logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-aamanakku-plant

temple-trees-தலமர சிறப்புகள் ஆமணக்குச் செடி

தலமர சிறப்புகள்



ஆமணக்கு (கொட்டைச்செடி) Ricinus Communis, Linn.; Euphorbiaceae.

சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய் 
சதாசிவன் கண்டாய் சங்கரந்தான் கண்டாய்
தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்
	சுடரொளியாய் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்
மண்டுபுனல் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் 
	மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய் 
கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற் 
	கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

                                                                                                   . - திருநாவுக்கரசர்.

 

கும்பகோணத்திற்கு அருகாமையிலுள்ள கொட்டையூர் என்னும் தலத்தில் தலமரவாக விளங்குவது ஆமணக்கு (கொட்டைச்செடி) ஆகும். கை வடிவ இலைகளை மாற்றடுக்காகக் கொண்ட வெண்பூச்சுடைய செடியாகும். உள்ளீடற்ற கட்டைகளையும், முள்ளுள்ள மூன்று விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டை அல்லது கொட்டைமுத்து எனப்படுகிறது. இக்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யே விளக்கெண்ணெய் எனப்படுகிறது. தமிழகமெங்கும் புன்செய்ப் பயிராக விளைவிக்கப்படுகிறது. இலை, வேர், எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயனுடையதாகும்.

 

இலை வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் மலமிளக்கும். தாது வெப்பகற்றும். வேர் வாதத்தை குணப்படுத்தும்.

 

 

< PREV <
அலரிசெடி
Table of Content > NEXT >
ஆலமரம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)