3
பெருவில் தானம் பல போற்றிக் குணதிசைப் போதுகின்றார் 2236-4
339. செல்வக் கருவூர்த் திருவானிலைக் கோயில் சென்று இறைஞ்சி 2237-1
நல் இசை வண் தமிழ்ச் சொல் தொடை பாடி அந்நாடு அகன்று 2237-2
மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்து 2237-3
மல்கு திரைப் பொன்னித் தென் கரைத் தானம் பல பணிவார் 2237-4
340. பன்னெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும் 2238-1
அந் நிலைத் தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சி 2238-2
மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார் 2238-3
பொன் இயல் வேணிப் புனிதர் பராய்த் துறையுள் புகுந்தார் 2238-4
341. நீடும் பராயத் துறை நெற்றித் தனிக் கண்ணர் கோயில் நண்ணிக் 2239-1
கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோதில் தமிழ்ச் சொல் மாலை 2239-2
பாடும் கவுணியர் கண்பனி மாரி பரந்து இழியச் 2239-3
சூடும் கரதலத்து அஞ்சலி கோலித் தொழுது நின்றார் 2239-4
342. தொழுது புறம்பு அணைந்து அங்கு நின்று ஏகிச் சுரர் பணிவு உற்று 2240-1
எழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா 2240-2
வழுவில் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார் 2240-3
செழு மலர்ச் சோலைத் திருக் கற்குடி மலை சேர வந்தார் 2240-4
343. கற்குடி மாமலை மேல் எழுந்த கனகக் கொழுந்தினைக் கால் வளையப் 2241-1
பொன் திரள் மேருச் சிலை வளைத்த போர் விடையாளியைப் போற்றி இசைத்து 2241-2
நற்றமிழ் மாலை புனைந்து அருளி ஞான சம்பந்தர் புலன்கள் ஐந்தும் 2241-3
செற்றமிழ் மூக்கீச்சரம் பணிந்து திருச்சிராப் பள்ளிச் சிலம்பு அணைந்தார் 2241-4
344. செம்மணி வாரி அருவி தூங்கும் சிராப் பள்ளி மேய செழும் சுடரை 2242-1
கைம் மலை ஈருரி போர்வை சாத்தும் கண் நுதலாரைக் கழல் பணிந்து 2242-2
மெய்ம் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ் மாலை வேய்ந்து 2242-3
மைம் மலர் கண்டர் தம் ஆனைக் காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார் 2242-4
345. விண்ணவர் போற்றி செய் ஆனைக் காவில் வெண் நாவல் மேவிய மெய்ப் பொருளை 2243-1
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நால் கோட்டு நாகம் பணிந்ததுவும் 2243-2
அண்ணல் கோச் செங்கண் அரசன்செய்த அடிமையும் அஞ்சொல் தொடையில் வைத்துப் 2243-3
பண் உறு செந்தமிழ் மாலைப் பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால் 2243-4
346. நாரணன் நான்முகன் காணா உண்மை வெண் நாவல் உண்மை மயேந்திரமும் 2244-1
சீரணி நீடு திருக்கயிலை செல்வத் திருவாரூர் மேய பண்பும் 2244-2
ஆரணத்து உட் பொருள் ஆயினாரை ஆனைக் காவின் கண் புகழ்ந்து பாடி 2244-3
ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை இல் இன்பம் உற்றார் 2244-4
347. கை தொழுது ஏத்திப் புறத்து அணைந்து காமர் பதி அதன் கண் சில நாள் 2245-1
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவத்துறை வானவர் தாள் 2245-2
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போந்து 2245-3
வைதிக மாமணி அம்மருங்கு மற்று உள்ள தானம் வழுத்திச் செல்வார் 2245-4
348. ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மாமலையே முதலா 2246-1
வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ 2246-2
ஈறில் புகழ்ச் சண்பை ஆளியார் தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்ச 2246-3
நீறணி செம்பவளப் பொருப்பின் நெடுங்கள மா நகர் சென்று சேர்ந்தார் 2246-4
349. நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும் 2247-1
இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய் என்றும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி 2247-2
அடும் பணிச் செஞ்சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றிக் 2247-3
கடும் கைவரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப் பள்ளிப்பதி கை தொழுவார் 2247-4
350. சென்று திகழ் திருக்காட்டு பள்ளிச் செம் சடை நம்பர் தம் கோயில் எய்தி 2248-1
முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி வீழ்ந்து மொய் கழல் சேவடி கை தொழுவார் 2248-2
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்பக் கண் நுதலாரை முன் போற்றி செய்து 2248-3
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார் 2248-4
351. அங்கு அப்பதி நின்று எழுந்தருளி அணிந்திரு வாலம் பொழில் வணங்கி 2249-1
பொங்கு புனல் பொன்னிப் பூந்துருத்தி பொய் இலியாரைப் பணிந்து போற்றி 2249-2
எங்கும் நிகழ் திருத் தொண்டர் குழாம் எதிர் கொள்ள எப்பதியும் தொழுது 2249-3
செங்கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திருக் கண்டியூர் தொழச் சென்று அணைந்தார் 2249-4
352. கண்டியூர் வீரட்டர் கோயில் எய்திக் கலந்து அடியாருடன் காதல் பொங்கக் 2250-1
கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சிக் குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால் 2250-2
தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசைத்தமிழ் மாலை தன்னில் 2250-3
அண்டர் பிரான் தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டு அருளி 2250-4
353. வினவி எடுத்த திருப் பதிகம் மேவு திருக்கடைக் காப்பு தன்னில் 2251-1
அனைய நினைவு அரியேன் செயலை அடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மை 2251-2
புனைவுறு பாடலில் போற்றி செய்து போந்து புகலிக் கவுணியனார் 2251-3
துனை புனல் பொன்னித் திரை வலம் கொள் சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார் 2251-4
354. அப்பர் சோற்றுத் துறை சென்று அடைவோம் என்று 2252-1
ஒப்பில் வண் தமிழ் மாலை ஒருமையால் 2252-2
செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார் 2252-3
முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன் 2252-4
355. தொல்லை நீள் திருச் சோற்றுத் துறை உறை 2253-1
செல்வர் கோயில் வலம் கொண்டு தேவர்கள் 2253-2
அல்லல் தீர்க்க நஞ்சு உண்ட பிரான் அடி 2253-3
எல்லையில் அன்பு கூர இறைஞ்சினார் 2253-4
356. இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன் இசை 2254-1
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு 2254-2
உறைந்து வந்து அடியாருடன் எய்தினார் 2254-3
சிறந்த சீர்த் திரு வேதிக் குடியினில் 2254-4
357. வேத வேதியர் வேதி குடியினில் 2255-1
நாதர் கோயில் அணைந்து நலம் திகழ் 2255-2
பாத பங்கயம் போற்றிப் பணிந்து எழுந்து 2255-3
ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை 2255-4
358. எழுது மா மறையாம் பதிகத்து இசை 2256-1
முழுதும் பாடி முதல்வரைப் போற்றி முன் 2256-2
தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ் 2256-3
பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில் 2256-4
359. வெண்ணி மேய விடையவர் கோயிலை 2257-1
நண்ணி நாடிய காதலின் நாண் மதிக் 2257-2
கண்ணியார் தம் கழல் இணை போற்றியே 2257-3
பண்ணில் நீடும் பதிக முன் பாடினார் 2257-4
360. பாடி நின்று பரவிப் பணிந்து போய் 2258-1
ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன 2258-2
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர் 2258-3
நீடு சண்பை நிறை புகழ் வேதியர் 2258-4
361. மொய் தரும் சோலை சூழ் முளரி முள்ளடவி போய் 2259-1
மெய் தரும் பரிவிலான் வேள்வியைப் பாழபடச் 2259-2
செய்த சங்கரர் திருச்சக்கரப் பள்ளி முன் 2259-3
பெய்தவம் அருளினார் இயல் இசைத் தலைவனார் 2259-4
362. சக்கரப் பள்ளியார் தம் திருக் கோயில் உள் 2260-1
புக்கு அருத்தியின் உடன் புனை மலர்த் தாள் பணிந்து 2260-2
அக்கரைப் பரமர்பால் அன்பு உறும் பரிவு கூர் 2260-3
மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார் 2260-4
363. தலைவர் தம் சக்கரப் பள்ளி தன் இடை அகன்று 2261-1
அலைபுனல் பணைகளின் அருகு போய் அருமறைப் 2261-2
புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கைப் பதி 2261-3
குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார் 2261-4
364. மன்னும் அக் கோயில் சேர் மான் மறிக் கையர்தம் 2262-1
பொன் அடித்தலம் உறப் புரிவொடும் தொழுது எழுந்து 2262-2
இன் இசைத் தமிழ் புனைந்து இறைவர் சேல் ஊருடன் 2262-3
பன்னு பாலைத் துறைப் பதி பணிந்து ஏகினார் 2262-4
365. காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய் 2263-1
வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும் 2263-2
பூவின் மேல் விழை உறும் புகலியார் தலைவனார் 2263-3
சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார் 2263-4
366. மன்றலங் கழனி சூழ் திரு நலூர் மறைவலோர் 2264-1
துன்று மங்கல வினைத் துழனியால் எதிர் கொளப் 2264-2
பொன் தயங்கு ஒளி மணிச் சிவிகையில் பொலிவு உறச் 2264-3
சென்று அணைந்து அருளினார் சிரபுரச் செம்மலார் 2264-4
367. நித்திலச் சிவிகை மேல் நின்று இழிந்து அருளியே 2265-1
மொய்த்த அந்தணர் குழாம் முன் செலப் பின் செலும் 2265-2
பத்தரும் பரிசனங்களும் உடன் பரவவே 2265-3
அத்தர் தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார் 2265-4
368. வெள்ளி மால் வரையை நேர் விரிசுடர்க் கோயிலைப் 2266-1
பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகு நீர் 2266-2
வெள்ள ஆனந்தம் பொழிய மேல் ஏறி நீர் 2266-3
துள்ளுவார் சடையரைத் தொழுது முன் பரவுவார் 2266-4
369. பரவு சொல் பதிகம் முன் பாடினார் பரிவுதான் 2267-1
வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து 2267-2
அரவு உடைச் சடையர் பேர் அருள் பெறும் பெருமையால் 2267-3
விரவும் அப்பதி அமர்ந்து அருளியே மேவினார் 2267-4
370. அன்ன தன்மையில் அப்பதியினில் அமர்ந்து அருளி 2268-1
மின் நெடும் சடை விமலர் தாள் விருப்பொடு வணங்கிப் 2268-2
பன்னும் இன்னிசைப் பதிகமும் பல முறை பாடி 2268-3
நல் நெடும் குல நான் மறையவர் தொழ நயந்தார் 2268-4
371. நீடும் அப்பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர் 2269-1
ஆடுவார் திரு அருள் பெற அகன்று போந்து அங்கண் 2269-2
மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார் 2269-3
தேடும் மால் அயற்கு அரியவர் திருக்கருகாவூர் 2269-4
372. வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர்ச் 2270-1
சந்த மாமறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தே 2270-2
அந்தம் இல்லவர் வண்ணமார் அழல் வண்ணம் என்று 2270-3
சிந்தை இன்புறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம் 2270-4
373. பதிக இன் இசை பாடிப் போய்ப் பிறப்பதி பலவும் 2271-1
நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி 2271-2
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள் 2271-3
அதிர் சிலம்பு அடியார் மகிழ் அவள் இவள் நல்லூர் 2271-4
374. மன்னும் அப்பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த 2272-1
தன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசு உடையார் 2272-2
என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சிப் 2272-3
பன்னு சீர்ப் பதி பலவும் அப்பால் சென்று பணிவார் 2272-4
375. பழுது இல் சீர்த் திருப் பரிதி நல் நியமும் பணிந்து அங்கு 2273-1
எழுது மாமறையாம் பதிகத்து இசை போற்றி 2273-2
முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே முறைமை 2273-3
வழுவு இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து 2273-4
376. பொங்கு காதலில் போற்றி அங்கர் அருளுடன் போந்து 2274-1
பங்கயத் தடம் பணைப் பதி பலவும் முன் பணிந்தே 2274-2
எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார் 2274-3
அங்கணர்க்கு இடம் ஆகிய பழம்பதி ஆவூர் 2274-4
377. பணியும் அப்பதிப் பசுபதி ஈச்சரத்தின் இனிது இருந்த 2275-1
மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கித் 2275-2
தணிவு இல் காதலினால் தண் தமிழ் மாலைகள் சாத்தி 2275-3
அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார் 2275-4
378. மறை விளங்கும் அப்பதியினில் மணிகண்டர் பொன் தாள் 2276-1
நிறையும் அன்பொடு வணங்கியே நிகழ்பவர் நிலவும் 2276-2
பிறை அணிந்தவர் அருள் பெறப் பிரச மென் மலர் வண்டு 2276-3
அறை நறும் பொழில் திரு வலம் சுழியில் வந்து அணைந்தார் 2276-4
379. மதி புணைந்தவர் வலம் சுழி மருவு மாதவத்து 2277-1
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர் தம் முன் வந்து 2277-2
எதிர் கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர் செல மதியைக் 2277-3
கதிர் செய் வெண் முகில் குழாம் புடை சூழ்ந்தெனக் கலந்தார் 2277-4
380. கலந்த அன்பர்கள் தொழுது எழக் கவுணிய தலைவர் 2278-1
அலர்ந்த செம் கமலக் கரம் குவித்து உடன் அணைவார் 2278-2
வலம் சுழிப் பெருமான் மகிழ் கோயில் வந்து எய்திப் 2278-3
பொலம் கொள் நீள் சுடர்க் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார் 2278-4
381. மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம் கொண்டு 2279-1
உருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய்த் 2279-2
திருவலம் சுழி உடையவர் சேவடித் தலத்தில் 2279-3
பெருகும் ஆதரவு உடன் பணிந்து எழுந்தனர் பெரியோர் 2279-4
382. ஞான போனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால் 2280-1
ஆன காதலில் அங்கணவர் தமை வினவும் 2280-2
ஊனமில் இசையுடன் விளங்கிய திருப்பதிகம் 2280-3
பான் அலார் மணிகண்டரைப் பாடினார் பரவி 2280-4
383. புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே 2281-1
இலங்கு நீர்ப் பொன்னி சூழ் திருப்பதியினில் இருந்து 2281-2
நலம் கொள் காதலின் நாதர்தாள் நாள்தொறும் பரவி 2281-3
வலம் சுழிப் பெருமான் தொண்டர் தம் உடன் மகிழ்ந்தார் 2281-4
384. மகிழ்ந்த தன்தலை வாழும் அந் நாள் இடை வானில் 2282-1
திகழ்ந்த ஞாயிறு துணைப் புணர் ஓரை உள் சேர்ந்து 2282-2
நிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்ற 2282-3
வெகுண்டு வெம் கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில் 2282-4
385. தண் புனல் குளிர் கால் நறும் சந்தனத் தேய்வை 2283-1
பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர் 2283-2
நண்புடைத் துணை நகை மணி முத்தணி நாளும் 2283-3
உண்ப மாதுரியச் சுவை உலகு உளோர் விரும்ப 2283-4
386. அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையுமான் 2284-1
பெறல் அரிய புனல் என்று பேத்தேரின் பின் தொடரும் 2284-2
உறை உணவு கொள்ளும் புள் தேம்பிஅயல் இரை தேரும் 2284-3
பறவை சிறை விரித்து ஒடுங்கப் பனிப் புறத்து வதியுமால் 2284-4
387. நீண் நிலை மாளிகை மேலும் நிலா முன்றின் மருங்கினும் 2285-1
வாண் நிழல் நல் சோலையிலும் மலர் வாவிக் கரை மாடும் 2285-2
பூண் நிலவு முத்து அணிந்த பூங்குழலார் முலைத் தடத்தும் 2285-3
காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து மாந்தர் கலந்து உறைவாரால் 2285-4
388. மயில் ஒடுங்க வண்டு ஆட மலர்க் கமல முகை விரிய 2286-1
குயில் ஒடுங்காச் சோலையின் மென் தளிர் கோதிக் கூவி எழத் 2286-2
துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயிலச் சுடர் வானில் 2286-3
வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில் 2286-4
389. சண்பை வரும் பிள்ளையார் சடா மகுடர் வலம் சுழியை 2287-1
எண் பெருகத் தொழுது ஏத்திப் பழையாறை எய்துதற்கு 2287-2
நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருளி 2287-3
விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார் 2287-4
390. திருவாறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செந்தீயின் 2288-1
உருவாளன் அடிவணங்கி உருகிய அன்பொடு போற்றி 2288-2
மருவாரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள் 2288-3
தருவார் தம் திரு சத்தி முற்றத்தின் புறம் சேர்ந்தார் 2288-4
391. திருச் சத்தி முற்றத்தில் சென்று எய்தித் திருமலையாள் 2289-1
அருச்சித்த சேவடிகள் ஆர்வம் உறப் பணிந்து ஏத்திக் 2289-2
கருச் சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடி 2289-3
விருப்பு உற்றுத் திருப் பட்டீச்சரம் பணிய மேவும் கால் 2289-4
392. வெம்மை தரு வேனில் இடை வெயில் வெப்பம் தணிப்பதற்கு 2290-1
மும்மை நிலைத் தமிழ் விரகர் முடிமீதே சிவபூதம் 2290-2
தம்மை அறியாதபடி தண் தரளப் பந்தர் எடுத்து 2290-3
எம்மை விடுத்து அருள் புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப 2290-4
393. அவ்வுரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழச் 2291-1
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்துப் பிள்ளையார் 2291-2
இவ் வினைதான் ஈசர் திரு அருளால் ஆகில் இசைவது என 2291-3
மெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசைத் தாழ்ந்தார் 2291-4
394. அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்கக் 2292-1
கதிர் ஒளிய மணிக் காம்பு பரிசனங்கள் கைக் கொண்டார் 2292-2
மதுர மொழி மறைத் தலைவர் மருங்கு இமையோர் பொழிவாசப் 2292-3
புது மலரால் அப்பந்தர் பூம் பந்தரும் போலும் 2292-4
395. தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்பச் சுருதிகளின் பெருந்துழனி 2293-1
எண் திசையும் நிறைந்து ஓங்க எழுந்து அருளும் பிள்ளையார் 2293-2
வெண் தரளப் பந்தர் நிழல் மீது அணையத் திருமன்றில் 2293-3
அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார் 2293-4
396. பாரின் மிசை அன்பர் உடன் வருகின்றார் பன்னகத்தின் 2294-1
ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணைத் திறம் போற்றி 2294-2
ஈர மனம் களி தழைப்ப எதிர் கொள்ள முகம் மலர்ந்து 2294-3
சேர வரும் தொண்டர் உடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார் 2294-4
397. சென்று அணைந்து திருவாயில் புறத்து இறைஞ்சி உள்புக்கு 2295-1
வென்றி விடையவர் கோயில் வலம் கொண்டு வெண் கோட்டுப் 2295-2
பன்றி கிளைத்து அறியாத பாத தாமரை கண்டு 2295-3
முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார் 2295-4
398. அருள் வெள்ளத் திறம் பரவி அளப்பரய ஆனந்தப் 2296-1
பெரு வெள்ளத்து இடை மூழ்கிப் பேராத பெருங்காதல் 2296-2
திரு உள்ளப் பரிவுடனே செம்பொன் மலை வல்லியார் 2296-3
தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார் 2296-4
399. அப்பதியில் அமர்கின்ற ஆளுடைய பிள்ளையார் 2297-1
செப்பரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி 2297-2
ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு 2297-3
எப்பொருளுமாய் நின்றார் இரும் பூளை எய்தினார் 2297-4
400. தேவர் பிரான் அமர்ந்த திரு இரும் பூளை சென்று எய்தக் 2298-1
காவண நீள் தோரணங்கள் நாட்டி உடன் களி சிறப்பப் 2298-2
பூவண மாலைகள் நாற்றிப் பூரண பொன் குடம் நிரைத்து அங்கு 2298-3
யாவர்களும் போற்றி இசைப்பத் திருத் தொண்டர் எதிர் கொண்டார் 2298-4
401. வண் தமிழின் மொழி விரகர் மணிமுத்தின் சிவிகையினைத் 2299-1
தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழத் தாமும் தொழுதே 2299-2
அண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்று 2299-3
பண்டு அரும் இன் இசைப் பதிகம் பரம் பொருளைப் பாடுவார் 2299-4
402. நிகர் இலா மேருவரை அணுவாக நீண்டானை 2300-1
நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுதாகி நொய்யானை 2300-2
தகவு ஒன்ற அடியார்கள் தமை வினவித் தமிழ் விரகர் 2300-3
பகர்கின்ற அருமறையின் பொருள் விரியப் பாடினார் 2300-4
403. பாடும் அரதைப் பெரும் பாழியே முதலாகச் 2301-1
சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குட வாயில் 2301-2
நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி 2301-3
நீடு தமிழ் தொடை புனைந்து அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார் 2301-4
404. அங்கண் இனிது அமரு நாள் அடல் வெள் ஏனத்து உருவாய் 2302-1
செங்கண் நெடுமால் பணியும் சிவபுரத்துச் சென்று அடைந்து 2302-2
கங்கைச் சடை கரந்தவர் தம் கழல் வணங்கிக் காதலினால் 2302-3
பொங்குமிசைத் திருப்பதிகம் முன் நின்று போற்றி இசைத்தார் 2302-4
405. போற்றி இசைத்துப் புனிதர் அருள் பெற்றுப் போந்து எவ் உயிரும் 2303-1
தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அண்ணனார் 2303-2
ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர் தமை ஏத்துதற்கு 2303-3
நாற்றிசை யோர் பரவும் திருக் குடமூக்கு நண்ணினார் 2303-4
406. தேமருவு மலர்ச் சோலைத்திரு குடமூக்கினில் செல்வ 2304-1
மாமறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருளத் 2304-2
தூமறையின் ஒலி பெருகத் தூரிய மங்கலம் முழங்க 2304-3
கோ முறைமை எதிர் கொண்டு தம்பதி உள் கொடு புக்கார் 2304-4
407. திருஞான சம்பந்தர் திருக்குட மூக்கினைச் சேர 2305-1
வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம் 2305-2
உருகா நின்று உளம் மகிழ்க் குட மூக்கை உவந்து இருந்த 2305-3
பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார் 2305-4
408. வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து இருந்த வான் பொருளை 2306-1
சிந்தை மகிழ்வுற வணங்கித் திருத்தொண்டருடன் செல்வார் 2306-2
அந்தணர்கள் புடை சூழ்ந்து போற்றி இசைப்ப அவரொடும் 2306-3
கந்த மலர் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார் 2306-4
409. பூ மருவும் கங்கை முதல் புனிதமாம் பெரும் தீர்த்தம் 2307-1
மா மகம் தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில் 2307-2
தூ மருவும் மலர்க் கையால் தொழுது வலம் கொண்டு அணைந்து 2307-3
காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார் 2307-4
410. கண்ணாரும் அருமணியைக் காரோணத்து ஆர் அமுதை 2308-1
நண்ணாதார் புரம் எரித்த நான் மறையின் பொருளானைப் 2308-2
பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்திப் பிறபதியும் 2308-3
எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்து அருளி 2308-4
411. திரு நாசேச் சரத்து அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றை 2309-1
கரு நாகத்து உரி புணைந்த கண் நுதலைச் சென்று இறைஞ்சி 2309-2
அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள் செய்து 2309-3
பெரு ஞான சம்பந்தர் பெருகு ஆர்வத்தின் புற்றார் 2309-4
412. மா நாகம் அர்ச்சித்த மலர் கமலத் தாள் வணங்கி 2310-1
நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி 2310-2
பால் நாறும் மணி வாயார் பரமர் திருவிடை மருதில் 2310-3
பூ நாறும் புனல் பொன்னித் தடங்கரை போய் புகுகின்றார் 2310-4
413. ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் என்று எடுத்து அருளித் 2311-1
தாங்க அரிய பெருமகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால் 2311-2
ஈங்கு எனை ஆளுடைய பிரான் இடை மருது ஈதோ என்று 2311-3
பாங்கு உடைய இன் இசையால் பாடி எழுந்து அருளினார் 2311-4
414. அடியவர்கள் எதிர் கொள்ள எழுந்து அருளி அங்கு அணைந்து 2312-1
முடிவில் பரம் பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சிப் 2312-2
படியில் வலம் கொண்டு திரு முன்பு எய்திப் பார் மீது 2312-3
நெடிது பணிந்து எழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய 2312-4
415. பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்த அப்பதியில் 2313-1
விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண் பதியோடு 2313-2
அரவு சடைக்கு அணிந்தவர் தம் தாள் போற்றி ஆர்வத்தால் 2313-3
உரவு திருத் தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையும் நாள் 2313-4
416. மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதிக்கரை போய்க் 2314-1
குரங்கு ஆடு துறை அணைந்து குழகனார் குரை கழல்கள் 2314-2
பெரும் காதலினால் பணிந்து பேணிய இன்னிசை பெருக 2314-3
அரும் கலை நூல் திருப்பதிகம் அருள் செய்து 2314-4
417. அம் மலர்த் தடம் பதிபணிந்து அகன்று போந்து அருகு 2315-1
கைம்மலர்க் களத்து இறைவர் தம் கோயில்கள் வணங்கி 2315-2
நம் மலத்துயர் தீர்க்க வந்து அருளிய ஞானச் 2315-3
செம்மலார் திரு ஆவடு துறையினைச் சேர்ந்தார் 2315-4
418. மூவர்க்கு அறிவரும் பொருள் ஆகிய மூலத் 2316-1
தேவர் தம் திரு ஆவடு துறைத் திருத் தொண்டர் 2316-2
பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணைப் புகலிக் 2316-3
காவலர்க்கு எதிர் கொள்ளும் ஆதரவு உடன் கலந்தார் 2316-4
419. வந்து அணைவார் தொழா முனம் மலர் புகழ்ச் சண்பை 2317-1
அந்தணர்க்கு எலாம் அருமறைப் பொருள் என வந்தார் 2317-2
சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து எதிர் தாழ்ந்தே 2317-3
சிந்தை இன்புற இறைவர் தம் கோயில் முன் சென்றார் 2317-4
420. நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நீள் நிலையான் 2318-1
மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கி 2318-2
ஆடும் ஆதியை ஆவடு துறையுள் ஆர் அமுதை 2318-3
நாடு காதலில் பணிந்து எழுந்து அரும் தமிழ் நவின்றார் 2318-4
421. அன்பு நீடிய அருவி கண் பொழியும் ஆர்வத்தால் 2319-1
முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர் 2319-2
துன்பு போம் மனத் திருத்தொண்டர் தம்முடன் தொழுதே 2319-3
இன்பம் மேவி அப்பதியினில் இனிது அமர்ந்து இருந்தார் 2319-4
422. மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்கு 2320-1
ஆவது ஆகிய காலம் வந்து அணை உற அணைந்து 2320-2
தாவில் சண்பையர் தலைவர்க்குத் தாதையார் தாமும் 2320-3
போவதற்கு அரும் பொருள் பெற எதிர் நின்று புகன்றார் 2320-4
423. தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர் 2321-1
முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னி 2321-2
அந்தமில் பொருள் ஆவன ஆவடு துறையுள் 2321-3
எந்தையார் அடித் தலங்கள் அன்றோ என எழுந்தார் 2321-4
424. சென்று தேவர் தம்பிரான் மகிழ் கோயில் முன்பு எய்தி 2322-1
நின்று போற்றுவார் நீள் நிதி வேண்டினார்க்கு ஈவது 2322-2
ஒன்றும் மற்றிலேன் உன்னடி அல்லது ஒன்று அறியேன் 2322-3
என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார் 2322-4
425. எடுத்த வண் தமிழ்ப் பதிக நால் அடியின் மேல் இரு சீர் 2323-1
தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார் 2323-2
மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்தி 2323-3
அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார் 2323-4
426. நச்சி இன் தமிழ் பாடிய ஞான சம்பந்தர் 2324-1
இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால் 2324-2
அச் சிறப்பு அருள் பூதம் முன் விரைந்த கல் பீடத்து 2324-3
உச்சி வைத்தது பசும் பொன் ஆயிரக் கிழி ஒன்று 2324-4
427. வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால் 2325-1
உய்ந்த இக்கிழி பொன் உலவாக் கிழி உமக்கு 2325-2
நித்தனார் அருள் செய்தது என்று உரைக்க நேர் தொழுதே 2325-3
அத்தனார் திரு அருள் நினைந்து தவ மேனி மேல் பணிந்தார் 2325-4
428. பணிந்து எழுந்து கை தொழுது முன் பனி மலர்ப் பீடத்து 2326-1
அணைந்த ஆடகக் கிழிதலைக் கொண்டு அருமறைகள் 2326-2
துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால் 2326-3
தணிந்த சிந்தை அத் தாதையார்க்கு அளித்து உரைசெய்வார் 2326-4
429. ஆதி மாமறை விதியினால் ஆறு சூழ் வேணி 2327-1
நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி 2327-2
தீது நீங்க நீர் செய்யவும் திருக் கழுமலத்து 2327-3
வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகுமால் 2327-4
430. என்று கூறி அங்கு அவர்தமை விடுத்த பின் அவரும் 2328-1
நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண 2328-2
வென்றி ஞான சம்பந்தரும் விருப்பொடு வணங்கி 2328-3
மன்றல் ஆவடு துறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார் 2328-4
431. அண்ணலார் திரு ஆவடுதுறை அமர்ந்தாரை 2329-1
உள் நிலாவிய காலினால் பணிந்து உறைந்து 2329-2
மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடைமேல் 2329-3
தெள் நிலா அணிவார் திருக் கோழம்பம் சேர்ந்தார் 2329-4
432. கொன்றைவார் சடைமுடியரைக் கோழம்பத்து இறைஞ்சி 2330-1
என்றும் நீடிய இன் இசைப் பதிகம் முன் இயம்பி 2330-2
மன்று உளார் மகிழ் வைகல் மாடக் கோயில் மருங்கு 2330-3
சென்று சார்ந்தனர் திருவளர் சிரபுரச் செல்வர் 2330-4
433. வைகல் நீடு மாடக் கோயில் மன்னிய மருந்தைக் 2331-1
கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி 2331-2
செய்ய இன் இசைச் செந்தமிழ் மாலைகள் மொழிந்து 2331-3
நையும் உள்ளத்தர் ஆய்த்திரு நல்லத்தில் நண்ணி 2331-4
434. நிலவு மாளிகைத் திரு நல்லம் நீடு மாமணியை 2332-1
இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்துப் 2332-2
பலவும் ஈசர் தம் திருப்பதி பணிந்து செல்பவர் தாம் 2332-3
அலை புனல் திருவழுந்தூர் மாடக் கோயில் அடைந்தார் 2332-4
435. மன்னுமாடம் மகிழ்ந்த வான் பொருளினை வணங்கிப் 2333-1
பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவிப் 2333-2
பொன்னி மா நதிக் கரையினில் மீண்டு போந்து அணைந்து 2333-3
சொன்னவாறு அறிவார் தமைத் துருத்தியில் தொழுதார் 2333-4
436. திரைத் தடம் புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில் 2334-1
வரைத்தலைப் பசும் பொன் எனும் வண் தமிழ்ப்பதிகம் 2334-2
உரைத்து மெய் உறப் பணிந்து போந்து உலவும் அந்நதியின் 2334-3
கரைக் கண் மூவலூர்க் கண் நுதலார் கழல் பணிந்தார் 2334-4
437. மூவலூர் உறை முதல்வரைப் பரவிய மொழியால் 2335-1
மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்து 2335-2
பூ அலம்பு தண் புனல் பணைப் புகலியார் தலைவர் 2335-3
வாவி சூழ் திரு மயிலாடு துறையினில் வந்தார் 2335-4
438. மல்கு தண் தலை மயிலாடு துறையினில் மருவும் 2336-1
செல்வ வேதியர் தொண்டரொடு எதிர் கொளச் சென்று 2336-2
கொல்லை மான்மறிக் கையரைக் கோயில் புக்கு இறைஞ்சி 2336-3
எல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார் 2336-4
439. உள்ளம் இன்புற உணர் உறும் பரிவு கொண்டு உருகி 2337-1
வெள்ளம் தாங்கிய சடையரை விளங்கு சொல் பதிகத் 2337-2
தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி 2337-3
வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார் 2337-4
440. அத்திருப்பதி அன்று போய் அணிகிளர் சூலங் 2338-1
கைத்தலப் படை வீரர் செம் பொன் பள்ளி கருதி 2338-2
மெய்த்த காதலில் விள நகர் விடையவர் பாதம் 2338-3
பத்தர் தம் உடன் பணிந்து இசைப் பதிகம் முன் பகர்ந்தார் 2338-4
441. பாடும் அப்பதி பணிந்து போய்ப் பறியலூர் மேவும் 2339-1
தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும் 2339-2
காடு கொண்ட செம் சடைமுடிக் கடவுளர் கருது 2339-3
நீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர் 2339-4
442. பரமர் தம் திருப் பறியலூர் வீரட்டம் பரவி 2340-1
விரவு காதலின் வேலையின் கரையினை மேவி 2340-2
அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கிச் 2340-3
சிரபுரத்தவர் திருத்தொண்டர் எதிர் கொளச் செல்வார் 2340-4
443. அடியவர்கள் களி சிறப்பத் திருவேட்டக்குடி பணிந்து அங்கு அலைவாய்ப் போகிக் 2341-1
கடி கமழும் மலர் பழனக் கழிநாடு அகன் பதிகள் கலந்து நீங்கிக் 2341-2
கொடி மதில் சூழ் தரும புரம் குறுகினார் குண்டர் சாக்கியர் தம் கொள்கை 2341-3
படி அறியப் பழுது என்றே மொழிந்து உய்யும் நெறி காட்டும் பவள வாயர் 2341-4
444. தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பு இடம் ஆம் அதனால் சார 2342-1
வரும் அவர் தம் சுற்றத்தார் வந்து எதிர் கொண்டு அடி வணங்கி வாழ்த்தக் கண்டு 2342-2
பெருமை உடைப் பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளிச் செய்த 2342-3
அருமை உடைப் பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளிச் செய்தார் 2342-4
445. கிளைஞரும் மற்று அது கேட்டுக் கெழுவு திரு பதிகத்திற்கு கிளர்ந்த ஓசை 2343-1
அளவு பெறக் கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம் 2343-2
வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம் 2343-3
உளம் நடுங்கிப் பணிந்து திருநீல கண்டப் பெரும்பாணர் உணர்த்து கின்றார் 2343-4
446. அலகில் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும் 2344-1
உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் 2344-2
பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப் பெற்றால் பண்பு நீடி 2344-3
இலகும் இசை யாழின்கண் அடங்காமையான் காட்டப் பெறுவன் என்றார் 2344-4
447. வேத நெறி வளர்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மை 2345-1
பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்த நூல் புகன்ற பேத 2345-2
நாத இசை முயற்சிகளால் அடங்காத வகை காட்ட நாட்டுகின்றார் 2345-3
மாதர் மடப்பிடி பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த 2345-4
448. வண் புகலி வேதியனார் மாதர் மடப்பிடி எடுத்து வனப்பில் பாடிப் 2346-1
பண் பயிலும் திருக்கடைக் காப்பு சாத்த அணைந்து பெரும் பாணர் தாம் 2346-2
நண்புடை யாழ்க் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்தப்புக்கு 2346-3
எண் பெருகும் அப் பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே 2346-4
449. அப்பொழுது திருநீல கண்ட இசைப் பெரும்பாணர் அதனை விட்டு 2347-1
மெய்ப் பயமும் பரிவும் உறப் பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து நோக்கி 2347-2
இப்பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்னச் 2347-3
செப்பியது இக் கருவியை நான் தொடுதலின் நன்றோ என்று தெளிந்து செய்வார் 2347-4
450. வீக்கு நரம்பு உடையாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனைப் போக்க 2348-1
ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர் 2348-2
ஆக்கிய இக்கருவியினைத் தாரும் என வாங்கிக் கொண்டு அவனி செய்த 2348-3
பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர் பணித்து அருளுகின்றார் 2348-4
451. ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அதென் ஆள் உடையாள் உடனே கூடச் 2349-1
செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்பால் 2349-2
எய்திய இக் கருவியினில் அளவு படுமோ நம் தம் இயல்புக்கு ஏற்ப 2349-3
வையகத்தோர் அறிவு உற இக்கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார் 2349-4
452. சிந்தையால் அளவு படா இசைப் பெருமை செயல் அளவில் எய்துமோ நீர் 2350-1
இந்த யாழினைக் கொண்டே இறைவர் திருப் பதிக இசை இதனில் எய்த 2350-2
வந்தவாறே பாடி வாசிப்பீர் எனக் கொடுப்பப் புகலி மன்னர் 2350-3
தந்த யாழினைத் தொழுது கைக் கொண்டு பெரும் பாணர் தலை மேல் கொண்டார் 2350-4
453. அணைவுறும் அக் கிளைஞர் உடன் பெரும் பாணர் ஆள் உடைய பிள்ளையார் தம் 2351-1
துணை மலர்ச் சேவடி பணிந்து துதித்து அருளத் தோணிபுரத் தோன்றலாரும் 2351-2
இணையில் பெரும் சிறப்பு அருளித் தொண்டருடன் அப்பதியில் இனிது மேவிப் 2351-3
பணை நெடும் கை மதயானை உரித்தவர் தம் பதி பிறவும் பணியச் செல்வார் 2351-4
454. பங்கய பாசடைத் தடம் சூழ் பழன நட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி 2352-1
மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனைப் பலவும் வணங்கிப் போற்றித் 2352-2
தங்கி இசை யாழ்ப் பெரும் பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார் 2352-3
செங்கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திரு நள்ளாறு 2352-4
455. நள்ளாற்றில் எழுந்து அருள நம்பர் திருத்தொண்டர் குழாம் நயந்து சென்று 2353-1
கொள்ளாற்றில் எதிர் கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணையக் குறுகிக் கங்கைத் 2353-2
தெள்ளாற்று வேணியர் தம் திருவளர் கோபுரம் இறைஞ்சிச் செல்வக் கோயில் 2353-3
உள்ளாற்ற வலம் கொண்டு திருமுன்பு தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார் 2353-4
456. உருகிய அன்புறு காதல் உள் உருகி நனை ஈரம் பெற்றால் போல 2354-1
மருவு திருமேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர்ப் புளகம் வளர்க்கும் நீராய் 2354-2
அருவி சொரி திரு நயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்று 2354-3
பொருவில் பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் என்று எடுத்துப் போற்றி 2354-4
457. யாழ்நரம்பில் ஆர இயல் இசை கூடப் பாடியே எண்ணில் கற்பச் 2355-1
சேணளவு பட ஓங்கும் திருக் கடைக் காப்பு சாத்திச் செங்கண் நாகப் 2355-2
பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்துப் புறத்து அணைந்து புவனம் ஏத்தும் 2355-3
பாணனார் யாழில் இடப் பால் அறா வாயர் அருள் பணித்த போது 2355-4
458. பிள்ளையார் திருத்தாளம் கொடு பாடப் பின்பு பெரும் பாணனார் தாம் 2356-1
தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கிக் 2356-2
கொள்ள இடும் பொழுதின் கண் குவலத்தோர் களிகூரக் குலவு சண்பை 2356-3
வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத் தொண்டர் உடன் மருவும் காலை 2356-4
459. மன்னு திரு நள்ளாற்று மருந்தை வணங்கிப் போந்து வாச நன்னீர்ப் 2357-1
பொன்னி வளம் தரு நாட்டுப் புறம்பு அணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றிச் 2357-2
செந் நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச் சாத்த மங்கை மூதூர் 2357-3
தன்னில் எழுந்து அருளினார் சைவ சிகா மணியார் மெய்த் தவத்தோர் சூழ 2357-4
460. நிறை செல்வத் திருச்சாத்த மங்கையினில் நீல நக்கர் தாமும் சைவ 2358-1
மறையவனார் எழுந்து அருளும் படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும் 2358-2
துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கி 2358-3
முறைமையில் வந்து எதிர் கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார் 2358-4
461. அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர் தம் கோயில் மருங்கு அணைந்து வானோர் 2359-1
உயவந்தித்து எழு முன்றில் புடை வலம் கொண்டு உள்புக்கு ஆறு ஒழுகும் செக்கர் 2359-2
மய வந்தி மதிச் சடையார் முன் தாழ்ந்து மாதவம் இவ் வையம் எல்லாம் 2359-3
செய வந்த அந்தணனார் செங்கைமேல் குவித்து எழுந்து திருமுன் நின்றார் 2359-4
462. போற்றி இசைக்கும் பாடலினால் பொங்கி எழும் ஆதரவு பொழிந்து விம்ம 2360-1
ஏற்றின் மிசை இருப்பவர் தம் எதிர் நின்று துதித்துப் போந்து எல்லை இல்லா 2360-2
நீற்று நெறி மறையவனார் நீல நக்கர் மனையில் எழுந்து அருளி அன்பால் 2360-3
ஆற்றும் விருந்தவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார் 2360-4
463. நீடு திரு நீல நக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மைப் 2361-1
பாடும் யாழ்ப் பெரும் பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவி 2361-2
ஆடும் அவர் அயவந்தி பணிவதனுக்கு அன்பருடன் அணைந்து சென்று 2361-3
நாடிய நண்புடை நீல நக்க அடிகளுடன் நாதர் கழலில் தாழ்ந்து 2361-4
464. கோது இலா ஆர் அமுதைக் கோமளக் கொம்புடன் கூடக் கும்பிட்டு ஏத்தி 2362-1
ஆதி ஆம் மறைப் பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளிச் செய்வார் 2362-2
நீதியால் நிகழ்கின்ற நீல நக்கர் தம் பெரும் சீர் நிகழ வைத்துப் 2362-3
பூதி சாதனர் பரவும் புனித இயல் இசைப் பதிகம் போற்றி செய்தார் 2362-4
465. பரவிய காதலில் பணிந்து பால் அறா வாயர் புறத்து அணைந்து பண்பு 2363-1
விரவிய நண்பு உடை அடிகள் விருப்பு உறு காதலில் தங்கி மேவும் நாளில் 2363-2
அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார் 2363-3
உரவு மனக் கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி 2363-4
466. மற்றவர்தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம் 2364-1
பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக் 2364-2
கற்றவர் வாழ் கடல் நாகைக் காரோணத்துக் கண் நுதலைக் கைதொழுது கலந்த ஓசைச் 2364-3
சொல் தமிழ் மாலைகள் பாடிச் சில நாள் வைகித் தொழுது அகன்றார் தோணி புரத் தோன்றலாம் தாம் 2364-4
467. கழிக் கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கிக் கங்கையாற்றுச் 2365-1
சுழிக் கானல் வேணியர் தம் பதிபலவும் பரவிப் போய்த் தோகைமார் தம் 2365-2
விழிக் காவி மலர் பழனக் கீழ் வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்தி 2365-3
மொழிக் காதல் தமிழ் மாலை புனைந்தருளி அங்கு அகன்றார் மூதூர் நின்றும் 2365-4
468. அருகு அணையும் திருப்பதிகள் ஆனவெலாம் அங்கணரைப் பணிந்து போற்றிப் 2366-1
பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்து அருளும் பெருமை கேட்டுத் 2366-2
திரு மருவு செங் காட்டங் குடி நின்றும் சிறுத் தொண்டரோடிச் சென்று அங்கு 2366-3
குருகு மனம் களி சிறப்ப எதிர் கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார் 2366-4
469. சிறுத் தொண்டர் உடன் கூடச் செங்காட்டங் குடியில் எழுந்து அருளிச் சீர்த்தி 2367-1
நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர் அவர் நண்பு அமர்ந்து நீல கண்டம் 2367-2
பொறுத்து அண்டர் உயக் கொண்டார் கணபதீச் சரத்தின் கண் போகம் எல்லாம் 2367-3
வெறுத்து உண்டிப் பிச்சை நுகர் மெய்த் தொண்டருடன் அணைந்தார் வேதகீதர் 2367-4
470. அங்கு அணைந்து கோயில் வலம் கொண்டு அருளி அரவு அணிந்தார் அடிக் கீழ் வீழ்ந்து 2368-1
செங்கண் அருவிகள் பொழியத் திருமுன்பு பணிந்து எழுந்து செங்கை கூப்பித் 2368-2
தங்கள் பெரும் தகையாரைச் சிறுத் தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றிப் 2368-3
பொங்கி எழும் இசைபாடிப் போற்றி இசைத்து அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார் 2368-4
471. போந்து மா மாத்திரர் தம் போர் ஏற்றின் திருமனையில் புகுந்து சிந்தை 2369-1
வாய்ந்த மாதவர் அவர் தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும் 2369-2
காய்ந்த மால் விடையார் தம் கணபதீச் சரம் பரவு காதல் கூர 2369-3
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில் 2369-4
472. திருமருகல் நகரின் கண் எழுந்து அருளித் திங்களுடன் செங்கண் பாம்பு 2370-1
மருவு நெடும் சடைமவுலி மாணிக்க வண்ணார் கழல் வணங்கிப் போற்றி 2370-2
உருகிய அன்புறு காதல் உள் அலைப்பத் தெள்ளும் இசையுடனே கூடப் 2370-3
பெருகு தமிழ்த் தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலிப் பிள்ளையார்தாம் 2370-4
473. அந் நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி அணைவான் ஓர் கன்னியையும் உடன் கொண்டு 2371-1
பொன்னார் மேருச் சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது 2371-2
மினார் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீக் கொண்டு ஏறத் 2371-3
தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வான் 2371-4
474. வாள் அரவு தீண்டவும் தான் தீண்ட கில்லாள் மறு மாற்றம் மற்று ஒருவர் கொடு பார் இன்றி 2372-1
ஆளரியேறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர்க்கொடி போல்வாள் அரற்றும் போது 2372-2
கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லாக் கொள்கையினாலும் தீர்க்கக் குறையாதாக 2372-3
நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள் 2372-4
475. அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை அடைவாக உடன் போந்தேன் அரவால் வீடி 2373-1
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இவ்விடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை 2373-2
மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே 2373-3
சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கித் தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள் 2373-4
476. அடியாராம் இமையவர் தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செங்கண் 2374-1
நெடியானும் நான்முகனும் காணாக் கோல நீலவிட அரவு அணிந்த நிமலா வெந்து 2374-2
பொடியான காமன் உயிர் இரதி வேண்டப் புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாசக் 2374-3
கடியாரும் மலர்ச் சோலை மருங்கு சூழும் கவின் மருகற் பெருமானே காவாய் என்றும் 2374-4
477. வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெருங்கால வலயம் போலும் 2375-1
செந்தறு கண் வெள் எயிற்றுக் கரிய கோலம் சிதைந்து உருள உதைத்து அருளும் செய்யதாளா 2375-2
இந்த விடக் கொடு வேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழி நின்றும் ஏறு மாறும் 2375-3
அந்தி மதிக் குழவி வளர் செய்ய வேணி அணி மருகற் பெருமானே அருளாய் என்றும் 2375-4
478. இத் தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளங்கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் 2376-1
அத் தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்டகையார் கும்பிட வந்து அணைகின்றார் தம் 2376-2
மெய்த் தன்மை விளங்கு திருச் செவியில் சார மேவுதலும் திரு உள்ளக் கருணை மேல் மேல் 2376-3
வைத் தன்னம் என அயர்வாள் மாடு நீடு மா தவத்தோர் சூழ எழுந்து அருளி வந்தார் 2376-4
479. சிரபுரத்து மறையவனார் சென்று நின்று சிவபெருமான் அருள் போற்றிச் சிந்தை நைந்து 2377-1
பரிவுறுவாள் தனை நோக்கிப் பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்னக் 2377-2
கரமலர் உச்சியின் மேல் குவித்துக் கொண்டு கண் அருவி சொரிந்து இழியக் காழி வேதப் 2377-3
புரவலனார் சேவடிக் கீழ் வீழ்ந்து தாங்கள் போந்ததுவும் புகுந்ததுவும் புகலல் உற்றாள் 2377-4
480. வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர்நல்ல 2378-1
இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்குக் 2378-2
குளம் பெருகத் தனம் பெற்றுக் கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் 2378-3
தளர்ந்து அழியும் இவனுக்காத் தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன் தனையே சார்ந்துபோந்தேன் 2378-4
481. மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான் மறி கடலில் கலம் கவிழ்த்தால் போல்நின்றேன் 2379-1
சுற்றத்தார் என வந்து தோன்றி என்பால் துயரம் எலாம் நீங்க அருள் செய்தீர் என்னக் 2379-2
கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்கப் 2379-3
பற்றியவாள் அரவு விடம் தீரு மாறு பணைமருகர் பெருமானைப் பாடலுற்றார் 2379-4
482. சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானை சங்கரனை சசி கண்ட மவுலியானை 2380-1
விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற 2380-2
படையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம் 2380-3
உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்ளிழையார் உள் மெலிவு என்று எடுத்துப் பாட 2380-4
483. பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த பொருவில் திருத் தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப 2381-1
அங்கையினை உச்சியின் மேல் குவித்துக் கொண்டு அங்கு அருள் காழிப் பிள்ளையார் அடியில்வீழ்ந்த 2381-2
நங்கை அவள் தணை நயந்த நம்பியோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம் 2381-3
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார் 2381-4
484. மற்றவர்க்கு விடை கொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலியபாசம் 2382-1
சொற்ற புகழ்ச் சிறுத் தொண்டர் வேண்ட மீண்டும் செங்காட்டங் குடியில் எழுந்து அருள வேண்டிப் 2382-2
பற்றி எழும் காதல் மிக மேல் மேல் சென்று பரமனார் திறத்து உன்னிப் பாங்கர் எங்கும் 2382-3
சுற்றும் அருந்தவரோடும் கோயில் எய்திச் சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார் 2382-4
485. புக்கு இறைஞ்சி எதிர் நின்று போற்றுகின்றார் பொங்கு திரை நதிப்புனலும் பிறையும்சேர்ந்த 2383-1
செக்கர் முடிச் சடை மவுலி வெண்ணீற்றார் தம் திருமேனி ஒரு பாகம் பசுமை ஆக 2383-2
மைக் குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன் 2383-3
கைக் கனலார் கணபதீச் சரத்தின் மேவும் காட்சி கொடுத்து அருளுவான் காட்டக் கண்டார் 2383-4
486. மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங் காட்டங் குடியின் மன்னிப் 2384-1
பெருகு கணபதி ஈச்சரத்தார் பீடு உடைக் கோலமே ஆகித் தோன்ற 2384-2
உருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட 2384-3
அருவி கண் வார் உறப் பாடலுற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து 2384-4
487. கண்டு எதிர் போற்றி வினவிப் பாடிக் கணபதி ஈச்சரம் காதலித்த 2385-1
அண்டர் பிரானை வணங்கி வைகும் அப்பதியில் சில நாள் போற்றித் 2385-2
தொண்டருடன் அருள் பெற்று மற்றத் தொல்லைத் திருப்பதி எல்லை நீங்கிப் 2385-3
புண்டரிகத் தடம் சூழ் பழனப் பூம் புகலூர் தொழப் போதுகின்றார் 2385-4
488. சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத் தொண்டர் நண்பருடன் செல்ல நல்ல 2386-1
வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப் பெற்று மீண்ட பின்பு 2386-2
நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகன் பல பணிந்து 2386-3
பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர்ப் பாங்கு அணைந்தார் 2386-4
489. திருப்புகலூர் திருத் தொண்டரோடும் செம்மை முருகனார் மெய்ம் மகிழ்ந்த 2387-1
விருப்பொடு சென்று எதிர் கொள்ள வந்து வேத முதல்வர் தம் கோயில் எய்திப் 2387-2
பொருப்பு உறழ் கோபுரத்து உட் புகுந்து பூமலி முன்றில் புடை வலம் கொண்டு 2387-3
ஒருப் படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார் 2387-4
490. புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து பூம் புகலூர் மன்னு புண்ணியரை 2388-1
நெக்கு உருகும் சிந்தை அன்பு பொங்க நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய 2388-2
மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடிப் போந்து 2388-3
திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார் 2388-4
491. ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அப் பதி தன்னில் அமரு நாளில் 2389-1
வாங்கு மலைச் சிலையார் மகிழ்ந்த வர்த்த மானீச்சரம் தான் வணங்கி 2389-2
ஓங்கிய அன்பின் முருகனார் தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும் 2389-3
பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார் 2389-4
492. மற்றத் திருப்பதி வைகு நாளில் வாக்கின் பெரு விறல் மன்னனார் தாம் 2390-1
புற்றிடம் கொண்டாரை வந்து இறைஞ்சிப் பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச் 2390-2
சிறு இடைப் பொன் தொடிப் பாங்கர் தங்கும் திருப்புகலூர் தொழச் சிந்தை செய்து 2390-3
கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அவ்வூர் குறுக வந்தார் 2390-4
493. நாவுக்கு அரசர் எழுந்து அருளும் நல்ல திருவார்த்தை கேட்ட போதே 2391-1
சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞான சம்பந்தர் சிந்தை அன்பு 2391-2
மேவுற்ற காதல் மிகப் பெருக விரைந்து எதிர் கொள்ள மெய் அன்பர் ஓடும் 2391-3
பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர் புறம்பு அணை எல்லை கடந்து போந்தார் 2391-4
494. அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த அரசும் எதிர் வந்து அணைய வாசப் 2392-1
பொங்கு புனல்தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தித் 2392-2
தங்களின் அன்பின் முறைமை யாலே தாழ்ந்து வணங்கித் தனித் தனியே 2392-3
மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை வினவி மகிழும் போது 2392-4
495. மெய்த்திரு ஞான சம்பந்தர் வாக்கின் வேந்தரை விருப்பினாலே 2393-1
அப்பரை இங்கு அணையப் பெறும் பேர் அருள் உடையோம் அந்தனர் ஆரூர் 2393-2
எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறில் பெரும் தவத்தோர் 2393-3
செப்பிய வண் தமிழ் மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார் 2393-4
496. அரசர் அருளிச் செய்த வாய்மை அப்பொழுதே அருள் ஞானம் உண்ட 2394-1
சிரபுர வேந்தரும் சிந்தையின் கண் தென் திருவாரூர் வணங்குதற்கு 2394-2
விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும் வந்து உம்முடன் மேவுவன் என்று 2394-3
உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார் 2394-4
497. சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர் தோன்றல் பின் காதல் தொடத் தாமும் 2395-1
பொன் புகலூர் தொழச் சென்று அணைந்தார் புகலிப் பிரானும் புரிந்த சிந்தை 2395-2
விற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றிப் 2395-3
பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன் நான் மறைப் பாடிப் போந்தார் 2395-4
498. துணர் இணர்ச் சோலையும் சாலி வேலித் துறை நீர்ப் பழனமும் சூழ் கரும்பின் 2396-1
மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்கு உற நோக்கி மகிழ்ந்து அருளி 2396-2
அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்து அன்பு பொங்கப் 2396-3
புணர் இசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப் பொன் மதில் ஆரூர்ப் புறத்து அணைந்தார் 2396-4
499. வான் உயர் செங்கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர் 2397-1
தான் ஒரு பொன் உலகு என்னத் தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த 2397-2
பால் நிற நீற்றர் பருக்கையானைப் பதிகத் தமிழ் இசைபாடி ஆடித் 2397-3
தேனொடு வண்டுமுரலும் சோலைத் திருப்பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார் 2397-4
500. பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவிமேல் பொலிவது என்ன 2398-1
எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளிச் 2398-2
செங்கை நிறை மலர் கொண்டு தூவித் திரு இருக் குறள் பாடி ஏத்தித் 2398-3
தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர் தனைப் பணிவு உற்றார் தமிழ் விரகர் 2398-4
501. படியில் ஞானம் உண்டு அருளிய பிள்ளையைப் பணிதற்கு 2399-1
அடியர் சென்று எதிர் கொள எழுந்து அருளும் அஞ்ஞான்று 2399-2
வடி கொள் சூலத்தர் மன்னிய பொன்மதில் ஆரூர்க் 2399-3
கடி கொள் பேரணிப் பொலிவையார் முடிவுறக் காண்பார் 2399-4
502. நான மான் மத நளிர் பெரும் சேற்று இடை நறும் பொன் 2400-1
தூ நறுந்துகள் சொரிதலில் சுடர் ஒளிப் படலை 2400-2
யான வீதிகள் அடி வலித்து அவை கரைந்தலைய 2400-3
வான மாரியில் பொழிந்தது மலர் மது மாரி 2400-4
503. ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள் 2401-1
தோடு சூழ்வன சுரும்பொடு தமனியத் தசும்பு 2401-2
காடு கொண்டன கதலி தோரணம் நிரைக் கமுகு 2401-3
மாட மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம் 2401-4
504. மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின் 2402-1
கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும் 2402-2
நீல மா மணி நிழல் பொர நிறம்புகர் படுக்கும் 2402-3
பால வாயின பவன வேதிகை மலர்ப் பந்தர் 2402-4
505. தழை மலர்த்தடம் சாலைகள் தெற்கள் சதுக்கம் 2403-1
குழை முகத்தவர் ஆட அரங்கு இமையவர் குழாமும் 2403-2
விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்து 2403-3
மழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள் 2403-4
506. விரவு பேர் அணி வேறு வேறு இன்னன விளங்கும் 2404-1
பிரசமென்மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர் 2404-2
அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும் 2404-3
புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர் கொள்ளும் பொழுது 2404-4
507. வந்து இறைஞ்சும் மெய்த் தொண்டர் தம் குழாத்து எதிர் வணங்கிச் 2405-1
சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர் 2405-2
அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே 2405-3
எந்தை தான் எனை என்று கொள்ளும் கொல் என்று இசைத்தார் 2405-4
508. ஆன அத்திரு பதிகம் முன் பாடிவந்து அணையும் 2406-1
ஞான வித்தகர் மெய்த்தவர் சூழ அந் நகரார் 2406-2
தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய்த் தொழுது ஏத்த 2406-3
வான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார் 2406-4
509. மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார் 2407-1
தன் உள் எவ்வகைப் பெருமையும் தாங்கிய தகைத்தாம் 2407-2
பன் நெடும் சுடர்ப் படலையின் பரப்பினைப் பார்த்துச் 2407-3
சென்னி தாழ்ந்து தேவ ஆசிரியன் தொழுது எழுந்தார் 2407-4
510. மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கிக் 2408-1
கூடு காதலில் கோபுரம் பணிந்து கை குவித்துத் 2408-2
தேடு மால் அயர்க்கு அரியராய்ச் செழுமணிப் புற்றில் 2408-3
நீடு வாழ் முன்பு நிலமுறப் பல முறை பணிந்தார் 2408-4
511. பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் பரவிய புளகம் 2409-1
அணிந்த மேனியோடு ஆடினர் பாடினர் அறிவில் 2409-2
துணிந்த மெய்ப் பொருள் ஆனவர் தமைக் கண்டு துதிப்பார் 2409-3
தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார் 2409-4
512. செஞ் சொல் வண் தமிழ்த் திருப்பதிகத்து இசை எடுத்து 2410-1
நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடி 2410-2
மஞ்சு சூழ் திரு மாளிகை வாயிலின் புறம் போந்து 2410-3
அஞ்சு எழுத்தின் மெய் உணர்ந்தவர் திருமடத்து அணைந்தார் 2410-4
513. அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த 2411-1
செங்கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்துப் 2411-2
பொங்கு பேர் ஒளிப் புற்று இடம் கொண்டவர் புனிதப் 2411-3
பங்கயப் பதம் தொழுது காலம் தொறும் பணிந்தார் 2411-4
514. புற்றிடம் கொளும் புனிதரைப் போற்றி இசை பெருக 2412-1
பற்றும் அன்பொடு பணிந்து இசைப் பதிகங்கள் பாடி 2412-2
நல்தவத் திருத்தொண்டர்கள் ஒடு நலம் சிறப்ப 2412-3
மற்ற வண்பதி தன் இடை வைகும் அந் நாளில் 2412-4
515. மல்லல் நீடிய வலி வலம் கோளிலி முதலாத் 2413-1
தொல்லை நான் மறை முதல்வர் தம் பதி பல தொழுதே 2413-2
எல்லை இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி 2413-3
அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார் 2413-4
516. ஊறு காதலில் ஒளி வளர் புற்றிடம் கொண்ட 2414-1
ஆறு உலாவிய சடை முடி ஐயரைப் பணிந்து 2414-2
நீறு வாழ் என நிகழ் திருத் தொண்டர் களோடும் 2414-3
ஈறிலாத் திரு ஞான சம்பந்தர் அங்கு இருந்தார் 2414-4
517. அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகல 2415-1
நங்கள் தம் திரு நாவினுக்கு அரசரை நயந்து 2415-2
பொங்கு சீர்ப் புகலூர் தொழ அருளினால் போவார் 2415-3
தங்கும் அப்பதிப் புறம்பணை சார்ந்து அருள் செய்வார் 2415-4
518. புவன ஆரூரினில் புறம் போந்து அதனையே நோக்கி நின்றே 2416-1
அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யும் ஆறு அறிதி அன்றே 2416-2
சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செங்கை கூப்பி 2416-3
பவனமாய்ச் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே 2416-4
519. காழியார் வாழ வந்து அருள் செயும் கவுணியப் பிள்ளையார் தாம் 2417-1
ஆழியான் அறிஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார் 2417-2
பாழி மால் யானையின் உரி புணைந்தார் பனையூர் பணிந்து 2417-3
வாழி மாமறை இசைப் பதிகமும் பாடி அப் பதியினில் வைகி 2417-4
520. அங்கு நின்று அரிது எழுந்து அருளுவார் அகில காரணமும் ஆனார் 2418-1
தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே 2418-2
எங்கும் மெய்த்தவர் குழாம் எதிர் கொளத் தொழுது எழுந்து அருளி வந்தார் 2418-3
பொங்கு தண் பாசடைப் பங்கயப் புனல் வயல் புகலூர் சார 2418-4
521. நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும் மற்று நாமச் 2419-1
சேவுகைத்தவர் திருத் தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீதப் 2419-2
பூவினில் பொலி புனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தே 2419-3
மேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார் 2419-4
522. தேவர் தம் தலைவனார் கோயில் புக்கு அனைவரும் சீர் நிலத்து உற வணங்கி 2420-1
பாவரும் தமிழ் இசைப் பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே 2420-2
தாவில் சீர் முருகனார் திருமனைக்கு எய்தி அத் தனி முதல் தொண்டர் தாமே 2420-3
யாவையும் குறை அறுத்து இட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில் 2420-4
523. நீல நக்க அடிகளும் நிகழ் சிறுத் தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மைச் 2421-1
சீலம் மெய்த்தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை 2421-2
சாலமிக்கு உயர் திருத் தொண்டின் உண்மை திறம் தன்னையே தெளிய நாடிக் 2421-3
காலம் உய்த்தவர்களோடு அளவளாவிக் கலந்து அருளினார் காழி நாடார் 2421-4
524. கும்பிடும் கொள்கையில் குறி கலந்து இசை எனும் பதிக முன் ஆன பாடல் 2422-1
தம் பெரும் தலைமையால் நிலைமை சால் பதிய தன் பெருமை சால்புற விளம்பி 2422-2
உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய்க் காதல் கூர 2422-3
நம்பர் தம் பதிகள் ஆயின ஏனைப் பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார் 2422-4
525. புள்ளல் அம்பு தண்புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்றுப் 2423-1
பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் பிற பதி தொழச் செல்வார் 2423-2
வள்ளலார் சிறுத் தொண்டரும் நீல நக்கரும் வளம் பதிக்கு ஏக 2423-3
உள்ளம் அன்புறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார் 2423-4
526. கண்ணகன் புகல் ஊரினைத் தொழுது போம் பொழுதினில் கடல் காழி 2424-1
அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம் அருகு விட்டு அகலாதே 2424-2
வண்ண நித்திலச் சிவிகையும் பின் வர வழிகொள உறும் காலை 2424-3
எண்ணில் சீர்த்திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார் 2424-4
527. நாயனார் உமக்கு அளித்து அருள் செய்த இந் நலம் கிளர் ஒளி முத்தின் 2425-1
தூய யானத்தின் மிசை எழுந்து அருளுவீர் என்றலும் சுடர்த் திங்கள் 2425-2
மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில் விரும்பு தொண்டர்களோடும் 2425-3
போய தெங்குநீர் அங்கு யான் பின் வரப் போவது என் அருள் செய்தார் 2425-4
528. என்று பிள்ளையார் மொழிந்து அருள் செய்திட இரும் தவத்து இறையோரும் 2426-1
நன்று நீர் அருள் செய்ததே செய்வன் என்று அருள் செய்து நயப்பு உற்ற 2426-2
அன்றை நாள் முதல் உடன் செல்லும் நாள் எலாம் அவ் இயல்பினில் செல்வார் 2426-3
சென்று முன் உறத் திருவம்பர் அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும் 2426-4
529. சண்பை மன்னரும் தம்பிரான் அருள் வழி நிற்பது தலைச் செல்வார் 2427-1
பண்பு மேம் படு பனிக்கதிர் நித்திலச் சிவிகையில் பணிந்து ஏறி 2427-2
வண் பெரும் புகல் ஊரினைக் கடந்து போய் வரும் பரிசனத்தோடும் 2427-3
திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய்த் திருவம்பர் நகர் புக்கார் 2427-4
530. அம்பர்மா நகர் அணைந்து மா காளத்தில் அண்ணலார் அமர்கின்ற 2428-1
செம் பொன் மாமதில் கோயிலை வலம் கொண்டு திருமுன்பு பணிந்து ஏத்தி 2428-2
வம்புலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை 2428-3
உம்பர் வாழ நஞ்சு உண்டவர் தமைப் பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார் 2428-4
531. தாழ்ந்து நாவினுக்கு அரசுடன் தம்பிரான் கோயில் முன்புறம் எய்திச் 2429-1
சூழ்ந்த தொண்டரோடு அப்பதி அமர்பவர் சுரநதி முடிமீது 2429-2
வீழ்ந்த வேணியர் தமைப் பெரும் காலங்கள் விரும்பினால் கும்பிட்டு 2429-3
வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ வந்து அருளிய மறை வேந்தர் 2429-4
532. பொருவு இலாத சொல் புல்கு பொன் நிறம் முதல் பதிகங்களால் போற்றித் 2430-1
திருவின் ஆர்ந்த கோச் செங்கணான் அந்நகர் செய்த கோயிலைச் சேர்ந்து 2430-2
மருவு வாய்மை வண் தமிழ் மாலை அவ்வளவனைச் சிறப்பித்துப் 2430-3
பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும் 2430-4
533. இன்ன வாறு சொல் மாலைகளால் துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில் 2431-1
கன்னி மா மதில் திருக்கடவூர் தொழக் காதல் செய்து அருளிப்போய் 2431-2
மன்னு கோயில்கள் பிறபதி வணங்கியே வாக்கின் மன்னவ ரோடும் 2431-3
அந்நெடும்பதி அணை உறக் அயலரோடு அடியவர் எதிர்கொண்டார் 2431-4
534. மற்ற வண் பதி அணைந்து வீர அட்டத்து மழவிடையார் கோயில் 2432-1
சுற்று மாளிகை வலம் கொண்டு காலனை உதைத்து உருட்டிய செய்ய 2432-2
பொன் சிலம்பு அணி தாமரை வணங்கிமுன் போற்றி உய்ந்து எதிர் நின்று 2432-3
பற்று அறுப்பவர் சடை உடையான் எனும் பதிக இன் இசை பாடி 2432-4
535. பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து பார் பரவு சீர் அரசோடு 2433-1
விரவு நண்பு உடை குங்கிலிய பெருங் கலயர் தம் மனை மேவிக் 2433-2
கரை இல் காதல் மற்று அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து 2433-3
சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி 2433-4
536. சிறப்பு உடைத் திருப்பதி அதன் இடைச் சில நாள் அமர்ந்து அருளோடும் 2434-1
விறல் பெரும் கரி உரித்தவர் கோயில்கள் தொழச் செல்வார் 2434-2
மறைப் பெரும் திருக் கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும் 2434-3
அறப் பெரும் பயன் அனைய அத் தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர் 2434-4
537. தக்க அந்தணர் மேவும் அப் பதியினில் தான் தோன்றி மாடத்துச் 2435-1
செக்கர் வார் சடை அண்ணலைப் பணிந்து இசைச் செந்தமிழ் தொடைபாடி 2435-2
மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது போய் மீச்சூர் பணிந்து ஏத்திப் 2435-3
பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புரம் நகர் சேர்ந்தார் 2435-4
538. பாம்புரத் துறை பரமரைப் பணிந்து நல் பதிக இன் இசை பாடி 2436-1
வாம்புனல் சடை முடியினார் மகிழ் இடம் மற்றும் உள்ளன போற்றிக் 2436-2
காம்பினில் திகழ் கரும்பொடு செம் நெலின் கழனி அம்பணை நீங்கித் 2436-3
தேம் பொழில் திரு வீழி நன் மிழலையின் மருங்கு உறச் செல்கிறார் 2436-4
539. அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர் கொண்ட 2437-1
மெய்ப் பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார் 2437-2
பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார் 2437-3
எப் பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர் கொண்டார் 2437-4
540. நிறை குடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏந்தி 2438-1
நறை மலர் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி 2438-2
மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப 2438-3
இறைவர் திரு மைந்தர் தமை எதிர் கொள் வரவேற்றார் 2438-4
541. வந்து திரு வீழி மிழலை மறை வல்ல 2439-1
அந்தணர்கள் போற்றி இசைப்பத் தாமும் மணி முத்தின் 2439-2
சந்த மணிச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து அருளி 2439-3
உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார் 2439-4
542. அப்போது அரையார் விரிகோவண ஆடை 2440-1
ஒப்பு ஓதரும் பதிகத்து ஓங்கும் இசைபாடி 2440-2
மெய்ப் போதப் போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார் 2440-3
கைப் போது சென்னியின் மேல் கொண்டு கவுணியர் 2440-4
543. நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ண 2441-1
மேவிய விண் இழிந்த கோயில் வலம் கொள்வார் 2441-2
பூவியலும் உந்தியான் போற்றப் புவிக் கிழிந்த 2441-3
தேவியலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார் 2441-4
544. வலம் கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின் 2442-1
சலம் கொண்ட வேணித் தனி முதலைத் தாழ்ந்து 2442-2
நிலம் கொண்ட மேனியராய் நீடு பெரும் காதல் 2442-3
புலம் கொண்ட சிந்தையினால் பொங்கி இசை மீப்பொழிந்தார் 2442-4
545. போற்றிச் சடையார் புனல் உடையான் என்று எடுத்து 2443-1
சாற்றிப் பதிகத் தமிழ் மாலை சந்த இசை 2443-2
ஆற்ற மிகப் பாடி ஆனந்த வெள்ளத்தில் 2443-3
நீற்றழகர் சேவடிக் கீழ் நின்று அலைந்து நீடினார் 2443-4
546. நீடிய பேரன்பு உருகி உள்ளலைப்ப நேர் நின்று 2444-1
பாடி எதிர் ஆடிப் பரவிப் பணிந்து எழுந்தே 2444-2
ஆடிய சேவடிகள் ஆர்வம் உற உட்கொண்டு 2444-3
மாடுயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார் 2444-4
547. வந்து அணைந்து வாழ்ந்து மதில்புறத்து ஓர் மா மடத்துச் 2445-1
செம் தமிழ்ச் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருளச் 2445-2
சந்த மணிக் கோபுரத்துச் சார்ந்த வடபால் சண்பை 2445-3
அந்தணர் சூளா மணியார் அங்கு ஓர் மடத்து அமர்ந்தார் 2445-4
548. அங்கண் அமர்வார் அரனார் அடி இணைக் கீழ்த் 2446-1
தங்கிய காதலினால் காலங்கள் தப்பாமே 2446-2
பொங்கு புகழ் வாகீசரும் கூடப் போற்றி இசைத்தே 2446-3
எங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார் 2446-4
549. ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட 2447-1
பாங்கர் திலதைப் பதிமுற்றமும் பணிந்து 2447-2
வீங்கு ஒலி நீர் வீழி மழலையினில் மீண்டும் அணைந்து 2447-3
ஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் நாளில் 2447-4
550. சேண் உயர் மாடப் புகலி உள்ளார் திரு ஞான சம்பந்தப் பிள்ளையாரைக் 2448-1
காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம் மிகு காதல் கரை இகப்பப் 2448-2
பூணும் மனத்தொடு தோணி மேவும் பொருவிடை யார் மலர்ப் பாதம் போற்றி 2448-3
வேணு புரத்தை அகன்று போந்து வீழி மிழலையில் வந்து அணைந்தார் 2448-4
551. ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து ஓங்கிய காழி உயர் பதியில் 2449-1
வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன 2449-2
வீழி மிழலையின் வேதியர்கள் கேட்டு மெய் ஞானம் உண்டாரை முன்னா 2449-3
ஏழ் இசை சூழ்மறை எய்த ஓதி எதிர் கொள் முறைமையில் கொண்டு புக்கார் 2449-4
552. சண்பைத் திருமறையோர்கள் எல்லாம் தம் பிரானாரைப் பணிந்து போந்து 2450-1
நண்பில் பெருகிய காதல் கூர்ந்து ஞான சம்பந்தர் மடத்தில் எய்திப் 2450-2
பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே 2450-3
எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்து அருளப் பெற வேண்டும் என்றார் 2450-4
553. என்று அவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறு இல் சிவ ஞானப் பிள்ளை யாரும் 2451-1
நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர் கழல் இணை நாம் இறைஞ்ச 2451-2
இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள் பெற்று போவது என்றே 2451-3
அன்று புகலி அருமறையோர்க்கு அருள் செய்து அவர்க்கு முகம் அளித்தார் 2451-4
554. மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப 2452-1
பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம் பொருள் ஆனார் தமைப் பரவும் 2452-2
சீர் பட்ட எல்லை இனிது செல்லத் திருத் தோணி மேவிய செல்வர் தாமே 2452-3
கார் பட்ட வண்கைக் கவுணியர்க்கு கனவிடை முன் நின்று அருள் செய்கின்றார் 2452-4
555. தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம் தூமறை வீழி மிழலை தன்னுள் 2453-1
சேண் உயர் விண்ணினின்று இழிந்த இந்தச் சீர் கொள் விமானத்துக் காட்டுகின்றோம் 2453-2
பேணும் படியால் அறிதி என்று பெயர்ந்து அருள் செய்யப் பெரும் தவங்கள் 2453-3
வேணு புரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத் தொடும் உணர்ந்தார் 2453-4
556. அறி உற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சிமேல் அங்கை கூப்பி 2454-1
வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண் இழி கோயிலில் சென்று புக்கு 2454-2
மறி உற்ற கையரைத் தோணி மேல் முன் வணங்கும்படி அங்குக் கண்டு வாழ்ந்து 2454-3
குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார் 2454-4
557. மைம் மரு பூங்குழல் என்று எடுத்து மாறில் பெரும் திருத்தோணி தன் மேல் 2455-1
கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை தன்னுள் 2455-2
செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என் கொல் என்று 2455-3
மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேதவாயர் 2455-4
558. செஞ்சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடி திருக் கடைக் காப்புச் சாத்தி 2456-1
அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்து 2456-2
மஞ்சிவர் சோலைப் புகலி மேவும் மா மறையோர் தமை நோக்கி வாய்மை 2456-3
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மை திறத்தை அருள் செய்கின்றார் 2456-4
559. பிரம புரத்தில் அமர்ந்த முக்கண் பெரிய பிரான் பெருமாட்டி யோடும் 2457-1
விரவிய தானங்கள் எங்கும் சென்று விரும்பிய கோலம் பணிந்து போற்றி 2457-2
வருவது மேல் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று 2457-3
தெரிய உரைத் தருள் செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார் 2457-4
560. என்று கவுணியப் பிள்ளையார் தாம் இயம்பப் பணிந்தருள் ஏற்றுக் கொண்டே 2458-1
ஒன்றிய காதலின் உள்ளம் அம் கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்து 2458-2
மன்றுள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கிச் சென்று 2458-3
நின்ற புகழ்த் தோணி நீடுவாரைப் பணியும் நியதியராய் உறைந்தார் 2458-4
561. சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னைத் திருவீழி மேவிய செல்வர் பாதம் 2459-1
பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழாத் திருத் தொண்டர் சூழ 2459-2
உரவுத் தமிழ்த் தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக்கு அரசரோடும் 2459-3
விரவிப் பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில் 2459-4
562. மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி 2460-1
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவக் கண்டு 2460-2
பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞானப் பால் அறா வாயருடன் அரசும் பார் மேல் 2460-3
கண் நுதலான் திருநீற்றுச் சார் வினோர்க்கும் கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார் 2460-4
563. வானாகி நிலனாகி அனலுமாகி மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகி 2461-1
ஊனாகி உயிராகி உணர்வுமாகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால் 2461-2
ஆனாத வடிவாகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போது 2461-3
கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார் கனவில் அணைந்து அருளிச் செய்வார் 2461-4
564. உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறுபசி நோய் உமை அடையாது எனினும் உம்பால் 2462-1
நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும் 2462-2
இலகு மணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும் உமக்கு இந்தக் காலம் தீர்ந்தால் 2462-3
அலகில் புகழீர் தவிர்வ தாகும் என்றே அருள் புரிந்தார் திருவீழி மிழலை ஐயர் 2462-4
565. தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச் சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து 2463-1
நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி 2463-2
வம்புலா மலர் இதழி வீழிநாதர் மணிக் கோயில் வலம் செய்யப் புகுந்த வேலி 2463-3
அம்பிகா பதி அருளால் பிள்ளையார் தாம் அபிமுகத்துப் பீடிகை மேல் காசு கண்டார் 2463-4
566. காதலொடும் தொழுது எடுத்துக் கொண்டு நின்று கை குவித்துப் பெரு மகிழ்ச்சி கலந்துபொங்க 2464-1
நாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும் நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று 2464-2
தீது இல் பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர் திருவமுது கறி நெய்பால் தயிர் என்று இன்ன 2464-3
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இருதிறத்து பெரும் தவரும் இருந்த நாளில் 2464-4
567. நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் நாட் கூறு திரு அமுது செய்யக் கண்டு 2465-1
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திருமடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கித் 2465-2
தீவினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு 2465-3
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என் கொலோ விளம்பும் என்றார் 2465-4
568. திருமறையோர் தலைவர் தாம் அருளிச் செய்யத் திருமடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள் 2466-1
ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர் பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு 2466-2
கருதிய எல்லாம் கொள்ள வேண்டிச் சென்றால் காசு தனை வாசி பட வேண்டும் என்பார் 2466-3
பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார் 2466-4
569. திரு ஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச் சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்த 2467-1
ஒரு காசு வாசிபட மற்றக் காசு நன்று ஆகி வாசி படாது ஒழிவான் அந்தப் 2467-2
பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன் தன்னை 2467-3
வருநாள்கள் தரும் காசு வாசி தீரப் பாடுவன் என்று எண்ணியது மனதுள் கொண்டார் 2467-4
570. மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் எனப் பதிகம் பாடிப் 2468-1
பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்ட 2468-2
நல் தவத்தீர் இக் காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க 2468-3
அற்றை நாள் தொடங்கி நாள் கூறு தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார் 2468-4
571. அருவிலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்யத் தொண்டர் அளவு இறந்துபொங்கி 2469-1
வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆகத் 2469-2
திரு முடி மேல் திங்களடு கங்கை சூடும் சிவ பெருமான் அருள் செய்ய சிறப்பின் மிக்க 2469-3
பெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கு அரசர் இவர் பெரும் சோற்றுப் பிறங்கல் ஈந்தார் 2469-4
572. அவனி மிசை மழை பொழிய உணவு மல்க்¢ அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே 2470-1
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த புரி சடையார் கழல் பலநாள் போற்றி வைகிப் 2470-2
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூடத் தம்பிரான் அருள் பெற்றுத் தலத்தின் மீது 2470-3
சிவன் மகிழும் தானங்கள் வணங்கப் போவார் தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார் 2470-4
573. நீடு திரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீல மிடற்று அருமணியை வணங்கிப் போற்றிப் 2471-1
பாடொலி நீர்த் தலையாலம்காடு மாடு பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி 2471-2
நாடு புகழ்த் தனிச் சாத்தங் குடியில் நண்ணி நம்பர் திருக்கர் வீரம் நயந்து பாடித் 2471-3
தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றித் திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார் 2471-4
574. நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து நலம் கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப் 2472-1
பைம் புனல் மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப் பரமர் திருநெல்லிக்காப் பணிந்து பாடி 2472-2
உம்பர் பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர் ஓங்கு புகழ்த் திருக் கொள்ளிக்காடும் போற்றி 2472-3
செம் பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித் திரு மலி வெண் துறை தொழுவான் சென்று சேர்ந்தார் 2472-4
575. மற்றவ்வூர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் 2473-1
பற் பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரவும் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக் 2473-2
கற்றவர் வாழ் தண்தலை நீள் நெறி உள்ளிட்ட கனக மதில் திருக் களரும் கருதார் வேள்வி 2473-3
செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றித் திருமறைக் காட்டு அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே 2473-4
576. கார மண் வெஞ்சுரம் அருளால் கடந்தார் தாமும் கடல் காழி கவுணியர் தம் தலைவர் தாமும் 2474-1
சேர எழுந்து அருளிய அப் பேறு கேட்டுத் திறை மறைக் காட்டு அகன்பதியோர் சிறப்பில் பொங்கி 2474-2
ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள் 2474-3
வார் முரசம் மங்கள் நாள் தங்கள் மல்க எதிர் கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார் 2474-4
577. முன் அணைந்த திருநாவுக்கு அரசர் தம்மை முறைமையால் எதிர் கொண்டு களிப்பின் மூழ்கிப் 2475-1
பின் அணைய எழுந்து அருளும் பிள்ளையார் தம் பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டுச் 2475-2
சென்னி மிசை கரம் குவித்து முன்பு சென்று சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை 2475-3
மன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார் 2475-4
578. சொல் அரசர் உடன் கூடப் பிள்ளையாரும் தூமணி நீர் மறைக் காட்டுத் தொல்லை மூதூர் 2476-1
மல்கு திரு மறுகின் கண் புகுந்த போது மாதவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர் 2476-2
எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி 2476-3
ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண்மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே 2476-4
579. அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த 2477-1
கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர்க் கோபுரத்தைத் தாழ்ந்து இறைஞ்சிக்குறுகிப் புக்கு 2477-2
முடிவில் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம் கொண்டு நேர் சென்று முன்னாள் 2477-3
படியின் மறை அருச்சித்துக் காப்பு செய்த பைம் பொன் மணித் திருவாயில் பாங்கு வந்தார் 2477-4
580. அரு மறைகள் திருக் காப்புச் செய்து வைத்த அக்கதவம் திறந்திட அம் மறைகள் ஓதும் 2478-1
பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து நீக்கப் பெருமையினால் அன்று முதலாகப் பின்னை 2478-2
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பைத் 2478-3
திருமறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று திருநாவுக்கு அரசருக்குச் செப்புகின்றார் 2478-4
581. அப்பரே வேத வனத்து ஐயர் தம்மை அபிமுகத்துத் திருவாயில் திறந்து புக்கே 2479-1
எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இவ்வாயில் திருக்காப்பு நீங்கு மாறு 2479-2
மெய்ப் பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை 2479-3
இப்பரிசு நீர் அருளிச் செய்தீர் ஆகில் இது செய்வேன் எனப் பதிகம் எடுத்துப் பாட 2479-4
582. பாடிய அப் பதிகப் பாட்டு ஆன பத்தும் பாடல் நிரம்பிய பின்னும் பைம் பொன் வாயில் 2480-1
சேடு உயர் பொன் கதவு திருக் காப்பு நீங்காச் செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து 2480-2
நீடு திருக் கடைக் காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்கத் திருக்காப்பு நீக்கம் காட்ட 2480-3
ஆடிய சேவடியார் தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க 2480-4
583. மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கிப் 2481-1
பொற்புறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி 2481-2
அற்பது நிலையினார்கள் அணி திரு மறைக்காடு ஆளும் 2481-3
கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி குறுகிப் புக்கார் 2481-4
584. கோயில் உட்புகுவார் உச்சி குவித்த செங்கைகளோடும் 2482-1
தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரைக் கண்டார் 2482-2
பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிடப் படியின் மீது 2482-3
மேயின மெய்யர் ஆகி விதிர்புற்று விரைவின் வீழ்ந்தார் 2482-4
585. அன்பினுக்கு அளவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி 2483-1
என்பு நெக்கு உருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர் 2483-2
முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி 2483-3
மின்புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார் 2483-4
586. புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கி 2484-1
நிறம் கிளர் மணிக் கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்கத் 2484-2
திறிந்தவாறு அடைக்கப்பாடி அருளும் நீர் என்றார் தீய 2484-3
மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார் 2484-4
587. அன்று அரசு அருளிச் செய்ய அருமறைப் பிள்ளையாரும் 2485-1
வென்றி வெள் விடையார் தம்மை விருப்பினால் சதுரம் என்னும் 2485-2
இன் தமிழ்ப் பதிகப் பாடல் இசைத்திட இரண்டு பாலும் 2485-3
நின்ற அக் கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே 2485-4
588. அடைத்திடக் கண்டு சண்பை ஆண்டகை யாரும் அஞ்சொல் 2486-1
தொடைத் தமிழாளி யாரும் தொழுது எழத் தொண்டர் ஆர்த்தார் 2486-2
புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ மழை புகலி வேந்தர் 2486-3
நடைத் தமிழ்ப் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி 2486-4
589. அத்திரு வாயில் தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரே 2487-1
மெய்த்திரு மறைகள் போல மேதினி புக்குப் போற்ற 2487-2
வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு இலாப் பெருமையோரை 2487-3
கைத்தலம் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம் 2487-4
590. அருமறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்துப் 2488-1
பெருமையின் முழங்கப் பஞ்ச நாதமும் பிறங்கி ஓங்க 2488-2
இரு பெரும் தகையோர் தாமும் எதிர் எதிர் இறைஞ்சிப் போந்து 2488-3
திரு மடங்களின் முன் புக்கார் செழும்பதி விழவு கொள்ள 2488-4
591. வேதங்கள் எண்ணில் கோடி மிடைந்து செய் பணியை மிக்க 2489-1
ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார் 2489-2
நாதம் கொள் வடிவாய் நின்ற நதி பொதி சடையார் செய்ய 2489-3
பாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார் 2489-4
592. திருமறை நம்பர் தாம் முன்பு அருள் செய்த அதனைச் செப்பும் 2490-1
ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார் பால் ஒக்க 2490-2
வரும் அருள் செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால் 2490-3
பெரு மறையுடன் மெய்த் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே 2490-4
593. இவ்வகை திருமறைக் காட்டு இறையவர் அருளை உன்னி 2491-1
மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில் 2491-2
மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர் 2491-3
அவ்விடை இருத்தும் அங்கோ வா என்று அங்கு அருளிப் போக 2491-4
594. கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார் 2492-1
மண்டிய காதலோடு மருவுவார் போன்றும் காணார் 2492-2
எண்திசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தா 2492-3
அண்டர் தம்பிரானார் தம் பின் போயினார் ஆர்வத் தோடும் 2492-4
595. அங்கு அவர் ஏகச் சண்பை ஆண்டகையாரும் அப்பர் 2493-1
எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில் 2493-2
பொங்கிய காதலால் என்று உரைத்திடப் போன தன்மை 2493-3
சங்கை உற்று என்கொல் என்று தாமும் அங்கு அணையப் போந்தார் 2493-4
596. அந்நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூட 2494-1
மன்னிய ஆடல் காட்டத் தளர் இளவள ரும் பாடிச் 2494-2
சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு 2494-3
இன் இயல்பு உற முன் கூடி இருவரும் போற்றி செய்தார் 2494-4
597. நீடு சீர்த் திருவாய் மூரில் நிலவிய சிவனார் தம்மைப் 2495-1
பாடு சொல் பதிகம் தன்னால் பரவி அப் பதியில் வைகிக் 2495-2
கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு 2495-3
தேடு மா மறைகள் கண்டார் திரு மறைக்காடு சேர்ந்தார் 2495-4
598. சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழித் தலைவரோடு 2496-1
மண் பயில் சீர்த்திச் செல்வ மா மறைக் காட்டு வைகிக் 2496-2
கண் பயில் நெற்றியார் தம் கழல் இணை பணிந்து போற்றிப் 2496-3
பண் பயில் பதிகம் பாடிப் பரவி அங்கு இருந்தார் அன்றே 2496-4
599. இவ் வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால் 2497-1
செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டி நாட்டு 2497-2
மெய் வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்குக் 2497-3
கை வகை முறைமைத் தன்மை கழிய முன் கலங்கும் காலை 2497-4
600. தென்னவன் தானும் முன் செய் தீவினைப் பயத்தினாலே 2498-1
அந் நெறிச் சார்வு தன்னை அறம் என நினைந்து நிற்ப 2498-2
மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும் 2498-3
நன் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே 2498-4
601. பூழியர் தமிழ் நாட்டு உள்ள பொருவில் சீர்ப் பதிகள் எல்லாம் 2499-1
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச் 2499-2
சூழ் இருள் குழுக்கள் போலத் தொடை மயில் பீலி யோடு 2499-3
மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப 2499-4
602. பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச் 2500-1
செறியும் உக் குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகி 2500-2
அறியும் அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ 2500-3
நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும் காலை 2500-4
603. வரிச் சிலைத் தென்னவன் தான் உய்வதற்கு வளவர் கோமான் 2501-1
திரு உயிர்த்து அருளும் செல்வப் பாண்டிமா தேவியாரும் 2501-2
குரை கழல் அமைச்சனாராங் குலச் சிறையாரும் என்னும் 2501-3
இருவர் தம் பாங்கும் அன்றிச் சைவம் அங்கு எய்தாதாக 2501-4
604. ஆங்கு அவர் தாங்கள் அம் கண் அரும் பெறல் தமிழ் நாடு உற்ற 2502-1
தீங்கினுக்கு அளவு தேற்றாச் சிந்தையில் பரிவு கொண்டே 2502-2
ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை 2502-3
பூங்கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டு உய்த்தார் 2502-4
605. இந் நெறி ஒழுகு கின்றார் ஏழ் உலகு உய்ய வந்த 2503-1
மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மைச் சைவச் 2503-2
செந்நெறி விளக்கு கின்றார் திரு மறைக்காடு சேர்ந்த 2503-3
நல்நிலை கன்னி நாட்டு நல்வினைப் பயத்தால் கேட்டார் 2503-4
606. கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழு மகிழ்ச்சி பொங்க 2504-1
நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகி 2504-2
வாள் படை அமைச்சனார் உம் மங்கையர்க்கு அரசியாரும் 2504-3
சேட் படு புலத்தார் ஏனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார் 2504-4
607. காதலால் மிக்கோர் தாங்கள் கை தொழும் கருத்தினாலே 2505-1
போது அவிழ் சோலை வேலிப் புகலி காவலனார் செய்ய 2505-2
பாதங்கள் பணிமின் என்று பரிசன மாக்கள் தன்மை 2505-3
மா தவம் சுருதி செய்த மா மறைக் காட்டில் விட்டார் 2505-4
608. ஆங்கு அவர் விட முன் போந்த அறிவு உடைமாந்தர் அம் கண் 2506-1
நீங்கி வண்தமிழ் நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி 2506-2
ஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து 2506-3
தேன் கமழ் கை தை நெய்தல் திருமறைக் காடு சேர்ந்தார் 2506-4
609. திருமறைக்காடு நண்ணிச் சிரபுர நகரில் வந்த 2507-1
அருமறைப் பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ 2507-2
பெருமடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள் 2507-3
வரு முறைத் தன்மை எல்லாம் வாயில் காவலர்க்குச் சொன்னார் 2507-4
610. மற்றவர் சென்று புக்கு வளவர் கோன் மகளார் தென்னர் 2508-1
கொற்றவன் தேவி யாரும் குலச்சிறையாரும் ஏவப் 2508-2
பொற்கழல் பணிய வந்தோம் எனச் சிலர் புறத்து வந்து 2508-3
சொற்றனர் என்று போற்றித் தொழுது விண்ணப்பம் செய்தார் 2508-4
611. புகலி காவலர் தாம் கேட்டுப் பொருவிலா அருள் முன் கூர 2509-1
அகம் மலர்ந்து அவர்கள் தம்மை அழையும் என்று அருளிச் செய்ய 2509-2
நகை முகச் செவ்வி நோக்கி நல்தவ மாந்தர் கூவத் 2509-3
தகவு உடை மாந்தர் புக்குத் தலையினால் வணங்கி நின்றார் 2509-4
612. நின்றவர் தம்மை நோக்கி நிகரில் சீர்ச் சண்பை மன்னர் 2510-1
மன்றல் அங்குழலியாராம் மானியார் தமக்கும் மானக் 2510-2
குன்று என நின்ற மெய்ம்மை குலச் சிறையார் தமக்கும் 2510-3
நன்று தான் வினவக் கூறி நல் பதம் போற்றுவார்கள் 2510-4
613. கன்னி நாடு அமணர் தம்பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள் 2511-1
மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மா தேவியாரும் 2511-2
கொன்னவில் அயில் வேல் வென்றிச் குலச் சிறையாரும் கூடி 2511-3
இந்நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சி விட்டார் 2511-4
614. என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர்எல்லாம் 2512-1
நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்ணில் அமண் குண்டர் தம்மை 2512-2
வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்ணீறு வேந்தனையும் இடுவித்து அங்கு 2512-3
நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற 2512-4
615. மற்று அவர்கட்கு அருள் புரிந்து பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூடச் சென்று 2513-1
பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து பெரிய திருக் கோபுரத்துள் இருந்து தென் நாடு 2513-2
உற்ற செயல் பாண்டிமா தேவியாரும் உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை 2513-3
சொற்ற தனி மன்னவருக்குப் புகலி மன்னர் சொல்லி எழுந்து அருளுதற்குத் துணிந்தபோது 2513-4
616. அரசர் அருளிச் செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை 2514-1
உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்து அருள உடன்படுவது ஒண்ணாது என்ன 2514-2
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது எனப் பகர்ந்து பரமர் செய்ய 2514-3
விரை செய் மலர்த்தாள் போற்றி புகலி வேந்தர் வேய் உறு தோளியை எடுத்து விளம்பினாரே 2514-4
617. சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு 2515-1
அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர் முன்னே எழுந்து அருள அமைந்த போது 2515-2
புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்தப் புனல் நாட்டில் எழுந்து அருளி இருப்பீர் என்று 2515-3
கரகமலம் குவித்து இறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார் 2515-4
618. வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேதவனத்து அருமணியை மீண்டும் புக்குப் 2516-1
பாதம் உறப் பணிந்து எழுந்து பாடிப் போற்றிப் பரசி அருள் பெற்று விடை கொண்டு போந்து 2516-2
மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம் வணங்கி அருள் செய்து விடை கொடுத்து மன்னும் 2516-3
காதலினால் அருமை உறக் கலந்து நீங்கிக் கதிர்ச் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர் 2516-4
619. திருநாவுக் கரசரும் அங்கு இருந்தார் இப்பால் திருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின் 2517-1
பெருநாமச் சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து 2517-2
ஒரு நாமத்து அஞ்சு எழுத்தும் ஓதி வெண்ணீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில் 2517-3
வருநாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மாதவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே 2517-4
620. பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும் 2518-1
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் 2518-2
சங்க படகம் பேரி தாரை காளம் தாளம் 2518-3
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப2518-4
621. மலர் மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப 2519-1
அலர் வாசப் புனல் குடங்கள் அணி விளக்குத் தூபம் உடன் 2519-2
நிலை நீடு தோரணங்கள் நிரைத்து அடியார் எதிர் கொள்ளக் 2519-3
கலை மாலை மதிச் சடையார் இடம் பலவும் கை தொழுவார் 2519-4
622. தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி 2520-1
அண்டர் பிரான் கழல் வணங்கி அருந்தமிழ் மா மறை பாடிக் 2520-2
கொண்டல் பயில் மணல் கோடு சூழ் கோடிக் குழகர் தமைத் 2520-3
தொண்டருடன் தொழுது அணைந்தார் தோணிபுரத் தோன்றலார் 2520-4
623. கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி 2521-1
எண் ஆர்ந்த திரு இடும்பா வனம் ஏத்தி எழுந்து அருளி 2521-2
மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கிப் 2521-3
பண் ஆர்ந்த தமிழ் பாடிப் பரவியே செல்கின்றார் 2521-4
624. திரு உசாத் தானத்துத் தேவர் பிரான் கழல் பணிந்து 2522-1
மருவிய செந்தமிழ்ப் பதிகமால் போற்றும் படி பாடி 2522-2
இரு வினையும் பற்று அறுப்பார் எண் இறந்த தொண்டருடன் 2522-3
பெருகு விருப்பினர் ஆகிப் பிற பதியும் பணிந்து அருள்வார் 2522-4
625. கருங்கழி வேலைப் பாலைக் கழி நெய்தல் கடந்து அருளித் 2523-1
திருந்திய சீர் புனல் நாட்டுத் தென் மேல் பால் திசை நோக்கி 2523-2
மருங்கு மிடை தடஞ் சாலி மாடு செறி குலத்தெங்கு 2523-3
நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழிச் சென்றார் 2523-4
626. சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழைக் கரும்பு எங்கும் 2524-1
கொங்கு எங்கும் நிறை கமலக் குளிர் வாசத் தடம் எங்கும் 2524-2
அங்கு அங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும் 2524-3
எங்கும் எங்கும் மலர்ப் படுகர் இவை கழிய எழுந்து அருளி 2524-4
627. தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம் 2525-1
இடம் எங்கும் அந்தணர்கள் ஓதும் இடையாக நிலை 2525-2
மடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனைவதுவை 2525-3
நடம் எங்கும் ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து 2525-4
628. நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும்புதல்கள் 2526-1
கார் நாடு முகை முல்லைக் கடி நாறு நிலம் கடந்து 2526-2
போர் நாடும் சிலை மறவர் புன் புலவை பிடை போக்கிச் 2526-3
சீர் நாடும் தென் பாண்டி நல் நாடு சென்று அணைவார் 2526-4
629. மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பல 2527-1
சென்று அணைந்து கடந்து ஏறித் திரி மருப்பின் கலை புணர்மான் 2527-2
கன்று தெறித்தன உகைக்கும் கான அதர் கடந்து அணைந்தார் 2527-3
கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடும் குன்றம் 2527-4
630. கொடும் குன்றத்து இனிது அமர்ந்த கொழும்பவளச் செழுங் குன்றை 2528-1
அடும் குன்றம் உரித்தானை வணங்கி அரும் தமிழ் பாடி 2528-2
நெடும் குன்றும் படர் காணும் நிறை நாடும் கடந்து மதி 2528-3
தொடும் குன்ற மதில் மதுரைத் தொன் நகர் வந்து அணைகின்றார் 2528-4
631. இந்நிலை இவர் வந்து எய்த எண் பெரும் குன்றம் மேவும் 2529-1
அந்நிலை அமணர் தங்கள் கழிவு முன் சாற்றல் உற்றுப் 2529-2
பல்முறை வெருக் கொண்டு உள்ளம் பதைப்பத்தீக் கனாக்களோடும் 2529-3
துன் நிமித்தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்லல் உற்றாம் 2529-4
632. பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும் 2530-1
ஓள்ளிதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில் 2530-2
கொள்ளு மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய 2530-3
புள் இனம் ஆன தம்மில் பூசல் இட்டு அழிவு சாற்றும் 2530-4
633. பீலியும் தடுக்கும் பாயும் பிடித்தகை வழுவி வீழக் 2531-1
கால்களும் தடுமாறும் ஆடிக் கண்களும் இடமே ஆடி 2531-2
மேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார் 2531-3
மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம் 2531-4
634. கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ள 2532-1
வந்தவாறு அமணர் தம்மில் மாறு கொண்டு ஊறு செய்ய 2532-2
முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டுச் 2532-3
சிந்தையில் செற்றம் முன்னாத் தீக் குணம் தலை நின்றார்கள் 2532-4
635. இப்படி அமணர் வைகும் எப் பெயர்ப் பதியும் எய்தும் 2533-1
ஒப்பில் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி 2533-2
மெய்ப்படு தீக்கனாவும் வேறு வேறு ஆகக் கண்டு 2533-3
செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார் 2533-4
636. அந்நகர் தன்னில் வாழ்வார் புறம் நின்று அணைவார் கூடி 2534-1
மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகித் 2534-2
துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி 2534-3
இன்னன கனவு கண்டோம் என எடுத்து இயம்பல் உற்றார் 2534-4
637. சீர் மலி அசோகு தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே 2535-1
வேரொடு சாய்ந்து வீழக் கண்டனம் அதன் பின் ஆக 2535-2
ஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றிப் போக 2535-3
ஊர் உளோர் ஓடிக் காணக் கண்டனம் என்று உரைப்பார் 2535-4
638. குண்டிகை தகர்த்துப் பாயும் பீறியோர் குரத்தி ஓடப் 2536-1
பண்டிதர் பாழி நின்றும் கழுதை மேல் படர்வார் தம்பின் 2536-2
ஒண்தொடி இயக்கி யாரும் உளை இட்டுப் புலம்பி ஓடக் 2536-3
கண்டனம் என்று சொன்னார் கையறு கவலை உற்றார் 2536-4
639. கான் இடை நட்டம் ஆடும் கண் நுதல் தொண்டர் எல்லாம் 2537-1
மீனவன் மதுரை தன்னில் விரவிடக் கண்டோம் என்பார் 2537-2
கோன் அவன் தானும் வெய்ய கொடும் தழல் முழுகக் கண்டோம் 2537-3
ஆனபின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார் 2537-4
640. மழவிடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம் தன்னை 2538-1
உழறிடச் சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சி 2538-2
விழ ஒரு புகலும் இன்றி மேதினி தன்னை விட்டு 2538-3
நிழல் இலா மரங்கள் ஏறி நின்றிடக் கண்டோம் என்பர் 2538-4
641. ஆவது என் பாவிகாள் இக் கனாத்திறம் அடிகள் மார்க்கு 2539-1
மேவிய தீங்கு தன்னை விளைப்பது திடமே என்று 2539-2
நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார் 2539-3
யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள் 2539-4
642. அவ்வகை அவர்கள் எல்லாம் அந்நிலைமையர்கள் ஆகச் 2540-1
சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல் 2540-2
பை வளர் அரவேர் அல்குல் பாண்டி மா தேவியார்க்கும் 2540-3
மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நன் நிமித்தம் மேன் மேல் 2540-4
643. அளவு இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த 2541-1
உள மகிழ் உணரும் காலை உலகெலாம் உய்ய வந்த 2541-2
வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை 2541-3
கிளர் உறும் ஓகை கூறி வந்தவர் மொழியக் கேட்டார் 2541-4
644. அம்மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி 2542-1
மெய்ம்மையில் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கி 2542-2
தம்மையும் அறியா வண்ணம் கை மிக்குத் தழைத்துப் பொங்கி 2542-3
விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார் 2542-4
645. மங்கையர்க் கரசியார் பால் வந்து அடி வணங்கி நின்ற 2543-1
கொங்கு அலர் தெரியல் ஆராம் குலச்சிறை யாரை நோக்கி 2543-2
நங்கள் தம்பிரானாராய ஞான போனகர் முன்பு எய்தி 2543-3
இங்கு எழுந்து அருள உய்ந்தோம் என எர் கொள்ளும் என்றார் 2543-4
646. மன்றலங் குழலினாரை வணங்கப் போந்த அமைச்சனாரும் 2544-1
வென்றிவேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்து 2544-2
பொன் திகழ் மாட வீதி மதுரையின் புறத்துப் போகி 2544-3
இன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும் காலை 2544-4
647. அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார் தம்மைக் 2545-1
கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறி 2545-2
தம் பரிசனங்கள் சூழத் தனித் தடையோடும் சென்று 2545-3
நம்பரை வணங்கித் தாமும் நல் வரவேற்று நின்றார் 2545-4
648. திரு நிலவு மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்து 2546-1
வரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண் குடை நிழற்றப் 2546-2
பெருகு ஒளிய திரு நீற்றுத் தொண்டர் குழாம் பெருகிவர 2546-3
அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார் 2546-4
649. துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே 2547-1
அந்தணராம் மாதவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப 2547-2
வந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்கச் 2547-3
செந்தமிழ் மாருதம் எதிர் கொண்டு எம்மருங்கும் சேவிப்ப 2547-4
650. பண்ணிய வஞ்சனைத் தவத்தால் பஞ்சவன் நாட்டு இடைப் பரந்த 2548-1
எண்ணில் அமண் எனும் பாவ இருஞ்சேனை இரிந்து ஓட 2548-2
மண் உலகமே அன்றி வான் உலகம் செய்த பெரும் 2548-3
புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த 2548-4
651. துன்னும் முழு உடற்றுகளால் சூழும் உணர்வின் இற்றுகளால் 2549-1
அன்னெறியில் செறிந்து அடைந்த அமண் மாசு கழுவுதற்கு 2549-2
மன்னி ஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர் தம் 2549-3
கன்னி நாட்டு இடைக் கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட 2549-4
652. பானல் வயல் தமிழ் நாடு பழி நாடும்படி பரந்த 2550-1
மானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்கு 2550-2
ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டதொரு 2550-3
ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப 2550-4
653. புரசை வயக் கட களிற்றுப் பூழியர் வண் தமிழ் நாட்டுத் 2551-1
தரை செய் தவப் பயன் விளங்கச் சைவ நெறி தழைத்து ஓங்க 2551-2
உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணிச் சின்னம் எலாம் 2551-3
பர சமயக் கோளரி வந்தான் என்று பணிமாற 2551-4
654. இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்து அருளும் பொழுது இசைக்கும் 2552-1
ஒப்பில் நித்திலப் பொன் தனிப் பெரும் கானம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை 2552-2
செப்பரும் பெருமைக் குலச் சிறையார் தம் செவி நிறை அமுது எனத் தேக்க 2552-3
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு அரும் களிப்பினர் ஆனார் 2552-4
655. அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல் அணைந்திடக் கடிது சென்று அணைவார் 2553-1
நஞ்சு அணி கண்டர் தம் திருமகனார் உடன் வரும் நல்தவக் கடலை 2553-2
நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்லக் கண்டு நீள் நிலத்து இடைத் தாழ்ந்து 2553-3
பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர் பாங்கு உற அணைந்து முன் பணிந்தார் 2553-4
656. நிலமிசை பணிந்த குலச் சிறையாரை நீடிய பெரும் தவத் தொண்டர் 2554-1
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்தாம் படியின் நின்று எழாவகை கண்டு 2554-2
மலர் மிசைப் புத்தேள் வழிபடும் புகலி வைதிகச் சேகரர் பாதம் 2554-3
குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் எனக் கூற 2554-4
657. சிரபுரச் செல்வர் அவர் உரை கேட்டுத் திருமுகத் தாமரை மலர்ந்து 2555-1
விரவு ஒளி முத்தின் சிவிகை நின்று இழிந்து விரைந்து சென்றவர் தமை அணைந்து 2555-2
கரகமலங்கள் பற்றியே எடுப்பக் கை தொழுது அவரும் முன் நிற்ப 2555-3
வரமிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார் 2555-4
658. செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும் 2556-1
நம் பெருமான் தன் திரு அருள் பெருகும் நன்மை தான் வாலிதே என்ன 2556-2
வம்பு அலர் அலங்கல் மந்திரி யாரும் மண் மிசைதாழ்ந்து அடி வணங்கித் 2556-3
தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்குத் தன்மை ஆம் நிலை உரைக்கின்றார் 2556-4
659. சென்ற காலத்தின் பழுது இலாத் திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும் 2557-1
இன்று எழுந்து அருளப் பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திரு அருள் உடையோம் 2557-2
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ் வேந்தனும் உய்ந்து 2557-3
வென்றி கொள் திரு நீற்று ஒளியினால் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார் 2557-4
660. இங்கு எழுந்து அருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி 2558-1
மங்கையர்க் கரசியாரும் நம்முடைய வாழ்வு எழுந்து அருளியது என்றே 2558-2
அங்கு நீர் சென்று அடிபணிவீர் என்று அருள் செய்தார் எனத் தொழுதார்வம் 2558-3
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து போற்றினார் புரவலன் அமைச்சர் 2558-4
661. ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவுஇலா அருள் புரி கருணை 2559-1
தாங்கிய மொழியால் தகுவன விளம்பி தலை அளித்து அருளும் அப்பொழுதில் 2559-2
ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரைத் தோன்றுதலும் உயர் தவ தொண்டரை நோக்கி 2559-3
ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ 2559-4
662. அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி 2560-1
முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்து 2560-2
மின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி வியன் நெடும் கோபுரம் தோன்றும் 2560-3
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திருவாலவாய் இது என்றார் 2560-4
663. தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு துணைமலர்க் கரம் குவித்து அருளி 2561-1
மண்டு பேரன்பால் மண்மிசைப் பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே 2561-2
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர் தம் பணியும் 2561-3
கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற 2561-4
664. பாடிய பதிகம் பரவியே வந்து பண்பு உடை அடியவரோடும் 2562-1
தேடுமால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்து 2562-2
நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்கு 2562-3
மாடு சூழ் வலம் கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார் 2562-4
665. ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த 2563-1
கான கண்டரைக் கண்களின் பயன் பெறக் கண்டு 2563-2
நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார் 2563-3
மீளவும் பல முறை நிலம் உற விழுந்து எழுவார் 2563-4
666. அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு இன்றி வணங்கிப் 2564-1
பொங்கு காதலின் மெய்ம் மயிர் புளகமும் பொழியும் 2564-2
செம் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி 2564-3
எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர் 2564-4
667. நீல மா மிடற்று ஆலவாயான் என நிலவும் 2565-1
மூலம் ஆகிய திரு இருக்குக் குறள் மொழிந்து 2565-2
சீல மாதவத் திருத் தொண்டர் தம் ஒடும் திளைத்தார் 2565-3
சாலும் மேன்மையில் தலைச்சங்கப் புலவனார் தம்முன் 2565-4
668. சேர்த்தும் இன் இசைப் பதிகமும் திருக்கடைக் காப்புச் 2566-1
சாத்தி நல் இசை தண் தமிழ் சொல் மலர் மாலை 2566-2
பேர்த்தும் இன்புறப் பாடி வெண் பிறை அணி சென்னி 2566-3
மூர்த்தியார் கழல் பரவியே திருமுன்றில் அணைய 2566-4
669. பிள்ளையார் எழுந்து அருளி முன் புகுதும் அப் பொழுது 2567-1
வெள்ள நீர் பொதி வேணியார் தம்மைத் தொழும் விருப்பால் 2567-2
உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஓங்கும் 2567-3
தெள்ளு நீர் விழித் தெரிவையார் சென்று முன்பு எய்த 2567-4
670. மருங்கின் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கிக் 2568-1
கரும் குழல் கற்றை மேல் குவிகைத்து அருளி உடையார் 2568-2
பருங்கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்னப் 2568-3
பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார் 2568-4
671. தென்னவன் பெருந் தேவியார் சிவக் கன்றின் செய்ய 2569-1
பொன்னடிக் கமலங்களில் பொருந்த முன் விழுந்தார் 2569-2
மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும் 2569-3
இன்னருட் பெரும் சிறப் பொடும் திருக்கையால் எடுத்தார் 2569-4
672. ஞான போனகர் எதிர் தொழுது எழுந்த நல்தவத்து 2570-1
மானியார் மனக் கருத்து முற்றியது என மதித்தே 2570-2
பானலங் கண்கள் நீர் மல்கப் பவளவாய் குழறி 2570-3
யானும் என் பதியும் செய்த தவம் என் கொல் என்றார் 2570-4
673. யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்கக் 2571-1
காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும் 2571-2
சூழும் ஆகிய பர சமயத்து இடைத் தொண்டு 2571-3
