மனிதனுக்கும் விலங்குக்கும் என்ன வேறுபாடு?

 

திருநாவுக்கரசர் தேவாரம்

தலம் : பொது திருக்குறுந்தொகை ஐந்தாம் திருமுறை திருச்சிற்றம்பலம் புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும் அதே; புழுவுக்கு இங்கு எனக்குள்ள பொல்லாங்கில்லை; புழுவினுங் கடையேன் புனிதன் தமர் குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே. 5.91.4 திருச்சிற்றம்பலம்

thirunAvukkaracar thEvAram

thalam : pothu thirukkuRunthokai Fifth thirumuRai thirucciRRambalam puzuvukkum guNam n^Angu enakkum athE; puzuvukku iN^gu enakkuLLa pollAN^gillai; puzivinum kaDaiyEn punithan thamar kuzuvukku evviDaththEn cenRu kUDavE. 5.91.4 thirucciRRambalam

Meaning of Thevaram

The worm also has four qualities and me too; The worm does not have my wickedness; Worse than even the worm, where am I to join the assembly of the people of the Immaculate Lord?!

பொருளுரை

புழுவுக்கும் நான்கு குணங்கள், எனக்கும் அந்நான்கே; புழுவுக்கு என்னைப் போலப் பொல்லாங்கு இல்லை; ஆதலால் புழுவினும் கீழான நான், புனிதப்பெருமானின் அடியவர் திருக்கூட்டத்திற்கு எவ்விடத்தேன், அவர்களோடு சென்று கூடுதற்கு?!

Notes

1. புழுவுக்கும் மனிதனுக்கும் உள்ள நான்கு குணங்கள் - இரை தேடுதல்; உண்ணுதல்; உறங்குதல்; இன்பதுன்ப நுகர்ச்சி; புழுவுக்கோ மனிதனுக்கு இருப்பது போன்று பொறாமை வஞ்சனை போன்றவை இல்லை. இவ்வடிப்படையில் பார்த்தால் மனிதன் விலங்கினும் - புழுவினும் கீழானவன். அவ்விலங்குகள் போன்றே வாழ்ந்து செத்து மடிகிறான். மனித வாழ்வைச் செம்மைப்படுத்தி இறைவன் திருவடிகளில் நிலைபெறச் செய்பவர்களே வாழ்வின் பயன் பெற்றவர்கள்.
< PREV <
உடலின் பெருமை
Table of Contents > NEXT >
லிங்கம் எதைக் குறிக்கிறது?

Back to Thirumurai Series Page
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page