பிச்சைக்காரக் கடவுள்

திருநாவுக்கரசர் தேவாரம் தலம் : திருவண்ணாமலை திருக்குறுந்தொகை ஐந்தாம் திருமுறை திருச்சிற்றம்பலம் பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர் ஓடிப் போயினர் செய்வதொன்று என் கொலோ ஆடிப்பாடி அண்ணாமலை கைதொழ ஓடிப்போகும் நம் மேலை வினைகளே. 5.5.4 திருச்சிற்றம்பலம் thirunAvukkaracar thEvAram thalam : thiruvaNNAmalai thirukkuRunthokai Fifth thirumuRai thirucciRRambalam pADic cenRu palikkenRu n^inRavar ODip pOyinar ceyvathonRu en kolO ADip pADi aNNAmalai kaithoza ODippOkum n^am mElai vinaikaLE 5.5.4 thirucciRRambalam Meaning: He, Who stood for alms singing, has gone away, what to do? Dancing and singing, when the thiruvaNNAmalai is worshipped, the vinai on us will run away! பொருளுரை: பாடிச்சென்று பிச்சை எடுத்து நின்றவர் (சிவபெருமான்) போய்விட்டார், இனி என்ன செய்வது? ஆடிப் பாடித் திருவண்ணாமலையைக் கைதொழுதால் நம் மேலுள்ள வினைகள் எல்லாம் ஓடிப்போகும். Notes: 1. இறைவன் பிச்சை எடுத்துக் கொண்டு நம் எல்லாரிடத்திலும் வருகின்றார். அப்பெருமானிடம் நம்மை முழுமையாக ஒப்புவிக்கின்ற பேறு பெற்றால் பேரின்பமே. அப்பக்குவம் வரவில்லையாயினும் அவ்விறைவன் உறையும் திருவண்ணாமலையைக் கைதொழுது இருந்தால் அவர் நம் மேலுள்ள வினை அகற்றிப் பக்குவப் படுத்துவார். 2. பலி - பிச்சை.

< PREV <
சிவபெருமான் திருவடியை ஏன் திருமால்
பிரமனால் காண இயலவில்லை?
Table of Contents > NEXT >
இறைவன் காலந்தாழ்த்துவாரா?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page