வாழும் நீர் மையீர் உமைக் காண வந்தனம் என்றார் 2571-4
674. இன்னவாறு அருள் செய்திடத் தொழுது அடி வீழ்ந்தார் 2572-1
மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழிய 2572-2
அன்ன மென் நடையார் தமக்கு அருள் செய்து போக்கித் 2572-3
துன்னு மெய்த் தொண்டர் சூழ வந்து அருளும் அப் பொழுது 2572-4
675. செல்வம் மல்கிய திரு ஆல வாயினில் பணி செய்து 2573-1
அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி 2573-2
மல்குகார்அமண் இருள் கெட ஈங்கு வந்து அருள 2573-3
எல்லையில் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார் 2573-4
676. அத் திருத் தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து 2574-1
மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவிச் 2574-2
சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்டப் 2574-3
பத்தர் போற்றிடப் பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார் 2574-4
677. பரவு காதலில் பாண்டிமா தேவியார் அருளால் 2575-1
விரவு நண்பொடு குலச் சிறையார் விருந்து அளிப்பக் 2575-2
சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார் 2575-3
இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய 2575-4
678. வழுதி மாநகர் அதன் இடை மாமறைத் தலைவர் 2576-1
பழுதில் சீர் அடியாருடன் பகல் வரக் கண்ட 2576-2
கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி 2576-3
இழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு பால் 2576-4
679. அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த 2577-1
துங்க மா மடம் தன்னிடைத் தொண்டர் தம் குழாங்கள் 2577-2
எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த 2577-3
பொங்கு பேர் ஒலி செவிப்புலம் புக்கிடப் பொறாராய் 2577-4
680. மற்றிவ் வான் பழி மன்னவன் மாறனை எய்திச் 2578-1
சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார் 2578-2
கொற்றவன் கடைக் காவலர் முன் சென்று குறுகி 2578-3
வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார் 2578-4
681. வாயில் காவலர் மன்னவன் தனை எதிர் வணங்கி 2579-1
ஆய மாகி வந்து அடிகள் மார் அணைந்தனர் என்ன 2579-2
ஏயினான் அணைவா ரென அவரும் சென்று இசைத்தார் 2579-3
பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார் 2579-4
682. புக்க போது அவர் அழிவுறு மனத்து இடைப் புலர்ச்சி 2580-1
மிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவி 2580-2
ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்னத் 2580-3
தக்கது அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார் 2580-4
683. ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர் என்று 2581-1
காவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர் 2581-2
மாவலாய் உன் தன் மதுரையில் சைவ வேதியர் தாம் 2581-3
மேவலால் இன்று கண்டுமுட்டியாம் என்று விளம்ப 2581-4
684. என்று கூறலும் கேட்டு முட்டி யானும் என்று இயம்பி 2582-1
நன்று நல் அறம் புரிந்தவா நான் என்று நகுவான் 2582-2
கன்றும் உள்ளத்தன் ஆகி அக் கண் நுதல் அடியார் 2582-3
இன்று இம் மாநகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான் 2582-4
685. மாலை வெண் குடை வளவர் சோணாட்டு வண்புகலிச் 2583-1
சூல பாணிபால் ஞானம் பெற்றான் என்று சுருதிப் 2583-2
பாலன் அன்பர் தம் குழாத்தொடும் பனி முத்தின் சிவிகை 2583-3
மேல் அணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல 2583-4
686. என்று கூறுவார் இத்திறம் முன்பு தாம் அறிந்தது 2584-1
ஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன் 2584-2
மன்றலம் பொழில் சண்பையார் வள்ளலார் நாமம் 2584-3
சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து முன் கொல்வான் 2584-4
687. மற்ற மா மறை மைந்தன் இம் மருங்கு அணைந்தானேல் 2585-1
உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்ப 2585-2
செற்றம் மீக் கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர் 2585-3
கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார் 2585-4
688. வந்த அந்தணன் தன்னை நாம் வலிது செய்து போக்கும் 2586-1
சிந்தை அன்றி அச் சிறு மறையோன் உறை மடத்தில் 2586-2
வெம் தழல் பட விஞ்சை மந்திரத் தொழில் விளைத்தால் 2586-3
இந்த நன்னகர் இடத்திரான் ஏகும் என்று இசைத்தார் 2586-4
689. ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்யப் 2587-1
போவது என்று அவரைப் போக்கிப் பொய் பொருளாகக் கொண்டான் 2587-2
யாவதும் உரை ஆடாதே எண்ணத்தில் கவலையோடும் 2587-3
பூவணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள் 2587-4
690. மன்னவன் உரைப்பது இன்றி இருக்க மா தேவியார்தாம் 2588-1
என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவா நீ உற்றது என்னோ 2588-2
முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று 2588-3
பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள் செய் என்றார் 2588-4
691. தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறுகின்றான் 2589-1
காவி நீள் கண்ணினாய் கேள் காவிரி நாட்டில் மன்னும் 2589-2
தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு 2589-3
மேவினான் அடிகள் மாரை வாதினில் வெல்ல என்றான் 2589-4
692. வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம் 2590-1
கண்டு முட்டு அடிகள் மார்கள் கேட்டு முட்டியானும் காதல் 2590-2
வண்டுணத் துதைந்த கோதை மானியே இங்கு வந்த 2590-3
பண்பு மற்று இதுவேயாகும் பரிசு வேறு இல்லை என்றான் 2590-4
693. மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க்கு அரசியார் தாம் 2591-1
நின்னிலை இதுவே யாகில் நீடிய தெய்வத் தன்மை 2591-2
அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து 2591-3
துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன என்றார் 2591-4
694. சிந்தையில் களிப்பு மிக்குத் திருக் கழு மலத்தார் வேந்தன் 2592-1
வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சி யோடும் 2592-2
கொந்தலர் குழலார் போதக் குலச் சிறையார் அங்கு எய்த 2592-3
இந்த நன் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர் 2592-4
695. கொற்றவன் அமைச்சனாரும் கைதலை குவித்து நின்று 2593-1
பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திடப் பெறும் பேறு என்பார் 2593-2
இற்றை நாள் ஈசன் அன்பர் தம்மை நாம் இறைஞ்சப் பெற்றோம் 2593-3
மற்று இனிச் சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார் 2593-4
696. மானியார் தாமும் அஞ்சி வஞ்சகப் புலையர் தாங்கள் 2594-1
ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம் என்று எண்ணி 2594-2
ஞான சம்பந்தர் தம்பால் நன்மை அல்லாது செய்யும் 2594-3
ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார் 2594-4
697. இவர் நிலை இதுவே ஆக இலங்குவேல் தென்னவன் ஆன 2595-1
அவன் நிலை அதுவாம் அந்நாள் அருகர் தம் நிலை யாது என்னில் 2595-2
தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செந்தீ 2595-3
சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேரச் செய்தார் 2595-4
698. ஆதி மந்திரம் அஞ்சு எழுத்து ஓதுவார் நோக்கும் 2596-1
மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமே 2596-2
பூதி சாதனர் மடத்தில் தாம் புனைந்த சாதனைகள் 2596-3
சாதியா வகை கண்ட அமண் குண்டர்கள் தளர்ந்தார் 2596-4
699. தளர்ந்து மற்று அவர் தாம் செய்த தீத்தொழில் சரியக் 2597-1
கிளர்ந்த அச்சம் முன் கெழுமிய கீழ்மையோர் கூடி 2597-2
விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை 2597-3
உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார் 2597-4
700. மந்திரச் செயல் வாய்த்து இல மற்று இனிச் செய்யும் 2598-1
புந்தியாவது இங்கு இது எனப் பொதி தழல் கொடு புக்கு 2598-2
அந்தண் மாதவர் திரு மடப் புறத்து அயல் இருள் போல் 2598-3
வந்து தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர் 2598-4
701. திரு மடப் புறச் சுற்றினில் தீய பாதகத்தோர் 2599-1
மருவுவித்த அத்தொழில் வெளிப்படுதலும் மறுகிப் 2599-2
பரிசனத்தவர் பதைப் பொரும் சிதைத்து நீக்கி 2599-3
அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார் 2599-4
702. கழுமலப் பதிக் கவுணியர் கற்பகக் கன்றைத் 2600-1
தொழுது நின்ற அமண் குண்டர் செய் தீங்கினைச் சொன்ன 2600-2
பொழுது மாதவர் துயிலும் இத்திரு மடப் புறம்பு 2600-3
பழுது செய்வதோ பாவிகாள் எனப் பரிந்து அருளி 2600-4
703. என் பொருட்டு அவர் செய்த தீங்கு ஆயினும் இறையோன் 2601-1
அன்பருக்கு எய்துமோ என்று பின்னையும் அச்சம் 2601-2
முன்புற பின்பு முனிவுற முத்தமிழ் விரகர் 2601-3
மன் புரக்கும் மெய்ம்முறை வழு என மனம் கொண்டார் 2601-4
704. வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால் 2602-1
செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம் 2602-2
சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீத் தழல் போய்ப் 2602-3
பையவே சென்று பாண்டியற்கு ஆக எனப் பணித்தார் 2602-4
705. பாண்டிமா தேவியார் தமது பொற்பில் பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும் 2603-1
ஆண் தகையார் குலச் சிறையார் அன்பினாலும் அரசன் பால் அபராதம் உறுதலாலும் 2603-2
மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்ணீறு வெப்பு அகலப் புகலி வேந்தர் 2603-3
தீண்டி இடப் பேறு உடையன் ஆதலாலும் தீப்பிணி பையவே செல்க என்றார் 2603-4
706. திருந்து இசைப் பதிகம் தொடை திரு ஆல வாயின் 2604-1
மருந்தினைச் சண்பை மன்னவர் புனைந்திட அருளால் 2604-2
விரிந்த வெம் தழல் வெம்மை போய்த் தென்னனை மேவிப் 2604-3
பெருந்தழல் பொதி வெதுப்பு எனப் பெயர் பெற்றதன்றே 2604-4
707. செய்ய மேனியர் திருமகனார் உறை மடத்தில் 2605-1
நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகிக் 2605-2
கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப 2605-3
வெய்யவன் குண கடல் இடை எழுந்தன மீது 2605-4
708. இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில் 2606-1
குரவ ஓதியார் குலச் சிறை யாருடன் கேட்டுச் 2606-2
சிவபுரப் பிள்ளை யாரை இத் தீயவர் நாட்டு 2606-3
வரவழைத்த நாம் மாய்வதே என மனம் மயங்கி 2606-4
709. பெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்பு 2607-1
திரு மடப்புறம் மருங்கு தீது இன்மையில் தெளிந்து 2607-2
கரும் உருட்ட மண்கையர் செய்தீங்கு இது கடைக்கால் 2607-3
வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது 2607-4
710. அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள் 2608-1
உரை செயப் பதைத்து ஒரு தனித் தேவியார் புகுத 2608-2
விரைவும் அச்சமும் மேல் கொளக் குலச்சிறையாரும் 2608-3
வரை செய் பொன்புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார் 2608-4
711. வேந்தனுக்கு மெய் விதிர்ப்புற வெதுப்புறும் வெம்மை 2609-1
காந்து வெந்தழல் கதும் என மெய் எலாம் கவர்ந்து 2609-2
போந்து மாளிகை புறத்து நின்றார்களும் புலர்ந்து 2609-3
தீந்து போம்படி எழுந்தது விழுந்துடல் திரங்க 2609-4
712. உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க 2610-1
அணையல் உற்றவர் அருகு தூரத்து இடை அகலப் 2610-2
புணர் இளம் கதலிக் குருத்தொடு தளிர் புடையே 2610-3
கொணரினும் சுருக்கொண்டு அவை நுண்துகள் ஆக 2610-4
713. மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்த 2611-1
திருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல் மேல் 2611-2
உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆகக் 2611-3
கருத்து ஒழிந்து உரை மறந்தனன் கௌரியர் தலைவன் 2611-4
714. ஆனவன் பிணி நிகழ்வுழி அமணர்கள் எல்லாம் 2612-1
மீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்து 2612-2
போன கங்குலில் புகுந்தது இன் விளைவு கொல் என்பார் 2612-3
மான முன் தெரியா வகை மன்னன் மாட்டு அணைந்தார் 2612-4
715. மால் பெருக்கும் சமண்கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின் 2613-1
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும் 2613-2
பீலிகொடு தை வருதற்கு எடுத்த போது பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்து 2613-3
மேல் எரியும் பொறி சிதறி வீழக் கண்டு வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார் 2613-4
716. கருகிய மாசு உடையக்கைத் தீயோர் தங்கள் கை தூங்கு குண்டிகை நீர் தெளித்துக்காவாய் 2614-1
அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி மேல் தெளிக்க அந்நீர்ப் பொங்கிப் 2614-2
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தாற் போல 2614-3
ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரைப் பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான்2614-4
717. பாண்டி மாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம் 2615-1
பூண்டவர் தம்மை நோக்கிப் புகலியில் வந்து நம்மை 2615-2
ஆண்டு கொண்டவர் பால் கங்குல் அமணர் தாம் செய்த தீங்கு 2615-3
மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற 2615-4
718. கொற்றவன் அமைச்சராம் குலச்சிறையாரும் தாழ்ந்து 2616-1
மற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும் 2616-2
செற்றவர் அன்பர் தம்பால் செய்தது ஈங்கு அரசன் பாங்கு 2616-3
முற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார் 2616-4
719. இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்பு 2617-1
வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண 2617-2
அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து 2617-3
பெருகியது இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே என்று 2617-4
720. காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும் 2618-1
மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள் 2618-2
மேய வேணியர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில் 2618-3
தீய இப்பிணியே அன்றி இப் பிறவியும் தீரும் என்றார் 2618-4
721. மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வளிப்போர் கூற 2619-1
ஞான சம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்ல 2619-2
ஆன போது அயர்வு தன்னை அகன்றிட அமணர் ஆகும் 2619-3
மானம் இல்லவரைப் பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கல் உற்றான் 2619-4
722. மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம் 2620-1
இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி 2620-2
மன்னிய சைவ நீதி மா மறைச் சிறுவர் வந்தால் 2620-3
அன்னவர் அருளால் இந்நோய் அகலுமேல் அறிவேன் என்றான் 2620-4
723. என்று முன் கூறிப் பின்னும் யான் உற்ற பிணியைத் தீர்த்து 2621-1
வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்ன 2621-2
அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கிச் 2621-3
சென்ற நீர் வெள்ளம் போலும் காதல் வெள்ளத்தில் செல்வார் 2621-4
724. பாய் உடைப் பாதகத்தோர் திரு மடப் பாங்கு செய்த 2622-1
தீவினைத் தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான் 2622-2
மேய அத்துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு 2622-3
நாயகப் பிள்ளையார் தம் நற்பதம் பணிவார் ஆகி 2622-4
725. மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல் கொண்டே 2623-1
அன்னமென் நடையினாரும் அணிமணிச் சிவிகை ஏறி 2623-2
மின் இடை மடவார் சூழ வேல் படை அமைச்சனாரும் 2623-3
முன் அணைந்து ஏகச் சைவ முதல்வனார் மடத்தைச் சார்ந்தார் 2623-4
726. திருமடம் சாரச் சென்று சேயரிக் கண்ணினார் முன் 2624-1
வருபரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை 2624-2
சிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்னப் 2624-3
பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்து கின்றார் 2624-4
727. பாண்டி மாதேவியாரும் பரிவுடை அமைச்சனாரும் 2625-1
ஈண்டும் வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்ய சண்பை 2625-2
ஆண் தகையாரும் ஈண்ட அழையும் என்று அருளிச் செய்ய 2625-3
மீண்டு போந்து அழைக்கப் புக்கார் விரை உறும் விருப்பின் மிக்கார் 2625-4
728. ஞானத்தின் திரு உருவை நான் மறையின் தனித் துணையை 2626-1
வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதிக் கொழுந்தைத் 2626-2
தேன் நக்க மலர்க் கொன்றைச் செஞ் சடையார் சீர் தொடுக்கும் 2626-3
கானத்தின் எழுபிறப்பைக் கண் களிப்பக் கண்டார்கள் 2626-4
729. கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தே 2627-1
மண்டிய கண் அருவி நீர் பாய மலர்க் கை குவித்துப் 2627-2
புண்டரிகச் சேவடிக் கீழ்ப் பொருந்த நில முற விழுந்தார் 2627-3
கொண்ட குறிப் போடும் நெடிது உயிர்த்த கொள்கையராய் 2627-4
730. உரை குழறி மெய்ந் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகித் 2628-1
தரையின் மிசைப் புரண்டு அயந்து சரண கமலம் பற்றிக் 2628-2
கரையில் கவலைக் கடலுக்கு ஓர் கரை பற்றினால் போன்று 2628-3
விரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார் தமைக்கண்டு 2628-4
731. அருமறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட 2629-1
இருவரையும் திருக்கையால் எடுத்து அருளித் தேற்றிடவும் 2629-2
தெரு மந்து தெளியாதார் தமை நோக்கிச் சிறப்பு அருளிச் 2629-3
திருவுடையீர் உங்கள் பால் தீங்கு உளதோ என வினவ 2629-4
732. வெஞ்சமணர் முன் செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தே 2630-1
அஞ்சினோம் திருமேனிக்கு அடாது என்றே அது தீந்தோம் 2630-2
வஞ்சகர் மற்று அவர் செய்த தீத்தொழில் போய் மன்னவன் பால் 2630-3
எஞ்சல் இலாக் கொடுவிதுப்பாய் எழா நின்றது எனத் தொழுது 2630-4
733. வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பவர் தாம் 2631-1
செய்யும் மதி மாயைகளால் தீராமைத் தீப்பிணியால் 2631-2
மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில் 2631-3
உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள் 2631-4
734. என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர் 2632-1
ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர் தம்மை 2632-2
இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில் 2632-3
வென்று மீனவனை வெண் நீறு அணிவிப்பன் விதியால் என்றார் 2632-4
735. மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார் 2633-1
அழுந்தும் இடர்க் கடல் இடை நின்று அடியோமை எடுத்து அருள 2633-2
செழும் தரளச் சிவிகையின் மேல் தென்னாடு செய்தவத்தால் 2633-3
எழுந்து அருளப் பேறு உடையேம் என் பெறோம் எனத் தொழலும் 2633-4
736. ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும் 2634-1
பாவ காரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்லச் 2634-2
சேவுயர் கொடியினார் தம் திரு உள்ளம் அறிவேன் என்று 2634-3
பூவலர் பொழில் சூழ் சண்பைப் புரவலர் போதுகின்றார் 2634-4
737. வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தினின்று 2635-1
மெய்யணி நீற்றுத் தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து 2635-2
கை இணை தலையின் மீது குவிய கண் மலர்ச்சி காட்டச் 2635-3
செய்யவார் சடையார் மன்னும் திரு ஆல வாயுள் புக்கார் 2635-4
738. நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்யத் 2636-1
தீக் கனல் மேனியானே திருவுளமே என்று எண்ணில் 2636-2
பாக்கியப் பயனாய் உள்ள பால் அறா வாயர் மெய்மை 2636-3
நோக்கி வண் தமிழ் செய் மாலைப் பதிகம் தான் நுவலல் உற்றார் 2636-4
739. கான் இடை ஆடுவாரைக் காட்டு மா உரி முன் பாடித் 2637-1
தேன் அலர் கொன்றையார் தம் திருவுளம் நோக்கிப் பின்னும் 2637-2
ஊனமில் வேத வேள்வி என்று எடுத்துத் துரையின் மாலை 2637-3
மானமில் அமணர் தம்மை வாதில் வென்று அழிக்கப்பாடி 2637-4
740. ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்துக் 2638-1
காலனை மார்க் கண்டர்க்காக் காய்ந்தனை அடியேற்கு இன்று 2638-2
ஞலம் நின் புகழே ஆக வேண்டும் நான் மறைகள் ஏத்தும் 2638-3
சீலமே ஆலவாயில் சிவ பெருமானே என்றார் 2638-4
741. நாதர் தம் அருள் முன்பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்கப் 2639-1
போதுவார் பணிந்து போற்றி விடை கொண்டு புனித நீற்று 2639-2
மேதகு கோலத்தோடும் விருப்புறு தொண்டர் சூழ 2639-3
மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார் 2639-4
742. அம் மலர்க் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டிச் 2640-1
செம் மணிப் பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில் 2640-2
எம் மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை இன்றி 2640-3
மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே 2640-4
743. பல்லிய நாதம் பொங்கப் படர் திருநீற்றின் சோதி 2641-1
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன 2641-2
வில் வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு 2641-3
எல்லையில் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத 2641-4
744. கண்ணினுக்கு அணியாய் உள்ளர் எழுச்சியில் காட்சி பெற்றார் 2642-1
நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு 2642-2
பண்ணிய தவங்கள் என் கொல் பஞ்சவன் தஞ்சம் மேவிப் 2642-3
புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார் 2642-4
745. தென்னவர் தேவி யாரும் திருமணிச் சிவிகை மீது 2643-1
பின் வர அமைச்சர் முன்பு பெரும் தொண்டர் குழத்துச் செல்லப் 2643-2
பொன் அணி மாட வீதி ஊடு எழுந்து அருளிப் புக்கார் 2643-3
கன்னி நாடு உடையான் கோயில் காழி நாடு உடையப் பிள்ளை 2643-4
746. கொற்றவன் தன் பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்திப் 2644-1
பொன் தட மதில் சூழ் சண்பைப் புரவலர் வரவு கூற 2644-2
முன் துயர் சிறிது நீங்கி முழுமணி அணிப் பொன் பீடம் 2644-3
மற்றவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான் 2644-4
747. மந்திரி யாரைப் பின்னும் எதிர் செல மன்னன் ஏவச் 2645-1
சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர் 2645-2
பைந்துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால் 2645-3
நம் தனிச் சமயம் தன்னை நாட்டு மாறு என்று பின்னும் 2645-4
748. நின் அற நெறியை நீயே காத்து அருள் செய்தி ஆகில் 2646-1
அன்னவர் தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும் 2646-2
முன் உற ஒக்கத் தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது 2646-3
என்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார் 2646-4
749. பொய் தவம் ஆகக் கொண்ட புன் தலைச் சமணர் கூறச் 2647-1
செய்தவப் பயன் வந்து எய்தும் செவ்வி முன் உறுதலாலே 2647-2
எய்திய தெய்வச் சார்வால் இரு திறத்தீரும் தீரும் 2647-3
கைதவம் பேசமாட்டேன் என்று கைதவனும் சொன்னான் 2647-4
750. என்று அவன் உரைப்பக் குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லைத் 2648-1
தென் தமிழ் நாடு செய்த செய்தவக் கொழுந்து போல்வார் 2648-2
வன் தனிப் பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு 2648-3
பொன் திகழ் தரளப் பத்திச் சிவிகை நின்று இழிந்து புக்கார் 2648-4
751. குலச்சிறையார் முன்பு எய்த கொற்றவன் தேவியாரும் 2649-1
தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ் நாட்டு மன்னன் 2649-2
நிலத்து இடை வானின் நின்று நீள் இருள் நீங்க வந்த 2649-3
கலைச் செழும் திங்கள் போலும் கவுணியர் தம்மைக் கண்டார் 2649-4
752. கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கித் 2650-1
தண்டுணர் முடியின் பாங்கர்த் தமனிய பீடம் காட்ட 2650-2
வண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை 2650-3
கொண்டவல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார் 2650-4
753. செழியனும் பிள்ளையார் தம் திருமேனி காணப் பெற்று 2651-1
விழி உற நோக்கல் ஆலே வெம்மை நோய் சிறிது நீங்கி 2651-2
அழிவுறு மன நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கிக் 2651-3
கெழுவுறு பதியாது என்று விருப்புடன் கேட்ட போது 2651-4
754. பொன்னி வளம் தரு நாட்டுப் புனல் பழனப் புறம் பணை சூழ் 2652-1
கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் எனச் சிறந்த 2652-2
பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம் 2652-3
தென்னவன் முன்பு அருள் செய்தார் திருஞான சம்பந்தர் 2652-4
755. பிள்ளையார் செம் பொன் மணிப் பீடத்தில் இருந்த பொழுது 2653-1
உள்ள நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர் 2653-2
கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோபத்தீத் 2653-3
துள்ளி எழும் எனக் கண்கள் சிவந்து பல சொல்லுவார் 2653-4
756. காலை எழும் கதிரவனைப் புடை சூழும் கருமுகில் போல் 2654-1
பீலி சேர் சமண் கையர் பிள்ளையார் தமைச் சூழ்வார் 2654-2
ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணித் தாங்கு 2654-3
கோலுநூல் எடுத்து ஓதித் தலை திமிர்ப்பக் குரைத்தார்கள் 2654-4
757. பிள்ளையார் அது கோளாப் பேசுக நும் பொருள் எல்லை 2655-1
உள்ளவாறு என்று அருள ஊத்தைவாய்ப் பறி தலையார் 2655-2
துள்ளி எழும் அநேகராய்ச் சூழ்ந்து பதறிக் கதற 2655-3
ஒள்ளிழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி 2655-4
758. தென்னவன் தன்னை நோக்கித் திருமேனி எளியர் போலும் 2656-1
இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்ணிலார்கள் 2656-2
மன்ன நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர் நல்கும் 2656-3
பின்னை இவ்வமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார் 2656-4
759. மாறனும் அவரை நோக்கி வருந்தநீ என்று மற்று 2657-1
வேறு ஆவது என் கொல் என்மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும் 2657-2
ஆறு அணி சடையினார்க்கு அன்பராம் இருவரும் நீங்கள் 2657-3
தேறிய தெய்வத்தன்மை என்னிடைத் தெரிப்பீர் என்றான் 2657-4
760. ஞான ஆரமுதம் உண்டார் நல்தவத் திருவை நோக்கி 2658-1
மானினேர் விழியினாய் கேள் மற்று எனைப் பாலன் என்று 2658-2
நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும் 2658-3
யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம்பாடி 2658-4
761. பெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம் 2659-1
சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான் 2659-2
இற்றைநாள் என்னை உற்ற பிணியை நீர் இகலித் தீரும் 2659-3
தெற்று எனத் தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப 2659-4
762 . மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல் மனத்து மாசு 2660-1
துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி நாங்கள் 2660-2
உன் உடம்பு அதனில் வெப்பை ஒருபுடை வாம பாகம் 2660-3
முன்ன மந்திரித்துத் தெய்வ முயற்சியால் தீர்த்தும் என்றார் 2660-4
763. யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணையச் சென்று 2661-1
வாதினில் மன்னவன் தன் வாம பாகத்தைத் தீர்ப்பார் 2661-2
மீது தம் பீலி கொண்டு தடவிட மேல் மேல் வெப்புத் 2661-3
தீதுறப் பொறாது தென்னவன் சிரபுரத்தவரைப் பார்த்தான் 2661-4
764. தென்னவன் நோக்கம் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர் 2662-1
அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே 2662-2
மன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய் தீர்ப்பது என்று 2662-3
பன்னிய மறைகள் ஏத்திப் பகர் திருப்பதிகம் பாடி 2662-4
765. திருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவத் தென்னன் 2663-1
பொருவரு வெப்பு நீங்கிப் பொய்கையில் குளிர்ந்தது அப்பால் 2663-2
மருவிய இடப்பால் மிக்க அழல் என மண்டு தீப்போல் 2664-3
இருபுடை வெப்பும் கூடி இடம் கொளாதுஎன்னப் பொங்க2663-4
766. உறி உடைக் கையர் பாயின் உருக்கையர் நடுக்கம் எய்தி 2664-1
செறி மயில் பீலி தீய தென்னவன் வெப்பு உறு தீத்தம்மை 2664-2
ஏறிய மாகடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார் 2664-3
அறிவுடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார் 2664-4
767. பலர் தொழும் புகலி மன்னர் ஒரு புடை வெப்பைப் பாற்ற 2665-1
மலர்தலை உலகின்மிக்கார் வந்து அதிசயத்துச் சூழ 2665-2
இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும் 2665-3
உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே 2665-4
768. மன்னவன் மொழிவான் என்னே மதித்த இக் காலம் ஒன்றில் 2666-1
வெம் நரகு ஒரு பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு பால் ஆகும் 2666-2
துன்னு நஞ்சு ஒரு பால் ஆகும் சுவை அமுது ஒரு பால் ஆகும் 2666-3
என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான் 2666-4
769. வெந்தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும் 2667-1
வந்து எனை உய்யக் கொண்ட மறைக்குல வள்ளலாரே 2667-2
இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள் புரிவீர் என்று 2667-3
சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான் 2667-4
770. திருமுகம் கருணை காட்டத் திருக்கையால் நீறு காட்டிப் 2668-1
பெருமறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றிப் பின்னும் 2668-2
ஒருமுறை தடவ அம் கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம் 2668-3
மருவு தீப் பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான் 2668-4
771. கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு 2669-1
செற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்துப் 2669-2
பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை 2669-3
உற்றனன் மன்னன் என்றே உளம் களித்து உவகை மிக்கார் 2669-4
772. மீனவன் தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற 2670-1
ஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி 2670-2
மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த 2670-3
ஞான சம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன் என்றான் 2670-4
773. கந்து சீறும் மால் யானை மீனவர் கருத்து நேர் 2671-1
வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம் 2671-2
முந்த மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே 2671-3
சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார் 2671-4
774. சைவமைந்தர் சொல்லின் வென்றி சந்த இன் சொல் மாலையால் 2672-1
கைதவன் தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம் 2672-2
மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறு 2672-3
எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார் 2672-4
775. பிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசுமின்கள் என்றலும் 2673-1
தள்ளு நீர்மை யார்கள் வேறு தர்க்கவாதின் உத்தரம் 2673-2
கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மைதான் 2673-3
உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார் 2673-4
776. என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும் 2674-1
கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்புநோய் கவர்ந்த போது 2674-2
என்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்னவாது உமக்கு எனச் 2674-3
சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி வாயர் சொல்லுவார் 2674-4
777. என்ன வாது செய்வது என்று உரைத்தே வினா எனச் 2675-1
சொன்னவாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால் 2675-2
மன்னும் தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால் 2675-3
வெம் நெருப்பின் வேவு உருமை வெற்றி ஆவது என்றனர் 2675-4
778. என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார் 2676-1
நன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடுதான் 2676-2
வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல் 2676-3
வன் தனிக்கை யானை மன்னன் முன்பு வம்மின் என்றனர் 2676-4
779. அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில் 2677-1
ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர் காவலர் உரையால் 2677-2
செப்பரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர் 2677-3
வெப்புறும் தழல் அமைக்க என வினை ஞரை விடுத்தான் 2677-4
780. ஏயமாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கி 2678-1
தீ அமைத்தலும் சிகை விடும் புகை ஒழிந்து எழுந்து 2678-2
காயும் வெவ் அழல் கடவுளும் படர் ஒளி காட்ட 2678-3
ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி 2678-4
781. செங்கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த 2679-1
பொங்கு இசைத் திருப்பதிகங்கள் முறையினைப் போற்றி 2679-2
எங்கள் நாதனே பரம் பொருள் எனத் தொழுது எடுத்தே 2679-3
அங்கையால் முடி மிசைக் கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார் 2679-4
782. சாற்றும் மெய்ப் பொருள் தரும் திருமுறையினைத் தாமே 2680-1
நீற்று வண்கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால் 2680-2
நால்தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு 2680-3
போற்றும் அப்பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் 2680-4
783. அத் திருப் பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி 2681-1
மைத்த வெம் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி 2681-2
மெய்த்த நல் திரு ஏட்டினைக் கழற்றி மெய்ம் மகிழ்ந்து 2681-3
கைத் தலத்து இடைக் கொண்டனர் கவுணியர் தலைவர் 2681-4
784. நன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும் 2682-1
என்னை ஆள் உடை ஈசன் தன் நாமமே என்றும் 2682-2
மன்னும் மெய்ப் பொருளாம் எனக் காட்டிட வன்னி 2682-3
தன்னில் ஆக எனத் தளிர் இள வளர் ஒளி பாடி 2682-4
785. செய்ய தாமரை அக இதழினும் மிகச் சிவந்த 2683-1
கையில் ஏட்டினைக் கைதவன் பேர் அவை காண 2683-2
வெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவ 2683-3
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார் 2683-4
786. இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம் 2684-1
மட்டுலாங்குழல் வனமுலை மலைமகள் பாகத்து 2684-2
அட்ட மூர்த்தியைப் பொருள் என உடைமையால் அமர்ந்து 2684-3
பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கியது அன்றே 2684-4
787. மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த 2685-1
கையில் ஏட்டினைக் கதுவு செம் தீயினில் இடுவார் 2685-2
உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால் 2685-3
நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார் 2685-4
788. அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவிலா அமணர் 2686-1
வெம் சுடர்ப் பெரும் தீயினில் விழுத்திய ஏடு 2686-2
பஞ்சு தீ இடைப் பட்டது படக் கண்டு பயத்தால் 2686-3
நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்து திலர் நின்றார் 2686-4
789. மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செந்தீயின் 2687-1
ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில் 2687-2
ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்பு உற எடுத்தார் 2687-3
பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப 2687-4
790. எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில் 2688-1
அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன் 2688-2
தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கிக் 2688-3
அடுத்த நீர் இட்ட ஏட்டினைக் காட்டுமின் என்றான் 2688-4
791. அருகர் தாம் இட்ட ஏடு வாங்கச் சென்று அணையும் போதில் 2689-1
பெருகு தீக் கதுவ வெந்து பேர்ந்தமை கண்ட மன்னன் 2689-2
தருபுனல் கொண்டு செம் தீத் தணிப்பித்தான் சமணர் அங்குக் 2689-3
கருகிய சாம்ப ரோடும் கரி அலால் மற்று என் காண்பர் 2689-4
792. செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல் 2690-1
கையினால் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன் 2690-2
எய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்து காணும் 2690-3
பொய்யினால் மெய்யை ஆக்கப் புகுந்த நீர் போமின் என்றான் 2690-4
793. வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள் 2691-1
அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுவாறு ஆக 2691-2
இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால் 2691-3
துப்புர உடையீர் நீங்கள் தோற்றிலீர் போலும் என்றான் 2691-4
794. தென்னவன் நகை உட்கொண்டு செப்பிய மாற்றம் தேரார் 2692-1
சொன்னது பயனாகக் கொண்டு சொல்லுவார் தொடர்ந்த வாது 2692-2
முன்னுற இருகால் செய்தோம் முக்காலில் ஒரு கால் வெற்றி 2692-3
என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது என்றார் 2692-4
795. தோற்கவும் ஆசை நீங்காத் துணிவிலார் சொல்லக் கேட்டு இம் 2693-1
மாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும் 2693-2
நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ் சண்பை மன்னர் 2693-3
வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார் 2693-4
796. நீடு மெய்ப் பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம் 2694-1
