logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-naaval-tree

temple-trees-தலமர சிறப்புகள் நாவல் மரம்

தலமர சிறப்புகள்


நாவல் Syzygium jambolanum, D.C., Myrtaceae.

 

விண்ணி னண்ணு புல்கிய வீரமாய மால்விடைச் 
சுண்ண வெண்ணீ றாடினான் சூலமேந்து கையினான் 
அண்ணல் கண்ணொர் மூன்றினான் ஆனைக்காவு கைத்தொடி 
எண்ணும் வண்ணம் வல்லவர்க் கேதமொன்றும் இல்லையே.

                                                                                                              . - திருஞானசம்பந்தர்.

 

 

திருவானைக்கா, திருநாவலூர் ஆகிய திருக்கோயில்களில் தலமரமாக விளங்குவது நாவல் மரமாகும். பழங்காலத்தில் மக்கள் மரத்தின் அடியிலேயே தெய்வங்களை வைத்து வணங்கினர் எனும் கருத்துக்கு அரண் செய்வதாக திருவானைக்கவில் கருவறைக்கு அருகில் மிகவும் பழமையான வெண்நாவல் மரம் அமைந்திருப்பதை இன்றும் நாம் காணலாம். இதையே, ‘வெண்ணாவல் அமர்ந்துறை வேதியனை’ என்றும், ‘வெண்ணாவல் விரும்பும்’ என்றும்,‘வெண்ணாவலின் மேவியயெம் அழகர்’ என்றும் திருஞானசம்பந்தர் சிறப்பித்துள்ளார். தமிழகமெங்கும் ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் தானே வளரும் பெருமரம். உண்ணக் கூடிய கருஞ்சிவப்பு நிறக் கனிகளை உடையது. இதில் வெண்நாவல், கருநாவல், நரிநாவல் எனப் பல வகைகள் உள்ளன.

 

பட்டை சதை, நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது.

 

 

< PREV <
நாரத்தைமரம்
Table of Content > NEXT >
நெல்லிமரம்

 

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)