|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருவலஞ்சுழி
இறைவர் திருப்பெயர் : கபர்த்தீஸ்வரர், கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர்
இறைவியார் திருப்பெயர் : பெரிய நாயகி, பிருகந்நாயகி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்
வழிபட்டோர் : உமையம்மை, திருமால், இந்திரன், பிரமன், ஆதிசேஷன்,
ஏரண்டமுனிவர்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்
(1. விண்டெலாமல ரவ்விரை,
2. என்னபுண்ணியஞ் செய்தனை,
3. பள்ளமதாய படர்சடை),
அப்பர் (1. ஓதமார் கடலின்,
அலையார்புனற்கங்கை,
கருமணிபோற் கண்டத்து அழகன்)
தல வரலாறு
- ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பிலத்தினுள் (பாதாளத்தில்) அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது.
- அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத் தலத்தில் எழுந்தருளுவித்து, வழிபட்டான்.
சிறப்புக்கள்
- திருவிடை மருதூரானது மகாலிங்கத் தலமாக விளங்க, அதற்குரிய பரிவாரத் தலங்களுள் இது, விநாயகர் தலம். இங்குள்ள வெள்ளைப் பிள்ளையார் கோவில் மிகச் சிறப்பானது.மிகவும் வேலைப்பாடுடையது.
- சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, கும்பகோணம்-தஞ்சாவூர் இரயில் பாதையில், சுவாமிமலை நிலையத்திலிருந்து வடக்கே 1கீ.மீ. தூரத்தில் உள்ளது.கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் இத் தலம் உள்ளது.
|