ஏடுற எழுதி மற்றவ் வேட்டினை யாமும் நீரும் 2694-2
ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு 2694-3
நாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார் 2694-4
797. என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர் 2695-1
நன்று அது செய்வோம் என்று அங்கு அருள் செய நணுக வந்து 2695-2
வென்றிவேல் அமைச்சனார் தாம் வேறு இனிச் செய்யும் இவ்வாது 2695-3
ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார் 2695-4
798. அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று 2696-1
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத் 2696-2
தங்கள் வாய் சோர்ந்து தாமே தனிவாதில் அழிந்தோம் ஆகில் 2696-3
வெங்கழு ஏற்றுவான் இவ் வேந்தனே என்று சொன்னார் 2696-4
799. மற்றவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன் 2697-1
செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்று 2697-2
பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில் 2697-3
பொற்புற விடுவதற்குப் போதுவ என்று கூற 2697-4
800. பிள்ளையார் முன்னம் பைம் பொன் பீடத்தில் இழிந்து போந்து 2698-1
தெள்ளு நீர்த் தரளப் பத்தி சிவிகை மேல் ஏறிச் சென்றார் 2698-2
வள்ளலார் அவர் தம் பின்பு மன்னன் மா ஏறிச் சென்றான் 2698-3
உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறிச் சென்றார் 2698-4
801. தென்னவன் வெப்புத் தீர்ந்து செழுமணிக் கோயில் நீங்கிப் 2699-1
பின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம் 2699-2
மன்னிய மூதூர் மறுகில் வந்து அருளக் கண்டு 2699-3
துன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார் 2699-4
802. மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த 2700-1
ஞான சம்பந்தர் இந்த நாயனார் காணும் என்பார் 2700-2
பால் நறும் குதலைச் செய்ய பவளவாய் பிள்ளையார் தாம் 2700-3
மான சீர்த் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார் என்பார் 2700-4
803. எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார் 2701-1
புரிசடை அண்ணல் நீறே பொருள் எனக் கண்டோம் என்பார் 2701-2
பெருகு ஒளி முத்தின் பைம் பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம் 2701-3
வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார் 2701-4
804. ஏதமே விளைந்த இந்த அடிகள் மார் இயல் பால் என்பார் 2702-1
நாதனும் ஆல வாயில் நம்பனே காணும் என்பார் 2702-2
போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார் 2702-3
வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார் 2702-4
805. அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார் 2703-1
கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார் 2703-2
வடிகொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார் 2703-3
விடிவதாய் முடிந்தது இந்த வெஞ்சமணர் இருளும் என்பார் 2703-4
806. நெருப் பினில் தோற்றார் தாங்கள் நீரிவெல்வார் களோ என்பார் 2704-1
இருப்பு நெஞ்சு உடையர் ஏனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார் 2704-2
பருப் பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர் என்பார் 2704-3
கருப்புடைக் கழுக்கோல் செய்தார் மந்திரியார் தாம் என்பார் 2704-4
807. ஏடுகள் வைகை தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார் 2705-1
ஓடும் நீருடன் செலாது நிற்குமோ ஓலை என்பார் 2705-2
நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார் என்பார் 2705-3
நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர் என்பார் 2705-4
808. தோற்றவர் கழுவில் ஏறத் துணிவதே அருகர் என்பார் 2706-1
ஆற்றிய அருளின் மேன்மைப் பிள்ளையார்க்கு அழகு இது என்பார் 2706-2
நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார் 2706-3
போற்றுவார் எல்லாம் சைவ நெறியினைப் போற்றும் என்பார் 2706-4
809. இன்னன இரண்டு பாலும் ஈண்டினர் எடுத்துச் சொல்ல 2707-1
மின் ஒளி மணி பொன் வெண் குடை மீது போதப் 2707-2
பன் மணி சிவிகை தன் மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு 2707-3
நன் நெறி காட்ட வந்தார் நான் மறை வாழ வந்தார் 2707-4
810. தென் தமிழ் விளங்க வந்த திருக்கழு மலத்தான் வந்தான் 2708-1
மன்றுளார் அளித்த ஞான் வட்டில் வண்கையன் வந்தான் 2708-2
வென்றுலகு உய்ய மீளவை கையில் வெல்வான் வந்தான் 2708-3
என்றுபன் மணிச் சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க 2708-4
811. பன் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்பப் பின்னே 2709-1
தென்னனும் தேவியாரும் உடன் செலத் திரண்டு செல்லும் 2709-2
புன் நெறி அமணர் வேறு ஓர் புடைவரப் புகலி வேந்தர் 2709-3
மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் 2709-4
812. கார் கெழு பருவம் வாய்ப்பக் காமுறும் மகளிர் உள்ளம் 2710-1
சீர் கெழு கணவன் தன்பால் விரைவு உறச் செல்லுமா போல் 2710-2
நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்துச் செல்லும் 2710-3
பார் கெழு புகழின் மிக்க பண்புடை வைகை ஆறு 2710-4
813. ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி 2711-1
நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதிப் பிள்ளையாரும் 2711-2
வேற்றுரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான் 2711-3
தோற்றவர் தோலார் என்று முன்னுறத் துணிந்து இட்டார்கள் 2711-4
814. படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய் 2712-1
அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில் 2712-2
கடுகிய புனலைக் கண்டும் அவாவினால் கையில் ஏடு 2712-3
விடுதலும் விரிஅந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே 2712-4
815. ஆறு கொண்டு ஓடும் ஏட்டைத் தொடர்ந்து எதிர் அணைப்பார் போலத் 2713-1
தேறு மெய் உணர்வு இலாதார் கரைமிசை ஓடிச் சென்றார் 2713-2
பாறும் அப்பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு 2713-3
நூறுவில் கிடைக்கு முன்னே போனது நோக்கிக் காணார் 2713-4
816. காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு 2714-1
நாணிலா அமணர் தம்மை நாட்டாற்றில் விட்டுப் போகச் 2714-2
சேணிடைச் சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன் 2714-3
ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார் 2714-4
817. வேறு ஒரு செயல் இலாதார் வெரு உற்று நடுங்கித் தம்பால் 2715-1
ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி 2715-2
ஊறுடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று 2715-3
மாறு கொண்டு ஈரும் இட்டால் வந்தது காண்டும் என்றார் 2715-4
818. மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூற 2716-1
ஆசிலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டுத் 2716-2
தேசு உடைப் பிள்ளையார் தம் திருக்குறிப்பு அதனை நோக்கப் 2716-3
பாசுரம் பாடல் உற்றார் பர சமயங்கள் பாற 2716-4
819. தென்னவன் மாறன் தானும் சிரபுரத்துத் தலைவர் தீண்டிப் 2717-1
பொன் நவில் கொன்றையார் தம் திருநீறு பூசப் பெற்று 2717-2
முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை 2717-3
உன்னினான் வினைகள் ஒத்துத் துலை என நிற்றலாலே 2717-4
820. உலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதும் 2718-1
நிலவு மெய்ந் நெறி சிவ நெறியது என்பதும் 2718-2
கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும் 2718-3
பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மையால் 2718-4
821. அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்று 2719-1
இந்த மெய்ம் மொழிப் பயன் உலகம் இன்பு உறச் 2719-2
சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன் 2719-3
வந்த அர்ச்சனை வழிபாடும் அன்னவாம் 2719-4
822. வேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது 2720-1
நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால் 2720-2
ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை 2720-3
மூளும் மற்று இவை காக்கும் முறைமையால் 2720-4
823. ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி 2721-1
வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர் 2721-2
சூழ்க என்றது தொல் உயிர் யாவையும் 2721-3
வாழி அஞ்சு எழுத்து ஓதி வளர்கவே 2721-4
824. சொன்ன வையகமும் துயர் தீர்கவே 2722-1
என்னும் நீர்மை இக பரத்தில் உயர் 2722-2
மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட 2722-3
முன்னர் ஞான சம்பந்தர் மொழிந்தனர் 2722-4
825. அரிய காட்சியர் என்பது அவ் வாதியைத் 2723-1
தெரியலாம் நிலையால் தெரியார் என 2723-2
உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம் 2723-3
பெரிய நல் அடையாளங்கள் பேசினார் 2723-4
826. ஆயினும் பெரியார் அவர் என்பது 2724-1
மேய இவ் இயல்பே அன்றி விண் முதல் 2724-2
பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள் 2724-3
ஏயும் யாவும் இவர் வடிவு என்பதாம் 2724-4
827. பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே 2725-1
என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா 2725-2
மன்பெரும் தன்மையார் என வாழ்த்தினார் 2725-3
அன்பு சூழ் சண்பை ஆண் தகையார் அவர் 2725-4
828. வெந்த சாம்பல் விரை என்பது தமது 2726-1
அந்தம் இல் ஒளி அல்லா ஒளி எலாம் 2726-2
வந்து வெம் தற மற்றப் பொடி அணி 2726-3
சந்த மாக் கொண்ட வண்ணமும் சாற்றினார் 2726-4
829. தமக்குத் தந்தையர் தாய் இலர் என்பதும் 2727-1
அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது 2727-2
இமைத்த சோதி அடங்கிப் பின் ஈதலால் 2727-3
எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றதாம் 2727-4
830. தம்மையே சிந்தியார் எனும் தம்மை தான் 2728-1
மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என 2728-2
இம்மையே நினைவார் தம் இருவினைப் 2728-3
பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றதாம் 2728-4
831. எந்தையார் அவர் எவ்வகையார் கொல் என்று 2729-1
இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும் 2729-2
முந்தையோரை எக் கூற்றின் மொழிவது என்று 2729-3
அந்தண் பூந்தராய் வேந்தர் அருளினார் 2729-4
832. ஆதி ஆட்பால் அவர்க்கு அருளும் திறம் 2730-1
நாதன் மாட்சிமை கேட்க நவிலுங் கால் 2730-2
ஓதும் எல்லை உலப்பில ஆதலின் 2730-3
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம் 2730-4
833. அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து 2731-1
இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும் 2731-2
முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அத் 2731-3
தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர் 2731-4
834. மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மைதான் 2732-1
அன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன் 2732-2
இன்ன தன்மையை ஏது எடுத்துக் காட்டு 2732-3
அன்ன ஆற்றால் அளப்பு இலன் என்றதாம் 2732-4
835. தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது 2733-1
ஆன்ற அங்கிப் புறத்து ஒளியாய் அன்பில் 2733-2
ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன் 2733-3
ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்ற தாம் 2733-4
836. மாதுக்கம் நீக்கல் உறுவீர் மனம் பற்றும் என்பது 2734-1
ஆதிச் சுடர்ச் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கிப் 2734-2
போதித்த நோக்கு உற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து 2734-3
போதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம் 2734-4
837. ஈண்டு சாதுக்கள் என்று எடுத்து ஓதிற்று 2735-1
வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர்தாள் 2735-2
பூண்ட அன்பினில் போற்றுவீர் சார்மின் என்று 2735-3
ஆண்ட சண்பை அரசர் அருளினார் 2735-4
839. ஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும் 2736-1
நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று 2736-2
தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர் 2736-3
கூடும் கருணைத் திறம் என்றனர் கொள்கை மேலோர் 2736-4
839. கருதும் கடிசேர்ந்த என்னும் திருப் பாட்டில் ஈசர் 2737-1
மருவும் பெரும் பூசை மறுத்தவர்க் கோறல் முத்தி 2737-2
தரு தன்மையது ஆதல் சண்ணீசர் தம் செய்கை தக்கோர் 2737-3
பெரிதும் சொலக் கேட்டனம் என்றனர் பிள்ளையார் தாம் 2737-4
840. வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினினேர் 2738-1
ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும் 2738-2
பாதம் முதலாம் பதிணெண் புராணங்கள் என்றே 2738-3
ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர் 2738-4
841. பாவுற்ற பார் ஆழி வட்டத் திருப்பாட்டின் உண்மை 2739-1
காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது 2739-2
யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று 2739-3
மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர் 2739-4
842. மாலா யவன் என்ன வரும் திருப்பாட்டில் மாலும் 2740-1
தோலா மறை நான்முகனும் தொடர்வாம் அமரர் 2740-2
ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த 2740-3
மேலாம் கருணைத் திறம் வெம் குருவேந்தர் வைத்தார் 2740-4
843. ஆன அற்று அன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல் 2741-1
மா நகரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத் தேறா 2741-2
ஈனர்கள் எல்லைக் கிட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில் 2741-3
ஞானம் ஈசன் பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார் 2741-4
844. வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய்ப் பாசுரத்தைக் 2742-1
குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன் 2742-2
சிறியேன் அறிவுக்கு அவர் தந்து திருப்பாதம் தந்த 2742-3
நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால் 2742-4
845. அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம் 2743-1
மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம் 2743-2
பலரும் உணர்ந்து உய்யப் பகர்ந்து வரைந்து ஆற்றில் 2743-3
நிலவும் திரு ஏடு திருக்கையால் நீட்டி இட்டார் 2743-4
846. திரு உடைப் பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு 2744-1
மரு உறும் பிறவி ஆற்றில் மாதவர் மனம் சென்றால் போல் 2744-2
பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்துப் போகும் 2744-3
இரு நிலத்தோர் கட்கு எல்லாம் இது பொருள் என்று காட்டி 2744-4
847. எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும் என்று எழுதும் ஏட்டில் 2745-1
தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை முன் ஓங்கப் பாட 2745-2
அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச் 2745-3
செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே 2745-4
848. ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம் 2746-1
நீடிய வாழ்த்தில் போற்றி நிமிர்ந்த பூமாரி தூர்த்தார் 2746-2
ஆடியல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான் 2746-3
பாடு சேர் அமணர் அஞ்சி பதைப்புடன் பணிந்து நின்றார் 2746-4
849. ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக் 2747-1
காற்றென விசையில் செல்லும் கடும் பரி ஏறிக் கொண்டு 2747-2
கோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார் 2747-3
ஏற்று உயர் கொடியினாரைப் பாடினார் ஏடு தங்க 2747-4
850. ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்துப் பாடக் 2748-1
கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடிக் 2748-2
காடு இடமாக ஆடுங்கண்ணுதல் கோயில்மாடு 2748-3
சீர் நடவுட் புக்கு நின்ற ஏடு எடுத்துக் கொண்டார் 2748-4
851. தலை மிசை வைத்துக்கொண்டு தாங்க அரும் மகிழ்ச்சி பொங்க 2749-1
அலைபுனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேருச் 2749-2
சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ 2749-3
மலை மகள் குழைத்த ஞானம் உண்டவர் தம்பால் வந்தார் 2749-4
852. மற்றவர் பிள்ளையார் தம் மலர் அடி வணங்கிப் போற்றிக் 2750-1
கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு 2750-2
பற்றிய கையில் ஏந்திப் பண்பினால் யார்க்கும் காட்ட 2750-3
அற்றருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே 2750-4
853. மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி 2751-1
துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச் சமணர் தாங்கள் 2751-2
முன்னமே பிள்ளையார் பால் அனுசிதம் முற்றச் செய் தார் 2751-3
கொல் நுனைக் கழுவில் ஏற முறை செய்க என்று கூற 2751-4
854. புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும் 2752-1
இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு 2752-2
தகவு இலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே 2752-3
மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை 2752-4
855. பண்பு உடை அமைச்சனாரும் பார் உளோர் அறியும் ஆற்றால் 2753-1
கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற 2753-2
நண்பு உடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட 2753-3
எண் பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் 2753-4
856. தோற்றவர் கழுவில் ஏறித் தோற்றிடத் தோற்றும் தம்பம் 2754-1
ஆற்று இடை அமணர் ஓலை அழிவினால் ஆர்த்த தம்பம் 2754-2
வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகைத் தம்பம் 2754-3
போற்று சீர்ப் பிள்ளையார் தம் புகழ்ச் சயத் தம்பம் ஆகும் 2754-4
857. தென்னவன் தனக்கு நீறு சிரபுரச் செல்வர் ஈந்தார் 2755-1
முன்னவன் பணிந்து கொண்டு முழுவதும் அணிந்து நின்றான் 2755-2
மன்னன் நீறு அணிந்தான் என்று மற்றவன் மதுரை வாழ்வார் 2755-3
உன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார் 2755-4
858. பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது 2756-1
நீதியும் வேதநீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும் 2756-2
மேதினி புனிதம் ஆக வெண்ணீற்றின் விரிந்த சோதி 2756-3
மாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே 2756-4
859. மீனவற்கு உயிரை நல்கி மெய்ந் நெறி காட்டி மிக்க 2757-1
ஊனமாம் சமணை நீக்கி உலகு எலாம் உய்யக் கொண்ட 2757-2
ஞான சம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்கத் 2757-3
தேனலர் கொன்றையார் தம் திருநெறி நடந்தது அன்றே 2757-4
860. மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க 2758-1
இறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம் 2758-2
குறைவிலது எனினுங் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி 2758-3
நிறை கடல் பிறவித் துன்பம் நீங்கிடப் பெற்றது அன்றே 2758-4
861. அம் கயல் கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல் 2759-1
பங்கயச் செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்று 2759-2
பொங்கு ஒளிச் சிவிகை ஏறிப் புகலியர் வேந்தர் போந்தார் 2759-3
மங்கையர்க்கு அரசியாரும் மன்னனும் போற்றி வந்தார் 2759-4
862. எண்ணரும் பெருமைத் தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்திப் 2760-1
புண்ணியப் பிள்ளையாரைப் புகழ்ந்து அடி போற்றி போத 2760-2
மண் எலாம் உய்ய வந்த வள்ளலார் தம்மைக் கண்டு 2760-3
கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னி நாட்டவர்கள் எல்லாம் 2760-4
863. ஆலவாய் அண்ணல் கோயில் அம் கண் முன் தோன்றக் கண்டு 2761-1
பால் அறாவாயர் பண்பினால் தொழுது சென்று 2761-2
மாலும் நான்முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில் 2761-3
சீல மாதவத்தோர் முன்பு சிவிகை நின்று இழிந்து புக்கார் 2761-4
864. தென்னவன் தானும் எங்கள் செம்பியன் மகளார் தாமும் 2762-1
நன்னெறி அமைச்சனாரும் ஞான சம்பந்தர் செய்ய 2762-2
பொன்னடிக் கமலம் போற்றி உடன் புகப் புனிதர் கோயில் 2762-3
தன்னை முன் வலம் கொண்டுள்ளால் சண்பையர் தலைவர் புக்கார் 2762-4
865. கைகளும் தலை மீது ஏறக் கண்ணில் ஆனந்த வெள்ளம் 2763-1
மெய் எலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி 2763-2
ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல 2763-3
மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார் 2763-4
866. ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவற நிறைந்த கோலம் 2764-1
மன்றில் நான் மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி 2764-2
நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும் 2764-3
என்று பூம் புகலி மன்னர் இன் தமிழ்ப் பதிகம் பாட 2764-4
867. தென்னவன் பணிந்து நின்று திரு ஆல வாயில் மேவும் 2765-1
மன்னனே அமணர் தங்கள் மாய்கை ஆல் மயங்கி யானும் 2765-2
உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட் கொள்ள 2765-3
இன் அருள் பிள்ளையாரைத் தந்தனை இறைவா என்றான் 2765-4
868. சீர் உடைப் பிள்ளையாரும் சிறப்பு உடை அடியாரோடும் 2766-1
காரினில் பொலிந்த கண்டத்து இறைவர் தாள் வணங்கிக் காதல் 2766-2
ஆர் அருள் பெற்றுப் போற்றி அங்கு நின்று அரிது நீங்கி 2766-3
ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்து அருளிப் புக்கார் 2766-4
869. நீடு சீர்த் தென்னர் கோனும் நேரியன் பாவை ஆரும் 2767-1
மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை தன்னில் போகக் 2767-2
கூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பினாலே 2767-3
நாடி அங்கு இருந்து தங்கள் நாதரைப் பாடல் உற்றார் 2767-4
870. திருவியம் அகத்தின் உள்ளும் திரு நீல கண்டப் பாணர்க்கு 2768-1
அருளிய திறமும் போற்றி அவர் ஒடும் அளவளாவித் 2768-2
தெருள் உடைத் தொண்டர் சூழத் திருத் தொண்டின் உண்மை நோக்கி 2768-3
இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே 2768-4
871. பூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும் 2769-1
பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம் 2769-2
கீழ் உறப் பறித்துப் போக்கிக் கிளர் ஒளித் தூய்மை செய்தே 2769-3
வாழி அப் பதிகள் எல்லாம் மங்கலம் பொலியச் செய்தார் 2769-4
872. மீனவன் தேவி யாரும் குலச் சிறையாரும் மிக்க 2770-1
ஞான சம்பந்தர் பாதம் நாள் தொறும் பணிந்து போற்ற 2770-2
ஆன சண்பையர் கோன் ஆரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம் 2770-3
ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில் 2770-4
873. செய் தவத்தால் சிவ பாத இருதயர் தாம் பெற்று எடுத்த 2771-1
வைதிக சூளா மணியை மா தவத்தோர் பெரு வாழ்வை 2771-2
மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை 2771-3
எய்திய பூம் புகலியிலே இருந்த நாள் மிக நினைந்தார் 2771-4
874. ஆன புகழ்த் திருநாவுக்கரசர் பால் அவம் செய்த 2772-1
மானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும் 2772-2
மீனவன் தன் நாடு உய்ய வெண் நீறு பெருக்கு தற்கும் 2772-3
போனவர் பால் புகுந்தபடி அறிவன் எனப் புறப்படுவார் 2772-4
875. துடி இடையாள் தன்னோடும் தோணியில் வீற்று இருந்த பிரான் 2773-1
அடி வணங்கி அலர் சண்பை அதன் இன்றும் வழிக் கொண்டு 2773-2
படியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி 2773-3
வடி நெடு வேல் மீனவன் தன் வள நாடு வந்து அணைந்தார் 2773-4
876. மா மறையோர் வளம் பதிகள் இடைத் தங்கி வழிச் செல்வார் 2774-1
தே மருவு நறும் பைந்தார்த் தென்னவன் தன் திரு மதுரை 2774-2
தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன் 2774-3
பூ மருவும் சேவடிக் கீழ் புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார் 2774-4
877. அங்கணரைப் பணிந்து போந்து அருகு அணைந்தார் தமை வினவ 2775-1
இங்கு எம்மைக் கண் விடுத்த காழியர் இள ஏறு 2775-2
தங்கும் இடம் திரு நீற்றுத் தொண்டர் குழாம் சாரும் இடம் 2775-3
செங்கமலத் திருமடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார் 2775-4
878. செப்புதலும் அது கேட்டுத் திரு மடத்தைச் சென்று எய்த 2776-1
அப்பர் எழுந்து அருளினார் எனக் கண்டோர் அடி வணங்கி 2776-2
ஒப்பில் புகழ்ப் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய 2776-3
எப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்து அருள 2776-4
879. சிவ பாத இருதயர் தாம் முன் தொழுது சென்று அணையத் 2777-1
தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர் தொழுவார் 2777-2
அவர் சார்வு கண்டு அருளித் திருத் தோணி அமர்ந்து அருளிப் 2777-3
பவ பாசம் அறுத்தவர் தம் பாதங்கள் நினைவுற்றார் 2777-4
880. இருந்தவத்தோர் அவர் முன்னே இணை மலர்க்கை குவித்து அருளி 2778-1
அரும் தவத்தீர் எனை அறியாப் பருவத்தே எடுத்து ஆண்ட 2778-2
பெரும் தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று 2778-3
பொருந்து புகழ்ப் புகலியின் மேல் திருப் பதிகம் போற்றி இசைத்தார் 2778-4
881. மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி 2779-1
உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக 2779-2
அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள் செய்தார் 2779-3
தண் நறும்பூஞ் செங்கமலத்தார் அணிந்த தமிழ் விரகர் 2779-4
882. திருப் பதிகம் திருக்கடைக் காப்புச் சாத்திச் சிறப்பின் மிகு 2780-1
விருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள் 2780-2
அருப்புறு மெய்க் காதல் புரி அடியவர்கள் தம்மோடும் 2780-3
பொருப்புறு கைச் சிலையார் சேர் பதி பிறவும் தொழப் போவார் 2780-4
883. ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனை 2781-1
நூலின் கண் பொருள் பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானை 2781-2
காலம் பெற்று இனிது இறைஞ்சிக் கை தொழுது புறம் போந்தார் 2781-3
சீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத 2781-4
884. தேன் நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்த தென்னவனார் தேவியார் அமைச்சர்சிந்தை 2782-1
ஊன் நெகிழும் படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழக் கண்டே 2782-2
யான் உம்மைப் பிரியாத வண்ணம் இந் நாட்டு இறைவர் பதி எனைப்பலவும் பணீவீர் என்று 2782-3
ஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர் திருப்பரம் குன்றை நண்ணினாரே 2782-4
885. ஆறு அணிந்தார் தமை வணங்கி அங்குப் போற் அணி ஆப்பன் ஊரை அணைந்து பணிந்துபாடி 2783-1
நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து நிலவு திருப் பதிகங்கள் நிகழப் பாடிச் 2783-2
சேறு அணிந்த வயல் பழனக் கழனி சூழ்ந்த சிர புரத்து வந்து அருளும் செல்வர் செங்கண் 2783-3
ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை எய்தி இறைஞ்சிச் சில நாள் இருந்தார் அன்றே 2783-4
886. பற்றார் தம் புரங்கள் மலைச் சிலையால் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து 2784-1
புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார் தம் பூவணத்தைப் புக்கு இறைஞ்சிப் புகழ்ந்து பாடிக் 2784-2
கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப் பேரும் கைதொழுது தமிழ் பாடிச் சுழியல் போற்றிக் 2784-3
குற்றாலம் குறும் பலாக் கும்பிட்டு ஏத்திக் கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே 2784-4
887. புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றி புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று 2785-1
நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி நல்தொண்டர் உடன் நாளும் போற்றிச் செல்வார் 2785-2
விண்ணவரை செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டித் 2785-3
திண்ணிய பொன் சிலைத் தடக்கை இராமன் செய்த திரு இராமேச் சுரத்தைச் சென்று சேர்ந்தார் 2785-4
888. செங்கண் மால் வழிபட்ட கோயில் நண்ணித் திருமுன்பு தாழ்ந்து எழுந்து தென்ன னோடும் 2786-1
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில் 2786-2
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்குப் புடை வலம் கொண்டு உள் அணைவார் போற் செய்து 2786-3
பங்கயச் செங்கை குவித்துப் பணிந்து நின்று பாடினார் மன்னவனும் பரவி ஏத்த 2786-4
889. சேதுவின்கட் செங்கண் மால் பூசை செய்த சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து 2787-1
காதலுடன் அந் நகரில் இனிது மேவிக் கண் நுதலான் திருத் தொண்டனார்க் கெல்லாம் 2787-2
கோதில் புகழ்ப் பாண்டிமா தேவி யார் மெய்க் குலச்சிறையார் குறை அறுத்துப் போற்றிச் செல்ல 2787-3
நாதர் தமை நாள் தோறும் வணங்கி ஏத்தி நளிர் வேலைக் கரையில் நயந்து இருந்தார் அன்றே 2787-4
890. அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி ஆழிபுடை சூழ்ந்து ஒலிக்கும் ஈழம் தன்னில் 2788-1
மன்னு திருக்கோண மலை மகிழ்ந்த செம் கண் மழ விடையார் தமைப் போற்றி வணங்கிப்பாடி 2788-2
சென்னி மதி புனை மாடம் மா தோட்டத்தில் திருக் கேதீச் சரத்து அண்ணல் செய்ய பாதம் 2788-3
உன்னி மிகப் பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார் 2788-4
891. அப் பதியைத் தொழுது வடதிசை மேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில் 2789-1
புக்கு இறைஞ்சிப் பல பதியும் தொழுது போற்றிப் புணரி பொரு தலை கரைவாய் ஒழியப் போந்தே 2789-2
செப்ப அரிய புகழ்த் திருவாடானை சேர்ந்து செந்தமிழ் மாலைகள் சாத்திச் சிவனார் மன்னும் 2789-3
ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார் 2789-4
892. பதி நிலவு பாண்டி நாடு அதனில் முக்கண் பரமனார் மகிழ் இடங்கள் பலவும் போற்றி 2790-1
விதி நிலவு வேத நூல் நெறியே ஆக்கி வெண்ணீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்த 2790-2
கருதி அருளிக் காழி நகர் சூழ வந்தார் கண் நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ 2790-3
மதி நிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல மந்திரியார் மதி மண மேற்குடியில் வந்தார் 2790-4
893. அந் நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த பதிகளில் நீடு அங்கணர் தம் கோயில் தாழ்ந்து 2791-1
மன்னு திருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனும் மங்கையருக்கு அரசியாரும் 2791-2
கொன்னவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடிக் குரைகழல்கள் பணிந்து குறை கொண்டு போற்றச் 2791-3
சென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றிச் சிரபுரத்துச் செல்வர் இனிது இருந்த நாளில் 2791-4
894. பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்டு போதுதற்குத் திருவுள்ளம் ஆகப் போற்றும் 2792-1
மங்கையர்க்கு அரசியார் தாமும் தென்னர் மன்னவனும் மந்திரியார் தாமும் கூட 2792-2
அங்கு அவர் தம் திருப்பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அவ் அளவு நோக்கி 2792-3
இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசைந்தீர் ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று 2792-4
895. சால மிகத் தளர் வாரைத் தளரா வண்ணம் தகுவன மற்று அவர்க்கு அருளிச் செய்த பின்பு 2793-1
மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து 2793-2
ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரை பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார் 2793-3
ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அந் நாட்டை அகன்று மீண்டு அணையச் செல்வார் 2793-4
896. பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க பொருவில் சீர்த் திருத் தொண்டர் குழாத்தினோடும் 2794-1
பன்னகப் பூண் அணிந்தவர் தம் கோயில் தோறும் பத்தர் உடன் பதி உள்ளோர் போற்றச் சென்று 2794-2
கன்னி மதில் திருக்களரும் போற்றிக் கண்டம் கறை அணிந்தார் பாதாள ஈச்சுரமும் பாடி 2794-3
முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க் கரை அணைந்தார் முந்நூல் மார்பர் 2794-4
897. மலைவளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர்ப் பிறங்கல் வண்டு இரைப்பச் சுமந்து பொங்கி 2795-1
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம் 2795-2
நிலை புரியும் ஓடக் கோல் நிலை இலாமை நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக் 2795-3
கலை பயிலும் கவுணியர் கோன் அதனைக் கண்டு அக் கரையின் கண் எழுந்தருளி நின்ற காலை 2795-4
898. தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம் பூதூர் எதிர் தோன்றத் திரு உள்ளம் பணியச் சென்று 2796-1
மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பைக் 2796-2
காவனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்துக் கண் நுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி 2796-3
நாவலமே கோலாக அதன் மேல் நின்று நம்பர் தமைக் கொட்டம் என நவின்று பாட 2796-4
899. உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம் செலச் செல்ல உந்து தலால் ஊடு சென்று 2797-1
செம் பொன் நேர் சடையார் தம் கொள்ளம் பூதூர் தனைச் சேர அக்கரையில் சேர்ந்த பின்பு 2797-2
நம்பர் அவர் தமை வணங்க ஞானம் உண்ட பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து 2797-3
வம்பலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார் 2797-4
900. நீண் நிலைக் கோபுரம் அதனை இறைஞ்சி புக்கு நிகர் இலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று 2798-1
வாண் நிலவு கோயிலினை வலம் கொண்டு எய்தி மதிச் சடையார் திரு முன்பு வணங்கி நின்று 2798-2
தாணுவே ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் தன்மையால் அருள் தந்த தலைவா நாகப் 2798-3
பூணினாய் களிற்றுரிவை போர்த்த முக்கண் புனிதனே எனப் பணிந்து போற்றிச் செய்தார் 2798-4
901. போற்றி இசைத்துப் புறம் போந்து அங்கு உறையும் நாளில் பூழியன் முன் புன் சமயத்து அமணர் தம்மோடு 2799-1
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவாப் பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி 2799-2
ஆற்றவும் அங்கு அருள் பெற்றுப் போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ 2799-3
நாற்றிசையும் பரவும் திரு நள்ளாறு எய்தி நாடு உடை நாயகர் கோயில் நண்ணினாரே 2799-4
902. நீடு திருத் தொண்டர் புடை சூழ அம்கண் நித்தில யானத்து இடை நின்று இழிந்து சென்று 2800-1
பீடு உடைய திருவாயில் பணிந்து புக்குப் பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில் 2800-2
மாடு வலம் கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர்க் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரைப் 2800-3
பாடக மெல் அடி எடுத்துப் பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய 2800-4
903. தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சையாகி 2801-1
என் உள்ளத் துணையாகி ஆலவயில் அமர்ந்து இருந்தவாறு என் கொல் எந்தாய் என்று 2801-2
பன்னு தமிழ்த் தொடை சாத்தி பரவிப்போந்து பண்பினிய தொண்டருடன் அங்குவைகி 2801-3
மன்னுப்புகழ்ப் பதி பிறவும் வணங்கச் சண்பை வள்ளலார் நல்லாறு வணங்கிச் செல்வார் 2801-4
904. சீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்து சிவபெருமாள் தனைப் பரவிச் செல்லும் போது 2802-1
சார்வு அறியாச் சாக்கியர்தம் போதி மங்கை சார்தலும் மற்ற அது அறிந்த சைவர் எல்லாம் 2802-2
ஆர் கலியின் கிளர்ச்சி எனச் சங்கு தாரை அளவு இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப் 2802-3
பார் குலவு தனக் காளம் சின்னம் எல்லாம் பர சமய கோள் அரி வந்தான் என்று ஊத 2802-4
905. புல் அறிவில் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப் புகலியர் தம் புரவலனார் புகுந்து தங்கள் 2803-1
எல்லையினில் எழுந்து அருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று 2803-2
மல்கி எழும் திருச்சின்ன ஒலிகளாலும் மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள் 2803-3
கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி முதலான தேரார்க்கும் கனன்று சொன்னார்2803-4
906. மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளையார் முன் வருசின்னப் பெருகு ஒலியும் மன்னும் தொண்டர் 2804-1
பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊடு புடைத்த நாராசம் எனப் புக்க போது 2804-2
செற்றமிகு உள்ளத்துப் புத்த நந்தி செயிர்த்து எழுந்து தேரர் குழாம் சூழச் சென்று 2804-3
வெற்றிபுனை சின்னங்கள் வாதில் எமை வென்று அன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான் 2804-4
907. புத்தர் இனம் புடை சூழப் புத்த நந்தி பொருவில் ஞானப் புனிதர் திருமுன்பு ஊதும் 2805-1
மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும் காலை வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி 2805-2
இத்தகைய செயற்கு இவரைத் தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று 2805-3
முத்து நிரைச் சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார் 2805-4
908. வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில் மற்று இவர் தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம் 2806-1
பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்த நந்தி பொய்ம் மேற் கோள் எனப் புகலி வேந்தர் கூற 2806-2
அருமறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் ஆளுடைய பிள்ளையார் திருவாக்காலே 2806-3
உரும் இடித்து விழப் புத்தன் உத்த மாங்கம் உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார் 2806-4
909. ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும் 2807-1
மாறு இல் வலி மந்திரமாம் அசனி போல வாய்மை உரைத் திருத் தொண்டர் வாக்கினாலே 2807-2
வேறு மொழிப் போர் ஏற்பான் வந்த புத்தன் மேனியும் தலையினையும் வெவ்வேறாகக் 2807-3
கூறுபட நூறி இடப் புத்தர் கூட்டம் குலைந்து ஓடி விழுந்து வெருக் கொண்டது அன்றே 2807-4
910. மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்தி வாக்கின் போர் ஏற்றவன் தன் தலையும் மெய்யும் 2808-1
அற்று விழ அத்திர வாக்கு அதனால் அன்பர் அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம் 2808-2
வெற்றி தரும்பிள்ளையார் தமக்குச் சென்று விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க 2808-3
உற்ற விதி அதுவே யாம் அர என்று எல்லாம் ஒதுக என அவ் ஒலி வான் உற்றது அன்றே 2808-4
911. அஞ்சி அகன்று ஓடிய அப்புத்தர் எலாம் அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி 2809-1
வஞ்சனையோ இதுதான் மற்றவர்தம் சைவ வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார் 2809-2
எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு பொருள் பேசுவற்கு இசைவது என்று 2809-3
தம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன் தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார் 2809-4
912. அத்தன்மை கேட்டு அருளிச் சண்பை வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று 2810-1
மெத்த மகிழ்ச்சியின் ஓடும் விரைந்து சென்று வெண் தரள சிவிகையின் நின்று இழிந்து வேறு ஓர் 2810-2
சத்திரமண்டபத்தின் மிசை ஏறி நீடு சைவருடன் எழுந்து அருளி இருந்து சாரும் 2810-3
புத்தர்களை அழைக்க எனத் திரு முன் நின்றார் புகலி காவலர் போற்றிச் சென்றார் 2810-4
913. சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து நீங்கள் செப்பி வரும் பொருள் நிலைமை தெரிக்கஎங்கள் 2811-1
வென்றி மழ இளம் களிறு சண்பை யாளி வேத பாரகன் மும்மைத் தமிழின் வேந்தன் 2811-2
நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்டநீரும் நண்ணூம் எனக் கூறுதலும் நன்மை சாராத் 2811-3
தன் தகைமைப் புத்தருடன் சாரி புத்தன் சந்திர மண்டபமும் சார வந்தான் 2811-4
914. அங்கு அணைந்து மண்டபத்துப் புத்தரோடும் பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில் 2812-1
எங்கும் நிகழ் திருச்சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தைப் பொடி ஆக்கும் எதிரில் அன்பர் 2812-2
பொங்கு புகழ்ப் புகலி காவலர் தம் பாதம் போற்றி அருளால் சாரிபுத்தன் தன்னை 2812-3
உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான் 2812-4
915. கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து கதிமாறும் கணபங்க இயல்பு தன்னில் 2813-1
பொற்புடைய தானமே தவமே தன்மை புரிந்த நிலை யோகமே பொருந்தச் செய்ய 2813-2
உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான் 2813-3
பற்பலரும் பிழைத்து உய்ய அறமுன் சொன்ன பான்மை யான் யாங்கள் தொழும் பரமன் என்றான் 2813-4
916. என்று உரைத்த சாரி புத்தன் எதிர் வந்து ஏற்ற இரும் தவத்துப் பெரும் தன்மை அன்பர்தாமும் 2814-1
நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்தி தான் ஆவது என்றார் 2814-2
நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை நேர் நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும் 2814-3
ஒன்றிய அகம் அந்த விவேகமுத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான் 2814-4
917. ஆங்கு அவன்தான் உரைத்த மொழி கேட்ட அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கித் 2815-1
தாங்கிய ஞானத்துடனாம் அந்தம் ஐந்தும் தாம் வீந்து கெட்டன வேல் தலைவன் தானும் 2815-2
ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து 2815-3
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான் 2815-4
918. கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன் கலந்து உளன் முத்தியில் என்றான் என்ன காணும் 2816-1
இந்திரியம் கண் முதல் ஆம் கரணம் தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார் 2816-2
முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு 2816-3
வந்த வினைப் பயன் போல வழிபட்டார்க்கும் வரும் அன்றோ நன்மை என மறுத்துச் சொன்னான் 2816-4
919. சொன்ன உரை கேட்டு அருளி அன்பர் தாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு 2817-1
அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார் 2817-2
முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால் 2817-3
இன் உயிர் போய்க் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான் 2817-4
920. இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு எடுத்துக் காட்டிய துயிலும் இயல்பினான் போல் 2818-1
மெய்ப் படியே கரணங்கள் உயிர் தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது 2818-2
செப்பிய அக் கந்தத்தின் விளைவு இன்றாகித் திரிவு இல்லா முத்தியில் சென்று இலனும் ஆனான் 2818-3
அப்படி அக் கந்தத்துள் அறிவும் கெட்டால் அம்முத்தி உடன் இன்பம் அணையாது என்றார் 2818-4
921. அவ் உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்றி அணைந்துடன் அம்முத்தி எனும் அதுவும் பாழாம் 2819-1
கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞானக் கடல் அமுதம் அனையவர் தம் காதல் அன்பர் 2819-2
பெய்வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்துப் போனான் என்றாய் 2819-3
எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார் 2819-4
922. உணர்வு பொதுச் சிறப்பு என்ன இரண்டின் முன் உளவான மரப் பொதுமை உணர்த்தல் ஏனைப் 2820-1
புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு இல்லா பொருள்கள் எல்லாம் 2820-2
கொணரும் விறகினைக் குவை செய்திடினும் வேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து 2820-3
உணர் கதுவிச் சுடவல்ல வாறு போலத் தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான் 2820-4
923. எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக் காட்டாகச் சொன்னாய் 2821-1
அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன அனல் வடிவிற்றாம் அதுவும் அறிதி நுங்கோன் 2821-2
தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனைத் தொடர்ந்த இரு காலமும் தொக்கு அறியும் ஆகில் 2821-3
கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக்கு அதுவாம் என்றார் 2821-4
924. ஆதல்¢னால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே 2822-1
ஏதமாம் இவ் அறிவால் உரைத்த நூலும் என்ற அவனுக்கு ஏறுகுமாறு அருளிச் செய்ய 2822-2
வாதம் மாறு ஒன்று இன்றித் தோற்றான் புத்தன் மற்று அவனை வென்று அருளிப் புகலி மன்னர் 2822-3
பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள் பான்மையழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார் 2822-4
925. புந்தியினால் அவர் உரைத்த பொருளின் தன்மை பொருள் அன்றாம் படி அன்பர் பொருந்தக் கூற 2823-1
மந்தவுணர் உடையவரை நோக்கிச் சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே 2823-2
அந்தமில் சீர் மறைகள் ஆதமங்கள் ஏனை அகில கலைப் பொருள் உணர்ந்தார் அருளிச் செய்ய 2823-3
சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பைத் திரு மறையோர் சேவடிக்கீழ் சென்று தாழ்ந்தார் 2823-4
926. அன்று அவர்க்குக் கவுணியர் கோன் கருணை நோக்கம் அணைதலினால் அறிவின்மைஅகன்று நீங்கி 2824-1
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகைமலர் மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும் 2824-2
நின்றனவும் சரிப்பனவும் சைவமேயாம் நிலைமை அவர்க்கு அருள் செய்து சண்பை வேந்தர் 2824-3
சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டித் திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார் 2824-4
927. அந்நகரில் அடியார்கள் எதிர் கொள்ளப் புக்கு அருளி 2825-1
கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி 2825-2
மன்னி அமர்ந்து உரையும் நாள் வாகீசமா முனிவர் 2825-3
எந்நகரில் எழுந்து அருளிற்று என்று அடியார் தமை வினவ 2825-4
928. அங்கு அவரும் அடி போற்றி ஆண்ட அரசு எழுந்து அருளிப் 2826-1
பொங்கு புனல் பூந்துருத்தி நகரின் கண் போற்றி இசைத்து 2826-2
தங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி 2826-3
எங்கும் நிகழ்ந்திட இருந்தபடி எல்லாம் இயம்பினார் 2826-4
929. அப்பரிசு அங்கு அவர் மொழிய ஆண்ட அரசினைக் காணும் 2827-1
ஒப்பு அரிய பெருவிருப்பு மிக்கு ஓங்க ஒளிபெருகு 2827-2
மைப் பொருவு கறைக் கண்டர் கழல் வணங்கி அருள் பெற்றுச் 2827-3
செப்ப அரிய புகழ்ப் புகலிப் பிள்ளையார் செல்கின்றார் 2827-4
930. பூ விரியும் தடம் சோலை புடை பரப்பப் புனல் பரக்கும் 2828-1
காவிரியின் தென்கரை போய்க்கண் நுதலார் மகிழ்ந்த இடம் 2828-2
மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்பு உறுமெய்த் தொண்டரோடு 2828-3
நாவரசர் உழைச் சண்பை நகர் அரசர் நண்ணுவார் 2828-4
931. அந்தணர் சூளா மணியார் பூந்துருத்திக்கு அணித்தாக 2829-1
வந்து அருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டு அருளி 2829-2
நம் தமையாளுடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவது 2829-3
முந்தை வினைப்பயன் என்று முகம் மலர அகம் மலர்வார் 2829-4
932. எதிர் சென்று பணிவன் என எழுகின்ற பெருவிருப்பால் 2830-1
நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்தப் 2830-2
பதி நின்றும் புறப்பட்டு பர சமயம் சிதைத்தவர் பால் 2830-3
முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார் 2830-4
933. திருச்சின்னம் பணிமாறக் கேட்ட நால்திசை உள்ளோர் 2831-1
பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார் தமைச் சூழ்ந்த 2831-2
நெருகின் இடையவர் காணா வகை நிலத்துப் பணிந்து உள்ளம் 2831-3
உருக்கி எழும் மனம் பொங்கத் தொண்டர் குழாத்துடன் அணைந்தார் 2831-4
934. வந்து அணைந்த வாகீசர் வண் புலி வாழ் வேந்தர் 2832-1
சந்த மணித் திருமுத்தின் சிவிகையினைத் தாங்கியே 2832-2
சிந்தை களிப்பு உற வந்தார் திருஞான சம்பந்தர் 2832-3
புந்தியில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார் 2832-4
935. அப்பர் தாம் எங்கு உற்றார் இப்பொழுது என்று அருள் செய்யக் 2833-1
செப்ப அரிய புகழ்த் திருநாவுக் கரசர் செப்புவார் 2833-2
ஒப்பு அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள் 2833-3
இப்பொழுது தாங்கிவரப் பெற்று உய்ந்தேன் யான் என்றார் 2833-4
936. அவ் வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி 2834-1
இவ்வாறு செய்து அருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும் 2834-2
செவ்வாறு மொழி நாவலர் திருஞான சம்பந்தர்க்கு 2834-3
எவ்வாறு செயத் தகுவது என்று எதிரே இறைஞ்சினார் 2834-4
937. சூழ்ந்து மிடைந்த கருணையும் தொண்டர் எல்லாம் அது கண்டு 2835-1
தாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்து 2835-2
வாழ்ந்து மனக் களிப்பினராய் மற்று இவரை வணங்கப் பெற்று 2835-3
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டமெலாம் உற ஆர்த்தார் 2835-4
938. திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் தமைப் 2836-1
பெருகு ஆர்வத் தொடும் அணைந்து தழீஇக் கொள்ளப் பிள்ளையார் 2836-2
மருவாரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார் 2836-3
பொருவாரும் புனல் சடையார் மகிழ்ந்த திருப்பூந் துருத்தி 2836-4
939. அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன் ஏற்றார் மகிழ் கோயில் 2837-1
முன் பணித்து ஆகச் சென்று கோபுரத்தை முன் இறைஞ்சித் 2837-2
துன்பம் இலாத் திருத் தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி 2837-3
என்பு உருக வலம் கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார் 2837-4
940. பொய்யிலியாரைப் பணிந்து போற்றியே புறத்து அணைவார் 2838-1
செய்ய சடையார் கோயில் திருவாயில் முன்னாக 2838-2
மையறு சீர் தொண்டர் குழாம் வந்து புடை சூழ உலகு 2838-3
உய்யவந்தார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார் 2838-4
941. வாக்கின் தனி மன்னர் வண்புகலி வேந்தர் தமை 2839-1
போக்கும் வரவும் வினவப் புகுந்தது எல்லாம் 2839-2
தூக்கின் தமிழ் விரகர் சொல் இறந்த ஞான மறை 2839-3
தேக்கும் திருவாயால் செப்பி அருள் செய்தார் 2839-4
942. காழியினில் வந்த கவுணியர் தம் போர் ஏற்றை 2840-1
ஆழி மிசை கல் மிதப்பில் வந்தார் அடிவணங்கி 2840-2
வாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்தான் ஒங்குதற்குச் 2840-3
சூழும் பெரு வேலி ஆனீர் எனத் தொழுதார் 2840-4
943. பிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது பேர் அன்பின் 2841-1
வெள்ளம் அனைய புகழ் மாதினியர் மேன்மையையும் 2841-2
கொள்ளும் பெருமைக் குலச் சிறையார் தொண்டினையும் 2841-3
உள்ள பரிசு எல்லாம் மொழிந்து ஆங்கு உவந்து இருந்தார் 2841-4
944. தென்னற்கு உயிரோடு நீறு அளித்துச் செங்கமலத்து 2842-1
அன்னம் அனையார்க்கும் அமைச்சர்க்கும் அன்பு அருளித் 2842-2
துன்னும் நெறி வைதிகத்தின் தூ நெறியே ஆக்குதலால் 2842-3
மன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார் 2842-4
945. சொல்லின் பெரு வேந்தர் தொண்டை வள நாடு எய்தி 2843-1
மல்கு புகழ்க் காஞ்சி ஏகாம்பரம் என்னும் 2843-2
செல்வர் கழல் பணிந்து சென்றது எல்லாம் செப்புதலும் 2843-3
புல்கு நூல் மார்பரும் போய்ப் போற்ற மனம் புரிந்தார் 2843-4
946. அங்கணரைப் போற்றி எழுந்த ஆண்ட அரசு அமர்ந்த 2844-1
பொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து 2844-2
திங்கள் பகவணியும் சென்னியார் சேவடிக்கீழ்த் 2844-3
தங்கு மனத்தோடு தாள் பரவிச் செல்லும் நாள் 2844-4
947. வாகீச மாமுனிவர் மன்னும் திரு ஆலவாய் 2845-1
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் கழல் வணங்கப் 2845-2
போகும் பெரு விருப்புப் பொங்கப் புகலியின்மேல் 2845-3
ஏகும் பெரும் காதல் பிள்ளையார் ஏற்று எழுவார் 2845-4
948. பூந்துருத்தி மேவும் புனிதர் தமைப் புக்கு இறைஞ்சிப் 2846-1
போந்து திருவாயில் புறத்து அணைந்து நாவினுக்கு 2846-2
வேந்தர் திரு உள்ளம் மேவ விடை கொண்டு அருளி 2846-3
ஏந்தலார் எண்ணிறந்த தொண்டருடன் ஏகினார் 2846-4
949. மாடு புனல் பொன்னி இழிந்து வட கரையில் 2847-1
நீடு திரு நெய்த்தானம் ஐயாறு நேர்ந்து இறைஞ்சிப் 2847-2
பாடு தமிழ் மாலைகளும் சாத்திப் பரவிப் போய் 2847-3
ஆடல் புரிந்தார் திருப் பழனம் சென்று அணைந்தார் 2847-4
950. செங்கண் விடையார் திருப் பழனம் சேர்ந்து இறைஞ்சிப் 2848-1
பொங்கிய காதலின் முன் போற்றும் பதி பிறவும் 2848-2
தங்கிப்போய்ச் சண்பை நகர் சார்ந்தார் தனிப் பொருப்பின் 2848-3
மங்கை திருமுலைப்பால் உண்டு அருளும் வள்ளலார் 2848-4
951. தென்னாட்டு அமண் மாசு அறுத்துத் திரு நீறே 2849-1
அந்நாடு போற்று வித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டு 2849-2
எந் நாள் பணிவது என ஏற்று எழுந்த மா மறையோர் 2849-3
முன்னாக வேதம் முழங்க எதிர் கொண்டார் 2849-4
952. போத நீடு மா மறையவர் எதிர் கொளப் புகலி காவலரும் தம் 2850-1
சீத முத்து அணிச் சிவிகை நின்று இழிந்து எதிர் செல்பவர் திருத் தோணி 2850-2
நாதர் கோயில் முன் தோன்றிட நகை மலர்க் கரம் குவித்து இறைஞ்சிப் போய் 2850-3
ஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின் மணிக் கோபுரம் சென்று உற்றார் 2850-4
953. அங்கம் மா நிலம் தெட்டுற வணங்கிப் புக்கு அஞ்சலி முடி ஏறப் 2851-1
பொங்கு காதலில் புடைவலம் கொண்டு முன் பணிந்து போற்றி எடுத்து ஓதித் 2851-2
துங்க நீள் பெரும் தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி 2851-3
மங்கையோடு உடன் வீற்று இருந்து அருளினார் மலர்க் கழல் பணிவுற்றார் 2851-4
954. முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூரப் 2852-1
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதரப் பணிந்து ஏத்தி 2852-2
உற்றுமை சேர்வது எனும் திருவியமகம் உவகையால் எடுத்து ஓதி 2852-3
வெற்றியாக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகான் என்பார் 2852-4
955. சீரின் மல்கிய திருப்பதிகத்தினில் திருக் கடைக் காப்பு ஏற்றி 2853-1
வாரின் மல்கிய வன முலையாள் உடன் மன்னினார் தமைப் போற்றி 2853-2
ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம்கையால் தொழுது ஏத்தி 2853-3
ஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணிவாயில் 2853-4
956. தாதையாரும் அங்கு உடன் பணிந்து அணைந்திடச் சண்பையார் தனி ஏறு 2854-1
மூது எயில் திருவாயிலைத் தொழுது போய் முகை மலர்க் குழலார்கள் 2854-2
ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகு இடைச் சென்று 2854-3
காதலித்தவர்க்கு அருள் செய்து தம் திருமாளிகைக் கடை சார்ந்தார் 2854-4
957. நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞான சம்பந்தர் 2855-1
விறலியார் உடன் நீல கண்ட பெரும் பாணர்க்கு மிக நல்கி 2855-2
உறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில் 2855-3
அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார் 2855-4
958. அங்கு அணைந்து அருமறைக் குலத் தாயர் வந்து அடி வணங்கிடத் தாமும் 2856-1
துங்க நீள் பெரும் தோணியில் தாயர் தாள் மனம் கொளத் தொழுவாராய்த் 2856-2
தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் நாள் தம்பிரான் கழல் போற்றிப் 2856-3
பொங்கும் இன் இசை திருப்பதிகம் பல பாடினார் புகழ்ந்து ஏத்தி 2856-4
959. நீல மா விடம் திரு மிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும் 2857-1
காலம் ஆனவை அனைத்தினும் பணிந்து உடன் கலந்த அன்பர்களோடும் 2857-2
சால நாள் அங்கு உறைபவர் தையலாள் தழுவிடக் குழை கம்பர் 2857-3
கோலம் ஆர்தரக் கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார் 2857-4
960. தாண்டகத் திரு நாட்டினைச் சார்ந்து வந்து எம்பிரான் மகிழ் கோயில் 2858-1
கண்டு போற்றி நாம் பணிவது என்று அன்பருக்கு அருள் செய்வார் காலம் பெற்று 2858-2
அண்டருக்கு அறிவரும் பெரும் தோணியில் இருந்தவர் அருள் பெற்றுத் 2858-3
தொண்டர் சூழ்ந்து உடன் புறப்படத் தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார் 2858-4
961. அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அருமறை அங்கி வேட்டு அன்போடும் 2859-1
துப்பு நேர் சடையார் தமைப் பரவியே தொழுது இரும் எனச் சொல்லி 2859-2
மெய்ப் பெரும் தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடை கொடுத்து அருளிப்போய் 2859-3
ஒப்பு இலாதவர் தமை வழி இடைப் பணிந்து உருகும் அன்போடு செல்வார் 2859-4
962. செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்திப் 2860-1
பல் பெரும் தொண்டர் எதிர் கொளப் பரமர் தன் திருத்தினை நகர் பாடி 2860-2
அல்கு தொண்டர்கள் தம்முடன் திருமாணிக் குழியினை அணைந்து ஏத்தி 2860-3
மல்கு வார் சடையார் திருப் பாதிரிப் புலியூரை வந்து உற்றார் 2860-4
963. கன்னி மாவனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு 2861-1
முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள் செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி 2861-2
மன்னுவார் பொழில் திரு வடுகூரினை வந்து எய்தி வணங்கிப்போய் 2861-3
பின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார் 2861-4
964. வக்கரைப் பெருமான் தன்னை வணங்கி அங்கு அமரும் நாள் அருகாலே 2862-1
செக்கர் வேணியர் இரும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டு 2862-2
மிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்பு 2862-3
தொக்க மெய்த் திருத்தொண்டர் வந்து எதிர் கொளத் தொழுது எழுந்து அணைவுற்றார் 2862-4
965. ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே 2863-1
பூதம் பாட நின்று ஆடுவார் திரு நடம் புலப்படும் படி காட்ட 2863-2
வேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும் 2863-3
கோது இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி 2863-4
966. பரவி ஏத்திய திருப் பதிகத்து இசை பாடினார் பணிந்து அங்கு 2864-1
விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கிப் போய் 2864-2
அரவ நீள் சடை அங்கணர் தாம் மகிழ்ந்துறை திரு வாமாத்தூர் 2864-3
சிர புரத்து வந்து அருளிய திருமறைச் சிறுவர் சென்று அணைவுற்றார் 2864-4
967. சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருவாமாத்தூர்ப் 2865-1
பொன்ற அங்கு பூங்கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றிக் 2865-2
குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி 2865-3
நன்றும் இன்புறப் பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார் 2865-4
968. கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரை கழல் பணிந்து ஏத்தி 2866-1
ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்தி 2866-2
பா அலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள் 2866-3
மேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை விளங்கிட அருள் செய்தார் 2866-4
969. சீரின் மன்னிய பதிகம் முன் பாடி அத் திரு அறை அணி நல்லூர் 2867-1
வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர் தம் மலை மிசை வலம் கொள்வார் 2867-2
பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாள்தொறும் பணிந்து ஏத்தும் 2867-3
காரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிடக் கண்டார் 2867-4
970. அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும் 2868-1
கண்ணால் பருகிக் கை தொழுது கலந்து போற்றும் காதலினால் 2868-2
உண்ணா முலையாள் எனும் பதிகம் பாடி தொண்டருடன் போந்து 2868-3
தெண்ணீர் முடியார் திருவண்ணாமலைச் சென்று சேர்வுற்றார் 2868-4
971. அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அம்மலை மீது 2869-1
தங்கு விருப்பில் வீற்று இருந்தார் தட்டாமறைகள் தம் முடி மேல் 2869-2
பொங்கும் ஆர்வத் தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திரு மேனி 2869-3
எங்கும் ஆகிக் கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார் 2869-4
972. ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள் 2870-1
பூத நாதர் அவர் தம்மைப் பூவார் மலரால் போற்றி இசைத்து 2870-2
காதலால் அத் திருமலையில் சில நாள் வைகிக் கமழ் கொன்றை 2870-3
வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார் 2870-4
973. மங்கை பாகர் திருவருளால் வணங்கிப் போந்து வட திசையில் 2871-1
செங்கண் விடையர் பதி பலவும் பணிந்து புகலிச் செம்மலார் 2871-2
துங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டை திருநாட்டில் 2871-3
திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூரைச் சேர்வுற்றார் 2871-4
974. தேவர் முனிவர்க்கு ஒத்து அளித்தார் திருவோத்தூரில் திருத் தொண்டர் 2872-1
தாவில் சண்பைத் தமிழ் விரகர் தாம் அங்கு அணையக் களி சிறந்து 2872-2
மேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறை குடமும் 2872-3
பூவும் பொரியும் சுண்ணமும் முன் கொண்டு போற்றி எதிர் கொண்டார் 2872-4
975. சண்பை வேந்தர் தண் தரளச் சிவிகை நின்றும் இழிந்து அருளி 2873-1
நண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ் 2873-2
விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம் கொண்டு 2873-3
பண்பு நீராடி பணிந்து எழுந்து பரமர் கோயிலுள் அடைந்தார் 2873-4
976. வாரணத்தின் உரி போர்த்த மைந்தர் உமையாள் மணவாளர் 2874-1
ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார் தன் முன் அணைந்து இறைஞ்சி 2874-2
நாரணற்கும் பிரமற்கும் நண்ண அரிய கழல் போற்றும் 2874-3
காரணத்தின் வரும் இன்பக் கண்ணீர் பொழியக் கைதொழுதார் 2874-4
977. தொழுது விழுந்து பணிந்து எழுந்து சொல் மாலைகளால் துதி செய்து 2875-1
முழுதும் ஆனார் அருள் பெற்றுப் போந்து வைகி முதல்வர் தம்மைப் 2875-2
பொழுது தோறும் புக்கு இறைஞ்சிப் போற்றி செய்து அங்கு அமர்வார் முன் 2875-3
அமுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார் 2875-4
978. அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம் 2876-1
மங்குலுற நீள் ஆண் பனையாய்க் காயா வாகக் கண்ட அமணர் 2876-2
இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ என்று 2876-3
பொங்கு நகை செய்து இழைத்து உரைத்தார் அருள வேண்டும் எனப் புகல 2876-4
979. பரமனார் திருத் தொண்டர் பண்பு நோக்கிப் பரிவு எய்த் 2877-1
விரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கு அருளி 2877-2
அரவும் மதியும் பகை தீர அணிந்தார் தம்மை அடி வணங்கி 2877-3
இரவு போற்றித் திருப்பதிகம் இசையில் பெருக எடுத்து அருளி 2877-4
980. விரும்பு மேன்மைத் திருக் கடைக் காப்பு அதனில் விமலர் அருளாலே 2878-1
குரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவு தலால் 2878-2
நெருங்கும் ஏற்றுப் பனை எல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை 2878-3
அரும்பு பெண்ணை ஆகி இடக் கண்டோர் எல்லாம் அதிசயித்தார் 2878-4
981. சீரின் மன்னும் திருக்கடைக் காப்பு ஏற்றிச் சிவனார் அருள் பெற்றுப் 2879-1
பாரில் நீடும் ஆண் பனை முன் காய்த்துப் பழுக்கும் பண்பினால் 2879-2
நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்துக் கொடுத்து அருளி 2879-3
ஆரும் உவகைத் திருத் தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார் 2879-4
982. தென் நாட்டு அமண் மாசு அறுத்தார் தம் செய்கை கண்டு திகைத்த அமணர் 2880-1
அந்நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள் 2880-2
என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த 2880-3
பொன்னார் மேனிப் புரிசடையான் அன்றே என்று போற்றினார் 2880-4
983. பிள்ளையார் தம் திருவாக்கில் பிறத்தலால் அத் தாலமும் முன்பு 2881-1
உள்ள பாசம் விட்டு அகல ஒழியாப் பிறவி தனை ஒழித்துக் 2881-2
கொள்ளும் நீர்மைக் காலங்கள் கழித்துச் சிவமே கூடினவால் 2881-3
வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம் 2881-4
984. அங்கண் அமரர் பெருமானைப் பணிந்து போந்து ஆடு அரவின் உடன் 2882-1
பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றி 2882-2
மங்கை பாகர் அமர்ந்து அருளும் வயல் மாகறலை வழுத்திப் போய்க் 2882-3
கொங்கு மலர் நீர்க் குரங்கணி முட்டத்தைச் சென்று குறுகினார் 2882-4
985. ஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை அணிந்து பணிந்து ஏத்தி 2883-1
நீதி வாழும் திருத்தொண்டர் போற்ற நிகரில் சண்பையினில் 2883-2
வேதமோடு சைவ நெறி விளங்க வந்த கவுணியனார் 2883-3
மாதோர் பாகர் தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் 2883-4
986. நீடு காஞ்சி வாணரும் நிலவு மெய்ம்மை அன்பரும் 2884-1
மாடு சண்பை வள்ளலார் வந்து அணைந்த ஓகையால் 2884-2
கூடுகின்ற இன்ப நேர் குலாவு வீதி கோலினார் 2884-3
காடு கொண்ட பூகம் வாழை காமர் தோரணங்களால் 2884-4
987. கொடி நிரைத்த வீதியில் கோலவே திகைப்புறம் 2885-1
கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர்த் தசும்புடன் 2885-2
மடிவில் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார் 2885-3
படி விளங்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார் 2885-4
988. கோதைமார் ஆடலும் குலாவும் தொண்டர் பாடலும் 2886-1
வேத கீத நாதமும் மிக்கு எழுந்து விம்மவே 2886-2
காதல் நீடு காஞ்சி வாணர் கம்பலைத்து எழுந்து போய் 2886-3
மூது எயில் புறம்பு சென்று அணைந்து முன் வணங்கினார் 2886-4
989. சண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர் வந்து சார்தலும் 2887-1
பண்பு நீடியான முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டு 2887-2
எண் பெருக்கும் மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல் 2887-3
மண் பரக்க வீழ்ந்து எழுந்து வானமுட்ட ஆர்த்தனர் 2887-4
990. சேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார் 2888-1
வாண் நிலாவும் நீற்று அணி விளங்கிட மனத்தினில் 2888-2
பூணும் அன்பர் தம் உடன் புகுந்திடப் புறத்து உளோர் 2888-3
காணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர் 2888-4
991. வியன் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழக் 2889-1
கயல் நெடும் கண் மாதரும் காதல் நீடும் மாந்தரும் 2889-2
புயல் பொழிந்ததாம் எனப் பூவினொடு பொன் சுண்ணம் 2889-3
இயலும் ஆறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார் 2889-4
992. இன்ன வண்ணம் யாவரும் இன்பம் எய்த எய்துவார் 2890-1
பின்னுவார் சடை முடிப் பிரான் மகிழ்ந்த கோயில்கள் 2890-2
முன் உறப் பணிந்து போய் மொய் வரைத் திருமகள் 2890-3
மன்னு பூசனை மகிழ்ந்த மன்னர் கோயில் முன்னினார் 2890-4
993. கம்பவாணர் கோயில் வாயில் கண்டுகை குவித்து எடுத்து 2891-1
உம்பர் ஓங்கும் கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்து 2891-2
அம் பொன் மாளிகைப் புறத்தில் அன்பரோடு சூழ வந்து 2891-3
இம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார் 2891-4
994. செம் பொன் மலைக் கொடி தழுவக் குழைந்து அருளும் திருமேனிக் 2892-1
கம்பவரை வந்து எதிர் வணங்கும் கவுணியர்தம் காவலனார் 2892-2
பம்பு துளிக் கண் அருவி பாய்ந்து மயிர்ப் புளகம் வரத்து 2892-3
அம் பெருகு மனக் காதல் தள்ள நிலம் மிசைத் தாழ்ந்தார் 2892-4
995. பல முறையும் பணிந்து எழுந்து பங்கயச் செங்கை முகிழ்ப்ப 2893-1
மலரும் முகம் அளித்த திரு மணிவாயால் மறையான் என்று 2893-2
உலகுய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க 2893-3
நிலவு மிசை முதற்று ஆளம் நிரம்பிய நீர்மையில் நிகழ 2893-4
996. பாடினார் பணிவுற்றார் பரிவுறும் ஆனந்தக் கூத்து 2894-1
ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல் 2894-2
சூடினார் மெய்ம் முகிழ்த்தார் சூகரமும் அன்னமுமாய்த் 2894-3
தேடினார் இருவருக்கும் தெரிவரியார் திருமகனார் 2894-4
997. மருவிய ஏழ் இசை பொழிய மனம் பொழியும் பேர் அன்பால் 2895-1
பெருகிய கண் மழை பொழியப் பெரும் புகலிப் பெரும் தகையார் 2895-2
உருகிய அன்புள் அலைப்ப உமை தழுவக் குழைந்தவரைப் 2895-3
பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார் 2895-4
998. புறத்து அணைந்த தொண்டருடன் போந்து அமைந்த திருமடத்தில் 2896-1
பெறற்கு அரும் பேறு உலகு உய்யப் பெற்று அருளும் பிள்ளையார் 2896-2
மறப்பு அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார் 2896-3
அறம் பெரும் செல்வக் காமக் கோட்டம் அணைந்து இறைஞ்சினார் 2896-4
999. திரு ஏகம்பத்து அமர்ந்த செழும் சுடரைச் சேவடியில் 2897-1
ஒரு போதும் தப்பாதே உள் உருகிப் பணிகின்றார் 2897-2
மருவு திரு இயமகமும் வளர் இருக்கும் குறள் மற்றும் 2897-3
பெருகும் இசைத் திருப்பதிகத் தொடை புனைந்தார் பிள்ளையார் 2897-4
1000. நீடு திருப் பொழில் காஞ்சி நெறிக்காரைக் காடு இறைஞ்சிச் 2898-1
சூடு மதிக் கண்ணியார் துணை மலர்ச் சேவடி பாடி 2898-2
ஆடும் அவர் இனிது அமரும் அனே கதங்கா வதம் பரவி 2898-3
மாடு திருத் தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள் 2898-4
1001. எண் திசையும் போற்றி இசைக்கும் திருப்பதி மற்று அதன் புறத்துத் 2899-1
தொண்டருடன் இனிது ஏகித் தொல்லை விடம் உண்டு இருண்ட 2899-2
கண்டர் மகிழ் மேல் தளியும் முதலான கலந்து ஏத்தி 2899-3
மண்டு பெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார் 2899-4
1002. அப்பதியில் விருப்பினோடும் அங்கணரை பணிந்து அமர்வார் 2900-1
செப்பரிய புகழ்ப் பாலித் திரு நதியின் தென் கரை போய் 2900-2
மைப் பொலியும் கண்டர் திருமால் பேறு மகிழ்ந்து இறைஞ்சி 2900-3
முப்புரம் செற்றவர் தம்மை மொழி மாலை சாத்தினார் 2900-4
1003. திருமால் பேறு உடையவர் தம் திரு அருள் பெற்று எழுந்து அருளிக் 2901-1
கருமாலும் கருமாவாய் காண்பரிய கழல் தாங்கி 2901-2
மரு ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கித் தம் 2901-3
பொருமாற்கு திருப்பதிகப் பெரும் பிணையல் அணிவித்தார் 2901-4
1004. அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கி 2902-1
பொங்கு புனல் பால் ஆற்றின் புடையில் வடபால் இறைவர் 2902-2
எங்கும் உறை பதி பணிவார் இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சிச் 2902-3
செங்கண் விடை உகைத்தவரைத் திருப்பதிகம் பாடினார் 2902-4
1005. திருத்தொண்டர் பலர் சூழ திரு வில் கோலமும் பணிந்து 2903-1
பொருட் பதிகத் தொடை மாலை புரம் எரித்த படி பாடி 2903-2
அருள் புகலி ஆண் தகையார் தக்கோலம் அணைந்து அருளி 2903-3
விருப்பினோடும் திருவூறல் மேவினார் தமைப் பணிந்தார் 2903-4
1006. தொழுது பல முறை போற்றிச் சுரர் குருவுக்கு இளைய முனி 2904-1
வழுவில் தவம் புரிந்து ஏத்த மன்னினார் தமை மலர்ந்த 2904-2
பழுதில் செழும் தமிழ் மாலை பதிக இசை புனைந்து அருளி 2904-3
முழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர் 2904-4
1007. குன்ற நெடும் சிலை ஆளர் குலவிய பல் பதி பிறவும் 2905-1
நின்ற விருப்புடன் இறைஞ்சி நீடு திருத் தொண்டர் உடன் 2905-2
பொன் தயங்கு மணி மாடப் பூந்தராய்ப் புரவலனார் 2905-3
சென்று அணைந்தார் பழையனூர்த் திரு ஆலம் காட்டு அருகு 2905-4
1008. இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண ஏழ் உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும் 2906-1
அம்மை திருத் தலையாலே நடந்து போற்றும் அம்மை அப்பர் திரு ஆலம் காடாம் என்று 2906-2
தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சிச் சண்பை வரும் சிகாமணியார் சாரச் சென்று 2906-3
செம்மை நெறி வழுவாத பதியின் மாடோர் செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார் 2906-4
1009. மாலை இடை யாமத்துப் பள்ளி கொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து 2907-1
ஆல வனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்தனையோ பாடுதற்கு என்று அருளிச் செய்ய 2907-2
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தின் இடைத் தொழுது உணர்ந்து 2907-3
வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி மெய் உருகித் திருப்பதிகம் விளம்பல் உற்றார் 2907-4
1010. துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசைச் சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல் 2908-1
எஞ்சல் இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி 2908-2
அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக் காப்பு அமையச்சாத்திப் 2908-3
பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப் பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார் 2908-4
1011. நீடும் இசைத் திருப் பதிகம் பாடிப் போற்றி நெடும் கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த காலை 2909-1
மாடு திருத் தொண்டர் குழாம் அணைந்த போது மாலையினில் திரு ஆல வனத்து மன்னி 2909-2
ஆடும் அவர் அருள் செய்த படியை எல்லாம் அருளிச் செய்து அகம்மலர பாடி ஏத்திச் 2909-3
சேடர் பயில் திருப்பதியைத் தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார் 2909-4
1012. திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்றச் செழும் பதியோர் எதிர் கொள்ளச் சென்று புக்குப் 2910-1
பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகத்துப் புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில் 2910-2
விருப்பின் உடன் வலம் கொண்டு புக்குத் தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே 2910-3
அருள் கருணைத் திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசைப் பதிகம் அருளிச் செய்தார் 2910-4
1013. மன்னு திருப்பதிக இசைப் பாடிப் போற்றி வணங்கிப் போந்து அப்பதியில் வைகி மாடு 2911-1
பிஞ்ஞகர் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிறபதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால் 2911-2
முன் நிறைந்த திருவாய் மஞ்சன நீர் ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை 2911-3
உன்னி ஒளிர் காளத்தி மலை வணங்க உற்ற பெரு வேட்கை உடன் உவந்து சென்றார் 2911-4
1014. மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ மென்புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும் 2912-1
தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகிச் சூல கபாலக் கரத்துச் சுடரும் மேனி 2912-2
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று 2912-3
புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அப் பதியில் வைகிப் பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர் 2912-4
1015. இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண் இல் பெருவரைகள் இருமருங்கும் எங்கும் 2913-1
நிறை அருவி நிரைபலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ் பலவாகி 2913-2
அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்குச் 2913-3
சிறகு அடித்துப் பறக்க முயன்று உயர்ந்த போலும் சிலை நிலத்தில் எழுந்து அருளி செல்லா நின்றார் 2913-4
