|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருவலஞ்சுழி தலபுராணம் Sthalapuranam of Thiruvalanchuzhi Temple
இறைவர் திருப்பெயர் : கபர்த்தீஸ்வரர், கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர்
இறைவியார் திருப்பெயர் : பெரிய நாயகி, பிருகந்நாயகி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்
வழிபட்டோர் : உமையம்மை, திருமால், இந்திரன், பிரமன், ஆதிசேஷன்,
ஏரண்டமுனிவர்
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. விண்டெலாமல ரவ்விரை,
2. என்னபுண்ணியஞ் செய்தனை,
3. பள்ளமதாய படர்சடை.
2. அப்பர் - 1. ஓதமார் கடலின், 2. அலையார்புனற்கங்கை.
தல வரலாறு :
ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பிலத்தினுள் (பாதாளத்தில்) அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது.
அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத் தலத்தில் எழுந்தருளுவித்து, வழிபட்டான்.
சிறப்புக்கள் :
அமைவிடம்
இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
இது, கும்பகோணம்-தஞ்சாவூர் இரயில் பாதையில், சுவாமிமலை நிலையத்திலிருந்து வடக்கே 1-கி. மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.
|