1016. மாதவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரிச் சின்னம் வரம்பு இன்று ஆகப் 2914-1
பூதி நிறை கடல் அணைவது என்னச் சண்பைப் புரவலனார் எழுந்து அருளும் பொழுது சின்னத் 2914-2
தீதில் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் திருஞான சம்பந்தன் வந்தான் என்னும் 2914-3
நாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம் நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண 2914-4
1017. கானவர் தம் குலம் உலகு போற்ற வந்த கண்ணப்பர் திருப் பாதச் செருப்பு தோய 2915-1
மான வரிச் சிலை வேட்டை ஆடும் கானும் வான மறை நிலை பெரிய மரமும் தூறும் 2915-2
ஏனை இமையோர் தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமையவாம் எண் இலாத 2915-3
தானமும் மற்று அவை கடந்து திருக் காளத்தி சார எழுந்து அருளினார் சண்பை வேந்தர் 2915-4
1018. அம்பொன் மலைக் கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று 2916-1
செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த திருத் தொண்டர் குழாம் அடைய ஈண்டிப் 2916-2
பம்பு சடைத் திரு முனிவர் கபாலக் கையர் பல வேடச் சைவர் குல வேடர் மற்றும் 2916-3
உம்பர் தவம் புரிவார் அப்பதியில் உள்ளோருடன் விரும்பி எதிர்கொள்ள உழைச் சென்று உற்றார் 2916-4
1019. திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல் சிவலோகம் அணைந்தது எனச் சென்றபோது 2917-1
மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை நின்றும் வேத பாலகர் இழிந்து வணங்கி மிக்க 2917-2
அசைவில் பெரும் தொண்டர் குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால் 2917-3
இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தித் திருமலை இம் மலைகளில் யாது என்று கேட்டார் 2917-4
1020. வந்து அணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து மறைவாழ்வே சைவ சிகாமணியேதோன்றும் 2918-1
இந்த மலை காளனோடு அத்தி தம்மில் இகலி வழிபாடு செய இறைவர் மேவும் 2918-2
அந்தமில் சீர் காளத்தி மலையாம் என்ன அவனிமேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு 2918-3
சிந்தை களி மகிழ்ச்சி வரத் திரு விராகம் வானவர் தானவர் என்று எடுத்துச் செல்வார் 2918-4
1021. திருந்திய இன் இசை வகுப்பு திருக் கண்ணப்பர் திருத் தொண்டு சிறப்பித்துத் திகழ பாடிப் 2919-1
பொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து பொன் முகலிக் கரை அணைந்து தொழுது போகி 2919-2
அருந்தவர்கள் எம் மருங்கும் மிடைந்து செல்ல ஆளுடைப் பிள்ளையார் அயன் மால் தேடும் 2919-3
மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை அடிவாரம் சார வந்து தாழ்ந்தார் 2919-4
1022. தாழ்ந்து எழுந்து திருமலையைத் தொழுது கொண்டே தடம் சிலாதலம் சோபானத்தால் ஏறி 2920-1
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில்2920-2
சூழ்ந்து வலம் கொண்டு இறைவர் திருமுன்பு எய்தித் தொழுது தலை மேல் கொண்ட செங்கை போற்றி 2920-3
வீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய் வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார் 2920-4
1023. உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அவ் அன்பின் உள்ளே மன்னும் 2921-1
வெள்ளச் செஞ்சடைக் கற்றை நெற்றிச் செங்கண் விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கிப் 2921-2
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்லப் பைம் பொன் மலைவல்லி பரிந்து அளித்த செம்பொன் 2921-3
வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார் 2921-4
1024. பங்கயக் கண் அருவி நீர் பாய நின்று பரவும் இசைத் திருப்பதிகம் பாடி ஆடி 2922-1
தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்பத் தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட 2922-2
அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார் தம் திருமலைக் கீழ் அணைந்து இறைஞ்சிப்2922-3
பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்குப் புக்கு அருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர் 2922-4
1025. யாவர்களும் அறிவரிய இறைவன் தன்னை ஏழ் உலகும் உடையானை எண் இலாத 2923-1
தேவர்கள் தம் பெருமானைத் திருக்காளத்தி மலையின் மிசை வீற்றிருந்த செய்ய தேனைப் 2923-2
பூவலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும் புரவலனார் காலங்கள் தோறும் புக்குப் 2923-3
பாமலர் கொண்டு அடி போற்றிப் பருகி ஆர்ந்து பண்பு இனிய திருப்பதியில் பயிலும் நாளில் 2923-4
1026. அங்கண் வடதிசை மேலும் குடக்கின் மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக 2924-1
திங்கள் புனை முடியார் தம் தானம் தோறும் சென்று தமிழ் இசை பாடும் செய்கை போல 2924-2
மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்று இருந்தார் வட கயிலை வணங்கிப் பாடி 2924-3
செம் கமல மலர் வாவித் திருக்கேதாரம் தொழுது திருப்பதிக இசை திருந்த பாடி 2924-4
1027. கூற்றுதைத்தார் மகிழ்ந்த கோ கரணம் பாடி குலவு திருப் பருப்பகத்தின் கொள்கைபாடி 2925-1
ஏற்றின் மிசை வருவார் இந்திரன் தன் நீல பருப்பதமும் பாடி மற்று இறைவர் தானம் 2925-2
போற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடிப் புகலியார் தம் பெருந் தகையார் புனிதம் ஆகும் 2925-3
நீற்றின் அணி கோலத்துத் தொண்டர் சூழ நெடிது மகிழ்ந்து அப்பதியில் நிலவுகின்றார் 2925-4
1028. தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை2926-1
ஒன்று திரு ஒற்றியூர் உறைவர் தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண் 926-2
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று 2926-3
பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூடப் புனைந்த திருப்பதிக இசை போற்றிப் போந்தார் 2926-4
1029. மன்னு புகழ்த் திருத் தொண்டர் குழாத்தினோடும் மறைவாழ வந்தவர் தாம் மலையும் கானும் 2927-1
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப் 2927-2
பன் மணிகள் பொன்வர் அன்றி அகிலும் சந்தும் பொருது அலைக்கும் பாலி வடகரையில் நீடு 2927-3
சென்னி மதி அணிந்தவர்தம் திருவேற்காடு சென்று அணைந்தார் திருஞானம் உண்ட செல்வர் 2927-4
1030. திருவேற்காடு அமர்ந்த செழும் சுடர் பொன் கோயில் சென்று அணைந்து பணிந்து த்¢ருப்பதிகம் பாடி 2928-1
வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி வணங்கிப் போற்றி 2928-2
உரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை ஒற்றியூர் கை தொழச் சென்று உற்ற போது 2928-3
பெரு வேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர் பெரும் பதியோர் எதிர் கொள்ளப் பேணி வந்தார் 2928-4
1031. மிக்க திருத் தொண்டர் தொழுது அணையத் தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்துப் பாடி 2929-1
மைக் குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு திருக் கோபுரத்து வந்து தாழ்ந்து 2929-2
தக்க திருக் கடைக் காப்புச் சாற்றித் தேவர் தம் பெருமான் திருவாயில் ஊடு சென்று 2929-3
புக்கருளி வலம் கொண்டு புனிதர் முன்பு போற்று எடுத்துப் படியின் மேல் பொருந்த வீழ்ந்தார் 2929-4
1032. பொன் திரள்கள் போல் புரிந்த சடையார் தம்பால் பொங்கி எழும் காதல் மிகப் பொழிந்து விம்மிப்2930-1
பற்றி எழும் மயிர்ப் புளகம் எங்கும் ஆகிப் பரந்து இழியும் கண் அருவி பாய நின்று 2930-2
சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தித் தொழுது புறத்து அணைந்தருளித் தொண்டரோடும் 2930-3
ஒற்றி நகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகுய்ய உலவாத ஞானம் உண்டார் 2930-4
1033. இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால் 2931-1
பன்னு தொல் புகழ்த் திரு மயிலாப் புரி பதியில் 2931-2
மன்னு சீர்ப் பெரும் வணிகர் தம் தோன்றலார் திறத்து 2931-3
முன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம் 2931-4
1034. அரு நிதித் திறம் பெருக்குதற்கு அரும்கலம் பலவும் 2932-1
பொரு கடல் செலப் போக்கி அப் பொருள் குவை நிரம்ப 2932-2
வரும் மரக்கலம் மனைப் படப்பு அணைக்கரை நிரைக்கும் 2932-3
இரு நிதிப் பெரும் செல்வத்தின் எல்லையில் வளத்தார் 2932-4
1035. தம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு அடிமை 2933-1
மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கது ஓர் அன்பால் 2933-2
பொய்ம்மை நீக்கிய பொருள் இது எனக் கொளும் உள்ளச் 2933-3
செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார் 2933-4
1036. கற்றை வார் சடை முடியினார் அடியவர் கலப்பில் 2934-1
உற்ற செய்கையில் ஒழிவு இன்றி உருகிய மனமும் 2934-2
பற்று இலா நெறிப் பர சமயங்களைப் பாற்றும் 2934-3
செற்றம் மேவிய சீலமும் உடையார் ஆய்த் திகழ்வார் 2934-4
1037. ஆன நாள் செல அருமறைக் கவுணியர் பெருமான் 2935-1
ஞான போனகம் நுகர்ந்ததும் நானிலம் உய்ய 2935-2
ஏனை வெம் சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும் 2935-3
ஊனம் இல் புகழ் அடியார் பால் கேட்டு உவந்து உளராய் 2935-4
1038. செல்வம் மல்கிய சிர புரத்தலைவர் சேவடிக் கீழ் 2936-1
எல்லை இல்லது ஓர் காதலின் இடை அறா உணர்வால் 2936-2
அல்லும் நண் பகலும் புரிந்தவர் அருள் திறமே 2936-3
சொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார் 2936-4
1039. நிகழும் ஆங்கு அவர் நிதிப் பெரும் கிழவனின் மேலாய்த் 2937-1
திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகிப் 2937-2
புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்து உளார் எனினும் 2937-3
மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு 2937-4
1040. அரிய நீர்மையில் அரும் தவம் புரிந்து அரன் அடியார்க்கு 2938-1
உரிய அர்ச்சனை உலப்பில செய்த அந் நலத்தால் 2938-2
கரியவாங்குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்து 2938-3
தூரிய பூமகள் என ஒரு பெண் கொடி உதித்தாள் 2938-4
1041. நல்ல நாள் பெற ஓரையின் நலம் மிக உதிப்பப் 2939-1
பல் பெரும் கினை உடன் பெரு வணிகர் பார் முழுதும் 2939-2
எல்லையில் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப 2939-3
மல்லல் ஆவண மறுகு இடைப் பொழிந்து உளம் மகிழ்ந்தார் 2939-4
1042. ஆறு சூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால் 2940-1
ஈறு இலாத பூசனைகள் யாவையும் மிகச் செய்து 2940-2
மாறு இலா மறையவர்க்கு வேண்டின எல்லாம் அளித்துப் 2940-3
பேறு மற்று இதுவே எனும் பெரும் களி சிறந்தார் 2940-4
1043. சூத நல் விணை மங்கலத் தொழில் முறை தொடங்கி 2941-1
வேத நீதியின் விதி உளி வழா வகை விரித்த 2941-2
சாதகத் தொடு சடங்குகள் தச தினம் செல்லக் 2941-3
காதல் மேவிய சிறப்பினில் கடி விழா அயர்ந்தார் 2941-4
1044. யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்புறப் பயந்த 2942-1
பாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கி 2942-2
பூவினாள் என வருதலில் பூம்பாவை என்றே 2942-3
மேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க 2942-4
1045. திங்கள் தோறும் முன் செய்யும் அத் திருவளர் சிறப்பின் 2943-1
மங்கலம் புரி நல்வினை மாட்சியில் பெருக 2943-2
அங்கண் மா நகர் அமைத்திட ஆண்டு எதிர் அணைந்து 2943-3
தங்கு பேர் ஒளிச் சீறடி தளி நடை பயில 2943-4
1046. தளரும் மின்னின் அங்குரம் எனத் தமனியக் கொடியின் 2944-1
வளர் இளம் தளிர்க் கிளை என மணி கிளர் ஒளியின் 2944-2
அளவிஇல் அஞ்சுடர் கொழுந்து என அணை உறும்பருவத்து 2944-3
இள வனப்பு இணை அனையவர்க்கு ஏழி ஆண்டு எய்த 2944-4
1047. அழகின் முன் இளம் பதம் என அணிவிளக்கு என்ன 2945-1
விழவு கொண்டு எழும் பேதையர் உடன் விளையாட்டில் 2945-2
கழலொடு அம்மனை கந்துகம் என்று மற்று இனைய 2945-3
மழலை மெல் கிளிக் குலம் என மனை இடை ஆடி 2945-4
1048. பொன் தொடிச் சிறு மகளிர் ஆயத்து ஒடும் புணர்ந்து 2946-1
சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு 2946-2
உற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி 2946-3
மற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர 2946-4
1049. தந்தையாரும் அத் தளிர் இளம் கொம்பு அனாள் தகைமை 2947-1
இந்த வையகத்து இன்மையால் இன்புறு களிப்பு 2947-2
வந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று இவள் மணம் பெறுவன் 2947-3
அந்தமில் என அருநிதிக்கு உரியன் என்று அறைந்தார் 2947-4
1050. ஆய நாள்களில் அமண் பயில் பாண்டி நாடு அதனைத் 2948-1
தூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்து 2948-2
மாயம் வல்ல அமண் கையரை வாதில் வென்றதுவும் 2948-3
மேய வெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும் 2948-4
1051. நெருப்பில் அஞ்சினார் தங்களை நீரில் ஒட்டிய பின் 2949-1
மருப்பு நீள் கழுக் கோலில் மற்று அவர்கள் ஏறியதும் 2949-2
விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளிப் 2949-3
பொருப்பு வில்லியார் சாதனம் போற்று வித்ததுவும் 2949-4
1052. இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்பச் 2950-1
சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்து 2950-2
மன்னு பூந்தராய் வள்ளலார் தமைத் திசை நோக்கிச் 2950-3
சென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்து செந்நின்று 2950-4
1053. சுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்பக் 2951-1
கற்ற மாந்தர் வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன் 2951-2
பெற்று எடுத்த பூம் பாவையையும் பிறங்கிய நிதியும் 2951-3
முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார் 2951-4
1054. எல்லையில் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி 2952-1
முல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல் 2952-2
மல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலிச் 2952-3
செல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார் 2952-4
1055. ஆற்று நாள்களில் அணங்கு அனார் கன்னி மாடத்தின் 2953-1
பால் தடம் பொழில் மருங்கினில் பனி மலர் கொய்வான் 2953-2
போற்றுவார் குழல் சேடியர் உடன் புறம் போந்து 2953-3
கோல் தொடித் தளிர் கையினால் முகை மலர் கொய்ய 2953-4
1056. அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால் 2954-1
பொன் பிறங்கு நீர்ப் புகலி காவலர்க்கு இது புணராது 2954-2
என்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய் 2954-3
முன்பு அணைந்தது போல ஓர் முள் எயிற்று அரவம் 2954-4
1057. மௌவல் மாதவிப் பந்தரில் மறைந்து வந்து எய்திச் 2955-1
செவ்வி நாண்முகை கவர் பொழுதினில் மலர்ச் செங்கை 2955-2
நவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல் 2955-3
கொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து 2955-4
1058. நாலு தந்தமும் என்பு உறக் கவர்ந்து நஞ்சு உகுத்து 2956-1
மேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க 2956-2
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர் இழை மென்பூ 2956-3
மாலை தீ இடைப் பட்டது போன்று உளம் மயங்கி 2956-4
1059. தரையில் வீழ் தரச் சேடியர் வெருக்கொடு தாங்கி 2957-1
விரை செய் மாடத்தின் உள் கொடு புகுந்திட வணிகர் 2957-2
உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருகக் 2957-3
கரையில் சுற்றமும் தாமும் முன் கலங்கினார் கலுழ்ந்தார் 2957-4
1060. விடம் தொலைத் திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர் 2958-1
அடர்ந்த தீ விடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர் 2958-2
திடம் கொள் மந்திரம் தியானம் பாவக நிலை முட்டி 2958-3
தொடர்ந்த செய்வினைத் தனித் தனித் தொழிலராய் சூழ்வார் 2958-4
1061. மருந்தும் எண்ணில மாறில செய்யவும் வலிந்து 2959-1
பொருந்து வல் விடம் ஏழு வேகமும் முறை பொங்கிப் 2959-2
பெரும் தடம் கண் மெல் கொடியனாள் தலை மிசைப் பிறங்கித் 2959-3
திருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்து இலதால் 2959-4
1062. ஆவி தங்கு பல் குறிகளும் அடைவில ஆக 2960-1
மேவு காருட விஞ்சை வித்தகர் இது விதி என்று 2960-2
ஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறிப் 2960-3
பாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலிக் கடல் போல் 2960-4
1063. சிந்தை வெம் துயர் உறும் சிவநேசரும் தெளிந்து 2961-1
வந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ளோர் 2961-2
இந்த வெவ்விடம் ஒழிப்பவருக்கு ஈகுவன் கண்ட 2961-3
அந்தமில் நிதிக் குவை எனப் பறை அறைவித்தார் 2961-4
1064. முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற 2962-1
அரசர் பாங்கு உளோர் உள்பட அவனி மேல் உள்ள 2962-2
கரையில் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சி 2962-3
புரையில் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திடப் போனார் 2962-4
1065. சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கிக் 2963-1
காரின் மல்கிய சோலை சூழ் கழுமலத் தலைவர் 2963-2
சாரும் அவ்வளவும் உடல் தழல் இடை அடக்கிச் 2963-3
சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார் 2963-4
1066. உடைய பிள்ளையார்க்கு என இவள் தனை உரைத்த அதனால் 2964-1
அடைவு துன்புறுவது அதற்கு இலையாம் நமக்கு என்றே 2964-2
இடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல் 2964-3
புடை பெருத்த கும்பத்தினில் புகப் பெய்து வைப்பார் 2964-4
1067. கன்னி மாடத்தில் முன்பு போல் காப்புற அமைத்துப் 2965-1
பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூந்துகில் சூழ்ந்து 2965-2
பன்னு தூவியின் பஞ்சணை விரைப் பள்ளி அதன் மேல் 2965-3
மன்னும் பொன்னரி மாலைகள் அணிந்து வைத்தனரால் 2965-4
1068. மாலை சாந்தொடும் மஞ்சனம் நாள் தொறும் வழாமைப் 2966-1
பாலின் நேர் தரும் போனகம் பகல் விளக்கி இனைய 2966-2
சாலும் நன்மையில் தகுவன நாள்தொறும் சமைத்தே 2966-3
ஏலுமால் செய யாவரும் வியப்பு எய்தும் நாளில் 2966-4
1069. சண்பை மன்னவர் திரு ஒற்றியூர் நகர் சார்ந்து 2967-1
பண்பு பெற்ற நல் தொண்டர் களுடன் பணிந்து இருந்த 2967-2
நண்பு மிக்க நல் வார்த்தை அந் நல் பதி உள்ளோர் 2967-3
வண் புகழ்ப் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார் 2967-4
1070. சொன்னவர்க்கு எலாம் தூசொடு காசு பொன் அளித்தே 2968-1
இன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்தச் 2968-2
சென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும் 2968-3
துன்னு நீள் நடைக் காவணம் துகில் விதானித்து 2968-4
1071. மகர தோரணம் வண் குலைக் கமுகொடு கதலி 2969-1
நிகரில் பல் கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்து 2969-2
நகர நீள் மறுகு யாவையும் நலம் புனைந்து அணியால் 2969-3
புகரில் பொன் உலகம் இழிந்ததாம் எனப் பொலிவித்தார் 2969-4
1072. இன்னவாறு அணி செய்து பல் குறை அறுப்ப ஏவி 2970-1
முன்னம் ஒற்றியூர் நகர் இடை முத்தமிழ் விரகர் 2970-2
பொன் அடித் தலம் தலைமிசை புனைவான் என்று எழுவார் 2970-3
அந்நகர் பெரும் தொண்டரும் உடன் செல அணைந்தார் 2970-4
1073. ஆய வேலையில் அருமறைப் புகலியர் பிரானும் 2971-1
மேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்று 2971-2
காயல் சூழ் கரைக் கடல் மயிலாப்புரி நோக்கித் 2971-3
தூய தொண்டர் தம் குழாத்தொடும் எதிர் வந்து தோன்ற 2971-4
1074. மாறில் வண் பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த 2972-1
நீறு சேர் தவக் குழாத்தினை நீள் இடைக் கண்டே 2972-2
ஆறு சூடினார் திருமகனார் அணைந்தார் என்று 2972-3
ஈறிலாத ஓர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச 2972-4
1075. காழி நாடரும் கதிர் மணிச் சிவிகை நின்று இழிந்து 2973-1
சூழ் இரும் பெரும் தொண்டர் முன் தொழுது எழுந்து அருளி 2973-2
வாழி மாதவர் வணிகர் செய் திறம் சொலக் கேட்டே 2973-3
ஆழி சூழ் மயிலா புரித் திருநகர் அணைந்தார் 2973-4
1076. அத் திறத்து முன் நிகழ்ந்தது திரு உள்ளத்து அமைத்துச் 2974-1
சித்தம் இன்புறும் சிவநேசர் தம் செயல் வாய்ப்பப் 2974-2
பொய்த்த அச் சமண் சாக்கியர் புறத்துறை அழிய 2974-3
வைத்த அப்பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி 2974-4
1077. கங்கை வார் சடையார் கபாலீச்சரத்து அணைந்து 2975-1
துங்க நீள் சுடர்க் கோபுரம் தொழுது புக்கு அருளி 2975-2
மங்கை பங்கர் தம் கோயிலை வலம் கொண்டு வணங்கிச் 2975-3
செங்கை சென்னி மேல் குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார் 2975-4
1078. தேவ தேவனைத் திருக் கபாலீச்சரத்து அமுதைப் 2976-1
பாவை பாகனைப் பரிவுறு பண்பினால் பரவி 2976-2
மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து 2976-3
நாவின் வாய்மையில் போற்றினார் ஞான சம்பந்தர் 2976-4
1079. போற்றி மெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கி 2977-1
நீற்றின் மேனியில் நிறை மயிர்ப் புளகங்கள் நெருங்கக் 2977-2
கூற்று அடர்த்தவர் கோயிலின் புறம் போந்து அருளி 2977-3
ஆற்றும் இன் அருள் வணிகர் மேற் செல அருள் செய்வார் 2977-4
1080. ஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர் அறிய 2978-1
அருமையால் பெறு மகள் என்பு நிறைத்த அக் குடத்தைப் 2978-2
பெரு மயானத்து நடம் புரிவார் பெரும் கோயில் 2978-3
திருமதில் புறவாய்தலிற் கொணர்க என்று செப்ப 2978-4
1081. அந்தமில் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்து 2979-1
வந்து தம் திரு மனையினில் மேவி அம்மருங்கு 2979-2
கந்த வார் பொழில் கன்னி மாடத்தினில் புக்கு 2979-3
வெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து 2979-4
1082. மூடு பன் மணிச் சிவிகை உள்பெய்து முன்போத 2980-1
மாடு சேடியர் இனம் புடை சூழ்ந்து வந்து அணைய 2980-2
ஆடல் மேவினார் திருக் கபாலீச்சரம் அணைந்து 2980-3
நீடு கோபுரத்து எதிர் மணிச் சிவிகையை நீக்கி 2980-4
1083. அங்கணாளர் தம் அபிமுகத்தினில் அடி உறைப்பால் 2981-1
மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்கப் 2981-2
பொங்கு நீள் புனல் புகலி காவலர் புவனத்துத் 2981-3
தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமை சாதிப்பார் 2981-4
1084. மாடம் ஓங்கிய மயிலை மா நகர் உளார் மற்றும் 2982-1
நாடு வாழ்பவர் நன்றி இல் சமயத்தின் உள்ளோர் 2982-2
மாடு சூழ்ந்து காண்பதற்கு வந்து எய்தியே மலிய 2982-3
நீடு தேவர்கள் ஏனையோர் விசும்பு இடை நெருங்க 2982-4
1085. தொண்டர் தம் பெரும் குழாம் புடை சூழ்தரத் தொல்லை 2983-1
அண்டர் நாயகர் கோபுர வாயில் நேர் அணைந்து 2983-2
வண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தைக் 2983-3
கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி 2983-4
1086. இந்த மாநிலத்து இறந்துளோர் என்பினைப் பின்னும் 2984-1
நந்து நன்னெறிப் படுத்திட நன்மையாம் தன்மை 2984-2
அந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கால் 2984-3
சிந்தும் அங்கம் அங்குடைய பூம்பாவை பேர் செப்பி 2984-4
1087. மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும் 2985-1
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல் 2985-2
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார் தல் 2985-3
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார் 2985-4
1088. மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டு இட்ட 2986-1
என்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும் 2986-2
அன்ன மெய்த் திருவாக்கு எனும் அமுதம் அவ்வங்கம் 2986-3
துன்ன வந்து வந்து உருவமாய்த் தொக்கது அக்குடத்துள் 2986-4
1089. ஆன தன்மையின் அத்திரு பாட்டினில் அடைவே 2987-1
போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி 2987-2
ஏனை அக்குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன் 2987-3
ஞான போனகர் பின் சமண்பாட்டினை நவில்வார் 2987-4
1090. தேற்றமில் சமண் சாக்கியத் திண்ணரிச் செய்கை 2988-1
ஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது 2988-2
கோல் தொடிச் செங்கை தோற்றிடக் குடம் உடைந்து எழுவாள் 2988-3
போற்று தாமரைப் போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள் 2988-4
1091. எடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திருப்பாட்டு 2989-1
அடுத்த அம்முறைப் பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து 2989-2
தொடுத்த வெஞ்சமண் பாட்டினில் தோன்றிடக் கண்டு 2989-3
விடுத்த வேட்கையர் திருக் கடைக் காப்பு மேல் விரித்தார் 2989-4
1092. ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள் 2990-1
ஈங்கு இது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலைப் 2990-2
பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்னப் பார்மேல் 2990-3
ஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்றது அன்றே 2990-4
1093. தேவரும் முனிவர் தாமும் திருவருள் சிறப்பு நோக்கி 2991-1
பூவரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர் 2991-2
யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே 2991-3
மேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார் 2991-4
1094. அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்திப் 2992-1
பங்கம் உற்றாரே போன்றார் பர சமயத்தின் உள்ளோர் 2992-2
எங்குள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்று 2992-3
சங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார் 2992-4
1095. கன்னி தன் வனப்புத் தன்னைக் கண்களால் முடியக் காணார் 2993-1
முன்னுறக் கண்டார்க்கு எல்லாம் மொய் கரும் குழலின் பாரம் 2993-2
மன்னிய வதனம் செம் தாமரையினில் கரிய வண்டு 2993-3
துன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற 2993-4
1096. பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனிமலர் அளகப் பந்தி 2994-1
தேங்கமழ் ஆரம் சேரும் திருநுதல் விளக்கம் நோக்கில் 2994-2
பூங்கொடிக்கு அழகின் மாரி பொழிந்திடப் புயல் கீழ் இட்ட 2994-3
வாங்கிய வான வில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப 2994-4
1097. பருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி 2995-1
ஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன் 2995-2
செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக 2995-3
இரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப 2995-4
1098. மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள் தன் 2996-1
கண்ணிணை வனப்புக் காணில் காமரு வதனத் திங்கள் 2996-2
தண்ணளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள 2996-3
ஒண் நிறக் கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ 2996-4
1099. பணி வளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும் 2997-1
நணிய பேர் ஒளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்கு 2997-2
மணி நிறக் கோபம் கண்டு மற்றது வவ்வத் தாழும் 2997-3
அணி நிறக் காம ரூபி அணைவதாம் அழகு காட்ட 2997-4
1100. இளமயில் அனைய சாயல் ஏந்து இழை குழை கொள் காது 2998-1
வளம் மிகு வனப்பினாலும் வடிந்த தாள் உடைமையாலும் 2998-2
கிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மையாலும் 2998-3
அளவில் சீர் அனங்கன் வென்றிக் கொடி இரண்டு அனையாக 2998-4
1101. வில் பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீது 2999-1
பொற்பமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்த 2999-2
நற்பெரும் பணிலம் என்னும் நன்னிதி போன்று தோன்றி 2999-3
அற்பொலிவு கண்டார் தந்த அருட்கு அடையாளம் காட்ட 2999-4
1102. எரியவிழ் காந்தள் மென்பூத் தலை தொடுத்து இசைய வைத்துத் 3000-1
திரன் பெறச் சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு 3000-2
கரு நெடு கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம் 3000-3
அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற 3000-4
1103. ஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளம் கொங்கை நாகக் 3001-1
கார் கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால் 3001-2
ஆர் திரு அருளில் பூரித்து அடங்கிய அமுதக் கும்பச் 3001-3
சீர் கெழு முகிழைக் காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற 3001-4
1104. காம வேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து கொங்கை 3002-1
நேமி அம் புட்கள் தம்மை அகப்பட நேரிது ஆய 3002-2
தாம நீள் கண்ணி சேர்ந்த சலாகை தூக்கியதே போலும் 3002-3
வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி 3002-4
1105. பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன் 3003-1
அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி 3003-2
மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்புடை அல்குல் ஆகிப் 3003-3
பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட 3003-4
1106. வரிமயில் அனைய சாயல் மங்கை பொன் குறங்கின் மாமை 3004-1
கரி இளம் பிடிக்கை வென்று கதலி மென் தண்டு காட்ட 3004-2
தெரிவுறும் அவர்க்கு மென்மைச் செழு முழந்தாளின் செவ்வி 3004-3
புரிவுறு பொன் பந்து என்னப் பொலிந்து ஒளி விளங்கிப் பொங்க 3004-4
1107. பூவலர் நறுமென் கூந்தல் பொன் கொடி கணைக்கால் காமன் 3005-1
ஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்த 3005-2
மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும் 3005-3
ஓவியர்க்கு எழுத ஒண்ணாப் பரட்டு ஒளி ஒளிர் உற்று ஓங்க 3005-4
1108. கற்பகம் ஈன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப் 3006-1
பொன் திரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும் 3006-2
நற்பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பு எல்லாம் 3006-3
அற்புதம் எய்தத் தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள் 3006-4
1109. எண்ணில் ஆண்டு எய்தும் வேதாப் படைத்தவள் எழிலின் வெள்ளம் 3007-1
நண்ணும் நான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள் தன்பால் 3007-2
புண்ணியப் பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர் 3007-3
கண் நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார் 3007-4
1110. இன்னணம் விளங்கிய ஏர் கொள் சாயலாள் 3008-1
தன்னை முன் கண் உறக் கண்ட தாதையார் 3008-2
பொன் அணி மாளிகைப் புகலி வேந்தர் தாள் 3008-3
சென்னியில் பொருந்த முன் சென்று வீழ்ந்தனர் 3008-4
1111. அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள் 3009-1
பணம் புரி அரவரைப் பரமர் முன் பணிந்து 3009-2
இணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலை 3009-3
வணங்கியே நின்றனள் மண்ணுளோர் தொழ 3009-4
1112. சீர் கெழு சிவ நேசர் தம்மை முன்னமே 3010-1
கார் கெழு சோலை சூழ் காழி மன்னவர் 3010-2
ஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனிப் 3010-3
பார் கெழு மனையில் படர்மின் என்றலும் 3010-4
1113. பெருகிய அருள் பெறும் வணிகர் பிள்ளையார் 3011-1
மருவு தாமரை அடி வணங்கிப் போற்றி நின்று 3011-2
அருமையால் அடியனேன் பெற்ற பாவையைத் 3011-3
திருமணம் புணர்ந்து அருள் செய்யும் என்றலும் 3011-4
1114. மற்றவர் தமக்கு வண் புகலி வாணர் நீர் 3012-1
பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னையான் 3012-2
கற்றைவார் சடையவர் கருணை காண்வர 3012-3
உற்பவிப் பித்தலால் உரை தகாது என 3012-4
1115. வணிகரும் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார் 3013-1
அணிமலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர் 3013-2
தணிவில் நீள் பெருந்துயர் தணிய வேத நூல் 3013-3
துணிவினை அருள் செய்தார் தூய வாய்மையார் 3013-4
1116. தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர்க்கிளை 3014-1
வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப் 3014-2
பள்ள நீர்ச் செலவு எனப் பரமர் கோயிலின் 3014-3
உள் எழுந்து அருளினார் உடைய பிள்ளையார் 3014-4
1117. பான்மையால் வணிகரும் பாவை தன் மணம் 3015-1
ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய் 3015-2
வானுயர் கன்னி மாடத்து வைத்தனர் 3015-3
தேனமர் கோதையும் சிவத்தை மேவினாள் 3015-4
1118. தேவர் பிரான் அமர்ந்து அருளும் திருக் கபாலீச்சரத்து 3016-1
மேவிய ஞானத் தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும் 3016-2
காவலனார் பெருங்கருணை கை தந்த படி போற்றிப் 3016-3
பாவலர் செந்தமிழ் பாடி பன் முறையும் பணிந்து எழுவார் 3016-4
1119. தொழுது புறம் போந்து அருளித் தொண்டர் குழாம் புடை சூழ 3017-1
பழுதில் புகழ் திருமயிலைப் பதியில் அமர்ந்து அருளும் நாள் 3017-2
முழுதுலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச 3017-3
அழுதுலகை வாழ்வித்தார் அப்பதியின் மருங்கு அகல்வார் 3017-4
1120. திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடை கொள்ளச் சிவநேசர் 3018-1
வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடை கொடுத்து 3018-2
நிருத்தர் உறை பிற பதிகள் வணங்கிப் போய் நிறை காதல் 3018-3
அருத்தியோடும் திருவான்மியூர் பணிய அணைவுற்றார் 3018-4
1121. திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிர 3019-1
வருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள 3019-2
அருகாக இழிந்து அருளி அவர் வணங்கத் தொழுது அன்பு 3019-3
தருவார் தம் கோயில் மணித்தடம் நெடுங்கோபுரம் சார்ந்தார் 3019-4
1122. மிக்குயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திருமுன்றில் 3020-1
புக்கருளி கோயிலினைப் புடை வலம் கொண்டு உள் அணைந்து 3020-2
கொக்கு இறகும் மதிக் கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற 3020-3
செக்கர் நிகர் சடை முடியார் சேவடியின் கீழ்த் தாழ்ந்தார் 3020-4
1123. தாழ்ந்து பல முறை பணிந்து தம்பிரான் முன் நின்று 3021-1
வாழ்ந்து களிவரப் பிறவி மருந்தான பெருந் தகையைச் 3021-2
சூழ்ந்த இசைத் திருப்பதிகச் சொல் மாலை வினா உரையால் 3021-3
வீழ்ந்த பெரும் காதலுடன் சாத்தி மிக இன்புற்றார் 3021-4
1124. பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்ப 3022-1
விரவு மயிர்ப் புளகங்கள் மிசை விளங்கப் புறத்து அணைவுற்று 3022-2
அரவ நெடும் திரை வேலை அணிவான்மியூர் அதனுள் 3022-3
சிரபுரத்துப் புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார் 3022-4
1125. அங்கண் அமர்வார் உலகு ஆள் உடையாரை அரும் தமிழின் 3023-1
பொங்கும் இசைப் பதிகங்கள் பல போற்றிப் போந்து அருளிக் 3023-2
கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சிச் 3023-3
செங்கண் விடைக் கொடியார் தம் இடைச் சுரத்தைச் சேர் உற்றார் 3023-4
1126. சென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடைச் சுரத்து 3024-1
மன்னும் திருத் தொண்டர் குழாம் எதிர் கொள்ள வந்து அருளி 3024-2
நல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள்புகுந்து நல் கோயில் 3024-3
தன்னை வலம் கொண்டு அணைந்தார் தம்பிரான் திரு முன்பு 3024-4
1127. கண்ட பொழுதே கலந்த காதலால் கை தலை மேல் 3025-1
கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன் 3025-2
மண்டிய பேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து 3025-3
அண்டர் பிரான் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்தார் 3025-4
1128. இருந்த இடைச் சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று 3026-1
அரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவித் 3026-2
திருந்து மனம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புச் சாத்திப் 3026-3
பெரும் தனி வாழ்வினைப் பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார் 3026-4
1129. நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சி புறம் போந்து அங்கு 3027-1
உறைந்து அருளிப் பணிகின்றார் உமைபாகர் அருள் பெற்றுச் 3027-2
சிறந்த திருத் தொண்டருடன் எழுந்து அருளிச் செந்துருத்தி 3027-3
அறைந்து அளிகள் பயில் சாரல் திருக்கழுக் குன்றினை அணைந்தார் 3027-4
1130. சென்று அணையும் பொழுதின் கண் திருத்தொண்டர் எதிர் கொள்ளப் 3028-1
பொன் திகழும் மணிச் சிவிகை இழிந்து அருளி உடன் போந்து 3028-2
மன்றல் விரி நறும் சோலைத் திருமலையை வலம் கொண்டு 3028-3
மின் தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார் 3028-4
1131. திருக்கழுக் குன்று அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றைப் 3029-1
பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத 3029-2
கருத்தின் உடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று 3029-3
திருப்பதிகம் புனைந்து அருளிச் சிந்தை நிறை மகிழ் உற்றார் 3029-4
1132. இன்புற்று அங்கு அமர்ந்து அருளி ஈறில் பெரும் தொண்டர் உடன் 3030-1
மின் பெற்ற வேணியினார் அருள் பெற்றுப் போந்து அருளி 3030-2
என்புற்ற மணிமார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து 3030-3
அன்புற்று மகிழ்ந்த திரு அச்சிறு பாக்கம் அணைந்தார் 3030-4
1133. ஆதி முதல் வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும் 3031-1
கோயில் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றி 3031-2
மாதவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்றுத் 3031-3
தீது அகற்றும் செய்கையினார் சில நாள் அமர்ந்து அருளி 3031-4
1134. ஏறணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும் 3032-1
நீறணிந்த திருத்தொண்டர் எதிர் கொள்ள நேர்ந்து இறைஞ்சி 3032-2
வேறு பல நதி கானம் கடந்து அருளி விரிசடையில் 3032-3
ஆறணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார் 3032-4
1135. அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசைப் பணிந்து 3033-1
பரசி எழு திருப் புறவார் பனம் காட்டூர் முதலாய 3033-2
விரை செய் மலர்க் கொன்றையினார் மேவு பதி பல வணங்கித் 3033-3
திரை செய் நெடும் கடல் உடுத்த திருத்தில்லை நகர் அணைந்தார் 3033-4
1136. எல்லையில் ஞானத் தலைவர் எழுந்து அருள எதிர் கொள்வார் 3034-1
தில்லையில் வாழ் அந்தணர் மெய்த் திருத்தொண்டர் சிறப்பின் ஒடு 3034-2
மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணிமுத்தின் சிவிகை இழிந்து 3034-3
அல்கு பெரும் காதல் உடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார் 3034-4
1137. திரு எல்லையினைப் பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பை 3035-1
மருவி விளங்குஒளி தழைக்கும் வடதிசை வாயிலை வணங்கி 3035-2
உருகு பெரும் காதல் உடன் உள் புகுந்து மறையின் ஒலி 3035-3
பெருகி வளர் மணிமாடப் பெரும் திரு வீதியை அணைந்தார் 3035-4
1138. நலம் மலியும் திருவீதி பணிந்து எழுந்து நல் தவர்தம் 3036-1
குலம் நிறைந்த திருவாயில் குவித்த மலர்ச் செங்கையோடு 3036-2
தலமுற முன் தாழ்ந்து எய்தித் தமனிய மாளிகை மருங்கு 3036-3
வலமுற வந்து ஓங்கிய பேரம்பலத்தை வணங்கினார் 3036-4
1139. வணங்கி மிக மனம் மகிழ்ந்து மால் அயனும் தொழும் பூத 3037-1
கணங்கள் மிடை திருவாயில் பணிந்து எழுந்து கண் களிப்ப 3037-2
அணங்கு தனி கண்டு அருள அம்பலத்தே ஆடுகின்ற 3037-3
குணம் கடந்த தனிக் கூத்தர் பெரும் கூத்து கும்பிடுவார் 3037-4
1140. தொண்டர் மனம் பிரியாத திருப்படியைத் தொழுது இறைஞ்சி 3038-1
மண்டுபெருங் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார் 3038-2
அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்து 3038-3
கண்ட பேரின் பத்தின் கரையில்லா நிலை அணைந்தார் 3038-4
1141. அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தாக் காலத்தில் 3039-1
மன்னு திரு அம்பலத்தை வலம் கொண்டு போந்து அருளி 3039-2
பொன் அணி மாளிகை வீதிப் புறத்து அணைந்து போது தொறும் 3039-3
இன்னிசை வண்தமிழ் பாடிக் கும்பிட்டு அங்கு இனிது இருந்தார் 3039-4
1142. திருந்திய சீர்த் தாதையார் சிவ பாத இருதயரும் 3040-1
பொருந்து திருவளர் புகலிப் பூசுரரும் மாதவரும் 3040-2
பெரும் திருமால் அயன் போற்றும் பெரும் பற்ற புலியூரில் 3040-3
இருந் தமிழ் ஆகரர் அணைந்தார் எனக் கேட்டு வந்து அணைந்தார் 3040-4
1143. ஆங்கு அவரைக் கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும் 3041-1
தாங்கரிய காதலினால் தம் பெருமான் கழல் வணங்க 3041-2
ஓங்கு திருத் தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆகத் 3041-3
தேன் கமழ் கொன்றைச் சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார் 3041-4
1144. தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன் 3042-1
அன்பு நெறி பெருக்குவித்த அண்டகையார் அடி போற்றி 3042-2
பொன் புரி செஞ்சடைக் கூத்தர் அருள் பெற்று போந்து அருளி 3042-3
இன்புறு தோணியில் அமர்ந்தார் தமை வணங்க எழுந்து அருள 3042-4
1145. நல் தவர் தம் குழாத்தோடும் நம்பர் திரு நடம் செய்யும் 3043-1
பொன் பதியின் திரு எல்லை பணிந்து அருளிப் புறம் போந்து 3043-2
பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிறபதியும் புக்கு இறைஞ்சிக் 3043-3
கற்றவர்கள் பரவு திருக் கழுமலமே சென்று அடைவார் 3043-4
1146. பல் பதிகள் கடந்து அருளிப் பன்னிரண்டு பேர் படைத்த 3044-1
தொல்லை வளப் பூந்தராய் தூரத்தே தோன்றுதலும் 3044-2
மல்கு திரு மணிமுத்தின் சிவிகை இழிந்து எதிர் வணங்கி 3044-3
செல்வ மிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள் செய்வார் 3044-4
1147. மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து 3045-1
மின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம் 3045-2
என்னும் இசைச் சொல் மாலை எடுத்து இயம்பி எழுந்து அருளிப் 3045-3
புன்னை மணம் கமழ் புறவப் புறம்பு அணையில் வந்து அணைந்தார் 3045-4
1148. வாழி வளர் புறம்பு அணையின் மருங்கு அணைந்து வரி வண்டு 3046-1
சூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது 3046-2
காழி நகர் சேர்மின் எனக் கடை முடிந்த திருப்பதிகம் 3046-3
ஏழிசையின் உடன் பாடி எயின் மூதூர் உள் புகுந்தார் 3046-4
1149. சேண் உயர்ந்த திருத்தோணி வீற்று இருந்த சிவபெருமான் 3047-1
தான் நினைந்த ஆதரவின் தலைப்பாட்டு தனை உன்னி 3047-2
நீள் நிலைக் கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சிப் புக்கு அருளி 3047-3
வாண் நிலவு பெருங் கோயில் வலம் கொண்டு முன் பணிந்தார் 3047-4
1150. முன் இறைஞ்சித் திருவருளின் முழு நோக்கம் பெற்று ஏறிப் 3048-1
பொன் இமயப் பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரைச் 3048-2
சென்னி மிசைக் குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்து 3048-3
மன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார் 3048-4
1151. பரவு திருப் பதிகங்கள் பலவும் இசையினில் பாடி 3049-1
விரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி 3049-2
அரவு அணிந்தார் அருள் பெருக புறம்பு எய்தி அன்பர் உடன் 3049-3
சிரபுரத்துப் பெரும் தகையார் தம் திருமாளிகை சேர்ந்தார் 3049-4
1152. மாளிகையின் உள் அணைந்து மறையவர்கட்கு அருள் புரிந்து 3050-1
தாள் பணியும் பெரும் கிளைக்குத் தகுதியினால் தலை அளிசெய்து 3050-2
ஆளுடைய தம் பெருமான் அடியவர் களுடன் அமர்ந்து 3050-3
நீளவரும் பேரின்பம் மிகப் பெருக நிகழு நாள் 3050-4
1153. காழி நாடு உடைய பிரான் கழல் வணங்கி மகிழ்வு எய்த 3051-1
ஆழியினும் மிகப் பெருகும் ஆசையுடன் திருமுருகர் 3051-2
வாழி திரு நீல நக்கர் முதல் தொண்டர் மற்று எணையோர் 3051-3
சூழும் நெடும் சுற்றம் உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார் 3051-4
1154. வந்தவரை எதிர் கொண்டு மனம் மகிழ்ந்து சண்பையர்கோன் 3052-1
அந்தமில் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து 3052-2
சுந்தரவார் அணங்கின் உடன் தோணியில் வீற்று இருந்தாரைச் 3052-3
செந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பல பாடி 3052-4
1155. பெரு மகிழ்ச்சியுடன் செல்லப் பெரும் தவத்தால் பெற்றவரும் 3053-1
மருவு பெரும் கிளையான மறையவரும் உடன் கூடித் 3053-2
திருவளர் ஞானத்தலைவர் திருமணம் செய்து அருளுதற்குப் 3053-3
பருவம் இது என்று எண்ணி அறிவிக்கப் பாங்கு அணைந்தார் 3053-4
1156. நாட்டு மறை முறை ஒழுக்கம் ஞான போனகருக்கும் 3054-1
கூட்டுவது மனம் கொள்வார் கோதில் மறை நெறிச் சடங்கு 3054-2
காட்டவரும் வேள்வி பல புரிவதற்கு ஓர் கன்னிதணை 3054-3
வேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள் 3054-4
1157. மற்றவர் தம் மொழி கேட்டு மாதவத்தின் கொழுந்து அனையார் 3055-1
சுற்றம் உறும் பெரும் பாசத் தொடர்ச்சி விடும் நிலைமையராய் 3055-2
பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதினால் இசையாது 3055-3
முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள 3055-4
1158. அருமறையோர் அவர் பின்னும் கை தொழுது அங்கு அறிவிப்பார் 3056-1
இருநிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால் 3056-2
வருமுறையால் அறுதொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும் 3056-3
திருமணம் செய்து அருளுதற்குத் திரு உள்ளம் செய்யும் என 3056-4
1159. மறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம் பெருகும் 3057-1
துறை வாழச் சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும் 3057-2
பிறை வாழும் திருமுடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த 3057-3
கறை வாழும் கண்டத்தார் தமைத் தொழுது மனம் களித்தார் 3057-4
1160. திரு ஞான சம்பந்தர் திரு உள்ளம் செய்த அதற்குத் 3058-1
தருவாய்மை மறையவரும் தாதையரும் தாங்க அரிய 3058-2
பெருவாழ்வு பெற்றார் ஆய்ப் பிஞ்ஞகனார் அருள் என்றே 3058-3
உருகா நின்று இன்பம் உறும் உள மகிழ்ச்சி எய்துவார் 3058-4
1161. ஏதமில் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால் 3059-1
நாதர் திருப் பெருமணத்து நம்பாண்டார் நம்பி பெறும் 3059-2
காதலியைக் காழி நாடு உடையபிரான் கைப்பிடிக்க 3059-3
போதும் அவர் பெரும் தன்மை எனப் பொருந்த எண்ணினார் 3059-4
1162. திருஞான சம்பந்தர் சீர் பெருக மணம் புணரும் 3060-1
பெருவாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிகப்பேணி 3060-2
வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள் பேசத் 3060-3
தருவார் தண் பந்தணை நல்லூர் சார்கின்றார் தாதையார் 3060-4
1163. மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன் ஏகத் 3061-1
திக்கு நிகழ் திருநல்லூர் பெருமணத்தைச் சென்று எய்தத் 3061-2
தக்க புகழ் நம்பாண்டார் நம்பிதாம் அது கேட்டுச் 3061-3
செக்கர் சடைமுடியார் தம் திருப்பாதம் தொழுது எழுவார் 3061-4
1164. ஒப்பரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால் 3062-1
அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கிச் 3062-2
செப்பரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்து ஒடும் சென்றே 3062-3
எப்பொருளும் எய்தினேன் எனத் தொழுது அங்கு எதிர் கொண்டார் 3062-4
1165. எதிர் கொண்டு மணி மாடத்தினில் எய்தி இன்பமுறு 3063-1
மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப 3063-2
சதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும் 3063-3
முதிர் உணர்வின் மாதவரும் அணைந்த திறம் மொழிகின்றார். 3063-4
1166. ஞான போனகருக்கு நல்தவத்தின் ஒழுக்கத்தால் 3064-1
ஊனமில் சீலத்து உம்பால் மகள் பேச வந்தது என 3064-2
ஆன பேர் அந்தணர்கள் பால் அருள் உடைமை யாம் என்று 3064-3
வான் அளவு நிறைந்த பெரு மனம் மகிழ்ச்சி ஒடு மொழிவார் 3064-4
1167. உம்முடைய பெரும் தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று அளித்த 3065-1
அம்மை திருமுலைப் பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு 3065-2
எம்முடைய குலக் கொழுந்தை யாம் உய்யத் தருகின்றோம் 3065-3
வம்மின் என உரைத்து மனம் மகிழ்ந்து செலவிடுத்தார் 3065-4
1168. பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்து 3066-1
கார் உலவு மலர்ச் சோலைக் கழுமலத்தை வந்து எய்திக் 3066-2
சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பிப் 3066-3
பார் குலவும் திருமணத்தின் பான்மையினைத் தொடங்குவார் 3066-4
1169. திருமணம் செய் கலியாணத் திருநாளும் திகழ் சிறப்பின் 3067-1
மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்பப் 3067-2
பெருகு மண நாள் ஓலை பெரும் சிறப்பினுடன் போக்கி 3067-3
அருள் புரிந்த நன்னாளில் அணிமுளைப் பாலிகை விதைத்தார் 3067-4
1170. செல்வம் மலி திருப்புகலி செழும் திரு வீதிகள் எல்லாம் 3068-1
மல்கு நிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தே 3068-2
எல்லையிலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றி 3068-3
அல்கு பெரும் திரு ஓங்க அணி சிறக்க அலங்கரித்தார் 3068-4
1171. அருந்தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்ய 3069-1
பொருந்து திரு நாள் ஓலை பொருவு இறந்தார் கொண்டு அணையத் 3069-2
திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர் கொண்டு 3069-3
வருந்தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை வினை தொடங்குவார் 3069-4
1172. மன்னும் பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி 3070-1
நன்னிலைமைத் திருநாளுக்கெழுநாளாம் நல் நாளில் 3070-2
பன்மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப 3070-3
பொன் மணிப் பாலிகை மீது புனித முளை பூரித்தார் 3070-4
1173. சேண் உயரும் மாடங்கள் திருப் பெருகு மண்டபங்கள் 3071-1
நீணிலைய மாளிகைகள் நிகரில் அணி பெற விளக்கிக் 3071-2
காண வரும் கை வண்ணம் கவின் ஓங்கும் படி எழுதி 3071-3
வாண் நிலவு மணிக் கடைக் கண் மங்கலக் கோலம் புனைந்து 3071-4
1174. நீடு நிலைத் தோரணங்கள் நீள் மருகு தொறும் நிரைத்து 3072-1
மாடுயரும் கொடி மாலை மணி மாலை இடைப் போக்கிச் 3072-2
சேடுயரும் வேதிகைகள் செழும் சாந்து கொடு நீவிப் 3072-3
பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார் 3072-4
1175. மன்றல் வினைத் திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம் 3073-1
முன்றில் தொறும் வீதி தொறும் முக நெடுவாயிகள் தொறும் 3073-2
நின்று ஒளிரும் மணி விளக்கு நிறைவாசப் பொன் குடங்கள் 3073-3
துன்று சுடர்த் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார் 3073-4
1176. எங்கணும் மெய்த் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர் 3074-1
மங்கல நீள் மணவினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்திப் 3074-2
பொங்கு திருப்புகலிதனில் நாள்தோறும் புகுந்து ஈண்ட 3074-3
அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார் 3074-4
1177. மங்கல தூரிய நாதம் மறுகு தொறும் நின்று இயம்பப் 3075-1
பொங்கிய நான்மறை ஓசை கடல் ஓசை மிசைப் பொலியத் 3075-2
தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன் 3075-3
செங்கனல் ஆகுதிப் புகையும் தெய்வ விரை மணம் பெருக 3075-4
1178. எண் திசையில் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்கப் 3076-1
பண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயில 3076-2
மண்டு பெரு நிதிக் குவைகள் மலைப் பிறங்கல் என மலிய 3076-3
உண்டி வினைப் பெரும் துழனி ஓவாத ஒலி ஓங்க 3076-4
1179. மா மறை நூல் விதிச் சடங்கில் வகுத்த முறை நெறி மரபின் 3077-1
தூ மணம் நல் உபகரணம் சமைப்பவர் தம் தொழில் துவன்றத் 3077-2
தாமரையோன் அனைய பெரும் தவ மறையோர் தாம் எடுத்த 3077-3
பூமருவு பொன் கலசப் புண்ணிய நீர் பொலிவு எய்த 3077-4
1180. குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு அமைப்போர் இனம் குழுமப் 3078-1
பொங்குவிரைப் புதுக் கலவைப் புகை எடுப்போர் தொகை விரவத் 3078-2
துங்க நறும் கர்ப்பூரச் சுண்ணம் இடிப்போர் நெருங்க 3078-3
எங்கும் மலர்ப் பிணை புனைவோர் ஈடங்கள் மிகப் பெருக 3078-4
1181. இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும் 3079-1
மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர் 3079-2
நினைவு அரிய பெரு வளங்கள் நெருங்குதலால் நிதிக் கோமான் 3079-3
தனை இறைவர் தாம் ஏவச் சமைத்தது போல் அமைந்து உளதால் 3079-4
1182. மாறிலா நிறை வளம் தரும் புகலியின் மணம் மீக் 3080-1
கூறு நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும் 3080-2
நீறு சேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்கு 3080-3
ஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார் 3080-4
1183. வேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்க 3081-1
ஓத நீர் உலகில் இயன் முறை ஒழுக்கமும் பெருகக் 3081-2
காதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவின் ஆர் 3081-3
மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர் வலம் செய்தார் 3081-4
1184. நகர் வலம் செய்து புகுந்த பின் நவமணி அணைந்த 3082-1
புகரில் சித்திரவிதன மண்டபத்தினில் பொலியப் 3082-2
பகரும் வைதிக விதிச் சமாவர்த்தனப் பான்மை 3082-3
திகழ முற்றிய செம்மலார் திரு முன்பு சேர்ந்தார் 3082-4
1185. செம் பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண்பரப்பின் 3083-1
வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்த 3083-2
அம் பொன் வாச நீர்ப் பொன் குடம் அரசு இலை தருப்பை 3083-3
பம்பு நீள்சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில் 3083-4
1186. நாத மங்கல முழக்கொடு நல் தவ முனிவர் 3084-1
வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாசப் 3084-2
போது சாந்தணி பூந்துகில் புணைந்த புண்ணியம் போல் 3084-3
மீது பூஞ்சயனத்து இருந்தவர் முன்பு மேவி 3084-4
1187. ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர் அயன் அனைய 3085-1
சீர்மறைத் தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர் 3085-2
பார் வழிப்பட வரும் இரு வினைகளின் பந்தச் 3085-3
சார்பு ஒழிப்பவர் திருக்கையில் காப்பு நாண் சாத்த 3085-4
1188. கண்ட மாந்தர்கள் கடி மணம் காண வந்து அணைவார் 3086-1
கொண்ட வல்வினையாப்பு அவிழ் கொள்கைய ஆன 3086-2
தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி 3086-3
மண்டு மாமறைக் குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே 3086-4
1189. நிறைந்த கங்குலின் நிதிமழை விதி முறை எவர்க்கும் 3087-1
புரந்த ஞான சம்பந்தர் தாம் புன் நெறிச் சமய 3087-2
அரந்தை வல்லிருள் அகல வந்து அவதரித்தால் போல் 3087-3
பரந்த பேர் இருள் துரந்து வந்து தொழுதனன் பகலோன் 3087-4
1190. அஞ்சிறைச் சுரும்பு அறை பொழில் சண்பை ஆண் தகையார் 3088-1
தஞ்சிவத் திருமணம் செயத் தவம் செய் நாள் என்று 3088-2
மஞ்சனத் தொழில் புரிந்து என மாசு இருள் கழுவிச் 3088-3
செஞ்சுடர்க் கதிர் பேரணி அணிந்தன திசைகள் 3088-4
1191. பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள் 3089-1
நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால் 3089-2
தரம் கடந்தவர் தம் திருக் கல்லி யாணத்தின் 3089-3
வரம்பில் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம் 3089-4
1192. நங்கள் வாழ்வு என வரும் திருஞான சம்பந்தர் 3090-1
மங்கலத் திருமண எழுச்சியின் முழக்கு என்னத் 3090-2
துங்க வெண்திரைச் சுரிவளை ஆர்ப்பொடு சூழ்ந்து 3090-3
பொங்கு பேர் ஒலி முழக்குடன் எழுந்தது புணரி 3090-4
1193. அளக்கர் ஏழும் ஒன்றாம் எனும் பெருமை எவ்வுலகும் 3091-1
விளக்கு மாமண விழாவுடன் விரைந்து செல்வன போல் 3091-2
துளக்கில் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம் 3091-3
வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி 3091-4
1194. சந்த மென் மலர்த் தாது அணி நீறு மெய் தரித்துக் 3092-1
கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு 3092-2
சிந்தை தூய அன்பர்களுடன் திருமணம் போத 3092-3
மந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து 3092-4
1195. எண் திசை திறத்து யாவரும் புகலி வந்து எய்தி 3093-1
மண்டும் அத்திருமண எழுச்சியின் அணிவாய்ப்பக் 3093-2
கொண்ட வெண் நிறக் குரூஉச் சுடர்க் கொண்டல்கள் என்ன 3093-3
வெண் துகில் கொடி நிரைத்தது போன்றது விசும்பு 3093-4
1196. ஏல இந்நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும் 3094-1
காலை செய்வினை முற்றிய கவுணியர் பெருமான் 3094-2
மூலம் ஆகிய தோணி மேல் முதல்வரை வணங்கிச் 3094-3
சீலமார் திரு அருளினால் மணத்தின் மேல் செல்வார் 3094-4
1197. காழி மாநகர் வேதியர் குழாத்தொடும் கலந்து 3095-1
சூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்ல 3095-2
வாழி மா மறை முழங்கிட வளம்பதி வணங்கி 3095-3
நீழல் வெண் சுடர் நித்திலச் சிவிகை மேற்கொண்டார் 3095-4
1198. யான வாகனம் ஏறுவார் யாரும் மேல் கொள்ளக் 3096-1
கானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி 3096-2
மேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த 3096-3
வான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள் 3096-4
1199. சங்கொடு தாரை சின்னம் தனிப் பெரும் காளம் தாளம் 3097-1
வங்கியம் ஏனை மற்று மலர் துளைக் கருவி எல்லாம் 3097-2
பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம் 3097-3
எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே 3097-4
1200. கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர் பால் கோல 3098-1
வேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு பால் மிக்க 3098-2
ஏதம் இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு பால் ஏத்தும் 3098-3
நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு பாலலாக 3098-4
1201. விண்ணினை விழுங்க மிக்க வெண் துகில் பதாகை வெள்ளம் 3099-1
கண் வெறி படைப்ப மிக்க கதிர் விரி கவரிக் கானம் 3099-2
மண்ணிய மணிப் பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின் 3099-3
எண்ணிலா வண்ணத்தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண 3099-4
1202. சிகையொடு மான் தோல் தாங்கும் இடையும் ஆசானும் செல்வார் 3100-1
புகை விடும் வேள்விச் செந்தீ இல்லுடன் கொண்டு போவார் 3100-2
தகையிலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பிச் சார்வார் 3100-3
வகையறு பகையும் செற்ற மாதவர் இயல்பின் மல்க 3100-4
1203. அறுவகை விளங்கும் சைவத்து அளவிலா விரதம் சாரும் 3101-1
நெறி வழி நின்ற வேடம் நீடிய தவத்தில் உள்ளோர் 3101-2
மறுவறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோகக் 3101-3
குறி நிலை பெற்ற தொண்டர் குழாமாகி ஏக 3101-4
1204. விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர் 3102-1
அஞ்சனம் நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர் 3102-2
தஞ்சுடர் விமானம் ஏறித் தழைத்த ஆதரவின் ஓடு 3102-3
மஞ்சுறை விசும்பின் மீது மாண அணி காணச் சென்றார் 3102-4
1205. மற்றிவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி 3103-1
முற்ற இத் தலத்தில் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில் 3103-2
அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணம் மேல் செல்லும் 3103-3
பொற்பு அமை மணத்தின் சாயை போன்று முன் பொலியச் செல்ல 3103-4
1206. தவ அரசு ஆள உய்க்கும் தனிக்குடை நிழற்றச் சாரும் 3104-1
பவம் அறுத்து ஆளவல்லார் பாதம் உள்ளத்துக் கொண்டு 3104-2
புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து 3104-3
சிவன் அமர்ந்து உறையும் நல்லூர் திருப் பெருமணத்தைச் சேர்ந்தார் 3104-4
1207. பெருமணக் கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால் 3105-1
வருமணத் திறத்தின் முன்னர் வழி எதிர் கொள்ளச் சென்று 3105-2
திருமணம் புணர எய்தும் சிரபுரச் செம்மலார் தாம் 3105-3
இருள் மணந்து இலங்கும் கண்டத்து இறைவர் தம் கோயில் புக்கார் 3105-4
1208. நாதரைப் பணிந்து போற்றி நல் பொருள் பதிகம் பாடி 3106-1
காதல் மெய் அருள் முன் பெற்றுக் கவுணியர் தலைவர் போந்து 3106-2
வேதியர் வதுவைக் கோலம் புனைந்திடவேண்டும் என்னப் 3106-3
பூத நாயகர் தம் கோயில் புறத்து ஒரு மடத்தில் புக்கார் 3106-4
1209. பொன் குடம் நிறைந்த வாசப் புனித அஞ்சனம் நீராட்டி 3107-1
விற்பொலி வெண்பட்டு ஆடை மேதக விளங்கச் சாத்தி 3107-2
நற்றிரு உத்தரீய நறும் துகில் சாத்தி நானப் 3107-3
பற்பல கலவைச் சாந்தம் பான்மையின் அணிந்த பின்னர் 3107-4
1210. திருவடி மலர் மேல் பூத்த செழு நகைச் சோதி என்ன 3108-1
மருவிய தரளக் கோவை மணிச்சரி அணையச் சாத்தி 3108-2
விரிசுடர்ப் பரட்டின் மீது விளங்கு பொன் சரட்டில் கோத்த 3108-3
பெருகு ஒளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி 3108-4
1211. தண் சுடர் பரிய முத்துத் தமனிய நாணில் கோத்த 3109-1
கண் கவர் கோவைப் பத்திக் கதிர்க் கடி சூத்திரத்தை 3109-2
வெண் சுடர்த் தரள மாலை விரிசுடர்க் கொடுக்கின் மீது 3109-3
வண் திரு அரையின் நீடு வனப்பு ஒளிவளரச் சாத்தி 3109-4
1212. ஒளி கதிர்த் தரளக் கோவை உதர பந்தனத்தின் மீது 3110-1
தளிர் ஒளி துளும்பு முத்தின் சன்ன வீரத்தைச் சாத்திக் 3110-2
குளிர் நிலவு எறிக்கும் முத்தின் பூண நூல் கோவை சாத்தி 3110-3
நளிர் கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம்சாத்தி 3110-4
1213. வாள் விடு வயிரக் கட்டு மணிவிரல் ஆழி சாத்தித் 3111-1
தாளுறு தடக்கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி 3111-2
நீளளி முழங்கைப் பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தித் 3111-3
தோள் வளைத் தரளப் பைம் பூண் சுந்தரத் தோள் மேல் சாத்தி 3111-4
1214. திருக் கழுத்து ஆரம் தெய்வக் கண்டிகை மாலை சேரப் 3112-1
பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்தி 3112-2
பெருக்கிய வனப்பின் செவ்விபிறங்கிய திருவார் காதில் 3112-3
வருக்க வெண் தரளக் கொத்தின் வடிக் குழை விளங்க சாத்தி 3112-4
1215. நீற்று ஒளி தழைத்துப் பொங்கி நிறை திரு நெற்றிமீது 3113-1
மேற் பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்னப் 3113-2
பாற்படுமுத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்தி 3113-3
ஏற்பவைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார் 3113-4
1216. இவ்வகை நம்மை ஆளும் ஏர்வளர் தெய்வக் கோலம் 3114-1
கைவினை மறையோர் செய்யக் கடிகொள் செங்கமலத் தாதின் 3114-2
செவ்வி நீள் தாம மார்பர் திரு அடையாள மாலை 3114-3
எவ்வுலகோரும் ஏத்தத் தொழுது தாம் எடுத்துப் பூண்டார் 3114-4
1217. அழகினுக்கு அணியாம் வெண்ணீறும் அஞ்சு எழுத்தும் ஓதிச்சாத்திப் 3115-1
பழகிய அன்பர் சூழப் படர் ஒளி மறுகில் எய்தி 3115-2
மழ விடை மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து 3115-3
முழவொலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்டபோது 3115-4
1218. எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும் 3116-1
பொழிந்தன விசும்பில் விண்ணேர் கற்பகப் புதுப்பூ மாரி 3116-2
தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்துப் பொங்கி 3116-3
வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம் 3116-4
1219. படர் பெரும் தொங்கல் பிச்சம் பைம் கதிர்ப் பீலிப் பந்தர் 3117-1
அடர் புனை செம் பொன் பாண்டில் அணிதுகில் சதுக்கம் மல்கக் 3117-2
கடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போல 3117-3
வடநிரை அணிந்த முத்தின் மணிக்குடை நிழற்ற வந்தார் 3117-4
1220. சீரணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின் 3118-1
ஏரணி காளம் சின்னம் இலங்கு ஒளித் தாரை எல்லாம் 3118-2
பேரொலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு 3118-3
தாரணி உய்ய ஞான சம்பந்தன் வந்தான் என்று 3118-4
1221. மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திரு நாமங்கள் 3119-1
எண்ணில பலவும் ஏத்திச் சின்னங்கள் எழுந்த போது அவ் 3119-2
அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப் பெற்ற 3119-3
புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க 3119-4
1222. முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செங்கை பற்ற 3120-1
நற்பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வக் 3120-2
கற்பகப் பூங்கொம்பு அன்னார் தம்மையும் காப்புச் சேர்த்துப் 3120-3
பொற்புறும் சடங்கு முன்னர்ப் பரிவுடன் செய்தவேலை 3120-4
1223. செம் பொன் செய் வாசிச் சூட்டுத் திருமணிப் புனை பூண் செல்வப் 3121-1
பைம் பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரை 3121-2
நம்பன் தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்கச் சூட்டி 3121-3
அம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார் 3121-4
1224. மா மறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர் சென்று மன்னும் 3122-1
தூமலர்ச் செம் பொன் சுண்ணம் தொகு நவமணியும் வீசத் 3122-2
தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த 3122-3
காமர் பொன் கலச நன்னீர் இருக்குடன் கலந்து வீச 3122-4
1225. விண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளி தழைப்ப வீச 3123-1
மண்ணகம் நிறைந்த கந்த மந்த மாருதமும் வீசக் 3123-2
கண் ஒளி விளக்கம் மிக்கார் காமர் தோரணங்களூடு 3123-3
புண்ணிய விளைவு போல்வார் பூம் பந்தர் முன்பு சார்ந்தார் 3123-4
1226. பொன் அணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப 3124-1
மன்னிய தரளப் பத்தி வளர் மணிச் சிவிகை நின்றும் 3124-2
பன் மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது 3124-3
முன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார் 3124-4
1227. மறைக்குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம் 3125-1
நிரைத்த நீர்ப் பொன் குடங்கள் நிரை மணி விளக்குத் தூபம் 3125-2
நறைக் குல மலர் சூழ் மாலை நறுஞ் சுடர் முளைப் பொன் பாண்டில் 3125-3
உறைப் பொலி கலவை ஏந்தி உடன் எதிர் ஏற்று நின்றார் 3125-4
1228. ஆங்கு முன் இட்ட செம் பொன் அணி மணிப் பீடம் தன்னில் 3126-1
ஓங்கிய ஞான வெள்ளம் உள் நிறைந்து எழுவது என்னத் 3126-2
தாங்கிய முத்தின் பைம் பூண் தண் நிலா எறிப்ப ஏறிப் 3126-3
பாங்கு ஒளி பரப்ப நின்றார் பர சமயங்கள் வீழ்த்தார் 3126-4
1229. எதிர் வரவேற்ற சாயல் இளம் மயில் அனைய மாதர் 3127-1
மதுரமங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து 3127-2
கதிர் மணிக் கரக வாசக் கமழ் புனல் ஒழுக்கிக் காதல் 3127-3
விதி முறை வலம் கொண்டு எய்திமேவும் நல் வினைகள் செய்தார் 3127-4
1230. மங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்லக் 3128-1
கங்கையின் கொழுந்து செம் பொன் இம வரை கலந்தது என்ன 3128-2
அங்கு அவர் செம் பொன் மாடத்து ஆதி பூமியின் உட்புக்கார் 3128-3
எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார் 3128-4
1231. அகில் நறும் தூபம் விம்ம அணிகிளர் மணியால் வேய்ந்த 3129-1
துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது 3129-2
நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த 3129-3
இகலில் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை 3129-4
1232. திருமகள் கொடுக்கப் பெற்ற செழு மறை முனிவர் தாமும் 3130-1
அருமையான் முன் செய் மெய்ம்மை அருந்தவ மனைவியாரும் 3130-2
பெருமகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன் 3130-3
உரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார் 3130-4
1233. வந்து முன் எய்தித் தான் முன் செய் மா தவத்தின் நன்மை 3131-1
நந்து நம்பாண்டார் நம்பி ஞான போனகர் பொன் பாதம் 3131-2
கந்தவார் குழலினார் பொன் கரக நீர் எடுத்து வார்ப்ப 3131-3
புந்தியால் நினை தியானம் புரி சடையான் என்றுன்னி 3131-4
1234. விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலைமேல் கொண்டு 3132-1
பொருப்புறு மாடத்து உள்ளும் புறத்துளும் தெளித்த பின்னர் 3132-2
உருப்பொலி உதரத் துள்ளும் பூரித்தார் உவகை பொங்கி 3132-3
அருப்புறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத்தோடும் 3132-4
1235. பெருகொளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர்க்கை தன்னில் 3133-1
மருவும் மங்கல நீர் வாசக் கரகம் முன் ஏந்தி வார்பார் 3133-2
தரு முறைக் கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்றன் 3133-3
அருநிதிப் பாவை யாரைப் பிள்ளையர்க்கு அளித்தேன் என்றார் 3133-4
1236. நல் தவக் கன்னியார் கை ஞான சம்பந்தர் செம்கை 3134-1
பற்றுதற்கு உரிய பண்பில் பழுது இல் நல் பொழுது நண்ண 3134-2
பெற்றவர் உடன் பிறந்தார் பெரு மணப் பிணை அன்னாரைச் 3134-3
சுற்றம் முன் சூழ்ந்து போற்றக் கொண்டு முன் துன்னினார்கள் 3134-4
1237. ஏகமாம் சிவ மெய்ஞ் ஞானம் இசைந்தவர் வலப்பால் எய்தி 3135-1
நாகமார் பணப்பேர் அல்குல் நல்தவக் கொழுந்து அன்னாரை 3135-2
மாகமார் சோதி மல்க மன்னி வீற்று இருந்த வெள்ளை 3135-3
மேகமொடு இசையும் மின்னுக் கொடி என விளங்க வைத்தார் 3135-4
1238. புனித மெய்க் கோல நீடு புகலியார் வேந்தர் தம்மைக் 3136-1
குனி சிலை புருவ மென் பூங்கொம்பனார் உடனே கூட 3136-2
நனி மிகக் கண்ட போதின் நல்ல மங்கலங்கள் கூறி 3136-3
மனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி 3136-4
1239. பத்தியில் குயிற்றும் பைம் பொன் பவளக் கால் பந்தர் நாப்பண் 3137-1
சித்திர விதானத்தின் கீழ்ச் செழும் திரு நீல நக்கர் 3137-2
முத் தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையின் ஓடு 3137-3
மெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய 3137-4
1240. மறையொலி பொங்கி ஓங்க மங்கல வாழ்த்து மலக 3138-1
நிறை வளைச் செங்கை பற்ற நேர் இழை அவர் முன் அந்தப் 3138-2
பொறை அணி முந்நூல் மார்பர் புகரில் பொரிகை அட்டி 3138-3
இறைவரை ஏத்தும் வேலை எரிவலம் கொள்ள வேண்டி 3138-4
1241. அருப்பு மென் முலையினார் தம் அணிமலர்க் கைப் பிடித்து அங்கு 3139-1
ஒருப் படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம் தன்னில் 3139-2
விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்று 3139-3
திருப் பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார் 3139-4
1242. மந்திர முறையால் உய்த்த எரிவலம் ஆக மாதர் 3140-1
தம் திருக் கையைப் பற்றும் தாமரைச் செங்கையாளர் 3140-2
இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள் தன்னோடும் 3140-3
அந்தமில் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க 3140-4
1243. மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கிச் சூழ 3141-1
அலகில் மெய்ஞ்ஞானத் தொல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண் 3141-2
உலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டிக் 3141-3
குல மணம் புரிவித்தார் தம் கோயிலை நோக்கி வந்தார் 3141-4
1244. சிவன் அமர்ந்து அருளும் செல்வத் திருப் பெரு மணத்துள் எய்தித் 3142-1
தவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கிப் 3142-2
பவம் அற என்னை முன்னாள் ஆண்ட அப்பண்பு கூட 3142-3
நவம் மலர்ப் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க 3142-4
1245. காதல் மெய்ப் பதிகம் நல்லூர்ப் பெருமணம் எடுத்துக் கண்டோர் 3143-1
தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம் பொருளாகக் கொண்டு 3143-2
நாதனே நல்லூர் மேவும் பெரு மண நம்பனே உன் 3143-3
பாத மெய்ந் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட 3143-4
1246. தேவர்கள் தேவர் தாமும் திருஅருள் புரிந்து நீயும் 3144-1
பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார் 3144-2
யாவரும் எம்பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று 3144-3
மூவுலகு ஒளியால் விம்ம முழுச் சுடர்த் தாணுவாகி 3144-4
1247. கோயில் உட் பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி 3145-1
வாயிலை வகுத்துக் காட்ட மன்னு சீர்ப் புகலி மன்னர் 3145-2
பாயின ஒளியால் நீடு பரம் சுடர்த் தொழுது போற்றி 3145-3
மாயிரு ஞாலம் உய்ய வழியினை அருளிச் செய்வார் 3145-4
1248. ஞான மெய்ந் நெறி தான் யார்க்கும் நமச்சிவாய அச் சொலாம் என்று 3146-1
ஆன சீர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை அங்கண் 3146-2
வானமும் நிலமும் கேட்க அருள் செய்து இம் மணத்தில் வந்தோர் 3146-3
ஈனமானம் பிறவி தீர யாவரும் புகுக என்ன 3146-4
1249. வரு முறைப் பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்தி 3147-1
உரு எனும் துயரக் கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள் 3147-2
திருமணத்துடன் சேவித்து முன் செலும் சிறப்பினாலே 3147-3
மருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுள் புக்கார் 3147-4
1250. சீர் பெருகு நீல நக்கர் திரு முருகர் முதல் தொண்டர் 3148-1
ஏர் கெழுவு சிவபாத இருதயர் நம்பாண்டார் சீர் 3148-2
ஆர் திரு மெய்ப் பெரும் பாணர் மற்று எனையோர் அணைந்துளோர் 3148-3
பார் நிலவு கிளை சூழப் பன்னிகளோடு உடன் புக்கார் 3148-4
1251. அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கிச் சென்றேர்கள் 3149-1
மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும் 3149-2
பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினைப்பாசம் 3149-3
துணிவித்த உணர்வினர் ஆய்த் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார் 3149-4
1252. ஆறு வகைச் சமயத்தில் அரும் தவரும் அடியவரும் 3150-1
கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும் 3150-2
வேறு திரு அருளினால் வீடு பெற வந்தாரும் 3150-3
ஈறில் பெரும் சேதியின் உள் எல்லாரும் புக்கு அதற்பின் 3150-4
1253. காதியைக் கைப்பற்றிக் கொண்டு வலம் செய்து அருளித் 3151-1
தீது அகற்ற வந்து அருளும் திருஞான சம்பந்தர் 3151-2
நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள்புகுவார் 3151-3
போத நிலை முடிந்த வழிப் புக்கு ஒன்றி உடன் ஆனார் 3151-4
1254. பிள்ளையார் எழுந்து அருளிப் புக்கு அதன்பின் பெரும் கூத்தர் 3152-1
கொள்ள நீடிய சோதிக் குறி நிலை அவ்வழி கரப்ப 3152-2
வள்ளலார் தம் பழைய மணக் கோயில் தோன்றுதலும் 3152-3
தெள்ளு நீர் உலகத்துப் பேறுஇல்லார் தெருமந்தார் 3152-4
1255. கண் நுதலார் திருமேனி உடன் கூட கவுணியனார் 3153-1
நண்ணியது தூரத்தே கண்டு நணுகப் பெறா 3153-2
விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதல் ஆனோர் 3153-3
எண்ணிலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார் 3153-4
1256. அரும் தமிழா கரர் சரிதை அடியேனுக்கு அவர் பாதம் 3154-1
தரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணிமேல் 3154-2
பெருங்கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால் 3154-3
வரும் தகைமை கலிக் காமனார் செய்கை வழுத்து வேன் 3154-4
திருச்சிற்றம்பலம்
வம்பறா வரிவண்டு சருக்கத்தில் திருஞான சம்பந்த நாயனார் புராணம் முற்றிற்று
This webpage was last updated on 16 May 2004
See Also:
1. Stories of the nAyanmAr in English with Pictures